இனந்தெரியாத நபர்களால் 15 வயது சிறுமி கடத்தல், யாழ்.செம்மணிப் பகுதியில் இன்று மாலை சம்பவம்
யாழ்.செம்மணிப் பகுதியில் வைத்து இனந்தெரியாத நபர்களால் 15 வயது சிறுமியொருவர் கடத்திச் செல்லப்பட்டுள்ளதாக யாழ்.பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடென்று பதிவு செய்யப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் எரிக் பெரேரா தெரிவித்துள்ளார்.
முச்சக்கரவண்டி மற்றும் மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத நபர்களே குறித்த சிறுமியை கடத்திச் சென்றுள்ளனர்.
இக்கடத்தல் சம்பவம் இன்று மாலை இடம்பெற்றுள்ளது. இதில் அருள்நேசன் ஆருனியா என்ற சிறுமியே இவ்வாறு கடத்தப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில்; மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
0 comments
Write Down Your Responses