அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் ஓய்டுன் ஐஸே மிகளிக் வாழ்ந்து வந்தார். துருக்கி நாட்டைச் சேர்ந்த இவர் அமெரிக்க குடியுரிமை பெற்றவர் ஆவார். இவர் 2010-ம் வருட இறுதியிலும், 2011-ம் ஆண்டு தொடக்கத்திலும் 3 முறை பாகிஸ்தானுக்கு இணையம் மூலம் 2050 அமெரிக்க டாலர்கள் அனுப்பியது தெரிய வந்தது.
இதனால் பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத அமைப்புக்கு பணம் வழங்கியதாக குற்றம் சாட்டி கடந்த 2011-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கைது செய்யப்பட்டார்.
விசாரணையில், வெளிநாடுகளில் இருக்கும் அமெரிக்க ராணுவ அதிகாரிகளையும் பிற அமெரிக்கர்களையும் தாக்க பயன்படுத்தப்பட வேண்டும் என்ற நோக்கதுடன் இவர் பாகிஸ்தானில் இருக்கும் ஒருவருக்கு பணம் அனுப்பினார் என்ற அமெரிக்க புலனாய்வுப் பிரிவினரின் குற்றச்சாட்டு ஒப்புவிக்கப்பட்டது.
வழக்கினை விசாரித்த அமெரிக்க நீதிமன்றம், அவருக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கியுள்ளது.
அமெரிக்காவிலிருந்துகொண்டு பாக்கிஸ்தானிலுள்ள பயங்கரவாத அமைப்பு ஒன்றுக்கு துருக்கி பெண் பணம் வழங்கினார் என்றபோது 5 வருட தண்டனை வழங்கிய அமெரிக்கா, அமெரிக்காவிலிருந்துகொண்டு புலிகளுக்கு அலோசகராக இருந்தவரும் தற்போது இலங்கைக்கு எதிரான செயற்பாடுகளை முன்னெடுக்கின்றவருமான ருத்திரகுமாரனுக்கு இவ்வாறான தண்டனையை வழங்குமா என்ற கேள்வி எழுப்பப்படுகின்றது.
அத்துடன் அமெரிக்காவிலிருந்து கொண்டு அந்நாட்டில் பயங்கரவாத இயக்கமாக அறிவிக்கப்பட்டிருக்கின்ற புலிகளுக்கு நிதி உதவி வழங்கியோருக்கு என்ன தண்டனை வழங்கப்போன்றது.
இதனால் பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத அமைப்புக்கு பணம் வழங்கியதாக குற்றம் சாட்டி கடந்த 2011-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கைது செய்யப்பட்டார்.
விசாரணையில், வெளிநாடுகளில் இருக்கும் அமெரிக்க ராணுவ அதிகாரிகளையும் பிற அமெரிக்கர்களையும் தாக்க பயன்படுத்தப்பட வேண்டும் என்ற நோக்கதுடன் இவர் பாகிஸ்தானில் இருக்கும் ஒருவருக்கு பணம் அனுப்பினார் என்ற அமெரிக்க புலனாய்வுப் பிரிவினரின் குற்றச்சாட்டு ஒப்புவிக்கப்பட்டது.
வழக்கினை விசாரித்த அமெரிக்க நீதிமன்றம், அவருக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கியுள்ளது.
அமெரிக்காவிலிருந்துகொண்டு பாக்கிஸ்தானிலுள்ள பயங்கரவாத அமைப்பு ஒன்றுக்கு துருக்கி பெண் பணம் வழங்கினார் என்றபோது 5 வருட தண்டனை வழங்கிய அமெரிக்கா, அமெரிக்காவிலிருந்துகொண்டு புலிகளுக்கு அலோசகராக இருந்தவரும் தற்போது இலங்கைக்கு எதிரான செயற்பாடுகளை முன்னெடுக்கின்றவருமான ருத்திரகுமாரனுக்கு இவ்வாறான தண்டனையை வழங்குமா என்ற கேள்வி எழுப்பப்படுகின்றது.
அத்துடன் அமெரிக்காவிலிருந்து கொண்டு அந்நாட்டில் பயங்கரவாத இயக்கமாக அறிவிக்கப்பட்டிருக்கின்ற புலிகளுக்கு நிதி உதவி வழங்கியோருக்கு என்ன தண்டனை வழங்கப்போன்றது.
அமெரிக்க வாழ் இலங்கை பிரஜைகளுடனான சிநேகபூர்வமான சந்திப்பு ஒன்றினை அலரி மாளிகையில் நடாத்திய ஜனாதிபதி நாட்டுக்கு எதிரான வெளிநாட்டு சூழ்ச்சிகளை வெற்றிகொள்ளும்போது, வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களின் ஆதரவு மகத்தானது எனத் தெரிவித்துள்ளார்.
30 வருட கொடூர யுத்தத்தை முடித்து வைத்து துரித அபிவிருத்தியை ஏற்படுத்தியதற்காக வெளிநாட்டு வாழ் இலங்கை பிரதிநிதிகள் இச்சந்திப்பின் போது ஜனாதிபதியை பாராட்டினர்.
இலங்கை கலாசார விழுமியங்களை பாதுகாத்து, துரித அபிவிருத்திகளை நாட்டில் ஏற்படுத்தியமை எமக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியதாக இவர்கள் தெரிவித்தனர். இவர்கள் மத்தியில் உரையாற்றிய ஜனாதிபதி இலங்கைக்கு எதிரான சர்வதேச சக்திகளை எதிர்கொள்ளும் போது வெளிநாடுகளில் வாழும் இலங்கை தொழிலாளர் சமூகம் மற்றும் வெளிநாட்டு பிரஜா உரிமை பெற்ற இலங்கையர்களின் பங்களிப்பை தான் எதிர்பார்ப்பதாக தெரிவித்தார்.
இச்சந்திப்பில் அமைச்சர்களான மைத்திரிபால சிறிசேன, டலஸ் அலகப்பெரும, சுசில் பிரேம் ஜயந்த், மேல் மாகாண அமைச்சர் உதய கம்மன்பில ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க, அமெரிக்காவிற்கான இலங்கை தூதுவர் ஜாலிய விக்ரமசூரிய உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
30 வருட கொடூர யுத்தத்தை முடித்து வைத்து துரித அபிவிருத்தியை ஏற்படுத்தியதற்காக வெளிநாட்டு வாழ் இலங்கை பிரதிநிதிகள் இச்சந்திப்பின் போது ஜனாதிபதியை பாராட்டினர்.
இலங்கை கலாசார விழுமியங்களை பாதுகாத்து, துரித அபிவிருத்திகளை நாட்டில் ஏற்படுத்தியமை எமக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியதாக இவர்கள் தெரிவித்தனர். இவர்கள் மத்தியில் உரையாற்றிய ஜனாதிபதி இலங்கைக்கு எதிரான சர்வதேச சக்திகளை எதிர்கொள்ளும் போது வெளிநாடுகளில் வாழும் இலங்கை தொழிலாளர் சமூகம் மற்றும் வெளிநாட்டு பிரஜா உரிமை பெற்ற இலங்கையர்களின் பங்களிப்பை தான் எதிர்பார்ப்பதாக தெரிவித்தார்.
இச்சந்திப்பில் அமைச்சர்களான மைத்திரிபால சிறிசேன, டலஸ் அலகப்பெரும, சுசில் பிரேம் ஜயந்த், மேல் மாகாண அமைச்சர் உதய கம்மன்பில ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க, அமெரிக்காவிற்கான இலங்கை தூதுவர் ஜாலிய விக்ரமசூரிய உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
நகர கடுகதி மற்றும் தபால் புகையிரதக் கட்டணங்கள் நூற்றுக்கு 40 வீதத்தால் நாளை முதல் அதிகரிக்கப்படவுள்ளது.
இதற்கேற்ப, சாதாரண இருக்கைகள், படுக்கை வசதியுடன் கூடிய இருக்கை, ஒதுக்கப்பட்ட ஆசனம், பார்வையாளர் பகுதிக் கட்டணங்கள் அதிகரிக்கப்படவுள்ளதாக புகையிரதத் திணைக்களம்அறிவித்துள்ளது.
நான்கு பிரிவுகளாக கட்டணம் அதிகரிக்கப்படும்.
3 ஆம் வகுப்பு சாதாரண இருக்கைகளுக்கான கட்டணம் ரூபா 150 இலிருந்து ரூபா 180 வரையும், ரூபா 220 முதல் ரூபா 280 வரையும், ரூபா 270 முதல் ரூபா 320 வரையும் கட்டண அதிகரிப்பு செய்யப்பட்டுள்ளது.
இரண்டாம் வகுப்புக்கு ஒதுக்கப்பட்ட இருக்கைகளுக்கான கட்டணம் ரூபா 220 இலிருந்து ரூபா 280 வரையும், ரூபா 380 இலிருந்து ரூபா 450 வரையும், ரூபா 450 இலிருந்து 500 வரையும் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், முதலாம் வகுப்புக்கு ஒதுக்கப்படுகின்ற இருக்கைகளுக்கு ரூபா 750 அதிகரிக்கப்பட்டுள்ளது.
பார்வையாளர் பகுதிக்கான கட்டணம் ரூபா 880 இலிருந்து ரூபா 1000 வரையும், உறங்குவதற்கான பகுதியின் கட்டணம் ரூபா 1250 இனாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
(கேஎப்)
இதற்கேற்ப, சாதாரண இருக்கைகள், படுக்கை வசதியுடன் கூடிய இருக்கை, ஒதுக்கப்பட்ட ஆசனம், பார்வையாளர் பகுதிக் கட்டணங்கள் அதிகரிக்கப்படவுள்ளதாக புகையிரதத் திணைக்களம்அறிவித்துள்ளது.
நான்கு பிரிவுகளாக கட்டணம் அதிகரிக்கப்படும்.
3 ஆம் வகுப்பு சாதாரண இருக்கைகளுக்கான கட்டணம் ரூபா 150 இலிருந்து ரூபா 180 வரையும், ரூபா 220 முதல் ரூபா 280 வரையும், ரூபா 270 முதல் ரூபா 320 வரையும் கட்டண அதிகரிப்பு செய்யப்பட்டுள்ளது.
இரண்டாம் வகுப்புக்கு ஒதுக்கப்பட்ட இருக்கைகளுக்கான கட்டணம் ரூபா 220 இலிருந்து ரூபா 280 வரையும், ரூபா 380 இலிருந்து ரூபா 450 வரையும், ரூபா 450 இலிருந்து 500 வரையும் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், முதலாம் வகுப்புக்கு ஒதுக்கப்படுகின்ற இருக்கைகளுக்கு ரூபா 750 அதிகரிக்கப்பட்டுள்ளது.
பார்வையாளர் பகுதிக்கான கட்டணம் ரூபா 880 இலிருந்து ரூபா 1000 வரையும், உறங்குவதற்கான பகுதியின் கட்டணம் ரூபா 1250 இனாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
(கேஎப்)
பொது பல சேனா அமைப்பினரின் மதவாத இனவாதச் செயற்பாடுகளைக் கண்டித்து பிரித்தானியாவில் வாழும் ஸ்ரீலங்கா முஸ்லிம் புலம்பெயர்ந்தோர் அமைப்பு தனது வன்மையான கண்டனத்தைத் தெரிவித்துள்ளதுடன், உடனடியாக பொது பல சேனா இயக்கத்தை தடை செய்து நாட்டில் சட்டத்தையும், சமூக நீதியையும் நிலைநிறுத்த நடவடிக்கை எடுக்குமாறும் அரசாங்கத்தைக் கோரியுள்ளது. அக்கண்டன அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
பொது பல சேனாவின் சட்டவிரோத செயற்பாடுகளுக்கு பிரித்தானிய ஸ்ரீலங்கா முஸ்லிம் புலம்பெயர்ந்தோர் அமைப்பு கண்டனம்
இலங்கையில் சமாதானம், ஐக்கியம், ஜனநாயகம், தேசிய நல்லிணக்கம், நாட்டின் பொருளாதாரம் போன்ற நல்லாட்சியின் அடையாளச் சின்னங்களைத் தகர்த்தெறிந்து இனவாதம், மதவாதம், கலவரம், அராஜகம் போன்ற காட்டுமிராண்டித்தனம் நிறைந்த சர்வாதிகாரக் காட்டாட்சிக்கு முயற்சித்து வருகின்ற பொது பல சேனாவின் செயற்பாடுகளை பிரித்தானியாவில் வாழும் ஸ்ரீலங்கா முஸ்லிம் புலம்பெயர்ந்தோர் அமைப்பு வன்மையாகக் கண்டிக்கின்றது.
இவ்வியக்கத்தின் அராஜகச் செயற்பாடுகளைத் தடுத்து நிறுத்துவதற்கு நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியும், அரசாங்கமும் இன்னமும் காலந்தாழ்த்தாது உடனடியாக உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டுமெனவும் எமது அமைப்பின் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
அனுராதபுரம் ஸியாரம் உடைக்கப்பட்ட மத வன்முறையுடன் இலங்கையின் வரலாற்றில் மூன்றாவது பயங்கரவாத சக்தியாக பொது பல சேனா என்ற இந்த இயக்கம் உருவாகி இறுதியாக கடந்த வியாழக்கிழமை இரவு கொழும்பு புறநகர் பிரதேசத்தில் அமைந்திருந்த முஸ்லிம்களின் வியாபார நிலையமான 'பெஸன் பக்' ஸ்தாபனத்தை தாக்கியது வரை இந்த அராஜக இனவாத அமைப்பு நமது நாட்டில் வளர்ச்சியடைந்திருக்கின்றது.
நாட்டின் சட்டம், ஒழுங்கு, ஜனநாயகம் போன்றவற்றை கிஞ்சித்தும் மதிக்காது சீருடை அணியாத பொலிஸ்காரர்களாகச் செயற்பட்டு வரும் இப்பயங்கரவாத பொது பல சேனா அமைப்பின் அச்சுறுத்தல் நிறைந்த இவ்வளர்ச்சியானது, இன்று எமது இலங்கைத் தாயகத்தில் வாழுகின்ற சிறுபான்மைச் சமூகங்களான இந்து - முஸ்லிம் - கிறிஸ்தவ சமூகத்தினருக்கு மாத்திரமன்றி பேரின சமூகமான சிங்கள பௌத்த மக்களுக்கு மத்தியிலுள்ள சமூக - அரசியல் - மதத் தலைவர்களையும், மக்களையும் கருத்து வேறுபாடு கொண்ட பல கூறுகளாக்கி முழு நாட்டையுமே மீண்டுமொருமுறை குழப்பமான சூழ்நிலைக்குள் தள்ளியுள்ளது.
மாத்திரமன்றி, சர்வதேச நாடுகளிலும் குறிப்பாக எமது நாட்டிற்கு ஆதரவாகவுள்ள முஸ்லிம் நாடுகளிலும், எதிராகவுள்ள மேற்கு நாடுகளிலும் எமது தேசத்தின் நற்பெயருக்கும், ஜனநாயக இருப்புக்கும் மீண்டுமொருமுறை களங்கத்தையும், அபகீர்த்தியையும் ஏற்படுத்தும் வகையிலும் இந்த பொது பல சேனாவின் சமகாலத் தீவிரவாதச் செயற்பாடுகள் அமைந்துள்ளன.
இந்த மூன்றாவது பயங்கரவாத சக்தியின் அராஜக நடவடிக்கைகளை அடக்கியொடுக்குவதற்கு இலங்கையின் நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி என்ற வகையில் உடனடியாகவே தகுந்த நடடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது அவசியமும் அவசரமுமாகும்.
கடந்த முப்பதாண்டு கால யுத்த அவலங்களின்போது புலம்பெயர்ந்த இலங்கையின் தமிழ்ச் சமூகத்தைச் சேர்ந்தவர்களில் பொரும்பாலானோர் எமது நாட்டிற்கும், நாட்டின் தலைவருக்கும் எதிரான செயற்பாடுகளில் தமிழ்நாடு தொடக்கம் ஐ.நா. மன்றம் வரை திட்டமிட்டு தீவிரமாக இயங்கி வருகின்ற துரதிஸ்டவசமான நிலையில், இவ்வாறு புலம்பெயர்ந்து வந்த முஸ்லிம்களான நாம் எமது நாட்டிற்கும், நாட்டின் தலைமைத்துவத்திற்கும் விசவாசமாகவும், ஆதரவாகவுமே செயற்பட்டு வந்துள்ளோம்.
இந்நிலையில், தற்போது இந்த பொது பல சேனா எனும் தீவிரவாத அமைப்பின் இனவாத – மதவாதச் செயற்பாடுகளின் விளைவாக நாமும் பல்வேறு தரப்பினரின் விமர்சனங்களுக்கும், அழுத்தங்களுக்கும் முகங்கொடுத்து எமது தாய் நாட்டிற்கும், நாட்டின் தலைவருக்கும், அரசாங்கத்திற்கும் ஆதரவாகத் தொடர்ந்தும் செயற்பட முடியாத அளவுக்கு நெருக்கடிக்கு உள்ளாகி இருக்கின்றோம்.
எனவே, இன்னமும் இலங்கை முஸ்லிம் சமூகத்திற்கும், ஏனைய சிறுபான்மைச் சமூகங்களுக்கும் எதிராக இந்த பொது பல சேனா எனும் தீவிரவாதச் செயற்பாட்டாளர்கள் மேற்கொள்ளுகின்ற அடாவடித்தனமான செயற்பாடுகளுக்கு அமைதிப் போக்கில் அங்கீகாரம் வழங்கிக் கொண்டிருக்காது நாட்டின் சட்டத்திற்கு அமைவாக தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்வதைத் தீவிரப்படுத்தி நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர ஆவன செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்துகின்றோம்.
இலங்கையில் பௌத்த மதத்தையும், அதன் பாரம்பரியத்தையும், கலாசாரத்தையும் பேணிப் பாதுகாப்பதற்கும், மேம்படுத்துவதற்கும் புத்தசாசன அமைச்சு என்றும், கலாச்சார அமைச்சு என்றும் அமைச்சுக்கள் நிறுவப்பட்டுள்ளன. அந்த அமைச்சுக்களின் மூலமே பௌத்த மக்களின் நலன்களைப் பாதுகாப்பதற்கு நாட்டின் அரசியலமைப்புக்கு உட்பட்ட வகையில் பொருத்தமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமே தவிர, பொது பல சேனா போன்ற தீவிரப்போக்குடைய கும்பல்களினால் பௌத்த மதத்தின் இருப்பையும், வளர்ச்சியையும், அதன் கலாசார விழுமியங்களையும் நாட்டில் பேணிப் பாதுகாக்க அனுசரணையாக இருப்பதென்பது அரசாங்கத்தின் பலவீனத்தை உலகளாவ அம்பலப்படுத்துவதாகவும், ஏற்றுக் கொள்வதாகவுமே கருதப்படும்.
இலங்கையின் சுதந்திரத்தையும், இறைமையையும், ஆள்புல ஒருமைப்பாட்டையும் கபளீகரப்படுத்துவதற்கு 1970களில் ஜனதா விமுக்தி பெரமுன எனும் பயங்கரவாத அமைப்பு முதல் தடவையாக சிங்களப் பேரின சமூகத்தின் மத்தியில் இருந்து ஆயுதங்களைத் தூக்கிக் கொண்டு இந்நாட்டு மக்களை அடிமைப்படுத்த முயற்சியெடுத்திருந்தது.
அப்பயங்கரவாத எழுச்சியின்போது, பெரும்பான்மைச் சமூக மக்கள் மத்தியில் இருந்து தோன்றியுள்ள விடுதலை இயக்கம் என்பதையும் கவனத்திற்கொள்ளாது முன்னாள் பிரதம மந்திரி ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கா அம்மையார் அவர்கள், தனது கட்டுப்பாட்டிலிருந்த இராணுவத்தையும், பொலிசாரையும் கொண்டு அப்பயங்கரவாதிகளை முற்றாக அழித்து நாட்டின் ஐக்கியம், சுதந்திரம், ஜனநாயகம் என்பவற்றை நிலை நிறுத்தினார் என்பது எமது தேசத்தின் வீர வரலாறாகும்.
அதன் பின்னர் தமிழீழ விடுதலைப் புலிகள் எனும் இரண்டாவது பயங்கரவாத சக்தியானது தமிழ்ச் சமூகத்திலிருந்து புறப்பட்டு 1977களில் ஆயுதங்களைத் தூக்கிக் கொண்டு இந்நாட்டைக் கூறு போடுவதற்காகப் போரிட்டனர்.
அவர்களது பயங்கரவாதத்தையும், நாட்டைத் துண்டாடித் தனிநாடு அமைக்கும் முயற்சியையும்; இன்றைய அரசுத் தலைவரான ஜனாதிபதி, அவர்களும் நமது நாட்டுப் பிரஜைகளே என்பதையும் கருத்திற் கொள்ளாது அவர்களின் பயங்கரவாதத்தை அழித்தொழித்தார் என்பதும் நாம் கண்டறிந்த வரலாறாகும்.
1948ல் எமது நாட்டிற்குச் சுதந்திரம் கிடைத்து முதலில் ஆட்சிப் பொறுப்பை ஏற்றது ஐக்கிய தேசியக் கட்சியாக இருந்த போதிலும், எமது நாட்டில் இரண்டு தடவைகள் ஏற்பட்ட எமது சுதந்திர இறைமைக்கு எதிரான பயங்கரவாதப் போராட்டங்களையும் தோற்கடித்து முடிவுக்குக் கொண்டு வந்த பெருமையானது, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கே உள்ளது என்பது மறுக்கப்பட முடியாத உண்மையாகும்.
அத்தகைய வரலாற்றைக் கொண்டுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும், அதன் தலைமைத்துவத்திற்கும், இன்றைய ஆட்சி இறைமைக்கும் மீண்டுமொரு சவாலாகவே பௌத்த மதத்தினதும், சிங்கள இனத்தினதும் நலன்களையும், உரிமைகளையும் பாதுகாக்கப் போவதாகக் கூறிக் கொண்டு பொது பல சேனா எனும் இப்பயங்கரவாத அமைப்பு இன்று எமது தாய் நாட்டில் உருவாகியுள்ளது.
இதன் முறையற்ற தோற்றத்தையும், நேர்மையற்ற நோக்கத்தையும், வன்முறை நிறைந்த செயற்பாடுகளினூடாக அடைந்து வரும் வளர்ச்சியையும் அனைவருமே அவதானித்து வருகின்றனர். இந்நாட்டின் பிரஜைகளான முஸ்லிம் சமூகம் உள்ளிட்ட ஏனைய சிறுபான்மைச் சமூக மக்களை அச்சுறுத்தி, அடக்கியாண்டு, அவர்களின் அடிப்படையான மனித மற்றும் மத உரிமைகளை அடியோடு மறுத்தும், முழுதாகப் பறித்துமே இந்த நாட்டில் பெரும்பான்மையாக வாழுகின்ற சிங்கள பௌத்த சமூகத்தின் உரிமைகளையும், மத இருப்பiயும் அவர்கள் தக்க வைத்துப் பாதுகாக்க வேண்டும் என்றால், நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியும், முஸ்லிம்களின் பங்களிப்பைக் கொண்டுள்ள அரசாங்கமும், சட்டம் ஒழுங்கும், படை பட்டாளங்களும் எதற்கு என்கிற கேள்வி இன்று எல்லோர் மத்தியிலும் எழுந்துள்ளது கவலைக்குரிய அடைவாகும்.
30 வருட காலமாக நீடித்த யுத்தத்தை முடிவுக்குக்குக் கொண்டு வந்ததன் பின், நாட்டில் பயங்கரவாதத்தை முறியடித்தது நிறைவேற்றதிகாரமா? இராணுவத் தலைமைத்துவமா? என்ற போட்டியும், கேள்வியும் எழுந்ததை நாம் அறிவோம்.
இவ்வாறே இந்நாட்டில் பௌத்தத்தையும், பௌத்த கலாசாரத்தையும், பௌத்த மத உரிமைகளையும் பேணுவதாகக் கூறிக் கொண்டு, அழிச்சாட்டியமான பல்வேறு நடவடிக்கைகளிலும் ஈடுபட்டுவரும் பொது பல சேனாவின் இந்த மதவாத - இனவாத செயற்பாடுகளின் முடிவிலும் இந்நாட்டில் பௌத்தத்தை நிலை நிறுத்தியது யார்? என ஜனாதிபதிக்கும், அரசாங்கத்திற்கும், முப்படையினருக்கும், காவல்துறைக்கும் எதிராக இப்பயங்கரவாத பொது பல சோனாக்களின் விரல்களும், கேள்விகளும் நீளும் என்பதையும் நாமனைவரும் முன்னெச்செரிக்கையுடன் நோக்க வேண்டும்.
எனவேதான், பௌத்த மதத்தினதும், சிங்கள இனத்தினதும் பேரால் நமது அழகிய ஸ்ரீலங்காவில் தூண்டப்பட்டுள்ள இக்கொடிய சமூகச் சிதைப்பு முயற்சியை ஜனாதிபதியின் தலைமையிலான அரசாங்கம் உடனடியாகத் தடுத்து நிறுத்துவதற்கு முன்வர வேண்டும் என நாம் வலியுறுத்துகின்றோம்.
இந்நாட்டில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையிலான இன்றைய அரசியல் அதிகாரத்தையும், அதன் வரலாறுகளையும் 1977ல் முடித்து வைத்தது போல் மீண்டுமொருமுறை முடித்து வைப்பதற்காக நரித்தந்திரமான முறையில் எதிர்க்கட்சிகளாலும், அரசுக்கு எதிரான வெளிநாட்டுப் புலம்பெயர் சக்திகளாலும் நன்கு திட்டமிட்டு முன்னெடுக்கப்பட்டு வரும் பௌத்த மதத்தைக் காக்கும் போர்வையிலான பொது பல சேனாவின் இன்றைய நடவடிக்கைகளையும் பயங்கரவாதச் செயற்பாடுகளாகக் கருதி அவ்வியக்கத்தைத் தடை செய்து, அவர்களின் எதிர்காலச் செயற்பாடுகளை முறியடித்து முடக்குவதற்கும், அனைத்து மக்களும் நாட்டில் அச்சம், பீதியற்ற வகையில் தமது அன்றாட வாழ்க்கையை முன்னெடுத்துச் செல்வதற்கு அரசாங்கம் வழிகோல வேண்டும் என எமது அமைப்பு வலியுறுத்திக் கேட்டுக் கொள்கின்றது.
பொது பல சேனாவின் சட்டவிரோத செயற்பாடுகளுக்கு பிரித்தானிய ஸ்ரீலங்கா முஸ்லிம் புலம்பெயர்ந்தோர் அமைப்பு கண்டனம்
இலங்கையில் சமாதானம், ஐக்கியம், ஜனநாயகம், தேசிய நல்லிணக்கம், நாட்டின் பொருளாதாரம் போன்ற நல்லாட்சியின் அடையாளச் சின்னங்களைத் தகர்த்தெறிந்து இனவாதம், மதவாதம், கலவரம், அராஜகம் போன்ற காட்டுமிராண்டித்தனம் நிறைந்த சர்வாதிகாரக் காட்டாட்சிக்கு முயற்சித்து வருகின்ற பொது பல சேனாவின் செயற்பாடுகளை பிரித்தானியாவில் வாழும் ஸ்ரீலங்கா முஸ்லிம் புலம்பெயர்ந்தோர் அமைப்பு வன்மையாகக் கண்டிக்கின்றது.
இவ்வியக்கத்தின் அராஜகச் செயற்பாடுகளைத் தடுத்து நிறுத்துவதற்கு நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியும், அரசாங்கமும் இன்னமும் காலந்தாழ்த்தாது உடனடியாக உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டுமெனவும் எமது அமைப்பின் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
அனுராதபுரம் ஸியாரம் உடைக்கப்பட்ட மத வன்முறையுடன் இலங்கையின் வரலாற்றில் மூன்றாவது பயங்கரவாத சக்தியாக பொது பல சேனா என்ற இந்த இயக்கம் உருவாகி இறுதியாக கடந்த வியாழக்கிழமை இரவு கொழும்பு புறநகர் பிரதேசத்தில் அமைந்திருந்த முஸ்லிம்களின் வியாபார நிலையமான 'பெஸன் பக்' ஸ்தாபனத்தை தாக்கியது வரை இந்த அராஜக இனவாத அமைப்பு நமது நாட்டில் வளர்ச்சியடைந்திருக்கின்றது.
நாட்டின் சட்டம், ஒழுங்கு, ஜனநாயகம் போன்றவற்றை கிஞ்சித்தும் மதிக்காது சீருடை அணியாத பொலிஸ்காரர்களாகச் செயற்பட்டு வரும் இப்பயங்கரவாத பொது பல சேனா அமைப்பின் அச்சுறுத்தல் நிறைந்த இவ்வளர்ச்சியானது, இன்று எமது இலங்கைத் தாயகத்தில் வாழுகின்ற சிறுபான்மைச் சமூகங்களான இந்து - முஸ்லிம் - கிறிஸ்தவ சமூகத்தினருக்கு மாத்திரமன்றி பேரின சமூகமான சிங்கள பௌத்த மக்களுக்கு மத்தியிலுள்ள சமூக - அரசியல் - மதத் தலைவர்களையும், மக்களையும் கருத்து வேறுபாடு கொண்ட பல கூறுகளாக்கி முழு நாட்டையுமே மீண்டுமொருமுறை குழப்பமான சூழ்நிலைக்குள் தள்ளியுள்ளது.
மாத்திரமன்றி, சர்வதேச நாடுகளிலும் குறிப்பாக எமது நாட்டிற்கு ஆதரவாகவுள்ள முஸ்லிம் நாடுகளிலும், எதிராகவுள்ள மேற்கு நாடுகளிலும் எமது தேசத்தின் நற்பெயருக்கும், ஜனநாயக இருப்புக்கும் மீண்டுமொருமுறை களங்கத்தையும், அபகீர்த்தியையும் ஏற்படுத்தும் வகையிலும் இந்த பொது பல சேனாவின் சமகாலத் தீவிரவாதச் செயற்பாடுகள் அமைந்துள்ளன.
இந்த மூன்றாவது பயங்கரவாத சக்தியின் அராஜக நடவடிக்கைகளை அடக்கியொடுக்குவதற்கு இலங்கையின் நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி என்ற வகையில் உடனடியாகவே தகுந்த நடடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது அவசியமும் அவசரமுமாகும்.
கடந்த முப்பதாண்டு கால யுத்த அவலங்களின்போது புலம்பெயர்ந்த இலங்கையின் தமிழ்ச் சமூகத்தைச் சேர்ந்தவர்களில் பொரும்பாலானோர் எமது நாட்டிற்கும், நாட்டின் தலைவருக்கும் எதிரான செயற்பாடுகளில் தமிழ்நாடு தொடக்கம் ஐ.நா. மன்றம் வரை திட்டமிட்டு தீவிரமாக இயங்கி வருகின்ற துரதிஸ்டவசமான நிலையில், இவ்வாறு புலம்பெயர்ந்து வந்த முஸ்லிம்களான நாம் எமது நாட்டிற்கும், நாட்டின் தலைமைத்துவத்திற்கும் விசவாசமாகவும், ஆதரவாகவுமே செயற்பட்டு வந்துள்ளோம்.
இந்நிலையில், தற்போது இந்த பொது பல சேனா எனும் தீவிரவாத அமைப்பின் இனவாத – மதவாதச் செயற்பாடுகளின் விளைவாக நாமும் பல்வேறு தரப்பினரின் விமர்சனங்களுக்கும், அழுத்தங்களுக்கும் முகங்கொடுத்து எமது தாய் நாட்டிற்கும், நாட்டின் தலைவருக்கும், அரசாங்கத்திற்கும் ஆதரவாகத் தொடர்ந்தும் செயற்பட முடியாத அளவுக்கு நெருக்கடிக்கு உள்ளாகி இருக்கின்றோம்.
எனவே, இன்னமும் இலங்கை முஸ்லிம் சமூகத்திற்கும், ஏனைய சிறுபான்மைச் சமூகங்களுக்கும் எதிராக இந்த பொது பல சேனா எனும் தீவிரவாதச் செயற்பாட்டாளர்கள் மேற்கொள்ளுகின்ற அடாவடித்தனமான செயற்பாடுகளுக்கு அமைதிப் போக்கில் அங்கீகாரம் வழங்கிக் கொண்டிருக்காது நாட்டின் சட்டத்திற்கு அமைவாக தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்வதைத் தீவிரப்படுத்தி நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர ஆவன செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்துகின்றோம்.
இலங்கையில் பௌத்த மதத்தையும், அதன் பாரம்பரியத்தையும், கலாசாரத்தையும் பேணிப் பாதுகாப்பதற்கும், மேம்படுத்துவதற்கும் புத்தசாசன அமைச்சு என்றும், கலாச்சார அமைச்சு என்றும் அமைச்சுக்கள் நிறுவப்பட்டுள்ளன. அந்த அமைச்சுக்களின் மூலமே பௌத்த மக்களின் நலன்களைப் பாதுகாப்பதற்கு நாட்டின் அரசியலமைப்புக்கு உட்பட்ட வகையில் பொருத்தமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமே தவிர, பொது பல சேனா போன்ற தீவிரப்போக்குடைய கும்பல்களினால் பௌத்த மதத்தின் இருப்பையும், வளர்ச்சியையும், அதன் கலாசார விழுமியங்களையும் நாட்டில் பேணிப் பாதுகாக்க அனுசரணையாக இருப்பதென்பது அரசாங்கத்தின் பலவீனத்தை உலகளாவ அம்பலப்படுத்துவதாகவும், ஏற்றுக் கொள்வதாகவுமே கருதப்படும்.
இலங்கையின் சுதந்திரத்தையும், இறைமையையும், ஆள்புல ஒருமைப்பாட்டையும் கபளீகரப்படுத்துவதற்கு 1970களில் ஜனதா விமுக்தி பெரமுன எனும் பயங்கரவாத அமைப்பு முதல் தடவையாக சிங்களப் பேரின சமூகத்தின் மத்தியில் இருந்து ஆயுதங்களைத் தூக்கிக் கொண்டு இந்நாட்டு மக்களை அடிமைப்படுத்த முயற்சியெடுத்திருந்தது.
அப்பயங்கரவாத எழுச்சியின்போது, பெரும்பான்மைச் சமூக மக்கள் மத்தியில் இருந்து தோன்றியுள்ள விடுதலை இயக்கம் என்பதையும் கவனத்திற்கொள்ளாது முன்னாள் பிரதம மந்திரி ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கா அம்மையார் அவர்கள், தனது கட்டுப்பாட்டிலிருந்த இராணுவத்தையும், பொலிசாரையும் கொண்டு அப்பயங்கரவாதிகளை முற்றாக அழித்து நாட்டின் ஐக்கியம், சுதந்திரம், ஜனநாயகம் என்பவற்றை நிலை நிறுத்தினார் என்பது எமது தேசத்தின் வீர வரலாறாகும்.
அதன் பின்னர் தமிழீழ விடுதலைப் புலிகள் எனும் இரண்டாவது பயங்கரவாத சக்தியானது தமிழ்ச் சமூகத்திலிருந்து புறப்பட்டு 1977களில் ஆயுதங்களைத் தூக்கிக் கொண்டு இந்நாட்டைக் கூறு போடுவதற்காகப் போரிட்டனர்.
அவர்களது பயங்கரவாதத்தையும், நாட்டைத் துண்டாடித் தனிநாடு அமைக்கும் முயற்சியையும்; இன்றைய அரசுத் தலைவரான ஜனாதிபதி, அவர்களும் நமது நாட்டுப் பிரஜைகளே என்பதையும் கருத்திற் கொள்ளாது அவர்களின் பயங்கரவாதத்தை அழித்தொழித்தார் என்பதும் நாம் கண்டறிந்த வரலாறாகும்.
1948ல் எமது நாட்டிற்குச் சுதந்திரம் கிடைத்து முதலில் ஆட்சிப் பொறுப்பை ஏற்றது ஐக்கிய தேசியக் கட்சியாக இருந்த போதிலும், எமது நாட்டில் இரண்டு தடவைகள் ஏற்பட்ட எமது சுதந்திர இறைமைக்கு எதிரான பயங்கரவாதப் போராட்டங்களையும் தோற்கடித்து முடிவுக்குக் கொண்டு வந்த பெருமையானது, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கே உள்ளது என்பது மறுக்கப்பட முடியாத உண்மையாகும்.
அத்தகைய வரலாற்றைக் கொண்டுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும், அதன் தலைமைத்துவத்திற்கும், இன்றைய ஆட்சி இறைமைக்கும் மீண்டுமொரு சவாலாகவே பௌத்த மதத்தினதும், சிங்கள இனத்தினதும் நலன்களையும், உரிமைகளையும் பாதுகாக்கப் போவதாகக் கூறிக் கொண்டு பொது பல சேனா எனும் இப்பயங்கரவாத அமைப்பு இன்று எமது தாய் நாட்டில் உருவாகியுள்ளது.
இதன் முறையற்ற தோற்றத்தையும், நேர்மையற்ற நோக்கத்தையும், வன்முறை நிறைந்த செயற்பாடுகளினூடாக அடைந்து வரும் வளர்ச்சியையும் அனைவருமே அவதானித்து வருகின்றனர். இந்நாட்டின் பிரஜைகளான முஸ்லிம் சமூகம் உள்ளிட்ட ஏனைய சிறுபான்மைச் சமூக மக்களை அச்சுறுத்தி, அடக்கியாண்டு, அவர்களின் அடிப்படையான மனித மற்றும் மத உரிமைகளை அடியோடு மறுத்தும், முழுதாகப் பறித்துமே இந்த நாட்டில் பெரும்பான்மையாக வாழுகின்ற சிங்கள பௌத்த சமூகத்தின் உரிமைகளையும், மத இருப்பiயும் அவர்கள் தக்க வைத்துப் பாதுகாக்க வேண்டும் என்றால், நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியும், முஸ்லிம்களின் பங்களிப்பைக் கொண்டுள்ள அரசாங்கமும், சட்டம் ஒழுங்கும், படை பட்டாளங்களும் எதற்கு என்கிற கேள்வி இன்று எல்லோர் மத்தியிலும் எழுந்துள்ளது கவலைக்குரிய அடைவாகும்.
30 வருட காலமாக நீடித்த யுத்தத்தை முடிவுக்குக்குக் கொண்டு வந்ததன் பின், நாட்டில் பயங்கரவாதத்தை முறியடித்தது நிறைவேற்றதிகாரமா? இராணுவத் தலைமைத்துவமா? என்ற போட்டியும், கேள்வியும் எழுந்ததை நாம் அறிவோம்.
இவ்வாறே இந்நாட்டில் பௌத்தத்தையும், பௌத்த கலாசாரத்தையும், பௌத்த மத உரிமைகளையும் பேணுவதாகக் கூறிக் கொண்டு, அழிச்சாட்டியமான பல்வேறு நடவடிக்கைகளிலும் ஈடுபட்டுவரும் பொது பல சேனாவின் இந்த மதவாத - இனவாத செயற்பாடுகளின் முடிவிலும் இந்நாட்டில் பௌத்தத்தை நிலை நிறுத்தியது யார்? என ஜனாதிபதிக்கும், அரசாங்கத்திற்கும், முப்படையினருக்கும், காவல்துறைக்கும் எதிராக இப்பயங்கரவாத பொது பல சோனாக்களின் விரல்களும், கேள்விகளும் நீளும் என்பதையும் நாமனைவரும் முன்னெச்செரிக்கையுடன் நோக்க வேண்டும்.
எனவேதான், பௌத்த மதத்தினதும், சிங்கள இனத்தினதும் பேரால் நமது அழகிய ஸ்ரீலங்காவில் தூண்டப்பட்டுள்ள இக்கொடிய சமூகச் சிதைப்பு முயற்சியை ஜனாதிபதியின் தலைமையிலான அரசாங்கம் உடனடியாகத் தடுத்து நிறுத்துவதற்கு முன்வர வேண்டும் என நாம் வலியுறுத்துகின்றோம்.
இந்நாட்டில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையிலான இன்றைய அரசியல் அதிகாரத்தையும், அதன் வரலாறுகளையும் 1977ல் முடித்து வைத்தது போல் மீண்டுமொருமுறை முடித்து வைப்பதற்காக நரித்தந்திரமான முறையில் எதிர்க்கட்சிகளாலும், அரசுக்கு எதிரான வெளிநாட்டுப் புலம்பெயர் சக்திகளாலும் நன்கு திட்டமிட்டு முன்னெடுக்கப்பட்டு வரும் பௌத்த மதத்தைக் காக்கும் போர்வையிலான பொது பல சேனாவின் இன்றைய நடவடிக்கைகளையும் பயங்கரவாதச் செயற்பாடுகளாகக் கருதி அவ்வியக்கத்தைத் தடை செய்து, அவர்களின் எதிர்காலச் செயற்பாடுகளை முறியடித்து முடக்குவதற்கும், அனைத்து மக்களும் நாட்டில் அச்சம், பீதியற்ற வகையில் தமது அன்றாட வாழ்க்கையை முன்னெடுத்துச் செல்வதற்கு அரசாங்கம் வழிகோல வேண்டும் என எமது அமைப்பு வலியுறுத்திக் கேட்டுக் கொள்கின்றது.
இனவாத. மதவாத கருத்துக்களைக் கக்கும் இணையத்தளங்களை நடாத்திச் செல்லக்கூடிய நபர்களை வலைவீசித் தேடும் பணியை குற்றப்புலனாய்வுப் பிரிவு ஆரம்பித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் புத்திக்க ஸ்ரீவர்த்தன குறிப்பிடுகிறார்.
முகநூல், டுவிட்டர் போன்ற சமூகவலைத்தளங்களினூடாக இனவாதக் கருத்துக்கள் பரப்பப்படுவதாக தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன என அவர் குறிப்பிடுகிறார். எதுஎவ்வாறாயினும், கையடக்கத் தொலைபேசியினூடாக குறுந்தகவல்கள் வழங்குவோரை கண்டுபிடிப்பதை விட, மிகக் கொடூர விடயங்களைப் பரப்பும் இவர்களைக் கண்டுபிடிப்பது மிகவும் கடின காரியம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
(கேஎப்)
முகநூல், டுவிட்டர் போன்ற சமூகவலைத்தளங்களினூடாக இனவாதக் கருத்துக்கள் பரப்பப்படுவதாக தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன என அவர் குறிப்பிடுகிறார். எதுஎவ்வாறாயினும், கையடக்கத் தொலைபேசியினூடாக குறுந்தகவல்கள் வழங்குவோரை கண்டுபிடிப்பதை விட, மிகக் கொடூர விடயங்களைப் பரப்பும் இவர்களைக் கண்டுபிடிப்பது மிகவும் கடின காரியம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
(கேஎப்)
தீக்குச்சி
தீண்டி
கதிரவன்தான்
கரையுமோ?
பூனைமோதி
யானைதான்
வீழுமோ?
பூமியழுது
வானம்தான்
நனையுமோ?
வானம் அழுதால்
பூமிதான்
தாங்குமோ?
காவிகள்
இனவாதக்
கத்திபிடிக்கலாம்!
அதற்கு
அரசு எனும்
அரக்கன்
துணையும் நிற்கலாம்!
பன்றிகள் சேர்ந்து
கூட்டமைக்கலாம்!
இனத்தையே
அடகுவைத்து
பரதேசிகள்
பதவியெனும்
எலும்பு
கடிக்கலாம்!
காற்று
அடிக்கலாம்!
புயல்
அடிக்கலாம்!!
ஆனால்,
கடலலைகள்
ஓய்வதில்லையே...!
- எம்.பீ.அன்வர்
தீண்டி
கதிரவன்தான்
கரையுமோ?
பூனைமோதி
யானைதான்
வீழுமோ?
பூமியழுது
வானம்தான்
நனையுமோ?
வானம் அழுதால்
பூமிதான்
தாங்குமோ?
காவிகள்
இனவாதக்
கத்திபிடிக்கலாம்!
அதற்கு
அரசு எனும்
அரக்கன்
துணையும் நிற்கலாம்!
பன்றிகள் சேர்ந்து
கூட்டமைக்கலாம்!
இனத்தையே
அடகுவைத்து
பரதேசிகள்
பதவியெனும்
எலும்பு
கடிக்கலாம்!
காற்று
அடிக்கலாம்!
புயல்
அடிக்கலாம்!!
ஆனால்,
கடலலைகள்
ஓய்வதில்லையே...!
- எம்.பீ.அன்வர்
வடகொரியா சமீபத்தில் அணுகுண்டு சோதனை நடத்தியது. இதற்கு பல நாடுகள் எதிர்ப்பு தெரிவித்தன. ஐ.நா. வடகொரியா மீது பொருளாதார தடைகளை அதிகரித்தது. இதனை ஏற்காத வடகொரியா, அமெரிக்கா மற்றும் தென்கொரிய நாடுகளை எதிர்த்து பல அறிக்கைகளை வெளியிட்டு வந்தது. மேலும் அமெரிக்காவை குறிவைத்து ஏவுகணைகளை நிறுத்தியுள்ளது.
இந்நிலையில் நேற்று வடகொரியா, தென்கொரியா மீது போர் பிரகடனம் செய்தது. இன்று வடகொரிய எல்லையில் செயல்பட்டு வரும் தொழில் வளாகத்தை மூடப்போவதாக அறிவித்துள்ளது. இந்த தொழில் வளாகத்தில் இரு நாட்டு மக்களும் இணைந்து பணியாற்றி வருகின்றனர் என்பது குறிபிடத்தக்கது.
அமெரிக்கா, கொரிய வளைகுடாவில் நிலவி வரும் அசாதாரண சூழ்நிலை குறித்தும், அதன் நிலைப்பாடு குறித்தும் அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு குழுவின் செய்தித் தொடர்பாளர் கைட்லின் ஹெய்டன் கூறியதாவது:-
வடகொரியா வெளியிட்டு வரும் ஆக்கப்பூர்வமற்ற அறிக்கைகைகள் நாங்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். இந்த அச்சுறுத்தல்களின் தீவிரம் மிக்கதாகவே கருதுகிறோம். எங்கள நீண்டநாள் நட்பு நாடான தென் கொரியாவுடன் தொடர்பில்தான் இருக்கிறோம்.
எங்களையும், நட்பு நாடுகளையும் காப்பாற்றும் திறன் எங்களுக்கு உள்ளது. வடகொரியா அச்சுறுத்தல்களை எதிர்க்க தேவையான கூடுதல் நடவடிக்கைகளை நாங்கள் மேற்கொண்டுள்ளோம்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்..
இந்நிலையில் நேற்று வடகொரியா, தென்கொரியா மீது போர் பிரகடனம் செய்தது. இன்று வடகொரிய எல்லையில் செயல்பட்டு வரும் தொழில் வளாகத்தை மூடப்போவதாக அறிவித்துள்ளது. இந்த தொழில் வளாகத்தில் இரு நாட்டு மக்களும் இணைந்து பணியாற்றி வருகின்றனர் என்பது குறிபிடத்தக்கது.
அமெரிக்கா, கொரிய வளைகுடாவில் நிலவி வரும் அசாதாரண சூழ்நிலை குறித்தும், அதன் நிலைப்பாடு குறித்தும் அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு குழுவின் செய்தித் தொடர்பாளர் கைட்லின் ஹெய்டன் கூறியதாவது:-
வடகொரியா வெளியிட்டு வரும் ஆக்கப்பூர்வமற்ற அறிக்கைகைகள் நாங்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். இந்த அச்சுறுத்தல்களின் தீவிரம் மிக்கதாகவே கருதுகிறோம். எங்கள நீண்டநாள் நட்பு நாடான தென் கொரியாவுடன் தொடர்பில்தான் இருக்கிறோம்.
எங்களையும், நட்பு நாடுகளையும் காப்பாற்றும் திறன் எங்களுக்கு உள்ளது. வடகொரியா அச்சுறுத்தல்களை எதிர்க்க தேவையான கூடுதல் நடவடிக்கைகளை நாங்கள் மேற்கொண்டுள்ளோம்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்..
இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் 39 ஆவது வருடாந்தக் கூட்டத்திற்கு நாட்டின் 43 ஆவது பிரதம நீதியரசரும், சர்ச்சைக்குரிய விதத்தில் பணி நீக்கம் செய்யப்பட்டவருமான ஷிரானி பண்டாரநாயக்க தலைமை தாங்கியதுடன் தற்போதைய பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ் இந்த நிகழ்வில் பங்கேற்கவில்லை.
இந்த நிகழ்வு ஆரம்பமாவதற்கு முன்னதாகவே சட்ட மா அதிபர் பாலி பெர்னாண்டோ நிகழ்வு நடந்த இடத்தை விட்டு வெளியேறிச் சென்றதால் நிகழ்வில் உத்தியோகபூர்வ பிரதம அதிதிகள் யாரும் இல்லாத காரணத்தினால் முன்னாள் பிரதம நீதியரசர் பிரதம அதிதியாக செயற்பட்டதுடன் இவருக்கு பான்ட் வாத்தியக் கலைஞர்களும், நடனக் கலைஞர்களும் வரவேற்பு அளித்ததுடன் அனைவரும் எழுந்து நின்று மரியாதையும் செலுத்தினர்.
சட்டத்தரணிகள் சங்கத்தின் முன்னாள் தலைவர் விஜயதாச ராஜபக்ஷ மரபு ரீதியான சின்னத்தை புதிய தலைவர் உபுல் ஜயசூரியவிடம் ஒப்படைத்தார். அதன் பின்னர் புதிய தலைவர் உபுல் ஜயசூரியவிற்கு முன்னாள் பிரதம நீதியரசர் ஷிரானி பண்டாரநாயக்க வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.
இந்த நிகழ்வுக்கு முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க, நாடாளுமன்ற உறுப்பினர் கரு ஜயசூரிய, லக்ஸ்மன் கிரியல்ல, மாதுலுவே சோபிததேரர் மற்றும் தம்பர அமில தேரர் உள்ளிட்டோர் பங்கேற்றிருநந்தனர்.
இந்த நிகழ்வு ஆரம்பமாவதற்கு முன்னதாகவே சட்ட மா அதிபர் பாலி பெர்னாண்டோ நிகழ்வு நடந்த இடத்தை விட்டு வெளியேறிச் சென்றதால் நிகழ்வில் உத்தியோகபூர்வ பிரதம அதிதிகள் யாரும் இல்லாத காரணத்தினால் முன்னாள் பிரதம நீதியரசர் பிரதம அதிதியாக செயற்பட்டதுடன் இவருக்கு பான்ட் வாத்தியக் கலைஞர்களும், நடனக் கலைஞர்களும் வரவேற்பு அளித்ததுடன் அனைவரும் எழுந்து நின்று மரியாதையும் செலுத்தினர்.
சட்டத்தரணிகள் சங்கத்தின் முன்னாள் தலைவர் விஜயதாச ராஜபக்ஷ மரபு ரீதியான சின்னத்தை புதிய தலைவர் உபுல் ஜயசூரியவிடம் ஒப்படைத்தார். அதன் பின்னர் புதிய தலைவர் உபுல் ஜயசூரியவிற்கு முன்னாள் பிரதம நீதியரசர் ஷிரானி பண்டாரநாயக்க வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.
இந்த நிகழ்வுக்கு முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க, நாடாளுமன்ற உறுப்பினர் கரு ஜயசூரிய, லக்ஸ்மன் கிரியல்ல, மாதுலுவே சோபிததேரர் மற்றும் தம்பர அமில தேரர் உள்ளிட்டோர் பங்கேற்றிருநந்தனர்.
இலங்கையில் நீடித்து நிலைக்கக்கூடிய நிலையான சமாதானத்தையும் அதிகார பகிர்வையும் கொண்டுவருவதற்கான முயற்சிகளில் இந்தியா தோல்வியடைந்து விட்டதாக மட்டக்களப்பு வை.எம்.சி.ஏ. மண்டபத்தில் நடைபெற்ற மட்டக்களப்பு மாவட்ட உள்ளூர் அரச சார்பற்ற நிறுவனங்களின் இணையத்தின் மாதாந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
மேலும் இது ஒரு முக்கியமான தருணம். இன்று நாம் மேற்கொள்கின்ற காரியங்கள் எதிர்காலத்தில் ஒரு அரசியல் மாற்றத்தைத் தீர்மானிக்கும். ஏனெனில் இந்த அரசு விருப்பத்தின் பேரில் தனது அதிகாரங்களைக் கைவிடாது. அதனை நாம் ஏற்படுத்தும் சூழ்நிலையில் இருக்கின்றோம். எனவே வன்முறையற்ற ஓர் ஐக்கிய ஒற்றுமையை நாம் உருவாக்கிக்கொள்ள வேண்டும். அதன் பின்னர் தான் தேர்தலுக்குச் செல்ல வேண்டும்.
நான் கடந்த காலத்தைப் பற்றி பேச விரும்பவில்லை. எல்லோரும் தவறு விட்டிருக்கின்றோம். நான் ஒன்று கூறினால் அதை நீங்கள் ஏற்றுக்கொள்வீர்களா என்று தெரியவில்லை. இருப்பினும் நான் அதைக் கூறியே ஆக வேண்டும். 2005 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலின் போது பொதுமக்களை விடுதலைப் புலிகளின் தலைவர் வாக்களிக்கச் செல்ல விடாதமையினால் மக்களுக்கு பாரிய ஒரு சிக்கலை உருவாக்கியிருக்கின்றார் என்பதை நாம் அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் எனக்குறிப்பிட்டார்.
பிரபாகரனின் வாரிசுகளாக இருந்தவர்கள் இன்று அரசாங்கத்துடன் இணைந்து செயல்படுகின்றனர். பிரபாகரனை ஏற்றிச்செல்ல வந்த கப்பலுக்கும் என்னவாயிற்று? எல்லாக் கதைகளும் முடிந்து விட்டன. இப்போதாவது நாம் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்.
தமிழ் தேசிய கூட்டமைப்பு இந்தியாவுடன் சேர்ந்து பேச்சுவார்த்தை நடத்தியது. தற்போதைய சூழ்நிலையில் இந்தியாவினால் எதனையும் செய்ய முடியாது இதில் இரண்டு விடயங்கள் உள்ளன. ஒன்று இலங்கை அரசாங்கம் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தீர்மானங்களை ஏற்றுக் கொள்ளப்போவதில்லை. மற்றையது தற்போது இலங்கையின் பிரச்சனை அந்நிய பிரச்சினையாகிவிட்டது.
சிங்கள மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் மற்றைய பெரிய கட்சி ஐ.தே.கட்சி தான் இந்த பின்னனியில் கொள்கைகள் பற்றிதான் நாம் இப்போது பேசிக் கொண்டிருக்கின்றோம். தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனும் நாம் பேச்சுவார்த்தை மேற்கொண்ட வண்ணமே இருக்கின்றோம் எனத் தெரிவித்தார்.
மேலும் இது ஒரு முக்கியமான தருணம். இன்று நாம் மேற்கொள்கின்ற காரியங்கள் எதிர்காலத்தில் ஒரு அரசியல் மாற்றத்தைத் தீர்மானிக்கும். ஏனெனில் இந்த அரசு விருப்பத்தின் பேரில் தனது அதிகாரங்களைக் கைவிடாது. அதனை நாம் ஏற்படுத்தும் சூழ்நிலையில் இருக்கின்றோம். எனவே வன்முறையற்ற ஓர் ஐக்கிய ஒற்றுமையை நாம் உருவாக்கிக்கொள்ள வேண்டும். அதன் பின்னர் தான் தேர்தலுக்குச் செல்ல வேண்டும்.
நான் கடந்த காலத்தைப் பற்றி பேச விரும்பவில்லை. எல்லோரும் தவறு விட்டிருக்கின்றோம். நான் ஒன்று கூறினால் அதை நீங்கள் ஏற்றுக்கொள்வீர்களா என்று தெரியவில்லை. இருப்பினும் நான் அதைக் கூறியே ஆக வேண்டும். 2005 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலின் போது பொதுமக்களை விடுதலைப் புலிகளின் தலைவர் வாக்களிக்கச் செல்ல விடாதமையினால் மக்களுக்கு பாரிய ஒரு சிக்கலை உருவாக்கியிருக்கின்றார் என்பதை நாம் அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் எனக்குறிப்பிட்டார்.
பிரபாகரனின் வாரிசுகளாக இருந்தவர்கள் இன்று அரசாங்கத்துடன் இணைந்து செயல்படுகின்றனர். பிரபாகரனை ஏற்றிச்செல்ல வந்த கப்பலுக்கும் என்னவாயிற்று? எல்லாக் கதைகளும் முடிந்து விட்டன. இப்போதாவது நாம் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்.
தமிழ் தேசிய கூட்டமைப்பு இந்தியாவுடன் சேர்ந்து பேச்சுவார்த்தை நடத்தியது. தற்போதைய சூழ்நிலையில் இந்தியாவினால் எதனையும் செய்ய முடியாது இதில் இரண்டு விடயங்கள் உள்ளன. ஒன்று இலங்கை அரசாங்கம் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தீர்மானங்களை ஏற்றுக் கொள்ளப்போவதில்லை. மற்றையது தற்போது இலங்கையின் பிரச்சனை அந்நிய பிரச்சினையாகிவிட்டது.
சிங்கள மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் மற்றைய பெரிய கட்சி ஐ.தே.கட்சி தான் இந்த பின்னனியில் கொள்கைகள் பற்றிதான் நாம் இப்போது பேசிக் கொண்டிருக்கின்றோம். தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனும் நாம் பேச்சுவார்த்தை மேற்கொண்ட வண்ணமே இருக்கின்றோம் எனத் தெரிவித்தார்.
அமைச்சர் றிசாத் பதியுதீனின் அழைப்பின் பேரில் கொழும்பை தளமாகக் கொண்ட இராஜதந்திரிகள் குழுவொன்று நேற்று(30.03.20133) காலை தலைமன்னார் பியர் பகுதியில் மீள் குடியேற்றம் செய்யப்பட்டுள்ள முஸ்ஸிம் மக்களை நேரில் சென்று பார்வையிட்துடன் மீள் குடியேறிய மக்கள் வாழ்ந்து வரும் தற்காலிக வீடுகளையும் பார்வையிட்டதோடு அந்த மக்களின் பிரச்சினைகளையும் கேட்டறிந்தனர்.
இந்த சந்திப்பின் போது அந்த மக்கள் தமது பிரச்சினைகளான வீடு, குடி நீர், மலசல கூடம் இன்மை, மின்னாரம் இல்லாமை போன்ற பிரச்சினைகள் தொடர்பாக இராஜதந்திரிகள் குழுவிடம் முன்வைத்தனர்.
இந்த இராஜதந்திரிகள் தூதுக்குழுவிற்கு பலஸ்தீனத் தூதுவரும் கொழும்பிலுள்ள இராஜதந்திரிகள் அமைப்பின் தலைவருமான கலாநிதி அன்வர் அல் அகா தலைமையில் பலஸ்தீனம், பாகிஸ்தான், ஈரான், ஈராக், இந்தோனேசியா, பங்காளதேஷ், மற்றும் மலேசியா உள்ளிட்ட முஸ்லிம் நாடுகளின் தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்கள் உள்ளிட்டோரே கலந்துகொண்டிருந்தனர்.
இந்த சந்திப்பின் போது அந்த மக்கள் தமது பிரச்சினைகளான வீடு, குடி நீர், மலசல கூடம் இன்மை, மின்னாரம் இல்லாமை போன்ற பிரச்சினைகள் தொடர்பாக இராஜதந்திரிகள் குழுவிடம் முன்வைத்தனர்.
இந்த இராஜதந்திரிகள் தூதுக்குழுவிற்கு பலஸ்தீனத் தூதுவரும் கொழும்பிலுள்ள இராஜதந்திரிகள் அமைப்பின் தலைவருமான கலாநிதி அன்வர் அல் அகா தலைமையில் பலஸ்தீனம், பாகிஸ்தான், ஈரான், ஈராக், இந்தோனேசியா, பங்காளதேஷ், மற்றும் மலேசியா உள்ளிட்ட முஸ்லிம் நாடுகளின் தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்கள் உள்ளிட்டோரே கலந்துகொண்டிருந்தனர்.
இந்திய வெளிவிவகார அமைச்சில், கிழக்காசியாவுக்குப் பொறுப்பான செயலராக இலங்கைக்கான இந்தியத் தூதுவர் அசோக் கே காந்தா நியமிக்கப்படுவதற்கா இவரது பெயர் அமைச்சரவைக் குழுவின் அங்கீகாரத்துக்காக அனுப்பப்பட்டுள்ளது.
பா.ஜ.க.வின் மூத்த தலைவரும் முன்னாள் நிதியமைச்சருமான யஸ்வந்த் சின்ஹாவின் மருமகனே அசோக்கே காந்தா என்ற போதிலும், ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு இவரது இராஜதந்திரத் துறையின் சிறப்பான பணியும், கிழக்காசிய விவகாரத்தில் இவருக்குள்ள பரந்த அனுபவமுமே அவரை வெளிவிவகார அமைச்சின் செயலர் நிலைக்கு உயர்த்த தெரிவு செய்யப்படக் காரணம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவர் இந்திய வெளிவிவகார அமைச்சில் கிழக்காசிய பிரிவின் இணைச் செயலராகவும், மலேசியாவுக்கான தூதுவராகவும் அசோக் கே காந்தா முன்னர் பணியாற்றியிருந்த நிலையிலேயே தென்சீனக் கடல் விவகாரத்தில் இந்தியாவின் நலனைப் பாதுகாப்பதற்கு வசதியாகவே அசோக் கே காந்தா இந்தப் பதவியில் நியமிக்கப்படவுள்ளார்.
தற்போது இந்திய வெளிவிவகார அமைச்சின் கிழக்காசிய விவகாரங்களுக்கான செயலராக உள்ள சஞ்சய் சிங் வரும் ஏப்ரல் மாதத்துடன் ஓய்வுபெறவுள்ள நிலையிலேயே அந்தப் பதவிக்கு அசோக் கே காந்தா பரிந்துரைக்கப்பட்டுள்ளார். இதனால் இலங்கைக்குப் புதிதாக நியமிக்கப்படவுள்ள இந்தியத் தூதுவர் யார் என்பது பற்றிய கேள்வி தற்போது எழுந்துள்ளது.
பா.ஜ.க.வின் மூத்த தலைவரும் முன்னாள் நிதியமைச்சருமான யஸ்வந்த் சின்ஹாவின் மருமகனே அசோக்கே காந்தா என்ற போதிலும், ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு இவரது இராஜதந்திரத் துறையின் சிறப்பான பணியும், கிழக்காசிய விவகாரத்தில் இவருக்குள்ள பரந்த அனுபவமுமே அவரை வெளிவிவகார அமைச்சின் செயலர் நிலைக்கு உயர்த்த தெரிவு செய்யப்படக் காரணம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவர் இந்திய வெளிவிவகார அமைச்சில் கிழக்காசிய பிரிவின் இணைச் செயலராகவும், மலேசியாவுக்கான தூதுவராகவும் அசோக் கே காந்தா முன்னர் பணியாற்றியிருந்த நிலையிலேயே தென்சீனக் கடல் விவகாரத்தில் இந்தியாவின் நலனைப் பாதுகாப்பதற்கு வசதியாகவே அசோக் கே காந்தா இந்தப் பதவியில் நியமிக்கப்படவுள்ளார்.
தற்போது இந்திய வெளிவிவகார அமைச்சின் கிழக்காசிய விவகாரங்களுக்கான செயலராக உள்ள சஞ்சய் சிங் வரும் ஏப்ரல் மாதத்துடன் ஓய்வுபெறவுள்ள நிலையிலேயே அந்தப் பதவிக்கு அசோக் கே காந்தா பரிந்துரைக்கப்பட்டுள்ளார். இதனால் இலங்கைக்குப் புதிதாக நியமிக்கப்படவுள்ள இந்தியத் தூதுவர் யார் என்பது பற்றிய கேள்வி தற்போது எழுந்துள்ளது.
அரச படைகளும், சிங்கள மக்களும் அராஜகங்கள் புரிவதை உடன் கைவிட வேண்டும். இல்லையேல் வீண் விபரீதங்களைச் சந்திக்க வேண்டிய நிலை ஏற்படும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் கர்ஜித்திருப்பதாக தமிழரசுக்கட்சிப் பத்திரிகையில் நேற்று செய்தி வெளியாகியிருக்கிறது.
என்ன விபரீதங்கள், அவை எப்படி நடக்கும், யார் அதைச் செய்யப்போகிறார்கள் என்ற விவரங்களை வழக்கம்போல அவர் வெளியிடவில்லை அந்தப் பத்திரிகையும் சொல்லவில்லை. அரசையும் அரச படைகளையும் சிங்கள மக்களையும் நடுநடுங்க வைப்பதற்கு இந்த எச்சரிக்கையே போதும் என்று நினைத்தாரோ என்னவோ! நம் தலைவர்களா கொக்கா என்னும் வீரக் கிறுகிறுப்பை தமிழ் மக்களின் தலைகளுக்குள் ஏற்றிவிட்டால் போதாதா?
அறுபதுக்கும் மேற்பட்ட வருசங்களாக இந்தத் தலைவர்கள் இத்தகைய வீரவசனங்களைப் பேசிப் பேசியே இனங்களுக்கிடையே பகையை மூட்டி மூட்டி வளர்த்து வந்திருக்கிறார்கள். தமிழ் மக்களும், சிங்களவர்களை எங்கள் கால்களில் பணிந்து கிடக்க வீழ்த்திவிட்டு இந்த நாட்டில் நாமே தனிப்பெருங்குடிகளாய் வாழப்போகிறோம் என்ற கற்பனையிலேயே காலத்தை ஓட்டப் பழகியிருக்கிறார்கள்.
போன மாதம் வரை, ஜெனீவாவில் ஒரு பெரிய பொறி செய்து கொண்டிருப்பதாகவும், இலங்கை அரசு அதற்குள் மாட்டுப்பட்டு கீச் கீச் சென்று கத்தப்போவதை தமிழ்மக்கள் எல்லோரும் கேட்டு இன்புற வைக்கிறோம் பாருங்கள் என்று முழக்கங்களும் கர்ஜனைகளும் வீர எச்சரிக்கைகளுமாக எழுதியும் பேசியும் வந்தார்கள். அந்த மாநாடு முடிந்து ஒரு வாரமும் ஆகிவிட்டது. இவர்களது பொறியில் இருந்து இலங்கை தப்பியது எப்படி என்பதற்கு ஒரு விளக்கமும் இன்னும் இவர்களிடமிருந்து வரவில்லை. ஜெனீவா போனது தெரியும் வந்தது தெரியாது என்று இவர்கள் பம்மிவிட்டதைப் பார்த்து, வெற்று வீரவசனங்களால் தமிழ் மக்களை ஏமாற்றிவிட்ட வெட்கத்திலிருக்கிறார்களோ என்று நாம் தான் ஏமாந்துவிட்டோம்.
அவர்களுக்கேது வெட்கம்? இதோ, இலங்கை அரசே எச்சரிக்கிறோம், வீண் விபரீதங்களைச் சந்திக்க வேண்டியிருக்கும் என்று மீண்டும் ஆரம்பித்துவிட்டார்கள். தொட்டுப் பாரு அப்புறம் தெரியும் என்று நாரியை வளைத்துச் சுட்டுவிரலை ஆட்டியபடி சொல்லும் சாட்சாத் வடிவேலுதான் மறுபடியும் நினைவில் வந்து தொலைக்கிறார். இந்த வெட்கங்கெட்ட வீரப்பாவனைகளை இவர்கள் ஒரு போதும் நிறுத்துவார்கள் என்று தோன்றவில்லை. மக்கள்தான் இதற்கெல்லாம் புல்லரித்துக் கனவுகளில் சஞ்சரிக்காமல், நடை முறைச் சாத்தியங்கள் பற்றி யோசிக்க ஆரம்பிக்க வேண்டும்.
இன்றைய உலக ஒழுங்கில், எமது இந்த நாட்டுக்குள் பெரும்பான்மை இனத்துக்குச் சிறுபான்மை இனம் சவால்கள் விட்டுத் துள்ளிமிதித்து ஒன்றும் சாதிக்க முடியாது என்ற யதார்த்த உண்மையை, எங்கள் ரோசங்கள் நடப்புகளை விலக்கி ஆழ யோசித்துப் புரிந்துகொள்ள வேண்டும். இது ஒன்றும் நமக்கு இழுக்கோ சரணாகதியோ தாழ்வோ அல்ல. நடக்கக்கூடியதை விளங்கிக் கொண்டு, நாம் யாருக்கும் தாழ்ந்தவர்களில்லை என்பதை நிறுவும் தந்திரோபாயத்திற்கு மாறுதல் என்று புரிந்துகொள்ள வேண்டும்.
இங்கு தனிநாடு ஒன்று அமைவதற்கான சாத்தியங்கள் இருப்பதாகக் கதைகளை உருவாக்குவதும், அதன் அடிப்படையில் இனங்களிடையேயான பிளவை மேலும் மேலும் வளர்த்து வருவதும், வெறுப்பை அள்ளி வீசிக் கொண்டிருப்பதும், தமிழ் மக்களுக்கு எந்த நன்மையும் பயக்காது இடர்களைத்தான் தந்து கொண்டிருக்கும். இப்படியே நமது வாழ்வை வலிந்து வதைபட விடும் இவர்களது ஏமாற்று நீடிக்க அனுமதிக்கக் கூடாது.
என்ன விபரீதங்கள், அவை எப்படி நடக்கும், யார் அதைச் செய்யப்போகிறார்கள் என்ற விவரங்களை வழக்கம்போல அவர் வெளியிடவில்லை அந்தப் பத்திரிகையும் சொல்லவில்லை. அரசையும் அரச படைகளையும் சிங்கள மக்களையும் நடுநடுங்க வைப்பதற்கு இந்த எச்சரிக்கையே போதும் என்று நினைத்தாரோ என்னவோ! நம் தலைவர்களா கொக்கா என்னும் வீரக் கிறுகிறுப்பை தமிழ் மக்களின் தலைகளுக்குள் ஏற்றிவிட்டால் போதாதா?
அறுபதுக்கும் மேற்பட்ட வருசங்களாக இந்தத் தலைவர்கள் இத்தகைய வீரவசனங்களைப் பேசிப் பேசியே இனங்களுக்கிடையே பகையை மூட்டி மூட்டி வளர்த்து வந்திருக்கிறார்கள். தமிழ் மக்களும், சிங்களவர்களை எங்கள் கால்களில் பணிந்து கிடக்க வீழ்த்திவிட்டு இந்த நாட்டில் நாமே தனிப்பெருங்குடிகளாய் வாழப்போகிறோம் என்ற கற்பனையிலேயே காலத்தை ஓட்டப் பழகியிருக்கிறார்கள்.
போன மாதம் வரை, ஜெனீவாவில் ஒரு பெரிய பொறி செய்து கொண்டிருப்பதாகவும், இலங்கை அரசு அதற்குள் மாட்டுப்பட்டு கீச் கீச் சென்று கத்தப்போவதை தமிழ்மக்கள் எல்லோரும் கேட்டு இன்புற வைக்கிறோம் பாருங்கள் என்று முழக்கங்களும் கர்ஜனைகளும் வீர எச்சரிக்கைகளுமாக எழுதியும் பேசியும் வந்தார்கள். அந்த மாநாடு முடிந்து ஒரு வாரமும் ஆகிவிட்டது. இவர்களது பொறியில் இருந்து இலங்கை தப்பியது எப்படி என்பதற்கு ஒரு விளக்கமும் இன்னும் இவர்களிடமிருந்து வரவில்லை. ஜெனீவா போனது தெரியும் வந்தது தெரியாது என்று இவர்கள் பம்மிவிட்டதைப் பார்த்து, வெற்று வீரவசனங்களால் தமிழ் மக்களை ஏமாற்றிவிட்ட வெட்கத்திலிருக்கிறார்களோ என்று நாம் தான் ஏமாந்துவிட்டோம்.
அவர்களுக்கேது வெட்கம்? இதோ, இலங்கை அரசே எச்சரிக்கிறோம், வீண் விபரீதங்களைச் சந்திக்க வேண்டியிருக்கும் என்று மீண்டும் ஆரம்பித்துவிட்டார்கள். தொட்டுப் பாரு அப்புறம் தெரியும் என்று நாரியை வளைத்துச் சுட்டுவிரலை ஆட்டியபடி சொல்லும் சாட்சாத் வடிவேலுதான் மறுபடியும் நினைவில் வந்து தொலைக்கிறார். இந்த வெட்கங்கெட்ட வீரப்பாவனைகளை இவர்கள் ஒரு போதும் நிறுத்துவார்கள் என்று தோன்றவில்லை. மக்கள்தான் இதற்கெல்லாம் புல்லரித்துக் கனவுகளில் சஞ்சரிக்காமல், நடை முறைச் சாத்தியங்கள் பற்றி யோசிக்க ஆரம்பிக்க வேண்டும்.
இன்றைய உலக ஒழுங்கில், எமது இந்த நாட்டுக்குள் பெரும்பான்மை இனத்துக்குச் சிறுபான்மை இனம் சவால்கள் விட்டுத் துள்ளிமிதித்து ஒன்றும் சாதிக்க முடியாது என்ற யதார்த்த உண்மையை, எங்கள் ரோசங்கள் நடப்புகளை விலக்கி ஆழ யோசித்துப் புரிந்துகொள்ள வேண்டும். இது ஒன்றும் நமக்கு இழுக்கோ சரணாகதியோ தாழ்வோ அல்ல. நடக்கக்கூடியதை விளங்கிக் கொண்டு, நாம் யாருக்கும் தாழ்ந்தவர்களில்லை என்பதை நிறுவும் தந்திரோபாயத்திற்கு மாறுதல் என்று புரிந்துகொள்ள வேண்டும்.
இங்கு தனிநாடு ஒன்று அமைவதற்கான சாத்தியங்கள் இருப்பதாகக் கதைகளை உருவாக்குவதும், அதன் அடிப்படையில் இனங்களிடையேயான பிளவை மேலும் மேலும் வளர்த்து வருவதும், வெறுப்பை அள்ளி வீசிக் கொண்டிருப்பதும், தமிழ் மக்களுக்கு எந்த நன்மையும் பயக்காது இடர்களைத்தான் தந்து கொண்டிருக்கும். இப்படியே நமது வாழ்வை வலிந்து வதைபட விடும் இவர்களது ஏமாற்று நீடிக்க அனுமதிக்கக் கூடாது.
இலங்கை சிங்களவர்களுக்கும் தமிழர்களுக்குமிடையே பெரும் பிளவினை ஏற்படுத்துவதற்கு தமிழகம் முயன்றுவருவதாகவும், தமிழக அரசு இலங்கைக்கு எந்தவித உதவிகளும் செய்யவில்லை எனவும், எல்ரீரீஈயின் முன்னாள் ஊடகப் பேச்சாளர் தயா மாஸ்ரர் குறிப்பிட்டுள்ளார். இந்தியாவிலிருந்து வெளிவரும் ‘த ஹிந்து’ பத்திரிகை அவரிடம் கண்டசெவ்வியொன்றின் போதே தயா மாஸ்ரர் மேற்படி கருத்தை முன்வைத்துள்ளார்.
அவ்வாறே, இலங்கையின் மேலிடத்தினின்று தனக்கு எந்தவொரு வகையிலும் துன்புறுத்தல்கள் நிகழவில்லை எனவும், மிக உயர்வாக தன்னை ஆதரித்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவ்வாறே, தமிழகத்தில் இலங்கை பிக்குமார்கள் தாக்கப்படுவது அவசரமாக நிறுத்தப்பட வேண்டும் என்றும், இலங்கைத் தமிழர்களுக்கு ஒருபோதும் தமிழ்நாடு உதவ முன்வரவில்லை எனக் குறிப்பிட்டுள்ள அவர், தில்லி அரசாங்கம் வடக்கின் அபிவிருத்திக்காகத் தொடர்ந்து பங்களித்து வருகின்றது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
சர்வதேசம் பற்றிக் குறிப்பிடுகையில், இலங்கையில் தொடரந்தேர்ச்சியாக நடைபெற்றுவரும் அபிவிருத்தியைத் தடை செய்வதற்கே அமெரிக்கா மற்றும் மேற்கத்தேய நாடுகள் முயன்றுவருகின்றன எனவும் தயா மாஸ்ரர் குறிப்பிட்டுள்ளார்.
(கேஎப்)
அவ்வாறே, இலங்கையின் மேலிடத்தினின்று தனக்கு எந்தவொரு வகையிலும் துன்புறுத்தல்கள் நிகழவில்லை எனவும், மிக உயர்வாக தன்னை ஆதரித்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவ்வாறே, தமிழகத்தில் இலங்கை பிக்குமார்கள் தாக்கப்படுவது அவசரமாக நிறுத்தப்பட வேண்டும் என்றும், இலங்கைத் தமிழர்களுக்கு ஒருபோதும் தமிழ்நாடு உதவ முன்வரவில்லை எனக் குறிப்பிட்டுள்ள அவர், தில்லி அரசாங்கம் வடக்கின் அபிவிருத்திக்காகத் தொடர்ந்து பங்களித்து வருகின்றது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
சர்வதேசம் பற்றிக் குறிப்பிடுகையில், இலங்கையில் தொடரந்தேர்ச்சியாக நடைபெற்றுவரும் அபிவிருத்தியைத் தடை செய்வதற்கே அமெரிக்கா மற்றும் மேற்கத்தேய நாடுகள் முயன்றுவருகின்றன எனவும் தயா மாஸ்ரர் குறிப்பிட்டுள்ளார்.
(கேஎப்)
இலங்கை மீது போர்குற்றச்சாட்டுக்களை சுமத்துகின்றது மேற்குலகம். ஆனால் இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்திற்கும் மேற்குலகிற்கும் அண்ணன் தம்பி உறவு என்பது ஒன்றும் இரகசியமானது அல்ல. இறுதி வரைக்கும் இலங்கைக்கு வலது கையாலும் புலிகளுக்கு இடது கையாலும் போராயுதங்களையும் அதற்கான அலோசனைகளையும் மேற்குலக வழங்கி கொண்டு வந்திருக்கின்றது என்பது வரலாற்றில் பதிவாகியுள்ளது.
இவ்விடயத்தினை கடந்த வாரம் இலங்கையின் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாயவும் தெரிவித்திருந்தார். எந்த நாடுகள் புலிகளுக்கு உதவின என்றும் எவ்வாறு எந்த நோக்கத்திற்காக வழங்கின என்றும் அவர் கூறியிருந்தார்.
இந்நிலையில் புலிளியக்கத்தின் ஆயுதக்கடத்தன் மன்னனான கே.பி எனப்படுகின்ற குமரன் பத்மநாதன் „புலிகள் இயக்கத்திற்கு 11 நாடுகள் ஆயுத உதவியைச் செய்தன. ஆயுதங்களுக்குத் தேவையான உதிரிபாகங்களையும் கொடுத்து உதவின. அந்த நாடுகள் குறித்த தகவல்களை முழுமையாக வெளியிடுவேன்' என்று கூறியுள்ளார்.
இவ்விடயத்தினை கடந்த வாரம் இலங்கையின் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாயவும் தெரிவித்திருந்தார். எந்த நாடுகள் புலிகளுக்கு உதவின என்றும் எவ்வாறு எந்த நோக்கத்திற்காக வழங்கின என்றும் அவர் கூறியிருந்தார்.
இந்நிலையில் புலிளியக்கத்தின் ஆயுதக்கடத்தன் மன்னனான கே.பி எனப்படுகின்ற குமரன் பத்மநாதன் „புலிகள் இயக்கத்திற்கு 11 நாடுகள் ஆயுத உதவியைச் செய்தன. ஆயுதங்களுக்குத் தேவையான உதிரிபாகங்களையும் கொடுத்து உதவின. அந்த நாடுகள் குறித்த தகவல்களை முழுமையாக வெளியிடுவேன்' என்று கூறியுள்ளார்.
தென்கொரியாவுடன் போர் தொடங்கி விட்டதாக வட கொரியா பிரகடனம் செய்திருக்கிறது. இதனால் கொரிய தீபகற்ப பிரதேசத்தில் போர்ப் பதற்றம் உச்சத்தை அடைந்திருக்கிறது. வடகொரியா- தென்கொரியா இடையேயான பதற்றம் கடந்த அரை நூற்றாண்டுகாலத்துக்கும் மேலாக நீடித்தே வருகிறது. தென்கொரியா, அமெரிக்காவுடன் இணைந்து நிற்கிறது. இந்நிலையில் கடந்த மாதம் சுமார் 10 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் சென்று தாக்கக் கூடிய ஏவுகணை சோதனையை வடகொரியா நடத்தியது. அதாவது பசிபிக் பிராந்தியத்தில் இருக்கும் அமெரிக்காவின் ராணுவ நிலைகளைத் தாக்கும் திறன் தங்களுக்கு இருக்கிறது என்பதை வெளிப்படுத்தியது வடகொரியா.
இதைத் தொடர்ந்து 3-வது அணுகுண்டு சோதனையையும் வடகொரியா நடத்தியது. இதனால் வடகொரியா மீதான பொருளாதாரத் தடைகளை தீவிரப்படுத்தியது அமெரிக்கா.
அதே நேரத்தில் கொரிய தீபகற்பகப் பகுதியில் தென்கொரியாவுடன் இணைந்து அமெரிக்கா மிகப் பிரம்மாண்டமான போர் ஒத்திகையையும் நடத்தி வருகிறது. இப்போர் ஒத்திகையை வடகொரியா கடுமையாக எதிர்த்து வந்தது.
மேலும் நேற்று முன்தினம் அமெரிக்காவின் அதிநவீன அணுகுண்டுகளை வீசக் கூடிய 2 விமானங்கள் தென்கொரியாவின் தீவகப் பகுதி ஒன்றில் குண்டுகளை வீசி ஒத்திகை பார்த்தது.
இதைத் தொடர்ந்து இன்று வடகொரியா, தென்கொரியாவுடன் போரைத் தொடங்கிவிட்டதாக அதிகாரப்பூர்வமாக பிரகடனம் செய்திருக்கிறது. மேலும் வடகொரியா அரசு, கட்சிகள், அமைப்புகள் இணைந்து வெளியிட்டிருக்கும் அறிக்கையில் தென்கொரியாவுடனான அனைத்து வகையிலான ஒப்பந்தங்களும் கைவிடப்படுவதாகவும் இனி போர்க் காலங்களில் என்ன மாதிரியான நடைமுறைகள் மேற்கொள்ளப்படுமோ அதுவே அமலில் இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளை தென்கொரியா தொடருமேயானால் அணு ஆயுதப் போர் வெடிக்கும் என்றும் எச்சரிக்கப்பட்டிருக்கிறது. இதனால் கொரிய தீபகற்பப் பகுதியில் போர் பதற்றம் உச்சத்தை அடைந்திருக்கிறது. இப் போர்ப் பதற்றத்தைத் தணிக்க வேண்டும் என்று ரஷியா, சீனா ஆகிய நாடுகள் வலியுறுத்தி வருகின்றன.
.
இதைத் தொடர்ந்து 3-வது அணுகுண்டு சோதனையையும் வடகொரியா நடத்தியது. இதனால் வடகொரியா மீதான பொருளாதாரத் தடைகளை தீவிரப்படுத்தியது அமெரிக்கா.
அதே நேரத்தில் கொரிய தீபகற்பகப் பகுதியில் தென்கொரியாவுடன் இணைந்து அமெரிக்கா மிகப் பிரம்மாண்டமான போர் ஒத்திகையையும் நடத்தி வருகிறது. இப்போர் ஒத்திகையை வடகொரியா கடுமையாக எதிர்த்து வந்தது.
மேலும் நேற்று முன்தினம் அமெரிக்காவின் அதிநவீன அணுகுண்டுகளை வீசக் கூடிய 2 விமானங்கள் தென்கொரியாவின் தீவகப் பகுதி ஒன்றில் குண்டுகளை வீசி ஒத்திகை பார்த்தது.
இதைத் தொடர்ந்து இன்று வடகொரியா, தென்கொரியாவுடன் போரைத் தொடங்கிவிட்டதாக அதிகாரப்பூர்வமாக பிரகடனம் செய்திருக்கிறது. மேலும் வடகொரியா அரசு, கட்சிகள், அமைப்புகள் இணைந்து வெளியிட்டிருக்கும் அறிக்கையில் தென்கொரியாவுடனான அனைத்து வகையிலான ஒப்பந்தங்களும் கைவிடப்படுவதாகவும் இனி போர்க் காலங்களில் என்ன மாதிரியான நடைமுறைகள் மேற்கொள்ளப்படுமோ அதுவே அமலில் இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளை தென்கொரியா தொடருமேயானால் அணு ஆயுதப் போர் வெடிக்கும் என்றும் எச்சரிக்கப்பட்டிருக்கிறது. இதனால் கொரிய தீபகற்பப் பகுதியில் போர் பதற்றம் உச்சத்தை அடைந்திருக்கிறது. இப் போர்ப் பதற்றத்தைத் தணிக்க வேண்டும் என்று ரஷியா, சீனா ஆகிய நாடுகள் வலியுறுத்தி வருகின்றன.
.
இலங்கை விடயத்தில் தமிழக அரசியல்வாதிகளின் செயற்பாடுகள் குறித்து ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவித்த ஜனதா கட்சியின் தலைவர் டாக்டர் சுப்பரமணிய சுவாமி : 'முதல்வர் ஜெயலலிதா சுயநினைவை இழந்து விட்டார். தமிழகத்தின் முக்கிய தலைவர்கள் படிப்பறிவு இல்லாத காரணத்தால் சுயமாக சிந்திக்காமல் பேசுகிறார்கள்' என்று பொருளுரைத்துள்ளார்.
அவர் தொடர்ந்து கூறுகையில் : 'இலங்கை குறித்த ஜெயலலிதாவின் தற்போதைய கருத்துகள் கேட்பதற்கு மிகவும் சுவையாக இருக்கின்றன. ஜெயலலிதா தன்னுடைய சுயவுணர்வை இழந்திருக்கலாம் என்று நினைக்கிறேன் என சந்தேகம் வெளியிட்டுள்ளார்.
வெளிநாட்டு விவகாரங்களில் அவர் தலையிடக்கூடாது. அது பற்றி முடிவு எடுக்க வேண்டியது மத்திய அரசின் உரிமை. தமிழகத்தின் முக்கிய தலைவர்கள் இலங்கை விவகாரம் பற்றி கருத்து சொல்கிறார்கள். அவர்கள், படிப்பறிவு இல்லாத காரணத்தால் சுயமாக சிந்திக்காமல் பேசுகிறார்கள்' என்றார்.
இதேநேரம் தமிழ் நாட்டில் இலங்கைக்கு எதிராக மேற்கொண்டு வரும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் நிதானத்துடன் செயற்பட வேண்டியதன் முக்கியத்துவத்தை அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா வலியுறுத்தியுள்ளார். இவ்வாறான நெருக்கடிகளுக்கு மத்தியில், இந்திய மத்திய அரசாங்கத்திற்கு மாநில அரசாங்கங்களின் அழுத்தங்களுக்கு முகங்கொடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்துள்ளார்.
இந்திய மத்திய அரசாங்கமே அந்நாட்டுக்கான தேசிய கொள்கையை வகுக்கின்றது. கடந்த சில நாட்களாக இந்திய மத்திய அரசாங்கம் பலவீனமடையும் அதே வேளை மானில அரசாங்கங்கள் பலமடைந்து வருகின்றன. இதனால் இந்திய மத்திய அரசாங்கத்தின் வெளிநாட்டு கொள்கைகள் மாநில அரசாங்கங்களுடன் இணக்க போக்குடன் முன்னெடுக்கப்படுகின்றது.
தமிழகத்திலுள்ள ஈழம் நலன் விரும்பிகளால் உருவாக்கப்பட்ட ஆர்ப்பாட்டங்களும் எதிர்ப்புகளும் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுகின்றன. தமிழகத்தின் பெரும்பாலானோர் இவற்றிற்கு ஆதரவு இல்லையென நான் கருதுகின்றேன். அத்துடன் தமிழகத்தின் பிரதான எதிர்கட்சியும், இவ்வார்ப்பாட்டத்திற்கு ஆதரவு அளிப்பதை அவதானிக்க முடிகின்றது. இதன் அடிப்படையிலேயே இந்திய மத்திய அரசாங்கம் தீர்மானங்களை மேற்கொள்ள வேண்டியுள்ளது. ஆகவே ஆத்திரமூட்டப்படும் செயல்கள் இடம்பெறும் போது நாம் பொறுமையுடன் செயல்பட கூடிய பாரிய பொறுப்பு எமக்குள்ளது. அத்துடன் நாம் இது தொடர்பில் எச்சரிக்கையாகவும் செயல்பட வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தல் விடுத்துள்ளார்.
அவர் தொடர்ந்து கூறுகையில் : 'இலங்கை குறித்த ஜெயலலிதாவின் தற்போதைய கருத்துகள் கேட்பதற்கு மிகவும் சுவையாக இருக்கின்றன. ஜெயலலிதா தன்னுடைய சுயவுணர்வை இழந்திருக்கலாம் என்று நினைக்கிறேன் என சந்தேகம் வெளியிட்டுள்ளார்.
வெளிநாட்டு விவகாரங்களில் அவர் தலையிடக்கூடாது. அது பற்றி முடிவு எடுக்க வேண்டியது மத்திய அரசின் உரிமை. தமிழகத்தின் முக்கிய தலைவர்கள் இலங்கை விவகாரம் பற்றி கருத்து சொல்கிறார்கள். அவர்கள், படிப்பறிவு இல்லாத காரணத்தால் சுயமாக சிந்திக்காமல் பேசுகிறார்கள்' என்றார்.
இதேநேரம் தமிழ் நாட்டில் இலங்கைக்கு எதிராக மேற்கொண்டு வரும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் நிதானத்துடன் செயற்பட வேண்டியதன் முக்கியத்துவத்தை அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா வலியுறுத்தியுள்ளார். இவ்வாறான நெருக்கடிகளுக்கு மத்தியில், இந்திய மத்திய அரசாங்கத்திற்கு மாநில அரசாங்கங்களின் அழுத்தங்களுக்கு முகங்கொடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்துள்ளார்.
இந்திய மத்திய அரசாங்கமே அந்நாட்டுக்கான தேசிய கொள்கையை வகுக்கின்றது. கடந்த சில நாட்களாக இந்திய மத்திய அரசாங்கம் பலவீனமடையும் அதே வேளை மானில அரசாங்கங்கள் பலமடைந்து வருகின்றன. இதனால் இந்திய மத்திய அரசாங்கத்தின் வெளிநாட்டு கொள்கைகள் மாநில அரசாங்கங்களுடன் இணக்க போக்குடன் முன்னெடுக்கப்படுகின்றது.
தமிழகத்திலுள்ள ஈழம் நலன் விரும்பிகளால் உருவாக்கப்பட்ட ஆர்ப்பாட்டங்களும் எதிர்ப்புகளும் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுகின்றன. தமிழகத்தின் பெரும்பாலானோர் இவற்றிற்கு ஆதரவு இல்லையென நான் கருதுகின்றேன். அத்துடன் தமிழகத்தின் பிரதான எதிர்கட்சியும், இவ்வார்ப்பாட்டத்திற்கு ஆதரவு அளிப்பதை அவதானிக்க முடிகின்றது. இதன் அடிப்படையிலேயே இந்திய மத்திய அரசாங்கம் தீர்மானங்களை மேற்கொள்ள வேண்டியுள்ளது. ஆகவே ஆத்திரமூட்டப்படும் செயல்கள் இடம்பெறும் போது நாம் பொறுமையுடன் செயல்பட கூடிய பாரிய பொறுப்பு எமக்குள்ளது. அத்துடன் நாம் இது தொடர்பில் எச்சரிக்கையாகவும் செயல்பட வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தல் விடுத்துள்ளார்.
தமிழ்நாட்டிலுள்ள இலங்கையருக்கு பிரச்சினைகள் ஏற்படுத்தினால், இலங்கையிலுள்ள தமிழ்நாட்டுத் தமிழர்களை விரட்டியடிப்பதாக பொது பல சேனா இயக்கம் குறிப்பிட்டுள்ளதாக தினக்குரல் செய்தித்தாள் செய்தி வெளியிட்டுள்ளது.
தமிழக அரசியல்வாதிகள் தேர்தல்அண்மிக்கும் போது, இலங்கையை தேர்தல் தந்திரமாக உபயோகிப்பதாகக் குறிப்பிட்டுள்ள அவ்வியக்கம் , தமிழக விமான நிலையத்தை உபயோகிக்க வேண்டாம் எனவும் குறிப்பிட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழக அரசியல்வாதிகள் தேர்தல்அண்மிக்கும் போது, இலங்கையை தேர்தல் தந்திரமாக உபயோகிப்பதாகக் குறிப்பிட்டுள்ள அவ்வியக்கம் , தமிழக விமான நிலையத்தை உபயோகிக்க வேண்டாம் எனவும் குறிப்பிட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கைக்கு வருகை தந்து ஐக்கிய இலங்கையைப் பாராது, உண்மையை நிலையை ஆராயாது, சர்வதேசத்தில் இலங்கைக்கு அவப்பெயரை ஈட்டிக் கொடுப்பதற்காக ஐநா மனித உரிமைகள் ஆணையகத்தின் ஆணையாளர் நாயகம் நவநீதம்பிள்ளை முயல்வதாக ஐநாவின் செயலாளர் நாயகத்திற்கு உத்தியோகபூர்வமாகமனு கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த எழுத்து ஆவண மனு, ஐநாவின் இலங்கைக்கான உத்தியோகபூர்வ உறுப்பினர் கலாநிதி பாலித்த கொஹனவினால் ஐநாவின் செயலாளர் நாயகம் பென் கீ முன்னிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் தற்போதைய நிலவரத்தைக் காண்பதற்காகவும், இந்நாட்டு உயர்மட்டத்தினருடன் நாட்டில் நிலவுகின்ற பிரச்சினைகள் பற்றிப் பேச்சுவார்த்தை நடாத்துவதற்காகவும் வருகை தருமாறு ஆணையாளர் நாயகத்தை இலங்கை அரசு பலமுறை வேண்டிக் கொண்டது.
என்றாலும், ஆசியாவில் இலங்கை தவிர்ந்த ஏனைய நாடுகளுக்கு உத்தியோகபூர்வ சுற்றுலாவை மேற்கொண்ட பிள்ளை இலங்கைக்கு வருகை தந்து, உண்மையை நேரடியாகக் காணாமல் இலங்கைக் கெதிராகச் செயற்படுவது பிழையாகும் எனவும் அதில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
(கேஎப்)
இந்த எழுத்து ஆவண மனு, ஐநாவின் இலங்கைக்கான உத்தியோகபூர்வ உறுப்பினர் கலாநிதி பாலித்த கொஹனவினால் ஐநாவின் செயலாளர் நாயகம் பென் கீ முன்னிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் தற்போதைய நிலவரத்தைக் காண்பதற்காகவும், இந்நாட்டு உயர்மட்டத்தினருடன் நாட்டில் நிலவுகின்ற பிரச்சினைகள் பற்றிப் பேச்சுவார்த்தை நடாத்துவதற்காகவும் வருகை தருமாறு ஆணையாளர் நாயகத்தை இலங்கை அரசு பலமுறை வேண்டிக் கொண்டது.
என்றாலும், ஆசியாவில் இலங்கை தவிர்ந்த ஏனைய நாடுகளுக்கு உத்தியோகபூர்வ சுற்றுலாவை மேற்கொண்ட பிள்ளை இலங்கைக்கு வருகை தந்து, உண்மையை நேரடியாகக் காணாமல் இலங்கைக் கெதிராகச் செயற்படுவது பிழையாகும் எனவும் அதில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
(கேஎப்)
யாழ்.கோப்பாய் சந்தியில் இன்று(30.03.2013) சனிக்கிழமை மாலை 4.30 மணியளவில் முச்சக்கரவண்டியும், காரும் மோதி விபத்துக்குள்ளானதில் பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளதுடன், மூவர் கவலைக்கிடமான நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணத்திலிருந்து பருத்தித்துறை நோக்கிச் சென்ற முச்சக்கரவண்டியை,உரும்பிராயிலிருந்து கோப்பாய் சந்தி வழியாக பிரதான வீதிக்கு திரும்ப முற்பட்ட கார் மோதியதில், முச்சக்கரவண்டி மூன்று தடவைகள் தடம் புரண்டு விபத்துக்குள்ளானதாகவும், இதில் தனது இரண்டு பிள்ளைகளுடன் முச்சக்கரவண்டியில் பயணித்துக்கொண்டிருந்த தாய் ஒருவரே சம்பவ இடத்தில் இறந்ததாகவும் விபத்தை நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர்.
முச்சக்கரவண்டிச் சாரதி மற்றும் இரண்டு பிள்ளைகளும் பலத்த காயங்களுடன் கவலைக்கிடமான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணத்திலிருந்து பருத்தித்துறை நோக்கிச் சென்ற முச்சக்கரவண்டியை,உரும்பிராயிலிருந்து கோப்பாய் சந்தி வழியாக பிரதான வீதிக்கு திரும்ப முற்பட்ட கார் மோதியதில், முச்சக்கரவண்டி மூன்று தடவைகள் தடம் புரண்டு விபத்துக்குள்ளானதாகவும், இதில் தனது இரண்டு பிள்ளைகளுடன் முச்சக்கரவண்டியில் பயணித்துக்கொண்டிருந்த தாய் ஒருவரே சம்பவ இடத்தில் இறந்ததாகவும் விபத்தை நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர்.
முச்சக்கரவண்டிச் சாரதி மற்றும் இரண்டு பிள்ளைகளும் பலத்த காயங்களுடன் கவலைக்கிடமான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நாட்டில் வாழ்கின்ற சிங்கள பௌத்தர்களைப் போலவே, தமிழ் சிங்களவர்களதும் பாதுகாவலன் தான் என்றும் அவர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டியது தனது கட்டாயக் கடமை என்றும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ பேருவளையில் குறிப்பிட்டார்.
ஏதேனும் ஒரு இனத்திற்கு பிரச்சினைகள்ஏற்படுவதாயின், அதனை இல்லாமற் செய்வதற்கு சட்டத்தைக் பயன்படுத்துவதற்குத் தான் ஒருபோதும் பின்நிற்கப் போவதில்லை என ஜனாதிபதி குறிப்பிட்டார்.
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, பேருவளை ஹபுகொட ஸ்ரீ மகா விகாரையில் புதுக் கட்டிடம் ஒன்றைத் திறந்துவைத்து உரையாற்றும் போதே இவ்வாறு குறிப்பிட்டார்.
இது மூன்று தசாப்தங்களுக்கு மேலாக துன்பம் அனுபவித்த நாடு. அவ்வாறான துன்பத்தை எதிர்கால சந்ததியினரும் அனுபவிக்க வேண்டியதில்லை எனவும் அவர் அங்கு குறிப்பிட்டார்.
(கேஎப்)
ஏதேனும் ஒரு இனத்திற்கு பிரச்சினைகள்ஏற்படுவதாயின், அதனை இல்லாமற் செய்வதற்கு சட்டத்தைக் பயன்படுத்துவதற்குத் தான் ஒருபோதும் பின்நிற்கப் போவதில்லை என ஜனாதிபதி குறிப்பிட்டார்.
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, பேருவளை ஹபுகொட ஸ்ரீ மகா விகாரையில் புதுக் கட்டிடம் ஒன்றைத் திறந்துவைத்து உரையாற்றும் போதே இவ்வாறு குறிப்பிட்டார்.
இது மூன்று தசாப்தங்களுக்கு மேலாக துன்பம் அனுபவித்த நாடு. அவ்வாறான துன்பத்தை எதிர்கால சந்ததியினரும் அனுபவிக்க வேண்டியதில்லை எனவும் அவர் அங்கு குறிப்பிட்டார்.
(கேஎப்)
தெமட்டகொடையிலுள்ள இஸ்லாமிய புத்தக நிலையத்திற்கும், தெமட்டகொட தௌஹீத் பள்ளிவாசலுக்கும், தெமட்டகொட வீதியிலுள்ள ஜமாஅத்தே இஸ்லாமிக்கும் பொது பல சேனா இயக்கத்தினர் அச்சுறுத்தல் கடிதங்களைப் பகிர்ந்துள்ளனர். மிகவும் அநாகரிகமான வார்த்தைப் பிரயோகங்களைப் பயன்படுத்தி, பொதுபல சேனா இயக்கத்தினர்தம் முகவரியுடைய கடிதத் தலையிலேயே இவ்வினவாதத்தைத் தூண்டும் வாசகங்களை எழுதியுள்ளனர்.
அக்கடிதத்தின் தமிழாக்கம் வருமாறு:
நீவிர் அனுமதியின்றி நடத்திச் செல்லும் அடிப்படைவாத பள்ளிவாயலை உடன் அகற்றிக்கொள்! சிங்கள இனத்தின் இதயமான அக்ர போதி விகாரை அமைந்துள்ள நிலத்தில் உமக்கு இனிமேல் இடம் கிடையாது. எதிர்வரும் சிங்கள புத்தாண்டுக்கு முன்னர் திருட்டுக் குகையை அகற்றிச் செல்லவிட்டால் அதனை என்ன செய்ய வேண்டுமென்பதை நாம் அறிவோம். எதிர்வரும் 31ஆம் திகதி நீவிர், எங்கள் சேனாவின் பலத்தை கண்டுகொள்வீர். கள்ள உலமாக்கள் அகற்றிக்கொண்டது போல் நீவிரும் அகற்றுவீர் என்பதில் சந்தேகமில்லை.
இதற்குப் பின்னர், பிஸ்மில்லா மந்திரத்திற்கு இடமில்லை.
பௌத்தம் நிலைத்திட நில்லாமல் நீளும் கரங்கள்!
(கேஎப்)
அக்கடிதத்தின் தமிழாக்கம் வருமாறு:
நீவிர் அனுமதியின்றி நடத்திச் செல்லும் அடிப்படைவாத பள்ளிவாயலை உடன் அகற்றிக்கொள்! சிங்கள இனத்தின் இதயமான அக்ர போதி விகாரை அமைந்துள்ள நிலத்தில் உமக்கு இனிமேல் இடம் கிடையாது. எதிர்வரும் சிங்கள புத்தாண்டுக்கு முன்னர் திருட்டுக் குகையை அகற்றிச் செல்லவிட்டால் அதனை என்ன செய்ய வேண்டுமென்பதை நாம் அறிவோம். எதிர்வரும் 31ஆம் திகதி நீவிர், எங்கள் சேனாவின் பலத்தை கண்டுகொள்வீர். கள்ள உலமாக்கள் அகற்றிக்கொண்டது போல் நீவிரும் அகற்றுவீர் என்பதில் சந்தேகமில்லை.
இதற்குப் பின்னர், பிஸ்மில்லா மந்திரத்திற்கு இடமில்லை.
பௌத்தம் நிலைத்திட நில்லாமல் நீளும் கரங்கள்!
(கேஎப்)
நுகர்வுக் கலாசார சீரழிவுகளிலேயே மாணவர்கள் மீண்டும் மீண்டும் சிக்குவதாக செய்திகள் வருகின்றன. இன்றைய சூழல் மாணவரும் இளைய சமுதாயத்தினரும் மிகவும் விழிப்புடன் நடந்துகொள்ள வேண்டிய காலச்சூழல் என்பதை அழுத்திச் சொல்லவேண்டியிருக்கிறது. முன்பெல்லாம் இப்போதிருப்பது போல் நுகர்வுக் கலாசார வசதி வாய்ப்புகள் இத்தனை வளர்ந்திருக்கவில்லை.
தவிரவும், இதற்கு முந்திய தலைமுறையைச் சேர்ந்த இளைய பருவத்தினருக்கு அரசியலில் புதிய மாற்றங்களை முயன்று பார்க்கக்கூடிய நம்பிக்கையும் சமுதாய நெருக்கடிகளின்பால் கவனம் கொண்டு செயற்பாட்டில் இறங்கவேண்டிய இலட்சிய தூண்டல்களும் இருந்தன. பெரும்பான்மை இளைஞர்கள் இலட்சிய வேகத்தால் உந்தப்பட்டு தங்களது சமுதாயப் பொறுப்புணர்ந்தவர்களாக இயங்கும் நிலை இருந்தது.
இன்றைய இளையோர் வெளிநாட்டுப்பணமும், வெளிநாட்டுத் தொடர்புகளால் ஏற்பட்ட பல்வேறுவிதமான நுகர்வுப் பழக்கங்களும், அலங்கார வேலைப்பாடுகளுடன் கூடிய ஒரு வாழ்க்கை முறையுமாக உள்ளனர் என்று தோன்றுகிறது. எளிதில் சீரழிவுகளின்பால் ஈர்க்கப்படுபவர்கள் அதிகமாக இருப்பதற்கு அதுவே காரணமாக வேண்டும்.
இளைஞர்களும் மாணவர்களும் சிந்திப்பதற்குச் சிலவற்றைச் சொல்லவேண்டும் என்று படுகிறது. எதற்கும் பயன் நோக்கம் ஒன்றிருக்க வேண்டும் என்பதாகவே நாம் வாழ்க்கையை அமைத்துக் கொண்டிருக்கிறோம். உழைப்பது - பணத்திற்காக உதவுவது - பிறரும் நமக்கு உதவ வேண்டும் என்பதற்காக அன்பு செலுத்துவது - அன்பைப் பெறுவதற்காக என்பதாய் நாம் நினைத்துச் செயற்பட்டுக் கொண்டிருக்கிறோம். ஆனால் இவையெல்லாம் நம் இயல்புகள். உழைக்காமல், அடுத்தவனை மதிக்காமல், அன்பு செய்யாமல் எல்லாம் நம்மால் இருக்க முடியாது. கொஞ்சம் முயன்று பார்த்தால் புரிந்துவிடும். அல்லது பிறந்த குழந்தைகளைப் பார்த்தால் தெரிந்துவிடும்.
நம் அடிப்படைக் குணங்கள் இவை. மனிதர்களாக இருத்தல் என்பது இதுதான். ஆனால், அவ்வாறு இயல்பாக நம்மால் செயற்பட முடியாதபடி சமூகச் சூழல் இருக்கிறது. பகையும் வெறுப்பும் வன்முறையுணர்வும் துவேசமும் நம்மில் வண்டி வண்டியாக நாளும் பொழுதும் ஏற்றப்பட்டுக் கொண்டிருக்கிறது. பேச்சாலும் எழுத்தாலும் நம்முள் துவேசம் மேலோங்கத் தூண்டப்பட்டு வருகிறது. நம்மை மனித நிலையிலிருந்து கீழிறக்கும் துவேசப் பேச்சுக்களை நாம் அவதானித்து விலக்க வேண்டும். எவர் பேச்சைக் கேட்டும் உணர்ச்சிவசப்பட்டும், மனிதர்களாகிய நமது அடிப்படைக் குணங்களை விட்டுவிடாதிருந்தாலே போதும், அனேக தகராறுகளுக்கு இடமில்லை.
இந்த உலகில் நாம் தனியாக இல்லை. சக மனிதர்களையும் அனுசரித்தே நமது வாழ்க்கையை மகிழ்ச்சிப்படுத்திக் கொள்ள வேண்டும். இது நம் உணர்வில் எப்போதும் இருந்துகொண்டிருக்க வேண்டும். நான், எனது என்று நம்மைக் குறுக்கிக் கொள்வதில் மகிழ்ச்சி இல்லை. பிறரது மகிழ்ச்சி கண்டு மகிழ்ந்தும், மற்றவர்களை மகிழ்ச்சிப்படுத்திப் பார்ப்பதில் மகிழ்ச்சி கொண்டும், எங்கள் மனதை விரிவுபடுத்தி விகாசம் கொள்வதிலேயே மனிதவாழ்க்கையின் அர்த்தம் இருக்கிறது.
ஒரு மனிதனின் முக்கியத்துவம், அவன் மற்றவர்களுக்காகவும் வாழ்ந்ததைக் கொண்டே நிர்ணயமாகிறது. அடிபாடுகளுக்குள் சுருண்டு அவலங்களுக்குள் தீய்ந்தோம் என்று புழுங்கிக்கொண்டிராமல், நமக்காகவும் சமூகத்திற்காகவும் எல்லோர் கனவாகவும் இருக்கும் அமைதி நிறைந்த அழகிய உலகுக்காகவும் இளையபருவத்தினர் கவனம் குவிக்க வேண்டும். நம்மிடம் இல்லாததைப் பற்றிக் கவலைப்பட்டுக் கொண்டிருப்பது, நம்மிடம் உள்ளதை வீணடிப்பதாகும். இந்த வாழ்க்கையை வெல்லும் திறமை ஒன்று, நம்மிடமும்தான் இருக்கிறது. அதைக் கண்டுகொண்டு நம்மை மேலுயர்த்துவோம்.
தவிரவும், இதற்கு முந்திய தலைமுறையைச் சேர்ந்த இளைய பருவத்தினருக்கு அரசியலில் புதிய மாற்றங்களை முயன்று பார்க்கக்கூடிய நம்பிக்கையும் சமுதாய நெருக்கடிகளின்பால் கவனம் கொண்டு செயற்பாட்டில் இறங்கவேண்டிய இலட்சிய தூண்டல்களும் இருந்தன. பெரும்பான்மை இளைஞர்கள் இலட்சிய வேகத்தால் உந்தப்பட்டு தங்களது சமுதாயப் பொறுப்புணர்ந்தவர்களாக இயங்கும் நிலை இருந்தது.
இன்றைய இளையோர் வெளிநாட்டுப்பணமும், வெளிநாட்டுத் தொடர்புகளால் ஏற்பட்ட பல்வேறுவிதமான நுகர்வுப் பழக்கங்களும், அலங்கார வேலைப்பாடுகளுடன் கூடிய ஒரு வாழ்க்கை முறையுமாக உள்ளனர் என்று தோன்றுகிறது. எளிதில் சீரழிவுகளின்பால் ஈர்க்கப்படுபவர்கள் அதிகமாக இருப்பதற்கு அதுவே காரணமாக வேண்டும்.
இளைஞர்களும் மாணவர்களும் சிந்திப்பதற்குச் சிலவற்றைச் சொல்லவேண்டும் என்று படுகிறது. எதற்கும் பயன் நோக்கம் ஒன்றிருக்க வேண்டும் என்பதாகவே நாம் வாழ்க்கையை அமைத்துக் கொண்டிருக்கிறோம். உழைப்பது - பணத்திற்காக உதவுவது - பிறரும் நமக்கு உதவ வேண்டும் என்பதற்காக அன்பு செலுத்துவது - அன்பைப் பெறுவதற்காக என்பதாய் நாம் நினைத்துச் செயற்பட்டுக் கொண்டிருக்கிறோம். ஆனால் இவையெல்லாம் நம் இயல்புகள். உழைக்காமல், அடுத்தவனை மதிக்காமல், அன்பு செய்யாமல் எல்லாம் நம்மால் இருக்க முடியாது. கொஞ்சம் முயன்று பார்த்தால் புரிந்துவிடும். அல்லது பிறந்த குழந்தைகளைப் பார்த்தால் தெரிந்துவிடும்.
நம் அடிப்படைக் குணங்கள் இவை. மனிதர்களாக இருத்தல் என்பது இதுதான். ஆனால், அவ்வாறு இயல்பாக நம்மால் செயற்பட முடியாதபடி சமூகச் சூழல் இருக்கிறது. பகையும் வெறுப்பும் வன்முறையுணர்வும் துவேசமும் நம்மில் வண்டி வண்டியாக நாளும் பொழுதும் ஏற்றப்பட்டுக் கொண்டிருக்கிறது. பேச்சாலும் எழுத்தாலும் நம்முள் துவேசம் மேலோங்கத் தூண்டப்பட்டு வருகிறது. நம்மை மனித நிலையிலிருந்து கீழிறக்கும் துவேசப் பேச்சுக்களை நாம் அவதானித்து விலக்க வேண்டும். எவர் பேச்சைக் கேட்டும் உணர்ச்சிவசப்பட்டும், மனிதர்களாகிய நமது அடிப்படைக் குணங்களை விட்டுவிடாதிருந்தாலே போதும், அனேக தகராறுகளுக்கு இடமில்லை.
இந்த உலகில் நாம் தனியாக இல்லை. சக மனிதர்களையும் அனுசரித்தே நமது வாழ்க்கையை மகிழ்ச்சிப்படுத்திக் கொள்ள வேண்டும். இது நம் உணர்வில் எப்போதும் இருந்துகொண்டிருக்க வேண்டும். நான், எனது என்று நம்மைக் குறுக்கிக் கொள்வதில் மகிழ்ச்சி இல்லை. பிறரது மகிழ்ச்சி கண்டு மகிழ்ந்தும், மற்றவர்களை மகிழ்ச்சிப்படுத்திப் பார்ப்பதில் மகிழ்ச்சி கொண்டும், எங்கள் மனதை விரிவுபடுத்தி விகாசம் கொள்வதிலேயே மனிதவாழ்க்கையின் அர்த்தம் இருக்கிறது.
ஒரு மனிதனின் முக்கியத்துவம், அவன் மற்றவர்களுக்காகவும் வாழ்ந்ததைக் கொண்டே நிர்ணயமாகிறது. அடிபாடுகளுக்குள் சுருண்டு அவலங்களுக்குள் தீய்ந்தோம் என்று புழுங்கிக்கொண்டிராமல், நமக்காகவும் சமூகத்திற்காகவும் எல்லோர் கனவாகவும் இருக்கும் அமைதி நிறைந்த அழகிய உலகுக்காகவும் இளையபருவத்தினர் கவனம் குவிக்க வேண்டும். நம்மிடம் இல்லாததைப் பற்றிக் கவலைப்பட்டுக் கொண்டிருப்பது, நம்மிடம் உள்ளதை வீணடிப்பதாகும். இந்த வாழ்க்கையை வெல்லும் திறமை ஒன்று, நம்மிடமும்தான் இருக்கிறது. அதைக் கண்டுகொண்டு நம்மை மேலுயர்த்துவோம்.
சைபர் பங்கர் என்று அடையாளம் காணப்பட்ட கணினி வைரஸ் ஒன்று உட்பட மேலும் சில வைரஸுகள் இணைந்து உலகின் பல்வேறு நாடுகளின் இணைய வலையமைப்பை முடக்கியுள்ளன.
இதனால் பல்வேறு தரப்பினரும் பாரிய பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகின்றனர். இருப்பினும் இதனால் இலங்கைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என்று இலங்கை கணனி அவசரநிலை மற்றும் ஒருங்கிணைப்புமையம் சுட்டிக்காட்டியுள்ளது.
உலகிலுள்ள கணனி வலையமைப்பை முடக்குவதற்காக ஒரு நொடிக்கு 300 கிகா பைட்ஸ் தகவல்களை வலையமைப்புக்குள் செலுத்துவதே கணனி ஊடுருவாளர்களின் நோக்கமாகக் கொண்டிருந்துள்ளது.
உலகின் பிரதான கணனி மேற்பார்வை மற்றும் பாதுகாப்பு வலயங்கள் லண்டன், ஜெனிவா மற்றும் வொஷிங்டன் ஆகிய நகரங்களிலேயே அமைந்துள்ளன. கடந்த 2002 ஆம் ஆண்டிலும் இவ்வாறானதொரு கணனி ஊடுருவல் நிகழ்வு இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதுவரை நடைபெற்ற வைரஸ் தாக்குதல்களில் இதுவே பாரிய தாக்குதலாகும் என்று கணனி வல்லுனர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதனால் பல்வேறு தரப்பினரும் பாரிய பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகின்றனர். இருப்பினும் இதனால் இலங்கைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என்று இலங்கை கணனி அவசரநிலை மற்றும் ஒருங்கிணைப்புமையம் சுட்டிக்காட்டியுள்ளது.
உலகிலுள்ள கணனி வலையமைப்பை முடக்குவதற்காக ஒரு நொடிக்கு 300 கிகா பைட்ஸ் தகவல்களை வலையமைப்புக்குள் செலுத்துவதே கணனி ஊடுருவாளர்களின் நோக்கமாகக் கொண்டிருந்துள்ளது.
உலகின் பிரதான கணனி மேற்பார்வை மற்றும் பாதுகாப்பு வலயங்கள் லண்டன், ஜெனிவா மற்றும் வொஷிங்டன் ஆகிய நகரங்களிலேயே அமைந்துள்ளன. கடந்த 2002 ஆம் ஆண்டிலும் இவ்வாறானதொரு கணனி ஊடுருவல் நிகழ்வு இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதுவரை நடைபெற்ற வைரஸ் தாக்குதல்களில் இதுவே பாரிய தாக்குதலாகும் என்று கணனி வல்லுனர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
எமது நாட்டுக்கு எதிராகத் தோன்றியுள்ள இராஜதந்திர நெருக்கடிக்கு வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸே பொறுப்பானவர் என்று குற்றஞ்சாட்டியுள்ள ஐக்கிய தேசியக் கட்சி, பீரிஸ் தனது பதவியை இராஜினாமா செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளது.
இலங்கைக்கு மிகவும் அயல்நாடான இந்தியாவுடன் நெருக்கமான உறவைப் பேண வெளிவிவகார அமைச்சர் தவறிவிட்டார் என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்ணான்டோ குறிப்பிட்டார்.
இலங்கைக்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையில் தீர்மானம் கொண்டுவரப்பட்ட போது இலங்கைக்காக பேச வேண்டிய தனது கடமையிலிருந்து ஜி.எல்.பீரிஸ் தவறிவிட்டார் எனவும் ஐ.தே.க எம்.பி சுட்டிக்காட்டினார்.
தென்னிந்தியாவுடனான பிரச்சினை தொடர்பாக பேசுவதற்கு ஒரு அமைச்சரால் கூட இந்தியாவுக்கு போக முடியாத பரிதாபகரமான நிலையில் எமது நாடு இருப்பதாகவும் ஹரின் பெர்ணான்டோ சுட்டிக்காட்டினார்.
தமது சுய அரசியல் இலாபத்துக்காகவே தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதாவும் தி.மு.க தலைவர் கருணாநிதியும் இலங்கைக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்துள்ளனரெனவும் அவர் குறிப்பிட்டார்.
2009 இல் யுத்தம் முடிந்த பின் இந்தியாவுக்கு அளித்த வாக்குறுதிக்கு அமைய அரசாங்கம் தேசிய பிரச்சினைக்கு அரசியல் தீர்வு கண்டிருந்தால் தற்போதைய நெருக்கடி ஏற்பட்டிருக்காது எனவும் ஹரின் குறிப்பிட்டார்.
ஐ.தே.க இந்த நெருக்கடி நிலையில் ஏன் அரசாங்கத்துக்கு உதவி செய்யவில்லை? எனக் கேட்டதற்கு பதிலளித்த ஹரின் எம்.பி, தனது கட்சி உதவி செய்ய முன்வந்த போது அரசாங்கம் அதை ஏற்கவில்லை என்று குறிப்பிட்டார்.
இலங்கைக்கு மிகவும் அயல்நாடான இந்தியாவுடன் நெருக்கமான உறவைப் பேண வெளிவிவகார அமைச்சர் தவறிவிட்டார் என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்ணான்டோ குறிப்பிட்டார்.
இலங்கைக்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையில் தீர்மானம் கொண்டுவரப்பட்ட போது இலங்கைக்காக பேச வேண்டிய தனது கடமையிலிருந்து ஜி.எல்.பீரிஸ் தவறிவிட்டார் எனவும் ஐ.தே.க எம்.பி சுட்டிக்காட்டினார்.
தென்னிந்தியாவுடனான பிரச்சினை தொடர்பாக பேசுவதற்கு ஒரு அமைச்சரால் கூட இந்தியாவுக்கு போக முடியாத பரிதாபகரமான நிலையில் எமது நாடு இருப்பதாகவும் ஹரின் பெர்ணான்டோ சுட்டிக்காட்டினார்.
தமது சுய அரசியல் இலாபத்துக்காகவே தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதாவும் தி.மு.க தலைவர் கருணாநிதியும் இலங்கைக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்துள்ளனரெனவும் அவர் குறிப்பிட்டார்.
2009 இல் யுத்தம் முடிந்த பின் இந்தியாவுக்கு அளித்த வாக்குறுதிக்கு அமைய அரசாங்கம் தேசிய பிரச்சினைக்கு அரசியல் தீர்வு கண்டிருந்தால் தற்போதைய நெருக்கடி ஏற்பட்டிருக்காது எனவும் ஹரின் குறிப்பிட்டார்.
ஐ.தே.க இந்த நெருக்கடி நிலையில் ஏன் அரசாங்கத்துக்கு உதவி செய்யவில்லை? எனக் கேட்டதற்கு பதிலளித்த ஹரின் எம்.பி, தனது கட்சி உதவி செய்ய முன்வந்த போது அரசாங்கம் அதை ஏற்கவில்லை என்று குறிப்பிட்டார்.
பதினொரு மாதப் பெண் குழந்தையை வன்மையாக பாலியல் வல்லுறவுக்குட்படுத்தி குற்றவாளி என நிரூபிக்கப்பட்டுள்ளவருக்கு களுத்துறை உயர்நீதிமன்ற நீதிபதி அமல் திலகரத்ன, 20 வருட கடூழிய சிறைத் தண்டனை வழங்கினார்.
அத்தோடு, 20,000 ரூபா அபராதமும்,பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்ட குழந்தைக்கு வழங்குவதற்காக ரூபா 7 இலட்சம் அபராதத் தொகையும் வழங்குமாறு கட்டளை பிறப்பித்துள்ளார். பேருவளையைச் சேர்ந்த அஹமட் மீரா அப்துல் ஹஸன் என்பவரே மேற்படி குற்றவாளியாகியுள்ள நபராவார்.
குற்றவாளி 2004 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 24 ஆம் திகதி குழந்தையின் யோனித் துவாரத்தில் விரலைவிட்டு மிக்க் கொடூரமான முறையில் பாலியல் வன்புறவு செய்துள்ளதாக நீதிபதியால் வழக்கு விசாரணைக்குட்படுத்தப்பட்டது. ஆரம்பத்தில் நீதிமன்றம் குறிப்பிட்ட குற்றவாளி குற்றவாளி அல்ல எனத் தீர்ப்பு வழங்கியிருந்தது. என்றாலும், களுத்துறை நாகொட வைத்தியசாலையின் முன்னாள் வைத்திய அதிகாரி சுனில் குமார குழந்தை கடுமையான முறையில் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டுள்ளதாகவும், அதிக இரத்தம் வெளியேறியுள்ளதாகவும் சாட்சியளித்தார்.
குறித்த அபராதத் தொகையை வழங்காதவிடத்து, அதிஉயர் தண்டனையுடன் மூன்று வருட அபராதத்தை விதிக்குமாறும் நீதிபதி கட்டளைபிறப்பித்துள்ளார். அரச வழக்கறிஞர் நதீ அபர்ணா வாதியின் தரப்பில் வாதாடினார்.
(கேஎப்)
அத்தோடு, 20,000 ரூபா அபராதமும்,பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்ட குழந்தைக்கு வழங்குவதற்காக ரூபா 7 இலட்சம் அபராதத் தொகையும் வழங்குமாறு கட்டளை பிறப்பித்துள்ளார். பேருவளையைச் சேர்ந்த அஹமட் மீரா அப்துல் ஹஸன் என்பவரே மேற்படி குற்றவாளியாகியுள்ள நபராவார்.
குற்றவாளி 2004 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 24 ஆம் திகதி குழந்தையின் யோனித் துவாரத்தில் விரலைவிட்டு மிக்க் கொடூரமான முறையில் பாலியல் வன்புறவு செய்துள்ளதாக நீதிபதியால் வழக்கு விசாரணைக்குட்படுத்தப்பட்டது. ஆரம்பத்தில் நீதிமன்றம் குறிப்பிட்ட குற்றவாளி குற்றவாளி அல்ல எனத் தீர்ப்பு வழங்கியிருந்தது. என்றாலும், களுத்துறை நாகொட வைத்தியசாலையின் முன்னாள் வைத்திய அதிகாரி சுனில் குமார குழந்தை கடுமையான முறையில் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டுள்ளதாகவும், அதிக இரத்தம் வெளியேறியுள்ளதாகவும் சாட்சியளித்தார்.
குறித்த அபராதத் தொகையை வழங்காதவிடத்து, அதிஉயர் தண்டனையுடன் மூன்று வருட அபராதத்தை விதிக்குமாறும் நீதிபதி கட்டளைபிறப்பித்துள்ளார். அரச வழக்கறிஞர் நதீ அபர்ணா வாதியின் தரப்பில் வாதாடினார்.
(கேஎப்)
முஸ்லிம்களின் புனித நூலான திருக்குர்ஆனை இழிவுபடுத்தியும் முஸ்லிம் பெண்களின் ஆடைகளை கேலி செய்தும், நாளுக்குநாள் அதிகரித்துச் செல்லும் முஸ்லிம் மக்களுக்கெதிரான வன்முறைகளை அமைச்சர் றிசாத் பதியுதீன் வன்மையாகக் கண்டித்துள்ளார்.
சிங்கள அடிப்படைவாதிகள் பொதுபலசேனா, சிங்கள ராவய என்று பல பல பெயர்களில் இயங்கிக் கொண்டு ஒரே இலக்கை நோக்கிப் பயணித்துக் கொண்டு தொடர்ச்சியாக முஸ்லிம்களின் உணர்வுகளை குத்திப் பார்க்கின்ற செயல்களைச் செய்து கொண்டிருக்கிறார்கள்.
இந்நாட்டின் பெரும்பான்மையான சிங்கள பௌத்த மக்கள் இச்சிறிய குழுக்களின் துவேசப் பேச்சுக்களை ஆதரிக்கவில்லை. அது மட்டுமல்லாமல் அவர்கள் எப்போதும் பொறுமையைக் கடைப்பிடிக்கின்ற ஒரு சமூகமாக வாழ்ந்து வந்திருக்கின்றார்கள்.
இந்நாட்டு முஸ்லிம்களின் அதி உயர் மார்க்க பீடமான ஜம் மியதுல் உலமாவை, இத்தேச விரோத சக்திகள் ஈவிரக்கமின்றி, மிகக் குரூரமான முறையில் விமர்சனம் செய்தபோது எம் இதயம் ரணகளமாகியும் நாம் பொறுமை காத்தோம். நாம் இத்தேச விரோத சக்திகளுக்கெதிராக அள்ளி எறிகின்ற வார்த்தைகள். பெரும்பான்மை சகோதரர்களின் உள்ளங்களைப் புண் படுத்திவிடக் கூடாதே என்பதில் அக்கறையாக இருந்தோம்.
ஹலால் விவகாரச் சூடு ஓரளவு தணிந்த நிலையில் இன்று புதிய புதிய பிரச்சினைகளைத் தோற்றுவித்துக் கொண்டிருக்கின்றார்கள். முஸ்லிம் பெண்கள் அணிகின்ற ஆடை இன்று இவர்களது கண்களை உறுத்துகின்றது. முஸ்லிம்களின் பொருளாதாரம் இவர்களின் இலக்காக மாறியுள்ளது. முஸ்லிம்களின் புனித நூலான திருக்குர்ஆனையே இவர்கள் இன்று இழிவுபடுத்த தொடங்கியுள்ளார்கள். சிங்கள பௌத்த மக்களை உணர்ச்சி வசப்படுத்தி முஸ்லிம்களுக்கெதிராக கிளர்ந்தெழச் செய்வதற்காக பச்சைப் பொய்களையும் புழுகுகளையும் கட்டவிழ்த்து விடுகின்றார்கள்.
முஸ்லிம் அல்லாதவர்களுக்கு உணவு வழங்குகின்றபொழுது மூன்று முறை துப்பவிட்டு வழங்கும்படி திருக்குர்ஆனில் குறிப்பிடப்படுள்ளதாக ஒரு பச்சைப் பொய்யை நாகூசாமல் கூறியிருக்கின்றார்கள். இதற்கெதிராக சட்ட நடவடிக்கை எடுப்பது தொடர்பாக இப்பொழுது ஆராயப்பட்டுக் கொண்டிருக்கின்றது. திடீரென முஸ்லிம்களின் மீது இவ்வெறுப்பு ஏற்படுவதற்கு முஸ்லிம்கள் செய்த குற்றமென்ன? என்று வினவ விரும்புகின்றோம்.
ஜம்இய்யதுல் உலமா கப்பம் பெறுவதாக குற்றஞ் சாட்டுபவர்களிடம் கேட்க நாம் விரும்புவது
1. ஜம்இய்யதுல் உலமா பலவந்தமாக ஹலால் சான்றிதழை வழங்கியதாகக் கூறினீர்கள். அவ்வாறு பலவந்தப்படுத்துவதற்கு அவர்களிடம் இருந்த பலமோ அல்லது அதிகாரமோ என்னவென்று கூறமுடியாது. எவ்வாறு அவர்கள் பலவந்தப்படுத்தப்பட்டார்கள் என்று கூறமுடியுமா?
2. அவ்வாறு பலவந்தப்படுத்தப்பட்டிருந்தால் அவர்கள் ஏன் பொலிஸில் முறையிடவில்லை என்று கூறமுடியமா?
3. ஆகக் குறைந்தது இவ்வளவு போராட்டத்தை நீங்கள் நடாத்தியும் ஏன் குறித்த வர்த்தகர்கள் (இரண்டொரு பேரைத் தவிர) ஹலால் சான்றிதழை வாபஸ் பெறவில்லை என்று கூற முடியுமா?
4. ஹலால் சான்றிதழைப் பெறுகின்ற வர்த்தகர்களை விட்டுவிட்டு அவர்களுக்கு உதவி செய்யப்போன ஜம்இய்யதுல் உலமா சபையை மிகவும் அசிங்கமான முறையில் தொடர்ச்சியாக விமர்சிப்பது எந்தத் தார்மீகத்தின் அடிப்படையில் என்று கூறமுடியுமா?
5. மறைந்த தலைவர் அஷ்ரப் இரண்டு ஆயுதக் கொள்கலன்கள் கொண்டு வந்திருந்தால் அவர் மறைந்த 12 வருடங்களில் ஏன் வாய்திறக்கவில்லை என்று கூறமுடியுமா?
6. அல்லது இப்பொழுதுதான் யாராவது அவ்வாறான ஒரு கட்டுக்கதையைக் கூறச்
சொல்லியிருக்கின்றார்கள் என்றால் அதையாவது கூறமுடியுமா?
7. குர்ஆனில் மூன்று முறை துப்பச் சொல்லிருப்பதாக நீங்கள் குறிப்பிட்டிருப்பது எத்தனையாம் அத்தியாயம் வசனம் என்று கூறமுடியுமா?
8. அவ்வாறு கூறமுடியாவிட்டால் மக்களை ஏமாற்றுவதற்காக பொய் கூறினோம் என்பதையாவது ஏற்றுக்கொள்வீர்களா?
9. இந்நாட்டில் ஒரு சிங்கள - முஸ்லிம் கலவரத்தை ஏற்படுத்தி இந்நாட்டின் அபிவிருத்தியை மீண்டும் மழுங்கச் செய்வதன் மூலம் நீங்கள் அடைய எத்தனிக்கின்ற லாபமென்ன? என்பதையாவது கூறுவீர்களா என்று அவர் கேள்விக்கணைகளை அடுக்கிக் கொண்டே செல்கிறார்.
சிங்கள அடிப்படைவாதிகள் பொதுபலசேனா, சிங்கள ராவய என்று பல பல பெயர்களில் இயங்கிக் கொண்டு ஒரே இலக்கை நோக்கிப் பயணித்துக் கொண்டு தொடர்ச்சியாக முஸ்லிம்களின் உணர்வுகளை குத்திப் பார்க்கின்ற செயல்களைச் செய்து கொண்டிருக்கிறார்கள்.
இந்நாட்டின் பெரும்பான்மையான சிங்கள பௌத்த மக்கள் இச்சிறிய குழுக்களின் துவேசப் பேச்சுக்களை ஆதரிக்கவில்லை. அது மட்டுமல்லாமல் அவர்கள் எப்போதும் பொறுமையைக் கடைப்பிடிக்கின்ற ஒரு சமூகமாக வாழ்ந்து வந்திருக்கின்றார்கள்.
இந்நாட்டு முஸ்லிம்களின் அதி உயர் மார்க்க பீடமான ஜம் மியதுல் உலமாவை, இத்தேச விரோத சக்திகள் ஈவிரக்கமின்றி, மிகக் குரூரமான முறையில் விமர்சனம் செய்தபோது எம் இதயம் ரணகளமாகியும் நாம் பொறுமை காத்தோம். நாம் இத்தேச விரோத சக்திகளுக்கெதிராக அள்ளி எறிகின்ற வார்த்தைகள். பெரும்பான்மை சகோதரர்களின் உள்ளங்களைப் புண் படுத்திவிடக் கூடாதே என்பதில் அக்கறையாக இருந்தோம்.
ஹலால் விவகாரச் சூடு ஓரளவு தணிந்த நிலையில் இன்று புதிய புதிய பிரச்சினைகளைத் தோற்றுவித்துக் கொண்டிருக்கின்றார்கள். முஸ்லிம் பெண்கள் அணிகின்ற ஆடை இன்று இவர்களது கண்களை உறுத்துகின்றது. முஸ்லிம்களின் பொருளாதாரம் இவர்களின் இலக்காக மாறியுள்ளது. முஸ்லிம்களின் புனித நூலான திருக்குர்ஆனையே இவர்கள் இன்று இழிவுபடுத்த தொடங்கியுள்ளார்கள். சிங்கள பௌத்த மக்களை உணர்ச்சி வசப்படுத்தி முஸ்லிம்களுக்கெதிராக கிளர்ந்தெழச் செய்வதற்காக பச்சைப் பொய்களையும் புழுகுகளையும் கட்டவிழ்த்து விடுகின்றார்கள்.
முஸ்லிம் அல்லாதவர்களுக்கு உணவு வழங்குகின்றபொழுது மூன்று முறை துப்பவிட்டு வழங்கும்படி திருக்குர்ஆனில் குறிப்பிடப்படுள்ளதாக ஒரு பச்சைப் பொய்யை நாகூசாமல் கூறியிருக்கின்றார்கள். இதற்கெதிராக சட்ட நடவடிக்கை எடுப்பது தொடர்பாக இப்பொழுது ஆராயப்பட்டுக் கொண்டிருக்கின்றது. திடீரென முஸ்லிம்களின் மீது இவ்வெறுப்பு ஏற்படுவதற்கு முஸ்லிம்கள் செய்த குற்றமென்ன? என்று வினவ விரும்புகின்றோம்.
ஜம்இய்யதுல் உலமா கப்பம் பெறுவதாக குற்றஞ் சாட்டுபவர்களிடம் கேட்க நாம் விரும்புவது
1. ஜம்இய்யதுல் உலமா பலவந்தமாக ஹலால் சான்றிதழை வழங்கியதாகக் கூறினீர்கள். அவ்வாறு பலவந்தப்படுத்துவதற்கு அவர்களிடம் இருந்த பலமோ அல்லது அதிகாரமோ என்னவென்று கூறமுடியாது. எவ்வாறு அவர்கள் பலவந்தப்படுத்தப்பட்டார்கள் என்று கூறமுடியுமா?
2. அவ்வாறு பலவந்தப்படுத்தப்பட்டிருந்தால் அவர்கள் ஏன் பொலிஸில் முறையிடவில்லை என்று கூறமுடியமா?
3. ஆகக் குறைந்தது இவ்வளவு போராட்டத்தை நீங்கள் நடாத்தியும் ஏன் குறித்த வர்த்தகர்கள் (இரண்டொரு பேரைத் தவிர) ஹலால் சான்றிதழை வாபஸ் பெறவில்லை என்று கூற முடியுமா?
4. ஹலால் சான்றிதழைப் பெறுகின்ற வர்த்தகர்களை விட்டுவிட்டு அவர்களுக்கு உதவி செய்யப்போன ஜம்இய்யதுல் உலமா சபையை மிகவும் அசிங்கமான முறையில் தொடர்ச்சியாக விமர்சிப்பது எந்தத் தார்மீகத்தின் அடிப்படையில் என்று கூறமுடியுமா?
5. மறைந்த தலைவர் அஷ்ரப் இரண்டு ஆயுதக் கொள்கலன்கள் கொண்டு வந்திருந்தால் அவர் மறைந்த 12 வருடங்களில் ஏன் வாய்திறக்கவில்லை என்று கூறமுடியுமா?
6. அல்லது இப்பொழுதுதான் யாராவது அவ்வாறான ஒரு கட்டுக்கதையைக் கூறச்
சொல்லியிருக்கின்றார்கள் என்றால் அதையாவது கூறமுடியுமா?
7. குர்ஆனில் மூன்று முறை துப்பச் சொல்லிருப்பதாக நீங்கள் குறிப்பிட்டிருப்பது எத்தனையாம் அத்தியாயம் வசனம் என்று கூறமுடியுமா?
8. அவ்வாறு கூறமுடியாவிட்டால் மக்களை ஏமாற்றுவதற்காக பொய் கூறினோம் என்பதையாவது ஏற்றுக்கொள்வீர்களா?
9. இந்நாட்டில் ஒரு சிங்கள - முஸ்லிம் கலவரத்தை ஏற்படுத்தி இந்நாட்டின் அபிவிருத்தியை மீண்டும் மழுங்கச் செய்வதன் மூலம் நீங்கள் அடைய எத்தனிக்கின்ற லாபமென்ன? என்பதையாவது கூறுவீர்களா என்று அவர் கேள்விக்கணைகளை அடுக்கிக் கொண்டே செல்கிறார்.
இங்கிலாந்தைச் சேர்ந்த ஒரு பெண் செல்டெனம் மருத்துவமனையில் சுமார் 7 கிலோ கிராம் எடையில் ஆண் குழந்தையை பெற்றெடுத்துள்ளதுடன் அந்தக்குழந்தைக்கு ஜார்ஜ் கிங் எனப் பெயரிடப்பட்டுள்ளது.
இந்தக்குழந்தை பிறக்கும் போது குழந்தையின் எடை 15 பவுண்டுக்கும் அதிகமாகும். (அதாவது 7 கிலோ எடை). இதனால் பிரசவத்தின் போது குழந்தையின் தாய் பெரும் சிரமத்துக்கு ஆளானார். எனவே அவருக்கு சுமார் 20 டாக்டர்கள் சேர்ந்து பிரசவம் பார்த்தனர்.
குழந்தை பிறந்த போது அவன் உயிர் பிழைப்பதற்கான சாத்தியம் வெறும் 10 சதவீதம் மட்டுமே காணப்பட்டபோதும் தற்போது ஜார்ஜ் ஆரோக்கியமாக உள்ளதாக அவனது தாயார் தெரிவித்துள்ளார்.
இந்தக்குழந்தை பிறக்கும் போது குழந்தையின் எடை 15 பவுண்டுக்கும் அதிகமாகும். (அதாவது 7 கிலோ எடை). இதனால் பிரசவத்தின் போது குழந்தையின் தாய் பெரும் சிரமத்துக்கு ஆளானார். எனவே அவருக்கு சுமார் 20 டாக்டர்கள் சேர்ந்து பிரசவம் பார்த்தனர்.
குழந்தை பிறந்த போது அவன் உயிர் பிழைப்பதற்கான சாத்தியம் வெறும் 10 சதவீதம் மட்டுமே காணப்பட்டபோதும் தற்போது ஜார்ஜ் ஆரோக்கியமாக உள்ளதாக அவனது தாயார் தெரிவித்துள்ளார்.
பிரபாகரனுக்கு உதவிய நாடுகளையும், அரசியல்வாதிகளையும், முழுமையாகத் தான் காட்டிக் கொடுக்கப்போவதாக பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா) குறிப்பிடுகிறார்.
போர்க் குற்றம் தொடர்பில் ‘கருணா’பற்றியும் விமர்சனங்கள் ஆரம்பிக்கப்பட வேண்டும் என ‘ஹியுமன் ரைட்ஸ் வோச்’ அமைப்பின் ஆசியப் பிராந்திய பணிப்பாளர் பிரெட்லி எடம்ஸ் குறிப்பிட்டமைக்கு, கருணா அவ்வாறு விடை பகர்ந்துள்ளார்.
‘விடுதலைப் புலிகளுக்கு உதவியோர் பற்றி அதிகம் தெரிந்து வைத்திருப்பவன் நானே. நோர்வேயின் சுவிட்சர்லாந்து, தாய்லாந்து உள்ளிட்ட பல நாடுகளுக்கு நான் சுற்றுலாச் சென்றுள்ளேன். பாங்கொக் ஓட்டலுக்குச் சென்று, 409 வகையான ஆயுதங்கள் பற்றிய விபரங்கள் அடங்கிய பிரசுரத்தை ஐசர் என்ற புலி ஆயுதப்பொறுப்புதாரிக்கு கொடுத்துவருமாறு என்னை அனுப்பியவர் எல்ரீரீஈ தலைவர் பிரபாகரன். நான் நோர்வேயிலுள்ள ஆயுத உற்பத்தி நிலையங்களுக்கஞம் சென்றிருக்கிறேன் என்றும் அவர் தொடர்ந்தும் குறிப்பிட்டுள்ளார். கண்ணாடி வீடுகளில் இருந்துகொண்டு கல்லெறிய வேண்டாம் என நான் அரச சார்பற்ற அமைப்புக்களுக்கு சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். அரச சார்பற்ற நிறுவனங்கள் விடுதலைப் புலிகளுக்கு உதவியதாகவும் அவர் குறிப்பிட்டார்.
பிரபாகரனுக்கு குண்டு துளைக்காத வாகனத்தை வழங்கியகூட அரச சார்பற்ற நிறுவனமொன்றே என்றும் பிரதியமைச்சர் குறிப்பிட்டுள்ளமை ஈண்டு குறிப்பிடத்தக்கது.
(கேஎப்)
போர்க் குற்றம் தொடர்பில் ‘கருணா’பற்றியும் விமர்சனங்கள் ஆரம்பிக்கப்பட வேண்டும் என ‘ஹியுமன் ரைட்ஸ் வோச்’ அமைப்பின் ஆசியப் பிராந்திய பணிப்பாளர் பிரெட்லி எடம்ஸ் குறிப்பிட்டமைக்கு, கருணா அவ்வாறு விடை பகர்ந்துள்ளார்.
‘விடுதலைப் புலிகளுக்கு உதவியோர் பற்றி அதிகம் தெரிந்து வைத்திருப்பவன் நானே. நோர்வேயின் சுவிட்சர்லாந்து, தாய்லாந்து உள்ளிட்ட பல நாடுகளுக்கு நான் சுற்றுலாச் சென்றுள்ளேன். பாங்கொக் ஓட்டலுக்குச் சென்று, 409 வகையான ஆயுதங்கள் பற்றிய விபரங்கள் அடங்கிய பிரசுரத்தை ஐசர் என்ற புலி ஆயுதப்பொறுப்புதாரிக்கு கொடுத்துவருமாறு என்னை அனுப்பியவர் எல்ரீரீஈ தலைவர் பிரபாகரன். நான் நோர்வேயிலுள்ள ஆயுத உற்பத்தி நிலையங்களுக்கஞம் சென்றிருக்கிறேன் என்றும் அவர் தொடர்ந்தும் குறிப்பிட்டுள்ளார். கண்ணாடி வீடுகளில் இருந்துகொண்டு கல்லெறிய வேண்டாம் என நான் அரச சார்பற்ற அமைப்புக்களுக்கு சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். அரச சார்பற்ற நிறுவனங்கள் விடுதலைப் புலிகளுக்கு உதவியதாகவும் அவர் குறிப்பிட்டார்.
பிரபாகரனுக்கு குண்டு துளைக்காத வாகனத்தை வழங்கியகூட அரச சார்பற்ற நிறுவனமொன்றே என்றும் பிரதியமைச்சர் குறிப்பிட்டுள்ளமை ஈண்டு குறிப்பிடத்தக்கது.
(கேஎப்)
நாட்டில் முஸ்லிம்களுக்கு எதிரான செயற்பாடுகள் அதிகரித்து வருவது குறித்து அமைச்சர்களான அதாவுல்லா மற்றும் ரிசாத் பதியூதின் ஆகியோருடனும் பேச்சுவார்த்தை நடாத்திய ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நீதி அமைச்சருமான ரவுப் ஹக்கீம் ஜனாதிபதியிடம் உடனடியாக அமைச்சரவையை கூட்டி தற்போது நடைபெறும் சம்பவங்களுக்கு தீர்வை பெற்றுத்தருமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
பெப்பிலியான சம்பவத்தை அடுத்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு தொலைபேசி ஊடாக அழைப்பை ஏற்படுத்திய ஹக்கீம் அமைச்சரவையை உடனடியாகக் கூட்டி முஸ்லிம்களுக்கு எதிராக நாட்டில் நடைபெறும் செயற்பாடுகளை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பெப்பிலியான சம்பவத்தை அடுத்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு தொலைபேசி ஊடாக அழைப்பை ஏற்படுத்திய ஹக்கீம் அமைச்சரவையை உடனடியாகக் கூட்டி முஸ்லிம்களுக்கு எதிராக நாட்டில் நடைபெறும் செயற்பாடுகளை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு ஏற்பாடு செய்யபட்ட புனித வியாழன் பிரார்த்தனை நிகழ்வில் கலந்துகொண்ட பாப்பரசர் முதலாம் பிரான்ஸிஸ் ரோமில் உள்ள கெஸல் டீல் மரம்மோ சிறைச்சாலையில் உள்ள இரண்டு பெண்கள் உட்பட 12 சிறை கைதிகளின் பாதங்களை கழுவியுள்ளதுடன் முத்தமிட்டு ஆசிர்வாதம் செய்துள்ளார்.
இச்சிறைகைதிகளில் இஸ்லாம் மதத்தை சேர்ந்தவர்களும் இரண்டு பெண்கள் உள்ளடங்கியிருந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளதுடன் இங்கு கருத்து தெரிவித்த பாப்பரசர் முதலாம் பிரான்சிஸ் 'ஒவ்வொருவரும் மற்றவர்களுக்கு சேவை செய்யக்கூடியவர்களாக இருக்க வேண்டும்' தெரிவித்துள்ளார்.
இதேவேளை, 'நான் இதனை இதயபூர்வமாக செய்கிறேன் இதுவும் எனது கடமை. நான் உங்களுக்கு சேவை செய்யக்கூடியவராக இருக்க வேண்டும் என்பதைத்தான் விரும்புகிறேன். இதைத்தாக் எனக்கு கடவுள் கற்றுகொடுத்துள்ளார்' என அங்கு கூடியிருந்தவர்கள் மத்தியில் தெரிவித்தார் இதனை பார்த்துக்கொண்டிருந்த பலர் கண்ணீர்விட்டதாக வத்திகான் பேச்சாளர் பெட்ரிகோ லொமபாரட்டி தெரிவித்துள்ளார்.
இச்சிறைகைதிகளில் இஸ்லாம் மதத்தை சேர்ந்தவர்களும் இரண்டு பெண்கள் உள்ளடங்கியிருந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளதுடன் இங்கு கருத்து தெரிவித்த பாப்பரசர் முதலாம் பிரான்சிஸ் 'ஒவ்வொருவரும் மற்றவர்களுக்கு சேவை செய்யக்கூடியவர்களாக இருக்க வேண்டும்' தெரிவித்துள்ளார்.
இதேவேளை, 'நான் இதனை இதயபூர்வமாக செய்கிறேன் இதுவும் எனது கடமை. நான் உங்களுக்கு சேவை செய்யக்கூடியவராக இருக்க வேண்டும் என்பதைத்தான் விரும்புகிறேன். இதைத்தாக் எனக்கு கடவுள் கற்றுகொடுத்துள்ளார்' என அங்கு கூடியிருந்தவர்கள் மத்தியில் தெரிவித்தார் இதனை பார்த்துக்கொண்டிருந்த பலர் கண்ணீர்விட்டதாக வத்திகான் பேச்சாளர் பெட்ரிகோ லொமபாரட்டி தெரிவித்துள்ளார்.
களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கோட்டைக்கல்லாறு புத்தடி நாகதம்பிரான் ஆலயத்திற்கு முன்பாக இன்று காலை 07.30 மணியளவில் நடைபெற்ற வாகன விபத்தில் முச்சக்கர வண்டியை சுத்தம் செய்து கொண்டிருந்த நபரும் துவிச்சக்கர வண்டியில் பயணித்த இருவரும் உயிரிழந்துள்ளனர்.
இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே வே.பரமானந்தம் (50 வயது), ஈ.திலீபன் (32 வயது) ரவீந்திரன் (31 வயது) ஆகியோரே பலியாகியுள்ளனர்.
திருமலையில் இருந்து அம்பாறை தேசத்திற்கு மகுடம் கண்காட்சிக்காக சென்று கொண்டிருந்த வான் வீதி ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கர வண்டியில் மோதி பின் மின் கம்பம் ஒன்றில் மோதியதன் பின்னர் துவிச்சக்கர வண்டியுடனும் மோதியுள்ளது.
விபத்துடன் தொடர்புடைய வேன் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிக்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே வே.பரமானந்தம் (50 வயது), ஈ.திலீபன் (32 வயது) ரவீந்திரன் (31 வயது) ஆகியோரே பலியாகியுள்ளனர்.
திருமலையில் இருந்து அம்பாறை தேசத்திற்கு மகுடம் கண்காட்சிக்காக சென்று கொண்டிருந்த வான் வீதி ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கர வண்டியில் மோதி பின் மின் கம்பம் ஒன்றில் மோதியதன் பின்னர் துவிச்சக்கர வண்டியுடனும் மோதியுள்ளது.
விபத்துடன் தொடர்புடைய வேன் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிக்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மீன் பாடும் தேன் நாடாம் மட்டக்களப்பின் இரு ஊர்கள் காத்தான்குடியும் ஆரையம்பதியும். காத்தான்குடியில் ஆதம் லெப்பையும், ஆரையம்பதியில் அரியரத்தினமும் வாழ்ந்து வந்தனர். முன்னாளில் மட்டக்களப்பில் ஒரு பாடசாலையில் இருவரும் சேர்ந்து கல்வி கற்கும் காலத்தில் 'நீ இஸ்லாம் -நான் இந்து' என்று, பழுத்த சுயநல அரசியல் வேடர்கள் விரித்த கபட வலைக்குள் இருவரும் வீழ்ந்து, தத்தம் சுயத்தை இழந்து விட்டிருந்தனர்.
தமிழே பேசினாலும் தான் ஒரு முஸ்லிம் என்ற எண்ணம்தான் ஆதம் லெப்பையிடம் மேலோங்கியிருந்தது. தான் ஒரு இந்து என்று சொல்லிக் கொள்வதை விட, தன்னை ஒரு தமிழன் என்று சொல்வதே அரியரத்தினத்திற்க்குப் பிடித்திருந்தது. ஆக, அவ்விருவரும் ஒரே மொழியைப் பேசினாலும் 'தமிழ்-முஸ்லிம்' என்று தமக்கிடையே வேலிகளைப் போட்டுக் கொண்டனர். இவ்வாறு வேலிகளைப் போட்டுக் கொள்வதற்குத் தேவையான அனைத்தையும் இரு பக்கமும் உள்ள பச்சோந்தி அரசியல்வாதிகள் வாரி வழங்கியிருந்தனர்.
பாடசாலைக் காலம் முடிந்து இருவரும் பிரிந்து விட்டனர். தம்மினப் பெண்களைத் திருமணம் செய்து கொண்டு, குழந்தை, குட்டிகளுடன் வாழத் தொடங்கி விட்டனர். இந்தக் காலத்தில் இருவரும் சந்தித்துக் கொள்ளவில்லை.
ஆடி மாதத்தின் ஒரு நாள்...
சவூதி அரேபியாவின் ரியாத் நகரிலிருந்து 150 மைல் தொலைவில் உள்ள அல்ஜலா என்ற பாலைவனப் பகுதியில் ஓலம் ஒன்று எழுகிறது. ''அல்லாஹ்வே...என்னால் தாங்க முடியவில்லையே...''
வீசும் நெருப்புக் காற்றில் கலந்து வந்த அந்தத் தமிழ் ஓலம், அருகே உள்ள கோதுமை வயலில் வேலை செய்து கொண்டிருந்த சங்கரனின் காதுகளில் விழுகிறது. அவன் நிமிர்ந்து பார்த்தான்.
ஓர் அரபிக்காரனும், இன்னொரு இளைஞனும் பாலைவனத்தின் மணல் பாதையில் நின்று கொண்டிருந்தனர். அந்த இளைஞன் இலங்கையன் அல்லது இந்தியன் போலத் தெரிந்தான். காரை ஓரமாக நிறுத்திவிட்டு இருவரும் தர்க்கித்துக் கொண்டிருந்தனர்.
சங்கரன் அவர்களின் அருகில் சென்றான்.அவர்களைப் பார்த்தான்.
அந்த வாலிபன் அரபியிடம் தமிழில் பேசினான். அரபியோ அவனிடம் அரபியில் கத்தினான்.
வாலிபனின் முகம் வெளுத்திருந்தது. அவனது ஆடைகளையும் தாண்டி உடலின் வியர்வை ஒழுகிக் கொண்டிருந்ததது.
''அல்லாஹ்வே...என்னால் தாங்க முடியவில்லையே...நான் செத்து விடுவேன் போல இருக்கிறதே...'' என்று அந்த வாலிபன் துடிக்க, அரபி ''லெஷ் பீ ..?'' (என்ன..என்னாச்சு..?) என்று அவனை அதட்டிக் கொண்டிருந்தான்.
சங்கரன் அவர்களை அண்மித்தான். ''என்ன விஷயம்...?'' என்று அந்த வாலிபனிடம் தமிழில் கேட்டான்.
''ஓ..நீங்க தமிழா...? இலங்கையா..? முஸ்லிமா..?'' என்று அந்த வாலிபன் தனது முகமெல்லாம் பூரிப்புடன் கேட்டான்.
''அதெல்லாம் இருக்கட்டும்..உங்க பிரச்சினை என்ன..ஏன் இப்பிடி ஓலமிட்டு அழுறீங்க..?'' என்று சங்கரன் திரும்பக் கேட்டான்.
''ஓ...எனக்கு வயித்து வலி தாங்க முடியல...உசிரே போய்டும் போல இருக்கு...ரெண்டு மணித்தியாலத்துக்கு முன்னாடிதான் இலங்கைல இருந்து வந்தேன். ஏர்போர்ட்ல இருந்து இவன் என்னை ஏத்திக்கிட்டு வர்றான்..ஒரு அரை மணி நேரத்துக்கு முன்னால வயித்து வலி ஆரம்பிச்சுது. இப்போ தாங்க முடியாத அளவுக்கு வலி..எனக்கு அரபி தெரியாது..தெரிஞ்ச ஆங்கிலத்தில சொல்லிப் பார்த்தேன்..அதுவும் இவனுக்கு விளங்கல...வயித்தைக் காட்டி சைகையால சொல்லிப் பார்த்தேன்..அதப் பார்த்துட்டு எனக்குப் பசின்னு நெனைச்சு இவன் வாழைப் பழத்தை எடுத்துத் தாரான்...கடைசில..நான் அழத் தொடங்க, காரை நிப்பாட்டிட்டான்..'' என்ற வாலிபன் '' ஒருக்கா toilet போயிட்டு வந்தா சரியாய்ப் போகும்'' என்றான்.
சவூதிக்கு சங்கரன் வந்து இரண்டு வருடங்கள். ஆதலால் அவனுக்கு அரபி தெரிந்திருந்தது. அவன் அரபு மொழியில் விடயத்தை அரபியிடம் விளக்கி விட்டு, கோதுமை வயலோடு ஒட்டியிருந்த தனது தங்குமிடத்திற்கு அந்த வாலிபனை அழைத்துச் சென்றான்.
அந்த வாலிபன் toilet போய் வந்தான். அவனது முகத்தில் இப்போது ஒரு நிம்மதி தெரிந்தது.
.''ப்ளைட்ல தந்த சாப்பாடு ஒத்துக்கல. அதான் இப்படி ஒரு வலி...இப்போ வலி குறைஞ்சிடுச்சு.'' என்றவன் சொன்னான்.
''எம் பேரு அமீன்..இலங்கைல காத்தான்குடி என்ர ஊரு..வாப்பா பேரு ஆதம் லெப்பை. அது சரி..நீங்க எந்த ஊரு..?''
சங்கரன் சொன்னான்.. ''என்ர பேரு சங்கரன்..உங்க ஊருக்குப் பக்கத்து ஊருதான் நானும்... என்ர அப்பா பேரு அரியரத்தினம்...''
''ரொம்ப சந்தோஷமா இருக்குங்க..இந்த அரபி ஒரு முஸ்லிம். நானும் ஒரு முஸ்லிம்..ஆனா..இப்போ, என்னோட வலியைப் போக்கினது இந்த மதமில்லீங்க... பாஷை! நீங்க மட்டும் இல்லேன்னா, நான் வயித்து வலியால செத்தே போயிருப்பேன்...'' என்ர அமீன் சங்கரனைக் கட்டித் தழுவினான்.
ஒரு வேளை, இந்த இருவருமே இன்றைய நிகழ்வைத் தமது தகப்பனார்களுக்குத் தெரிவிப்பார்கள். அப்பொழுதாவது, ஆதம் லெப்பையும் அரியரத்தினமும் பகைமைக் களம் விடுத்துப் பாசக் குளத்தில் நீந்துவார்களா...?
தமிழே பேசினாலும் தான் ஒரு முஸ்லிம் என்ற எண்ணம்தான் ஆதம் லெப்பையிடம் மேலோங்கியிருந்தது. தான் ஒரு இந்து என்று சொல்லிக் கொள்வதை விட, தன்னை ஒரு தமிழன் என்று சொல்வதே அரியரத்தினத்திற்க்குப் பிடித்திருந்தது. ஆக, அவ்விருவரும் ஒரே மொழியைப் பேசினாலும் 'தமிழ்-முஸ்லிம்' என்று தமக்கிடையே வேலிகளைப் போட்டுக் கொண்டனர். இவ்வாறு வேலிகளைப் போட்டுக் கொள்வதற்குத் தேவையான அனைத்தையும் இரு பக்கமும் உள்ள பச்சோந்தி அரசியல்வாதிகள் வாரி வழங்கியிருந்தனர்.
பாடசாலைக் காலம் முடிந்து இருவரும் பிரிந்து விட்டனர். தம்மினப் பெண்களைத் திருமணம் செய்து கொண்டு, குழந்தை, குட்டிகளுடன் வாழத் தொடங்கி விட்டனர். இந்தக் காலத்தில் இருவரும் சந்தித்துக் கொள்ளவில்லை.
ஆடி மாதத்தின் ஒரு நாள்...
சவூதி அரேபியாவின் ரியாத் நகரிலிருந்து 150 மைல் தொலைவில் உள்ள அல்ஜலா என்ற பாலைவனப் பகுதியில் ஓலம் ஒன்று எழுகிறது. ''அல்லாஹ்வே...என்னால் தாங்க முடியவில்லையே...''
வீசும் நெருப்புக் காற்றில் கலந்து வந்த அந்தத் தமிழ் ஓலம், அருகே உள்ள கோதுமை வயலில் வேலை செய்து கொண்டிருந்த சங்கரனின் காதுகளில் விழுகிறது. அவன் நிமிர்ந்து பார்த்தான்.
ஓர் அரபிக்காரனும், இன்னொரு இளைஞனும் பாலைவனத்தின் மணல் பாதையில் நின்று கொண்டிருந்தனர். அந்த இளைஞன் இலங்கையன் அல்லது இந்தியன் போலத் தெரிந்தான். காரை ஓரமாக நிறுத்திவிட்டு இருவரும் தர்க்கித்துக் கொண்டிருந்தனர்.
சங்கரன் அவர்களின் அருகில் சென்றான்.அவர்களைப் பார்த்தான்.
அந்த வாலிபன் அரபியிடம் தமிழில் பேசினான். அரபியோ அவனிடம் அரபியில் கத்தினான்.
வாலிபனின் முகம் வெளுத்திருந்தது. அவனது ஆடைகளையும் தாண்டி உடலின் வியர்வை ஒழுகிக் கொண்டிருந்ததது.
''அல்லாஹ்வே...என்னால் தாங்க முடியவில்லையே...நான் செத்து விடுவேன் போல இருக்கிறதே...'' என்று அந்த வாலிபன் துடிக்க, அரபி ''லெஷ் பீ ..?'' (என்ன..என்னாச்சு..?) என்று அவனை அதட்டிக் கொண்டிருந்தான்.
சங்கரன் அவர்களை அண்மித்தான். ''என்ன விஷயம்...?'' என்று அந்த வாலிபனிடம் தமிழில் கேட்டான்.
''ஓ..நீங்க தமிழா...? இலங்கையா..? முஸ்லிமா..?'' என்று அந்த வாலிபன் தனது முகமெல்லாம் பூரிப்புடன் கேட்டான்.
''அதெல்லாம் இருக்கட்டும்..உங்க பிரச்சினை என்ன..ஏன் இப்பிடி ஓலமிட்டு அழுறீங்க..?'' என்று சங்கரன் திரும்பக் கேட்டான்.
''ஓ...எனக்கு வயித்து வலி தாங்க முடியல...உசிரே போய்டும் போல இருக்கு...ரெண்டு மணித்தியாலத்துக்கு முன்னாடிதான் இலங்கைல இருந்து வந்தேன். ஏர்போர்ட்ல இருந்து இவன் என்னை ஏத்திக்கிட்டு வர்றான்..ஒரு அரை மணி நேரத்துக்கு முன்னால வயித்து வலி ஆரம்பிச்சுது. இப்போ தாங்க முடியாத அளவுக்கு வலி..எனக்கு அரபி தெரியாது..தெரிஞ்ச ஆங்கிலத்தில சொல்லிப் பார்த்தேன்..அதுவும் இவனுக்கு விளங்கல...வயித்தைக் காட்டி சைகையால சொல்லிப் பார்த்தேன்..அதப் பார்த்துட்டு எனக்குப் பசின்னு நெனைச்சு இவன் வாழைப் பழத்தை எடுத்துத் தாரான்...கடைசில..நான் அழத் தொடங்க, காரை நிப்பாட்டிட்டான்..'' என்ற வாலிபன் '' ஒருக்கா toilet போயிட்டு வந்தா சரியாய்ப் போகும்'' என்றான்.
சவூதிக்கு சங்கரன் வந்து இரண்டு வருடங்கள். ஆதலால் அவனுக்கு அரபி தெரிந்திருந்தது. அவன் அரபு மொழியில் விடயத்தை அரபியிடம் விளக்கி விட்டு, கோதுமை வயலோடு ஒட்டியிருந்த தனது தங்குமிடத்திற்கு அந்த வாலிபனை அழைத்துச் சென்றான்.
அந்த வாலிபன் toilet போய் வந்தான். அவனது முகத்தில் இப்போது ஒரு நிம்மதி தெரிந்தது.
.''ப்ளைட்ல தந்த சாப்பாடு ஒத்துக்கல. அதான் இப்படி ஒரு வலி...இப்போ வலி குறைஞ்சிடுச்சு.'' என்றவன் சொன்னான்.
''எம் பேரு அமீன்..இலங்கைல காத்தான்குடி என்ர ஊரு..வாப்பா பேரு ஆதம் லெப்பை. அது சரி..நீங்க எந்த ஊரு..?''
சங்கரன் சொன்னான்.. ''என்ர பேரு சங்கரன்..உங்க ஊருக்குப் பக்கத்து ஊருதான் நானும்... என்ர அப்பா பேரு அரியரத்தினம்...''
''ரொம்ப சந்தோஷமா இருக்குங்க..இந்த அரபி ஒரு முஸ்லிம். நானும் ஒரு முஸ்லிம்..ஆனா..இப்போ, என்னோட வலியைப் போக்கினது இந்த மதமில்லீங்க... பாஷை! நீங்க மட்டும் இல்லேன்னா, நான் வயித்து வலியால செத்தே போயிருப்பேன்...'' என்ர அமீன் சங்கரனைக் கட்டித் தழுவினான்.
ஒரு வேளை, இந்த இருவருமே இன்றைய நிகழ்வைத் தமது தகப்பனார்களுக்குத் தெரிவிப்பார்கள். அப்பொழுதாவது, ஆதம் லெப்பையும் அரியரத்தினமும் பகைமைக் களம் விடுத்துப் பாசக் குளத்தில் நீந்துவார்களா...?
அமெரிக்காவின் உளவுப் பிரிவின் இயக்குனராக ஜூலியா பியர்சன் என்ற பெண்ணை அதிபர் ஒபாமா நியமித்துள்ளார். இதன்மூலம், ஜூலியா ரகசிய சேவை பிரிவின் முதல் பெண் இயக்குனர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
பிப்ரவரி மாதம் ரகசிய சேவை இயக்குனராக பணியாற்றிய மார்க் சுல்லிவன் ஓய்வு பெற்றதையடுத்து, அப்பதவிக்கு ஜூலியா பியர்சன் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார். மார்க்கின் பணிக்காலத்தில் கொலம்பியா ஊழல் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. அமெரிக்க ரகசிய சேவைத்துறை ஆணாதிக்கம் மிகுந்த துறை. அதில் முதல் முறையாக ஒரு பெண் இயக்குநராக வருவதன் மூலம், பெண்கள் மற்றும் சிறுபான்மையைனருக்கு உயர் பதவியில் ஒபாமா முக்கியத்துவம் அளிப்பதில்லை என்ற அவப்பெயரிலிருந்து ஒபாமா விடுபட்டுள்ளார்.
1983 ல் சிறப்பு ரகசிய ஏஜண்ட்டாக தனது பயணத்தைத் தொடங்கிய, புளோரிடாவை சேர்ந்த ஜூலியா, தற்போது ரகசியசேவைப்பிரிவின் ஊழியர்களுக்கு தலைவராக பதவி வகித்து வருகிறார். இது குறித்து ஒபாமா வெளியிட்டுள்ள அறிக்கையில்,
ஜூலியா இப்பதவிக்கு மிகவும் தகுதியான நபர். இவர் நமது நிதிநிலைமையையும் சேர்த்து பாதுகாப்பார் என்று நம்புகிறேன். மேலும், நமது தலைவர்கள், என் குடும்பம் உட்பட அனைத்து குடும்பங்களுக்கும் பாதுகாப்பு அரணாக விளக்குவார் ' என ஜூலியாவிற்கு புகழாரம் சூட்டியுள்ளார். 1988 முதல் ஜனாதிபதியின் பாதுகாப்புப் பிரிவில் நான்கு ஆண்டுகள் பணியாற்றிய அனுபவமும் இவருக்கு உண்டு. 2005 ஆண்டின் பாதுகாப்பு நடவடிக்கைகளில் உதவி துணை இயக்குனராகவும் பணியாற்றி உள்ளார்.
பிப்ரவரி மாதம் ரகசிய சேவை இயக்குனராக பணியாற்றிய மார்க் சுல்லிவன் ஓய்வு பெற்றதையடுத்து, அப்பதவிக்கு ஜூலியா பியர்சன் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார். மார்க்கின் பணிக்காலத்தில் கொலம்பியா ஊழல் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. அமெரிக்க ரகசிய சேவைத்துறை ஆணாதிக்கம் மிகுந்த துறை. அதில் முதல் முறையாக ஒரு பெண் இயக்குநராக வருவதன் மூலம், பெண்கள் மற்றும் சிறுபான்மையைனருக்கு உயர் பதவியில் ஒபாமா முக்கியத்துவம் அளிப்பதில்லை என்ற அவப்பெயரிலிருந்து ஒபாமா விடுபட்டுள்ளார்.
1983 ல் சிறப்பு ரகசிய ஏஜண்ட்டாக தனது பயணத்தைத் தொடங்கிய, புளோரிடாவை சேர்ந்த ஜூலியா, தற்போது ரகசியசேவைப்பிரிவின் ஊழியர்களுக்கு தலைவராக பதவி வகித்து வருகிறார். இது குறித்து ஒபாமா வெளியிட்டுள்ள அறிக்கையில்,
ஜூலியா இப்பதவிக்கு மிகவும் தகுதியான நபர். இவர் நமது நிதிநிலைமையையும் சேர்த்து பாதுகாப்பார் என்று நம்புகிறேன். மேலும், நமது தலைவர்கள், என் குடும்பம் உட்பட அனைத்து குடும்பங்களுக்கும் பாதுகாப்பு அரணாக விளக்குவார் ' என ஜூலியாவிற்கு புகழாரம் சூட்டியுள்ளார். 1988 முதல் ஜனாதிபதியின் பாதுகாப்புப் பிரிவில் நான்கு ஆண்டுகள் பணியாற்றிய அனுபவமும் இவருக்கு உண்டு. 2005 ஆண்டின் பாதுகாப்பு நடவடிக்கைகளில் உதவி துணை இயக்குனராகவும் பணியாற்றி உள்ளார்.
திபெத் நாட்டைச் சேர்ந்த ஆன்மீகத்தலைவர் சங்கைக்குரிய தேரர் ஜிக்மி பேமா வங்சன் தலைமையிலான குழுவொன்று இலங்கையில் உள்ள சமூகங்களிடையே நல்லிணக்கத்தையும் சமாதானத்தையும் உருவாக்கும் நோக்குடன் கடந்த 6ஆம்திகதி கதிர்காமத்திலிருந்து வடக்கு யாழ்ப்பாணம் நோக்கி பாத யாத்திரை ஒன்றை ஆரம்பித்தது.
நேற்று வவுனியாவிற்கு வந்திருந்த இந்த யாத்திரைக் குழுவினர் அங்கிருந்து புறப்பட்டு இன்று காலை (29.03.2013) கிளிநொச்சி நகருக்கு வந்தடைந்தனர். இப்பேரணியில் வருகைதந்த இருபத்து நான்கு நாடுகளைச் சேர்ந்த 270 சமாதான விரும்பிகள், மற்றும் பௌத்த துறவிகள் உள்ளடங்கியயோரை பா.உ மு.சந்திரகுமார் தலைமையிலான குழுவினர் மற்றும் கிளிநொச்சி இளைஞர்சேவைகள் மன்றங்களின் பிரதிநிதிகளும் மாவட்ட இளைஞர்களும் மக்களும் கிளிநொச்சியில் வரவேற்றனர்.
நேற்று வவுனியாவிற்கு வந்திருந்த இந்த யாத்திரைக் குழுவினர் அங்கிருந்து புறப்பட்டு இன்று காலை (29.03.2013) கிளிநொச்சி நகருக்கு வந்தடைந்தனர். இப்பேரணியில் வருகைதந்த இருபத்து நான்கு நாடுகளைச் சேர்ந்த 270 சமாதான விரும்பிகள், மற்றும் பௌத்த துறவிகள் உள்ளடங்கியயோரை பா.உ மு.சந்திரகுமார் தலைமையிலான குழுவினர் மற்றும் கிளிநொச்சி இளைஞர்சேவைகள் மன்றங்களின் பிரதிநிதிகளும் மாவட்ட இளைஞர்களும் மக்களும் கிளிநொச்சியில் வரவேற்றனர்.