வட மாகாண சபை முதலமைச்சராக தெரிவு செய்யப் பட்டுள்ள சி.வி. விக்னேஸ்வரனுக்கும் வடக்கு மாகாண ஆளுநருக்கும் இடையில் நேற்று இடம்பெற்ற சந்திப்பில் வட மாகாண சபையின் கன்னியமர்வு தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது அத்துடன் இக் கன்னியமர்வு எதிர்வரும் 15 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நடைபெறும் என்று தெரிவிக்கப்படுகின்றது.
இந்த சந்திப்பின் போது முதலமைச்சர் மற்றும் ஏனைய அமைச்சர்களின் நியமன ங்கள் பற்றியும் கலந்துரையாடப்பட்டுள்ளதாகவும் கொழும்பில் உள்ள மத்திய அரசுடன் ஆலோசித்து முதலமைச்சரின் நியமன கடிதத்தை தருவதாக ஆளுநர் தெரிவித்துள்ளார் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
ஆயினும் மாகாண சபைக்கான அமைச்சர்கள் நியமனம் பற்றி கூட்டமைப்பு இன்னும் முடிவு எடுக்கவில்லை என்றும், ஓரிரு தினங்களில் அதை தீர்மானிக்க இருப்பதாகவும், மாகாண சபைக்கான கட்டிடத்தில் தற்போது திருத்த வேலைகள் நடைபெற்று கொண்டிருப்பதாகவும், ஒக்டோபர் 12 ஆம் திகதி திருத்தவேலைகள் நிறைவடையும் என்று எதிர்பார்ப்பதாகவும், அதன் பின்னர் ஒக்டோபர் 15 ஆம் திகதி முதலாவது அமர்வு நடைபெறும் எனவும், சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
இந்த சந்திப்பின் போது முதலமைச்சர் மற்றும் ஏனைய அமைச்சர்களின் நியமன ங்கள் பற்றியும் கலந்துரையாடப்பட்டுள்ளதாகவும் கொழும்பில் உள்ள மத்திய அரசுடன் ஆலோசித்து முதலமைச்சரின் நியமன கடிதத்தை தருவதாக ஆளுநர் தெரிவித்துள்ளார் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
ஆயினும் மாகாண சபைக்கான அமைச்சர்கள் நியமனம் பற்றி கூட்டமைப்பு இன்னும் முடிவு எடுக்கவில்லை என்றும், ஓரிரு தினங்களில் அதை தீர்மானிக்க இருப்பதாகவும், மாகாண சபைக்கான கட்டிடத்தில் தற்போது திருத்த வேலைகள் நடைபெற்று கொண்டிருப்பதாகவும், ஒக்டோபர் 12 ஆம் திகதி திருத்தவேலைகள் நிறைவடையும் என்று எதிர்பார்ப்பதாகவும், அதன் பின்னர் ஒக்டோபர் 15 ஆம் திகதி முதலாவது அமர்வு நடைபெறும் எனவும், சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
போதைப், பொருள் பொட்டலங்களுடன் மூன்று வயது சிறுமி பள்ளிக்கு வந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். அமெரிக்காவின் ஹார்லம் பகுதியில் படிக்கும் மூன்று வயது சிறுமி ஒருவர் வழக்கம் போல் பள்ளிக்கு சென்று ள்ளார். அப்போது அவரது பையை திறந்து பார்த்த ஆசிரியர்கள் அதில் 14 பொட்டலங்களில் மாரிஜுவானா எனப்படும் போதைப் பொருள் இருந்த்தைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
உடனடியாக பள்ளி நிர்வாகம் பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கவே அவர்கள் விரைந்து வந்து போதைப் பொருளை பறிமுதல் செய்து சிறுமியை அவர்களது பெற்றோரிடம் ஒப்படைத்துள்ளனர்.
சிறுமியின் தந்தையின் நண்பர் மெனா(வயது 24) என்பவர் தான் போதைப் பொருளை சிறுமியின் பள்ளிப் பையினுள் வைத்தது விசாரணையில் தெரிய வந்து வழக்கு பதிவு செய்த பொலிசார் மெனாவை கைது செய்தனர்.
உடனடியாக பள்ளி நிர்வாகம் பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கவே அவர்கள் விரைந்து வந்து போதைப் பொருளை பறிமுதல் செய்து சிறுமியை அவர்களது பெற்றோரிடம் ஒப்படைத்துள்ளனர்.
சிறுமியின் தந்தையின் நண்பர் மெனா(வயது 24) என்பவர் தான் போதைப் பொருளை சிறுமியின் பள்ளிப் பையினுள் வைத்தது விசாரணையில் தெரிய வந்து வழக்கு பதிவு செய்த பொலிசார் மெனாவை கைது செய்தனர்.
த.தே.கூட்டமைப்பின் வட மாகாணசபை முதலமைச்ச ராகப் பெயரிடப்பட்டுள்ள சி. வி. விக்கினேஸ்வரன் மற்றும் உறுப்பினர்கள் யாழ்ப்பாணத்தில் வைத்து ஜனாதிபதியின் முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்து கொள்ள முடிவெடுத்தமை வடக்கும் ஜனாதிபதியின் கீழ்தான் என்பதற்கான நல்ல சான்று என்று தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் வாசுதேவ நாணயக்காரா கூறியுள்ளார்.
த.தே.கூ வின் இந்த தீர்மானத்தையிட்டு தான் மகிழ்ச்சியடைவதாகவும் குறிப் பிட்டுள்ளார்.
இதேவேளை இராணுவ ஆளுநர் முன்னிலையில் பதவி பிரமாணம் செய்யத் தயாரில்லை என விக்னேஸ்வரன் தெரிவித்துள்ள விடயங்கள் தொடர்பில் விக்னேஸ்வரன், அரசு பெற்றுக் கொடுத்துள்ள ஜனநாயகத்தின் ஊடாக பிரிவினை வாதத்தை சந்தைப்படுத்தி, பிரிவினைவாத அமைப்புக் களின் நோக்கங்களை நிறைவேற்றுகின்றார் எனவும் அரசமைப்பின் 157 ஆம் பிரிவின் உப பிரிவு 07 இன் பிரகாரம் முதலமைச்சர் நியமனம் பெற்ற ஒரு மாதத்துக்குள் பதவிப் பிரமாணம் செய்ய வேண்டும். ஜனாதிபதி பெயரிடும் ஆளுநர், பாராளுமன்ற உறுப்பினர் அல்லது ஜனாதிபதி முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்யலாம் எனவும் அரசியல் வாதிகள் கருத்து தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
த.தே.கூ வின் இந்த தீர்மானத்தையிட்டு தான் மகிழ்ச்சியடைவதாகவும் குறிப் பிட்டுள்ளார்.
இதேவேளை இராணுவ ஆளுநர் முன்னிலையில் பதவி பிரமாணம் செய்யத் தயாரில்லை என விக்னேஸ்வரன் தெரிவித்துள்ள விடயங்கள் தொடர்பில் விக்னேஸ்வரன், அரசு பெற்றுக் கொடுத்துள்ள ஜனநாயகத்தின் ஊடாக பிரிவினை வாதத்தை சந்தைப்படுத்தி, பிரிவினைவாத அமைப்புக் களின் நோக்கங்களை நிறைவேற்றுகின்றார் எனவும் அரசமைப்பின் 157 ஆம் பிரிவின் உப பிரிவு 07 இன் பிரகாரம் முதலமைச்சர் நியமனம் பெற்ற ஒரு மாதத்துக்குள் பதவிப் பிரமாணம் செய்ய வேண்டும். ஜனாதிபதி பெயரிடும் ஆளுநர், பாராளுமன்ற உறுப்பினர் அல்லது ஜனாதிபதி முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்யலாம் எனவும் அரசியல் வாதிகள் கருத்து தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
30 ம் திகதி இடம் பெற்ற முன்னாள் வடமத்திய மாகாண முதல்லமைச்சர் பேர்ட்டி பிரேம்லால் திசநாயக்காவின் இறுதிச் சடங்கில், அமைச்சர் எஸ். எம். சந்திரசேன மற்றும் அவரது சகோதரரான தற்போதைய முதலமைச்சரை கல ந்து கொள்ளவிடாது திசாநாக்காவின் ஆதரவாளர்கள் கல கம் விளைவித்ததால் இறுதிச் சடங்கு ஒரு மணிநேர த்துக்குமேல் தாமதமாகியது.
திசநாயக்காவின் ஆதரவாளர்கள் ஜனாதிபதி மற்றும் அமைச்சர் பசில் ராஜப க்ஷவுக்கு எதிராகவும் அவர்கள் திசாநாயக்காவை தோற்கடிப்பதற்கு ஆதரவளித் ததாக கோசமெழுப்பினர்.
சுதந்திர கட்சியின் சிரேஷ்ட உறுப்பினராக திசாநாயக்க இருந்த போதும் அமைச்சர்கள் பலர் இறுதி மரியாதை செலுத்த வரவில்லை. பிரதமர் தி.மு. வருகை தந்திருந்தார். அனுராதபுரம் ஹரிச்சந்திர திடலில் இறுதிச் சடங்குகள் நடைபெற்றன.
திசநாயக்காவின் ஆதரவாளர்கள் ஜனாதிபதி மற்றும் அமைச்சர் பசில் ராஜப க்ஷவுக்கு எதிராகவும் அவர்கள் திசாநாயக்காவை தோற்கடிப்பதற்கு ஆதரவளித் ததாக கோசமெழுப்பினர்.
சுதந்திர கட்சியின் சிரேஷ்ட உறுப்பினராக திசாநாயக்க இருந்த போதும் அமைச்சர்கள் பலர் இறுதி மரியாதை செலுத்த வரவில்லை. பிரதமர் தி.மு. வருகை தந்திருந்தார். அனுராதபுரம் ஹரிச்சந்திர திடலில் இறுதிச் சடங்குகள் நடைபெற்றன.
மத்திய மாகாண முன்னாள் முதலமைச்சர் சரத் ஏக்க நாயக்கா மீண்டும் முதலமைச்சராக நியமிக்கபட விருப் பதாக அறியக் கிடக்கின்றது. மாகாணத்தில் அதிக விருப்பு வாக்குகளைப் பெற்ற, பிரதமர் ஜயரட்னவின் மகனான அனுருத்த ஜயரட்னவுக்கு அனுபவம் மற்றும் வயது குறைவு என்பதால் இந்த முடிவு என்று தெரிய வருகிறது.
வட மாகாண சபைக்கு சகல அதிகாரங்களும் வழங்கப்பட வேண்டும் என முஸ்லிம் காங்கிரஸ் குறிப்பிடுகிறது.
காங்கிரஸின் பொதுச் செயலாளர் ஹஸன் அலி, உதயன் பத்திரிகையுடனான நேர்காணலில் குறிப்பிடும் போது, அவ் வாறு அதிகாரங்கள் வழங்கப்படாதவிடத்து அரசு சர்வதே சத்திற்கு முகங்கொடுக்க வேண்டிவரும் எனக் குறிப்பிட்டு ள்ளார்.
வட மாகாண சபைத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாரிய வெற்றியை சுவீகரித்துக் கொண்டிருப்பதால் அவர்களின் அதிகாரத்தை நிலைநாட்டும் பொருட்டு சகல உரிமைகளும் அவர்களுக்கு வழங்கப்பட வேண்டும் எனக் குறிப்பிடும் அவர், அரசாங்கம் அதனை விட்டு மெல்ல விலகிச் செல்வதானது எதிர்வரும் மார்ச்சில் நடைபெறவுள்ள ஜெனீவா மாநாட்டில் அதற்குப் பதிலளிக்க வேண்டிவருமே என்ற எண்ணத்தினால்தான் எனவும் சுட்டிக் காட்டுகின்றார்.
புலிகள் ஆயுதங்கள் தாங்கி, அந்த பலத்துடன் யுத்தம் செய்தது. தற்போது ஜனநாயக சுதந்திரத்தைப் பெற்றுக் கொண்டுள்ள மக்களுக்கு அதிகாரத்தை வழங்காமலிருப்பது பெரும் பிரச்சினைக்குரியது எனவும், முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் முஸ்லிம் சமூகத்தை ஏமாற்றியது போல, தமிழ் மக்களை ஏமாற்றுவதற்கு ஆயத்தமாக வேண்டாம் எனவும் அரசாங்கத்திடம் கேட்டுள்ளார்.
(கேஎப்)
காங்கிரஸின் பொதுச் செயலாளர் ஹஸன் அலி, உதயன் பத்திரிகையுடனான நேர்காணலில் குறிப்பிடும் போது, அவ் வாறு அதிகாரங்கள் வழங்கப்படாதவிடத்து அரசு சர்வதே சத்திற்கு முகங்கொடுக்க வேண்டிவரும் எனக் குறிப்பிட்டு ள்ளார்.
வட மாகாண சபைத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாரிய வெற்றியை சுவீகரித்துக் கொண்டிருப்பதால் அவர்களின் அதிகாரத்தை நிலைநாட்டும் பொருட்டு சகல உரிமைகளும் அவர்களுக்கு வழங்கப்பட வேண்டும் எனக் குறிப்பிடும் அவர், அரசாங்கம் அதனை விட்டு மெல்ல விலகிச் செல்வதானது எதிர்வரும் மார்ச்சில் நடைபெறவுள்ள ஜெனீவா மாநாட்டில் அதற்குப் பதிலளிக்க வேண்டிவருமே என்ற எண்ணத்தினால்தான் எனவும் சுட்டிக் காட்டுகின்றார்.
புலிகள் ஆயுதங்கள் தாங்கி, அந்த பலத்துடன் யுத்தம் செய்தது. தற்போது ஜனநாயக சுதந்திரத்தைப் பெற்றுக் கொண்டுள்ள மக்களுக்கு அதிகாரத்தை வழங்காமலிருப்பது பெரும் பிரச்சினைக்குரியது எனவும், முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் முஸ்லிம் சமூகத்தை ஏமாற்றியது போல, தமிழ் மக்களை ஏமாற்றுவதற்கு ஆயத்தமாக வேண்டாம் எனவும் அரசாங்கத்திடம் கேட்டுள்ளார்.
(கேஎப்)
ஈரான் நாட்டை உளவு பார்ப்பதற்காக அமெரிக்காவால் அனு ப்பப்பட்ட சில ஆளில்லா நவீனரக உளவு விமானங்களை, ஈரான் விமானப்படை சிறை பிடித்து வைத்து வல்லரசு நாடுகளின் மூக்கின் மீது விரலை வைத்து ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருந்த நிலையில், போர் ஆயுதங்கள் மற்றும் ஏவுகணைகளை சுமந்தபடி மணிக்கு ஆயிரத்து 700 கி.மீட்டர் வேகத்தில் தொடர்ந்து 24 மணி நேரங்களுக்கு பறக்கவல்ல ஆளில்லா அதிநவீன போர் விமானத்தை அந்நாட்டின் விமானப் படை அறிமுகப்படுத்தியது.
'ஷஹித்-129' என பெயரிடப்பட்டுள்ள இந்த போர் விமானம், ஒரே நேரத்தில் சக்தி வாய்ந்த 8 வெடிகுண்டுகள் அல்லது ஏவுகணைகளை சுமந்தபடி வெகுநீண்ட தூரத்தையும், குறுகிய நேரத்தில் சென்றடைந்து, அசையும் மற்றும் அசையா இலக்குகளை துல்லியமாக தாக்கும் ஆற்றல்மிக்கது என ஈரான் விமானப்படை வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
'ஷஹித்-129' என பெயரிடப்பட்டுள்ள இந்த போர் விமானம், ஒரே நேரத்தில் சக்தி வாய்ந்த 8 வெடிகுண்டுகள் அல்லது ஏவுகணைகளை சுமந்தபடி வெகுநீண்ட தூரத்தையும், குறுகிய நேரத்தில் சென்றடைந்து, அசையும் மற்றும் அசையா இலக்குகளை துல்லியமாக தாக்கும் ஆற்றல்மிக்கது என ஈரான் விமானப்படை வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடக்கு மாகாண சபை உட்பட்ட நாட்டின் எந்த ஒரு மா காண சபைக்கும் காணி மற்றும் காவல்துறை அதிகாரங்கள் வழங்கப்படமாட்டாது என்ற அரசாங்கத்தின் நிலைப்பாட் டில் மாற்றம் ஏதும் இல்லை என அரசாங்கத்தின் பேச்சாளர் கேஹலிய ரம்புக்வெல மீண்டும் தெரிவித்துள்ளார்.
மாகாணசபைகள் அந்த சபைகளுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அப்பால் செல்லமுடியாது. வடக்கு மாகாண முதலமைச்சராக தெரிவுசெய்யப்பட்டுள்ள விக்னேஸ்வரனும் நீதியரசராக இருந்த காலத்தில் காணி மற்றும் காவல்துறை அதிகாரங்களுக்கு எதிரான நிலைப்பாட்டையே கொண்டிருந்தார், என்று ரம்புக்வெல சுட்டிக்காட்டி யிருந்தார்.
இதேவேளை இலங்கையின் உயர்நீதிமன்றம் ஏற்கனவே வழங்கப்பட்ட தீர்ப்பை மாற்றி காணி மற்றும் காவல்துறை அதிகாரங்கள், மத்திய அரசாங்கத்துக்கு உரியவை என்று தீர்ப்பை வெளியிட்டமையானது தெளிவான நிலையை ஏற்படுத்தியுள்ளது என்று ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.
மாகாணசபைகள் அந்த சபைகளுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அப்பால் செல்லமுடியாது. வடக்கு மாகாண முதலமைச்சராக தெரிவுசெய்யப்பட்டுள்ள விக்னேஸ்வரனும் நீதியரசராக இருந்த காலத்தில் காணி மற்றும் காவல்துறை அதிகாரங்களுக்கு எதிரான நிலைப்பாட்டையே கொண்டிருந்தார், என்று ரம்புக்வெல சுட்டிக்காட்டி யிருந்தார்.
இதேவேளை இலங்கையின் உயர்நீதிமன்றம் ஏற்கனவே வழங்கப்பட்ட தீர்ப்பை மாற்றி காணி மற்றும் காவல்துறை அதிகாரங்கள், மத்திய அரசாங்கத்துக்கு உரியவை என்று தீர்ப்பை வெளியிட்டமையானது தெளிவான நிலையை ஏற்படுத்தியுள்ளது என்று ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.
பல ஆண்டுகளாக இலங்கைத் தபால் திணைக்களம் நடை முறைப்படுத்திவந்த தந்திச் சேவைக்குப் பதிலாக புதிதாக ரெலிமெய்ல் (தொலைவஞ்சல்) சேவை நாளை (01) திகதி முதல் சகல தபாலகங்களிலும் நடைமுறைப்படுத்தப்பட வுள்ளதாக தபால் மா அதிபர் ரோஹன அபயரத்ன தெரி வித்தார்.
தந்திச் சேவைக்கு இணையான ரெலிமெய்ல் சேவைக்கு அரசாங்கத்தின் வரவேற்பு கிடைக்கவுள்ளதுடன், நாளை முதலாம் திகதி முதல் பிரதான தபாலகங்கள் மற்றும் உபதபாலகங்கள் 3600 இல் இச்சேவை நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
ஒரு ரெலிமெய்ல் (தொலைவஞ்சல்) செய்தி அனுப்பும் போது, முதல் 10 சொற் களுக்கு ரூபா 30 அறவிடப்படவுள்ளதுடன், மேலதிக ஒவ்வொரு சொல்லுக்கும் ரூபா. 1.50 வீதம் அறவிடப்படும்.
தகவல் கிடைத்து 4 மணித்தியாலயங்களுள் குறித்த நபருக்கு செய்தி பரிமாற ப்படும். அதுபற்றி தகவல் வழங்குநர் அறிந்து கொள்ள வேண்டுமாயின் அதற்காக ரூபா 10 அறவிடப்படும் எனவும் தபால் திணைக்களம் குறிப்பிடுகிறது.
தந்திச் சேவையில் முகவரிக்கும் கட்டணம் அறவிடப்பட்டது. என்றாலும் இந்த தொலைவஞ்சல் சேவையில் முகவரிக்கு கட்டணம் அறவிடப்பட மாட்டாது என தபால் மா அதிபர் குறிப்பிட்டார்.
(கேஎப்)
தந்திச் சேவைக்கு இணையான ரெலிமெய்ல் சேவைக்கு அரசாங்கத்தின் வரவேற்பு கிடைக்கவுள்ளதுடன், நாளை முதலாம் திகதி முதல் பிரதான தபாலகங்கள் மற்றும் உபதபாலகங்கள் 3600 இல் இச்சேவை நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
ஒரு ரெலிமெய்ல் (தொலைவஞ்சல்) செய்தி அனுப்பும் போது, முதல் 10 சொற் களுக்கு ரூபா 30 அறவிடப்படவுள்ளதுடன், மேலதிக ஒவ்வொரு சொல்லுக்கும் ரூபா. 1.50 வீதம் அறவிடப்படும்.
தகவல் கிடைத்து 4 மணித்தியாலயங்களுள் குறித்த நபருக்கு செய்தி பரிமாற ப்படும். அதுபற்றி தகவல் வழங்குநர் அறிந்து கொள்ள வேண்டுமாயின் அதற்காக ரூபா 10 அறவிடப்படும் எனவும் தபால் திணைக்களம் குறிப்பிடுகிறது.
தந்திச் சேவையில் முகவரிக்கும் கட்டணம் அறவிடப்பட்டது. என்றாலும் இந்த தொலைவஞ்சல் சேவையில் முகவரிக்கு கட்டணம் அறவிடப்பட மாட்டாது என தபால் மா அதிபர் குறிப்பிட்டார்.
(கேஎப்)
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளும ன்ற உறுப்பினர் சிறிதரனின் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் ஈபிடிபி அறிக்கை ஒன்றை விடுத்துள்ளது அவ்வறிக் கையில்.
தமிழ்க் கூட்டமைப்பின் ஆதரவாளர்கள் மீது வன்னியிலும், தீவகப்பகுதியிலும் வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டி ருப்பதாகவும், வடக்கு மாகாண சபையில் ஏற்பட்ட படுதோல்வியை ஏற்றுக் கொள்ள முடியாதவர்கள் கூட்டமைப்பின் ஆதரவாளர்களைத் தாக்கி வருவதாகவும். இத்தாக்குதல் சம்பவங்களில் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியினர் ஈடுபட்டிருப்பதாகவும் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன் கூறியிருப்பதை நாம் கண்டிக்கின்றோம்.
கிளிநொச்சியிலேயே அதிகமான தாக்குதல் சம்பவங்கள் இடம்பெற்றதாகவும், மக்கள் அஞ்சி வாழ்வதாகவும் சிறீதரன் குறிப்பிட்டிருக்கின்றார். ஒரு பாராளுமன்ற உறுப்பினராக இருக்கும் இவர் எழுந்தமானமாக குற்றம் சுமத்துவதை ஏற்றுக் கொள்ளமுடியாது. ஈ.பி.டி.பியாகிய நாம் எமது மக்களின் விருப்பங்களை எப்போதும் மதித்து நடந்துள்ளோம். ஜனநாயகத்தை மீண்டும் வடக்கில் ஏற்படுத்த துணிந்து செயலாற்றியவர்கள். எமக்கு யாரையும் தாக்கவேண்டிய அவசியமோ, எவரையும் அச்சுறுத்த வேண்டிய அவசியமோ இல்லை.
வடக்கு மாகாணசபை எமது சபை அதைப்பாதுகாக்கவே நாம் விரும்புகின்றோம். வடக்கு மாகாண சபைக்கான தேர்தலில் எமது மக்களின் தீர்மானத்தை புரிந்துகொண்டுள்ளோம். எமக்கு தேர்தல் முடிவுகள் ஆச்சரியத்தைக் கொடுக்கவில்லை. நாம் சிறீதரனின் செயற்பாடுகளையும் தாண்டி கிளிநொச்சியில் ஒரு ஆசனத்தை வெற்றி பெற்றிருப்பது சிறீதரனுக்கு திகைப்பையும், எரிச்சலையும் கொடுத்திருக்கலாம்.
அதேபோல் தீவகப்பகுதி மக்கள் எமது மக்கள். நாம் அவர்களுடனேயே வாழ்ந்து வருபவர்கள் அவர்களிடத்தில் ஜனநாயகத்தைப் போதிப்பவர்களும் நாமே. தேர்தல் முடிவுகளையிட்டு எமது மக்களை வெறுக்கும் அநாகரீகமானவர்கள் நாமல்ல. அங்கு இரவில் மதுபோதையில் நடமாடும் கும்பல் மக்களை மிரட்டுவதாக சிறீதரன் கூறியிருப்பது வேடிக்கையாகும்.
இவ்வாறு குற்றச்சாட்டுக்களை கூறியிருக்கும் சிறீதரன் இது தொடர்பில் உரியவகையில் முறைப்பாடுகளைச் செய்யவில்லை அது ஏன் என்று கேட்கின்றோம்.
சிறீதரனின் இவ்வாறான சிறுபிள்ளைத்தனமான விசமத்தனங்கள் எமது மக்களின் கவனத்தை திசை திருப்புகின்ற நோக்கமாகவே கருத இடமுண்டு. எனவே இவ்வாறான ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை விடுப்பதை விட்டுவிட்டு இனியாவது அர்த்தமுள்ள அவசியமான பணிகளில் கவனஞ்செலுத்தினால் நல்லது. கடந்த காலத்தில் எதிர்க்கட்சியாக இருந்து கொண்டு உண்மைக்குப்புறம்பான பல குற்றச்சாட்டுக்களை சுமத்திக் கொண்டிருந்தீர்கள். தற்போது ஆளும் தரப்பாக இருக்கும் கூட்டமைப்பினர் பொறுப்பை உணர்ந்து செயற்படுவதே பொருத்தமாக இருக்கும்.
ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியினராகிய நாம் மக்களிடம் கேட்டுக்கொள்வதெல்லாம் இவ்வாறான விசமத்தனங்களுக்கு ஒருபோதும் இடம் கொடுக்கவேண்டாம். எவர் மீதாவது தாக்குதல் சம்பவங்களோ, அச்சுறுத்தல்களோ இடம் பெற்றால் அது தொடர்பில் பொலிஸாரிடம் துணிச்சலாக முறையிடுவது அவசியமாகும். அவ்வாறான சம்பவங்களில் ஈடுபடுகின்றவர்கள் குறித்து எமது கவனத்துக்குக் கொண்டுவந்தால் நாம் உடனடியாக பொலிஸாரின் கவனத்துக்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட எமதுபங்களிப்பைச் செய்வோம் என்றும் தெரிவித்துக் கொள்கின்றோம்.
தமிழ்க் கூட்டமைப்பின் ஆதரவாளர்கள் மீது வன்னியிலும், தீவகப்பகுதியிலும் வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டி ருப்பதாகவும், வடக்கு மாகாண சபையில் ஏற்பட்ட படுதோல்வியை ஏற்றுக் கொள்ள முடியாதவர்கள் கூட்டமைப்பின் ஆதரவாளர்களைத் தாக்கி வருவதாகவும். இத்தாக்குதல் சம்பவங்களில் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியினர் ஈடுபட்டிருப்பதாகவும் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன் கூறியிருப்பதை நாம் கண்டிக்கின்றோம்.
கிளிநொச்சியிலேயே அதிகமான தாக்குதல் சம்பவங்கள் இடம்பெற்றதாகவும், மக்கள் அஞ்சி வாழ்வதாகவும் சிறீதரன் குறிப்பிட்டிருக்கின்றார். ஒரு பாராளுமன்ற உறுப்பினராக இருக்கும் இவர் எழுந்தமானமாக குற்றம் சுமத்துவதை ஏற்றுக் கொள்ளமுடியாது. ஈ.பி.டி.பியாகிய நாம் எமது மக்களின் விருப்பங்களை எப்போதும் மதித்து நடந்துள்ளோம். ஜனநாயகத்தை மீண்டும் வடக்கில் ஏற்படுத்த துணிந்து செயலாற்றியவர்கள். எமக்கு யாரையும் தாக்கவேண்டிய அவசியமோ, எவரையும் அச்சுறுத்த வேண்டிய அவசியமோ இல்லை.
வடக்கு மாகாணசபை எமது சபை அதைப்பாதுகாக்கவே நாம் விரும்புகின்றோம். வடக்கு மாகாண சபைக்கான தேர்தலில் எமது மக்களின் தீர்மானத்தை புரிந்துகொண்டுள்ளோம். எமக்கு தேர்தல் முடிவுகள் ஆச்சரியத்தைக் கொடுக்கவில்லை. நாம் சிறீதரனின் செயற்பாடுகளையும் தாண்டி கிளிநொச்சியில் ஒரு ஆசனத்தை வெற்றி பெற்றிருப்பது சிறீதரனுக்கு திகைப்பையும், எரிச்சலையும் கொடுத்திருக்கலாம்.
அதேபோல் தீவகப்பகுதி மக்கள் எமது மக்கள். நாம் அவர்களுடனேயே வாழ்ந்து வருபவர்கள் அவர்களிடத்தில் ஜனநாயகத்தைப் போதிப்பவர்களும் நாமே. தேர்தல் முடிவுகளையிட்டு எமது மக்களை வெறுக்கும் அநாகரீகமானவர்கள் நாமல்ல. அங்கு இரவில் மதுபோதையில் நடமாடும் கும்பல் மக்களை மிரட்டுவதாக சிறீதரன் கூறியிருப்பது வேடிக்கையாகும்.
இவ்வாறு குற்றச்சாட்டுக்களை கூறியிருக்கும் சிறீதரன் இது தொடர்பில் உரியவகையில் முறைப்பாடுகளைச் செய்யவில்லை அது ஏன் என்று கேட்கின்றோம்.
சிறீதரனின் இவ்வாறான சிறுபிள்ளைத்தனமான விசமத்தனங்கள் எமது மக்களின் கவனத்தை திசை திருப்புகின்ற நோக்கமாகவே கருத இடமுண்டு. எனவே இவ்வாறான ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை விடுப்பதை விட்டுவிட்டு இனியாவது அர்த்தமுள்ள அவசியமான பணிகளில் கவனஞ்செலுத்தினால் நல்லது. கடந்த காலத்தில் எதிர்க்கட்சியாக இருந்து கொண்டு உண்மைக்குப்புறம்பான பல குற்றச்சாட்டுக்களை சுமத்திக் கொண்டிருந்தீர்கள். தற்போது ஆளும் தரப்பாக இருக்கும் கூட்டமைப்பினர் பொறுப்பை உணர்ந்து செயற்படுவதே பொருத்தமாக இருக்கும்.
ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியினராகிய நாம் மக்களிடம் கேட்டுக்கொள்வதெல்லாம் இவ்வாறான விசமத்தனங்களுக்கு ஒருபோதும் இடம் கொடுக்கவேண்டாம். எவர் மீதாவது தாக்குதல் சம்பவங்களோ, அச்சுறுத்தல்களோ இடம் பெற்றால் அது தொடர்பில் பொலிஸாரிடம் துணிச்சலாக முறையிடுவது அவசியமாகும். அவ்வாறான சம்பவங்களில் ஈடுபடுகின்றவர்கள் குறித்து எமது கவனத்துக்குக் கொண்டுவந்தால் நாம் உடனடியாக பொலிஸாரின் கவனத்துக்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட எமதுபங்களிப்பைச் செய்வோம் என்றும் தெரிவித்துக் கொள்கின்றோம்.
தமிழ் நாட்டிலுள்ள தமிழ் மக்களிடம் விக்னேஷ்வரன் மன்னிப்பை கேட்கும் வரை, தமிழ் நாட்டு முதலமை ச்சர் ஜயலலிதா ஜயராம் வடமாகாண முதலமை ச்சராக தெரிவாகியுள்ள சீ.வி.விக்னேஷ்வரனுடன் எந்த வித மான கலந்துரையாடல்களையும் மேற்கொள்ளக்கூடாது என, ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பு வலியுறுத்தியு ள்ளது.
இலங்கையில் தேசிய பிரச்சினைக்கு தீர்வை காண்பதற்கு தமிழ் நாட்டினதோ அல்லது புலம்பெயர்ந்த தமிழர்களதோ ஒத்துழைப்பு அவசியம் இல்லை என்று சி.வி.விக்னேஷ்வரன் ஏற்கனவே கூறியிருந்தமையை அந்த அமைப்பு சுட்டிக் காட்டியுள்ளதுடன், வடமாகாணத்தில் வாழ்கின்றவர்கள் தமிழ் நாட்டு தமிழ் மக்களின் உறவினர்கள் என்றும் ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பின் ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனினும் முதலமைச்சராக தெரிவாகியுள்ள விக்னேஷ்வரன் இந்த அடிப்படை கொள்கையை நிராகரிக்கும் வகையில் வெளியிட்டுள்ள கருத்தை அந்த அமைப்பு கண்டித்துள்ளது. கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது அமெரிக்க ஜனாதிபதி பெரக் ஒபாமாவுக்கு தமிழ் புலம்பெயர்ந்தவர்கள் தமது ஆதரவை வழங்கியிருந்தனர். இதனடிப்படை Tamil for Obama என்ற அமைப்பு ஸ்தாபிக்கப்பட்டது.
இலங்கையில் தேசிய பிரச்சினைக்கு தீர்வை காண்பதற்கு தமிழ் நாட்டினதோ அல்லது புலம்பெயர்ந்த தமிழர்களதோ ஒத்துழைப்பு அவசியம் இல்லை என்று சி.வி.விக்னேஷ்வரன் ஏற்கனவே கூறியிருந்தமையை அந்த அமைப்பு சுட்டிக் காட்டியுள்ளதுடன், வடமாகாணத்தில் வாழ்கின்றவர்கள் தமிழ் நாட்டு தமிழ் மக்களின் உறவினர்கள் என்றும் ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பின் ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனினும் முதலமைச்சராக தெரிவாகியுள்ள விக்னேஷ்வரன் இந்த அடிப்படை கொள்கையை நிராகரிக்கும் வகையில் வெளியிட்டுள்ள கருத்தை அந்த அமைப்பு கண்டித்துள்ளது. கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது அமெரிக்க ஜனாதிபதி பெரக் ஒபாமாவுக்கு தமிழ் புலம்பெயர்ந்தவர்கள் தமது ஆதரவை வழங்கியிருந்தனர். இதனடிப்படை Tamil for Obama என்ற அமைப்பு ஸ்தாபிக்கப்பட்டது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வடமாகாண சபை தேர் தலின் கிடைத்த இரண்டு போனஸ்ஆசனங்களுக்கும் பெயர் கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. இதற்கிணங்க மன்னாரில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு சார்பில் போட்டியிட்டு தோல்வியுற்ற ஐயூப் ஆஸ்மின் மேலதிக ஒரு ஆசனத் துக்காக தமிழ்த்தேசியக்கூட்டமைப்பினால் ஏற்றுக்கொள் ளப்பட்டார்.
இந்தநிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை கூடிய தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு, மற்றும் ஒரு ஆசனத்துக்காக சுழற்சி முறையில் பெயர்கள் பரிந்துரைக்கப் பட்டுள்ளன. இதன்படி முல்லைத்தீவில் போட்டியிட்டு தோல்வி கண்ட தமிழர் விடுதலைக்கூட்டணியின் மேரி கமலா குணசீலன் முதலாம் ஆண்டுக்காக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இரண்டாம் வருடத்துக்கு ஈழமக்கள் புரட்சிக்கர விடுதலை முன்னணியின் வவுனியாவை சேர்ந்த எம் பி நடராஜா பரிந்துரைக்கப்பட்டுள்ளார். மூன்றாம் வருடத் துக்காக தமிழரசுக்க்கட்சியின் மன்னாரில் போட்டியிட்ட சிவகரன் தெரிவு செய்யப் பட்டுள்ளார். நான்காம் ஆண்டுக்காக வவுனியாவை பிரதிநிதித்துவப் படுத்தும் தமிழீழ விடுதலை இயக்கத்தின் ரவி தெரிவானார்.
ஐந்தாம் ஆண்டுக்கான ஆசனம் தமிழீழ மக்கள் விடுதலைக்கழகத்துக்கு ஒதுக் கப்பட்ட போதும், அந்தக்கட்சி அதற்குரிய பெயரை பரிந்துரைக்கவுள்ளது. எனினும் வடக்கு மாகாணசபையின் அமைச்சரவை எதிர்வரும் 2 ஆம் திகதியன்று அமைக்கப்படும் என்று தமிழ்தேசியக்கூட்டமைப்பின் தரப்புக்கள் தெரிவித்துள்ளன.
இதன்போது தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் நான்கு பங்காளிக்கட்சிகளான தமிழர சுக்கட்சி, தமிழீழு மக்கள் விடுதலைக்கழகம், தமிழீழ விடுதலை இயக்கம், ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி ஆகிய நான்கு கட்சிகளுக்கும் வாய்ப்பு வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு வட மாகாண சபையில் கிடைத்துள்ள இரு போனஸ் ஆசனங்களில் ஒன்றை தமிழர் விடுதலைக் கூட்ட ணியின் தலைவரான ஆனந்தசங்கரி ஐயாவிற்கே வழங்க வேண்டும் எனவும், இவ்வாறு ஆனந்த சங்கரிக்கு போனஸ் ஆசனம் வழங்கப்படாதவிடத்து, தீக் குளிப்பு போராட்டம் அல்லது சாகும் வரையிலான உண் ணாவிரதப் போராட்டம் நடத்தவும் தான் தயங்கப் போவதில்லை என தம்பிராசா (தம்பி) தெரிவித்தமை குறிப் பிடத்க்கது.
இந்தநிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை கூடிய தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு, மற்றும் ஒரு ஆசனத்துக்காக சுழற்சி முறையில் பெயர்கள் பரிந்துரைக்கப் பட்டுள்ளன. இதன்படி முல்லைத்தீவில் போட்டியிட்டு தோல்வி கண்ட தமிழர் விடுதலைக்கூட்டணியின் மேரி கமலா குணசீலன் முதலாம் ஆண்டுக்காக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இரண்டாம் வருடத்துக்கு ஈழமக்கள் புரட்சிக்கர விடுதலை முன்னணியின் வவுனியாவை சேர்ந்த எம் பி நடராஜா பரிந்துரைக்கப்பட்டுள்ளார். மூன்றாம் வருடத் துக்காக தமிழரசுக்க்கட்சியின் மன்னாரில் போட்டியிட்ட சிவகரன் தெரிவு செய்யப் பட்டுள்ளார். நான்காம் ஆண்டுக்காக வவுனியாவை பிரதிநிதித்துவப் படுத்தும் தமிழீழ விடுதலை இயக்கத்தின் ரவி தெரிவானார்.
ஐந்தாம் ஆண்டுக்கான ஆசனம் தமிழீழ மக்கள் விடுதலைக்கழகத்துக்கு ஒதுக் கப்பட்ட போதும், அந்தக்கட்சி அதற்குரிய பெயரை பரிந்துரைக்கவுள்ளது. எனினும் வடக்கு மாகாணசபையின் அமைச்சரவை எதிர்வரும் 2 ஆம் திகதியன்று அமைக்கப்படும் என்று தமிழ்தேசியக்கூட்டமைப்பின் தரப்புக்கள் தெரிவித்துள்ளன.
இதன்போது தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் நான்கு பங்காளிக்கட்சிகளான தமிழர சுக்கட்சி, தமிழீழு மக்கள் விடுதலைக்கழகம், தமிழீழ விடுதலை இயக்கம், ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி ஆகிய நான்கு கட்சிகளுக்கும் வாய்ப்பு வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு வட மாகாண சபையில் கிடைத்துள்ள இரு போனஸ் ஆசனங்களில் ஒன்றை தமிழர் விடுதலைக் கூட்ட ணியின் தலைவரான ஆனந்தசங்கரி ஐயாவிற்கே வழங்க வேண்டும் எனவும், இவ்வாறு ஆனந்த சங்கரிக்கு போனஸ் ஆசனம் வழங்கப்படாதவிடத்து, தீக் குளிப்பு போராட்டம் அல்லது சாகும் வரையிலான உண் ணாவிரதப் போராட்டம் நடத்தவும் தான் தயங்கப் போவதில்லை என தம்பிராசா (தம்பி) தெரிவித்தமை குறிப் பிடத்க்கது.
புல்மோட்டைப் பகுதியில் 13 ம் மைல் கல்லுக்கு அருகில், வெலி ஓயா 62 வது இராணுவப் பிரிவு பாசறையானது கொலங்கொல்லை மற்றும் மீகாஸ்வேவை வாழ் மக்களின் பாதுகாப்புகனகாக அமைக்கப்பட்டது. இந்த பாசறையில் உள்ள இராணுவத்தினரின் உதவியுடன் ஒரு ரணவிரு கிராமம் அமைக்க முன்மொழிவு செய்யப்பட்டது. அதன்படி 87 ஏக்கர் பரப்பளவுள்ள காணியில் ஜனாதிபதியின் ஆலோசகர் வண. பகமுவே நாலக்க தேரரின் பிரித் ஓதலுடன் ரணவிரு கிராமம் அமைக்க அண்மையில் அடிக்கல் நாட்டப்பட்டது.
இராணுத்தின் இரண்டாவது கொமாண்டர் பிரிகேடியர் தேவேந்திர பெரேரா இராணுவத்தை வழி நடாத்தினார்.
ஏறக்குறைய 300 வீடுகள் கட்டப்பட்டு ஊனமுற்ற இரணுவத்தினர் மற்றும் அகதிகளான சிங்களக் குடும்பத்தினர் குடியர்த்தப்படுவர்..
இராணுத்தின் இரண்டாவது கொமாண்டர் பிரிகேடியர் தேவேந்திர பெரேரா இராணுவத்தை வழி நடாத்தினார்.
ஏறக்குறைய 300 வீடுகள் கட்டப்பட்டு ஊனமுற்ற இரணுவத்தினர் மற்றும் அகதிகளான சிங்களக் குடும்பத்தினர் குடியர்த்தப்படுவர்..
பொதுபல சேனா முஸ்லிம்களுக்கு இழைத்த துரோகங் களை எப்படி மறப்பது? எவ்வாறு மறைக்க முடியும்? முஸ்லிம்களுக்கு துன்பியலான, பயங்கரம்மிக்க சூழ்நிலையையே பொதுபல சேனா உருவாக்கியது. 21 ஆம் நூற்றாண்டின் 9 ஆம் மாதத்தில் இலங்கையில் இந்தப் பயங்கரவாத நிலை எவ்வாறு ஏற்படலாம்? என்பது எனக்குத் தெரியவில்லை' எனக் குறிப்பிட்டார் பேராசிரியர் அனஸ்.
எம்.சீ. ரஸ்மினின் 'போர்க்கால இலக்கியங்கள்' ஒரு பன்மைத்துவ ஆய்வு (1983 - 2007) என்ற ஆய்வு நூலின் நூலின் வெளியீடும் ஆய்வரங்கும் நேற்று (29) கொழும்பு 10 டீ.ஆர். விஜேவர்த்தன மாவத்தையிலுள்ள இலங்கைத் தபால் தலைமையக கேட்போர் கூடத்தில் நடைபெற்றபோது பேராதனைப் பல்கலைக்கழக உளவியல் மற்றும் மெய்யியல் துறைப் பேராசிரியர் எம்.எஸ்.எம். அனஸ் குழுநிலைக் கலந்துரையாடலில் கலந்துகொண்டு நூல் ஆய்வுரை நிகழ்த்தும்போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சர் வாசுதேவ நாணயக்கார பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட இந்நிகழ்வில் அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்:
'இலக்கியம் அரசியலைப் பேசுகின்றது. 'பன்மைத்துவம்' என்பது இன்றைய தேவை. தற்போதைய தேவை என்பது அதனது கருப்பொருளாக இருக்கின்றது.
தமிழ் மக்கள் போர்க்கால இலக்கியத்தில் பலவற்றை வெளிக்கொணர்ந்துள்ளனர். ஆயினும் சிங்கள படைப்பிலக்கியவாதிகள் போர்க்கால இலக்கியத்தில் சாதித்தவைதான் என்ன என்பது கேள்விக்குறியாகவே இருக்கின்றது. திரு. 'ஞானம்' ஞானசேகரன் அவர்கள் 'போர்க்கால இலக்கியங்கள்' என்ற பாரியதொரு புத்தகத்தை தமிழுலகுக்குத் தந்திருக்கிறார். அதில் பல்வேறு தமிழ்க் கவிஞர்கள், கட்டுரையாளர்கள் ஆக்கங்களைப் படைத்திருக்கிறார்கள்.
இலங்கை ஜனநாயகத்தினின்று பிரிந்து செல்கின்றதோ என்ற ஐயப்பாடு ஏற்பட்டுள்ளது. தமிழர்களின் துன்பியலை எடுத்துக் காட்டுவதற்கு ஞானம் எழுத்தாளர்கள் பங்களிப்புச் செய்திருக்கிறார்கள். ஜனநாயக கட்டமைப்பு எமது நாட்டுக்குத் தேவையாக இருக்கின்றது. ஜனநாயகமும் உண்மையான சோசலிஸமுமே நாட்டுக்குத் தேவை.
விக்கிரமபாகுவும் வாசுதேவ நாணயக்காரவும் இருக்கும்வரை இந்த உண்மையான சோசலிஸமும் வாழும். மாவனல்லைக் கலவரம் ஏற்பட்டபோது வாசுதேவ நாணயக்காரவே முஸ்லிம்களுக்காக குரல் கொடுத்தார். அவரது வார்த்தைகள் வைரங்களாக இருந்தன. என்றும் சிறுபான்மை முஸ்லிம்களுக்காகவும், தமிழர்களுக்காகவும் வாசுதேவ நாணயக்கார பேசிவருகின்றார்.
1915 ஆம் ஆண்டு சிங்கள - முஸ்லிம் கலவரம் பற்றி எந்தவொரு முஸ்லிம் எழுத்தாளரும் எந்தவொரு படைப்பையும் படைக்கவில்லை... கவிதை, கட்டுரைகள் எதுவும் இல்லை... குறைந்தளவு ஒரு புகைப்படம் கூடக் கிடையாது. முடியுமானால் ஒரு புகைப்படத்தைச் சமர்ப்பிக்குமாறு நான் சவால் விடுகிறேன். 1976 இல் கலகம்... மீண்டும் 2013 இல் பள்ளிவாசல்கள் தகர்க்கப்பட்டன...
இன்று தமிழர்கள் உரிமைக்காகவும், முஸ்லிம்கள் இருத்தலுக்காகவும் எனும் நிலையே காணப்படுகிறது.' எனவும் அவர் குறிப்பிட்டார்.
இந்நிகழ்வில், திறனாய்வாளர் கே.எஸ். சிவகுமாரன் ஆங்கிலத்திலும், ருகுணு பல்கலைக்கழக சிங்களத் துறை விரிவுரையாளர் தம்மிக்க ஜயசிங்க சிங்களத்திலும் நூல் அறிமுகம் செய்தனர். கிழக்குப் பல்கலைக் கழக தமிழ்த்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் பேராசிரியர் யோகராசா 'போர்க்கால சிங்கள இலக்கியங்களின் புனைவையும் யதார்த்தத்தையும் பிரித்தறிதல்' எனும் தலைப்பில் ஆய்வுரை நிகழ்த்தினார்.
(கலைமகன் பைரூஸ்)
எம்.சீ. ரஸ்மினின் 'போர்க்கால இலக்கியங்கள்' ஒரு பன்மைத்துவ ஆய்வு (1983 - 2007) என்ற ஆய்வு நூலின் நூலின் வெளியீடும் ஆய்வரங்கும் நேற்று (29) கொழும்பு 10 டீ.ஆர். விஜேவர்த்தன மாவத்தையிலுள்ள இலங்கைத் தபால் தலைமையக கேட்போர் கூடத்தில் நடைபெற்றபோது பேராதனைப் பல்கலைக்கழக உளவியல் மற்றும் மெய்யியல் துறைப் பேராசிரியர் எம்.எஸ்.எம். அனஸ் குழுநிலைக் கலந்துரையாடலில் கலந்துகொண்டு நூல் ஆய்வுரை நிகழ்த்தும்போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சர் வாசுதேவ நாணயக்கார பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட இந்நிகழ்வில் அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்:
'இலக்கியம் அரசியலைப் பேசுகின்றது. 'பன்மைத்துவம்' என்பது இன்றைய தேவை. தற்போதைய தேவை என்பது அதனது கருப்பொருளாக இருக்கின்றது.
தமிழ் மக்கள் போர்க்கால இலக்கியத்தில் பலவற்றை வெளிக்கொணர்ந்துள்ளனர். ஆயினும் சிங்கள படைப்பிலக்கியவாதிகள் போர்க்கால இலக்கியத்தில் சாதித்தவைதான் என்ன என்பது கேள்விக்குறியாகவே இருக்கின்றது. திரு. 'ஞானம்' ஞானசேகரன் அவர்கள் 'போர்க்கால இலக்கியங்கள்' என்ற பாரியதொரு புத்தகத்தை தமிழுலகுக்குத் தந்திருக்கிறார். அதில் பல்வேறு தமிழ்க் கவிஞர்கள், கட்டுரையாளர்கள் ஆக்கங்களைப் படைத்திருக்கிறார்கள்.
இலங்கை ஜனநாயகத்தினின்று பிரிந்து செல்கின்றதோ என்ற ஐயப்பாடு ஏற்பட்டுள்ளது. தமிழர்களின் துன்பியலை எடுத்துக் காட்டுவதற்கு ஞானம் எழுத்தாளர்கள் பங்களிப்புச் செய்திருக்கிறார்கள். ஜனநாயக கட்டமைப்பு எமது நாட்டுக்குத் தேவையாக இருக்கின்றது. ஜனநாயகமும் உண்மையான சோசலிஸமுமே நாட்டுக்குத் தேவை.
விக்கிரமபாகுவும் வாசுதேவ நாணயக்காரவும் இருக்கும்வரை இந்த உண்மையான சோசலிஸமும் வாழும். மாவனல்லைக் கலவரம் ஏற்பட்டபோது வாசுதேவ நாணயக்காரவே முஸ்லிம்களுக்காக குரல் கொடுத்தார். அவரது வார்த்தைகள் வைரங்களாக இருந்தன. என்றும் சிறுபான்மை முஸ்லிம்களுக்காகவும், தமிழர்களுக்காகவும் வாசுதேவ நாணயக்கார பேசிவருகின்றார்.
1915 ஆம் ஆண்டு சிங்கள - முஸ்லிம் கலவரம் பற்றி எந்தவொரு முஸ்லிம் எழுத்தாளரும் எந்தவொரு படைப்பையும் படைக்கவில்லை... கவிதை, கட்டுரைகள் எதுவும் இல்லை... குறைந்தளவு ஒரு புகைப்படம் கூடக் கிடையாது. முடியுமானால் ஒரு புகைப்படத்தைச் சமர்ப்பிக்குமாறு நான் சவால் விடுகிறேன். 1976 இல் கலகம்... மீண்டும் 2013 இல் பள்ளிவாசல்கள் தகர்க்கப்பட்டன...
இன்று தமிழர்கள் உரிமைக்காகவும், முஸ்லிம்கள் இருத்தலுக்காகவும் எனும் நிலையே காணப்படுகிறது.' எனவும் அவர் குறிப்பிட்டார்.
இந்நிகழ்வில், திறனாய்வாளர் கே.எஸ். சிவகுமாரன் ஆங்கிலத்திலும், ருகுணு பல்கலைக்கழக சிங்களத் துறை விரிவுரையாளர் தம்மிக்க ஜயசிங்க சிங்களத்திலும் நூல் அறிமுகம் செய்தனர். கிழக்குப் பல்கலைக் கழக தமிழ்த்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் பேராசிரியர் யோகராசா 'போர்க்கால சிங்கள இலக்கியங்களின் புனைவையும் யதார்த்தத்தையும் பிரித்தறிதல்' எனும் தலைப்பில் ஆய்வுரை நிகழ்த்தினார்.
(கலைமகன் பைரூஸ்)
தான் அமைச்சர் விமல் வீரவன்சவுக்குப் பயந்து பின் வாங்குவதாக வட மாகாண சபையின் முதலமைச்சராக சத்தியப் பிரமாணம் செய்யவுள்ள சீ.வீ. விக்னேஸ்வரன் குறிப்பிடுகிறார்.
வார இறுதி பத்திரிகை ஒன்றுக்கு கருத்துரைக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் குறிப்பிட் டுள்ளதாவது,
'தெற்கின் ஆட்சியாளர்களுடன் கதைப்பதற்கு எங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஆயினும் விமல் வீரவன்ச போன்றவர்கள் பல்வேறு கதைகளைச் சொல்கிறார்கள். ஜனாதிபதியும் அவரது பேச்சுக்கு தலை சாய்ப்பது தெரிகிறது. எங்களிடம் ஒன்றைச் சொல்லிவிட்டு பிறகு வேறொன்றைச் சொல்வார்களோ என்ற பயம் என்னை ஆட்கொள்கிறது. விமல் சொல்வதை ஜனாதிபதி செய்வார் என்று நான் நம்புகிறேன்.
அமைச்சர் பசில் ராஜபக்ஷ சேர்ந்து செயற்படுவதற்கு எங்களுக்கு அழைப்பு விடுத்தார். என்றாலும் விமல் வீரவன்ச போன்றவர்கள் வெவ்வேறு கதைகளைச் சொல்கிறார்கள். பெரும்பாலும் அவரின் பேச்சை ஜனாதிபதி ஏற்றுக் கொள்ளும் நிலையே உள்ளது.
சில நேரங்களில் சிங்கள இனவாதிகள் குறிப்பிடும் கருத்துக்களுக்கு ஆட்சியாளர்கள் தலைசாய்த்து தாம் முன்னர் கொண்டிருந்த கருத்திற்கு மாற்றம் செய்யும் நிலையும் தோன்றியுள்ளது. 'பண்டா - செல்வா ஒப்பந்தம், டட்லி - செல்வநாயகம் ஒப்பந்தம் என்பன இதற்குச் சில உதாரணங்களாகும்.
(கேஎப்)
வார இறுதி பத்திரிகை ஒன்றுக்கு கருத்துரைக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் குறிப்பிட் டுள்ளதாவது,
'தெற்கின் ஆட்சியாளர்களுடன் கதைப்பதற்கு எங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஆயினும் விமல் வீரவன்ச போன்றவர்கள் பல்வேறு கதைகளைச் சொல்கிறார்கள். ஜனாதிபதியும் அவரது பேச்சுக்கு தலை சாய்ப்பது தெரிகிறது. எங்களிடம் ஒன்றைச் சொல்லிவிட்டு பிறகு வேறொன்றைச் சொல்வார்களோ என்ற பயம் என்னை ஆட்கொள்கிறது. விமல் சொல்வதை ஜனாதிபதி செய்வார் என்று நான் நம்புகிறேன்.
அமைச்சர் பசில் ராஜபக்ஷ சேர்ந்து செயற்படுவதற்கு எங்களுக்கு அழைப்பு விடுத்தார். என்றாலும் விமல் வீரவன்ச போன்றவர்கள் வெவ்வேறு கதைகளைச் சொல்கிறார்கள். பெரும்பாலும் அவரின் பேச்சை ஜனாதிபதி ஏற்றுக் கொள்ளும் நிலையே உள்ளது.
சில நேரங்களில் சிங்கள இனவாதிகள் குறிப்பிடும் கருத்துக்களுக்கு ஆட்சியாளர்கள் தலைசாய்த்து தாம் முன்னர் கொண்டிருந்த கருத்திற்கு மாற்றம் செய்யும் நிலையும் தோன்றியுள்ளது. 'பண்டா - செல்வா ஒப்பந்தம், டட்லி - செல்வநாயகம் ஒப்பந்தம் என்பன இதற்குச் சில உதாரணங்களாகும்.
(கேஎப்)
பிரான்ஸின் லெமா நகரிலுள்ள வீடொன்றில் ஏற்பட்ட தீயினால் இலங்கையர் ஒருவர் உயிரி ழந்துள்ளார். மீரிகம பகுதியைச் சேர்ந்த 56 வயதான ஒருவரே விபத்தில் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் பிரான்ஸ் மேசன் தொழிலில் ஈடுபட்டிருந்த ஒருவர் என தெரியவிக்கப் படுகின்றது.
இவர் தங்கியிருந்த வீட்டின் சமயல் அறையில் தீ பரவியதாக பிரான்ஸ் தகவல் தெரிவிக்கின்றன. இந்த விபத்து தொடர்பில் பிரான்ஸ் பொலிஸார் விசார ணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இவர் தங்கியிருந்த வீட்டின் சமயல் அறையில் தீ பரவியதாக பிரான்ஸ் தகவல் தெரிவிக்கின்றன. இந்த விபத்து தொடர்பில் பிரான்ஸ் பொலிஸார் விசார ணைகளை ஆரம்பித்துள்ளனர்.
டெல்லியில் மெட்ரோ ரயில் முன் பாய்ந்து தற்கொலைக்கு முயற்சித்த பெண் சிறு காயம் கூட ஏற்படாமல் உயிர் பிழைத்த சம்பவம் ஆச்சிரியத்தை ஏற்படுத்தியுள்ளது. சுமார் 21 வயதுடைய இளம்பெண் ஒருவர் ஜூன் 9 ஆம் தேதி, மாலை 5 மணி அளவில் அந்த ரயில் நிலையத்திற்கு வந்துள்ளார்.
அருகில் இருக்கும் பகுதியில் வசிக்கும் அப்பெண் ஒரு மெட்ரோ ரயில் அந்த நிலையத்தை நெருங்கியப்போது அதன் முன் பாய்ந்தார். அந்த ரயில் சென்றப்பின், அப்பெண் சிறு காயம் கூட ஏற்படாமல் தப்பித்தது அந்த நிலைய கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது.
அருகில் இருக்கும் பகுதியில் வசிக்கும் அப்பெண் ஒரு மெட்ரோ ரயில் அந்த நிலையத்தை நெருங்கியப்போது அதன் முன் பாய்ந்தார். அந்த ரயில் சென்றப்பின், அப்பெண் சிறு காயம் கூட ஏற்படாமல் தப்பித்தது அந்த நிலைய கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது.
கொழும்பு, மோதரை எலிஹவுஸ் பிரதேசத்தில் புதிய வாய்க்கால் கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டுக் கொண்டி ருந்த பணியாளர்கள் நிலத்தில் புதையுண்டுள்ளனர். குறித்த இடத்தில் 4-5 பணியாளர்கள் சேவையில் இருந்துள்ளனர்.
மண்மேடு சரிந்து விழுந்தமையின் காரணமாக புதையுண்ட வர்களில் இருவர் மீட்கப்பட்டுள்ளதாகவும் காப்பாற்றப்பட்ட இருவரும் சிகிச்சைகளுக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக் கப்பட்டுள்ளதாக மோதரை பொலிஸார் தெரிவித்தனர்.
மண்மேடு சரிந்து விழுந்தமையின் காரணமாக புதையுண்ட வர்களில் இருவர் மீட்கப்பட்டுள்ளதாகவும் காப்பாற்றப்பட்ட இருவரும் சிகிச்சைகளுக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக் கப்பட்டுள்ளதாக மோதரை பொலிஸார் தெரிவித்தனர்.
நீர்கொழும்பு, சென்.மேரிஸ் கல்லூரியின் அதிபர் மெக்செல் பெர்ணான்டோ பாடசாலையின் மலசலக்கூடத்திலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவரது உடலில் வெட்டுக்காயங்கள் காணப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர். சடலம் தற்போது பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப் பட்டடுள்ளது. இவர், எதிர்வரும் நவம்பவர் மாதம் ஓய்வு பெற இருந்தமை குறிப்பிடத்தக்கது.
நீர்கொழும்பைச் சேர்ந்த 60வயதுடைய மெக்செல் பெர்ணான்டோ என்ற 3 பிள்ளை களின் தந்தையாவார்.
இவரது உடலில் வெட்டுக்காயங்கள் காணப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர். சடலம் தற்போது பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப் பட்டடுள்ளது. இவர், எதிர்வரும் நவம்பவர் மாதம் ஓய்வு பெற இருந்தமை குறிப்பிடத்தக்கது.
நீர்கொழும்பைச் சேர்ந்த 60வயதுடைய மெக்செல் பெர்ணான்டோ என்ற 3 பிள்ளை களின் தந்தையாவார்.
ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகள் உலக சிறுவர் தினமாகிய நாளை வெளியாகும் என கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். இந்த புதிய நடைமுறை இந்த வருடத்திலிருந்து அமுல்படுத்தப் படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதன் காரணமாக கடந்த ஓகஸ்ட் மாதம் நடைபெற்ற 2013ஆம் ஆண்டுக்கான ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகள் நாளை செவ்வாய்க்கிழமை வெளியாகும் என அமைச்சர் பந்துல குணவர்தன மேலும் தெரிவித்தார்.
இதேவேளை, ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகள் நாளை மறுதினம் புதன்கிழமை வெளியாகும் என பரீட்சைகள் ஆணையளர் புஷ்பகுமார முன்னர் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதன் காரணமாக கடந்த ஓகஸ்ட் மாதம் நடைபெற்ற 2013ஆம் ஆண்டுக்கான ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகள் நாளை செவ்வாய்க்கிழமை வெளியாகும் என அமைச்சர் பந்துல குணவர்தன மேலும் தெரிவித்தார்.
இதேவேளை, ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகள் நாளை மறுதினம் புதன்கிழமை வெளியாகும் என பரீட்சைகள் ஆணையளர் புஷ்பகுமார முன்னர் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஜெனீவா சென்றாவது காணி உரிமையைப் பெற்றுக்கொள் வோம் எனவும், இராணுவ ஆளுநர் முன்னிலையில் பதவி பிரமாணம் செய்யத் தயாரில்லை என விக்னேஸ்வரன் தெரிவித்துள்ள விடயங்கள் தொடர்பாக அவர்கள் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
விக்னேஸ்வரன், அரசு பெற்றுக் கொடுத்துள்ள ஜனநாயக த்தின் ஊடாக பிரிவினைவாதத்தை சந்தைப்படுத்தி, பிரிவினைவாத அமைப்புக் களின் நோக்கங்களை நிறைவேற்றுவதாகவும் இலங்கை சட்டத்தரணிகள் அமைப் பின் சட்டத்தரணி கபிலகமகே இவ்வாறு தெரிவித்தார்.
அரசமைப்பின் 157 ஆம் பிரிவின் உப பிரிவு 07 இன் பிரகாரம் முதலமைச்சர் நியமனம் பெற்ற ஒரு மாதத்துக்குள் பதவிப் பிரமாணம் செய்ய வேண்டும். ஜனாதிபதி பெயரிடும் ஆளுநர், பாராளுமன்ற உறுப்பினர் அல்லது ஜனாதிபதி முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்யலாம்.
சட்ட அறிஞரான விக்னேஸ்வரன் அரசமைப்பு, அதன் மூலம் கூறப்பட்டுள்ள ஒற்றையாட்சி, ஜனநாயகம் சகலவற்றையும் அறிந்தவர். அவர் இக்கூற்றின் மூலம் பொலிஸ் அதிகாரத்தைக் கேட்கவில்லை. காணி அதிகாரத்தைக் கேட்கவில்லை. அரசு ஜனநாயகத்தை உருவாக்க மேற்கொண்ட முயற்சியைத் தலைகுப்புறச் செய்வதும் பிரிவினைவாத தனி அலகு கோருவதற்கு வழிவகுப்பதும் அவரின் தேவையாகும்.
எமது உரிமைகளைப் பறித்துக் கொண்டதாக ஜெனீவாவுக்குச் சொல்வதே அவரின் எண்ணமாகும். தனிநாடு தான் அவரின் எண்ணம். வட மாகாண மக்கள் தமக்கு வழங்கிய 80 வீத அதிகாரத்தைப் பறிப்பதாக ஜெனீவாவில் அவர் கூறப்போகிறார். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்டது, நாட்டுப் பிரிவினை என்பதைத் தவிர வேறு எதுவும் இல்லை.
வடக்கு மக்களை நாம் நம்ப முடியுமானாலும் பயங்கரவாதத்தை நாம் அங்கீகரிக்க முடியாது. நாட்டின் அரசியல்வாதிகளின் தவறான செயல்களை விக்னேஸ்வரன் ஆயுதமாகப் பாவிக்கிறார். திம்பு பேச்சுவார்த்தை இதற்கு தக்க உதாரணமாகும். மக்கள் அரசின் நல்ல தன்மையை விக்னேஸ்வரனுக்கு ஆயுதமாகப் பாவிக்க ஒருபோதும் இடமளிக்கக் கூடாது என்றும் அவர் தெரிவித்தார்.
இவ்வாறான செயற்பாடுகள் மூலம் 30 வருட யுத்தத்தை முடித்து வடக்குக்கு ஜனநாயகத்தைப் பெற்றுக் கொடுத்த அரசை ஜெனீவாவுக்கு கொண்டுசென்று தனிநாட்டை உருவாக்கும் முயற்சியில் வட மாகாண முதலமைச்சர் ஈடுபட்டு உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது
விக்னேஸ்வரன், அரசு பெற்றுக் கொடுத்துள்ள ஜனநாயக த்தின் ஊடாக பிரிவினைவாதத்தை சந்தைப்படுத்தி, பிரிவினைவாத அமைப்புக் களின் நோக்கங்களை நிறைவேற்றுவதாகவும் இலங்கை சட்டத்தரணிகள் அமைப் பின் சட்டத்தரணி கபிலகமகே இவ்வாறு தெரிவித்தார்.
அரசமைப்பின் 157 ஆம் பிரிவின் உப பிரிவு 07 இன் பிரகாரம் முதலமைச்சர் நியமனம் பெற்ற ஒரு மாதத்துக்குள் பதவிப் பிரமாணம் செய்ய வேண்டும். ஜனாதிபதி பெயரிடும் ஆளுநர், பாராளுமன்ற உறுப்பினர் அல்லது ஜனாதிபதி முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்யலாம்.
சட்ட அறிஞரான விக்னேஸ்வரன் அரசமைப்பு, அதன் மூலம் கூறப்பட்டுள்ள ஒற்றையாட்சி, ஜனநாயகம் சகலவற்றையும் அறிந்தவர். அவர் இக்கூற்றின் மூலம் பொலிஸ் அதிகாரத்தைக் கேட்கவில்லை. காணி அதிகாரத்தைக் கேட்கவில்லை. அரசு ஜனநாயகத்தை உருவாக்க மேற்கொண்ட முயற்சியைத் தலைகுப்புறச் செய்வதும் பிரிவினைவாத தனி அலகு கோருவதற்கு வழிவகுப்பதும் அவரின் தேவையாகும்.
எமது உரிமைகளைப் பறித்துக் கொண்டதாக ஜெனீவாவுக்குச் சொல்வதே அவரின் எண்ணமாகும். தனிநாடு தான் அவரின் எண்ணம். வட மாகாண மக்கள் தமக்கு வழங்கிய 80 வீத அதிகாரத்தைப் பறிப்பதாக ஜெனீவாவில் அவர் கூறப்போகிறார். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்டது, நாட்டுப் பிரிவினை என்பதைத் தவிர வேறு எதுவும் இல்லை.
வடக்கு மக்களை நாம் நம்ப முடியுமானாலும் பயங்கரவாதத்தை நாம் அங்கீகரிக்க முடியாது. நாட்டின் அரசியல்வாதிகளின் தவறான செயல்களை விக்னேஸ்வரன் ஆயுதமாகப் பாவிக்கிறார். திம்பு பேச்சுவார்த்தை இதற்கு தக்க உதாரணமாகும். மக்கள் அரசின் நல்ல தன்மையை விக்னேஸ்வரனுக்கு ஆயுதமாகப் பாவிக்க ஒருபோதும் இடமளிக்கக் கூடாது என்றும் அவர் தெரிவித்தார்.
இவ்வாறான செயற்பாடுகள் மூலம் 30 வருட யுத்தத்தை முடித்து வடக்குக்கு ஜனநாயகத்தைப் பெற்றுக் கொடுத்த அரசை ஜெனீவாவுக்கு கொண்டுசென்று தனிநாட்டை உருவாக்கும் முயற்சியில் வட மாகாண முதலமைச்சர் ஈடுபட்டு உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது
வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் கொண்டயன்கேணி முருகன் கோவில் வீதியில் இறந்த நிலையில் கைக் குழந்தை ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது நேற்றுக் காலை 6.00 மணியளவில் நாய் சாப்பிட்டுக் கொண் டிருந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது.
தனது வீட்டுக்கு முன்னால் குழந்தை ஒன்றை நாய் சாப்பிட்டுக் கொண்டிருப்பதைக் கண்ட பெண்மணி ஒருவர், அயலவர்களின் உதவி யுடன் வாழைச்சேனை பொலிஸாருக்கு தெரிவித்ததையடுத்து அவ் விடத்திற்கு விரைந்த வாழைச்சேனை மாவட்ட நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் சடலத்தை மருத்துவ பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப் புமாறு உத்தரவிட்டுள்ளார்.
இதற்கிணங்க குழந்தையின் சடலம் மருத்துவ பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. குழந்தையின் தலை யும் மார்புப் பகுதிகளுமே உள்ள நிலையில் மீட்கப்பட்டுள்ள குழந்தையின் கால் மற்றும் கைப் பகுதிகள் விலங்குகளால் சேதமாக்கப்பட்டிருக்கலாம் என்று சந்தேகி க்கப்படுகிறது.
இக்குழந்தை பிறந்தவுடன் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கும் வாழைச்சேனை பொலிஸார் இச் சம்பவம் தொடர்பான விசாரணைகளை மேற் கொண்டு வருகின்றனர்.
தனது வீட்டுக்கு முன்னால் குழந்தை ஒன்றை நாய் சாப்பிட்டுக் கொண்டிருப்பதைக் கண்ட பெண்மணி ஒருவர், அயலவர்களின் உதவி யுடன் வாழைச்சேனை பொலிஸாருக்கு தெரிவித்ததையடுத்து அவ் விடத்திற்கு விரைந்த வாழைச்சேனை மாவட்ட நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் சடலத்தை மருத்துவ பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப் புமாறு உத்தரவிட்டுள்ளார்.
இதற்கிணங்க குழந்தையின் சடலம் மருத்துவ பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. குழந்தையின் தலை யும் மார்புப் பகுதிகளுமே உள்ள நிலையில் மீட்கப்பட்டுள்ள குழந்தையின் கால் மற்றும் கைப் பகுதிகள் விலங்குகளால் சேதமாக்கப்பட்டிருக்கலாம் என்று சந்தேகி க்கப்படுகிறது.
இக்குழந்தை பிறந்தவுடன் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கும் வாழைச்சேனை பொலிஸார் இச் சம்பவம் தொடர்பான விசாரணைகளை மேற் கொண்டு வருகின்றனர்.
கொழும்பு, புதுக்கடை மாவட்ட நீதிமன்ற நீதவானின் மகன் கடத்தப்பட்டு பின்னர் கடத்தப்பட்டவர்களால் வீதியில் விட்டுச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். தனியார் வகுப்பிற்கு செல்ல தயாராகவிருந்த மாணவனை மொரட்டுவ பிரதேசத்தில் வைத்து வேனில் வந்த சிலர் கடத்திச் சென்றுள்ளனர்.
பின்னர் சிறுவனை வாத்துவ பிரதேசத்தில் விட்டுச் சென்று ள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் புத்திக சிறிவர்தன தெரிவித்தார். 15 வயதான சிறுவனுக்கு கடத்தல்காரர்களினால் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் குறித்து மொரட்டுவை பொலிஸாருக்கு முறைப்பாடு கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் இவ்விடயம் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்படு வதாகவும் புத்திக சிறிவர்தன குறிப்பிட்டார்.
பின்னர் சிறுவனை வாத்துவ பிரதேசத்தில் விட்டுச் சென்று ள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் புத்திக சிறிவர்தன தெரிவித்தார். 15 வயதான சிறுவனுக்கு கடத்தல்காரர்களினால் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் குறித்து மொரட்டுவை பொலிஸாருக்கு முறைப்பாடு கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் இவ்விடயம் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்படு வதாகவும் புத்திக சிறிவர்தன குறிப்பிட்டார்.
அமெரிக்காவில் இருந்து ஐ.நா. சபையை வேறு நாட்டுக்கு மாற்ற வேண்டும் என்று பொலிவியா ஜனாதிபதி ஈவோ மொரேல்ஸ் ஐ.நா. சபையில் பேசினார். மேலும் பேச்சின் போது அமெரிக்காவின் ஏகாதிபத்திய அத்துமீறல்களுக்கு கடும் கண்டனம் தெரிவித்தார்.ஐக்கிய நாடுகள் சபை கடந்த 1945 -ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. அது முதல் ஐ.நா. சபை அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரில் செயல்பட்டு வருகிறது. ஐ.நா. சபையின் பொதுச் செயலாளராக பான் கி மூன் உள்ளார்.இப்போது ஐ.நா. சபையின் 68-வது ஆண்டு பொது சபைக்கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் உலக தலைவர்கள் கலந்து கொண்டு பேசி வருகிறார்கள்.
இதில் பொலிவியா நாட்டு ஜனாதிபதி ஈவோ மொரேல்ஸ் புதன்கிழமை கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது:-உலகில் தீவிரவாதிகளை அமெரிக்கா ஆதரித்து அவர்களுக்கு ஆயுத உதவியும், பண உதவியும் அளித்து வருகிறது. ஊழலையும் அமெரிக்கா ஊக்குவிக்கிறது. ஊழலுக்கு எதிரான போராட்டத்துக்கு அமெரிக்கா உதவவில்லை. மேலும் உலக நாடுகளை அமெரிக்கா மிரட்டியும், அகங்காரத்துடனும் நடந்து கொள்கிறது. மனித உரிமைகளுக்கு எதிராக நடந்து கொள்வது அமெரிக்காவின் வாடிக்கையாக உள்ளது. அமெரிக்காவின் இந்த அடாவடித்தனத்தை சகித்துக் கொள்ள முடியாது. அமெரிக்காவிற்கு வருவதற்கான விசாவிற்கு எந்த உத்தரவாதமும் கிடையாது.
அதே போல் அமெரிக்கா வான் எல்லையில் மற்ற நாட்டு விமானங்கள் பறப்பதற்கும் உத்தரவாதமும் கிடையாது. அமெரிக்காவின் உளவு மற்றும் பாதுகாப்பு குறைபாடு காரணத்தால் அமெரிக்காவில் இருப்பதை நான் பாதுகாப்பாக உணரவில்லை.முதலாளித்துவம் மற்றும் ஏகாதிபத்தியத்துக்கு எதிரான தலைவர்கள், அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ஐ.நா.வில் எப்படி பாதுகாப்பாக இருக்க முடியும். எனவே நியூயார்க் நகரில் உள்ள ஐ.நா. சபையை வேறு நாட்டுக்கு மாற்ற வேண்டும். இது பற்றி நாம் கண்டிப்பாக மிகவும் தீவிரமாக பரிசீலிக்க வேண்டும். பொலிவியா ஜனாதிபதி ஈவோ மொராலஸ் இந்த துணிகர பேச்சு ஐ.நா. சபையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதில் பொலிவியா நாட்டு ஜனாதிபதி ஈவோ மொரேல்ஸ் புதன்கிழமை கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது:-உலகில் தீவிரவாதிகளை அமெரிக்கா ஆதரித்து அவர்களுக்கு ஆயுத உதவியும், பண உதவியும் அளித்து வருகிறது. ஊழலையும் அமெரிக்கா ஊக்குவிக்கிறது. ஊழலுக்கு எதிரான போராட்டத்துக்கு அமெரிக்கா உதவவில்லை. மேலும் உலக நாடுகளை அமெரிக்கா மிரட்டியும், அகங்காரத்துடனும் நடந்து கொள்கிறது. மனித உரிமைகளுக்கு எதிராக நடந்து கொள்வது அமெரிக்காவின் வாடிக்கையாக உள்ளது. அமெரிக்காவின் இந்த அடாவடித்தனத்தை சகித்துக் கொள்ள முடியாது. அமெரிக்காவிற்கு வருவதற்கான விசாவிற்கு எந்த உத்தரவாதமும் கிடையாது.
அதே போல் அமெரிக்கா வான் எல்லையில் மற்ற நாட்டு விமானங்கள் பறப்பதற்கும் உத்தரவாதமும் கிடையாது. அமெரிக்காவின் உளவு மற்றும் பாதுகாப்பு குறைபாடு காரணத்தால் அமெரிக்காவில் இருப்பதை நான் பாதுகாப்பாக உணரவில்லை.முதலாளித்துவம் மற்றும் ஏகாதிபத்தியத்துக்கு எதிரான தலைவர்கள், அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ஐ.நா.வில் எப்படி பாதுகாப்பாக இருக்க முடியும். எனவே நியூயார்க் நகரில் உள்ள ஐ.நா. சபையை வேறு நாட்டுக்கு மாற்ற வேண்டும். இது பற்றி நாம் கண்டிப்பாக மிகவும் தீவிரமாக பரிசீலிக்க வேண்டும். பொலிவியா ஜனாதிபதி ஈவோ மொராலஸ் இந்த துணிகர பேச்சு ஐ.நா. சபையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
கல்முனை மாநகர சபையில் முகாமைத்துவ உதவியாளராக ஐந்து வருடங்களாக கடமையாற்றி கல்முனை வலயக் கல்வி அலுவலகத்துக்கு இடமாற்றலாகி சென்ற யு.முகம்மது இஸ்ஹாக் அவர்களுக்கு கல்முனை மாநகர சபையில் மாநகர முதவர் தலைமையில் நேற்று 28 பிரியாவிடை வைபவம் நடை பெற்றது .
நீண்ட கால உள்ளூராட்சி சேவை அனுபவத்தை கொண்ட இஸ்ஹாக் தனது அபிமானத்துக்கு உரியவர் என்றும் எனது விசுவாசி என்றும் ஒப்படைக்கின்ற பணிகளை உரிய நேரத்துக்குள் திருப்தியாக செய்து முடிக்கும் ஆற்றலை கொண்டவர் என்றும் எனது அரசியலுக்கு பக்கபலமாக இருந்து வருகின்ற சிறந்ததொரு ஊடகவியலாளர் என்றும் மாநகர முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப் தெரிவித்தார் . அவரது இடமாற்றத்தை இரத்து செய்ய கிழக்குமாகாண் சபையில் கடும் பிரயத்தனம் எடுத்தேன். எனினும் என்னுடன் அரசியல் காழ்புணர்ச்சி கொண்ட ஒருசிலரால் அது அரசியல் மயப்படுத்தப் பட்டு ஐந்து வருடதுக்குமேல் ஒரே சேவை நிலயத்தில் தொடர்ந்து சேவையாற்ற முடியாதென்ற நிலையில் எனக்கு விருப்பமில்லாமலே ஜனவரிக்கு செல்ல வேண்டியவரை ஏப்ரல் வரை வைத்திருந்து அனுப்பினேன் .என முதல்வர் தெரிவித்தார்
அவர் இடமாற்றலாகி சென்றாலும் என்னுடன் நெருங்கிய உறவு வைத்துள்ளார் எனக்கு ஒத்துழைப்பு வழங்கி வருகின்றார் . இவரது சேவையை பாராட்டி நடைபெற்ற நிகழ்வில் கல்முனை மாநகர ஆணையாளர் ஜே.லியாகத் அலி ,கணக்காளர் எல்.ரீ சாலிதீன் ,நிருவாக அதிகாரி ஏ.அலாவுதீன் உட்பட உத்தியோகத்தர் ஊழியகள் கலந்து கொண்டனர்.
நீண்ட கால உள்ளூராட்சி சேவை அனுபவத்தை கொண்ட இஸ்ஹாக் தனது அபிமானத்துக்கு உரியவர் என்றும் எனது விசுவாசி என்றும் ஒப்படைக்கின்ற பணிகளை உரிய நேரத்துக்குள் திருப்தியாக செய்து முடிக்கும் ஆற்றலை கொண்டவர் என்றும் எனது அரசியலுக்கு பக்கபலமாக இருந்து வருகின்ற சிறந்ததொரு ஊடகவியலாளர் என்றும் மாநகர முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப் தெரிவித்தார் . அவரது இடமாற்றத்தை இரத்து செய்ய கிழக்குமாகாண் சபையில் கடும் பிரயத்தனம் எடுத்தேன். எனினும் என்னுடன் அரசியல் காழ்புணர்ச்சி கொண்ட ஒருசிலரால் அது அரசியல் மயப்படுத்தப் பட்டு ஐந்து வருடதுக்குமேல் ஒரே சேவை நிலயத்தில் தொடர்ந்து சேவையாற்ற முடியாதென்ற நிலையில் எனக்கு விருப்பமில்லாமலே ஜனவரிக்கு செல்ல வேண்டியவரை ஏப்ரல் வரை வைத்திருந்து அனுப்பினேன் .என முதல்வர் தெரிவித்தார்
அவர் இடமாற்றலாகி சென்றாலும் என்னுடன் நெருங்கிய உறவு வைத்துள்ளார் எனக்கு ஒத்துழைப்பு வழங்கி வருகின்றார் . இவரது சேவையை பாராட்டி நடைபெற்ற நிகழ்வில் கல்முனை மாநகர ஆணையாளர் ஜே.லியாகத் அலி ,கணக்காளர் எல்.ரீ சாலிதீன் ,நிருவாக அதிகாரி ஏ.அலாவுதீன் உட்பட உத்தியோகத்தர் ஊழியகள் கலந்து கொண்டனர்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு வட மாகாண சபையில் கிடைத்துள்ள இரு போனஸ் ஆசனங்களில் ஒன்றை தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவரான ஆனந்தசங்கரி ஐயாவிற்கே வழங்க வேண்டும் எனவும் இவ்வாறு ஆனந்த சங்கரிக்கு போனஸ் ஆசனம் வழங்கப்படாதவிடத்து தீக் குளிப்பு போராட்டம் அல்லது சாகும் வரையிலான உண் ணாவிரதப் போராட்டம் நடத்தவும் தான் தயங்கப் போவதில்லை என தம்பிராசா (தம்பி) தெரிவித்துள்ளதாகத் தெரியவருகிறது.
கிளிநொச்சியில் கூட்டணியின் தலைவர் சங்கரி ஐயா திட்டமிட்ட முறையில் தோற்கடிப்பட்டுள்ளார். அவராலேயே கிளிநொச்சி தனி மாவட்டமாக உருவானதை மக்கள் மறந்துவிடாது வாக்களிக்கத் தயாரான வேளையில் சக கட்சியில் போட்டியிட்ட சிலர் அவர் மீது பொய்யான குற்றச்சாட்டுக்களைச் சுமத்தி அவர் வெற்றியைத் தடுத்துவிட்டதாகவும் தம்பிராசா தெரிவித்தார்.
இதேவேளை ஓரிரு தினங்களுக்கு முன்னர் கிளிசொச்சியில் தனது யாளுராக்கும்பலைக் கூட்டிய சிறிதரன் அமையப்போகும் மாகாண சபையில் சங்கரிக்கு தேசியப்பட்டியலில் இடம்வழங்கினாலோ , சித்தார்த்தனுக்கு அமைச்சுப்பதவி வழங்கினாலோ தான் பதவியை ராஜனாமா செய்து கொள்ளப்போவதாக தெரிவித்துள்ளார். எலும்புத்துண்டு சூப்பி அதன் ருசி கண்ட நாய் என்றும் எலும்புத்துண்டை வெறுக்காது என்பது யாவரும் அறிந்த உண்மை. இந்த நிலையில் இந்த நாய் வித்தியாசமான நாயா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
மேலும் வட மாகாணசபையின் அமைச்சு பதவியொன்றை மூவின மக்களும் செறிந்து வாழும் வவுனியா மாவட்டத்திற்கு வழங்கவேண்டுமென வட மாகாண சபை உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டுள்ள ஜி.ரி.லிங்கநாதன் தமிழரசுக் கட்சியின் தலைவர் சம்பந்தனுக்கு கடிதம் மூலம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கிளிநொச்சியில் கூட்டணியின் தலைவர் சங்கரி ஐயா திட்டமிட்ட முறையில் தோற்கடிப்பட்டுள்ளார். அவராலேயே கிளிநொச்சி தனி மாவட்டமாக உருவானதை மக்கள் மறந்துவிடாது வாக்களிக்கத் தயாரான வேளையில் சக கட்சியில் போட்டியிட்ட சிலர் அவர் மீது பொய்யான குற்றச்சாட்டுக்களைச் சுமத்தி அவர் வெற்றியைத் தடுத்துவிட்டதாகவும் தம்பிராசா தெரிவித்தார்.
இதேவேளை ஓரிரு தினங்களுக்கு முன்னர் கிளிசொச்சியில் தனது யாளுராக்கும்பலைக் கூட்டிய சிறிதரன் அமையப்போகும் மாகாண சபையில் சங்கரிக்கு தேசியப்பட்டியலில் இடம்வழங்கினாலோ , சித்தார்த்தனுக்கு அமைச்சுப்பதவி வழங்கினாலோ தான் பதவியை ராஜனாமா செய்து கொள்ளப்போவதாக தெரிவித்துள்ளார். எலும்புத்துண்டு சூப்பி அதன் ருசி கண்ட நாய் என்றும் எலும்புத்துண்டை வெறுக்காது என்பது யாவரும் அறிந்த உண்மை. இந்த நிலையில் இந்த நாய் வித்தியாசமான நாயா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
மேலும் வட மாகாணசபையின் அமைச்சு பதவியொன்றை மூவின மக்களும் செறிந்து வாழும் வவுனியா மாவட்டத்திற்கு வழங்கவேண்டுமென வட மாகாண சபை உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டுள்ள ஜி.ரி.லிங்கநாதன் தமிழரசுக் கட்சியின் தலைவர் சம்பந்தனுக்கு கடிதம் மூலம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டைத் துண்டாடாமல் ஒரே நாட்டில் அதிகாரத்தைப் பகிர்ந்து முன்னேற்றுவதே எனது குறிக்கோள் எனவும் எதிர் காலத்தில் மத்திய அரசின் ஒத்துழைப்புடன் நேச மனப்பா ன்மையுடன் ஒத்துழைக்க நான் தயாராக இருக்கிறேன் எனவும் அதற்கு சகல மக்களும் ஒன்றுபட்டுழைக்க வேண்டும் என்று வட மாகாணத்தில் போட்டியிட்டு முத ன்மை உறுப்பினராக அதிக விருப்புவாக்கு பெற்றுத் தெரி வாகியுள்ள உயர் நீதிமன்ற முன்னாள் நீதியரசர் சி. வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
மேலும் நாட்டைப் பிரிக்க நான் ஒத்துழைக்க மாட்டேன் எனவும் அதற்குத் துணைபோகவும் மாட்டேன் எனவும், உதவிகளும் செய்யமாட்டேன் எனவும், இன்று சில பௌத்த குருமார்கள் நாம் நாட்டை பிரித்தாளப் போகின்றோம். அதற்கான முஸ்தீபு வேலைகளில் ஈடுபட்டு வருவதாகவும் எம்மீது சேறு பூசிக் கொண் டிருக்கிறார்கள். ஆனால் அதில் எதுவித உண்மையும் இல்லை. இது உண்மைக்கு முற்றிலும் முரணானது என்று அவர் மேலும் தெரிவித்தார்.
உண்மையாகவே நாம் எமது வட மாகாண சபையின் மூலம் நாட்டை அபிவிருத்தி செய்யவே எதிர்பார்க்கின்றோம். இதற்காக நாம் மத்திய அரசின் உதவியையும் நாடி செயல்பட தயாராக இருக்கின்றோம். நாம் இச் சந்தர்ப்பத்தில் நாட்டை துண்டாட துணைபோகாமல் அதிகாரப் பகிர்வைச் செய்து நாட்டை முன்னேற்றிச் செல்லவே நாம் நினைத்து கொண்டிருக்கிறோம். அல்லாமல் நாட்டைத் துண்டாடி மீண்டும் பிரச்சினைகள் உருவாக்கிவிடுவது எமது நோக்கமுமல்ல. அது பற்றி நினைப்பது மில்லை.
இந்த நாட்டை துண்டாட நான் முதலமைச்சராக வரவில்லை. மாறாக ஒரே நாட்டில் அதாவது பிளவுபடாத நாட்டில் ஒரே அரசின் கீழ் ஆள்வதையே நான் விரும்புகிறேன் என்பதையும் தெளிவாகத் தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன். எனவே இனியாவது சந்தேகக் கண் ணோடு எம்மை நோக்காது சகோதர எண்ணம் கொண்டு நோக்குங்கள் என்று பொய் வதந்திகளைப் பரப்பி வருப வர்களிடம் நான் வினயமாகக் கேட்டுக் கொள்கிறேன்.
இப்போது வடக்கில் யுத்தம் இல்லை. அதனால் படையினர் அங்கு தங்கத் தேவையில்லை. இதனால் வீண் சந்தேகம் எழுகின்றபடியால் படையினர் அங்கி ருந்து வாபஸ் பெறப்பட வேண்டும். இதனால் நாம் தனி நாடு கோருகிறோம் என்ற அர்த்தம் அல்ல என்றும் விக்னேஸ்வரன் மேலும் தெரிவித்தார்.
ஒரே நாட்டினுள் இரண்டு விதமான மக்கள் கூட்டம் இருக்கும்போது மொழி முறையாகவோ மத முறையாகவோ பின்பற்றும் பாரம்பரியம் மற்றும் கலாசாரத்தை கொண்டவர்களாக இருந்தால் அவர்கள் தங்களை தாங்களே ஆளும் வகைக்கு நாட்டின் அதே ஒழுங்கு அமைப்பினுள் தொடர்ந்து இருப்பதற்கு வழி செய்வது தான் சமஷ்டி. அதற்கு பிரிவினையென்று நாமம் சூட்டி தென் பகுதியில் குளிர்காய்வது தான் விசித்திரமாக இருக்கின்றது. தேர்தல் முடிவுகள் வெளியான தினத்திலிருந்து வட பகுதி மக்கள் பெரும் எதிர்பார்ப்பை வைத்திருக்கின்றார்கள்.
போருக்குப் பின்னரான மக்களுடைய பிரச்சினைகளை தீர்ப்பதற்கு நாங்கள் முனைந்துள்ளோம். இப்பொழுதே பல வெளிநாடுகளிலிருந்து நிதி உதவி தருவதாக கூறுகின்றார்கள். இது சம்பந்தமாக நாம் அரசாங்கத்துடன் பேசி அவர்களின் அனுசரணையுடனேயே செய்ய வேண்டியிருக்கும். நிபுணத்துவம் வாய்ந்த வர்களுடன் இச் செயற் திட்டம் பற்றி கலந்துரையாடி மக்களுக்கு நன்மை பயப்பதாக இருந்தால் நிநியுதவிகளைப் பெற்று ஆவண செய்ய நடவடிக்கை எடுக்கவுள்ளோம்.
அரசாங்கம் இதற்கு ஒத்துழைப்பு வழங்கும் என்று நாம் எதிர்பார்க்கின்றோம். ஜனநாயக முறைப்படி தெரிவு செய்யப்பட்ட எங்களது சபை நல்ல விடயத்தை எடுத்துச் செல்ல வழிவகுக்குமாயின் அரசாங்கத்திற்கும் நன்மை பயக்கும். மக்களும் பலன் காண்பார்கள். வட மாகாண சபையுடன் இணைந்து செயற்பட அமைச்சர் பஷில் கூறியிருப்பது வரவேற்கத்தக்கது. ஆனால் இனத் துவேஷத்துடன் செயல்பட சிலர் இருக்கின்றார்கள். அதன் காரணத்தினால் நிலைப்பாட்டை மாற்றிக் கொள்வாரோ தெரியவில்லை. காலம் காலமாக வந்த அரசியல் பின்னணி இது என தெரிவித்துள்ளார்
மேலும் நாட்டைப் பிரிக்க நான் ஒத்துழைக்க மாட்டேன் எனவும் அதற்குத் துணைபோகவும் மாட்டேன் எனவும், உதவிகளும் செய்யமாட்டேன் எனவும், இன்று சில பௌத்த குருமார்கள் நாம் நாட்டை பிரித்தாளப் போகின்றோம். அதற்கான முஸ்தீபு வேலைகளில் ஈடுபட்டு வருவதாகவும் எம்மீது சேறு பூசிக் கொண் டிருக்கிறார்கள். ஆனால் அதில் எதுவித உண்மையும் இல்லை. இது உண்மைக்கு முற்றிலும் முரணானது என்று அவர் மேலும் தெரிவித்தார்.
உண்மையாகவே நாம் எமது வட மாகாண சபையின் மூலம் நாட்டை அபிவிருத்தி செய்யவே எதிர்பார்க்கின்றோம். இதற்காக நாம் மத்திய அரசின் உதவியையும் நாடி செயல்பட தயாராக இருக்கின்றோம். நாம் இச் சந்தர்ப்பத்தில் நாட்டை துண்டாட துணைபோகாமல் அதிகாரப் பகிர்வைச் செய்து நாட்டை முன்னேற்றிச் செல்லவே நாம் நினைத்து கொண்டிருக்கிறோம். அல்லாமல் நாட்டைத் துண்டாடி மீண்டும் பிரச்சினைகள் உருவாக்கிவிடுவது எமது நோக்கமுமல்ல. அது பற்றி நினைப்பது மில்லை.
இந்த நாட்டை துண்டாட நான் முதலமைச்சராக வரவில்லை. மாறாக ஒரே நாட்டில் அதாவது பிளவுபடாத நாட்டில் ஒரே அரசின் கீழ் ஆள்வதையே நான் விரும்புகிறேன் என்பதையும் தெளிவாகத் தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன். எனவே இனியாவது சந்தேகக் கண் ணோடு எம்மை நோக்காது சகோதர எண்ணம் கொண்டு நோக்குங்கள் என்று பொய் வதந்திகளைப் பரப்பி வருப வர்களிடம் நான் வினயமாகக் கேட்டுக் கொள்கிறேன்.
இப்போது வடக்கில் யுத்தம் இல்லை. அதனால் படையினர் அங்கு தங்கத் தேவையில்லை. இதனால் வீண் சந்தேகம் எழுகின்றபடியால் படையினர் அங்கி ருந்து வாபஸ் பெறப்பட வேண்டும். இதனால் நாம் தனி நாடு கோருகிறோம் என்ற அர்த்தம் அல்ல என்றும் விக்னேஸ்வரன் மேலும் தெரிவித்தார்.
ஒரே நாட்டினுள் இரண்டு விதமான மக்கள் கூட்டம் இருக்கும்போது மொழி முறையாகவோ மத முறையாகவோ பின்பற்றும் பாரம்பரியம் மற்றும் கலாசாரத்தை கொண்டவர்களாக இருந்தால் அவர்கள் தங்களை தாங்களே ஆளும் வகைக்கு நாட்டின் அதே ஒழுங்கு அமைப்பினுள் தொடர்ந்து இருப்பதற்கு வழி செய்வது தான் சமஷ்டி. அதற்கு பிரிவினையென்று நாமம் சூட்டி தென் பகுதியில் குளிர்காய்வது தான் விசித்திரமாக இருக்கின்றது. தேர்தல் முடிவுகள் வெளியான தினத்திலிருந்து வட பகுதி மக்கள் பெரும் எதிர்பார்ப்பை வைத்திருக்கின்றார்கள்.
போருக்குப் பின்னரான மக்களுடைய பிரச்சினைகளை தீர்ப்பதற்கு நாங்கள் முனைந்துள்ளோம். இப்பொழுதே பல வெளிநாடுகளிலிருந்து நிதி உதவி தருவதாக கூறுகின்றார்கள். இது சம்பந்தமாக நாம் அரசாங்கத்துடன் பேசி அவர்களின் அனுசரணையுடனேயே செய்ய வேண்டியிருக்கும். நிபுணத்துவம் வாய்ந்த வர்களுடன் இச் செயற் திட்டம் பற்றி கலந்துரையாடி மக்களுக்கு நன்மை பயப்பதாக இருந்தால் நிநியுதவிகளைப் பெற்று ஆவண செய்ய நடவடிக்கை எடுக்கவுள்ளோம்.
அரசாங்கம் இதற்கு ஒத்துழைப்பு வழங்கும் என்று நாம் எதிர்பார்க்கின்றோம். ஜனநாயக முறைப்படி தெரிவு செய்யப்பட்ட எங்களது சபை நல்ல விடயத்தை எடுத்துச் செல்ல வழிவகுக்குமாயின் அரசாங்கத்திற்கும் நன்மை பயக்கும். மக்களும் பலன் காண்பார்கள். வட மாகாண சபையுடன் இணைந்து செயற்பட அமைச்சர் பஷில் கூறியிருப்பது வரவேற்கத்தக்கது. ஆனால் இனத் துவேஷத்துடன் செயல்பட சிலர் இருக்கின்றார்கள். அதன் காரணத்தினால் நிலைப்பாட்டை மாற்றிக் கொள்வாரோ தெரியவில்லை. காலம் காலமாக வந்த அரசியல் பின்னணி இது என தெரிவித்துள்ளார்
சட்டத்தை மீறும் வகையில் செயற்பட்டால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிட்டு வெற்றியீட்டிய விக்னேஸ் வரனை கைது செய்ய வேண்டுமென ஜாத்திக ஹெல உறுமய கட்சியின் பொதுச் செயலாளர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். நீதிமன்ற உத்தரவுகளுக்கு புறம்பான வகையில் சர்வதேச தலையீட்டை நாடினால் விக்னேஸ் வரனை கைது செய்ய வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.
உள்விவகாரங்களில் சர்வதேச தலையீடுகளை கோருவது ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். நாட்டில் முரண்பாடுகளை தூண்டும் வகையில் விக்னேஸ்வரன் செயற்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.
இந்தியா மற்றும் ஏனைய உலக நாடுகளை இலங்கைக்கு எதிராக திசை திருப்பும் முயற்சியில் விக்னேஸ்வரன் ஈடுபட்டுள்ளதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார். இவ்வாறான செயற்பாடுகளுக்கு எதிராக சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் தரப்பினர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென சம்பிக்க வலியுறுத்தியுள்ளார்.
(ஜீரீஎம்)
உள்விவகாரங்களில் சர்வதேச தலையீடுகளை கோருவது ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். நாட்டில் முரண்பாடுகளை தூண்டும் வகையில் விக்னேஸ்வரன் செயற்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.
இந்தியா மற்றும் ஏனைய உலக நாடுகளை இலங்கைக்கு எதிராக திசை திருப்பும் முயற்சியில் விக்னேஸ்வரன் ஈடுபட்டுள்ளதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார். இவ்வாறான செயற்பாடுகளுக்கு எதிராக சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் தரப்பினர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென சம்பிக்க வலியுறுத்தியுள்ளார்.
(ஜீரீஎம்)
அரசாங்கத்திற்குச் சொந்தமான காணிகளின் உரிமையை மத்திய அரசாங்கம் முழுமையாக தன்வசம் வைத்திரு க்காது, மாகாண சபைகளுக்கும் அதிகாரங்களைச் சமமாகப் பகிர்ந்தளிக்கக் கூடியதொரு முறையை நடைமுறைப் படுத்த வேண்டும் என அமைச்சர் வாசுதேவ நாணயக்கார குறிப்பிடுகிறார்.
அதற்காக தேசிய காணி ஆணைக்குழுவொன்றை நியமிப் பதற்கான பிரேரணையொன்றை தான் அரசாங்கத்திடம் முன்வைக்கத் தயாராக இருப்பதாகக் குறிப்பிடும் அவர், அந்தப் பிரேரணையை அடுத்த பாராளுமன்றத் தொடரில் தேர்வுக் குழுவினரின் முன்னிலையில் சமர்ப்பிக்கவுள்ளதாகவும் குறிப்பிடுகிறார்.
அரசாங்கத்திற்குச் சொந்தமான காணிகளின் உரிமை மத்திய அரசுக்கே சொந்தமானது என நேற்று முன்தினம் உயர் நீதிமன்றத்தினால் வழங்கப்பட்டுள்ள தீர்வு அதற்குப் பாதகமாக அமையாது எனவும், நீதிமன்றத்திடம் எத்தனை தீர்வுகள் இருந்தபோதும், அதற்கெல்லாம் மேலாக பாராளுமன்றத்திற்கே உயர் அதிகாரம் இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
(கேஎப்)
அதற்காக தேசிய காணி ஆணைக்குழுவொன்றை நியமிப் பதற்கான பிரேரணையொன்றை தான் அரசாங்கத்திடம் முன்வைக்கத் தயாராக இருப்பதாகக் குறிப்பிடும் அவர், அந்தப் பிரேரணையை அடுத்த பாராளுமன்றத் தொடரில் தேர்வுக் குழுவினரின் முன்னிலையில் சமர்ப்பிக்கவுள்ளதாகவும் குறிப்பிடுகிறார்.
அரசாங்கத்திற்குச் சொந்தமான காணிகளின் உரிமை மத்திய அரசுக்கே சொந்தமானது என நேற்று முன்தினம் உயர் நீதிமன்றத்தினால் வழங்கப்பட்டுள்ள தீர்வு அதற்குப் பாதகமாக அமையாது எனவும், நீதிமன்றத்திடம் எத்தனை தீர்வுகள் இருந்தபோதும், அதற்கெல்லாம் மேலாக பாராளுமன்றத்திற்கே உயர் அதிகாரம் இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
(கேஎப்)
13 ஆவது திருத்தச் சட்டத்தின் கீழ் கிடைக்கப்பெற்றுள்ள காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை மாகாண சபைகளுக்கு வழங்குவதானது மிக மோசமான ஒரு விடயமாகும் எனவும், அதற்கு தனது பலத்த எதிர்ப்பைத் தெரிவிப்பதாகவும் வட மாகாண சபைத் தேர்தலில் அதிகூடிய விருப்பு வாக்குகளைப் பெற்றுள்ள தயாசிரி ஜயசேக்கர குறிப்பிடுகிறார்.
அவருக்கு வடமேல் மாகாண சபையின் முதலமைச்சர் பதவி கிடைக்கப்பெற்றால் இவ்வதிகாரம் தொடர்பில் தனது நிலைப்பாடு என வினவியபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
(கேஎப்)
அவருக்கு வடமேல் மாகாண சபையின் முதலமைச்சர் பதவி கிடைக்கப்பெற்றால் இவ்வதிகாரம் தொடர்பில் தனது நிலைப்பாடு என வினவியபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
(கேஎப்)
தனது ஒரே குறிக்கோள் தெற்கின் முதலமைச்சராக வருவது அல்ல... மாறாக, ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட முன்வருவதே என ஐக்கிய தேசியக் கட்சியின் ஹம்பாந்தோட்டை பாராளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாச குறிப்பிடுகிறார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவத்திற்கும், ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி வேட்பாளாராக நிற்பதற்கு மே தான் தயாராக இருப்பதாக அவர் தெளிவுறுத்துகிறார்.
பொதுமக்கள் தன்னை ஜனாதிபதி வேட்பாளராகக் காண்பதற்கே ஆசை வைத்திருக்கின்றார்கள் எனக் குறிப்பிடும் சஜித் பிரேமதாச, தான் நாடெங்கிலும் பயணிக்கும் போது, பொதுமக்கள் தன்னிடம் அதனையே எதிர்பார்க்கின்றார்கள் என்பதையும் சுட்டிக் காட்டினார்.
(கேஎப்)
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவத்திற்கும், ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி வேட்பாளாராக நிற்பதற்கு மே தான் தயாராக இருப்பதாக அவர் தெளிவுறுத்துகிறார்.
பொதுமக்கள் தன்னை ஜனாதிபதி வேட்பாளராகக் காண்பதற்கே ஆசை வைத்திருக்கின்றார்கள் எனக் குறிப்பிடும் சஜித் பிரேமதாச, தான் நாடெங்கிலும் பயணிக்கும் போது, பொதுமக்கள் தன்னிடம் அதனையே எதிர்பார்க்கின்றார்கள் என்பதையும் சுட்டிக் காட்டினார்.
(கேஎப்)
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணை யாளர் நவநீதம்பிள்ளை இலங்கைக்கு வருவதற்கு முன்பே, தன்னுடைய அறிக்கையைத் தயார் செய்துள்ளார் என்பது இலங்கை வாழ் மக்களின் கருத்து என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ குறிப்பிடுகிறார்.
அல்ஜஸீரா தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் ஜனாதிபதி குறிப்பிடும்போது, தன்னைச் சந்திக்கும் போது அவர் இலங்கைக்கெதிராக எந்தக் குற்றச்சாட்டுக்களையும் முன்வைக்கவில்லை எனக் குறிப்பிடுகிறார்.
அவரது வருகையைத் தடைசெய்யாது சுதந்திரமாக தகவல் பெற்றுக் கொள்வதற்கு இடமளித்ததாகவும், இலங்கையை அடுத்த நாடுகளுடனேயே ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும் எனவும், இலங்கைக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் இலங்கைக்கெதிராக முன்னெடுக்கப்படும் ஒரு திட்டம் மட்டுமே எனவும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெளிவுறுத்தியுள்ளார்.
வடக்கில் சுதந்திரமானதும் நியாயமானதுமான தேர்தல் ஒன்றை அரசாங்கம் நடாத்தியது என்றும், அத்தேர்தலில் அரசாங்கம் தோல்வியடையும் என்பதைத் தான் அறிந்திருந்த்தாகவும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டிருப்பதுடன், சென்ற நான்கு ஆண்டுகளில் பாராளுமன்றத் தேர்தல் உட்பட 19 தேர்தல்களை நடாத்தியிருப்பதால் நவநீதம்பிள்ளை இலங்கை ஏகாதிபத்தியத்தை நோக்கிப் பயணம் செய்கின்றது என்று குறிப்பிட்டது வெறும் பொருளற்ற வெறும் பிதற்றலே எனவும் அங்கு குறிப்பிட்டுள்ளார்.
(கலைமகன் பைரூஸ்)
அல்ஜஸீரா தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் ஜனாதிபதி குறிப்பிடும்போது, தன்னைச் சந்திக்கும் போது அவர் இலங்கைக்கெதிராக எந்தக் குற்றச்சாட்டுக்களையும் முன்வைக்கவில்லை எனக் குறிப்பிடுகிறார்.
அவரது வருகையைத் தடைசெய்யாது சுதந்திரமாக தகவல் பெற்றுக் கொள்வதற்கு இடமளித்ததாகவும், இலங்கையை அடுத்த நாடுகளுடனேயே ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும் எனவும், இலங்கைக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் இலங்கைக்கெதிராக முன்னெடுக்கப்படும் ஒரு திட்டம் மட்டுமே எனவும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெளிவுறுத்தியுள்ளார்.
வடக்கில் சுதந்திரமானதும் நியாயமானதுமான தேர்தல் ஒன்றை அரசாங்கம் நடாத்தியது என்றும், அத்தேர்தலில் அரசாங்கம் தோல்வியடையும் என்பதைத் தான் அறிந்திருந்த்தாகவும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டிருப்பதுடன், சென்ற நான்கு ஆண்டுகளில் பாராளுமன்றத் தேர்தல் உட்பட 19 தேர்தல்களை நடாத்தியிருப்பதால் நவநீதம்பிள்ளை இலங்கை ஏகாதிபத்தியத்தை நோக்கிப் பயணம் செய்கின்றது என்று குறிப்பிட்டது வெறும் பொருளற்ற வெறும் பிதற்றலே எனவும் அங்கு குறிப்பிட்டுள்ளார்.
(கலைமகன் பைரூஸ்)
கொழும்பு நகரம் மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் இயங்கும் போதைப் பொருள் விற்ப னையாளர்கள் மற்றும் சமூக விரோத குழுக்களு க்கு பெருந்தொகையான பொலிஸ் அலுவலர் களும் பாதுகாப்பு படையைச் சேர்ந்தவர்களும் உதவி செய்து வருவது தொடர்பான நம்பந் தகுந்த தகவல்கள் இராணுவப் புலனாய்வு அதிகாரிகளுக்கு கிடைத்துள்ளது. அத்தகைய அலுவலர்கள், குற்ற வாளிகள் கப்பம் பெறுவதற்கும் பயங்கரவாத செயல்களில் ஈடுபடுவதற்கு ஆதரவு அளித்து வருவதாகவும் காணப்படுகின்றது.
கடந்த சில காலமாக அத்தகைய செயற்பாடுகள் இடம் பெற்று வந்தாலும், இவற்றில் சம்பந்தப்பட்ட சிரேஷ்ட அதிகாரிகளின் செல்வாக்கு காரணமாக அவர் களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியாதுள்ளதாக அறியப்படுகின்றது.
பெரும்பாலான அத்தகைய பொலிஸ் அலுவலர்கள் தற்போது ஓய்வுபெற்று விட்டனர்.எனினும் புலன் விசாரணைகளைத் தடுப்பதற்கு தமது செல்வாக்கைப் பயன்படுத்தி வருவதாகவும் இராணுவ புலனாய்வுப் பிரிவு கண்டு பிடித்துள்ளது. நீர்கொழும்பில இருந்த அத்தகைய ஓய்வு பெற்ற சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி பொலிஸ் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை அனுபவித்து வருவதாக அவர்கள் கூறினர்.
(Ceylon Today Online)
கடந்த சில காலமாக அத்தகைய செயற்பாடுகள் இடம் பெற்று வந்தாலும், இவற்றில் சம்பந்தப்பட்ட சிரேஷ்ட அதிகாரிகளின் செல்வாக்கு காரணமாக அவர் களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியாதுள்ளதாக அறியப்படுகின்றது.
பெரும்பாலான அத்தகைய பொலிஸ் அலுவலர்கள் தற்போது ஓய்வுபெற்று விட்டனர்.எனினும் புலன் விசாரணைகளைத் தடுப்பதற்கு தமது செல்வாக்கைப் பயன்படுத்தி வருவதாகவும் இராணுவ புலனாய்வுப் பிரிவு கண்டு பிடித்துள்ளது. நீர்கொழும்பில இருந்த அத்தகைய ஓய்வு பெற்ற சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி பொலிஸ் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை அனுபவித்து வருவதாக அவர்கள் கூறினர்.
(Ceylon Today Online)
வவுனியா விவசாய திணைக்களத்தினால் பரீட்சார்த்த முறையில் மஞ்சள் பயிர் செய்கை மேற்கொள்ளப்பட்டு வெற்றியளித்ததை தொடர்ந்து மஞ்சள் பயிர் செய்கை மேற்கொள்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படு வதாக வவுனியா விவசாய திணைக்களத்தின் பிரதி பணிப்பாளர் தெரிவித்தார்.
அவர் மேலும் இப்பயிர் செய்கை தொடர்பாக ஏற்றுமதி அபிவிருத்தி அதிகார சபை அதிகாரிகள், விவசாய போதனாசிரியர்கள் உட்பட 25 விவசாயிகள் இப்பயிற்சியை நிறைவு செய்துள்ளனர்.
இப்பயிர் செய்கை தொடர்பாக பயிற்சியை மேற்கொண்ட பம்பை மடு, மாந்தை, பாலமோட்டை, நெடுங்கேணி பிரதேச விவசாயிகள் தமது சொந்த இடங்களில் மஞ்சள் பயிர் செய்கையை மேற்கொள்ளவுள்ளதாகவும் இப்பயிர் செய்கைக்கு ஏற்றுமதி அதிகாரசபையின் உதவி நாடப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார்.
அவர் மேலும் இப்பயிர் செய்கை தொடர்பாக ஏற்றுமதி அபிவிருத்தி அதிகார சபை அதிகாரிகள், விவசாய போதனாசிரியர்கள் உட்பட 25 விவசாயிகள் இப்பயிற்சியை நிறைவு செய்துள்ளனர்.
இப்பயிர் செய்கை தொடர்பாக பயிற்சியை மேற்கொண்ட பம்பை மடு, மாந்தை, பாலமோட்டை, நெடுங்கேணி பிரதேச விவசாயிகள் தமது சொந்த இடங்களில் மஞ்சள் பயிர் செய்கையை மேற்கொள்ளவுள்ளதாகவும் இப்பயிர் செய்கைக்கு ஏற்றுமதி அதிகாரசபையின் உதவி நாடப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார்.
வவுனியா தோணிக்கல் பகுதி வீடொன்றில் நேற்று (28.09.2013) மதியம் நடைபெற்ற வெடிப்புச்சம்பவத்தில் சிறுவனொருவன் காயமடைந்து வவுனியா பொது வைத்திசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மிருகங்களை வேட்டையாடுவதற்காக தயாரிக்கப்படும் உள்ளுர் வெடியொன்றை வீட்டில் இருந்து (வெங்காய வெடி) சிறுவன் விளையாடியபோது இவ் வெடி விபத்து ஏற்பட்டதனால் திலக்சன் எனும் 3 வயது சிறுவன் கை விரல்கள் துண்டிக்கப்பட்ட நிலையிலும் தலையில் காயமடைந்த நிலையிலும் வவனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை வவனியா பொலிஸார் மேற்கொண்டனர்!
மிருகங்களை வேட்டையாடுவதற்காக தயாரிக்கப்படும் உள்ளுர் வெடியொன்றை வீட்டில் இருந்து (வெங்காய வெடி) சிறுவன் விளையாடியபோது இவ் வெடி விபத்து ஏற்பட்டதனால் திலக்சன் எனும் 3 வயது சிறுவன் கை விரல்கள் துண்டிக்கப்பட்ட நிலையிலும் தலையில் காயமடைந்த நிலையிலும் வவனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை வவனியா பொலிஸார் மேற்கொண்டனர்!
உலகளவில் பிரபலமடைந்த சமூக வலைத்தளங்களில் ஒன்றான டுவிட்டர் இயற்கை சீற்றம் போன்ற சூழ்நிலைகளில் எச்சரிக்கை தருவதற்காக Twitter Alert என்ற புதுவித சேவையை தொடங்கியுள்ளது.
இதுகுறித்து தலைமை அதிகாரி ஒருவர், கடந்தாண்டு லைப்லைன் என்ற பெயரில் ஜப்பானில் எமர்ஜென்சி அக்கவுன்ட்ஸ் மூலம் அவசரகால தகவல்களை பரிமாறிக்கொள்ள வழி செய்தோம் இதே பாணியில் இப்போது டுவிட்டர் அலர்ட் என்ற பெயரில் உலக முழுவதும் பயனளிக்கும் வகையில் ஏற்படுத்தியுள்ளோம்.
சட்டம் ஒழுங்கு பராமரிக்கும் பொலிஸ், பொதுமக்கள் பாதுகாப்பு ஏஜென்சிகள், அவசரகால சேவை அமைப்புகள், செஞ்சிலுவை போன்ற அமைப்புகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் போன்றவை இதை பயன்படுத்தி பொதுமக்களுக்கு, அவ்வப்போது தேவையான எச்சரிக்கை தகவல்களை தரும் என்று நம்புவதுடன் டுவிட்டர் அக்கவுன்ட் வைத்துள்ளவர்களுக்கு போனிலும் தகவல்களை சொல்ல தனி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
டிவி, ரேடியோ போன்ற தகவல்தொடர்பு சாதனங்கள், மின்சார துண்டிப்பு போன்றவை ஏற்படும் போது டுவிட்டர் அலர்ட் சேவை பயன்படும் என்று தெரிவித்துள்ள அதே வேளை இந்த சேவை ஏற்கனவே அமெரிக்கா உட்பட சில நாடுகளில் இயற்கை சீற்றம் போன்ற சூழ்நிலைகளில் எச்சரிக்கை மெசேஜ் தரும் சேவையை டுவிட்டர் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து தலைமை அதிகாரி ஒருவர், கடந்தாண்டு லைப்லைன் என்ற பெயரில் ஜப்பானில் எமர்ஜென்சி அக்கவுன்ட்ஸ் மூலம் அவசரகால தகவல்களை பரிமாறிக்கொள்ள வழி செய்தோம் இதே பாணியில் இப்போது டுவிட்டர் அலர்ட் என்ற பெயரில் உலக முழுவதும் பயனளிக்கும் வகையில் ஏற்படுத்தியுள்ளோம்.
சட்டம் ஒழுங்கு பராமரிக்கும் பொலிஸ், பொதுமக்கள் பாதுகாப்பு ஏஜென்சிகள், அவசரகால சேவை அமைப்புகள், செஞ்சிலுவை போன்ற அமைப்புகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் போன்றவை இதை பயன்படுத்தி பொதுமக்களுக்கு, அவ்வப்போது தேவையான எச்சரிக்கை தகவல்களை தரும் என்று நம்புவதுடன் டுவிட்டர் அக்கவுன்ட் வைத்துள்ளவர்களுக்கு போனிலும் தகவல்களை சொல்ல தனி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
டிவி, ரேடியோ போன்ற தகவல்தொடர்பு சாதனங்கள், மின்சார துண்டிப்பு போன்றவை ஏற்படும் போது டுவிட்டர் அலர்ட் சேவை பயன்படும் என்று தெரிவித்துள்ள அதே வேளை இந்த சேவை ஏற்கனவே அமெரிக்கா உட்பட சில நாடுகளில் இயற்கை சீற்றம் போன்ற சூழ்நிலைகளில் எச்சரிக்கை மெசேஜ் தரும் சேவையை டுவிட்டர் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.
உடல் அழகைக் கெடுப்பதில் முக்கிய பங்கினை வகிக்கும் தழும்புகள் விபத்து அல்லது அலர்ஜியின் காரணமாக ஏற்படும் தழும்புகளை நீக்குவது மிகவும் கடினமான ஒரு செயல். நிறைய பெண்கள் வேலை செய்யும் போது இந்த மாதிரியான தழும்புகளைப் பெறுவார்கள்.
அதிலும் சமைக்கும் போது சூடான எண்ணெய்படுவது, துணியை இஸ்திரி போடும் போது சூடு வைத்துக் கொள்வது போன்றவற்றால் தான் தழும்புகளைப் பெறுகிறார்கள் இத்தகைய தழும்புகளை நன்கு தெளிவாக தெரியும் இதனை போக்க எத்தனை க்ரீம்கள் கடைகளில் விற்றாலும் அதைப் பயன்படுத்தினால் எந்த ஒரு பலனும் இருக்காது.
ஆனால் அத்தகைய தழும்புகளைப் போக்க சில இயற்கை முறைகள் உள்ளன அவற்றைப் பயன்படுத்தினால், தெளிவாக தெரியும் தழும்புகளை சற்று மங்க வைப்பதோடு, மறையவும் வைக்கலாம் அதற்கான சில வழிமுறைகளை காண்போம்.
* சிட்ரஸ் பழங்கள் தீக்காயங்களை நீக்குவதற்கு ஒரு சிறந்த பொருள் அதிலும் எலுமிச்சை சாறு மிகவும் சூப்பரானது.
அதற்கு எலுமிச்சை சாற்றை தினமும் தீக்காயம் ஏற்பட்ட இடத்தில் தடவி 2 நிமிடம் மசாஜ் செய்யவேண்டும். முக்கியமாக எலுமிச்சை சாற்றை தீக்காயம் நன்கு காய்ந்தப் பின்னர் தடவ வேண்டும்.
* தீக்காயம் ஏற்பட்ட இடத்தில் உள்ள தழும்புகளை நீக்க பாதாம் அல்லது ஆலிவ் ஆயிலை தடவி மசாஜ் செய்யவேண்டும் அதிலும் ஒரு நாளைக்கு இரு முறை தடவி வந்தால் நன்கு பளிச்சென்று தெரியும் தழும்புகள் மங்கிவிடும்.
* கற்றாழையில் உள்ள ஜெல்லானது மிகவும் சிறந்த ஒரு பொருள் அந்த ஜெல்லை தழும்புகள் உள்ள இடத்தில் தொடர்ந்து தடவி வந்தால் தீக்காயம் ஏற்பட்ட இடத்தில் உள்ள தழும்பானது மறைய ஆரம்பிப்பது மட்டுமின்றி, சருமமும் மென்மையாகும்.
* பாலில் உள்ள சத்துக்களை சொல்லித் தான் தெரிய வேண்டுமென்பதில்லை ஏனெனில் அந்த அளவு அதில் நன்மையானது அதிகம் உள்ளது எனவே தினமும் குளிக்கும் முன்பு, பாலை தழும்புகள் உள்ள இடத்தில் தடவி மசாஜ் செய்து 10 நிமிடம் ஊற வைத்து குளிக்க வேண்டும் வேண்டுமெனில் அதில் சிறிது எலுமிச்சை சாற்றை விட்டும் செய்யலாம்.
* ஆலிவ் ஆயில் பல நன்மைகளை உள்ளடக்கியது அத்தகைய ஆலிவ் ஆயில் தழும்புகளை நீக்கவும் பயன்படுகிறது எனவே இந்த ஆயிலை தீக்காயம் ஏற்பட்ட இடத்தில், தினமும் காலையும், மாலையும் தடவி மசாஜ் செய்து வந்தால, ஆலிவ் ஆயிலில் உள்ள பொருளானது தழும்புகளை மறையவைக்கும்.
* தக்காளியில் அதிகமான விட்டமின்கள் இருப்பதால் அவை சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கி தழும்புகளை மறைய வைக்கும் அதற்கு தக்காளி துண்டுகளை வெட்டியோ அல்லது அதன் சாற்றையோ பாதிக்கப்பட்ட இடத்தில் தடவி தினமும் மசாஜ் செய்து வந்தால் தழும்புகள் போய்விடும்.
* டீ வகைகளில் ஒன்றான சீமைச்சாமந்தி ஃப்ளேவரில் விற்கப்படும் டீயை போட்டப் பின்பு அதன் இலைகளை தழும்பு உள்ள இடத்தில் வைத்து மசாஜ் செய்து பின்னர் குளிர்ந்த நீரில் கழுவி வந்தால் தழும்புகள் மறைந்துவிடும்.
அதிலும் சமைக்கும் போது சூடான எண்ணெய்படுவது, துணியை இஸ்திரி போடும் போது சூடு வைத்துக் கொள்வது போன்றவற்றால் தான் தழும்புகளைப் பெறுகிறார்கள் இத்தகைய தழும்புகளை நன்கு தெளிவாக தெரியும் இதனை போக்க எத்தனை க்ரீம்கள் கடைகளில் விற்றாலும் அதைப் பயன்படுத்தினால் எந்த ஒரு பலனும் இருக்காது.
ஆனால் அத்தகைய தழும்புகளைப் போக்க சில இயற்கை முறைகள் உள்ளன அவற்றைப் பயன்படுத்தினால், தெளிவாக தெரியும் தழும்புகளை சற்று மங்க வைப்பதோடு, மறையவும் வைக்கலாம் அதற்கான சில வழிமுறைகளை காண்போம்.
* சிட்ரஸ் பழங்கள் தீக்காயங்களை நீக்குவதற்கு ஒரு சிறந்த பொருள் அதிலும் எலுமிச்சை சாறு மிகவும் சூப்பரானது.
அதற்கு எலுமிச்சை சாற்றை தினமும் தீக்காயம் ஏற்பட்ட இடத்தில் தடவி 2 நிமிடம் மசாஜ் செய்யவேண்டும். முக்கியமாக எலுமிச்சை சாற்றை தீக்காயம் நன்கு காய்ந்தப் பின்னர் தடவ வேண்டும்.
* தீக்காயம் ஏற்பட்ட இடத்தில் உள்ள தழும்புகளை நீக்க பாதாம் அல்லது ஆலிவ் ஆயிலை தடவி மசாஜ் செய்யவேண்டும் அதிலும் ஒரு நாளைக்கு இரு முறை தடவி வந்தால் நன்கு பளிச்சென்று தெரியும் தழும்புகள் மங்கிவிடும்.
* கற்றாழையில் உள்ள ஜெல்லானது மிகவும் சிறந்த ஒரு பொருள் அந்த ஜெல்லை தழும்புகள் உள்ள இடத்தில் தொடர்ந்து தடவி வந்தால் தீக்காயம் ஏற்பட்ட இடத்தில் உள்ள தழும்பானது மறைய ஆரம்பிப்பது மட்டுமின்றி, சருமமும் மென்மையாகும்.
* பாலில் உள்ள சத்துக்களை சொல்லித் தான் தெரிய வேண்டுமென்பதில்லை ஏனெனில் அந்த அளவு அதில் நன்மையானது அதிகம் உள்ளது எனவே தினமும் குளிக்கும் முன்பு, பாலை தழும்புகள் உள்ள இடத்தில் தடவி மசாஜ் செய்து 10 நிமிடம் ஊற வைத்து குளிக்க வேண்டும் வேண்டுமெனில் அதில் சிறிது எலுமிச்சை சாற்றை விட்டும் செய்யலாம்.
* ஆலிவ் ஆயில் பல நன்மைகளை உள்ளடக்கியது அத்தகைய ஆலிவ் ஆயில் தழும்புகளை நீக்கவும் பயன்படுகிறது எனவே இந்த ஆயிலை தீக்காயம் ஏற்பட்ட இடத்தில், தினமும் காலையும், மாலையும் தடவி மசாஜ் செய்து வந்தால, ஆலிவ் ஆயிலில் உள்ள பொருளானது தழும்புகளை மறையவைக்கும்.
* தக்காளியில் அதிகமான விட்டமின்கள் இருப்பதால் அவை சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கி தழும்புகளை மறைய வைக்கும் அதற்கு தக்காளி துண்டுகளை வெட்டியோ அல்லது அதன் சாற்றையோ பாதிக்கப்பட்ட இடத்தில் தடவி தினமும் மசாஜ் செய்து வந்தால் தழும்புகள் போய்விடும்.
* டீ வகைகளில் ஒன்றான சீமைச்சாமந்தி ஃப்ளேவரில் விற்கப்படும் டீயை போட்டப் பின்பு அதன் இலைகளை தழும்பு உள்ள இடத்தில் வைத்து மசாஜ் செய்து பின்னர் குளிர்ந்த நீரில் கழுவி வந்தால் தழும்புகள் மறைந்துவிடும்.
மாத்தறையில் இருந்து அனுராதபுரம் வரை வார இறுதி நாட்களில் சேவையில் ஈடுபட்டுவந்த புகையிரத சேவை கிளிநொச்சி வரை சேவையில் ஈடுபடுத்த புகையிரத திணைக்களம் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
இதனடிப்படையில் சனிக்கிழமை காலை 7.00 மணிக்கு மாத்தறையிலிருந்து புறப்படும் புகையிரதம் மு.ப. 9.50மணிக்கு கோட்டை புகையிரத நிலையத்தையும் பி. ப. 3.50மணிக்கு கிளிநொச்சி புகையிரத நிலையத்தையும் சென்றடையவுள்ளது.
கிளிநொச்சியில் ஞாயிற்றுக்கிழமை மு. ப. 11 மணிக்கு பயணத்தை ஆரம்பிக்கும் புகையிரதம் மாலை 5.15க்கு கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தினையும் இரவு 7.15 மணிக்கு மாத்தறை புகையிரத நிலையத்தையும் வந்தடையவுள்ளது.
இதனடிப்படையில் சனிக்கிழமை காலை 7.00 மணிக்கு மாத்தறையிலிருந்து புறப்படும் புகையிரதம் மு.ப. 9.50மணிக்கு கோட்டை புகையிரத நிலையத்தையும் பி. ப. 3.50மணிக்கு கிளிநொச்சி புகையிரத நிலையத்தையும் சென்றடையவுள்ளது.
கிளிநொச்சியில் ஞாயிற்றுக்கிழமை மு. ப. 11 மணிக்கு பயணத்தை ஆரம்பிக்கும் புகையிரதம் மாலை 5.15க்கு கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தினையும் இரவு 7.15 மணிக்கு மாத்தறை புகையிரத நிலையத்தையும் வந்தடையவுள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வெருகல் பிரதேசசபை தலைவர் எஸ்.விஜயகாந் காசோலை மோசடிக் குற்றச் சாட்டில் கைதுசெய்யப்பட்டு பிணையில் விடுவித்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பாடசாலை ஒன்றின் விளையாட்டு மைதான திருத்த வேலைகளுக்கு மண் தருவிப்பதற்கான ஒப்பந்தத்தில், லொறி சாரதி ஒருவருக்கு ரூ.5 லட்சம் என குறிக்கப்பட்ட போலி காசோலை வழங்கியமை தொடர்பிலேயே பிரதேசசபை தலைவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைதுசெய்யப்பட்ட வெருகல் பிரதேசசபை தலைவரை மூதூர் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தியபோது ரூ.2 லட்சம் பெறுமதியான இரு சரீரப்பிணையில் செல்ல நீதவான் அனுமதியளித்துள்ளதுடன் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
பாடசாலை ஒன்றின் விளையாட்டு மைதான திருத்த வேலைகளுக்கு மண் தருவிப்பதற்கான ஒப்பந்தத்தில், லொறி சாரதி ஒருவருக்கு ரூ.5 லட்சம் என குறிக்கப்பட்ட போலி காசோலை வழங்கியமை தொடர்பிலேயே பிரதேசசபை தலைவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைதுசெய்யப்பட்ட வெருகல் பிரதேசசபை தலைவரை மூதூர் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தியபோது ரூ.2 லட்சம் பெறுமதியான இரு சரீரப்பிணையில் செல்ல நீதவான் அனுமதியளித்துள்ளதுடன் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
பிரித்தானியாவின் க்ளொவ்ஸ்டசெயர் பிரதேசத்தில் அமை ந்துள்ள தன்னியக்க கருவியில் பண மோசடி செய்த குற்ற ச்சாட்டின் அடிப்படையில் இலங்கையைச் சேர்ந்த நால்வர் பிரித்தானியாவில் கைது செய்யப்பட்டுள்ளனர். குரொய் டனனை சேர்ந்த பஸீர் முஸ்தபா (21 வயது, அசோக் பாலசுப் பிரமணியம் (21 வயது), தங்கவேல் வேலாயுதம் (50 வயது) மற்றும் மிடில்செக்ஸ் பேனார்ட் காடன் பிரதேச த்தைச் சேர்ந்த குசலகுமார் சிதம்பரப்பிள்ளை ஆகிய நால்வருமே கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைதுசெய்யப்பட்ட குறித்த நபர்கள் மீது பிரித்தானிய வங்கிகளில் வங்கி அட்டை களின் மூலம் முறைகேடுகளை மேற்கொண்ட குற்றச்சாட்டு சுமத்தப் பட்டுள்ளது.
கைதுசெய்யப்பட்ட குறித்த நபர்கள் மீது பிரித்தானிய வங்கிகளில் வங்கி அட்டை களின் மூலம் முறைகேடுகளை மேற்கொண்ட குற்றச்சாட்டு சுமத்தப் பட்டுள்ளது.
பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் கடந்த செவ் வாய்க்கிழமை 7.7 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் இருந்து பொதுமக்கள் மீள்வதற்குள் இன்று மீண்டும் மற் றொரு நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் வீடுகள் கடுமை யாக குலுங்கின. மக்கள் வீடுகளை விட்டு அலறியடித்து வெளியேறினர். அவாரன் நகரில் இருந்து 96 கி.மீ. தொலை வில் உணரப்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோலில் 6.8 ஆக பதிவாகி இருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடலுக்கு அடியில் 14.8 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது. ஏற்கனவே ஏற்பட்ட நிலநடுக்கம் மையம் கொண்டிருந்த இடத்தில் இருந்து 30 கி.மீ. தொலைவில் இந்த நிலநடுக்கம் உருவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதியில் உள்கட்டமைப்பு வசதிகள் மிக குறைவு. போதிய மருத்துவ வசதிகள், சாலை வசதிகள் இல்லை. தொலைதூரத்தில் இருப்பதாலும், ராணுவம் மீது போராளிகள் தாக்குதல் நடத்துவதாலும் மீட்புப் பணிகளுக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது.
கடந்த செவ்வாய் கிழமை ஏற்பட்ட நிலநடுக்கம் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் 359 பேர் பலியாகி உள்ளனர். 765 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர். மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
கடலுக்கு அடியில் 14.8 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது. ஏற்கனவே ஏற்பட்ட நிலநடுக்கம் மையம் கொண்டிருந்த இடத்தில் இருந்து 30 கி.மீ. தொலைவில் இந்த நிலநடுக்கம் உருவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதியில் உள்கட்டமைப்பு வசதிகள் மிக குறைவு. போதிய மருத்துவ வசதிகள், சாலை வசதிகள் இல்லை. தொலைதூரத்தில் இருப்பதாலும், ராணுவம் மீது போராளிகள் தாக்குதல் நடத்துவதாலும் மீட்புப் பணிகளுக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது.
கடந்த செவ்வாய் கிழமை ஏற்பட்ட நிலநடுக்கம் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் 359 பேர் பலியாகி உள்ளனர். 765 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர். மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
தீ நிகர்த்த தேர்தல் மேடைகளில் அனல் பறக்கும் ஆவேசப் பேச்சுக்கள் அரங்கேறி முடிந்து விட்டன. வாய்க்கு வந்த வாக்குறுதிகள் எல்லாம் காற்றில் கலக்க விடப்பட்டு, வாக்காளப் பெருமக்களின் நெஞ்சங்களுக்குள் நிரப்பப்பட்டு விட்டன. தேர்தல் விஞ்ஞாபனங்கள், சுவரொட்டிகள், துண்டு பிரசுரங்கள், பத்திரிகை அறிக்கைகள்,பதாகை வசனங்கள் என்று அள்ளி வீசிய கொள்கை விளக்கங்கள் மூலம் மக்களின் மூளையைச் சலவை செய்தாகிவிட்டது. இவற்றின் பெறுபேறாக,சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த தேர்தலிலே வரலாற்று முக்கியத்துவமிக்க பெரும் வெற்றியையும் பெற்றாகிவிட்டது.
இனி அடுத்தது என்ன...?
வட மாகாண ஆட்சி பீடத்தில் அமரப் போகும் தமிழ் தேசியக் கூட்டமைப்பிடம் இந்தக் கேள்விக்குரிய சரியான-தெளிவான பதில் இருக்குமா என்பது சந்தேகம்தான்.
"முதலில் பழத்தைப் பறி எப்படித் தின்னலாம் என்பதை அப்புறம் யோசிக்கலாம்" என்பது போல, இப்போது வெற்றிப் பழத்தைப் பறித்து வைத்திருக்கும் கூட்டமைப்பு, அதை எந்த வகையில் பயன்படுத்தலாம் என்று இனித்தான் யோசிக்கப் போகிறது. தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் ஒன்றல்ல, பல்வேறு உள்ளகச் சிக்கல்களுக்கு முகம் கொடுக்கப் போகிறார்கள். புதிதாகத் தோன்றப் போகும் உள்வீட்டுப் பிரச்சினை களுக்கு சுமுக முடிவு கண்டு அவர்கள் தெளிவுக்கு வந்த பின்னர்தான் மக்களுக்கான தமது ஆட்சியைக் கொண்டு செல்வது எவ்விதம் என்பது பற்றி அவர்களினால் சிந்திக்கத் தொடங்க முடியும்.
எதிர்கொள்ளப் போகும் அக முரண்பாடுகளை இணக்கமான முறையில் கூட்டமைப் பினால் தீர்த்துக் கொள்ள முடியுமா என்பது ஐயம்தான்...!
பல்வேறு சிந்தனைகளையும் சித்தாந்தங்களையும் கொண்டிருக்கும் தமிழ்க் கட்சிகள் இணைந்து பெற்றிருக்கும் வட மாகாண சபையின் ஆட்சிக் காலம் முழுதும் அக் கட்சிகள் ஒரே கொள்கையுடன் செயலாற்றுவதில் பாரிய சவால் களைச் சந்திக்கப் போகின்றன என்பது மட்டும் பேருண்மை.
முதலில், வட மாகாண சபையின் முதலமைச்சராகத் தெரிவு செய்யப்பட்டிருக்கும் முன்னாள் நீதியரசர் விக்னேஸ்வரன் அவர்களினால் அந்தப் பதவியில் ஐந்து வருடங்கள் தாக்குப் பிடிக்க முடியுமா என்பதே பாரிய வினாவாக எழுந்து நிற்கிறது. முதலமைச்சர் பதவிக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ள விக்னேஸ்வரனின் பதவியின் தொடர்ச்சியான இருப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கப் போவது, அவர் கொழும்பு வாசியாக இருப்பதும்தான்.
கொழும்பிலிருந்து அடிக்கடி வந்து போய் அல்லது கொழும்பிலிருந்து கொண்டே அவர் வட மாகாண சபையை ஆட்சி செய்வதென்பது அத்துணை எளிதான விடயமல்ல் அவ்வாறு அவர் செய்ய முற்படுவாராயின் தமிழ்த் தலைவர்களினது மட்டுமல்ல, வட மாகாண மக்களினதும் அதிருப்திக்குள்ளாகி விடுவார். அதற்காக, அவர் தனதும் தான் சார்ந்த குடும்பத்தினரதும் தலைநகர சுகபோகங்களை விட்டு விட்டு ஒரேயடியாக யாழ்ப்பாணத்தில் மக்களோடு மக்களாகத் தன்னை ஐக்கியப் படுத்திக் கொண்டு வாழத் தொடங்கி விடுவார் என்றும் கற்பனை பண்ணிவிட முடியாது.
சுபாவத்தில் விக்னேஸ்வரன் அவர்கள் மென்மையானவர். தமிழ் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சித் தலைவர்களிடம் காணப்படும் 'கடும் போக்கு' விக்னேஸ்வரனிடம் கிடையாது. விடயங்களையும் பிரச்சினைகளையும் அவர் உணர்ச்சி ரீதியாகவன்றி, அறிவு ரீதியாகவே சிந்திப்பவர். நடந்து முடிந்த தேர்தலுக்காக அவர் 'புலித் தோலை' அரைகுறையாகப் போர்த்திக் கொண்டிருந்தாரே தவிர, அவருக்கும் 'புலி'யின் குணங்களுக்கும் சம்பந்தமே கிடையாது. இத்தகு அவரது இயல்பை 'போராட்ட குணம்' கொண்ட தமிழ்த் தலைவர்களும் அவர்களைப் பின்பற்றும் மக்களும் பொருந்திக் கொள்வார்களா என்பதும் கேள்விக்குறிதான்.
ஒரு வகையில் விக்னேஸ்வரன் அவர்கள் ஜனாதிபதி மகிந்தவிற்கு உறவினர். இதனை ஜனாதிபதியே பகிரங்கமாகக் கூறியிருக்கிறார். இந்த உறவைத் தாண்டி, ஜனாதிபதிக்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் எதிராக விக்னேஸ்வரன் அவர்களினால் செயற்பட முடியுமென்று தோன்றவில்லை. ஒரு பிரபாகரன் போல், ஒரு அமிர்தலிங்கம் போல், ஒரு சம்பந்தன் போல் இன்னும் மாவை சேனாதிராசா, சுரேஷ் பிரேமச்சந்திரன், செல்வம் அடைக்கலநாதன், சித்தார்த்தன், சிவாஜிலிங்கம், சிறிதரன், ஆனந்தசங்கரி போல் அரசாங்கத்தையும் ஜனாதிபதியையும் வன்மையாக விமர்சனம் செய்து தன் 'அரசியல் இருப்பை' விக்னேஸ்வரன் தக்க வைத்துக் கொள்ளக் கூடியவராகவும் தெரியவில்லை.
எடுத்ததெற்கெல்லாம் 'இந்தியா...தமிழ் நாடு' என்றும் புலம் பெயர்ந்த புலிப் பினாமிகள் என்றும் (இந்தியாவினதும் தமிழ்நாட்டு அரசியல்வாதிகளினதும் இரட்டை விளையாட்டைத் தெரிந்திருந்தும்) ஆலாய்ப் பறந்து, தமிழ் மக்களை இத்தனை காலமாக ஏமாற்றிக் கொண்டிருக்கும் தமிழ்க் கூட்டமைப்பினரைப் போலல்லாது, விக்னேஸ்வரன் தனித்துவமாகச் சிந்திக்கக் கூடியவர். அவர் இந்தியாவினது அல்லது தமிழ்நாட்டு அரசியல்வாதிகளினது அல்லது புலம்பெயர் புலிப் பினாமிகளினது அழுத்தங்கள் தன்மீது திணிபடுவதை ஒரு போதும் அங்கீகரிக்க மாட்டார். ஆனால், இன்னும் இந்திய, தமிழ்நாட்டு, புலத்துப் புலிகளின் மாயைகளை நம்பியிருக்கும் கூட்டமைப்பினர், விக்னேஸ்வரன் அவர்களின் 'தனித்துவத்தை'ப் பொறுத்துக் கொள்வார்களா என்பதும் யோசிக்க வேண்டிய விடயம்தான்.
இவ்வாறான விடயங்களினால் விக்னேஸ்வரன் அவர்களுக்கெதிரான தமிழ் கடும் போக்குவாத சக்திகளின் செயற்பாடுகள் வட மாகாணத்தில் விரைவிலேயே அரங்கேறும் என்பதே பெரும்பாலோனோரின் கணிப்பாக இருக்கிறது.
விக்னேஸ்வரன் அவர்களை ஒரு புறம் வைத்துவிட்டுப் பார்த்தால், அப்போதும் கூட்டமைப்புக்குள் இந்த வட மாகாண சபை பெரும் பிளவுகளையும் வெடிப்பு களையும் ஏற்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் மேலும் அதிகமாகவே தென்படுகின்றன. வட மாகாண சபைக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பில் 32 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள். இவர்களில் அமைச்சுப் பதவிகளைப் பெறப் போகும் அந்த சொற்ப உறுப்பினர்களை ஏனையோர் மனதார ஏற்றுக் கொள்வார்களா என்பதும் இயல்பாகவே எழக் கூடிய பிரச்சினைதான். வவுனியா மாவட்டத்திற்கென்று ஒரு அமைச்சுப் பதவி வேண்டும் அது வைத்தியக் கலாநிதி ப. சத்தியலிங்கத்துக்கு வழங்கப்பட வேண்டுமென்ற கோரிக்கைகள் இப்போதே எழத் தொடங்கி விட்டன. இது போன்று தமது கட்சியைச் சார்ந்தவருக்கு-தொகுதியைச் சார்ந்தவருக்கு-ஊரைச் சார்ந்தவருக்கு-உறவைச் சார்ந்தவருக்கென்று இன்னும் எத்தனை எத்தனை கோரிக்கைகள் எழப் போகின்றனவோ தெரியவில்லை.
தமது அதிகார வரம்பிற்குள்ளே நியமனங்கள்-இடமாற்றங்கள்-கொந்தராத்துகள்-கொடுப்பனவுகள்-அபிவிருத்திகள்-ஏனைய உதவிகள் என்று எத்தனை பேரைத்தான் திருப்திப்படுத்த முடியும்...? எத்தனை கிராமங்களைத்தான் சந்தோஷப்படுத்த முடியும்...?ஆக, மாகாண சபையின் தொடக்கப் புள்ளியிலிருந்தே, வட மாகாண சபையின் ஆட்சியாளர்கள் மக்களின் அதிருப்திக்கு ஆளாக ஆரம்பித்து விடுவார்கள்.
13ம் திருத்தச் சட்டத்தை முற்றாக அமுல்படுத்த வேண்டுமென்ற கோரிக்கைகள் ஒலித்துக் கொண்டிருக்கும் போதே, காணி அதிகாரம் மத்திய அரசாங்கத்திற் கேயன்றி, மாகாண சபைக்கல்ல என உச்ச நீதிமன்ற தீர்ப்பு வெளிவந்திருக்கிறது. காணி அதிகாரமே இல்லையென்றான பிறகு, காவல்துறை அதிகாரங்களைப் பெறுவதென்பது வெறும் கற்பனையாகத்தான் இருக்கப் போகிறது.
இராணுவத்தை முற்று முழுதாக வட மாகாணத்திலிருந்து வெளியேற்றுவதோ அல்லது முகாம்களுக்குள் முடக்குவதோ நடந்து முடிந்த தேர்தலின் போதான கூட்டமைப்பினரின் வீராவேசப் பிரசாரத்துக்குப் பயன்பட்டிருக்கலாமே தவிர, ஒரு போதும் நடைமுறைச் சாத்தியமாகப் போவதில்லை.
ஆக, தம்மை நம்பி வாக்களித்த மக்களுக்கு வெறும் ஏமாற்றங்களை மட்டுமே வட மாகாண சபை மூலம் தமிழ் தேசியக் கூட்டமைப்பு வழங்கப் போகிறதென்பது உள்ளங்கை நெல்லிக்கனி.
தாங்க முடியாத துக்க அனுபவங்களையும் வலிகளையும் சுமந்த படியே, தவிர்க்க முடியாத தேவைகளையும் எதிர்பார்ப்புகளையும் தாங்கி நிற்கும் வட மாகாண மக்கள், அவை பூர்த்தியடையாத பட்சத்தில் தம்மால் பெரும் கனவுடனும் பிரயத்தனத்துடனும் தேர்வு செய்யப்பட்டவர்களின் மீது தமது ஆதங்கத்தையும் ஆத்திரத்தையும் கோபத்தையும் கொந்தளிப்புகளையும் கொட்டித் தீர்க்காமல் விட மாட்டார்கள்.
எனவே, எப்படித்தான் கூட்டிக் கழித்துப் பார்த்தாலும் தமிழ் தேசியக் கூட்டமைப் பினருக்கு வட மாகாண சபை என்பது நிச்சயம் ஒரு தேய்பிறைக் காலமாகத்தான் இருக்கப் போகிறது.
இனி அடுத்தது என்ன...?
வட மாகாண ஆட்சி பீடத்தில் அமரப் போகும் தமிழ் தேசியக் கூட்டமைப்பிடம் இந்தக் கேள்விக்குரிய சரியான-தெளிவான பதில் இருக்குமா என்பது சந்தேகம்தான்.
"முதலில் பழத்தைப் பறி எப்படித் தின்னலாம் என்பதை அப்புறம் யோசிக்கலாம்" என்பது போல, இப்போது வெற்றிப் பழத்தைப் பறித்து வைத்திருக்கும் கூட்டமைப்பு, அதை எந்த வகையில் பயன்படுத்தலாம் என்று இனித்தான் யோசிக்கப் போகிறது. தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் ஒன்றல்ல, பல்வேறு உள்ளகச் சிக்கல்களுக்கு முகம் கொடுக்கப் போகிறார்கள். புதிதாகத் தோன்றப் போகும் உள்வீட்டுப் பிரச்சினை களுக்கு சுமுக முடிவு கண்டு அவர்கள் தெளிவுக்கு வந்த பின்னர்தான் மக்களுக்கான தமது ஆட்சியைக் கொண்டு செல்வது எவ்விதம் என்பது பற்றி அவர்களினால் சிந்திக்கத் தொடங்க முடியும்.
எதிர்கொள்ளப் போகும் அக முரண்பாடுகளை இணக்கமான முறையில் கூட்டமைப் பினால் தீர்த்துக் கொள்ள முடியுமா என்பது ஐயம்தான்...!
பல்வேறு சிந்தனைகளையும் சித்தாந்தங்களையும் கொண்டிருக்கும் தமிழ்க் கட்சிகள் இணைந்து பெற்றிருக்கும் வட மாகாண சபையின் ஆட்சிக் காலம் முழுதும் அக் கட்சிகள் ஒரே கொள்கையுடன் செயலாற்றுவதில் பாரிய சவால் களைச் சந்திக்கப் போகின்றன என்பது மட்டும் பேருண்மை.
முதலில், வட மாகாண சபையின் முதலமைச்சராகத் தெரிவு செய்யப்பட்டிருக்கும் முன்னாள் நீதியரசர் விக்னேஸ்வரன் அவர்களினால் அந்தப் பதவியில் ஐந்து வருடங்கள் தாக்குப் பிடிக்க முடியுமா என்பதே பாரிய வினாவாக எழுந்து நிற்கிறது. முதலமைச்சர் பதவிக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ள விக்னேஸ்வரனின் பதவியின் தொடர்ச்சியான இருப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கப் போவது, அவர் கொழும்பு வாசியாக இருப்பதும்தான்.
கொழும்பிலிருந்து அடிக்கடி வந்து போய் அல்லது கொழும்பிலிருந்து கொண்டே அவர் வட மாகாண சபையை ஆட்சி செய்வதென்பது அத்துணை எளிதான விடயமல்ல் அவ்வாறு அவர் செய்ய முற்படுவாராயின் தமிழ்த் தலைவர்களினது மட்டுமல்ல, வட மாகாண மக்களினதும் அதிருப்திக்குள்ளாகி விடுவார். அதற்காக, அவர் தனதும் தான் சார்ந்த குடும்பத்தினரதும் தலைநகர சுகபோகங்களை விட்டு விட்டு ஒரேயடியாக யாழ்ப்பாணத்தில் மக்களோடு மக்களாகத் தன்னை ஐக்கியப் படுத்திக் கொண்டு வாழத் தொடங்கி விடுவார் என்றும் கற்பனை பண்ணிவிட முடியாது.
சுபாவத்தில் விக்னேஸ்வரன் அவர்கள் மென்மையானவர். தமிழ் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சித் தலைவர்களிடம் காணப்படும் 'கடும் போக்கு' விக்னேஸ்வரனிடம் கிடையாது. விடயங்களையும் பிரச்சினைகளையும் அவர் உணர்ச்சி ரீதியாகவன்றி, அறிவு ரீதியாகவே சிந்திப்பவர். நடந்து முடிந்த தேர்தலுக்காக அவர் 'புலித் தோலை' அரைகுறையாகப் போர்த்திக் கொண்டிருந்தாரே தவிர, அவருக்கும் 'புலி'யின் குணங்களுக்கும் சம்பந்தமே கிடையாது. இத்தகு அவரது இயல்பை 'போராட்ட குணம்' கொண்ட தமிழ்த் தலைவர்களும் அவர்களைப் பின்பற்றும் மக்களும் பொருந்திக் கொள்வார்களா என்பதும் கேள்விக்குறிதான்.
ஒரு வகையில் விக்னேஸ்வரன் அவர்கள் ஜனாதிபதி மகிந்தவிற்கு உறவினர். இதனை ஜனாதிபதியே பகிரங்கமாகக் கூறியிருக்கிறார். இந்த உறவைத் தாண்டி, ஜனாதிபதிக்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் எதிராக விக்னேஸ்வரன் அவர்களினால் செயற்பட முடியுமென்று தோன்றவில்லை. ஒரு பிரபாகரன் போல், ஒரு அமிர்தலிங்கம் போல், ஒரு சம்பந்தன் போல் இன்னும் மாவை சேனாதிராசா, சுரேஷ் பிரேமச்சந்திரன், செல்வம் அடைக்கலநாதன், சித்தார்த்தன், சிவாஜிலிங்கம், சிறிதரன், ஆனந்தசங்கரி போல் அரசாங்கத்தையும் ஜனாதிபதியையும் வன்மையாக விமர்சனம் செய்து தன் 'அரசியல் இருப்பை' விக்னேஸ்வரன் தக்க வைத்துக் கொள்ளக் கூடியவராகவும் தெரியவில்லை.
எடுத்ததெற்கெல்லாம் 'இந்தியா...தமிழ் நாடு' என்றும் புலம் பெயர்ந்த புலிப் பினாமிகள் என்றும் (இந்தியாவினதும் தமிழ்நாட்டு அரசியல்வாதிகளினதும் இரட்டை விளையாட்டைத் தெரிந்திருந்தும்) ஆலாய்ப் பறந்து, தமிழ் மக்களை இத்தனை காலமாக ஏமாற்றிக் கொண்டிருக்கும் தமிழ்க் கூட்டமைப்பினரைப் போலல்லாது, விக்னேஸ்வரன் தனித்துவமாகச் சிந்திக்கக் கூடியவர். அவர் இந்தியாவினது அல்லது தமிழ்நாட்டு அரசியல்வாதிகளினது அல்லது புலம்பெயர் புலிப் பினாமிகளினது அழுத்தங்கள் தன்மீது திணிபடுவதை ஒரு போதும் அங்கீகரிக்க மாட்டார். ஆனால், இன்னும் இந்திய, தமிழ்நாட்டு, புலத்துப் புலிகளின் மாயைகளை நம்பியிருக்கும் கூட்டமைப்பினர், விக்னேஸ்வரன் அவர்களின் 'தனித்துவத்தை'ப் பொறுத்துக் கொள்வார்களா என்பதும் யோசிக்க வேண்டிய விடயம்தான்.
இவ்வாறான விடயங்களினால் விக்னேஸ்வரன் அவர்களுக்கெதிரான தமிழ் கடும் போக்குவாத சக்திகளின் செயற்பாடுகள் வட மாகாணத்தில் விரைவிலேயே அரங்கேறும் என்பதே பெரும்பாலோனோரின் கணிப்பாக இருக்கிறது.
விக்னேஸ்வரன் அவர்களை ஒரு புறம் வைத்துவிட்டுப் பார்த்தால், அப்போதும் கூட்டமைப்புக்குள் இந்த வட மாகாண சபை பெரும் பிளவுகளையும் வெடிப்பு களையும் ஏற்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் மேலும் அதிகமாகவே தென்படுகின்றன. வட மாகாண சபைக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பில் 32 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள். இவர்களில் அமைச்சுப் பதவிகளைப் பெறப் போகும் அந்த சொற்ப உறுப்பினர்களை ஏனையோர் மனதார ஏற்றுக் கொள்வார்களா என்பதும் இயல்பாகவே எழக் கூடிய பிரச்சினைதான். வவுனியா மாவட்டத்திற்கென்று ஒரு அமைச்சுப் பதவி வேண்டும் அது வைத்தியக் கலாநிதி ப. சத்தியலிங்கத்துக்கு வழங்கப்பட வேண்டுமென்ற கோரிக்கைகள் இப்போதே எழத் தொடங்கி விட்டன. இது போன்று தமது கட்சியைச் சார்ந்தவருக்கு-தொகுதியைச் சார்ந்தவருக்கு-ஊரைச் சார்ந்தவருக்கு-உறவைச் சார்ந்தவருக்கென்று இன்னும் எத்தனை எத்தனை கோரிக்கைகள் எழப் போகின்றனவோ தெரியவில்லை.
தமது அதிகார வரம்பிற்குள்ளே நியமனங்கள்-இடமாற்றங்கள்-கொந்தராத்துகள்-கொடுப்பனவுகள்-அபிவிருத்திகள்-ஏனைய உதவிகள் என்று எத்தனை பேரைத்தான் திருப்திப்படுத்த முடியும்...? எத்தனை கிராமங்களைத்தான் சந்தோஷப்படுத்த முடியும்...?ஆக, மாகாண சபையின் தொடக்கப் புள்ளியிலிருந்தே, வட மாகாண சபையின் ஆட்சியாளர்கள் மக்களின் அதிருப்திக்கு ஆளாக ஆரம்பித்து விடுவார்கள்.
13ம் திருத்தச் சட்டத்தை முற்றாக அமுல்படுத்த வேண்டுமென்ற கோரிக்கைகள் ஒலித்துக் கொண்டிருக்கும் போதே, காணி அதிகாரம் மத்திய அரசாங்கத்திற் கேயன்றி, மாகாண சபைக்கல்ல என உச்ச நீதிமன்ற தீர்ப்பு வெளிவந்திருக்கிறது. காணி அதிகாரமே இல்லையென்றான பிறகு, காவல்துறை அதிகாரங்களைப் பெறுவதென்பது வெறும் கற்பனையாகத்தான் இருக்கப் போகிறது.
இராணுவத்தை முற்று முழுதாக வட மாகாணத்திலிருந்து வெளியேற்றுவதோ அல்லது முகாம்களுக்குள் முடக்குவதோ நடந்து முடிந்த தேர்தலின் போதான கூட்டமைப்பினரின் வீராவேசப் பிரசாரத்துக்குப் பயன்பட்டிருக்கலாமே தவிர, ஒரு போதும் நடைமுறைச் சாத்தியமாகப் போவதில்லை.
ஆக, தம்மை நம்பி வாக்களித்த மக்களுக்கு வெறும் ஏமாற்றங்களை மட்டுமே வட மாகாண சபை மூலம் தமிழ் தேசியக் கூட்டமைப்பு வழங்கப் போகிறதென்பது உள்ளங்கை நெல்லிக்கனி.
தாங்க முடியாத துக்க அனுபவங்களையும் வலிகளையும் சுமந்த படியே, தவிர்க்க முடியாத தேவைகளையும் எதிர்பார்ப்புகளையும் தாங்கி நிற்கும் வட மாகாண மக்கள், அவை பூர்த்தியடையாத பட்சத்தில் தம்மால் பெரும் கனவுடனும் பிரயத்தனத்துடனும் தேர்வு செய்யப்பட்டவர்களின் மீது தமது ஆதங்கத்தையும் ஆத்திரத்தையும் கோபத்தையும் கொந்தளிப்புகளையும் கொட்டித் தீர்க்காமல் விட மாட்டார்கள்.
எனவே, எப்படித்தான் கூட்டிக் கழித்துப் பார்த்தாலும் தமிழ் தேசியக் கூட்டமைப் பினருக்கு வட மாகாண சபை என்பது நிச்சயம் ஒரு தேய்பிறைக் காலமாகத்தான் இருக்கப் போகிறது.
அரசாங்க தகவல் திணைக்களத்தினால் 2014/2015 வருடங் களுக்கான அடையாள அட்டை வழங்குவதற்கு பிராந்திய ஊடகவியலாளர்களுக்கான விண்ணப்பம் கோரப்பட்டுள் ளது. இதற்கான விண்ணப்பம் பிராந்திய ஊடகவியலா ளர்களுக்கு அனுப்பி வைக்கப் பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்கள பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் ஆரியரத்ன அத்துகல அறிவித்துள்ளார் .
விண்ணப்பத்தை பூரண படுத்தி முத்திரை அளவிலான புகைப்படம் ஒட்டப்பட்டு அரசாங்க தகவல் திணைக்கள பணிப்பாளர் நாயகம் அரசாங்க தகவல் திணைக்களம் ,163.கிருலப்பன மாவத்த ,கொழும்பு -05 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு கேட்கப்பட்டுள்ளது.
(யு.எம்.இஸ்ஹாக்)
விண்ணப்பத்தை பூரண படுத்தி முத்திரை அளவிலான புகைப்படம் ஒட்டப்பட்டு அரசாங்க தகவல் திணைக்கள பணிப்பாளர் நாயகம் அரசாங்க தகவல் திணைக்களம் ,163.கிருலப்பன மாவத்த ,கொழும்பு -05 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு கேட்கப்பட்டுள்ளது.
(யு.எம்.இஸ்ஹாக்)
அரசாங்க அபிவிருத்தித் திட்டங்கள் குறித்து மக் களை விழிப்பூட்டும் நோக்கில் அரசாங்க தகவல் திணைக்களம் தமிழ் மொழியில் வெளியிடும் "திங்கள்" தகவல் சஞ்சிகையின் புதிய இதழ் அண்மையில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவிடம் கையளிக்கப்பட்டது.
அலரி மாளிகையில் நடைபெற்ற இவ்வைபவ த்தில் தகவல் ஊடக அமைச்சின் மேற்பார்வை எம்.பி. அல்ஹாஜ் ஏ.எச்.எம் அஸ்வர் - அரசாங்க தகவல் திணைக்கள பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் ஆரியரத்ன அதுகல- திங்கள் சஞ்சிகையின் பிரதம ஆசிரியர் ஏ. ஹில்மி மொஹமட்- திங்கள் சஞ்சிகை ஆசிரியையான நூருல் ஐன் நஜ்முல் ஹுசைன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
வடக்கு மாகாண ஆளுநர் மேஜர் ஜி.ஏ. சந்திரசிரி, வடக்கு மாகாண சபைத் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு வெற்றிபெற்றுள்ள முன்னாள் உயர்நீதி மன்ற நீதிபதி சி.வி. விக்கனேஸ்வரனை, அவரது முதலமைச்சர் நியமனம் மற்றும் வடக்கு மாகாண சபை அமைச்சர்கள் நியமனம் தொடர்பாக அடுத்த கிழமை சந்திப்பதற்கு அழைப்பு விடுத்துள்ளார்.
முன்னாள் இராணுவத் அதிகாரியான ஆளுநர் ஒருவர் முன்னிலையில் முதலமைச்சர் பதவிப்பிரமாணம் செய்து கொள்ளமாட்டார் என்ற செய்திகள் வெளியாகியிருந்த நிலையில் இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ஆளுநர் நியமனம் என்பது ஜனாதிபதியின் நியமனம். விதிமுறைகளின் பிரகாரம் முதலமைச்சர் ஆளுநர் முன் பதவிப்பிரமானம் செய்யவேண்டும். அவ்வாறு மறுப்பதற்கு நீதியில் இடமுண்டா, இல்லை இது வெறும் வாய் வீராப்புத்தான என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
முன்னாள் இராணுவத் அதிகாரியான ஆளுநர் ஒருவர் முன்னிலையில் முதலமைச்சர் பதவிப்பிரமாணம் செய்து கொள்ளமாட்டார் என்ற செய்திகள் வெளியாகியிருந்த நிலையில் இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ஆளுநர் நியமனம் என்பது ஜனாதிபதியின் நியமனம். விதிமுறைகளின் பிரகாரம் முதலமைச்சர் ஆளுநர் முன் பதவிப்பிரமானம் செய்யவேண்டும். அவ்வாறு மறுப்பதற்கு நீதியில் இடமுண்டா, இல்லை இது வெறும் வாய் வீராப்புத்தான என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.