ஐ.நா.சபையின் மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகர் நவநீதம்பிள்ளையுடன் இலங்கை வந்திருந்த ஐ. நா. உயரதிகாரிகள் குழுவைச் சந்தித்த தனியார் தமிழ் ஊடகங்களைச் சேர்ந்த சிரேஷ்ட ஊடகவியலாளர்கள் சிலர் அவர்களிடம் தெரிவித்துள்ள முறைப்பாடுகள் தொடர்பாக விரிவான விசாரணைகளை நடத்துமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தகவல்துறை அமைச்சர் கெஹலிய விற்குப் பணிப்புரை விடுத்துள்ளார்.
குறிப்பாக திருகோணமலையில் அண்மையில் பிராந்திய ஊடகவியலாளர் ஒருவர் பொலிஸாரினால் துன்புறுத்தப்பட்டதாக பத்திரிகை ஆசிரியர் ஒருவர் நவநீதம் பிள்ளையுடன் வந்திருந்த உயரதிகாரிகளிடம் தெரிவித்தமை தொடர்பாக உரிய விசாரணை நடத்தி அத்தகைய ஒரு சம்பவம் திருமலையில் நடைபெற்றதா எனவும், அதன் பின்னணிக்கான காரணம் என்ன என்பது தொடர்பான உண்மைத் தன்மையை ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.
அத்துடன் உள்நாட்டில் இடம்பெறும் இதுபோன்ற சிறுசிறு சம்பவங்களை ஊடக அமைச்சரிடமோ அல்லது தனது கவனத்திற்கோ கொண்டு வராதிருந்த இந்தச் சிரேஷ்ட தமிழ் ஊடகவியலாளர்களில் ஒருசிலர் அதனைப் பெரிதாக்கி நவநீதம்பிள்ளை குழுவிடம் முறையிட்டுள்ளமை குறித்தும் ஜனாதிபதி தனது அதிருப்தியைத் தெரிவித்தார்.
மாதமொருமுறை தான் ஊடக நிறுவனங்களின் பிரதானிகள், பத்திரிகைகளின் பிரதம ஆசிரியர்களைச் சந்திக்கும் போது கூட தெரிவிக்கப்படாத இதுபோன்ற சிறு சம்பவ நிகழ்வுகள் நவநீதம்பிள்ளையின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டு முறையிடப்பட்டமை வருந்தத்தக்கதொரு விடயம் எனவும் ஜனாதிபதி சுட்டிக் காட்டினார்.
தன்னை இவர்கள் சந்திக்கும் வேளைகளில் பல விடயங்கள் தனிப்பட்ட முறையில்கூடக் கலந்துரையாடப்படுவதுண்டு. அவ்வேளை இவர்கள் இதுபோன்ற விடயங்களைச் சுட்டிக்காட்டியிருந்தால் அவ்விடத்திலேயே அதற்குத் தீர்வு காணப்படும் சூழல் ஏற்படும். ஆனால் இதனைப் பெரிதாக்கி நவநீதம்பிள்ளை குழுவிடம் முறையிடும் அளவிற்கு தமிழ் பத்திரிகை ஆசிரியர்கள் ஒருசிலர் முயற்சித்தமை குறித்து ஜனாதிபதி தனது கவலையையும் அதிருப்தியையும் வெளியிட்டார்.
எது எவ்வாறாயினும் குறித்த பத்திரிகை ஆசிரியரினால் முறை யிடப்பட்ட சம் பவம் தொடர்பான உண்மைத் தன்மையை ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார். எமது நாட்டின் மீது வேண்டுமென்றே பொய்யான குற்றச்சாட்டுக்களை உருவாக்கி நாட்டுக்கு அபகீர்த்தி ஏற்படுத்திச் சில சக்திகள் முயன்று வரும் இவ்வேளையில் பொறுப்புள்ள ஊடக வியலாளர்கள் ஒருசிலர் இவ்வாறு பொறுப்பற்ற முறையில் நடந்து கொள்வது ஆரோக்கியமானதல்ல எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
குறிப்பாக திருகோணமலையில் அண்மையில் பிராந்திய ஊடகவியலாளர் ஒருவர் பொலிஸாரினால் துன்புறுத்தப்பட்டதாக பத்திரிகை ஆசிரியர் ஒருவர் நவநீதம் பிள்ளையுடன் வந்திருந்த உயரதிகாரிகளிடம் தெரிவித்தமை தொடர்பாக உரிய விசாரணை நடத்தி அத்தகைய ஒரு சம்பவம் திருமலையில் நடைபெற்றதா எனவும், அதன் பின்னணிக்கான காரணம் என்ன என்பது தொடர்பான உண்மைத் தன்மையை ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.
அத்துடன் உள்நாட்டில் இடம்பெறும் இதுபோன்ற சிறுசிறு சம்பவங்களை ஊடக அமைச்சரிடமோ அல்லது தனது கவனத்திற்கோ கொண்டு வராதிருந்த இந்தச் சிரேஷ்ட தமிழ் ஊடகவியலாளர்களில் ஒருசிலர் அதனைப் பெரிதாக்கி நவநீதம்பிள்ளை குழுவிடம் முறையிட்டுள்ளமை குறித்தும் ஜனாதிபதி தனது அதிருப்தியைத் தெரிவித்தார்.
மாதமொருமுறை தான் ஊடக நிறுவனங்களின் பிரதானிகள், பத்திரிகைகளின் பிரதம ஆசிரியர்களைச் சந்திக்கும் போது கூட தெரிவிக்கப்படாத இதுபோன்ற சிறு சம்பவ நிகழ்வுகள் நவநீதம்பிள்ளையின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டு முறையிடப்பட்டமை வருந்தத்தக்கதொரு விடயம் எனவும் ஜனாதிபதி சுட்டிக் காட்டினார்.
தன்னை இவர்கள் சந்திக்கும் வேளைகளில் பல விடயங்கள் தனிப்பட்ட முறையில்கூடக் கலந்துரையாடப்படுவதுண்டு. அவ்வேளை இவர்கள் இதுபோன்ற விடயங்களைச் சுட்டிக்காட்டியிருந்தால் அவ்விடத்திலேயே அதற்குத் தீர்வு காணப்படும் சூழல் ஏற்படும். ஆனால் இதனைப் பெரிதாக்கி நவநீதம்பிள்ளை குழுவிடம் முறையிடும் அளவிற்கு தமிழ் பத்திரிகை ஆசிரியர்கள் ஒருசிலர் முயற்சித்தமை குறித்து ஜனாதிபதி தனது கவலையையும் அதிருப்தியையும் வெளியிட்டார்.
எது எவ்வாறாயினும் குறித்த பத்திரிகை ஆசிரியரினால் முறை யிடப்பட்ட சம் பவம் தொடர்பான உண்மைத் தன்மையை ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார். எமது நாட்டின் மீது வேண்டுமென்றே பொய்யான குற்றச்சாட்டுக்களை உருவாக்கி நாட்டுக்கு அபகீர்த்தி ஏற்படுத்திச் சில சக்திகள் முயன்று வரும் இவ்வேளையில் பொறுப்புள்ள ஊடக வியலாளர்கள் ஒருசிலர் இவ்வாறு பொறுப்பற்ற முறையில் நடந்து கொள்வது ஆரோக்கியமானதல்ல எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
பஸ் தரிப்பிடத்தில் காத்திருந்த மாணவியொருவரைக் கடத்திச் சென்று அவரை பலவந்தமாக நிர்வாணப்படுத்தி தனது கையடக்கத் தொலைபேசியில் படமெடுத்த நபரொருவர் எதிர்வரும் செப்டெம்பர் 11ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
குறித்த நபர் மொறட்டுவைப் பிரதேசத்தைச் சேர்ந்தவர் எனத் தெரிவிக்கப்படுவதுடன் அவரைக் கைதுசெய்த பொலிஸார் அவரது கையடக்கத்தொலைபேசியையும் கைப்பற்றியுள்ளனர்.
ஆரம்பகட்ட விசாரணைகளிலிருந்து இது பேஸ்புக்கிலிருந்து ஆரம்பித்த காதல் தொடர்பு எனத் தெரிய வந்துள்ளதுடன் குறித்த நபர் ஏற்கனவே திருமணமாணவரெனவும் அவருக்கு குழந்தை ஒன்று இருப்பதும் தெரிய வந்துள்ளது.
குறித்த நபர் மொறட்டுவைப் பிரதேசத்தைச் சேர்ந்தவர் எனத் தெரிவிக்கப்படுவதுடன் அவரைக் கைதுசெய்த பொலிஸார் அவரது கையடக்கத்தொலைபேசியையும் கைப்பற்றியுள்ளனர்.
ஆரம்பகட்ட விசாரணைகளிலிருந்து இது பேஸ்புக்கிலிருந்து ஆரம்பித்த காதல் தொடர்பு எனத் தெரிய வந்துள்ளதுடன் குறித்த நபர் ஏற்கனவே திருமணமாணவரெனவும் அவருக்கு குழந்தை ஒன்று இருப்பதும் தெரிய வந்துள்ளது.
சுமார் இரண்டு லட்சம் பேரின் உணவுப் பழக்கம் மற்றும் உடல் ஆரோக்கியம் சம்பந்தமான 25 வருட தரவுகளை ஆராய்ந்து பார்த்ததில் பழங்களை தினமும் உண்டுவந்தால் டைப் 2 டயபடீஸ் எனப்படும் நீரிழிவு நோய் வருவதற்கான ஆபத்து குறைகிறது என்ற முடிவு தெரியவந்துள்ளது.
பழங்கள் அதிலும் குறிப்பாக, திராட்சை, ஆப்பிள், புளூபெர்ரி போன்றவற்றை சாப்பிட்டு வருபவர்களுக்கு சர்க்கரை வியாதி வரும் ஆபத்து 25 சதவீதத்தால் குறைகிறது என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
அமெரிக்கா, பிரிட்டன் சிங்கப்பூர் ஆகிய நாடுகளைச் சேர்ந்த மக்களுடைய தரவுகளிலிருந்து இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஸ்டிராபெர்ரி, மெலன் போன்ற சில பழங்களால், இந்த ஆபத்து பெரிதாகக் குறையவில்லை என்றும் தெரியவந்துள்ளது.
அதேநேரம் பழச்சாறு குடிக்கும் வழக்கம் இருப்பவர்களுக்கு டைப் 2 டயபடீஸ் வருவதற்கான ஆபத்து அதிகரிக்கிறது என ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
உடலில் சேருகின்ற இனிப்பு முறையாக பயன்படுத்தப்படுவதிலும், சேமிக்கப்படுவதிலும் கோளாறு ஏற்படுவதால் நீரிழிவு நோய் வருகிறது
பழங்கள் அதிலும் குறிப்பாக, திராட்சை, ஆப்பிள், புளூபெர்ரி போன்றவற்றை சாப்பிட்டு வருபவர்களுக்கு சர்க்கரை வியாதி வரும் ஆபத்து 25 சதவீதத்தால் குறைகிறது என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
அமெரிக்கா, பிரிட்டன் சிங்கப்பூர் ஆகிய நாடுகளைச் சேர்ந்த மக்களுடைய தரவுகளிலிருந்து இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஸ்டிராபெர்ரி, மெலன் போன்ற சில பழங்களால், இந்த ஆபத்து பெரிதாகக் குறையவில்லை என்றும் தெரியவந்துள்ளது.
அதேநேரம் பழச்சாறு குடிக்கும் வழக்கம் இருப்பவர்களுக்கு டைப் 2 டயபடீஸ் வருவதற்கான ஆபத்து அதிகரிக்கிறது என ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
உடலில் சேருகின்ற இனிப்பு முறையாக பயன்படுத்தப்படுவதிலும், சேமிக்கப்படுவதிலும் கோளாறு ஏற்படுவதால் நீரிழிவு நோய் வருகிறது
தூக்கம் வராமல் தவிப்பவர்கள், படுத்தவுடன் தூங்கக்கூடியவர்களைப் பார்த்து, நீயெல்லாம் கொடுத்து வைத்தவன் என்று ஆதங்கத்தோடு சொல்கிறார்கள். மனிதனுக்கு அளிக்கப்பட்டுள்ள அன்றாட நிம்மதி இடைவேளை, தூக்கம் அது சரிவரக் கிட்டாதபோது, வாழ்க்கையே நரகமாகிப் போகும்.
சரி, தூக்கமின்மைக்கு என்ன காரணம்? மது, காபி, மனஅழுத்தம், மனச்சோர்வு, டென்ஷன் என பலவும் தூக்கமின்மைக்குக் காரணமாக அமைகின்றன. தூக்கம் வராமல் படுக்கையில் புரளும் நிலை இருந்தால் என்ன செய்யலாம்? வழக்கத்தைவிட ஒரு மணி நேரம் தாமதமாகப்படுக்கச் செல்லலாம். தூக்கம் வருவதற்கு உரிய சில எளிய உடற்பயிற்சிகளை மேற்கொள்ளலாம்.
உதாரணமாக, மனதுக்குள் எண்களைச் சொல்வது, எளிதான மூச்சுப் பயிற்சிகளில் ஈடுபடுவது, உங்களுக்கு சுவாரசியம் அளிக்காத புத்தகங்களை வாசிப்பது போன்றவை. படுக்கப் போகும் முன் வெதுவெதுப்பான தண்ணீரில் குளிக்கலாம். இதனால் தசைகள் இலகுவாகும். உடல் சூடு குறையும். மிதமான சூட்டில் பாலும் அருந்தலாம்.
தொடர்ந்து தூக்கமின்மை இருந்தால், மருத்துவர் ஆலோசனைப் படி மாத்திரை சாப்பிடலாம். எவ்வளவு வேலைப்பளு இருந்தாலும், இரவில் போதுமான அளவு தூங்குவதை வழக்கமாக வைத்திருக்க வேண்டும். வேறு வழியில்லை என்ற நிலையில், குட்டித் தூக்கம் போட்டாவது நிலைமையைச் சமாளிக்கலாம்.
படுக்கப்போகும் முன் சில எளிய உடற்பயிற்சிகள் செய்வது, தூக்கம் வரவழைப்பதற்கான ஒரு வழி. ஆனால் பெரும்பாலானோர் படுக்கும் முன் உடற்பயிற்சி செய்வதில்லை. இரவுச் சாப்பாட்டுக்கு முன்பு கூட சில எளிய உடற்பயிற்சிகளை மேற்கொள்ளலாம்.
ஆனால் பொதுவாக, காலையில் நேரம் ஒதுக்கி உடற்பயிற்சி செய்வதுதான் நல்லது. தூக்கமின்மை நிரந்தர நோயாக மாறுவதற்கு முன் மாத்திரைகள் சாப்பிடுவதில் தப்பில்லை. ஆனால் மருத்துவரின் பரிந்துரை அவசியம். நாமாக எடுத்துக்கொள்ளும் ஒரு சில மாத்திரைகள் வீரியம் மிகுந்ததாக இருக்கலாம்.
அதன் காரணமாக, தலைவலி, வாந்தி, சோர்வு போன்ற பக்க விளைவுகள் ஏற்ப டக்கூடும். எனவே கவனம் தேவை. தூக்க மாத்திரைக்கு அடிமையாவதும் ஆபத்து. போதுமான நேரமில்லை, இரவில் நான்கு – ஐந்து மணி நேரம்தான் தூங்க முடியும் என்ற நிலை உள்ளவர்கள், இரவில் தாமதமாகப்படுத்து, காலை ஆறு மணிக்கு எழலாம்.
தூக்கம் வரும் வரை, மெல்லிசைப் பாடல்களைக் கேட்பது போன்றவற்றில் ஈடுபடலாம். தூக்கமின்மை பிரச்சினை இருப்பவர்கள், அது பற்றி டாக்டரிடம் ஒளிவுமறைவின்றிச் சொல்லிவிட வேண்டும். அப்போதுதான் அவர்களால் இப்பிரச்சினைக்குத் தீர்வு காண முடியும்.
உதாரணமாக, தூக்கமின்றி காலை ஆட்டிக் கொண்டே இருக்கும் ரெஸ்ட்லெஸ் லெக்ஸ் சிண்ட்ரோம், மூச்சு விடுவதில் சிரமம், தீவிர மனச்சோர்வு, தைராய்டு பிரச்சினை போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்கள், மருத்துவரை அணுகி தக்க நிவாரணம் பெற வேண்டும்.
சரி, தூக்கமின்மைக்கு என்ன காரணம்? மது, காபி, மனஅழுத்தம், மனச்சோர்வு, டென்ஷன் என பலவும் தூக்கமின்மைக்குக் காரணமாக அமைகின்றன. தூக்கம் வராமல் படுக்கையில் புரளும் நிலை இருந்தால் என்ன செய்யலாம்? வழக்கத்தைவிட ஒரு மணி நேரம் தாமதமாகப்படுக்கச் செல்லலாம். தூக்கம் வருவதற்கு உரிய சில எளிய உடற்பயிற்சிகளை மேற்கொள்ளலாம்.
உதாரணமாக, மனதுக்குள் எண்களைச் சொல்வது, எளிதான மூச்சுப் பயிற்சிகளில் ஈடுபடுவது, உங்களுக்கு சுவாரசியம் அளிக்காத புத்தகங்களை வாசிப்பது போன்றவை. படுக்கப் போகும் முன் வெதுவெதுப்பான தண்ணீரில் குளிக்கலாம். இதனால் தசைகள் இலகுவாகும். உடல் சூடு குறையும். மிதமான சூட்டில் பாலும் அருந்தலாம்.
தொடர்ந்து தூக்கமின்மை இருந்தால், மருத்துவர் ஆலோசனைப் படி மாத்திரை சாப்பிடலாம். எவ்வளவு வேலைப்பளு இருந்தாலும், இரவில் போதுமான அளவு தூங்குவதை வழக்கமாக வைத்திருக்க வேண்டும். வேறு வழியில்லை என்ற நிலையில், குட்டித் தூக்கம் போட்டாவது நிலைமையைச் சமாளிக்கலாம்.
படுக்கப்போகும் முன் சில எளிய உடற்பயிற்சிகள் செய்வது, தூக்கம் வரவழைப்பதற்கான ஒரு வழி. ஆனால் பெரும்பாலானோர் படுக்கும் முன் உடற்பயிற்சி செய்வதில்லை. இரவுச் சாப்பாட்டுக்கு முன்பு கூட சில எளிய உடற்பயிற்சிகளை மேற்கொள்ளலாம்.
ஆனால் பொதுவாக, காலையில் நேரம் ஒதுக்கி உடற்பயிற்சி செய்வதுதான் நல்லது. தூக்கமின்மை நிரந்தர நோயாக மாறுவதற்கு முன் மாத்திரைகள் சாப்பிடுவதில் தப்பில்லை. ஆனால் மருத்துவரின் பரிந்துரை அவசியம். நாமாக எடுத்துக்கொள்ளும் ஒரு சில மாத்திரைகள் வீரியம் மிகுந்ததாக இருக்கலாம்.
அதன் காரணமாக, தலைவலி, வாந்தி, சோர்வு போன்ற பக்க விளைவுகள் ஏற்ப டக்கூடும். எனவே கவனம் தேவை. தூக்க மாத்திரைக்கு அடிமையாவதும் ஆபத்து. போதுமான நேரமில்லை, இரவில் நான்கு – ஐந்து மணி நேரம்தான் தூங்க முடியும் என்ற நிலை உள்ளவர்கள், இரவில் தாமதமாகப்படுத்து, காலை ஆறு மணிக்கு எழலாம்.
தூக்கம் வரும் வரை, மெல்லிசைப் பாடல்களைக் கேட்பது போன்றவற்றில் ஈடுபடலாம். தூக்கமின்மை பிரச்சினை இருப்பவர்கள், அது பற்றி டாக்டரிடம் ஒளிவுமறைவின்றிச் சொல்லிவிட வேண்டும். அப்போதுதான் அவர்களால் இப்பிரச்சினைக்குத் தீர்வு காண முடியும்.
உதாரணமாக, தூக்கமின்றி காலை ஆட்டிக் கொண்டே இருக்கும் ரெஸ்ட்லெஸ் லெக்ஸ் சிண்ட்ரோம், மூச்சு விடுவதில் சிரமம், தீவிர மனச்சோர்வு, தைராய்டு பிரச்சினை போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்கள், மருத்துவரை அணுகி தக்க நிவாரணம் பெற வேண்டும்.
நாளை முதலாம் திகதியிலிருந்து அமுலுக்கு வரவுள்ள முச்சக்கர வண்டிகளுக்கான புதிய ஒழுங்கு விதிகளை போக்குவரத்து அமைச்சர் குமார் வெல்கமவால் வர்த்தமானியில் வெளியிட்டுள்ளார்.
சகல முச்சக்கர வண்டிகளிலும் மீற்றர் பொருத்தப்படல், கட்டண விவரத்தை வண்டியின் வெளிப்புறத்தில் காட்சிப்படுத்தல், வலது புறத்தில் கதவு பொருத்தப்படல் ஆகியவற்றை இந்த ஒழுங்குவிதிகள் கட்டாயப்படுத்துவதுடன் முச்சக்கர வண்டியின் வேகம் ஒருபோதும் மணிக்கு 40 கிலோமீற்றருக்கு மேல் போகக்கூடாது எனவும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் மூன்று பயணிகளுக்கு மேல் முச்சக்கர வண்டியில் பயணிக்க முடியாது எனவும் வர்த்தமானியில் வெளியிடப்பட்ட ஒழுங்குவிதியில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆயினும் ஒரு வளர்ந்தவருக்கு பதிலாக 12 வயதிற்கு குறைந்த இரண்டு பேரை ஏற்றிச் செல்லலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சாரதியின் இருக்கையின் பின்புறத்தில் சாரதியின் புகைப்படம், சாரதியின் அனுமதி பத்திரத்தின் பிரதி, தேசிய அடையாள அட்டையின் இலக்கம், அவசர தொடர்புக்கான தொலைபேசி இலக்கம் எனும் விபரங்களை காட்சிப்படுத்த வேண்டும் எனவும் ஒழுங்குவிதியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஒழுங்கு விதிகளின் மூலம் முச்சக்கர வண்டி விபத்துக்களை பெருமளவில் குறைக்கலாம் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
சகல முச்சக்கர வண்டிகளிலும் மீற்றர் பொருத்தப்படல், கட்டண விவரத்தை வண்டியின் வெளிப்புறத்தில் காட்சிப்படுத்தல், வலது புறத்தில் கதவு பொருத்தப்படல் ஆகியவற்றை இந்த ஒழுங்குவிதிகள் கட்டாயப்படுத்துவதுடன் முச்சக்கர வண்டியின் வேகம் ஒருபோதும் மணிக்கு 40 கிலோமீற்றருக்கு மேல் போகக்கூடாது எனவும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் மூன்று பயணிகளுக்கு மேல் முச்சக்கர வண்டியில் பயணிக்க முடியாது எனவும் வர்த்தமானியில் வெளியிடப்பட்ட ஒழுங்குவிதியில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆயினும் ஒரு வளர்ந்தவருக்கு பதிலாக 12 வயதிற்கு குறைந்த இரண்டு பேரை ஏற்றிச் செல்லலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சாரதியின் இருக்கையின் பின்புறத்தில் சாரதியின் புகைப்படம், சாரதியின் அனுமதி பத்திரத்தின் பிரதி, தேசிய அடையாள அட்டையின் இலக்கம், அவசர தொடர்புக்கான தொலைபேசி இலக்கம் எனும் விபரங்களை காட்சிப்படுத்த வேண்டும் எனவும் ஒழுங்குவிதியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஒழுங்கு விதிகளின் மூலம் முச்சக்கர வண்டி விபத்துக்களை பெருமளவில் குறைக்கலாம் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
யாழ்ப்பாணம் ஏழாலை மேற்கு கோட்டைக்காட்டை சேர்ந்த நகுலேஸ்வரன் நளிர்வனா ( 16 வயது) என்ற மாணவியே கடந்த நான்கு நாட்களாக காணாமல் போயுள்ளதாக, பெற்றோரால் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக சுன்னாகம் பொலிசார் தெரிவித்தனர்.
க.பொத சாதாரண தரத்தில் கல்வி கற்று வருவதடன் இந்த மாணவி கடந்த செவ்வாய்க்கிழமை பாடசாலையில் மேலதிக வகுப்பிற்காக சென்றவர் இதுவரையில் வீடுதிரும்பவில்லை என முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டள்ளதுன் குறித்த மாணவியை அவரது தந்தையே சம்பவ தினத்தன்று வகுப்பில் விட்டுவிட்டு வந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இச்சம்பவம் தொடர்பான விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக சுன்னாகம் பொலிசார் குறிப்பிட்டனர்.
க.பொத சாதாரண தரத்தில் கல்வி கற்று வருவதடன் இந்த மாணவி கடந்த செவ்வாய்க்கிழமை பாடசாலையில் மேலதிக வகுப்பிற்காக சென்றவர் இதுவரையில் வீடுதிரும்பவில்லை என முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டள்ளதுன் குறித்த மாணவியை அவரது தந்தையே சம்பவ தினத்தன்று வகுப்பில் விட்டுவிட்டு வந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இச்சம்பவம் தொடர்பான விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக சுன்னாகம் பொலிசார் குறிப்பிட்டனர்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் தலைவர் சம்பந்தன் அவர்களின் சட்டாம்பிள்ளைத்தனத்திற்கு எதிராகக் குமைந்து கொண்டிருந்த உணர்வுகள் ஆங்காங்கே மெல்ல வெடித்துவிட்டிருப்பதாகத் தகவல்கள் வருகின்றன.
முதலமைச்சர் வேட்பாளரை வலுக்கட்டாயமாகத் திணித்ததும், அதற்கு அவருக்குத் துணைபோன சுரேஷ் போன்றவர்களுக்கு வேட்பாளர் தெரிவில் சலுகை காட்டப்பட்டதும், தமிழரசுக் கட்சியில் சீற் தருவதாகச் சொல்லி வைத்திருந்த பலரை கடைசி நேரத்தில் வெட்டி விட்ட அலட்சியமும் அவர் மீதான குமுறல்களுக்குக் காரணமாகி விட்டிருக்கிறது.
விருப்பு வாக்குகள் மூலம் சம்பந்தருக்குப் பாடம் புகட்ட தீர்மானித்திருப்பதாக உள்ளிருந்து தகவல் கசிகிறது. சம்பந்தன் நினைப் பதுபோல வெளியிலிருந்து திணிக்கப்பட்டவருக்கு இங்கே வாக்குகள் விழாது என்று ஏனையோர் காட்ட முற்படுவதாகக் கேள்வி.
அதேபோல, வேட்பாளர் எண்ணிக்கையைப் பொறுத்தவரையில் கூட்டமைப்புக்குள் தமிழரசுக் கட்சிக்கு அடுத்த இடம் தங்களுடையதுதான் என்பதை நிறுவிவிட்டிருக்கும் சுரேஷ் அணியினர், கூடிய விருப்பு வாக்குகளை எடுப்பதன் மூலம் தம்பியை மாகாண அமைச்சராக்குவதில் யாரும் தடைக்கு நிற்க முடியா நிலையை ஏற்படுத்த முயல்கின்றனர்.
சித்தர், சங்கரி, சீ.வீ.கே, சிவாஜிலிங்கம் போன்ற பழுத்த தலைகளை எல்லாம் எதிர்த்தே சுரேஷ் தனது வாரிசை அரியணை ஏற்ற வேண்டியுள்ளது. இந்தக் களேபரத்தில், இவர் வென்றால் அரசுக்கு விலைபோய்விடுவார் என்ற குற்றச்சாட்டை அவர்களி டையே ஒருவர் மாறி ஒருவர் மீது பிரச்சாரங்களில் சொல்லிவருவதைக் கேட்க முடிகிறது.
இதற்கு முந்திய தேர்தல்களில் கூட்டமைப்புக்காக முழுமூச்சாக மக்களுக்கு உணர்ச்சியேற்றலைச் செய்துவந்த யாழ்ப்பாணப் பத்திரிகை இம்முறை தேர்தலுக்கு முன்பே அரசால் வாங்கப்பட்டு விட்ட தாகவும் எனவே கூட்டமைப்பு வேட்பாளர்கள் அப்பத்திரிகையையும் அப்பத்திரிகை கூட்டமைப்பு வேட்பாளர்களையும் புறக்கணித்துச் செயற்படுவதாகச் சொல்லிக்கொள்கிறார்கள்.
அதேசமயம், அந்தப் பத்திரிகையின் எழுத்துக்கள் மிக நுண்மையான விதத்தில் கூட்டமைப்பு வேட்பாளர்களுக்கு எதிராகவே இயங் குவதையும் அவதானிக்க முடிகிறது. அதன் இணையத் தளத்தில் அரச தரப்பு வேட்பாளர் ஒருவரே மக்களால் அதிகம் கவனிக்கப்படு வதாக ஒரு கணிப்பும் வெளியிடப்பட்டிருப்பதைப் பார்க்க முடிகிறது.
கூட்டிக்கழித்துப் பார்த்தால், இம்முறை உணர்ச்சியேற்றி அலை களை உருவாக்கும் ஊதுகுழல்களில் ஒன்று அதன் சத்தத்தையாரிடமோ இழந்துவிட்டதால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கு, உணர்ச்சியலைகளை உருவாக்கி வெல்லும் தந்திரத்தில் அது ஒரு இழப்புத்தான்.
கூட்டமைப்பின் தலைவர்களும் மற்றெல்லா நாட்களிலும் ஒருவர் சிண்டைப் பிடித்து மற்றவர் உலுக்கிக் கொண்டிருந்தாலும் தேர்தல் என்று வந்துவிட்டால், ஒற்றுமையைக் காட்டுவோம் உலகைப் பார்க்கவைப்போம் என்று அந்த ஓரிரு மாதங்களுக்கு தத்தம் வாட் களை முதுகுக்குப் பின்னால் ஒளித்து வைத்துக் கொள்வார்கள்.
இம்முறை தேர்தல் காலத்திலேயே அதிருப்தி காண்பித்தலும், ஒருவரை ஒருவர் வெட்டி ஓடுதலும், மற்றவர் காலைத் தடக்கி விழுத்தி முந்துதலும் கூட்டமைப்பினரால் மறைத்துவிட முடியாத தாகியிருக்கிறது.
நாடாளுமன்றத்துக்கான தேர்தல் என்றால், எல்லோரும் இந் நாட்டு மன்னர் என்பதுபோல எல்லோரும் எம்.பி.க்கள் என்றே ஆவ தால் பிரச்சினையில்லை. ஆனால் மாகாண சபையிலோ ஒரு முத லமைச்சரும் நான்கு அமைச்சர்களும் தெரிவு செய்யப்பட வேண்டும்.
அன்பால் இணைந்திருக்கும் கூட்டமைப்பில் இந்தத் தேர்தலில் எதிராளிகளைக் கவனிக்க முடியாதவாறு தங்களுக்குள்ளேயே அடி தடிப் பட்டுக்கொள்ள நேர்ந்திருப்பது இதனால்தான்
முதலமைச்சர் வேட்பாளரை வலுக்கட்டாயமாகத் திணித்ததும், அதற்கு அவருக்குத் துணைபோன சுரேஷ் போன்றவர்களுக்கு வேட்பாளர் தெரிவில் சலுகை காட்டப்பட்டதும், தமிழரசுக் கட்சியில் சீற் தருவதாகச் சொல்லி வைத்திருந்த பலரை கடைசி நேரத்தில் வெட்டி விட்ட அலட்சியமும் அவர் மீதான குமுறல்களுக்குக் காரணமாகி விட்டிருக்கிறது.
விருப்பு வாக்குகள் மூலம் சம்பந்தருக்குப் பாடம் புகட்ட தீர்மானித்திருப்பதாக உள்ளிருந்து தகவல் கசிகிறது. சம்பந்தன் நினைப் பதுபோல வெளியிலிருந்து திணிக்கப்பட்டவருக்கு இங்கே வாக்குகள் விழாது என்று ஏனையோர் காட்ட முற்படுவதாகக் கேள்வி.
அதேபோல, வேட்பாளர் எண்ணிக்கையைப் பொறுத்தவரையில் கூட்டமைப்புக்குள் தமிழரசுக் கட்சிக்கு அடுத்த இடம் தங்களுடையதுதான் என்பதை நிறுவிவிட்டிருக்கும் சுரேஷ் அணியினர், கூடிய விருப்பு வாக்குகளை எடுப்பதன் மூலம் தம்பியை மாகாண அமைச்சராக்குவதில் யாரும் தடைக்கு நிற்க முடியா நிலையை ஏற்படுத்த முயல்கின்றனர்.
சித்தர், சங்கரி, சீ.வீ.கே, சிவாஜிலிங்கம் போன்ற பழுத்த தலைகளை எல்லாம் எதிர்த்தே சுரேஷ் தனது வாரிசை அரியணை ஏற்ற வேண்டியுள்ளது. இந்தக் களேபரத்தில், இவர் வென்றால் அரசுக்கு விலைபோய்விடுவார் என்ற குற்றச்சாட்டை அவர்களி டையே ஒருவர் மாறி ஒருவர் மீது பிரச்சாரங்களில் சொல்லிவருவதைக் கேட்க முடிகிறது.
இதற்கு முந்திய தேர்தல்களில் கூட்டமைப்புக்காக முழுமூச்சாக மக்களுக்கு உணர்ச்சியேற்றலைச் செய்துவந்த யாழ்ப்பாணப் பத்திரிகை இம்முறை தேர்தலுக்கு முன்பே அரசால் வாங்கப்பட்டு விட்ட தாகவும் எனவே கூட்டமைப்பு வேட்பாளர்கள் அப்பத்திரிகையையும் அப்பத்திரிகை கூட்டமைப்பு வேட்பாளர்களையும் புறக்கணித்துச் செயற்படுவதாகச் சொல்லிக்கொள்கிறார்கள்.
அதேசமயம், அந்தப் பத்திரிகையின் எழுத்துக்கள் மிக நுண்மையான விதத்தில் கூட்டமைப்பு வேட்பாளர்களுக்கு எதிராகவே இயங் குவதையும் அவதானிக்க முடிகிறது. அதன் இணையத் தளத்தில் அரச தரப்பு வேட்பாளர் ஒருவரே மக்களால் அதிகம் கவனிக்கப்படு வதாக ஒரு கணிப்பும் வெளியிடப்பட்டிருப்பதைப் பார்க்க முடிகிறது.
கூட்டிக்கழித்துப் பார்த்தால், இம்முறை உணர்ச்சியேற்றி அலை களை உருவாக்கும் ஊதுகுழல்களில் ஒன்று அதன் சத்தத்தையாரிடமோ இழந்துவிட்டதால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கு, உணர்ச்சியலைகளை உருவாக்கி வெல்லும் தந்திரத்தில் அது ஒரு இழப்புத்தான்.
கூட்டமைப்பின் தலைவர்களும் மற்றெல்லா நாட்களிலும் ஒருவர் சிண்டைப் பிடித்து மற்றவர் உலுக்கிக் கொண்டிருந்தாலும் தேர்தல் என்று வந்துவிட்டால், ஒற்றுமையைக் காட்டுவோம் உலகைப் பார்க்கவைப்போம் என்று அந்த ஓரிரு மாதங்களுக்கு தத்தம் வாட் களை முதுகுக்குப் பின்னால் ஒளித்து வைத்துக் கொள்வார்கள்.
இம்முறை தேர்தல் காலத்திலேயே அதிருப்தி காண்பித்தலும், ஒருவரை ஒருவர் வெட்டி ஓடுதலும், மற்றவர் காலைத் தடக்கி விழுத்தி முந்துதலும் கூட்டமைப்பினரால் மறைத்துவிட முடியாத தாகியிருக்கிறது.
நாடாளுமன்றத்துக்கான தேர்தல் என்றால், எல்லோரும் இந் நாட்டு மன்னர் என்பதுபோல எல்லோரும் எம்.பி.க்கள் என்றே ஆவ தால் பிரச்சினையில்லை. ஆனால் மாகாண சபையிலோ ஒரு முத லமைச்சரும் நான்கு அமைச்சர்களும் தெரிவு செய்யப்பட வேண்டும்.
அன்பால் இணைந்திருக்கும் கூட்டமைப்பில் இந்தத் தேர்தலில் எதிராளிகளைக் கவனிக்க முடியாதவாறு தங்களுக்குள்ளேயே அடி தடிப் பட்டுக்கொள்ள நேர்ந்திருப்பது இதனால்தான்
கொழும்பு கோட்டை நகரில் நடமாடும் விபச்சாரத் தொழிலில் ஈடுபட்டு வந்த பத்துப் பெண்களை கோட்டை பொலிஸார் நேற்றிரவு கைது செய்துள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட பெண்கள் கொழும்பு நகரை அண்மித்த பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனத் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்டவர்கள் இன்று மாளிகாகந்தை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு எதிர்வரும் செப்டெம்பர் 6 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட பெண்கள் கொழும்பு நகரை அண்மித்த பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனத் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்டவர்கள் இன்று மாளிகாகந்தை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு எதிர்வரும் செப்டெம்பர் 6 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இலங்கைக்கு பயணித்த ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை, இலங்கை இராணுவத்தினரினதும் விடுதலைப் புலிகளினதும் இறுதிக் கட்ட போர் முடிவுக்கு வந்த முள்ளிவாய்க்காலில் மரணித்த விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உள்ளிட்ட உறுப்பினர்களுக்கு மரியாதை செலுத்தி மலர் அஞ்சலி செலுத்த முற்பட்ட போதும் அரசாங்கத்தின் பலத்த எதிர்ப்பினால் அவரது எண்ணம் கைகூடவில்லை என நம்பகத் தன்மைமிகுந்த செய்திகள் குறிப்பிடுகின்றன.
நவநீதம்பிள்ளைக்காக வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சும் கொழும்பு ஐக்கிய நாடுகள் காரியாலயமும் ஒழுங்கு செய்திருந்த கூட்டத்தில்கூட மலர் அஞ்சலி பற்றிக் குறிப்பிடப்படவில்லை.
ஆயினும், முள்ளிவாய்க்காலில் மலரஞ்சலி செலுத்தப் போகிறார் என்ற செய்தி காட்டுத் தீபோல பரவியத் தொடர்ந்து பாதுகாப்புப் பிரிவும் வெளிநாட்டலுவல்கள் அமைச்சும், பிள்ளையிடம் தங்கள் எண்ணத்தை மக்கள் அறிந்து எதிர்ப்பலைகள் எழுந்துள்ளன. எனவே, தங்கள் கருத்தை மாற்றிக் கொள்ளுமாறு கோரியுள்ளது.
இந்தச் செயற்பாட்டை எக்காரணம் கொண்டும் தாம் ஏற்றுக் கொள்வதில்லை என அரசாங்கத்தின் இராஜதந்திர வட்டாரங்கள் அறிவித்த்தைத் தொடர்ந்து பிள்ளை கடைசியில் தனது எண்ணத்தை மாற்றிக் கொண்டுள்ளார்.
சிங்கள ஊடகம் ஒன்றிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. எது எவ்வாறாயினும் புலிகள் அமைப்பு ஒரு கொடுரமான அமைப்பு என்றும் அதன் உறுப்பினர்களுக்கு ஐக்கிய நாடுகள் சபை மன்னிப்பு கொடுக்காது என்றும் பிள்ளை வெளிப்படையாக தெரிவித்துள்ள நிலையில் மேற்படி சிங்கள ஊடகத்தின் செய்தியின் உண்மைத்தன்மை சந்தேகத்திற்குரியதே.
(கலைமகன் பைரூஸ்)
நவநீதம்பிள்ளைக்காக வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சும் கொழும்பு ஐக்கிய நாடுகள் காரியாலயமும் ஒழுங்கு செய்திருந்த கூட்டத்தில்கூட மலர் அஞ்சலி பற்றிக் குறிப்பிடப்படவில்லை.
ஆயினும், முள்ளிவாய்க்காலில் மலரஞ்சலி செலுத்தப் போகிறார் என்ற செய்தி காட்டுத் தீபோல பரவியத் தொடர்ந்து பாதுகாப்புப் பிரிவும் வெளிநாட்டலுவல்கள் அமைச்சும், பிள்ளையிடம் தங்கள் எண்ணத்தை மக்கள் அறிந்து எதிர்ப்பலைகள் எழுந்துள்ளன. எனவே, தங்கள் கருத்தை மாற்றிக் கொள்ளுமாறு கோரியுள்ளது.
இந்தச் செயற்பாட்டை எக்காரணம் கொண்டும் தாம் ஏற்றுக் கொள்வதில்லை என அரசாங்கத்தின் இராஜதந்திர வட்டாரங்கள் அறிவித்த்தைத் தொடர்ந்து பிள்ளை கடைசியில் தனது எண்ணத்தை மாற்றிக் கொண்டுள்ளார்.
சிங்கள ஊடகம் ஒன்றிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. எது எவ்வாறாயினும் புலிகள் அமைப்பு ஒரு கொடுரமான அமைப்பு என்றும் அதன் உறுப்பினர்களுக்கு ஐக்கிய நாடுகள் சபை மன்னிப்பு கொடுக்காது என்றும் பிள்ளை வெளிப்படையாக தெரிவித்துள்ள நிலையில் மேற்படி சிங்கள ஊடகத்தின் செய்தியின் உண்மைத்தன்மை சந்தேகத்திற்குரியதே.
(கலைமகன் பைரூஸ்)
எதிர்வரும் செப்டம்பர் மாதக் கடைசிப் பகதியில் திறந்துவைக்கப்படவுள்ள கொழும்பு – கட்டுநாயக்க அதிவேகப் பாதையில் பயணிக்கும் வாகனமொன்றின் ஒரு பயணத்திற்கு ரூபா 200க்கான கட்டணம் அறவிடப்படவுள்ளதாக பெருந்தெருக்கள் அமைச்சு குறிப்பிடுகின்றது.
இந்த அதிவேகப் பாதையில் உள்நுழையும் பிரதான வாயில் புதிய களனிப் பாலத்திற்கு இரண்டு கிலோ மீற்றருக்கு அப்பால் அமைந்துள்ளது. அவ்விடம் வரை பயணிப்பதற்கு கட்டணம் அறவிடப்பட மாட்டாது எனவும் அமைச்சு அறிவித்துள்ளது.
திறந்துவைக்கப்பட்டதன் பின்னர் ஒருநாளைக்கு 30,000 வாகனங்கள் இப்பாதையில் பயணிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
(கேஎப்)
இந்த அதிவேகப் பாதையில் உள்நுழையும் பிரதான வாயில் புதிய களனிப் பாலத்திற்கு இரண்டு கிலோ மீற்றருக்கு அப்பால் அமைந்துள்ளது. அவ்விடம் வரை பயணிப்பதற்கு கட்டணம் அறவிடப்பட மாட்டாது எனவும் அமைச்சு அறிவித்துள்ளது.
திறந்துவைக்கப்பட்டதன் பின்னர் ஒருநாளைக்கு 30,000 வாகனங்கள் இப்பாதையில் பயணிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
(கேஎப்)
தான் விடுதலைப் புலி ஆதரவாளர் என்பதைப் பலர் நிரூபிக்க முனைந்தாலும் தான் எப்போதும் சுதந்திரமான கருத்துக்களைப் பரிமாற்றிக் கொள்வதற்கே முன்வருவதாக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகளுக்கான ஆணையாளர் நவநீதம் பிள்ளை குறிப்பிடுகிறார்.
தனது ஒரு வார உத்தியோகபூர்வ பயணத்தை முடித்துக் கொண்டு இன்று கொழும்பிலுள்ள ஐக்கிய நாடுகள் அமையகத்தில் நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
எல்.ரீ.ரீ.ஈ அமைப்பு மிகவும் கொடூரமான அமைப்பு என்பதை அங்கு குறிப்பிட்ட அவர், இலங்கையின் போர்க் காலப்பகுதியில் இடம்பெற்றதாக்க் குறிப்பிடப்படும் குற்றவியல் தொடர்பில் நடாத்தப்படும் தேசிய ரீதியிலான ஆய்வுக்கு மனித உரிமைகள் அமைப்பு தனது பூரண ஒத்துழைப்பை வழங்கும் என்றும் குறிப்பிட்டார்.
என்றாலும், போர்க்குற்றவியல் தொடர்பில் இலங்கை அரசாங்கம் நம்பகத்தன்மைமிகு ஆய்வினை மேற்கொள்ளாத விடத்து சர்வதேச ரீதியிலான ஆய்வு மேற்கொள்ளப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன என்றும் அவர் தெளிவுறுத்தியுள்ளார்.
நவநீதன் பிள்ளை இன்று தனது உத்தியோகபூர்வ பயணத்தை முடித்துக் கொண்டு இலங்கையிலிருந்து பயணித்தார்.
(கேஎப்)
தனது ஒரு வார உத்தியோகபூர்வ பயணத்தை முடித்துக் கொண்டு இன்று கொழும்பிலுள்ள ஐக்கிய நாடுகள் அமையகத்தில் நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
எல்.ரீ.ரீ.ஈ அமைப்பு மிகவும் கொடூரமான அமைப்பு என்பதை அங்கு குறிப்பிட்ட அவர், இலங்கையின் போர்க் காலப்பகுதியில் இடம்பெற்றதாக்க் குறிப்பிடப்படும் குற்றவியல் தொடர்பில் நடாத்தப்படும் தேசிய ரீதியிலான ஆய்வுக்கு மனித உரிமைகள் அமைப்பு தனது பூரண ஒத்துழைப்பை வழங்கும் என்றும் குறிப்பிட்டார்.
என்றாலும், போர்க்குற்றவியல் தொடர்பில் இலங்கை அரசாங்கம் நம்பகத்தன்மைமிகு ஆய்வினை மேற்கொள்ளாத விடத்து சர்வதேச ரீதியிலான ஆய்வு மேற்கொள்ளப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன என்றும் அவர் தெளிவுறுத்தியுள்ளார்.
நவநீதன் பிள்ளை இன்று தனது உத்தியோகபூர்வ பயணத்தை முடித்துக் கொண்டு இலங்கையிலிருந்து பயணித்தார்.
(கேஎப்)
சிலாபம், முன்னேஸ்வரம் ஸ்ரீ பத்திரகாளியம்மன் ஆலயத் திற்கு இன்று சென்ற அமைச்சர் மேர்வின் சில்வா அங்கு பலிபூஜைக்காக அடைத்துவைக்கப்பட்டிருந்த சேவல்களை விடுவித்துள்ளதுடன் இதற்கு பின்னர் ஆலயத்திற்கு சேவல்களை கொண்டுவருவதற்கு இடமளிக்கவேண்டா மென்றும், ஆலயத்திற்கு வெளியில் வைத்தே அவற்றை விட்டுவிடுமாறும் ஆலய நிர்வாகத்தினரிடம் அமைச்சர் கேட்டுக்கொண்டார்.
கடந்தவருடமும் மேர்வின் முன்னேஸ்வரம் ஸ்ரீ பத்திரகாளியம்மன் ஆலயத்திற்கு சென்று அங்கு பலிபூஜைக்காக வைக்கப்பட்டிருந்த மிருகங்கள் தொடர்பில் பல்வேறு பிரச்சினைகளை ஏற்படுத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்தவருடமும் மேர்வின் முன்னேஸ்வரம் ஸ்ரீ பத்திரகாளியம்மன் ஆலயத்திற்கு சென்று அங்கு பலிபூஜைக்காக வைக்கப்பட்டிருந்த மிருகங்கள் தொடர்பில் பல்வேறு பிரச்சினைகளை ஏற்படுத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ்.மாவட்ட அமைப்பாளர் அங்கஜனின் தந்தையார் இராமநாதன், சுதந்திரக் கட்சியின் சக வேட்பாளர் குமாரு சர்வானந்த் மீது சாவகச்சேரியில் வைத்து துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்ட சம்பவம் தொடர்பாக பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், தனது தந்தையின் கைத்துப்பாக்கி கொழும்பிலேயே இருக்கின்ற நிலையில் அவரால் எவ்வாறு துப்பாக்கிப்பிரயோகத்தை மேற்கொண் டிருக்க முடியும் என்று ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வடமாகாண சபையின் வேட்பாளர் அங்கஜன் இராமநாதன் கேள்வியெழுப்பினார்.
யாழ்ப்பாணத்திலுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி அலுவலகத்தில் நேற்று வெள்ளிக் கிழமை இரவு இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திபிலேயே அவர் மேற்கண்டவாறு கேள்வியெழுப்பினார். அங்கு அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், எனது தந்தை யாராகிய ராமநாதனிடம் அனுமதிபத்திரம் பெற்ற கைதுப்பாக்கி இருக்கின்றது. அந்த துப்பாக்கியினை அவர் கடந்த 22 ஆம் திகதி வியாழக் கிழமை கொழும்பில் பொலிஸாரிடம் கையளித்துள்ளார்.
இந்நிலையில் சாவகச்சேரி இடம்பெற்ற சம்பவத்தில் எனது தந்தை எவ்வாறு துப்பாக்கி பிரயோகத்தை செய்திருக்க முடியும். சாவக்கச்சேரியில் கடந்த 27 ஆம் திகதி இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் பொலிஸார் பக்கச்சார்பாக செயற்படு கின்றனர் என்றும் அவர் குற்றஞ்சாட்டினார்.
எனது தந்தையாருக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள பொய் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவருக்கு ஏற்பட்டுள்ள உடல் நலக்குறைவால் அவர் தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவை அனைத்துமே தேர்தல் காலங்களில் என்னை முடக்கி போடுவதற்காக மேற்கொள்ளப்படுகின்ற திட்டமிட்ட செயற்பாடாகும். எனக்கு மக்களின் ஆதரவு என்றுமே உள்ளது. எனது பயணத்தை நான் கைவிடமாட்டேன் என்றும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை இராமநாதன் கைது செய்யப்பட வேண்டும் என வலியுறுத்தி தமிழ் தேசிய கூட்டமைப்பின் மாகாணசபை வேட்பாளர் தம்பிராசா யாழ்.மாவட்டச் செயலகத்திற்கு முன்பாக சாகும் வரையிலான உண்ணாவிரதம் இருக்கப்போவதாகவும், சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் மாகாணசபை வேட்பாளர்களான மு.றெமீடியஸ், எஸ்.சர்வானந்த், எஸ்.அகிலதாஸ், எஸ்.பொன்னம்பலம் ஆகியோர் இராமநாதன் கைது செய்யப்படாவிடில் தேர்தலிலிருந்து விலகப்போவதாக அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
யாழ்ப்பாணத்திலுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி அலுவலகத்தில் நேற்று வெள்ளிக் கிழமை இரவு இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திபிலேயே அவர் மேற்கண்டவாறு கேள்வியெழுப்பினார். அங்கு அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், எனது தந்தை யாராகிய ராமநாதனிடம் அனுமதிபத்திரம் பெற்ற கைதுப்பாக்கி இருக்கின்றது. அந்த துப்பாக்கியினை அவர் கடந்த 22 ஆம் திகதி வியாழக் கிழமை கொழும்பில் பொலிஸாரிடம் கையளித்துள்ளார்.
இந்நிலையில் சாவகச்சேரி இடம்பெற்ற சம்பவத்தில் எனது தந்தை எவ்வாறு துப்பாக்கி பிரயோகத்தை செய்திருக்க முடியும். சாவக்கச்சேரியில் கடந்த 27 ஆம் திகதி இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் பொலிஸார் பக்கச்சார்பாக செயற்படு கின்றனர் என்றும் அவர் குற்றஞ்சாட்டினார்.
எனது தந்தையாருக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள பொய் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவருக்கு ஏற்பட்டுள்ள உடல் நலக்குறைவால் அவர் தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவை அனைத்துமே தேர்தல் காலங்களில் என்னை முடக்கி போடுவதற்காக மேற்கொள்ளப்படுகின்ற திட்டமிட்ட செயற்பாடாகும். எனக்கு மக்களின் ஆதரவு என்றுமே உள்ளது. எனது பயணத்தை நான் கைவிடமாட்டேன் என்றும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை இராமநாதன் கைது செய்யப்பட வேண்டும் என வலியுறுத்தி தமிழ் தேசிய கூட்டமைப்பின் மாகாணசபை வேட்பாளர் தம்பிராசா யாழ்.மாவட்டச் செயலகத்திற்கு முன்பாக சாகும் வரையிலான உண்ணாவிரதம் இருக்கப்போவதாகவும், சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் மாகாணசபை வேட்பாளர்களான மு.றெமீடியஸ், எஸ்.சர்வானந்த், எஸ்.அகிலதாஸ், எஸ்.பொன்னம்பலம் ஆகியோர் இராமநாதன் கைது செய்யப்படாவிடில் தேர்தலிலிருந்து விலகப்போவதாக அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இலங்கைக்கு விஜயம் செய்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளைக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையிலான சந்திப்பும் பேச்சுவார்த்தையும் நேற்று(30.08.2013) அலரி மாளிகையில் நடைபெற்றதுடன், அலரி மாளிகையைப் பார்க்க வந்திருந்த பாடசலை மாணவர்களையும், நவநீதம் பிள்ளை சந்தித்து இலங்கையின் சுதந்திரக் கல்வி பற்றி உரையாடினார்.
நவநீதம் பிள்ளையுடன் நடைபெற்ற சந்திப்பு தொடர்பில் ஜனாதிபதி செயலகம் விடுத்துள்ள அறிக்கையில், மோதல்கள் நிறைவடைந்ததன் பின்னர் இலங்கையில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்திகள் தொடர்பில் நவநீதம்பிள்ளை தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துள்ளதுடன், புனர்வாழ்வு, மீள்நிர்மாணம், சுகாதாரம் மற்றும் கல்வி போன்ற துறைகளில் செய்யப்பட்டுள்ள முதலீடுகளை தன்னால் கண்டுக்கொள்ள முடிந்ததாக நவீபிள்ளை தெரிவித்துள்ளார்.
வடக்கு கிழக்கிற்கு சென்று மக்களை சந்தித்ததுடன் அமைச்சர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், அவர் ஜனாதிபதியிடம் எடுத்துரைத்துள்ளதுடன், புனர்வாழ்வு மற்றும் மறுசீரமைப்பு தொடர்பிலான உங்களுடைய நோக்கத்தை நான் மதிக்கின்றேன் என்று தெரிவித்துள்ள நவீபிள்ளை, நிலையான கட்டிடங்களை நிர்மாணிப்பது மட்டுமன்றி மக்களுக்கிடையிலான ஒற்றுமை மற்றும் புனர்நிர்மானத்தை உறுதிப்படுத்தவேண்டும். அதற்காக தேவையான சட்டங்கள் இயற்றவேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
காணாமல் போனவர்களை கண்டறிவதற்காக குழு நியமிக்கப்பட்டது தொடர்பிலும் காணாமல் போனதை குற்றமாக கருதி சட்டத்தில் மாற்றங்களை கொண்டுவருவதற்கு எடுக்கப்பட்டுள்ள முயற்சிகளையும், அவர் வரவேற்றுள்ளதுடன் சிறுபான்மை மக்களின் வணக்கஸ்தலங்கள் மீது மேற்கொள்ளப்படும் தாக்குதல்கள் தொடர்பில் கவனம் செலுத்தவேண்டும் என்றும் அவர் ஜனாதிபதியிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பதிலளிக்கும் போது இவ்வாறான சம்பவங்கள் திட்டமிட்டு முன்னெடுக்கப்படுவதொன்றல்ல என்றும் திடிரென நடைபெறும் ஒன்றெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நவநீதம் பிள்ளையுடன் நடைபெற்ற சந்திப்பு தொடர்பில் ஜனாதிபதி செயலகம் விடுத்துள்ள அறிக்கையில், மோதல்கள் நிறைவடைந்ததன் பின்னர் இலங்கையில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்திகள் தொடர்பில் நவநீதம்பிள்ளை தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துள்ளதுடன், புனர்வாழ்வு, மீள்நிர்மாணம், சுகாதாரம் மற்றும் கல்வி போன்ற துறைகளில் செய்யப்பட்டுள்ள முதலீடுகளை தன்னால் கண்டுக்கொள்ள முடிந்ததாக நவீபிள்ளை தெரிவித்துள்ளார்.
வடக்கு கிழக்கிற்கு சென்று மக்களை சந்தித்ததுடன் அமைச்சர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், அவர் ஜனாதிபதியிடம் எடுத்துரைத்துள்ளதுடன், புனர்வாழ்வு மற்றும் மறுசீரமைப்பு தொடர்பிலான உங்களுடைய நோக்கத்தை நான் மதிக்கின்றேன் என்று தெரிவித்துள்ள நவீபிள்ளை, நிலையான கட்டிடங்களை நிர்மாணிப்பது மட்டுமன்றி மக்களுக்கிடையிலான ஒற்றுமை மற்றும் புனர்நிர்மானத்தை உறுதிப்படுத்தவேண்டும். அதற்காக தேவையான சட்டங்கள் இயற்றவேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
காணாமல் போனவர்களை கண்டறிவதற்காக குழு நியமிக்கப்பட்டது தொடர்பிலும் காணாமல் போனதை குற்றமாக கருதி சட்டத்தில் மாற்றங்களை கொண்டுவருவதற்கு எடுக்கப்பட்டுள்ள முயற்சிகளையும், அவர் வரவேற்றுள்ளதுடன் சிறுபான்மை மக்களின் வணக்கஸ்தலங்கள் மீது மேற்கொள்ளப்படும் தாக்குதல்கள் தொடர்பில் கவனம் செலுத்தவேண்டும் என்றும் அவர் ஜனாதிபதியிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பதிலளிக்கும் போது இவ்வாறான சம்பவங்கள் திட்டமிட்டு முன்னெடுக்கப்படுவதொன்றல்ல என்றும் திடிரென நடைபெறும் ஒன்றெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பாகிஸ்தானிலிருந்து இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட கொள்கலன் ஒன்றிற்குள் இருந்து சுமார் சுமார் 100 கோடிரூபா பெறுமதியான 100 கிலோ ஹெரோயின் போதைப் பொருளை சுங்கத் திணைக்களத்தினர் நேற்றுக் கைப்பற்றியுள்ளதுடன் இந்த கொள்கலனை இலங்கைக்கு அனுப்பியதாக சந்தேகிக்கப்படும் பாகிஸ்தான் பிரஜையொருவரும் இலங்கையில் கொள்கலனை பொறுப்பேற்க வந்த இரண்டு இலங்கையரும் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை சுங்கத் திணைக்களத்தின் பணிப்பாளரும் சுங்க திணைக்களத்தின் இறைவரி செயல ணிக்குழுவின் பணிப்பாளருமான மாலி பியசேன தெரிவித்தார்.
பாகிஸ்தானிலிருந்து கடந்த ஜூலை மாதம் 3 ஆம் திகதி இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட மேற்படி கொள்கலனில் போதைப்பொருள் இருப்பதாக கிடைத்த தகவலையடுத்து சுங்கத் திணைக்களத்தினர் விசாரணைகளை ஆரம்பித்தனர் எனினும் சுங்க திணைக்களத்தினர் விசாரணைகளை மிக இரகசியமாக நடத்தியதுடன் கொள்கலனை பொறுப்பேற்க வரும் வரை காத்திருந்தனர்.
நேற்று(30.08.2013) கொல்கலனை பொறுப்பேற்க வந்தபோதே குறித்த கொள்கலன் திறக்கப்பட்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
பாகிஸ்தானிலிருந்து கடந்த ஜூலை மாதம் 3 ஆம் திகதி இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட மேற்படி கொள்கலனில் போதைப்பொருள் இருப்பதாக கிடைத்த தகவலையடுத்து சுங்கத் திணைக்களத்தினர் விசாரணைகளை ஆரம்பித்தனர் எனினும் சுங்க திணைக்களத்தினர் விசாரணைகளை மிக இரகசியமாக நடத்தியதுடன் கொள்கலனை பொறுப்பேற்க வரும் வரை காத்திருந்தனர்.
நேற்று(30.08.2013) கொல்கலனை பொறுப்பேற்க வந்தபோதே குறித்த கொள்கலன் திறக்கப்பட்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
14 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வடமாகாண சபையின் வேட்பாளர் அங்கஜன் இராமநாதனின் தந்தையான இராமநாதன் யாழ் போதனா யாழ் போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
யாழ்.மாவட்டத்தில் நடைபெற்ற தேர்தல் வன்முறைகளுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட இவர், சாவக்கச்சேரி நீதவான் நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்திய போது, அவரை எதிர்வரும் 13 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு சாவக்கச்சேரி நீதவான் லெனின் குமார் உத்தர விட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்
யாழ்.மாவட்டத்தில் நடைபெற்ற தேர்தல் வன்முறைகளுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட இவர், சாவக்கச்சேரி நீதவான் நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்திய போது, அவரை எதிர்வரும் 13 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு சாவக்கச்சேரி நீதவான் லெனின் குமார் உத்தர விட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்
வவுனியாவில் உள்ள ஓமந்தை சோதனைச் சாவடியில் இப்போது நடைமுறையில் இருக்கும் பயணிகள் மீதான சோதனை நடவடிக்கைகளை முற்றாக நிறுத்திக் கொள்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
நேற்று(29.08.2013) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் ஈ.ழமக்கள் ஐனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா பயணிகள் போக்குவரத்து விடயத்தில் குறிப்பாக வடபகுதி மக்கள் ஓமந்தை சோதனைச்சாவடியில் எதிர்கொள்ளும் அசௌகரியங்களை விரைவில் தவிர்க்கும் நோக்கில் பிரேரணை ஒன்றை முன்வைத்திருந்தார்.
ஓமந்தை சோதனைச்சாவடியில் குறிப்பாக வடபகுதி தமிழ் பேசும் மக்கள் தமது போக்குவரத்தின் போது அசௌகரியங்களை சந்தித்து வருவதாக எடுத்து விளக்கிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஓமந்தை சோதனைச் சாவடியை முற்றாக அகற்ற வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்திருந்தார்.
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா எடுத்து விளக்கிய நியாயங்களை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ உட்பட அமைச்சர்கள் அனைவரும் ஏற்றுக்கொண்டதோடு, ஓமந்தை சோதனை நடவடிக்கையை முதற்கட்டமாக உடன் தளர்த்துவதற்கு தான் உத்தரவிடுவதாகவும், அடுத்த கட்டமாக விரைவில் குறித்த சோதனைச் சாவடியை முற்றாக அகற்றுவதற்கான நடவடிக்கையினையும் முன்னெடுப்பேன் என்றும் ஜனாதிபதி இணக்கம் தெரிவித்துள்ளார்.
தனது கோரிக்கையினை ஏற்றுக் கொண்ட ஜனாதிபதிக்கும், சக அமைச்சர்களுக்கும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தமிழ் பேசும் மக்களின் சார்பில் நன்றி தெரிவித்திருந்தார்.
நேற்று(29.08.2013) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் ஈ.ழமக்கள் ஐனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா பயணிகள் போக்குவரத்து விடயத்தில் குறிப்பாக வடபகுதி மக்கள் ஓமந்தை சோதனைச்சாவடியில் எதிர்கொள்ளும் அசௌகரியங்களை விரைவில் தவிர்க்கும் நோக்கில் பிரேரணை ஒன்றை முன்வைத்திருந்தார்.
ஓமந்தை சோதனைச்சாவடியில் குறிப்பாக வடபகுதி தமிழ் பேசும் மக்கள் தமது போக்குவரத்தின் போது அசௌகரியங்களை சந்தித்து வருவதாக எடுத்து விளக்கிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஓமந்தை சோதனைச் சாவடியை முற்றாக அகற்ற வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்திருந்தார்.
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா எடுத்து விளக்கிய நியாயங்களை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ உட்பட அமைச்சர்கள் அனைவரும் ஏற்றுக்கொண்டதோடு, ஓமந்தை சோதனை நடவடிக்கையை முதற்கட்டமாக உடன் தளர்த்துவதற்கு தான் உத்தரவிடுவதாகவும், அடுத்த கட்டமாக விரைவில் குறித்த சோதனைச் சாவடியை முற்றாக அகற்றுவதற்கான நடவடிக்கையினையும் முன்னெடுப்பேன் என்றும் ஜனாதிபதி இணக்கம் தெரிவித்துள்ளார்.
தனது கோரிக்கையினை ஏற்றுக் கொண்ட ஜனாதிபதிக்கும், சக அமைச்சர்களுக்கும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தமிழ் பேசும் மக்களின் சார்பில் நன்றி தெரிவித்திருந்தார்.
ஒருவரின் ஆளுமை, தகைமைகள், அனுபவங்கள் ஆகியவை அடங்கிய விண்ணப்பத்தை அல்லது மனுவை பொதுவாக 'Bio-Data' என்பார்கள். இதே விண்ணப்ப வடிவத்தை 'Curriculum Vitae' என்றும் சொல்லுவார்கள். இது லத்தீன் மொழியிலிருந்து ஆங்கிலத்தில் வழக்கத்திற்கு வந்த சொல். சுருக்கமாக 'CV' என்று குறிப்பிடுவார்கள்.
ஒருவரின் ஆளுமை, தகைமை, அனுபவம், சிறப்பியல்புகள் அடங்கிய பட்டோலையையே 'CV'என அழைக்கிறோம்.
இப்போது நடைபெறும் வடமாகாண சபைத் தேர்தலிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நிறுத்தியிருக்கும் வேட்பாளர்களின் சிறப்பை, தகைமையை, ஆளுமையை வெளிப்படுத்தும் இரண்டு 'CV'க்கள் இடம்பெற்றிருக்கிறார்கள்.
இவர்கள் இருவருமே இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வேட்பாளர்கள்தான். இதில் விசேட அம்சம் என்னவென்றால் அவர்களில் ஒருவரைத் தமது ஆளாக நிறுத்தியிருப்பவர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினதும் தமிழரசுக் கட்சியினதும் தலைவரான இரா. சம்பந்தன். மற்றவரை நிறுத்தியிருப்பவர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினதும் தமிழரசுக் கட்சியினதும் செயலாளர் நாயகமான மாவை சேனாதிராஜா.
யார் அந்த இரண்டு 'CV'க்கள் ( 'சீவி' க்கள் )? ஒருவர் - 'சீ.வி'. விக்கினேஸ்வரன். முதலமைச்சர் வேட்பாளர். இவர் சம்பந்தனின் தெரிவு. மற்றவர் 'சீ.வி'. கே. சிவஞானம். இவர் மாவையின் திணிப்பு.
இந்த இரண்டு 'சீவி'க்களிலும் ஒரு பொது அம்சம் புதையுண்டுள்ளது. அவர்கள் பகிரங்க மேடைக்கு - பொது வாழ்வுக்கு - வந்துவிட்டமையால் அவ்விடயம் ஆராயப்பட வேண்டியது மட்டுமல்ல, மக்களுக்கு மறைக்கப்படாமல் உரைக்கப்பட வேண்டியதுமாகும்.
சீ.வி.விக்கினேஸ்வரன்
C.V. விக்கினேஸ்வரன் இந்நிலைமைக்கு சம்பந்தனினால் வலிந்து இழுத்து வரப்பட்டவர். அதன் பின்னால் புதையுண்டுள்ள 'இரகசியம்' கடவுளுக்குத்தான் வெளிச்சம்.
நீதித்துறையில் விக்கினேஸ்வரனுக்கு நல்ல பெயருண்டு என்பது உண்மைதான். ஆனால் அந்தப் பதவிகளில் இருந்து கொண்டு சிறுபான்மையினரான தமிழர்களுக்கு ஏதோ நியாயம் வழங்கிக் கிழித்துவிட்டவர் என்று கூறுவதற்கு ஏதும் இல்லை. பதவியில் இருக்கும் வரை அரசுக்கும், அரசமைப்புக்கும் முழு விசுவாசமாகச் செயற்பட்டு அதனால் கிடைத்த சுகபோக வசதிகளை அனுபவித்தவர்தான் அவர்.
சரி. அவர் தாம் சார்ந்த நீதித்துறைக்கு விசுவாசமாக நடந்து கொண்டார் என்று கூறியாவது அவரது கடந்த கால செயற்பாட்டை நாம் நியாயப்படுத்தலாம் என்று பார்த்தால் கூட, அங்கும் ஒரு விடயம் இடிக்கின்றது. அவர் விசுவாசமாக இருந்த நீதிதுறையால் கொலை, பாலியல் வல்லுறவு ஆகிய கொடூரக் குற்றங்களைப் புரிந்தவர் என ஒன்றுக்கு இரண்டு தடவைகள் குற்றவாளியாக நிரூபிக்கப்பட்ட ஒரு காமுகனை அவர் கடவுளாகவும், குருவாகவும் போற்றி தலையில் வைத்து கூத்தடிப் பதைத்தான் எவராலும் நியாயப்படுத்த முடியாது இருக்கிறது.
சீ.வி.கே.சிவஞானம்
அடுத்தவர் சீ.வி.கே.சிவஞானம். ஒன்றல்ல, இரண்டல்ல, மூன்று தடவைகள் யாழ். தேர்தல் மாவட்ட மக்களால் தொடர்ந்து வந்த பாராளுமன்றத் தேர்தல்களில் தோற்கடிக்கப்பட்டவர்.
கேட்டால் 'நான் தோற்கவில்லை தோற்கடிக்கப்பட்டேன்!' - என்று வியாக்கியானம் பேசுவார்.
'ஆமை புகுந்த வீடும், அமீனா புகுந்த இடமும் உருப்படாது' - என்று ஒரு பேச்சு மொழி நம் மத்தியில் உள்ளது. சீ.வி.கே. சிவஞானத்தின் கதையும் அதுதான். அவர் புகுந்த எந்த இடமும் உருப்பட்டதாகவே சரித்திரம் இல்லை.
அவர் யாழ். மாநகர ஆணையாளரானார். அவ்வளவுதான். யாழ். நகரில் இருந்த மாநகர சபைக் கட்டடம் அழிந்து, சுவடே இல்லாமல் போய் நல்லூரில் தற்காலிகக் கொட்டகையில் மாநகரசபை இயங்கும் அவலம் உருவானது.
1978 இல் இலங்கை - இந்திய ஒப்பந்தத்தின் பின்னர், விடுதலைப் புலிகளின் இணக்கத்தோடு வடக்கு, கிழக்குக்கு ஓர் இடைக்கால நிர்வாகத்துக்கு இந்தியா ஏற்பாடு செய்தது. ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்த்தனாவும் அதற்கு இணங்கினார். ஆனால் அந்த நிர்வாக சபைக்குத் தலைவராக அச்சமயத்தில் தீவிர ஐ. தே.க. விசுவாசியாகக் கருதப்பட்ட சீ.வி. கே. சிவஞானத்தை ஜனாதிபதி ஜெயவர்த்தனா அறிவித்தார். அவ்வளவு தான். இடைக்கால நிர்வாகமும் கந்தலாயிற்று.
ஐ.தே.க. ஆட்சிப் பீடத்துக்கும் சிவஞானத்துக்கும் இருந்த நெருக்கமான உறவு நிலைப்பாட்டை ஏலவே அறிந்து வைத்திருந்த விடுதலைப் புலிகள் இடைக்கால நிர்வாக சபையின் தலைவராக அவரை ஜே.ஆர். அறிவித்த அன்றிரவே அவரை மிரட்டி அப்பதவியிலிருந்து அவர் விலகுகின்றார் என அறிவிக்கும் இராஜினாமாக் கடிதத்தையும் அவரிடமிருந்து வாங்கிக் கொழும்புக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் சிவஞானத்தை தலைவராக நியமித்த ராசியோ என்னவோ இடைக்கால நிர்வாகம் முளையிலேயே கருகிவிட்டது.
பிரேமதாஸாவின் ஆள்
அதன் பின்னர் 1989 பொதுத் தேர்தலில் சுயேச்சைக் குழுவாகத் தெரிவுசெய்யப்பட்ட ஈரோஸின் ஒன்பது எம்.பிக்களும் 90 களின் முற்பகுதியில் யாழ்.குடாநாடு மீண்டும் புலிகளின் வசம் வீழ்ந்தமையை அடுத்து பாராளுமன்றத்துக்குச் செல்லாமல் விட, அந்த எம்.பி. பதவிகள் வெற்றிடமாகின. அந்த வேளையில் ஜனாதிபதியாக இருந்த பிரேமதாஸாவுக்கு எதிராகக் குற்ற விசாரணைப் பிரேரணை ஒன்றை பாராளுமன்றத்தில் கொண்டு வரும் முயற்சியை லலித் அத்துலத்முதலி - காமினி திஸநாயக்கா அணி முன்னெடுத்தது. அதற்கு முன்னர் வரை உள்ளூராட்சி அமைச்சராகவிருந்த பிரேமதாஸாவுக்கு உள்ளூராட்சி சேவையிலிருந்த சீ.வி.கே.சிவஞானம் நெருக்கமானவராகவும் தீவிர ஆதரவாளராகவும் இருந்து வந்திருந்தார்.
பிரேமதாஸாவுக்கு எதிராகக் குற்றவிசாரணைப் பிரேரணை கொண்டுவரப்பட்டதும் அதைப்பயன்படுத்தி 'ஒரு கல்லில் இரண்டு மாங்காய்' நகர்வை முன்னெடுத்தார் சிவஞானம்.
புலிகளைக் கையில் போட்டுக்கொண்டு ஈரோஸின் வசமுள்ள ஒன்பது எம்.பிக்கள் பதவியையும் தனது தலைமையில் கைப்பற் றிக் கொள்வது, அதன் பின் குற்றவிசாரணைப் பிரேரணையின்; போது தனது தலைமையில் சுயேச்சைக் குழுவின் 9 எம்.பிக்களையும் பிரேமதாஸா வுக்கு ஆதரவாக வாக்களிக்க வைத்து, ஜனாதிபதி பிரேமதாஸாவைக் கையில் போட்டுக்கொண்டு தான் 'பெரிய ஆள்' ஆவது.
இப்படி ஒரே சமயத்தில் புலிகளுக்கும், பிரேமதாஸாவுக்கும் கயிறுவிட சிவஞானம் எடுத்த முயற்சி அவர் அதற்குள் நுழைந்ததுமே வழமைபோல குழம்பிப் போயிற்று. வெற்றிடமாக இருக்கும் சுயேச்சைக் குழுவின் எம்.பி பதவியைப் பொறுப்பேற்பதற்கான பூர்வாங்க நடவடிக்கைகளை எடுப்பதற்காக சிவஞானம் கொழும்பு சென்றார். பிரேமதாஸாவைச் சந்தித்துப் பேசினார். ஆனால் அதற்கு இடையில் தனது வேறு தந்திரோபாயங்களைப் பயன்படுத்தி, குற்றவிசாரணைப் பிரேரணை முயற்சியை பிரேமதாஸா முறியடித்தமையால் சிவஞானத்தால் மேற்கொண்டு எதுவும் செய்ய முடியவில்லை. அதற்கிடையில் சிவஞானம் - பிரேமதாஸா கூட்டுறவின் சூட்சுமங்களைப் பற்றி அறிந்து கொண்ட புலிகள் அச்சமயம் சிவஞானம் மேற்கொண்ட எம்.பியாகும் முயற்சிக்கும் ஆப்பு வைத்துவிட்டனர்.
1990 தொடக்கம் 2013 வரை கால்நூற்றாண்டு காலமாக முதலில் பின் கதவாலும் பின்னர் தேர்தல்கள் மூலமாகவும் எம்.பியாகும் நோக்கோடு சிவஞானம் முன்னெடுத்த பேராசை முயற்சி இப்படிக் கனவாகிப் போனமைதான் வரலாறு.
'முரசொலி'க்கு மூடுவிழா நடத்திய சிவஞானம்
அதற்குப் பின்னர் 'முரசொலி' பத்திரிகையின் நிர்வாகியாக சிவஞானம் அதற்குள்ளே நுழைந்தார். அதுவரை பல ஆண்டுகள் வெற்றிகரமாக இயங்கி வந்த 'முரசொலி', சிவஞானம் உள்ளே நுழைந்த சில மாதங்களில் மூடுவிழா நடத்தவேண்டிய இராசிக்கு உள்ளாயிற்று.
அடுத்தடுத்து மூன்று முறை நாடாளுமன்றத் தேர்தலில் தோற்ற சிவஞானத்துக்கு மீண்டும் இம்முறை மாகாண சபைத் தேர்தலிலும் இடம்கொடுப்பதற்கு ஒரே பிடியாக நின்றவர் மாவை சேனாதிராஜா.
மக்கள் தலையில் காலம் காலமாக பூச்சுத்திவிட்டு வட மாகாண சபை முதலமைச்சர் கனவில் சஞ்சரித்துக்கொண்டிருந்த ஊடகவியலாளர் வித்தியாதரன், சிறை சென்ற மாணவர் பிரதிநிதி தர்ஷானந்த் போன்றோரையெல்லாம் வெட்டி ஒதுக்கிவிட்டு சிவஞானத்துக்கு இடம் கொடுப்பதற்கு மாவை விடாப்பிடியாக நின்றமைக்குக் காரணம் உண்டு.
மாவை ஆங்கிலத்தில் 'வீக்'. அவருக்கான ஆங்கிலக் கடிதங்கள், ஆவணங்களை ஒழுங்குபடுத்திக் கொடுக்கும் எடுபிடி சிவஞானம்தான். இன்றைய நிலையில் மாவை விசுவாசியாகக் காட்டிக் கொள்வதன் மூலமாவது கட்சிக்குள் தமது நிலையைத் தக்கவைத்துக் கொள்ளலாம் என்பதுதான் சிவஞானத்தின் பரிதாப நிலை.
அந்த அடிப்படையில்தான் முதலமைச்சர் தெரிவுக்கும் முந்திக்கொண்டு மாவையின் பெயரை முன்மொழிந்து பிரகனடப்படுத்தினார் சிவஞானம். அவரின் அந்த நடவடிக்கையின் விளைவாக இறுதியில் தமிழரசுக் கட்சிக்குள்ளும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள்ளும் பெரும் களேபரம், குழப்பம் எற்பட்டதுதான் மிச்சம். ஆனால் அப்படி மாவையை தூக்கிப் பிடித்தமைக்குப் பரிசாகவே - வெகுமதியாகவே - ஏனைய பல பிரபல முகங்களை எல்லாம் வெட்டி ஒதுக்கிவிட்டு, தோல்விப் பல்லவியையே பாடுகின்ற சிவஞானத்தை வேட்பாளராக்கினார் மாவை.
தன்னுடைய இந்த நடவடிக்கையை நியாப்படுத்துவதற்காக மாவை எல்லோரிடமும் ஒரு காரணமும் கூறி வருகின்றார்.
'முக்கியத்துவம் வாய்ந்த இந்த மாகாண சபையில் நானும் இல்லை. சம்பந்தர் ஐயா மட்டத்திலும் யாரும் இல்லை. ஆகவே கட்சியின் மூத்த பிரமுகர் ஒருவர் இருக்கவேண்டியது அவசியம். அதனால்தான் சிவஞானத்தை நிறுத்தியுள்ளோம்.' - என்பது தான் மாவை கூறும் சளாப்பல் நியாயம்.
சிவஞானம் இம்முறையாவது வென்று மாகாண சபை உறுப்பினராவாரா அல்லது நான்காவது முறையும் தோற்ற பின்னர், அடுத்த வருடம் நடைபெறவிருக்கும் யாழ்.மாநகர சபைத் தேர்தலிலும் ஐந்தாவது தடவையாக மாவையினால் களமிறக்கப்படுவாரா என்பதெல்லாம் தெரியவில்லை. அதற்குப் பொறுதிருந்துதான் பார்க்கவேண்டும்.
ஆனால் தாம் தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் என்று சிவஞானம் கூறுவதும் அதை மாவை அங்கீகரிப்பதும் சுத்தப் பொய் என்பதுதான் உண்மை.
உள்ளூராட்சி சேவையிலிருந்த காலம் முதல் ஆளும் ஐ.தே.கட்சி விசுவாசியாகவே செயப்பட்டவர் சிவஞானம். பின்னர், பொதுத் தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணியில் 'சீட்' கிடைக்காமல் வேட்பாளர் நியமனத்துக்காக அகில இலங்கை தமிழ் காங்கிரஸில் ஒண்டியவர் அவர். அக்கட்சியின் உபதலைவராகவும் செயற்பட்டவர். எப்போதும் நான் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸூக்கு விசுவாசமாகச் செயற்படுவேன் என்று சத்தியமிட்டு சிவஞானம் எழுதிய கடிதம் இன்றும் திருமதி குமார் பொன்னம்பலம் வசம் முக்கிய ஆவணமாக இருப்பதாகக் கூறப்படுகின்றது.
இப்படி அடிக்கடி கட்சி, அணி மாறிய பச்சோந்தியைத்தான் மாவை சேனாதிராஜா தமிழரசுக் கட்சியின் மூத்த - சிரேஷ்ட - உறுப்பினர் என்று கூறி கட்சியின் ஏனைய பிரதிநிதிகள் காதிலும் பூச்சுற்றி வருகின்றார்.
ஆமை,அமீனா கதையைப் புரிந்து கொண்டதால்தான் தமிழீழ விடுதலைப் புலிகள் கூட பல மாதக் கணக்கில் இருட்ட றையில் தாம் சிறை வைத்திருந்த சிவஞானத்தை தம்முடன் அவரை வைத்திருப்பது தங்களுக்குக் கெடுதல் என்று கருதி விடுவித்தார்களோ தெரியாது.
இரண்டு 'சீ.வி'க்களிலும் பொதிந்து கிடக்கும் பொதுமை
சரி. இனி விடயத்துக்கு வருவோம்.
இந்த இரண்டு 'சீவி'க்களிலும் அப்படி என்ன பொதுமை பொதிந்து கிடக்கின்றது?
நீதிமன்றத்தினால் 'காமுகன்' என்று வர்ணிக்கப்பட்டு, பதின்மூன்றுக்கும் அதிகமான சிறுமியரை பாலியல் கொடூரத்துக்கு உள்ளாக்கி, ஓர் உதவியாளரைப் படுகொலை செய்த குற்றவாளி என்று அடையாளப்படுத்தப்பட்டு, இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட சுவாமி பிரேமானந்தவை தங்களின் குருவாக இவர்கள் இருவரும் ஏற்றித் துதித்துப் போற்றி வணங்குகின்றார்கள் என்பதுதான் அந்தப் பொதுமை.
சுவாமி பிரேமானந்தா இலங்கை மாத்தளையைச் சேர்ந்தவர். 1951 ஆம் ஆண்டு நவம்பரில் பிறந்த அவரின் பெயர் பிறேம்குமார். சித்து வேலைகள் கைவரப் பெற்றவர். அதனைப் பயன்படுத்தி 1972 இல் மாத்தளையில் ஓர் ஆச்சிரமத்தை ஆரம்பித்தார்.
1983 இனக் கலவரத்தை அடுத்து, ஆசிரமத்தில் இருந்த ஒரு டசின் அநாதைக் குழந்தைகளையும், சில விசுவாசி களையும் அழைத்துக் கொண்டு அகதிப் படகில் தமிழகம் சென்ற பிரேமானந்தா, 1989 இல் திருச்சியில் 'பூபாலகிருஷ்ண ஆச்சிரமம்' என்ற பெயரில் புதிய ஆச்சிரமத்தைத் தொடங்கினார். வாயிலிருந்து திருநீறு கொட்டுவது, சிவலிங்கம் வரவழைப்பது, அந்தரத்தில் கையை அசைத்து திருநீறு, குங்குமம், சந்தனத் தூள், உருத்திராட்சக் கொட்டை போன்றவற்றை வரவழைப்பது போன்ற சித்து வேலைகளை அதியசமாகச் செய்து காட்டுவதால் பிரேமானந்தாவுக்கு அதிக மவுசு ஏற்பட்டது. அதனால் ஆசிரமத்துக்கும் பிரபல்யம் உண்டாயிற்று. சொத்துகள் சேர ஆரம்பித்தன. திருச்சி பாத்திமா நகரில் 150 ஏக்கர் விஸ்தீரணத்தில் ஆசிரமம் விசாலமாயிற்று. சுமார் நூறு சிறுவர்கள், நூறு சிறுமியர் என அநாதைக் குழந்தைகள் ஆச்சிரமத்தில் சேர்க்கப்பட்டு வளர்க்கப்பட்டனர்.
பிரேமானந்த லீலைகள்
1993 இறுதி வரை எல்லாம் நன்றாகத்தான் போய்க்கொண்டிருந்தது. ஆனால் ஆச்சிரமத்துக்குள், சுவாமியின் குடிலுக்குள் இடம்பெறும் பயங்கரங்கள் பற்றி செய்தி கசியத் தொடங்கிய போதுதான் நிலைமை விபரீதமாயிற்று.
சில சிறுமிகள் ஆச்சிரமத்தை விட்டுத் தப்பி வந்து பொலிஸில் கொடுத்த புகார்களை அடுத்து பொலிஸ் விசாரணை ஆரம்பமாயிற்று. அப்போதுதான் தோண்டத் தோண்டப் பூதம் கிளம்பிய கதையாக பல மர்மங்கள் வெளிப்படத் தொடங்கின. அநாதைச் சிறுமியரை வைத்துத் தமது உடற்பசியைத் தீர்த்த சுவாமியின் அடாவடித்தனங்கள், பித்தலாட்டங்கள் அம்பலமாயின.
அந்த காலகட்டத்தில் சுவாமி பிரேமானந்தாவின் லீலைகளை விவரிக்காத நாளே தமிழகப் பத்திரிகைகள், சஞ்சிகைகளுக்குக் கிடையாது என்ற நிலைமை. சுவாமி பிரேமானந்தாவைப் போன்று வேடமிட்டு நகைச்சுவை நடிகர் செந்தில் பண்ணிய திரைப்படக் கலாட்டாவுக்குப் பெரு வரவேற்பு.
நீதிமன்ற விசாரணைகளின் படி ஆகக்குறைந்தது பதின்மூன்று சிறுமிகளை பிரேமானந்தா பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியமை நிரூபணமாயிற்று. இதில் பல சிறுமிகள் பருவமடைய முன்னரும், பருவமடைந்து ஒரு மாதத்துக்குள்ளும் கூட சுவாமியால் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டனர் என்ற அதிர்ச்சித் தகவலும் வெளியாயிற்று. பிரேமானந்தாவினால் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு கர்ப்பமடைந்த சிறுமி ஒருவரின் கர்ப்பத்தைக் கலைக்கவும் நீதிமன்றம் அனுமதி அளித்தது. அந்தக் கருவை மருத்துவ சோதனைக்கு உட்படுத்திய நிபுணர்கள் அதற்குக் காரணம் சுவாமி பிரேமானந்தாவே என்பதையும் நீதி மன்றத்தில் விஞ்ஞான ஆதரங்களோடு சமர்ப்பித்தனர்.
சிறுமிகளுக்கு எதிரான இத்தகைய பாலியல் கொடூரங்களை அறிந்து அதற்கு எதிராகக் கொதித்தெழுந்த ரவி என்ற ஆச்சிரம உதவியாளர் பிரேமானந்தாவினால் அடித்துக் கொலை செய்யப்பட்டு ஆச்சிரம சுற்றாடலிலேயே புதைக்கப்பட்டார். விசாரணைகளின்போது அவரது சடலம் தோண்டி எடுக்கப்பட்டது.
பாலியல் வன்புணர்வைத் தாங்கமுடியாமல் ஆச்சிரமத்தை விட்டு ஓட முயன்ற சிறுமிகள் வளைத்துப் பிடிக்கப்பட்டு சுவாமியினாலேயே தாக்கப்பட்டு தண்டிக்கப்பட்டனர். பொலிஸ், நீதிமன்ற விசாரணைகளின் போது ஆச்சிரமத்தில் பிரேமானந்தா சுவாமிக்கு அடுத்த நிலையில் பொறுப்பில் இருந்த மாதாஜி திவ்வியதேவி ராணி என்ற பெண்மணி தலைமறைவானார். சுவாமியின் பாலியல் கொடூரங்களுக்குத் துணை நின்றவர் எனக் கருதப்படும் இந்த அம்மணி இன்னும் இந்தியாவில் தேடப்படும் குற்றவாளியாகவே இருக்கின்றார். அவர் கைது செய்யப்படவில்லை.
நீதிமன்ற விசாரணையை அடுத்து 1997 ஓகஸ்டில் சுவாமி பிரேமானந்தாவுக்கும் அவரது உதவியாளர்கள் ஐவருக்கும் இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. மற்றொரு எதிரிக்கு இரண்டு வருடச் சிறை கிடைத்தது. சுவாமி உட்பட ஏழு எதிரிகளும் பாதிக்கப்பட்ட சிறுமிகளுக்கு இந்தியப் பணத்தில் 62 இலட்சம் ரூபா நஷ்டஈடு செலுத்தவும் உத்தரவிடப்பட்டது.
இந்தத் தீர்ப்பை எதிர்த்து பிரேமானந்தா செய்த மேன்முறையீடு 2002 டிசெம்பரில் உயர்நீதிமன்றத்தினால் நிராகரிக்கப்பட்டு அவருக்கான தண்டனை உறுதிசெய்யப்பட்டது. 2011 பெப்ரவரி 21 இல் தனது 59 ஆவது வயதில் சிறையில் பிரேமானந்தா காலமானார்.
காமுக சுவாமியின் பக்தர்களே இருவரும்
சரி. இந்த பிரேமானந்தா சுவாமிக்கும் இந்த இரண்டு சீ.விக்களுக்கும் என்ன தொடர்பு....?
இந்த இருவருமே அந்த காமுக சுவாமியின் சிஷ்யர்கள் - விசுவாசிகள் - என்பதுதான் முக்கிய அம்சம்.
முதலமைச்சர் வேட்பாளர் சி.வி.விக்கினேஸ்வரன் எந்தக் கூட்டத்தில் பேசத் தொடங்க முன்னரும் 'குரு பிரம்மா.... குரு தேவா...' என்ற சுலோகத்துடன்தான் தனது பேச்சை ஆரம்பிப்பார். அவர் குரு என்று போற்றுவது இந்த சுவாமி பிரேமானந்தாவைத்தான்.
இன்றும் சீ.வி.விக்னேஸ்வரனின் கொழும்பு வீட்டுக்குச் செல்பவர்கள் அவரது ஹோலில் சுவாமி பிரேமானந்தாவின் படம் தொங்கவிடப்பட்டு மலர்மாலை சாத்தி வணங்கப்படுவதை அவதானிக்கலாம்.
தமிழகம் செல்லும் காலம் எல்லாம் விக்னேஸ்வரன் திருச்சிக்கு செல்லத் தவறுவதில்லை. சிறையில் இருந்த சுவாமி பிரேமானந்தாவை சந்தித்து ஆசி பெறுவதை அவர் வருடாந்த வழக்கமாகவே கைக்கொண்டுவந்தார்.
இந்திய செஷன்ஸ் நீதிமன்றத்தினாலும், பின்னர் உயர்நீதிமன்றத்தினாலும் பாலியல் வன்புணர்வுக் கொடூரங் களுக்காகவும், அடித்துப் படுகொலை செய்த குற்றத்துக்காகவும் குற்றவாளியாகக் காணப்பட்டு இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு, மேன்முறையீட்டில் அது உறுதிசெய்யப்பட்ட பின்னரும், அந்தக் குற்றவாளியைக் கடவுளாவும் குருவாகவும் தரிசித்து வணங்கிவரும் ஒருவரின் கைகளில்தான் வடக்கு மாகாண சபை நிர்வாகம் போகப்போகின்றது.
எங்கோ இலங்கை அரசுக்குப் 'பந்தம்' பிடிக்கும் அரசுப்பணியில் இருந்த சீ.வி.விக்கினேஸ்வரனுக்கு இந்த முதலமைச்சர் வேட்பாளர் என்ற அதிர்ஷ்ட அந்தஸ்தைப் பெற்றுக் கொடுத்தது சுவாமி பிரேமானந்தாவின் அருள்தானோ என்பதும் தெரியவில்லை.
திருகோணமலை ஆதிபத்ர காளியை வணங்கும் சம்பந்தனின் கனவில் தோன்றி சீ.வி.விக்கினேஸ்வரனையே முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்தும்படி அருளாசி வழங்கியவரும் இந்த காமுக சுவாமிதானோ தெரியவில்லை.
சீ.வி.கே. சிவஞானமும் இந்த சுவாமியின் பக்தர்தான். 1980 களின் முற்பகுதியில் சிவஞானம் யாழ்.மாநகர சபை அலுவலகத்துக்குள் வைத்து புலிகளால் சுட்டுப் படுகாயப்படுத்தப்பட்டார். அச்சமயம் கொழும்புப் பத்திரிகைகளுக்குப் பேட்டியளித்த சிவஞானம் 'சுவாமி பிரேமானந்தாவே எனது உயிரைக் காப்பாற்றியவர்' என்று கூறத் தவறவில்லை. பிரேமானந்தாவைப் போற்றிப் புகழ்ந்து சீ.வி.கே.சிவஞானம் வரைந்த ஒரு பக்கக் கட்டுரை எண்பதுகளின் முற்பகுதியில் கொழும்புப் பத்திரிகைகளில் பிரசுரமாகியிருந்தது.
கடைசியாக வவுனியாவில் நடைபெற்ற இலங்கைத் தமிழரசுக் கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் கூட தாமும் சீ.வி.விக்கினேஸ்வரனும் சுவாமி பிரேமானந்தாவின் பக்தர்கள் தாம் என்பதை சாடைமாடையாகக் குறிப்பிட சிவஞானம் தவறவில்லை.
'எனக்கும் ( சிவஞானத்துக்கும் ) முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கும் சீ.வி.விக்கினேஸ்வரனுக்கும் இடையில் ஏதும் கருத்து வேறுபாடு உள்ளது என்று யாரும் கருதிவிடக் கூடாது. எங்களுக்குள் ஒரு பிரச்சினையுமில்லை. நாங்கள் இருவரும் ஒரே ஆச்சிரமத்தின் பக்தர்கள்தான்' - என்று சிவஞானம் அங்கு குறிப்பிட்டிருந்தார்.
ஆக காமுக சுவாமியின் பக்தர்கள் இருவரின் கைகளில் வடக்கு மாகாண நிர்வாகம் சிக்கப்போகின்றது என்பதுதான் இன்றைய அவல நிலை.
தந்தை செல்வா கூறியமைபோல தமிழினத்தைக் கடவுள் வந்துதான் காப்பாறவேண்டும் என்பது உண்மை.
ஆனால் அந்தக் கடவுள் சுவாமி பிரேமானந்தா போன்றோரின் வடிவத்தில் வருவார் என்பதுதான் தமிழர்களின் துர்ப்பாக்கியம்....!
ஆருடன்!
ஒருவரின் ஆளுமை, தகைமை, அனுபவம், சிறப்பியல்புகள் அடங்கிய பட்டோலையையே 'CV'என அழைக்கிறோம்.
இப்போது நடைபெறும் வடமாகாண சபைத் தேர்தலிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நிறுத்தியிருக்கும் வேட்பாளர்களின் சிறப்பை, தகைமையை, ஆளுமையை வெளிப்படுத்தும் இரண்டு 'CV'க்கள் இடம்பெற்றிருக்கிறார்கள்.
இவர்கள் இருவருமே இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வேட்பாளர்கள்தான். இதில் விசேட அம்சம் என்னவென்றால் அவர்களில் ஒருவரைத் தமது ஆளாக நிறுத்தியிருப்பவர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினதும் தமிழரசுக் கட்சியினதும் தலைவரான இரா. சம்பந்தன். மற்றவரை நிறுத்தியிருப்பவர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினதும் தமிழரசுக் கட்சியினதும் செயலாளர் நாயகமான மாவை சேனாதிராஜா.
யார் அந்த இரண்டு 'CV'க்கள் ( 'சீவி' க்கள் )? ஒருவர் - 'சீ.வி'. விக்கினேஸ்வரன். முதலமைச்சர் வேட்பாளர். இவர் சம்பந்தனின் தெரிவு. மற்றவர் 'சீ.வி'. கே. சிவஞானம். இவர் மாவையின் திணிப்பு.
இந்த இரண்டு 'சீவி'க்களிலும் ஒரு பொது அம்சம் புதையுண்டுள்ளது. அவர்கள் பகிரங்க மேடைக்கு - பொது வாழ்வுக்கு - வந்துவிட்டமையால் அவ்விடயம் ஆராயப்பட வேண்டியது மட்டுமல்ல, மக்களுக்கு மறைக்கப்படாமல் உரைக்கப்பட வேண்டியதுமாகும்.
சீ.வி.விக்கினேஸ்வரன்
C.V. விக்கினேஸ்வரன் இந்நிலைமைக்கு சம்பந்தனினால் வலிந்து இழுத்து வரப்பட்டவர். அதன் பின்னால் புதையுண்டுள்ள 'இரகசியம்' கடவுளுக்குத்தான் வெளிச்சம்.
நீதித்துறையில் விக்கினேஸ்வரனுக்கு நல்ல பெயருண்டு என்பது உண்மைதான். ஆனால் அந்தப் பதவிகளில் இருந்து கொண்டு சிறுபான்மையினரான தமிழர்களுக்கு ஏதோ நியாயம் வழங்கிக் கிழித்துவிட்டவர் என்று கூறுவதற்கு ஏதும் இல்லை. பதவியில் இருக்கும் வரை அரசுக்கும், அரசமைப்புக்கும் முழு விசுவாசமாகச் செயற்பட்டு அதனால் கிடைத்த சுகபோக வசதிகளை அனுபவித்தவர்தான் அவர்.
சரி. அவர் தாம் சார்ந்த நீதித்துறைக்கு விசுவாசமாக நடந்து கொண்டார் என்று கூறியாவது அவரது கடந்த கால செயற்பாட்டை நாம் நியாயப்படுத்தலாம் என்று பார்த்தால் கூட, அங்கும் ஒரு விடயம் இடிக்கின்றது. அவர் விசுவாசமாக இருந்த நீதிதுறையால் கொலை, பாலியல் வல்லுறவு ஆகிய கொடூரக் குற்றங்களைப் புரிந்தவர் என ஒன்றுக்கு இரண்டு தடவைகள் குற்றவாளியாக நிரூபிக்கப்பட்ட ஒரு காமுகனை அவர் கடவுளாகவும், குருவாகவும் போற்றி தலையில் வைத்து கூத்தடிப் பதைத்தான் எவராலும் நியாயப்படுத்த முடியாது இருக்கிறது.
சீ.வி.கே.சிவஞானம்
அடுத்தவர் சீ.வி.கே.சிவஞானம். ஒன்றல்ல, இரண்டல்ல, மூன்று தடவைகள் யாழ். தேர்தல் மாவட்ட மக்களால் தொடர்ந்து வந்த பாராளுமன்றத் தேர்தல்களில் தோற்கடிக்கப்பட்டவர்.
கேட்டால் 'நான் தோற்கவில்லை தோற்கடிக்கப்பட்டேன்!' - என்று வியாக்கியானம் பேசுவார்.
'ஆமை புகுந்த வீடும், அமீனா புகுந்த இடமும் உருப்படாது' - என்று ஒரு பேச்சு மொழி நம் மத்தியில் உள்ளது. சீ.வி.கே. சிவஞானத்தின் கதையும் அதுதான். அவர் புகுந்த எந்த இடமும் உருப்பட்டதாகவே சரித்திரம் இல்லை.
அவர் யாழ். மாநகர ஆணையாளரானார். அவ்வளவுதான். யாழ். நகரில் இருந்த மாநகர சபைக் கட்டடம் அழிந்து, சுவடே இல்லாமல் போய் நல்லூரில் தற்காலிகக் கொட்டகையில் மாநகரசபை இயங்கும் அவலம் உருவானது.
1978 இல் இலங்கை - இந்திய ஒப்பந்தத்தின் பின்னர், விடுதலைப் புலிகளின் இணக்கத்தோடு வடக்கு, கிழக்குக்கு ஓர் இடைக்கால நிர்வாகத்துக்கு இந்தியா ஏற்பாடு செய்தது. ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்த்தனாவும் அதற்கு இணங்கினார். ஆனால் அந்த நிர்வாக சபைக்குத் தலைவராக அச்சமயத்தில் தீவிர ஐ. தே.க. விசுவாசியாகக் கருதப்பட்ட சீ.வி. கே. சிவஞானத்தை ஜனாதிபதி ஜெயவர்த்தனா அறிவித்தார். அவ்வளவு தான். இடைக்கால நிர்வாகமும் கந்தலாயிற்று.
ஐ.தே.க. ஆட்சிப் பீடத்துக்கும் சிவஞானத்துக்கும் இருந்த நெருக்கமான உறவு நிலைப்பாட்டை ஏலவே அறிந்து வைத்திருந்த விடுதலைப் புலிகள் இடைக்கால நிர்வாக சபையின் தலைவராக அவரை ஜே.ஆர். அறிவித்த அன்றிரவே அவரை மிரட்டி அப்பதவியிலிருந்து அவர் விலகுகின்றார் என அறிவிக்கும் இராஜினாமாக் கடிதத்தையும் அவரிடமிருந்து வாங்கிக் கொழும்புக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் சிவஞானத்தை தலைவராக நியமித்த ராசியோ என்னவோ இடைக்கால நிர்வாகம் முளையிலேயே கருகிவிட்டது.
பிரேமதாஸாவின் ஆள்
அதன் பின்னர் 1989 பொதுத் தேர்தலில் சுயேச்சைக் குழுவாகத் தெரிவுசெய்யப்பட்ட ஈரோஸின் ஒன்பது எம்.பிக்களும் 90 களின் முற்பகுதியில் யாழ்.குடாநாடு மீண்டும் புலிகளின் வசம் வீழ்ந்தமையை அடுத்து பாராளுமன்றத்துக்குச் செல்லாமல் விட, அந்த எம்.பி. பதவிகள் வெற்றிடமாகின. அந்த வேளையில் ஜனாதிபதியாக இருந்த பிரேமதாஸாவுக்கு எதிராகக் குற்ற விசாரணைப் பிரேரணை ஒன்றை பாராளுமன்றத்தில் கொண்டு வரும் முயற்சியை லலித் அத்துலத்முதலி - காமினி திஸநாயக்கா அணி முன்னெடுத்தது. அதற்கு முன்னர் வரை உள்ளூராட்சி அமைச்சராகவிருந்த பிரேமதாஸாவுக்கு உள்ளூராட்சி சேவையிலிருந்த சீ.வி.கே.சிவஞானம் நெருக்கமானவராகவும் தீவிர ஆதரவாளராகவும் இருந்து வந்திருந்தார்.
பிரேமதாஸாவுக்கு எதிராகக் குற்றவிசாரணைப் பிரேரணை கொண்டுவரப்பட்டதும் அதைப்பயன்படுத்தி 'ஒரு கல்லில் இரண்டு மாங்காய்' நகர்வை முன்னெடுத்தார் சிவஞானம்.
புலிகளைக் கையில் போட்டுக்கொண்டு ஈரோஸின் வசமுள்ள ஒன்பது எம்.பிக்கள் பதவியையும் தனது தலைமையில் கைப்பற் றிக் கொள்வது, அதன் பின் குற்றவிசாரணைப் பிரேரணையின்; போது தனது தலைமையில் சுயேச்சைக் குழுவின் 9 எம்.பிக்களையும் பிரேமதாஸா வுக்கு ஆதரவாக வாக்களிக்க வைத்து, ஜனாதிபதி பிரேமதாஸாவைக் கையில் போட்டுக்கொண்டு தான் 'பெரிய ஆள்' ஆவது.
இப்படி ஒரே சமயத்தில் புலிகளுக்கும், பிரேமதாஸாவுக்கும் கயிறுவிட சிவஞானம் எடுத்த முயற்சி அவர் அதற்குள் நுழைந்ததுமே வழமைபோல குழம்பிப் போயிற்று. வெற்றிடமாக இருக்கும் சுயேச்சைக் குழுவின் எம்.பி பதவியைப் பொறுப்பேற்பதற்கான பூர்வாங்க நடவடிக்கைகளை எடுப்பதற்காக சிவஞானம் கொழும்பு சென்றார். பிரேமதாஸாவைச் சந்தித்துப் பேசினார். ஆனால் அதற்கு இடையில் தனது வேறு தந்திரோபாயங்களைப் பயன்படுத்தி, குற்றவிசாரணைப் பிரேரணை முயற்சியை பிரேமதாஸா முறியடித்தமையால் சிவஞானத்தால் மேற்கொண்டு எதுவும் செய்ய முடியவில்லை. அதற்கிடையில் சிவஞானம் - பிரேமதாஸா கூட்டுறவின் சூட்சுமங்களைப் பற்றி அறிந்து கொண்ட புலிகள் அச்சமயம் சிவஞானம் மேற்கொண்ட எம்.பியாகும் முயற்சிக்கும் ஆப்பு வைத்துவிட்டனர்.
1990 தொடக்கம் 2013 வரை கால்நூற்றாண்டு காலமாக முதலில் பின் கதவாலும் பின்னர் தேர்தல்கள் மூலமாகவும் எம்.பியாகும் நோக்கோடு சிவஞானம் முன்னெடுத்த பேராசை முயற்சி இப்படிக் கனவாகிப் போனமைதான் வரலாறு.
'முரசொலி'க்கு மூடுவிழா நடத்திய சிவஞானம்
அதற்குப் பின்னர் 'முரசொலி' பத்திரிகையின் நிர்வாகியாக சிவஞானம் அதற்குள்ளே நுழைந்தார். அதுவரை பல ஆண்டுகள் வெற்றிகரமாக இயங்கி வந்த 'முரசொலி', சிவஞானம் உள்ளே நுழைந்த சில மாதங்களில் மூடுவிழா நடத்தவேண்டிய இராசிக்கு உள்ளாயிற்று.
அடுத்தடுத்து மூன்று முறை நாடாளுமன்றத் தேர்தலில் தோற்ற சிவஞானத்துக்கு மீண்டும் இம்முறை மாகாண சபைத் தேர்தலிலும் இடம்கொடுப்பதற்கு ஒரே பிடியாக நின்றவர் மாவை சேனாதிராஜா.
மக்கள் தலையில் காலம் காலமாக பூச்சுத்திவிட்டு வட மாகாண சபை முதலமைச்சர் கனவில் சஞ்சரித்துக்கொண்டிருந்த ஊடகவியலாளர் வித்தியாதரன், சிறை சென்ற மாணவர் பிரதிநிதி தர்ஷானந்த் போன்றோரையெல்லாம் வெட்டி ஒதுக்கிவிட்டு சிவஞானத்துக்கு இடம் கொடுப்பதற்கு மாவை விடாப்பிடியாக நின்றமைக்குக் காரணம் உண்டு.
மாவை ஆங்கிலத்தில் 'வீக்'. அவருக்கான ஆங்கிலக் கடிதங்கள், ஆவணங்களை ஒழுங்குபடுத்திக் கொடுக்கும் எடுபிடி சிவஞானம்தான். இன்றைய நிலையில் மாவை விசுவாசியாகக் காட்டிக் கொள்வதன் மூலமாவது கட்சிக்குள் தமது நிலையைத் தக்கவைத்துக் கொள்ளலாம் என்பதுதான் சிவஞானத்தின் பரிதாப நிலை.
அந்த அடிப்படையில்தான் முதலமைச்சர் தெரிவுக்கும் முந்திக்கொண்டு மாவையின் பெயரை முன்மொழிந்து பிரகனடப்படுத்தினார் சிவஞானம். அவரின் அந்த நடவடிக்கையின் விளைவாக இறுதியில் தமிழரசுக் கட்சிக்குள்ளும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள்ளும் பெரும் களேபரம், குழப்பம் எற்பட்டதுதான் மிச்சம். ஆனால் அப்படி மாவையை தூக்கிப் பிடித்தமைக்குப் பரிசாகவே - வெகுமதியாகவே - ஏனைய பல பிரபல முகங்களை எல்லாம் வெட்டி ஒதுக்கிவிட்டு, தோல்விப் பல்லவியையே பாடுகின்ற சிவஞானத்தை வேட்பாளராக்கினார் மாவை.
தன்னுடைய இந்த நடவடிக்கையை நியாப்படுத்துவதற்காக மாவை எல்லோரிடமும் ஒரு காரணமும் கூறி வருகின்றார்.
'முக்கியத்துவம் வாய்ந்த இந்த மாகாண சபையில் நானும் இல்லை. சம்பந்தர் ஐயா மட்டத்திலும் யாரும் இல்லை. ஆகவே கட்சியின் மூத்த பிரமுகர் ஒருவர் இருக்கவேண்டியது அவசியம். அதனால்தான் சிவஞானத்தை நிறுத்தியுள்ளோம்.' - என்பது தான் மாவை கூறும் சளாப்பல் நியாயம்.
சிவஞானம் இம்முறையாவது வென்று மாகாண சபை உறுப்பினராவாரா அல்லது நான்காவது முறையும் தோற்ற பின்னர், அடுத்த வருடம் நடைபெறவிருக்கும் யாழ்.மாநகர சபைத் தேர்தலிலும் ஐந்தாவது தடவையாக மாவையினால் களமிறக்கப்படுவாரா என்பதெல்லாம் தெரியவில்லை. அதற்குப் பொறுதிருந்துதான் பார்க்கவேண்டும்.
ஆனால் தாம் தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் என்று சிவஞானம் கூறுவதும் அதை மாவை அங்கீகரிப்பதும் சுத்தப் பொய் என்பதுதான் உண்மை.
உள்ளூராட்சி சேவையிலிருந்த காலம் முதல் ஆளும் ஐ.தே.கட்சி விசுவாசியாகவே செயப்பட்டவர் சிவஞானம். பின்னர், பொதுத் தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணியில் 'சீட்' கிடைக்காமல் வேட்பாளர் நியமனத்துக்காக அகில இலங்கை தமிழ் காங்கிரஸில் ஒண்டியவர் அவர். அக்கட்சியின் உபதலைவராகவும் செயற்பட்டவர். எப்போதும் நான் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸூக்கு விசுவாசமாகச் செயற்படுவேன் என்று சத்தியமிட்டு சிவஞானம் எழுதிய கடிதம் இன்றும் திருமதி குமார் பொன்னம்பலம் வசம் முக்கிய ஆவணமாக இருப்பதாகக் கூறப்படுகின்றது.
இப்படி அடிக்கடி கட்சி, அணி மாறிய பச்சோந்தியைத்தான் மாவை சேனாதிராஜா தமிழரசுக் கட்சியின் மூத்த - சிரேஷ்ட - உறுப்பினர் என்று கூறி கட்சியின் ஏனைய பிரதிநிதிகள் காதிலும் பூச்சுற்றி வருகின்றார்.
ஆமை,அமீனா கதையைப் புரிந்து கொண்டதால்தான் தமிழீழ விடுதலைப் புலிகள் கூட பல மாதக் கணக்கில் இருட்ட றையில் தாம் சிறை வைத்திருந்த சிவஞானத்தை தம்முடன் அவரை வைத்திருப்பது தங்களுக்குக் கெடுதல் என்று கருதி விடுவித்தார்களோ தெரியாது.
இரண்டு 'சீ.வி'க்களிலும் பொதிந்து கிடக்கும் பொதுமை
சரி. இனி விடயத்துக்கு வருவோம்.
இந்த இரண்டு 'சீவி'க்களிலும் அப்படி என்ன பொதுமை பொதிந்து கிடக்கின்றது?
நீதிமன்றத்தினால் 'காமுகன்' என்று வர்ணிக்கப்பட்டு, பதின்மூன்றுக்கும் அதிகமான சிறுமியரை பாலியல் கொடூரத்துக்கு உள்ளாக்கி, ஓர் உதவியாளரைப் படுகொலை செய்த குற்றவாளி என்று அடையாளப்படுத்தப்பட்டு, இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட சுவாமி பிரேமானந்தவை தங்களின் குருவாக இவர்கள் இருவரும் ஏற்றித் துதித்துப் போற்றி வணங்குகின்றார்கள் என்பதுதான் அந்தப் பொதுமை.
சுவாமி பிரேமானந்தா இலங்கை மாத்தளையைச் சேர்ந்தவர். 1951 ஆம் ஆண்டு நவம்பரில் பிறந்த அவரின் பெயர் பிறேம்குமார். சித்து வேலைகள் கைவரப் பெற்றவர். அதனைப் பயன்படுத்தி 1972 இல் மாத்தளையில் ஓர் ஆச்சிரமத்தை ஆரம்பித்தார்.
1983 இனக் கலவரத்தை அடுத்து, ஆசிரமத்தில் இருந்த ஒரு டசின் அநாதைக் குழந்தைகளையும், சில விசுவாசி களையும் அழைத்துக் கொண்டு அகதிப் படகில் தமிழகம் சென்ற பிரேமானந்தா, 1989 இல் திருச்சியில் 'பூபாலகிருஷ்ண ஆச்சிரமம்' என்ற பெயரில் புதிய ஆச்சிரமத்தைத் தொடங்கினார். வாயிலிருந்து திருநீறு கொட்டுவது, சிவலிங்கம் வரவழைப்பது, அந்தரத்தில் கையை அசைத்து திருநீறு, குங்குமம், சந்தனத் தூள், உருத்திராட்சக் கொட்டை போன்றவற்றை வரவழைப்பது போன்ற சித்து வேலைகளை அதியசமாகச் செய்து காட்டுவதால் பிரேமானந்தாவுக்கு அதிக மவுசு ஏற்பட்டது. அதனால் ஆசிரமத்துக்கும் பிரபல்யம் உண்டாயிற்று. சொத்துகள் சேர ஆரம்பித்தன. திருச்சி பாத்திமா நகரில் 150 ஏக்கர் விஸ்தீரணத்தில் ஆசிரமம் விசாலமாயிற்று. சுமார் நூறு சிறுவர்கள், நூறு சிறுமியர் என அநாதைக் குழந்தைகள் ஆச்சிரமத்தில் சேர்க்கப்பட்டு வளர்க்கப்பட்டனர்.
பிரேமானந்த லீலைகள்
1993 இறுதி வரை எல்லாம் நன்றாகத்தான் போய்க்கொண்டிருந்தது. ஆனால் ஆச்சிரமத்துக்குள், சுவாமியின் குடிலுக்குள் இடம்பெறும் பயங்கரங்கள் பற்றி செய்தி கசியத் தொடங்கிய போதுதான் நிலைமை விபரீதமாயிற்று.
சில சிறுமிகள் ஆச்சிரமத்தை விட்டுத் தப்பி வந்து பொலிஸில் கொடுத்த புகார்களை அடுத்து பொலிஸ் விசாரணை ஆரம்பமாயிற்று. அப்போதுதான் தோண்டத் தோண்டப் பூதம் கிளம்பிய கதையாக பல மர்மங்கள் வெளிப்படத் தொடங்கின. அநாதைச் சிறுமியரை வைத்துத் தமது உடற்பசியைத் தீர்த்த சுவாமியின் அடாவடித்தனங்கள், பித்தலாட்டங்கள் அம்பலமாயின.
அந்த காலகட்டத்தில் சுவாமி பிரேமானந்தாவின் லீலைகளை விவரிக்காத நாளே தமிழகப் பத்திரிகைகள், சஞ்சிகைகளுக்குக் கிடையாது என்ற நிலைமை. சுவாமி பிரேமானந்தாவைப் போன்று வேடமிட்டு நகைச்சுவை நடிகர் செந்தில் பண்ணிய திரைப்படக் கலாட்டாவுக்குப் பெரு வரவேற்பு.
நீதிமன்ற விசாரணைகளின் படி ஆகக்குறைந்தது பதின்மூன்று சிறுமிகளை பிரேமானந்தா பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியமை நிரூபணமாயிற்று. இதில் பல சிறுமிகள் பருவமடைய முன்னரும், பருவமடைந்து ஒரு மாதத்துக்குள்ளும் கூட சுவாமியால் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டனர் என்ற அதிர்ச்சித் தகவலும் வெளியாயிற்று. பிரேமானந்தாவினால் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு கர்ப்பமடைந்த சிறுமி ஒருவரின் கர்ப்பத்தைக் கலைக்கவும் நீதிமன்றம் அனுமதி அளித்தது. அந்தக் கருவை மருத்துவ சோதனைக்கு உட்படுத்திய நிபுணர்கள் அதற்குக் காரணம் சுவாமி பிரேமானந்தாவே என்பதையும் நீதி மன்றத்தில் விஞ்ஞான ஆதரங்களோடு சமர்ப்பித்தனர்.
சிறுமிகளுக்கு எதிரான இத்தகைய பாலியல் கொடூரங்களை அறிந்து அதற்கு எதிராகக் கொதித்தெழுந்த ரவி என்ற ஆச்சிரம உதவியாளர் பிரேமானந்தாவினால் அடித்துக் கொலை செய்யப்பட்டு ஆச்சிரம சுற்றாடலிலேயே புதைக்கப்பட்டார். விசாரணைகளின்போது அவரது சடலம் தோண்டி எடுக்கப்பட்டது.
பாலியல் வன்புணர்வைத் தாங்கமுடியாமல் ஆச்சிரமத்தை விட்டு ஓட முயன்ற சிறுமிகள் வளைத்துப் பிடிக்கப்பட்டு சுவாமியினாலேயே தாக்கப்பட்டு தண்டிக்கப்பட்டனர். பொலிஸ், நீதிமன்ற விசாரணைகளின் போது ஆச்சிரமத்தில் பிரேமானந்தா சுவாமிக்கு அடுத்த நிலையில் பொறுப்பில் இருந்த மாதாஜி திவ்வியதேவி ராணி என்ற பெண்மணி தலைமறைவானார். சுவாமியின் பாலியல் கொடூரங்களுக்குத் துணை நின்றவர் எனக் கருதப்படும் இந்த அம்மணி இன்னும் இந்தியாவில் தேடப்படும் குற்றவாளியாகவே இருக்கின்றார். அவர் கைது செய்யப்படவில்லை.
நீதிமன்ற விசாரணையை அடுத்து 1997 ஓகஸ்டில் சுவாமி பிரேமானந்தாவுக்கும் அவரது உதவியாளர்கள் ஐவருக்கும் இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. மற்றொரு எதிரிக்கு இரண்டு வருடச் சிறை கிடைத்தது. சுவாமி உட்பட ஏழு எதிரிகளும் பாதிக்கப்பட்ட சிறுமிகளுக்கு இந்தியப் பணத்தில் 62 இலட்சம் ரூபா நஷ்டஈடு செலுத்தவும் உத்தரவிடப்பட்டது.
இந்தத் தீர்ப்பை எதிர்த்து பிரேமானந்தா செய்த மேன்முறையீடு 2002 டிசெம்பரில் உயர்நீதிமன்றத்தினால் நிராகரிக்கப்பட்டு அவருக்கான தண்டனை உறுதிசெய்யப்பட்டது. 2011 பெப்ரவரி 21 இல் தனது 59 ஆவது வயதில் சிறையில் பிரேமானந்தா காலமானார்.
காமுக சுவாமியின் பக்தர்களே இருவரும்
சரி. இந்த பிரேமானந்தா சுவாமிக்கும் இந்த இரண்டு சீ.விக்களுக்கும் என்ன தொடர்பு....?
இந்த இருவருமே அந்த காமுக சுவாமியின் சிஷ்யர்கள் - விசுவாசிகள் - என்பதுதான் முக்கிய அம்சம்.
முதலமைச்சர் வேட்பாளர் சி.வி.விக்கினேஸ்வரன் எந்தக் கூட்டத்தில் பேசத் தொடங்க முன்னரும் 'குரு பிரம்மா.... குரு தேவா...' என்ற சுலோகத்துடன்தான் தனது பேச்சை ஆரம்பிப்பார். அவர் குரு என்று போற்றுவது இந்த சுவாமி பிரேமானந்தாவைத்தான்.
இன்றும் சீ.வி.விக்னேஸ்வரனின் கொழும்பு வீட்டுக்குச் செல்பவர்கள் அவரது ஹோலில் சுவாமி பிரேமானந்தாவின் படம் தொங்கவிடப்பட்டு மலர்மாலை சாத்தி வணங்கப்படுவதை அவதானிக்கலாம்.
தமிழகம் செல்லும் காலம் எல்லாம் விக்னேஸ்வரன் திருச்சிக்கு செல்லத் தவறுவதில்லை. சிறையில் இருந்த சுவாமி பிரேமானந்தாவை சந்தித்து ஆசி பெறுவதை அவர் வருடாந்த வழக்கமாகவே கைக்கொண்டுவந்தார்.
இந்திய செஷன்ஸ் நீதிமன்றத்தினாலும், பின்னர் உயர்நீதிமன்றத்தினாலும் பாலியல் வன்புணர்வுக் கொடூரங் களுக்காகவும், அடித்துப் படுகொலை செய்த குற்றத்துக்காகவும் குற்றவாளியாகக் காணப்பட்டு இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு, மேன்முறையீட்டில் அது உறுதிசெய்யப்பட்ட பின்னரும், அந்தக் குற்றவாளியைக் கடவுளாவும் குருவாகவும் தரிசித்து வணங்கிவரும் ஒருவரின் கைகளில்தான் வடக்கு மாகாண சபை நிர்வாகம் போகப்போகின்றது.
எங்கோ இலங்கை அரசுக்குப் 'பந்தம்' பிடிக்கும் அரசுப்பணியில் இருந்த சீ.வி.விக்கினேஸ்வரனுக்கு இந்த முதலமைச்சர் வேட்பாளர் என்ற அதிர்ஷ்ட அந்தஸ்தைப் பெற்றுக் கொடுத்தது சுவாமி பிரேமானந்தாவின் அருள்தானோ என்பதும் தெரியவில்லை.
திருகோணமலை ஆதிபத்ர காளியை வணங்கும் சம்பந்தனின் கனவில் தோன்றி சீ.வி.விக்கினேஸ்வரனையே முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்தும்படி அருளாசி வழங்கியவரும் இந்த காமுக சுவாமிதானோ தெரியவில்லை.
சீ.வி.கே. சிவஞானமும் இந்த சுவாமியின் பக்தர்தான். 1980 களின் முற்பகுதியில் சிவஞானம் யாழ்.மாநகர சபை அலுவலகத்துக்குள் வைத்து புலிகளால் சுட்டுப் படுகாயப்படுத்தப்பட்டார். அச்சமயம் கொழும்புப் பத்திரிகைகளுக்குப் பேட்டியளித்த சிவஞானம் 'சுவாமி பிரேமானந்தாவே எனது உயிரைக் காப்பாற்றியவர்' என்று கூறத் தவறவில்லை. பிரேமானந்தாவைப் போற்றிப் புகழ்ந்து சீ.வி.கே.சிவஞானம் வரைந்த ஒரு பக்கக் கட்டுரை எண்பதுகளின் முற்பகுதியில் கொழும்புப் பத்திரிகைகளில் பிரசுரமாகியிருந்தது.
கடைசியாக வவுனியாவில் நடைபெற்ற இலங்கைத் தமிழரசுக் கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் கூட தாமும் சீ.வி.விக்கினேஸ்வரனும் சுவாமி பிரேமானந்தாவின் பக்தர்கள் தாம் என்பதை சாடைமாடையாகக் குறிப்பிட சிவஞானம் தவறவில்லை.
'எனக்கும் ( சிவஞானத்துக்கும் ) முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கும் சீ.வி.விக்கினேஸ்வரனுக்கும் இடையில் ஏதும் கருத்து வேறுபாடு உள்ளது என்று யாரும் கருதிவிடக் கூடாது. எங்களுக்குள் ஒரு பிரச்சினையுமில்லை. நாங்கள் இருவரும் ஒரே ஆச்சிரமத்தின் பக்தர்கள்தான்' - என்று சிவஞானம் அங்கு குறிப்பிட்டிருந்தார்.
ஆக காமுக சுவாமியின் பக்தர்கள் இருவரின் கைகளில் வடக்கு மாகாண நிர்வாகம் சிக்கப்போகின்றது என்பதுதான் இன்றைய அவல நிலை.
தந்தை செல்வா கூறியமைபோல தமிழினத்தைக் கடவுள் வந்துதான் காப்பாறவேண்டும் என்பது உண்மை.
ஆனால் அந்தக் கடவுள் சுவாமி பிரேமானந்தா போன்றோரின் வடிவத்தில் வருவார் என்பதுதான் தமிழர்களின் துர்ப்பாக்கியம்....!
ஆருடன்!
சிரிய ஜனாதிபதி பஷர் அல்-அசாத்தின் ஆட்சி, கூத்தாவில் இரசாயன ஆயுதங்களை பயன்படுத்தியது என்பதற்கு வாஷிங்டனிடம் ஆதாரம் ஏதும் இல்லாத நிலையில், சிரியாவிற்கு எதிராக போரை நியாயப்படுத்தும் வாஷிங்டனின் பிரச்சாரம் சிதைந்து கொண்டிருக்கிறது; இன்னும் தெளிவாக இப் போர் சட்டவிரோதமானதாகும். ஒரு தவிர்க்க முடியாத அமெரிக்க-நேட்டோ தாக்குதல் வரவுள்ளது என்னும் செய்தி ஊடக அறிக்கைகள் இருக்கையில், அமெரிக்க மற்றும் பிரித்தானிய அதிகாரிகள் நேற்று போரைத் தொடக்குவதை அவர்கள் தாமதப்படுத்தக்கூடும் என்று கூறினர்.
அரசியல் ஸ்தாபத்திற்கு உள்ளே, வெறுக்கப்பட்ட 2003 ஈராக்கியப் படையெடுப்பை முன்மாதிரியாகக் கொண்டு எப்படி சிரியப் போரை நடத்துவது என்பது குறித்த கவலை உள்ளது. ஐ.நா. பாதுகாப்புக் குழுவின் சட்டபூர்வ அனுமதி இன்றி—அதாவது சர்வதேச சட்டத்தை மீறி மீண்டும், வாஷிங்டனும் லண்டனும் புதிய போரை, பேரழிவு ஆயுதங்கள் பற்றிய பொய்களின் அடிப்படையில் நடத்த முயல்கின்றன.
போர் தொடங்கு முன்னரே, ஒபாமா நிர்வாக அதிகாரிகள் சீர்குலைந்துள்ளனர். PBS தொலைக்காட்சி பேட்டியில் நேற்று இரவு ஒபாமா தவிர்க்க முடியாத தாக்குதல் என்னும் அச்சுறுத்தல்களில் இருந்து பின்வாங்க முயன்றார்: “நாங்கள் இன்னும் முடிவெடுக்கவில்லை, ஆனால் இரசாயன ஆயுதங்கள் பயன்பாடு குறித்த சர்வதேச விதிமுறை, கணக்கில் கொள்ளப்பட வேண்டும். இதை நாம் ஒரு தெளிவான மற்றும் உறுதியான ஆனால் மட்டுப்படுத்தப்பட்ட வகையில் கூறுகிறோம் என்றால், இதைச் செய்யாதீர்கள், எங்கள் தேசிப் பாதுகாப்பு மீது நீண்டகால நேரியப் பாதிப்பை அது ஏற்படுத்தக்கூடும்” என்று முன்னரே கூறியுள்ளோம்.”
தன்னுடைய நிர்வாகம், அசாத்திற்கு எதிராக நடவடிக்கைக்கு முடிவெடுக்கவில்லை என்னும் ஒபாமாவின் கூற்று ஒரு அபத்தமான பொய்யாகும். வாஷிங்டன், ஓராண்டிற்கும் மேலாக அசாத் அகற்றப்பட வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளது; CIA மிகப்பெரிய அளவில் அவருடைய ஆட்சியை எதிர்க்கும் அல்குவேடா பிணைப்புடைய இஸ்லாமியவாத எதிர்ப்பு போராளிகளுக்கு ஆயுதங்களை அளித்துள்ளது.
NBC இடம் ஒரு மூத்த அமெரிக்க அதிகாரி, நேற்று ஒபாமாவை முரண்படுத்திப் பேசி, சிரியத் தலையீட்டிற்கான அமெரிக்க நடவடிக்கைகள் “இனித்திரும்புவதற்கில்லை என்னும் கட்டத்தை அடைந்துவிட்டது”, சில நாட்களில் தாக்குதல்கள் தொடங்கும் என்றார்.
ஒபாமா, அமெரிக்க அரசியலமைப்பை மீறும் வகையில், காங்கிரஸில் வாக்கெடுப்பு இல்லாமலேயே போரைத் தொடக்கும் முயற்சியிலும் எதிர்ப்பை முகங்கொடுக்கிறார். 111 மன்றத்தின் சட்டமியற்றுபவர்கள், 94 குடியரசுக் கட்சியினர், 17 ஜனநாயகக் கட்சியினர் கையெழுத்திட்டுள்ள ஒரு மனுவில் இது “அதிகாரப் பிரிவினைக் கோட்பாட்டை” மீறுவதாகும் என எச்சரித்துள்ளனர். அந்த மனு காங்கிரஸ் மறுபடியும் கூட்டப்பட வேண்டும் என்றும், அதையொட்டி அது போரை ஆதரிக்க முடியும் என்றும் “சிரிய மோதலில் அமெரிக்க ஈடுபாட்டை விரைவுபடுத்துவதற்கான முடிவுகளின் சுமையை பகிர்ந்து கொள்ள முடியும்” என்றும் கூறுகிறது.
மேலும், பிரித்தானிய பாராளுமன்றம் நேற்று சிரியாவுடன் போருக்கான வரைவை இயற்றுவதில் தோல்வியடைந்தது. இந்த வரைவு இன்று பாராளுமன்றத்திற்கு வாக்கெடுப்பிற்காக அனுப்பப்பட வேண்டும், பின்னர் மீண்டும் அது தோற்றால் அடுத்த செவ்வாயன்று பழையபடி வரும். ஒரு தொழிற் கட்சி ஆதாரம் கார்டியனிடம் கூறியது: “நாங்கள் இந்த தீர்மானத்தை ஜாக்கிரதையாக ஆராய்வோம், ஆனால் பிற்பகல் 5.15 க்கு [பிரித்தானிய பிரதம மந்திரி] டேவிட் காமெரோன் இன்று இரண்டாம் வாக்கு தேவையில்லை என, ஒன்றரை மணி நேரத்தில் அவர் மனத்தை மாற்றிக் கொண்டு விட்டார்.”
தொழிற் கட்சி, சிரியாவிற்கு எதிரான ஆக்கிரமிப்பு போருக்கு ஓர் அத்தி இலை மறைப்பை அளிக்க அழுத்தம் கொடுக்கிறது. பிரித்தானிய அரசாங்கம், ஐ.நா. ஆயுதங்கள் ஆய்வாளர்கள் கூத்தாவில் தங்கள் விசாரணையை முடிக்க மற்றும் ஐ.நா. பாதுகாப்புக் குழுவிற்குத் தங்கள் கண்டுபிடிப்புக்களை கொடுக்க அனுமதிக்க வேண்டும் என்ற திருத்தத்திற்கு ஆதரவளிக்கிறது. திருத்தம் கூறுகிறது: “ஐ.நா. பாதுகாப்புக் குழுவிற்கு உடனடியாக எடுத்துரைத்தல், அது மற்றும் ஒவ்வொரு நடவடிக்கையும், பாதுகாப்பு கவுன்சில் தீர்மானம் ஒன்று இராணுவத் தலையீட்டிற்கு ஆதரவு கொடுத்தலை பெறுவதற்கு, அத்தகைய நடவடிக்கை எடுக்கப்படுமுன் பரிசீலிப்பதற்கு உடனடியாக வாய்ப்பு இருக்க வேண்டும்.”
அமெரிக்கா மற்றும் பிரித்தானியா இத்தகைய பொறுப்பற்ற, செல்வாக்கற்ற கொள்கைகளில் இறங்குகின்றன என்ற உண்மை—முதலில் அசாத்திற்கு எதிரான இஸ்லாமியவாத எதிர்ப்புப் போராளிகளுக்கு ஆயுதம் கொடுத்தல், பின் சட்ட விரோதமாக சிரியாவை தாக்க முற்படுதல் என்று—அவை பொதுமக்கள் கருத்தை பொருட்படுத்தவில்லை என்ற உண்மைக்குத்தான் நிரூபணம் ஆகும். அவற்றின் பலமுறை கூறப்பட்ட ஆத்திரமுட்டும் அறிக்கைகளால், ஒபாமாவும் காமெரோனும் தங்கள் அரசியல் அதிகாரத்தை இப்போரில் பணயம் வைத்துள்ளனர். மக்களிடையே இதற்கு ஆதரவு இல்லாவிடினும், சர்வதேச அழுத்தங்கள் எதிராகப் பெருகினாலும், எப்படியும் இதை நடத்த அவர்கள் முற்படுவர்.
இந்த வாரம் ரஷ்ய வெளியுறவு மந்திரி செர்ஜீ லாவ்ரோவ், வாஷிங்டனிடம் அசாத் படைகள் சிரியக் குடிமக்களை கூத்தாவில் நரம்பு எரிவாயு மூலம் தாக்கின என்ற குற்றச்சாட்டுக்களுக்கு ஆதாரம் ஏதும் கொடுக்கவில்லை என்று குற்றம் சாட்டினார். “அவர்களால் ஆதாரங்களை முன்வைக்க முடியவில்லை, ஆனால் மீண்டும் மீண்டும் “சிவப்புக் கோடு” கடக்கப்பட்டு விட்டது, இனி அவர்கள் பொறுத்திருக்க முடியாது எனக் கூறுகின்றனர்” என்றார். மேலும் “ஐ.நா.பாதுகாப்புக் குழு அனுமதி இல்லாமல் வலிமையைப் பயன்படுத்துவது சர்வதேசச் சட்டத்தை கொச்சைப்படுத்தி மீறுவதாகும்” என்றும் சுட்டிக் காட்டினார்.
ஐ.நா.வின் நம்பகத்தன்மையை ஒபாமா நிர்வாகம் குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது, ஐ.நா. ஆய்வாளர்கள் கூத்தாவில் விசாரணை நடத்தும் முன்னரே அழுத்தம் கொடுக்கிறது என்ற கவலையை கொண்ட ஐ.நா. தலைமைச் செயலர் பான் கி-மூன்: “குழுவிற்குத் தன் வேலையைச் செய்ய அவகாசம் தேவை. அமைதிக்கு வாய்ப்பு கொடுங்கள்; இராஜதந்திர முறைக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள், சண்டையை நிறுத்தங்கள், பேச்சை தொடங்குங்கள்.” என நேற்று வாதிட்டார்.
ஆனால் ஒபாமா நிர்வாகத்தின் அதிகாரிகள் ஐ.நா.விடம் ஆய்வாளர்களை திரும்பப் பெறுமாறு கூறினர். வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் கருத்துப்படி, நிர்வாகம் பானிடம் ஐ.நா. ஆய்வாளர்களின் சிரிய முயற்சி “பொருளற்றது” என்றனர். புதன் அன்று CNN “அமெரிக்க அதிகாரிகள் கிட்டத்தட்ட சிரியாவில் உள்ள ஐ.நா. ஆய்வாளர்களிடம் பாதையை விட்டு அகலுக என்று கூறுகின்றனர்.” எனத் தகவல் கொடுத்துள்ளது.
வாஷிங்டனுக்கு கூத்தாவில் என் நடந்தது என்பது பற்றிய உண்மையை தெளிவாக அறிய விரும்பவில்லை. இரசாயன ஆயுதங்கள் நிகழ்வே அமெரிக்க உளவுத்துறையால் தோற்றுவிக்கப்பட்டிருக்கலாம்; இச்செயல் போருக்கு ஒரு போலிக்காரணத்தை அளிக்கும் நோக்கத்தைக் கொண்டது. இம்மாத நடுவில் இருந்து இரசாயனத் தாக்குதல் நடந்த இடத்திற்கு அருகே உள்ள பகுதிகள் CIA பயிற்சி பெற்ற போராளிகள், அமெரிக்கா, இஸ்ரேல், ஜோர்டானியக் கமாண்டோக்கள் தலைமையில் நிறைந்துள்ளன.
அமெரிக்க ஆதரவுடைய எழுச்சியாளர்கள்தான் சிரியாவில் பிற இரசாயன ஆயுத தாக்குதல்களுக்கு பொறுப்பு என முந்தைய ஐ.நா. விசாரணைகள் கண்டறிந்தன.
அரச மற்றும் செய்தி ஊடகப் பிரச்சாரங்கள், அமெரிக்கத் தாக்குதல் திட்டங்கள் அசாத் சர்வதேச சட்டத்தை மீறியதற்கு குறைந்தபட்ச விடையிறுப்பு என்று கூறுகின்றது. இக்கூற்றுக்கள், கடமையுணர்வுடன் அப்படியே அரச கட்டுப்பாட்டு செய்தி ஊடகத்தால் அளிக்கப்படுகின்றன—இவை பொதுமக்களை நோக்குநிலை தவறச் செய்யும் பொய்கள் ஆகும். அசாத்தை திட்டமிட்டுக் கொல்லுதல் அவருடைய இராணுவத்தை முடக்குதல் என்பது அமெரிக்கத் தாக்குதல்களின் இலக்கு ஆகும்; இது அதிகார சமநிலையை மாற்றும்.
அமெரிக்கத் தாக்குதல் சிரிய ஆட்சியின் இராணுவத்திறனை அழிக்க கவனத்துடன் தயாரிக்கப்பட்ட திட்டத்தை அடிப்படையாக கொண்டது. CNN இன் கருத்துப்படி, “ஏவுகணைகள், இரசாயன ஆயுதங்கள் சேமிப்புக் கிடங்கை இலக்கு கொள்ளும் என்பதற்கான அறிகுறிகள் ஏதும் இல்லை.” உண்மையில் தாக்குதல்கள் “இராணுவ கட்டளை பதுங்கு குழிகள்” மற்றும் விமானத் தளங்களுக்கு எதிராகத்தான் திட்டமிடப்படுகின்றன.
அமெரிக்கா இப்பிராந்தியத்தில் கணிசமாக படைகளை நகர்த்துகிறது; அவற்றில் ஒரு அணுசக்தி நீர்மூழ்கிக்கப்பல், நான்கு அழிக்கும் கப்பல்கள் மத்தியதரைக்கடலில் நிறுத்தப்பட்டுள்ளன, இரண்டு விமானத் தளங்களை கொண்ட கப்பல்கள் மேற்கு இந்தியப் பெருங்கடலில் நிறுத்தப்பட்டுள்ளன. பிரித்தானிய போர்த் தாக்குதல் விமானங்கள் மற்றும் கருவிகள் என அருகே இருக்கும் சைப்ரஸில் இருப்பதுடன் சேர்த்தால் இவை அனைத்தும் செய்தி ஊடகத்தின் கூற்றான சிரியப் போர் ஒரு குறைந்த தன்மையை கொண்டது என்பது பொய்கள் என்பதைத் தெளிவாக்கும். அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் ஆயிரக்கணக்கான மக்களைக் கொல்லும் பேரழிவுத் தாக்குதல்களை தயாரிக்கின்றன, அவை சிரியாவின் உள்கட்டமைப்பை அழித்துவிடும்.
அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளின் தாக்குதல் இன்னும் பரந்த பிராந்திய, ஏன் உலகப் போரை கூட கட்டவிழ்த்துவிடும் அச்சுறுத்தலைக் கொண்டுள்ளது. அமெரிக்கப் பருந்துகளும் இராணுவத் திட்டம் இயற்றுபவர்களும், சிரியாவில் “ஆட்சி மாற்றத்திற்கு” ஒரு தசாப்தத்திற்கும் மேலாக அழுத்தம் கொடுக்கின்றனர்; இது அமெரிக்க ஏகாதிபத்தியம் பிராந்தியத்தில் அதன் முக்கிய இலக்கான ஈரானைத் தாக்குவதற்கு வழி அமைத்துக் கொடுத்து, ரஷ்யா, சீனாவுடன் அமெரிக்க மோதலுக்கு அரங்கு அமைக்கும்.
இப்போர் அச்சுறுத்தல்களுக்கு விடையளிக்கும் வகையில், இஸ்ரேலுக்கு எதிராக பதிலடி தாக்குதல்கள் நடத்தப்படும் என ஈரான் எச்சரித்துள்ளது. ஈரானிய வெளியுறவு அமைச்சரகத்தின் செய்தித் தொடர்பாளர் அப்பாஸ் அராக்சி கூறினார்: “நாம் சிரியாவிற்கு எதிரான எந்த இராணுவத் தாக்குதலுக்கு எதிராகவும் கடுமையாக எச்சரிக்கிறோம்.
இதையொட்டி பிராந்தியத்தில் பேராபத்து விளைவுகள் உறுதியாக ஏற்படும். இந்த சிக்கல்கள் மற்றும் அவற்றின் விளைவுகள் சிரியாவுடன் நின்றுவிடாது. இது முழுப் பிராந்தியத்தையும் சூழ்ந்து கொள்ளும்.”
புதன் அன்று ஈரானிடத்தில் இருந்து வந்த அறிக்கைகளுக்கு விடையிறுப்பு என்ற வகையில், இஸ்ரேல் ரிசர்வ் படைகளைத் திரட்டி அதன் ஏவுகணை பாதுகாப்புக்களையும் ஊக்கப்படுத்தியுள்ளது.
அரசியல் ஸ்தாபத்திற்கு உள்ளே, வெறுக்கப்பட்ட 2003 ஈராக்கியப் படையெடுப்பை முன்மாதிரியாகக் கொண்டு எப்படி சிரியப் போரை நடத்துவது என்பது குறித்த கவலை உள்ளது. ஐ.நா. பாதுகாப்புக் குழுவின் சட்டபூர்வ அனுமதி இன்றி—அதாவது சர்வதேச சட்டத்தை மீறி மீண்டும், வாஷிங்டனும் லண்டனும் புதிய போரை, பேரழிவு ஆயுதங்கள் பற்றிய பொய்களின் அடிப்படையில் நடத்த முயல்கின்றன.
போர் தொடங்கு முன்னரே, ஒபாமா நிர்வாக அதிகாரிகள் சீர்குலைந்துள்ளனர். PBS தொலைக்காட்சி பேட்டியில் நேற்று இரவு ஒபாமா தவிர்க்க முடியாத தாக்குதல் என்னும் அச்சுறுத்தல்களில் இருந்து பின்வாங்க முயன்றார்: “நாங்கள் இன்னும் முடிவெடுக்கவில்லை, ஆனால் இரசாயன ஆயுதங்கள் பயன்பாடு குறித்த சர்வதேச விதிமுறை, கணக்கில் கொள்ளப்பட வேண்டும். இதை நாம் ஒரு தெளிவான மற்றும் உறுதியான ஆனால் மட்டுப்படுத்தப்பட்ட வகையில் கூறுகிறோம் என்றால், இதைச் செய்யாதீர்கள், எங்கள் தேசிப் பாதுகாப்பு மீது நீண்டகால நேரியப் பாதிப்பை அது ஏற்படுத்தக்கூடும்” என்று முன்னரே கூறியுள்ளோம்.”
தன்னுடைய நிர்வாகம், அசாத்திற்கு எதிராக நடவடிக்கைக்கு முடிவெடுக்கவில்லை என்னும் ஒபாமாவின் கூற்று ஒரு அபத்தமான பொய்யாகும். வாஷிங்டன், ஓராண்டிற்கும் மேலாக அசாத் அகற்றப்பட வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளது; CIA மிகப்பெரிய அளவில் அவருடைய ஆட்சியை எதிர்க்கும் அல்குவேடா பிணைப்புடைய இஸ்லாமியவாத எதிர்ப்பு போராளிகளுக்கு ஆயுதங்களை அளித்துள்ளது.
NBC இடம் ஒரு மூத்த அமெரிக்க அதிகாரி, நேற்று ஒபாமாவை முரண்படுத்திப் பேசி, சிரியத் தலையீட்டிற்கான அமெரிக்க நடவடிக்கைகள் “இனித்திரும்புவதற்கில்லை என்னும் கட்டத்தை அடைந்துவிட்டது”, சில நாட்களில் தாக்குதல்கள் தொடங்கும் என்றார்.
ஒபாமா, அமெரிக்க அரசியலமைப்பை மீறும் வகையில், காங்கிரஸில் வாக்கெடுப்பு இல்லாமலேயே போரைத் தொடக்கும் முயற்சியிலும் எதிர்ப்பை முகங்கொடுக்கிறார். 111 மன்றத்தின் சட்டமியற்றுபவர்கள், 94 குடியரசுக் கட்சியினர், 17 ஜனநாயகக் கட்சியினர் கையெழுத்திட்டுள்ள ஒரு மனுவில் இது “அதிகாரப் பிரிவினைக் கோட்பாட்டை” மீறுவதாகும் என எச்சரித்துள்ளனர். அந்த மனு காங்கிரஸ் மறுபடியும் கூட்டப்பட வேண்டும் என்றும், அதையொட்டி அது போரை ஆதரிக்க முடியும் என்றும் “சிரிய மோதலில் அமெரிக்க ஈடுபாட்டை விரைவுபடுத்துவதற்கான முடிவுகளின் சுமையை பகிர்ந்து கொள்ள முடியும்” என்றும் கூறுகிறது.
மேலும், பிரித்தானிய பாராளுமன்றம் நேற்று சிரியாவுடன் போருக்கான வரைவை இயற்றுவதில் தோல்வியடைந்தது. இந்த வரைவு இன்று பாராளுமன்றத்திற்கு வாக்கெடுப்பிற்காக அனுப்பப்பட வேண்டும், பின்னர் மீண்டும் அது தோற்றால் அடுத்த செவ்வாயன்று பழையபடி வரும். ஒரு தொழிற் கட்சி ஆதாரம் கார்டியனிடம் கூறியது: “நாங்கள் இந்த தீர்மானத்தை ஜாக்கிரதையாக ஆராய்வோம், ஆனால் பிற்பகல் 5.15 க்கு [பிரித்தானிய பிரதம மந்திரி] டேவிட் காமெரோன் இன்று இரண்டாம் வாக்கு தேவையில்லை என, ஒன்றரை மணி நேரத்தில் அவர் மனத்தை மாற்றிக் கொண்டு விட்டார்.”
தொழிற் கட்சி, சிரியாவிற்கு எதிரான ஆக்கிரமிப்பு போருக்கு ஓர் அத்தி இலை மறைப்பை அளிக்க அழுத்தம் கொடுக்கிறது. பிரித்தானிய அரசாங்கம், ஐ.நா. ஆயுதங்கள் ஆய்வாளர்கள் கூத்தாவில் தங்கள் விசாரணையை முடிக்க மற்றும் ஐ.நா. பாதுகாப்புக் குழுவிற்குத் தங்கள் கண்டுபிடிப்புக்களை கொடுக்க அனுமதிக்க வேண்டும் என்ற திருத்தத்திற்கு ஆதரவளிக்கிறது. திருத்தம் கூறுகிறது: “ஐ.நா. பாதுகாப்புக் குழுவிற்கு உடனடியாக எடுத்துரைத்தல், அது மற்றும் ஒவ்வொரு நடவடிக்கையும், பாதுகாப்பு கவுன்சில் தீர்மானம் ஒன்று இராணுவத் தலையீட்டிற்கு ஆதரவு கொடுத்தலை பெறுவதற்கு, அத்தகைய நடவடிக்கை எடுக்கப்படுமுன் பரிசீலிப்பதற்கு உடனடியாக வாய்ப்பு இருக்க வேண்டும்.”
அமெரிக்கா மற்றும் பிரித்தானியா இத்தகைய பொறுப்பற்ற, செல்வாக்கற்ற கொள்கைகளில் இறங்குகின்றன என்ற உண்மை—முதலில் அசாத்திற்கு எதிரான இஸ்லாமியவாத எதிர்ப்புப் போராளிகளுக்கு ஆயுதம் கொடுத்தல், பின் சட்ட விரோதமாக சிரியாவை தாக்க முற்படுதல் என்று—அவை பொதுமக்கள் கருத்தை பொருட்படுத்தவில்லை என்ற உண்மைக்குத்தான் நிரூபணம் ஆகும். அவற்றின் பலமுறை கூறப்பட்ட ஆத்திரமுட்டும் அறிக்கைகளால், ஒபாமாவும் காமெரோனும் தங்கள் அரசியல் அதிகாரத்தை இப்போரில் பணயம் வைத்துள்ளனர். மக்களிடையே இதற்கு ஆதரவு இல்லாவிடினும், சர்வதேச அழுத்தங்கள் எதிராகப் பெருகினாலும், எப்படியும் இதை நடத்த அவர்கள் முற்படுவர்.
இந்த வாரம் ரஷ்ய வெளியுறவு மந்திரி செர்ஜீ லாவ்ரோவ், வாஷிங்டனிடம் அசாத் படைகள் சிரியக் குடிமக்களை கூத்தாவில் நரம்பு எரிவாயு மூலம் தாக்கின என்ற குற்றச்சாட்டுக்களுக்கு ஆதாரம் ஏதும் கொடுக்கவில்லை என்று குற்றம் சாட்டினார். “அவர்களால் ஆதாரங்களை முன்வைக்க முடியவில்லை, ஆனால் மீண்டும் மீண்டும் “சிவப்புக் கோடு” கடக்கப்பட்டு விட்டது, இனி அவர்கள் பொறுத்திருக்க முடியாது எனக் கூறுகின்றனர்” என்றார். மேலும் “ஐ.நா.பாதுகாப்புக் குழு அனுமதி இல்லாமல் வலிமையைப் பயன்படுத்துவது சர்வதேசச் சட்டத்தை கொச்சைப்படுத்தி மீறுவதாகும்” என்றும் சுட்டிக் காட்டினார்.
ஐ.நா.வின் நம்பகத்தன்மையை ஒபாமா நிர்வாகம் குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது, ஐ.நா. ஆய்வாளர்கள் கூத்தாவில் விசாரணை நடத்தும் முன்னரே அழுத்தம் கொடுக்கிறது என்ற கவலையை கொண்ட ஐ.நா. தலைமைச் செயலர் பான் கி-மூன்: “குழுவிற்குத் தன் வேலையைச் செய்ய அவகாசம் தேவை. அமைதிக்கு வாய்ப்பு கொடுங்கள்; இராஜதந்திர முறைக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள், சண்டையை நிறுத்தங்கள், பேச்சை தொடங்குங்கள்.” என நேற்று வாதிட்டார்.
ஆனால் ஒபாமா நிர்வாகத்தின் அதிகாரிகள் ஐ.நா.விடம் ஆய்வாளர்களை திரும்பப் பெறுமாறு கூறினர். வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் கருத்துப்படி, நிர்வாகம் பானிடம் ஐ.நா. ஆய்வாளர்களின் சிரிய முயற்சி “பொருளற்றது” என்றனர். புதன் அன்று CNN “அமெரிக்க அதிகாரிகள் கிட்டத்தட்ட சிரியாவில் உள்ள ஐ.நா. ஆய்வாளர்களிடம் பாதையை விட்டு அகலுக என்று கூறுகின்றனர்.” எனத் தகவல் கொடுத்துள்ளது.
வாஷிங்டனுக்கு கூத்தாவில் என் நடந்தது என்பது பற்றிய உண்மையை தெளிவாக அறிய விரும்பவில்லை. இரசாயன ஆயுதங்கள் நிகழ்வே அமெரிக்க உளவுத்துறையால் தோற்றுவிக்கப்பட்டிருக்கலாம்; இச்செயல் போருக்கு ஒரு போலிக்காரணத்தை அளிக்கும் நோக்கத்தைக் கொண்டது. இம்மாத நடுவில் இருந்து இரசாயனத் தாக்குதல் நடந்த இடத்திற்கு அருகே உள்ள பகுதிகள் CIA பயிற்சி பெற்ற போராளிகள், அமெரிக்கா, இஸ்ரேல், ஜோர்டானியக் கமாண்டோக்கள் தலைமையில் நிறைந்துள்ளன.
அமெரிக்க ஆதரவுடைய எழுச்சியாளர்கள்தான் சிரியாவில் பிற இரசாயன ஆயுத தாக்குதல்களுக்கு பொறுப்பு என முந்தைய ஐ.நா. விசாரணைகள் கண்டறிந்தன.
அரச மற்றும் செய்தி ஊடகப் பிரச்சாரங்கள், அமெரிக்கத் தாக்குதல் திட்டங்கள் அசாத் சர்வதேச சட்டத்தை மீறியதற்கு குறைந்தபட்ச விடையிறுப்பு என்று கூறுகின்றது. இக்கூற்றுக்கள், கடமையுணர்வுடன் அப்படியே அரச கட்டுப்பாட்டு செய்தி ஊடகத்தால் அளிக்கப்படுகின்றன—இவை பொதுமக்களை நோக்குநிலை தவறச் செய்யும் பொய்கள் ஆகும். அசாத்தை திட்டமிட்டுக் கொல்லுதல் அவருடைய இராணுவத்தை முடக்குதல் என்பது அமெரிக்கத் தாக்குதல்களின் இலக்கு ஆகும்; இது அதிகார சமநிலையை மாற்றும்.
அமெரிக்கத் தாக்குதல் சிரிய ஆட்சியின் இராணுவத்திறனை அழிக்க கவனத்துடன் தயாரிக்கப்பட்ட திட்டத்தை அடிப்படையாக கொண்டது. CNN இன் கருத்துப்படி, “ஏவுகணைகள், இரசாயன ஆயுதங்கள் சேமிப்புக் கிடங்கை இலக்கு கொள்ளும் என்பதற்கான அறிகுறிகள் ஏதும் இல்லை.” உண்மையில் தாக்குதல்கள் “இராணுவ கட்டளை பதுங்கு குழிகள்” மற்றும் விமானத் தளங்களுக்கு எதிராகத்தான் திட்டமிடப்படுகின்றன.
அமெரிக்கா இப்பிராந்தியத்தில் கணிசமாக படைகளை நகர்த்துகிறது; அவற்றில் ஒரு அணுசக்தி நீர்மூழ்கிக்கப்பல், நான்கு அழிக்கும் கப்பல்கள் மத்தியதரைக்கடலில் நிறுத்தப்பட்டுள்ளன, இரண்டு விமானத் தளங்களை கொண்ட கப்பல்கள் மேற்கு இந்தியப் பெருங்கடலில் நிறுத்தப்பட்டுள்ளன. பிரித்தானிய போர்த் தாக்குதல் விமானங்கள் மற்றும் கருவிகள் என அருகே இருக்கும் சைப்ரஸில் இருப்பதுடன் சேர்த்தால் இவை அனைத்தும் செய்தி ஊடகத்தின் கூற்றான சிரியப் போர் ஒரு குறைந்த தன்மையை கொண்டது என்பது பொய்கள் என்பதைத் தெளிவாக்கும். அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் ஆயிரக்கணக்கான மக்களைக் கொல்லும் பேரழிவுத் தாக்குதல்களை தயாரிக்கின்றன, அவை சிரியாவின் உள்கட்டமைப்பை அழித்துவிடும்.
அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளின் தாக்குதல் இன்னும் பரந்த பிராந்திய, ஏன் உலகப் போரை கூட கட்டவிழ்த்துவிடும் அச்சுறுத்தலைக் கொண்டுள்ளது. அமெரிக்கப் பருந்துகளும் இராணுவத் திட்டம் இயற்றுபவர்களும், சிரியாவில் “ஆட்சி மாற்றத்திற்கு” ஒரு தசாப்தத்திற்கும் மேலாக அழுத்தம் கொடுக்கின்றனர்; இது அமெரிக்க ஏகாதிபத்தியம் பிராந்தியத்தில் அதன் முக்கிய இலக்கான ஈரானைத் தாக்குவதற்கு வழி அமைத்துக் கொடுத்து, ரஷ்யா, சீனாவுடன் அமெரிக்க மோதலுக்கு அரங்கு அமைக்கும்.
இப்போர் அச்சுறுத்தல்களுக்கு விடையளிக்கும் வகையில், இஸ்ரேலுக்கு எதிராக பதிலடி தாக்குதல்கள் நடத்தப்படும் என ஈரான் எச்சரித்துள்ளது. ஈரானிய வெளியுறவு அமைச்சரகத்தின் செய்தித் தொடர்பாளர் அப்பாஸ் அராக்சி கூறினார்: “நாம் சிரியாவிற்கு எதிரான எந்த இராணுவத் தாக்குதலுக்கு எதிராகவும் கடுமையாக எச்சரிக்கிறோம்.
இதையொட்டி பிராந்தியத்தில் பேராபத்து விளைவுகள் உறுதியாக ஏற்படும். இந்த சிக்கல்கள் மற்றும் அவற்றின் விளைவுகள் சிரியாவுடன் நின்றுவிடாது. இது முழுப் பிராந்தியத்தையும் சூழ்ந்து கொள்ளும்.”
புதன் அன்று ஈரானிடத்தில் இருந்து வந்த அறிக்கைகளுக்கு விடையிறுப்பு என்ற வகையில், இஸ்ரேல் ரிசர்வ் படைகளைத் திரட்டி அதன் ஏவுகணை பாதுகாப்புக்களையும் ஊக்கப்படுத்தியுள்ளது.
1985ஆம் ஆண்டிலிருந்து இன்றுவரை (14.07.2013 உதயன் செய்தி) ஐ.நா தலையிடும் என்று சொல்லி ஏமாற்றி வரும் தமிழ் தலைவர்களின் சுயரூபத்தினை தமிழ் மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். இதுவரை பல தடவைகள் மக்களிடம் ஆணை பெற்றார்கள். ஆனால் ஒரு தடவையாவது ஐ.நா சபையில் உரையாற்றி இருக்கிறார்களா? இல்லை ஏனென்றால் அதற்கான கட்டமைப்பினை இதுவரை தமிழ்த் தலைவர்கள் உருவாக்கவில்லை. குறைந்தபட்சம் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு என்ற கட்சியைக்கூட பதிவு செய்யவில்லை.
தமிழ்; மக்களிடம் வாக்கு கேட்டுவரும் கட்சித்தலைவர்களில் பெரும்பாலானவர்களும், வேட்பாளர்களில் பலரும் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புபட்டவர்கள் என்பதை உலகம் நன்கு அறியும். எனவே இவர்களால் அரசாங்கத்திற்கு எதிராக ஒரு துரும்பைக் கூட நகர்த்த முடியாது. ஏனென்றால் மனித உரிமை குற்றச்சihட்டை முன்வைக்கக்கூடிய அளவிற்கு இவர்களில் எவருமே தூய்மையானவர்கள் அல்ல. சுரேஷ் பிரேமச்சந்திரன் (EPRLF), சித்தார்த்தன் (PLOTE ) , அடைக்கலநாதன், சிவாஜிலிங்கம் (TELO) ஆகியோர் தமிழ் மக்களுக்கு எதிராக செய்த மனித உரிமை மீறல்கள் ஏராளம், பல குற்றச்சாட்டுக்களை மக்கள் ஆதாரத்துடன் நிரூபிக்கத்தயாராக உள்ளனர்.
திருவாளர் ஆனந்தசங்கரியும், திருவாளர் சம்மந்தனும் தமிழர் போராட்டத்திற்கு எதிராகச் செய்த பிரச்சாரங்களுக்கு நன்றிக்கடனாக அப்போதைய அரசாங்கத்திடம் குண்டு துளைக்காத வாகனங்களை பரிசாக பெற்றவர்கள் 2009ஆம் ஆண்டு விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் இறந்ததாக செய்தி வெளியாகியவுடன் மிகவும் சந்தோசப்பட்டு சிரித்த ஆனந்தசங்கரி 'தம்பியாக்கள் அந்த ராஸ்கலின் பிரேதத்தை யாரிடமாவது வாங்கி எடுத்து வந்து ஜீப்பில் கட்டி தரதரவென்று இழுத்துத்திரிய வேண்டும் என்று ஆசையாக உள்ளது' என்று கூறியவர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை தலையால் கூட தொடமாட்டேன் என்று 2009ஆம் ஆண்டு பத்திரிகைகளுக்கு அறிக்கை விட்டார். மற்றவர் சம்மந்தன் வடக்கு, கிழக்கு எமக்கு சொந்தமானது அல்ல என்று அறிக்கை விட்டவர் (வீடியோ ஆதாரத்திற்கு இந்த இணைப்பை கிளிக் செய்யுங்கள்)
அடுத்தவர் சரவணபவான் சப்றா என்ற நிதி நிறுவனத்தினை தொடங்கி அன்றாட கூலிவேலை, விவசாய, சேமிப்புக்களில் இருந்த மக்களின் பணத்தை மொத்தமாக சுருட்டி ஏப்பம் விட்டவர் என்று இதுவரை வந்த குற்றச்சாட்டிற்கும் பதில் தராதவர்.
மாவை சேனாதிராஜாவுக்கு வேலையே தனக்கு மக்கள் செல்வாக்கு மூலம் கிடைக்கும் சகல சலுகைகளையும் விற்று பணமாக்குவது தான்.
கிளிநொச்சி மாவட்டத்தினை பிரதிநிதித்துவப்படுத்திகொண்டிருப்பதாக கூறிக்கொள்ளும் ஸ்ரீதரன் இரண்டு கோமாளிகளை அரசியலில் இறக்கிவிட்டுள்ளார். முன்னாள் கல்விப்பணிப்பாளர்களான குருகுலராஜா, அரியரத்தினம் இவர்கள் இருவரும் தான் பாடசாலை மாணவர்களுக்கு கட்டாய ஆயுதப்பயிற்சி என்ற திட்டத்தினை அமுல்படுத்துவதற்கு காரணகர்த்தாக்கள். புலிகளை தவறாக வழிநடத்திய உத்தமர்கள் செஞ்சோலை சிறுவர்களின் கொலைக்கு காரணமான துரோகிகள். இவர்களை மக்கள் ஒருபோதும் மன்னிக்கமாட்டார்கள்.
2012 இறுதிக்குள் தமிழ் மக்களுக்கு தீர்வு கிடைக்காவிடில் உண்ணாவிரதம் இருந்து உயிர் விடுவேன் என்று வாய்ச்சவடால் விட்ட அடைக்கலநாதனை தமிழ் மக்கள் இனியும் நம்பமாட்டார்கள். வன்னியிலுள்ள 3 இலட்சத்திற்கு மேற்பட்ட மக்களையும் புலிகள் என்று பிரகடனப்படுத்தி மக்களின் படுகொலைக்கு காரணமானவர்தான் சம்மந்தன்.
தமிழ்; மக்களிடம் வாக்கு கேட்டுவரும் கட்சித்தலைவர்களில் பெரும்பாலானவர்களும், வேட்பாளர்களில் பலரும் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புபட்டவர்கள் என்பதை உலகம் நன்கு அறியும். எனவே இவர்களால் அரசாங்கத்திற்கு எதிராக ஒரு துரும்பைக் கூட நகர்த்த முடியாது. ஏனென்றால் மனித உரிமை குற்றச்சihட்டை முன்வைக்கக்கூடிய அளவிற்கு இவர்களில் எவருமே தூய்மையானவர்கள் அல்ல. சுரேஷ் பிரேமச்சந்திரன் (EPRLF), சித்தார்த்தன் (PLOTE ) , அடைக்கலநாதன், சிவாஜிலிங்கம் (TELO) ஆகியோர் தமிழ் மக்களுக்கு எதிராக செய்த மனித உரிமை மீறல்கள் ஏராளம், பல குற்றச்சாட்டுக்களை மக்கள் ஆதாரத்துடன் நிரூபிக்கத்தயாராக உள்ளனர்.
திருவாளர் ஆனந்தசங்கரியும், திருவாளர் சம்மந்தனும் தமிழர் போராட்டத்திற்கு எதிராகச் செய்த பிரச்சாரங்களுக்கு நன்றிக்கடனாக அப்போதைய அரசாங்கத்திடம் குண்டு துளைக்காத வாகனங்களை பரிசாக பெற்றவர்கள் 2009ஆம் ஆண்டு விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் இறந்ததாக செய்தி வெளியாகியவுடன் மிகவும் சந்தோசப்பட்டு சிரித்த ஆனந்தசங்கரி 'தம்பியாக்கள் அந்த ராஸ்கலின் பிரேதத்தை யாரிடமாவது வாங்கி எடுத்து வந்து ஜீப்பில் கட்டி தரதரவென்று இழுத்துத்திரிய வேண்டும் என்று ஆசையாக உள்ளது' என்று கூறியவர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை தலையால் கூட தொடமாட்டேன் என்று 2009ஆம் ஆண்டு பத்திரிகைகளுக்கு அறிக்கை விட்டார். மற்றவர் சம்மந்தன் வடக்கு, கிழக்கு எமக்கு சொந்தமானது அல்ல என்று அறிக்கை விட்டவர் (வீடியோ ஆதாரத்திற்கு இந்த இணைப்பை கிளிக் செய்யுங்கள்)
அடுத்தவர் சரவணபவான் சப்றா என்ற நிதி நிறுவனத்தினை தொடங்கி அன்றாட கூலிவேலை, விவசாய, சேமிப்புக்களில் இருந்த மக்களின் பணத்தை மொத்தமாக சுருட்டி ஏப்பம் விட்டவர் என்று இதுவரை வந்த குற்றச்சாட்டிற்கும் பதில் தராதவர்.
மாவை சேனாதிராஜாவுக்கு வேலையே தனக்கு மக்கள் செல்வாக்கு மூலம் கிடைக்கும் சகல சலுகைகளையும் விற்று பணமாக்குவது தான்.
கிளிநொச்சி மாவட்டத்தினை பிரதிநிதித்துவப்படுத்திகொண்டிருப்பதாக கூறிக்கொள்ளும் ஸ்ரீதரன் இரண்டு கோமாளிகளை அரசியலில் இறக்கிவிட்டுள்ளார். முன்னாள் கல்விப்பணிப்பாளர்களான குருகுலராஜா, அரியரத்தினம் இவர்கள் இருவரும் தான் பாடசாலை மாணவர்களுக்கு கட்டாய ஆயுதப்பயிற்சி என்ற திட்டத்தினை அமுல்படுத்துவதற்கு காரணகர்த்தாக்கள். புலிகளை தவறாக வழிநடத்திய உத்தமர்கள் செஞ்சோலை சிறுவர்களின் கொலைக்கு காரணமான துரோகிகள். இவர்களை மக்கள் ஒருபோதும் மன்னிக்கமாட்டார்கள்.
2012 இறுதிக்குள் தமிழ் மக்களுக்கு தீர்வு கிடைக்காவிடில் உண்ணாவிரதம் இருந்து உயிர் விடுவேன் என்று வாய்ச்சவடால் விட்ட அடைக்கலநாதனை தமிழ் மக்கள் இனியும் நம்பமாட்டார்கள். வன்னியிலுள்ள 3 இலட்சத்திற்கு மேற்பட்ட மக்களையும் புலிகள் என்று பிரகடனப்படுத்தி மக்களின் படுகொலைக்கு காரணமானவர்தான் சம்மந்தன்.
இலங்கைக்கு தற்போது விஜயம் மேற்கொண்டுள்ள நவநீதம் பிள்ளை நந்திக்கடலில் 2 இலட்சம் பொதுமக்களை புலிகள் பணயக் கைதிகளாக தடுத்து வைத்திருந்த போது இங்கு வருகை தந்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும் என ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல குறிப்பிட்டார்.
நேற்று நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இதனை தெரிவித்தார்.
ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் வருகை குறித்தும், நிகழ்ச்சி நிரலுக்கு அப்பால் சென்று அவர் பொதுமக்களையும் அமைப்புகளையும் சந்திப்பது குறித்து ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு அவர் பதில ளிக்கையில்,
எமது அழைப்பின் பேரிலே நவநீதம் பிள்ளை இங்கு வந்துள்ளார். அவரின் வருகையை நாம் எதிர்க்கவில்லை. ஐ.ம.சு.மு.வில் உள்ள சில கூட்டுக்கட்சிகள் வேறுபட்ட கருத்துகளை முன்வைத்து வந்தாலும் அரசாங்கம் அவருக்குத் தேவையான சகல வசதிகளையும் அளித்து வருகிறது.
வழமையான இராஜதந்திரி வரையறைகளுக்கு அப்பால் அவருக்கு எங்கும் செல்லவும் எவரையும் விரும்பியவாறு சந்திக்கவும் பூரண அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. அவருக்கு எந்தவித உத்தரவுகளோ வழிகாட்டலோ நாம் வழங்கவில்லை. அவர் தொடர்பில் வேறு விதமான நடைமுறையே பின்பற்றப் பட்டுள்ளது.
ஐ.நா.வில் முக்கிய பதவி வகிப்பவர் சர்வதேச சமூகத்துடனான கொடுக்கல் வாங்கலின் போது இலங்கை விசேடமான பல பிரச்சினைகளை எதிர்கொண்டது. இலங்கைக்கு தேவையற்ற அபகீர்த்திகளை சந்திக்கவும் நேரிட்டது.
இந்த நிலையில் மேற்படி விடயங்களுடன் தொடர்புபட்டவரான பிள்ளையின் விஜயம் அமைந்துள்ளது. நவநீதம்பிள்ளைக்கு வழமையான ராஜதந்திர அடிப்படையில் வசதிகள் வழங்கியிருந்தால் அதனைக் காரணம் காட்டி இலங்கை மீது மீண்டும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படலாம். இதனாலே அவருக்கு இராஜதந்திர வரையறைகளுக்கு அப்பால் சென்று அவருக்கு வசதிகள் செய்யப்பட்டுள்ளது.
மூன்றாவது தடவையாகவே அவர் இலங்கை வந்துள்ளார். முதற் தடவையாக நீலன் திருச்செல்வனின் முதலாவது நினைவு தின விழாவுக்கு இங்கு வந்தார். புலிகளால் நீலன் கொல்லப்பட்டதால் புலிகள் எவ்வளவு மோசமான கொலையாளிகள் என்பது அவருக்கும் தெரியும். சில புலம்பெயர் அமைப்புகளுக்கு சாதகமாக அவர் செயற்படுவதாக எமக்கு சந்தேகம் இருக்கவே செய்கிறது.
இங்குள்ள உண்மை நிலைகளை கண்டு பிள்ளை பக்க சார்பற்ற தெளிவான அறிக்கையை வெளியிடுவார் என நம்புகிறோம் என்றார். காணாமல் போன தமது உறவினர்களை தேடித்தருமாறும் அது குறித்து விசாரிக்குமாறும் பொதுமக்கள் நவநீதம் பிள்ளையிடம் கோரியுள்ளது பற்றி எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த அவர்,
புலிகளினால் பல ஆயிரம் பொதுமக்கள் கொல்லப்பட்டனர். தலதா மாளிகை முதல் காத்தான்குடி பள்ளிவாசல் வரை புலிகளால் செய்யப்பட்ட அழிவுகள் அநேகம். புலிகளின் இந்த மனித உரிமை மீறல்கள் குறித்து யாராவது விசாரிக்குமாறு கோரினரா? 12 ஆயிரம் முன்னாள் புலிகள் புனர்வாழ்வு அளித்து சமூகமயப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்கள் ஜனநாயக வழிக்கு வந்த பின் மீண்டும் அவர்களை விசாரிப்பது நியாயமா? என்றார்.
நேற்று நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இதனை தெரிவித்தார்.
ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் வருகை குறித்தும், நிகழ்ச்சி நிரலுக்கு அப்பால் சென்று அவர் பொதுமக்களையும் அமைப்புகளையும் சந்திப்பது குறித்து ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு அவர் பதில ளிக்கையில்,
எமது அழைப்பின் பேரிலே நவநீதம் பிள்ளை இங்கு வந்துள்ளார். அவரின் வருகையை நாம் எதிர்க்கவில்லை. ஐ.ம.சு.மு.வில் உள்ள சில கூட்டுக்கட்சிகள் வேறுபட்ட கருத்துகளை முன்வைத்து வந்தாலும் அரசாங்கம் அவருக்குத் தேவையான சகல வசதிகளையும் அளித்து வருகிறது.
வழமையான இராஜதந்திரி வரையறைகளுக்கு அப்பால் அவருக்கு எங்கும் செல்லவும் எவரையும் விரும்பியவாறு சந்திக்கவும் பூரண அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. அவருக்கு எந்தவித உத்தரவுகளோ வழிகாட்டலோ நாம் வழங்கவில்லை. அவர் தொடர்பில் வேறு விதமான நடைமுறையே பின்பற்றப் பட்டுள்ளது.
ஐ.நா.வில் முக்கிய பதவி வகிப்பவர் சர்வதேச சமூகத்துடனான கொடுக்கல் வாங்கலின் போது இலங்கை விசேடமான பல பிரச்சினைகளை எதிர்கொண்டது. இலங்கைக்கு தேவையற்ற அபகீர்த்திகளை சந்திக்கவும் நேரிட்டது.
இந்த நிலையில் மேற்படி விடயங்களுடன் தொடர்புபட்டவரான பிள்ளையின் விஜயம் அமைந்துள்ளது. நவநீதம்பிள்ளைக்கு வழமையான ராஜதந்திர அடிப்படையில் வசதிகள் வழங்கியிருந்தால் அதனைக் காரணம் காட்டி இலங்கை மீது மீண்டும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படலாம். இதனாலே அவருக்கு இராஜதந்திர வரையறைகளுக்கு அப்பால் சென்று அவருக்கு வசதிகள் செய்யப்பட்டுள்ளது.
மூன்றாவது தடவையாகவே அவர் இலங்கை வந்துள்ளார். முதற் தடவையாக நீலன் திருச்செல்வனின் முதலாவது நினைவு தின விழாவுக்கு இங்கு வந்தார். புலிகளால் நீலன் கொல்லப்பட்டதால் புலிகள் எவ்வளவு மோசமான கொலையாளிகள் என்பது அவருக்கும் தெரியும். சில புலம்பெயர் அமைப்புகளுக்கு சாதகமாக அவர் செயற்படுவதாக எமக்கு சந்தேகம் இருக்கவே செய்கிறது.
இங்குள்ள உண்மை நிலைகளை கண்டு பிள்ளை பக்க சார்பற்ற தெளிவான அறிக்கையை வெளியிடுவார் என நம்புகிறோம் என்றார். காணாமல் போன தமது உறவினர்களை தேடித்தருமாறும் அது குறித்து விசாரிக்குமாறும் பொதுமக்கள் நவநீதம் பிள்ளையிடம் கோரியுள்ளது பற்றி எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த அவர்,
புலிகளினால் பல ஆயிரம் பொதுமக்கள் கொல்லப்பட்டனர். தலதா மாளிகை முதல் காத்தான்குடி பள்ளிவாசல் வரை புலிகளால் செய்யப்பட்ட அழிவுகள் அநேகம். புலிகளின் இந்த மனித உரிமை மீறல்கள் குறித்து யாராவது விசாரிக்குமாறு கோரினரா? 12 ஆயிரம் முன்னாள் புலிகள் புனர்வாழ்வு அளித்து சமூகமயப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்கள் ஜனநாயக வழிக்கு வந்த பின் மீண்டும் அவர்களை விசாரிப்பது நியாயமா? என்றார்.
யாழ்ப்பாணத்தில் தேர்தல் ஆணையாளருடனான முக்கிய சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது. இச்சந்திப்பில் வேட்பாளர்கள் கட்சி முக்கியஸ்தர்கள் எனப் பலபேர் கலந்து கொண்டுள்ளனர். சந்திப்பில் கலந்து கொண்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் வல்வெட்டித்துறை நகர சபை உறுப்பினருமான சிவாஜிலிங்கம் வடபகுதியில் நிலை கொண்டுள்ள எந்தவொரு இராணுவ முகாமையும் இராணுவம் தற்போது கழற்றக்கூடாது என்றும் அதற்கு தேர்தல் ஆணையாளர் இடமளிக்ககூடாது என்றும் வேண்டியுள்ளார்.
இதற்கான காரணத்தை தேர்தல் ஆணையாளர் கேட்டபோது , தேர்தல் காலத்தில் இராணுவ முகாம்களை அகற்றும்போது தமிழ் மக்களுக்கு அரசின்மீது ஒரு நம்பிக்கை வருவதாகவும் இந்த நம்பிக்கை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வாக்கு வங்கியை பாதிக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
அப்போது இதனை நீங்கள் ஊடகங்களுடாக மக்களுக்கு முதலில் தெரிவித்து இராணுவத் தளபதிக்கு தெரியப்படுத்துங்களேன் என தேர்தல் ஆணையாளர் கேட்டபோது அங்கு பெரும் அமளிதுமளி ஏற்பட்டுள்ளது.
அங்கு குறுக்கிட்ட ஐக்கிய தேசியக் கூட்டமைப்பின் துவார சேகரன் சிவாஜிலிங்கத்தை பார்த்து பிச்சைக்காரன் புண் அரசியலை விடுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.
அத்துடன் போரினால் பாதிக்கப்பட்ட மக்கள் இயக்கத்தின் தலைவர் சகாதேவேன் அரசியல் காரணங்களுக்காக மக்களை தொடர்ந்து அவல நிலைக்குள் தள்ளும் அரசியலை தொடர முற்பட்டால் முன் வரிசைப் பற்கள் அத்தனையும் உள்ளே போகும் என எச்சரித்துள்ளார்.
இதற்கான காரணத்தை தேர்தல் ஆணையாளர் கேட்டபோது , தேர்தல் காலத்தில் இராணுவ முகாம்களை அகற்றும்போது தமிழ் மக்களுக்கு அரசின்மீது ஒரு நம்பிக்கை வருவதாகவும் இந்த நம்பிக்கை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வாக்கு வங்கியை பாதிக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
அப்போது இதனை நீங்கள் ஊடகங்களுடாக மக்களுக்கு முதலில் தெரிவித்து இராணுவத் தளபதிக்கு தெரியப்படுத்துங்களேன் என தேர்தல் ஆணையாளர் கேட்டபோது அங்கு பெரும் அமளிதுமளி ஏற்பட்டுள்ளது.
அங்கு குறுக்கிட்ட ஐக்கிய தேசியக் கூட்டமைப்பின் துவார சேகரன் சிவாஜிலிங்கத்தை பார்த்து பிச்சைக்காரன் புண் அரசியலை விடுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.
அத்துடன் போரினால் பாதிக்கப்பட்ட மக்கள் இயக்கத்தின் தலைவர் சகாதேவேன் அரசியல் காரணங்களுக்காக மக்களை தொடர்ந்து அவல நிலைக்குள் தள்ளும் அரசியலை தொடர முற்பட்டால் முன் வரிசைப் பற்கள் அத்தனையும் உள்ளே போகும் என எச்சரித்துள்ளார்.
கலிபோர்னியாவை சேர்ந்த ஆய்வாளர்கள், 40 ஆயிரம் பேரிடம் கோப்பி குடிப்பதால் ஏற்படும் தீமைகள் குறித்து சுமார் 17 ஆண்டுகளாக நடத்திய ஆய்வில் தினமும் அதிகளவு கோப்பி குடித்தால் ஆபத்து என அமெரிக்க ஆய்வாளர்கள் ஆய்வில் தெரியவந்துள்ளது.
ஆய்வின் முடிவு குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், உலகில் அதிகம் பேர் கோப்பி குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையாகி உள்ளனர் அதிகளவு கோப்பி குடிப்பதால் உடல் சார்ந்த அளவில் பல்வேறு பிரச்னைகள் ஏற்படுகிறது.
குறிப்பாக அவர்களின் இதயம் எளிதில் பலவீனம் அடைந்து விடுகிறது இந்த ஆய்வில் மட்டும் 2,500க்கும் மேற்பட்டோர் கோப்பி குடிக்கும் பழக்கத்தால் உயிரிழந்து உள்ளதுடன் இதில் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் 55 வயதிற்கு உட்பட்டவர்கனாகவே காணப்படுகிறனர்.
ஒரு வாரத்திற்கு 28 கோப்பை கோப்பி குடிப்பவர்களின் இதயம் கடுமையாக பாதிக்கப்படுகிறது என்பதுடன் கோப்பி குடிக்கும் பழக்கம் உடையவர்களில் 32 சதவீதம் பேர் இதய நோயால் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே இளைஞர்கள் மற்றும் சிறுவர்கள் அதிகளவு கோப்பி குடிப்பதை தவிர்ப்பது நலம் என்று அமெரிக்க கலிபோனியாவை சேர்ந்த ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆய்வின் முடிவு குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், உலகில் அதிகம் பேர் கோப்பி குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையாகி உள்ளனர் அதிகளவு கோப்பி குடிப்பதால் உடல் சார்ந்த அளவில் பல்வேறு பிரச்னைகள் ஏற்படுகிறது.
குறிப்பாக அவர்களின் இதயம் எளிதில் பலவீனம் அடைந்து விடுகிறது இந்த ஆய்வில் மட்டும் 2,500க்கும் மேற்பட்டோர் கோப்பி குடிக்கும் பழக்கத்தால் உயிரிழந்து உள்ளதுடன் இதில் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் 55 வயதிற்கு உட்பட்டவர்கனாகவே காணப்படுகிறனர்.
ஒரு வாரத்திற்கு 28 கோப்பை கோப்பி குடிப்பவர்களின் இதயம் கடுமையாக பாதிக்கப்படுகிறது என்பதுடன் கோப்பி குடிக்கும் பழக்கம் உடையவர்களில் 32 சதவீதம் பேர் இதய நோயால் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே இளைஞர்கள் மற்றும் சிறுவர்கள் அதிகளவு கோப்பி குடிப்பதை தவிர்ப்பது நலம் என்று அமெரிக்க கலிபோனியாவை சேர்ந்த ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
விடுதலைப்புலிகள் போர் காலத்தில் தமது வாகன தேவை களை பூர்த்தி செய்து கொள்ளவும் வாகனங்களுக்காக உதிரிபாகங்களை கொள்வனவு செய்யவும் கொழும்பில் நடத்தி வந்த வர்த்தக நிலையம் ஒன்றை முற்றுகையிட்ட பயங்கரவாத புலனாய்வுப்பிரிவினர் அந்த வர்த்தக நிலை யத்தின் தலைவரை கைது செய்து விசாரணைக்கு கூட்டிச் சென்றுள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபர் கொழும்பு 14 சுகததாச விளையாட்டு அரங்கிற்கு அருகில் 5 மாடி வர்த்தக நிலையத்தை நடத்தி வந்துள்ளதுடன் பல அரசியல் வாதிகளுடன் அரசியல் தொடர்புகளை கொண்டிருப்பவர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
8 பேர்ச்சஸ் நிலப்பரப்பை கொண்ட இந்த கட்டடம் புலிகளின் பணத்தில் கொள் வனவு செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளதுடன், இந்த வர்த்தக நிலையம் புலிகளின் போக்குவரத்து பிரிவுக்கு பொறுப்பான கிட்டு என்பவரின் மேற்பார் வையின் கீழ் இயங்கி வந்துள்ளதாகவும், விசாரணைகளில் தெரியவந்துள்ளது என பொலிஸார் கூறினர்.
குறித்த வர்த்தக நிலையத்தை பொலிஸார் சீல் வைத்துள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கைது செய்யப்பட்ட நபர் கொழும்பு 14 சுகததாச விளையாட்டு அரங்கிற்கு அருகில் 5 மாடி வர்த்தக நிலையத்தை நடத்தி வந்துள்ளதுடன் பல அரசியல் வாதிகளுடன் அரசியல் தொடர்புகளை கொண்டிருப்பவர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
8 பேர்ச்சஸ் நிலப்பரப்பை கொண்ட இந்த கட்டடம் புலிகளின் பணத்தில் கொள் வனவு செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளதுடன், இந்த வர்த்தக நிலையம் புலிகளின் போக்குவரத்து பிரிவுக்கு பொறுப்பான கிட்டு என்பவரின் மேற்பார் வையின் கீழ் இயங்கி வந்துள்ளதாகவும், விசாரணைகளில் தெரியவந்துள்ளது என பொலிஸார் கூறினர்.
குறித்த வர்த்தக நிலையத்தை பொலிஸார் சீல் வைத்துள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிரித்தானியாவைச் சேர்ந்த 9 வயதான ரோஸ் பவல் மற்றும் பிளேம் பரெவர் என்ற இரு சகோதர சிறுமிகள் விமானத்தின் இறக்கையில் நின்றவாறு பயணித்து புதிய சாதனை ஒன்றை நிகழ்த்தி யுள்ளனர்.
இச்சகோதரிகளின் குடும்பத்தில் விமானத்தின் இறக்கை யில் நின்று பயணிக்கும் 3ஆவது சந்ததியினராம் இச் சாதனை பயணத்தினை 6 வயதிலிருந்தே மேற்கொள்ள இவர்கள் ஆர்வமாக இருந்துள்ளனர் ஆனால் தற்போது இந்த ஆபத்தான சாதனையை தசை தேய்வு தொடர்பான நோயினால் பாதிக்கப்பட்டுள்ள அவர்களது தோழன் எல்லியின் உயிரைக் காப்பாற்ற நிதி சேகரிக்கும் நோக்கில் ஒரு விழிப்புணர்வு பயணமாகவே இதனை மேற்கொண்டுள்ளனர்
தனது இந்த பயணம் தொடர்பாக பேசிய ரோஸ் இப்பயணம் மிகவும் பிரம்மிப்பாக இருந்தது. உண்மையில் அது எவ்வாறானது என விபரிப்பது கடினமானது எனினும் இந்தப்யணம் பறவை பயணித்தது போல இருந்ததுடன் உயரத்தில் செல்லும் போது சற்று பயமாகவும் இருந்ததாக குறிப்பிட்டார்.
இதே வேளை ‘நாங்கள் இருவரும் இணைந்து இளவயதில் விமான சிறகில் பயணித்தவர்கள் என்ற சாதனையுடன் எல்லிக்கும் உதவுவதற்கு முன்வந்தோம் எனினும் இது கடும் இரைச்சலான பயணமாக இருந்தது’ என பிளேம் கூறியுள்ளார்
எல்லியின் தாயும் , தசை தேய்வு தொடர்பான சிறுவர்ளுக்கு உருவாக்கப்பட்டுள்ள டச்சன் சில்ரன்ஸ் ட்ரஸ்ட் அறக்கட்டளை அமைப்பின் நிறுவுனருமான எமிலி க்ரொஸ்லி கூறுகையில், ‘இச்சாதனையுடன் எங்களது அறக்கட்டளை தொடர்பான விழிப்புணர்வையும் ஏற்படுத்திய இந்த சிறுமிகளால் நாங்கள் பெருமையடை கின்றோம் என்றார்.
மணிக்கு 100 கி.மீ வரை வேகமான விமானத்தைச் செலுத்தியது அவர்களது தாத்தாக்களாகும்.
இச்சகோதரிகளின் குடும்பத்தில் விமானத்தின் இறக்கை யில் நின்று பயணிக்கும் 3ஆவது சந்ததியினராம் இச் சாதனை பயணத்தினை 6 வயதிலிருந்தே மேற்கொள்ள இவர்கள் ஆர்வமாக இருந்துள்ளனர் ஆனால் தற்போது இந்த ஆபத்தான சாதனையை தசை தேய்வு தொடர்பான நோயினால் பாதிக்கப்பட்டுள்ள அவர்களது தோழன் எல்லியின் உயிரைக் காப்பாற்ற நிதி சேகரிக்கும் நோக்கில் ஒரு விழிப்புணர்வு பயணமாகவே இதனை மேற்கொண்டுள்ளனர்
தனது இந்த பயணம் தொடர்பாக பேசிய ரோஸ் இப்பயணம் மிகவும் பிரம்மிப்பாக இருந்தது. உண்மையில் அது எவ்வாறானது என விபரிப்பது கடினமானது எனினும் இந்தப்யணம் பறவை பயணித்தது போல இருந்ததுடன் உயரத்தில் செல்லும் போது சற்று பயமாகவும் இருந்ததாக குறிப்பிட்டார்.
இதே வேளை ‘நாங்கள் இருவரும் இணைந்து இளவயதில் விமான சிறகில் பயணித்தவர்கள் என்ற சாதனையுடன் எல்லிக்கும் உதவுவதற்கு முன்வந்தோம் எனினும் இது கடும் இரைச்சலான பயணமாக இருந்தது’ என பிளேம் கூறியுள்ளார்
எல்லியின் தாயும் , தசை தேய்வு தொடர்பான சிறுவர்ளுக்கு உருவாக்கப்பட்டுள்ள டச்சன் சில்ரன்ஸ் ட்ரஸ்ட் அறக்கட்டளை அமைப்பின் நிறுவுனருமான எமிலி க்ரொஸ்லி கூறுகையில், ‘இச்சாதனையுடன் எங்களது அறக்கட்டளை தொடர்பான விழிப்புணர்வையும் ஏற்படுத்திய இந்த சிறுமிகளால் நாங்கள் பெருமையடை கின்றோம் என்றார்.
மணிக்கு 100 கி.மீ வரை வேகமான விமானத்தைச் செலுத்தியது அவர்களது தாத்தாக்களாகும்.
சிலாபம் முன்னேஸ்வரம் கோயில் தொடர்பிலான மனு விசாரணையை மேற்கொண்ட மேன்முறையீட்டு நீதிமன் றம் மத ஸ்தலங்களில் மேற்கொள்ளப்படும் மிருக பலிக்கு தடை விதிக்கப்படுவதாக தெரிவித்துள்ளது.
சிலாபம் முன்னேஸ்வரம் கோயில் மட்டுமல்லாது இலங்கையில் உள்ள எந்தவொரு மத ஸ்தலங்களிலும் மிருக பலியினை மேற்கொள்வதற்கும் மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் தடை விதிக்கப்பட்டுள்ளது.
சிலாபம் முன்னேஸ்வரம் கோயில் மட்டுமல்லாது இலங்கையில் உள்ள எந்தவொரு மத ஸ்தலங்களிலும் மிருக பலியினை மேற்கொள்வதற்கும் மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் தடை விதிக்கப்பட்டுள்ளது.
(பி.எம்.எம்.ஏ. காதர்)-கல்முனை மாநகர முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப் கிழக்கு மாகாண ஆளுநர் றியர் அட்மிரல் மொகான் விஜேவிக்ரமவினை நேற்று ஆளுநர் அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடினார்.
இச்சந்திப்பின்போது மாநகர சபையின் நிதிக் குழு உறுப்பினர்களான ஏ.எம்.றியாஸ், ஏ.எம்.பறகத்துல்லா, ஏ.அமிர்தலிங்கம் மற்றும் மாநகர சபை கணக்காளர் எல்.ரீ.சாலிதீன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதன்போது கல்முனை மாநகர சபைக்கு வரவேண்டிய 2010 மற்றும் 2011ம் ஆண்டுகளிற்கான முத்திரை வரி வருமானம் கிடைக்கப் பெறுவதில் உள்ள தாமதம் தொடர்பாக கலந்துரையாடப்பட்டதைத் தொடர்ந்து ஆளுநர் எடுத்த நடவடிக்கையின் காரணமாக குறித்த ஆண்டுகளிற்கான முத்திரை வரி வருமானமான 16 மில்லியன் ரூபா எதிர்வரும் புதன் கிழமைக்கு முன்னதாக விடுவிக்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
தற்போதைய முதல்வர் இன, மத, கட்சி என்ற வேறுபாடு இல்லாமல் தனது சேவையினை வழங்குகின்றார் என தெரிவித்த மாநகரசபை உறுப்பினர்கள் மாநகர சபை நடவடிக்கைகளை முன்னெடுப்பதில் முதல்வர் எதிர்நோக்கும் சிக்கல்கள் தொடர்பிலும் அவர்களால் ஆளுநருக்கு விளக்கமளிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து கல்முனை மாநகர அபிவிருத்தி நடவடிக்கைகளிற்கு தேவையான உதவிகளையும் ஒத்தாசைகளையும் முடிந்தளவு மேற்கொள்வதாக ஆளுநர் தெரிவித்தார்.
இச்சந்திப்பின்போது மாநகர சபையின் நிதிக் குழு உறுப்பினர்களான ஏ.எம்.றியாஸ், ஏ.எம்.பறகத்துல்லா, ஏ.அமிர்தலிங்கம் மற்றும் மாநகர சபை கணக்காளர் எல்.ரீ.சாலிதீன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதன்போது கல்முனை மாநகர சபைக்கு வரவேண்டிய 2010 மற்றும் 2011ம் ஆண்டுகளிற்கான முத்திரை வரி வருமானம் கிடைக்கப் பெறுவதில் உள்ள தாமதம் தொடர்பாக கலந்துரையாடப்பட்டதைத் தொடர்ந்து ஆளுநர் எடுத்த நடவடிக்கையின் காரணமாக குறித்த ஆண்டுகளிற்கான முத்திரை வரி வருமானமான 16 மில்லியன் ரூபா எதிர்வரும் புதன் கிழமைக்கு முன்னதாக விடுவிக்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
தற்போதைய முதல்வர் இன, மத, கட்சி என்ற வேறுபாடு இல்லாமல் தனது சேவையினை வழங்குகின்றார் என தெரிவித்த மாநகரசபை உறுப்பினர்கள் மாநகர சபை நடவடிக்கைகளை முன்னெடுப்பதில் முதல்வர் எதிர்நோக்கும் சிக்கல்கள் தொடர்பிலும் அவர்களால் ஆளுநருக்கு விளக்கமளிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து கல்முனை மாநகர அபிவிருத்தி நடவடிக்கைகளிற்கு தேவையான உதவிகளையும் ஒத்தாசைகளையும் முடிந்தளவு மேற்கொள்வதாக ஆளுநர் தெரிவித்தார்.
கிழக்கு மாகாண உள்ளூராட்சி மன்றங்களிற்கான முத்திரை வரியினை துரிதமாக பெற்றுக் கொள்ளும் நடைமுறைகள் குறித்த மாகாண முதலமைச்சர் மற்றும் உள்ளூராட்சி, கிராமிய அபிவிருத்தி, சுற்றாடல் அமைச்சின் செயலாளர் யூ.எல்.ஏ.அஸீஸ் தலைமையில் முதலமைச்சர் செயலகத்தில் நேற்று(28.08.2013) புதன்கிழமை மாலை நடைபெற்றது.
முத்திரைவரிகளை உள்ளூராட்ச்சி மன்னறங்கள் இலகுவாக பெறும் பொருட்டு இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் இக்கலந்துரையாடலின் நோக்கம் குறித்தும் ஆசிய மன்றத்தின் நிகழ்சித்திட்ட உத்தியோகத்தர் எம்.ஐ.எம்.வலீத்தினால் விளக்கவுரை நிகழ்த்தப்பட்டது.
இதன்போது உள்ளூராட்சி மன்றங்களுக்கு முத்திரை வரியினை வழங்குவது தொடர்பான கடந்த கால செயற்பாட்டு மீளாய்வும், தற்போதைய வரி அறவீட்டு நிலைமை எதிர்கால நடவடிக்கைகள் மற்றும் முத்திரை வரியினை வழங்குவதில் உள்ள தாமதங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.
காணிப் பதிவுகளை மேற் கொள்கின்றபோது உண்மைப் பெறுமானத்தை காண்பிக்காது குறைந்த பெறுமானமுடையதாக காண்பிக்கப்பட்டு பதிவுகள் மேற் கொள்ளப்படுவதனால் உள்ளூராட்சி மன்றங்களுக்கு வர வேண்டிய அதிகளவான வருமானங்கள் இழக்கப்படுவதாக இங்கு கல்முனை மாநகர முதல்வர் சிராஸ் மீராசாஹிப் சுட்டிக்காட்டியதுடன் இதனை நிவர்த்தி செய்ய தேவையான வழிவகைகளை மேற் கொள்ளுமாறும் வேண்டிக் கொண்டார்.
இந்த கலந்துரையாடலில் கல்முனை மாநகர முதல்வர் கலாநிதி. சிராஸ் மீராசாஹிப், கிழக்கு மாகாண உள்ளூராட்சி திணைக்கள ஆணையாளர் எம்.உதயகுமார், மாகாண பிரதிப்பிரதம செயலாளர் நிதி எஸ்.குமரகுரு, மாகாண இறைவரித் திணைக்கள உத்தியோகத்தர்கள், அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்ட உள்ளூராட்சி திணைக்கள உதவி ஆணையாளர்கள், ஆசிய மன்றத்தின் சார்பில் சிரேஷ்ட தொழில்நுட்ப ஆலோசகர் ஏ.சுபாகரன், நிகழ்ச்சித்திட்ட உத்தியோகத்தர் எம்.ஐ.எம்.வலீத், கல்முனை மற்றும் மட்டக்களப்பு காணிப் பதிவாளர்கள், கல்முனை மற்றும் மட்டக்களப்பு மாநகர சபைகளின் கணக்காளர்கள், அக்கரைப்பற்று மாநகர சபை ஆணையாளர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதே வேளை இலங்கைக்கு வருகை தந்த இந்தியா திருவண்ணாமலை மாவட்ட தமிழ்ச்சங்கத் தலைவர் பா.இந்திரராஜன் தலைமையில் இந்திய இலக்கியக் குழவிற்கும் கிழக்கு மாகாண இலக்கியவாதிகளுக்கிடையிலான ஒன்றுகூடல் அண்மையில மட்டக்களப்பு புதுக்குடியிருப்பு கண்ணகி வித்தியாலயத்தில் நடபெற்றது.
இந்தச்சந்திப்பில் கதிரவன் சுங்சிகை ஆசிரியர் த.இன்பராஜா, கவிஞர் எம்.சதாசவம் ஆகியோருக்கு இந்திய இலக்கியக்குழுவினரால் பொன்னாடை போர்த்தி,நினைவுச்சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
முத்திரைவரிகளை உள்ளூராட்ச்சி மன்னறங்கள் இலகுவாக பெறும் பொருட்டு இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் இக்கலந்துரையாடலின் நோக்கம் குறித்தும் ஆசிய மன்றத்தின் நிகழ்சித்திட்ட உத்தியோகத்தர் எம்.ஐ.எம்.வலீத்தினால் விளக்கவுரை நிகழ்த்தப்பட்டது.
இதன்போது உள்ளூராட்சி மன்றங்களுக்கு முத்திரை வரியினை வழங்குவது தொடர்பான கடந்த கால செயற்பாட்டு மீளாய்வும், தற்போதைய வரி அறவீட்டு நிலைமை எதிர்கால நடவடிக்கைகள் மற்றும் முத்திரை வரியினை வழங்குவதில் உள்ள தாமதங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.
காணிப் பதிவுகளை மேற் கொள்கின்றபோது உண்மைப் பெறுமானத்தை காண்பிக்காது குறைந்த பெறுமானமுடையதாக காண்பிக்கப்பட்டு பதிவுகள் மேற் கொள்ளப்படுவதனால் உள்ளூராட்சி மன்றங்களுக்கு வர வேண்டிய அதிகளவான வருமானங்கள் இழக்கப்படுவதாக இங்கு கல்முனை மாநகர முதல்வர் சிராஸ் மீராசாஹிப் சுட்டிக்காட்டியதுடன் இதனை நிவர்த்தி செய்ய தேவையான வழிவகைகளை மேற் கொள்ளுமாறும் வேண்டிக் கொண்டார்.
இந்த கலந்துரையாடலில் கல்முனை மாநகர முதல்வர் கலாநிதி. சிராஸ் மீராசாஹிப், கிழக்கு மாகாண உள்ளூராட்சி திணைக்கள ஆணையாளர் எம்.உதயகுமார், மாகாண பிரதிப்பிரதம செயலாளர் நிதி எஸ்.குமரகுரு, மாகாண இறைவரித் திணைக்கள உத்தியோகத்தர்கள், அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்ட உள்ளூராட்சி திணைக்கள உதவி ஆணையாளர்கள், ஆசிய மன்றத்தின் சார்பில் சிரேஷ்ட தொழில்நுட்ப ஆலோசகர் ஏ.சுபாகரன், நிகழ்ச்சித்திட்ட உத்தியோகத்தர் எம்.ஐ.எம்.வலீத், கல்முனை மற்றும் மட்டக்களப்பு காணிப் பதிவாளர்கள், கல்முனை மற்றும் மட்டக்களப்பு மாநகர சபைகளின் கணக்காளர்கள், அக்கரைப்பற்று மாநகர சபை ஆணையாளர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதே வேளை இலங்கைக்கு வருகை தந்த இந்தியா திருவண்ணாமலை மாவட்ட தமிழ்ச்சங்கத் தலைவர் பா.இந்திரராஜன் தலைமையில் இந்திய இலக்கியக் குழவிற்கும் கிழக்கு மாகாண இலக்கியவாதிகளுக்கிடையிலான ஒன்றுகூடல் அண்மையில மட்டக்களப்பு புதுக்குடியிருப்பு கண்ணகி வித்தியாலயத்தில் நடபெற்றது.
இந்தச்சந்திப்பில் கதிரவன் சுங்சிகை ஆசிரியர் த.இன்பராஜா, கவிஞர் எம்.சதாசவம் ஆகியோருக்கு இந்திய இலக்கியக்குழுவினரால் பொன்னாடை போர்த்தி,நினைவுச்சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் அருண் தம்பிமுத்து அவர்கள் நவநீதம்பிள்ளை அவர்களை திருகோணமலையில் சந்தித்து உரையாடினார். அவ்வுரையாடலின்போது இலங்கை சம்மந்தமான விசாரணையானது யுத்தத்தின் இறுதிப்பகுதியை மட்டும் கவனத்திற்கொள்ளாது கடந்த காலத்தையும் உள்ளடக்கியதாக இருக்கவேண்டுமென வேண்டிக்கொண்டார் .
அவர் மேலும் கூறுகையில் ,"2009 ஆம் ஆண்டு முடிவுற்ற யுத்தத்தின் யுத்தம் பற்றிய விசாரணையை வேண்டி நிற்போர் அதற்கு முன்னர் இடம்பெற்ற கொலைகள் ,ஆட்கடத்தல் ,சிறுவர்களை கட்டாயமாக படையில் சேர்த்தல் போன்ற அநியாயங்கள் நடந்துகொண்டிருந்த வேளை அதை முன்னின்று நடத்தியவர்களாகவும் அதற்கு துணை போனவர்களாகவும் இருந்திருக்கிறார்கள் .
தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர்களாக இருப்பவர்கள் 89-90 காலப்பகுதியில் தமிழ் தேசிய இராணுவத்திற்கு தலைமை தாங்கி புலிகளுக்கெதிரான யுத்தத்தை முன்னின்று நடாத்தி கல்விமான்கள் , பத்திரிகை ஆசிரியர்கள், பொது மக்கள் என எத்தனையோ உயிர்களை பலி எடுத்திருக்கிறார்கள்.
தமிழ் தேசிய இராணுவத்தை வழிநடத்தி எத்தனையோ உயிர் அழிவுக்கு காரணமாக இருந்தவர்கள் இப்போ தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர்களாக இருக்கின்றார்கள். நான்காவது ஈழப்போர் நடந்துகொண்டிர்ந்த காலகட்டத்தில் புலிகளை ஏகப்பிரதிநிதிகள் என கூறி அவர்களுடன் தேன்நிலவு நடாத்திய சம்மந்தன் ,விசாரணை கோரி நிற்பது நகைப்புக்கிடமானதாகும்.
வன்னி யுத்தத்தின் போது மக்கள் மனித கேடயங்களாக பயன்படுத்தப்பட்ட வேளை வாய் மூடி மௌனிகளாக இருந்து அதற்கு துணைபோன தமிழ் தேசிய கூட்டமைப்பு சர்வதேச விசாரணைக்குட்படுத்தப்பட வேண்டும். என்ன அடிப்படையில் யுத்த குற்றவாளி என குற்றம் சுமத்தப்பட்டுள்ள சரத் பொன்சேகாவை ஜனாதிபதி தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் ஆதரித்தார்கள் ?” என கேள்வி எழுப்பியுள்ளார்.
"மண்டையன் குழு " என்ற துணைக்குழுவிற்கு தலைமை தாங்கிய சுரேஷ் பிரேமச்சந்திரன் 89-90 காலப்பகுதியில் புலி உறுப்பினர்களை வெட்டியும் ,சுட்டும் ,உயிருடன் எரித்தும் கொன்று குவித்தது அனைவருக்கும் தெரிந்ததே.
அவர் மேலும் கூறுகையில் ,"2009 ஆம் ஆண்டு முடிவுற்ற யுத்தத்தின் யுத்தம் பற்றிய விசாரணையை வேண்டி நிற்போர் அதற்கு முன்னர் இடம்பெற்ற கொலைகள் ,ஆட்கடத்தல் ,சிறுவர்களை கட்டாயமாக படையில் சேர்த்தல் போன்ற அநியாயங்கள் நடந்துகொண்டிருந்த வேளை அதை முன்னின்று நடத்தியவர்களாகவும் அதற்கு துணை போனவர்களாகவும் இருந்திருக்கிறார்கள் .
தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர்களாக இருப்பவர்கள் 89-90 காலப்பகுதியில் தமிழ் தேசிய இராணுவத்திற்கு தலைமை தாங்கி புலிகளுக்கெதிரான யுத்தத்தை முன்னின்று நடாத்தி கல்விமான்கள் , பத்திரிகை ஆசிரியர்கள், பொது மக்கள் என எத்தனையோ உயிர்களை பலி எடுத்திருக்கிறார்கள்.
தமிழ் தேசிய இராணுவத்தை வழிநடத்தி எத்தனையோ உயிர் அழிவுக்கு காரணமாக இருந்தவர்கள் இப்போ தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர்களாக இருக்கின்றார்கள். நான்காவது ஈழப்போர் நடந்துகொண்டிர்ந்த காலகட்டத்தில் புலிகளை ஏகப்பிரதிநிதிகள் என கூறி அவர்களுடன் தேன்நிலவு நடாத்திய சம்மந்தன் ,விசாரணை கோரி நிற்பது நகைப்புக்கிடமானதாகும்.
வன்னி யுத்தத்தின் போது மக்கள் மனித கேடயங்களாக பயன்படுத்தப்பட்ட வேளை வாய் மூடி மௌனிகளாக இருந்து அதற்கு துணைபோன தமிழ் தேசிய கூட்டமைப்பு சர்வதேச விசாரணைக்குட்படுத்தப்பட வேண்டும். என்ன அடிப்படையில் யுத்த குற்றவாளி என குற்றம் சுமத்தப்பட்டுள்ள சரத் பொன்சேகாவை ஜனாதிபதி தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் ஆதரித்தார்கள் ?” என கேள்வி எழுப்பியுள்ளார்.
"மண்டையன் குழு " என்ற துணைக்குழுவிற்கு தலைமை தாங்கிய சுரேஷ் பிரேமச்சந்திரன் 89-90 காலப்பகுதியில் புலி உறுப்பினர்களை வெட்டியும் ,சுட்டும் ,உயிருடன் எரித்தும் கொன்று குவித்தது அனைவருக்கும் தெரிந்ததே.
நடப்பவை எல்லாற்றுக்கும் அமெரிக்காதான் காரண மாம்!!
சிரியாவின் தலைநகரான டமஸ்கஸில் இடம்பெற்ற இரசாயன ஆயுத தாக்குதல் தொடர்பான விசாரணைகளை துரிதமாக ஆரம்பிக்குமாறு, சிரியா, ஐ.நாவிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
ஐ.நாவிற்கான சிரிய தூதுவர் மஸார் ஜபாரி, ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் பேங்கிமூனிடம் இக்கோரிக்கையை முன்வைத்துள்ளார். கடந்த வாரம் இடம்பெற்ற இரசாயண ஆயுத தாக்குதலில், 350 பேர் மரணமடைந்தனர். அத்துடன் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக, ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
இத்தாக்குதலுக்கு, சிரிய கிளர்ச்சிப்படைகளே காரணமென, அரசாங்கம் தெரிவித் துள்ளது. ஆனால் மேற்கு நாடுகள் தாக்குதலுக்கு சிரிய அரசாங்கமே காரணமென, குற்றம் சாட்டி வருகின்றன. அத்துடன் இரசாயன ஆயுதங்கள் பயன்படுத்தப் படுவதாக, அமெரிக்க ஜனாதிபதி தெரிவிக்கும் குற்றச்சாட்டு ஆதாரமற்றதென, சிரிய அரசாங்கம் தெரிவித்துள்ளதுடன் இந்த குற்றச்சாட்டை முற்றாக மறுப்பதாக, சிரிய வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
கிளர்ச்சிப்படைகளுக்கு ஆயுதங்களை வழங்கி, அவர்களை அமெரிக்காவே ஊக்குவித்தது. இதனால் மோதல் உக்கிரமடைந்ததாக, சிரிய வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.
எனவே இரசாயன ஆயுத தாக்குதல் தொடர்பாக முறையான விசாரணையொன்றை நடாத்துமாறு, சிரியா, ஐ.நாவிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
சிரியாவின் தலைநகரான டமஸ்கஸில் இடம்பெற்ற இரசாயன ஆயுத தாக்குதல் தொடர்பான விசாரணைகளை துரிதமாக ஆரம்பிக்குமாறு, சிரியா, ஐ.நாவிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
ஐ.நாவிற்கான சிரிய தூதுவர் மஸார் ஜபாரி, ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் பேங்கிமூனிடம் இக்கோரிக்கையை முன்வைத்துள்ளார். கடந்த வாரம் இடம்பெற்ற இரசாயண ஆயுத தாக்குதலில், 350 பேர் மரணமடைந்தனர். அத்துடன் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக, ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
இத்தாக்குதலுக்கு, சிரிய கிளர்ச்சிப்படைகளே காரணமென, அரசாங்கம் தெரிவித் துள்ளது. ஆனால் மேற்கு நாடுகள் தாக்குதலுக்கு சிரிய அரசாங்கமே காரணமென, குற்றம் சாட்டி வருகின்றன. அத்துடன் இரசாயன ஆயுதங்கள் பயன்படுத்தப் படுவதாக, அமெரிக்க ஜனாதிபதி தெரிவிக்கும் குற்றச்சாட்டு ஆதாரமற்றதென, சிரிய அரசாங்கம் தெரிவித்துள்ளதுடன் இந்த குற்றச்சாட்டை முற்றாக மறுப்பதாக, சிரிய வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
கிளர்ச்சிப்படைகளுக்கு ஆயுதங்களை வழங்கி, அவர்களை அமெரிக்காவே ஊக்குவித்தது. இதனால் மோதல் உக்கிரமடைந்ததாக, சிரிய வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.
எனவே இரசாயன ஆயுத தாக்குதல் தொடர்பாக முறையான விசாரணையொன்றை நடாத்துமாறு, சிரியா, ஐ.நாவிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
இலங்கை நட்பு நாடாக இருப்பதால், கச்சதீவு பற்றி, தொடர்ந்தும் பேசுவது, பெரும் தர்மசங்கடத்தை ஏற்படுத் துமென, இந்திய வெளியுறவு அமைச்சு தெரிவித் துள்ளது.
இலங்கைக்கும், இந்தியாவிற்கும் இடையே இராமேஸ் வரம் கடற்பகுதியில் அமைந்துள்ள கச்சதீவு 1974ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தத்தின்படி, இலங்கைக்கு உரித்தாக்கப்பட்டது.
கச்சதீவு விவாதம் குறித்து பாராளுமன்றத்தில் சிறப்பு விவாதம் நடாத்த வேண்டுமென, திமுக எம்.பி. இளங்கோவன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி. லிங்கம் ஆகியோர், சபாநாயகரிடம் மனுவொன்றை கையளித்துள்ளனர். எதிர்வரும் மழைக்கால கூட்டத்தொடர் முடிவடைவதற்குள் இது குறித்து விவாதம் நடாத்த வேண்டுமென, அம்மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சிடம் விளக்கம் கோரப்பட்டிருந்தது. இதற்கு பதிலளிக்க, இந்திய வெளியுறவு துறை அமைச்சின் இணை செயலாளர் ஹர்ஷ்வர்தன் சிரிங்லா, இந்திய பாராளுமன்றத்திற்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளார். அக்கடிதத்தில் இந்தியாவிற்கும், இலங்கைக்கும் இடையிலான கடல் எல்லைகள் எவை என்பது, ஏற்கனவே வரையறுக்கப்பட்டு விட்டது. இந்தியா தனது கடல் எல்லையில் எதையும் விட்டுக்கொடுக்கவில்லை. இரு நாடுகளினதும் இணக்கத்தின் அடிப்படையிலேயே, எல்லைகள் முடிவு செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு எல்லைகள் நிர்ணயிக்கப்பட்டபோது, கச்சதீவு இலங்கை கடற்பரப்பிற்குள் அமைந்து விட்டது.
ஆகவே, கச்சதீவு இலங்கைக்கு சொந்தமான பகுதி. இவ்விடயம் முடிந்து போன ஒன்று. அதை திரும்பவும் பரிசீலனை செய்ய முடியாது. இலங்கை, இந்தியாவின் நெருங்கிய நட்பு நாடு. ஆகவே, கச்சதீவு குறித்து இந்திய பாராளுமன்றத்தில் விவாதம் நடாத்த முடியாது எனவும், அவ்வாறு விவாதம் செய்தால் இரு நாடுகளின் நட்புறவில் மிகப்பெரிய தர்மசங்கடங்கள் ஏற்படலாமென தெரிவித்துள்ள ஹர்ஷ்வர்தன சிரிங்கா, இந்திய வெளியுறவு அமைச்சர் சல்மான் குர்ஷித்தின் இணக்கத்துடனேயே, இவ்விடயங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், கூறியுள்ளார்.
இலங்கைக்கும், இந்தியாவிற்கும் இடையே இராமேஸ் வரம் கடற்பகுதியில் அமைந்துள்ள கச்சதீவு 1974ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தத்தின்படி, இலங்கைக்கு உரித்தாக்கப்பட்டது.
கச்சதீவு விவாதம் குறித்து பாராளுமன்றத்தில் சிறப்பு விவாதம் நடாத்த வேண்டுமென, திமுக எம்.பி. இளங்கோவன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி. லிங்கம் ஆகியோர், சபாநாயகரிடம் மனுவொன்றை கையளித்துள்ளனர். எதிர்வரும் மழைக்கால கூட்டத்தொடர் முடிவடைவதற்குள் இது குறித்து விவாதம் நடாத்த வேண்டுமென, அம்மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சிடம் விளக்கம் கோரப்பட்டிருந்தது. இதற்கு பதிலளிக்க, இந்திய வெளியுறவு துறை அமைச்சின் இணை செயலாளர் ஹர்ஷ்வர்தன் சிரிங்லா, இந்திய பாராளுமன்றத்திற்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளார். அக்கடிதத்தில் இந்தியாவிற்கும், இலங்கைக்கும் இடையிலான கடல் எல்லைகள் எவை என்பது, ஏற்கனவே வரையறுக்கப்பட்டு விட்டது. இந்தியா தனது கடல் எல்லையில் எதையும் விட்டுக்கொடுக்கவில்லை. இரு நாடுகளினதும் இணக்கத்தின் அடிப்படையிலேயே, எல்லைகள் முடிவு செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு எல்லைகள் நிர்ணயிக்கப்பட்டபோது, கச்சதீவு இலங்கை கடற்பரப்பிற்குள் அமைந்து விட்டது.
ஆகவே, கச்சதீவு இலங்கைக்கு சொந்தமான பகுதி. இவ்விடயம் முடிந்து போன ஒன்று. அதை திரும்பவும் பரிசீலனை செய்ய முடியாது. இலங்கை, இந்தியாவின் நெருங்கிய நட்பு நாடு. ஆகவே, கச்சதீவு குறித்து இந்திய பாராளுமன்றத்தில் விவாதம் நடாத்த முடியாது எனவும், அவ்வாறு விவாதம் செய்தால் இரு நாடுகளின் நட்புறவில் மிகப்பெரிய தர்மசங்கடங்கள் ஏற்படலாமென தெரிவித்துள்ள ஹர்ஷ்வர்தன சிரிங்கா, இந்திய வெளியுறவு அமைச்சர் சல்மான் குர்ஷித்தின் இணக்கத்துடனேயே, இவ்விடயங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், கூறியுள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை இலங்கை வந்திருப்பது பழிவாங்கும் எண்ணத்துடனேயே என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர், அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
எதிர்காலத்தில் இலங்கையில் கட்டாயம் மனித உரிமைகள் தொடர்பான அலுவலகம் ஒன்றை அமைக்கும்படியும், யுத்தக் குற்றச்சாட்டுக்கள் குறித்து முறைப்பாடு செய்யப்படக்கூடும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பில் இன்று (29) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இலங்கைக்கு வரும்படி நவநீதம்பிள்ளையை அழைத்தவர்கள் உண்மையை கண்டறிவதற்கே அழைத்ததாகக் கூறுகின்ற போதும் நவநீதம்பிள்ளை அவ்வாறு செயற்படுவாறா என்ற சந்தேகம் உள்ளதெனவும் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
நவநீதம்பிள்ளை இலங்கை வந்து செயற்படும் முறை குறித்து இதற்கு முன்னர் தான் கூறியவற்றை அமைச்சர் நினைவுபடுத்தியுள்ளார்.
நவநீதம்பிள்ளை தான் வெளியிடவுள்ள அறிக்கைக்கு ஆதாரம் திரட்டி வலு சேர்க்கவே இலங்கை வந்துள்ளதாகவும் இந்நாட்டு பிரஜைகளிடம் கேள்வி கேட்டு தனது அறிக்கைக்கு தேவையானவற்றை அவர் பெற்றுக் கொள்வார் என்றும் விமல் வீரவன்ச குறிப்பிட்டுள்ளார்.
இராணுவத்தினரை சிலுவையில் அறைவதே இந்த செயற்பாட்டின் நிறைவு அங்கம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நவிபிள்ளையின் வருகை மூலம் போலி ஆவணங்கள் கைமாற்றப்பட்டுள்ளதென தகவல்கள் வெளியாகியுள்ளதாக அமைச்சர் கூறியுள்ளார்.
நாட்டில் நிலையான அரசாங்கம் ஒன்று காணப்படுவதாகவும் ஆனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதனை பலவீனமான அரசாங்கமாக மாற்ற முயற்சிப்பதாகவும் விமல் வீரவன்ச தெரிவித்தார்.
எதிர்காலத்தில் இலங்கையில் கட்டாயம் மனித உரிமைகள் தொடர்பான அலுவலகம் ஒன்றை அமைக்கும்படியும், யுத்தக் குற்றச்சாட்டுக்கள் குறித்து முறைப்பாடு செய்யப்படக்கூடும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பில் இன்று (29) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இலங்கைக்கு வரும்படி நவநீதம்பிள்ளையை அழைத்தவர்கள் உண்மையை கண்டறிவதற்கே அழைத்ததாகக் கூறுகின்ற போதும் நவநீதம்பிள்ளை அவ்வாறு செயற்படுவாறா என்ற சந்தேகம் உள்ளதெனவும் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
நவநீதம்பிள்ளை இலங்கை வந்து செயற்படும் முறை குறித்து இதற்கு முன்னர் தான் கூறியவற்றை அமைச்சர் நினைவுபடுத்தியுள்ளார்.
நவநீதம்பிள்ளை தான் வெளியிடவுள்ள அறிக்கைக்கு ஆதாரம் திரட்டி வலு சேர்க்கவே இலங்கை வந்துள்ளதாகவும் இந்நாட்டு பிரஜைகளிடம் கேள்வி கேட்டு தனது அறிக்கைக்கு தேவையானவற்றை அவர் பெற்றுக் கொள்வார் என்றும் விமல் வீரவன்ச குறிப்பிட்டுள்ளார்.
இராணுவத்தினரை சிலுவையில் அறைவதே இந்த செயற்பாட்டின் நிறைவு அங்கம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நவிபிள்ளையின் வருகை மூலம் போலி ஆவணங்கள் கைமாற்றப்பட்டுள்ளதென தகவல்கள் வெளியாகியுள்ளதாக அமைச்சர் கூறியுள்ளார்.
நாட்டில் நிலையான அரசாங்கம் ஒன்று காணப்படுவதாகவும் ஆனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதனை பலவீனமான அரசாங்கமாக மாற்ற முயற்சிப்பதாகவும் விமல் வீரவன்ச தெரிவித்தார்.
உண்மையும், உறுதியும் இருந்தால் ஒரே மேடையில் இருவரும் பேச முடியும்!
நமது பாதங்கள் நாளைய தலைமுறைக்கு சரியான திசையைக் காட்ட வேண்டும். யார் வெற்றி பெற்றாலும் அதன் பலாபலன்களை அனுபவிப்பவர்கள் நமது மக்க ளாகவே இருக்க வேண்டும். அடுத்தவரை இழிவுபடுத்து வதும், அவர்கள் மீது சேறுபூசுவதும், அவதூறு சுமத்து வதும் அரசியலின் பெயரால் எவருக்கும் இலகுவாக செய்து விட முடிகின்றது.
இந்த நாகரீகமற்ற போக்கை நாம் மாற்றியமைக்க முடியும். இவ்வாறு ஐ.ம.சு.முன்னணியின் முதன்மை வேட்பாளர் எஸ். தவராசா கூட்டமைப்பின் முதன்மை வேட்பாளர் சி.வி. விக்னேஸ்வரன் அவர்களுக்கு பகிரங்க அழைப் பொன்றை விடுத்துள்ளார். அவ்வழைப்பில் மேலும் தெரிவிக்கப் பட்டுள்ளதாவது,
சகவேட்பாளர் என்பதற்கு அப்பால் நீதிபதி என்ற மரியாதைக்குரியவராக நீங்கள் இருந்திருக்கின்றீர்கள். அந்த மரியாதை காரணமாகவும் உங்கள் மீதுள்ள நம்பிக்கை காரணமாகவும் ஒர் அழைப்பை விடுகின்றேன்.
பொது மேடை ஒன்றில் உங்கள் கருத்தை நீங்களும் எமது கருத்தை நானும் தமிழ்மக்களிடம் எடுத்துச் சொல்வோம். மேலைநாடுகளில் இவ்வாறானதொரு நாகரீகமான பிரசார நடைமுறை உண்டு என்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள் என்று நம்புகின்றேன்.
ஒரேமேடையில் இருவேறு கருத்துக்கள் கொண்டவர்கள் இருந்து தமது கருத்துக்களை மக்கள் முன்னிலையில் வைக்கும் பக்குவம் இங்கு எவருக்கும் பழக்கப்பட்டதாகத் தெரியவில்லை. கொண்ட கொள்கையில் உறுதியும் உண்மையும் உள்ளது என்று நம்புகின்றவர்களுக்கு இதுசாத்தியம். நான் ஏற்றிருக்கும் கொள்கை உண்மையானது என்ற உறுதியும் நம்பிக்கையும் எனக்கு உண்டு. மதிப்புக்குரிய உங்களுக்கும் அவ்வாறு இருந்தால் நாம் பொது மேடையில் தோன்ற முடியும்.
இந்த பகிரங்க அழைப்பை நீங்கள் ஏற்றுக் கொள்வீர்களாயின் எதிர்கால அரசியலாளர்களுக்கு நாம் வழிகாட்டிகளாக இருந்தவர்களாவோம். தனித்தனியாக பலமேடைகளில் ஒருவரை ஒருவர் சாடுவது அர்த்தமற்றது. அது உங்களைப் போன்றவர்களுக்கும் என்னைப் போன்றவர்களுக்கும் பொருத்தமானதல்ல என்பது எனது பணிவான அபிப்பிராயமாகும்.
எனது இப் பகிரங்க வேண்டுகோளை ஏற்பீர்களாயின் இது தொடர்பான மேலதிக ஏற்பாடுகளை இணைந்து செய்வதற்கு என்னை தொடர்புகொள்வீர்கள் என நம்புகின்றேன் என்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணயின் E.P.D.P வேட்பாளர் எஸ்.தவராசா வேண்டுகோள் விடுத்துள்ள அழைப்புக் கோரிக்கையில் தெரிவித்துள்ளார்.
நமது பாதங்கள் நாளைய தலைமுறைக்கு சரியான திசையைக் காட்ட வேண்டும். யார் வெற்றி பெற்றாலும் அதன் பலாபலன்களை அனுபவிப்பவர்கள் நமது மக்க ளாகவே இருக்க வேண்டும். அடுத்தவரை இழிவுபடுத்து வதும், அவர்கள் மீது சேறுபூசுவதும், அவதூறு சுமத்து வதும் அரசியலின் பெயரால் எவருக்கும் இலகுவாக செய்து விட முடிகின்றது.
இந்த நாகரீகமற்ற போக்கை நாம் மாற்றியமைக்க முடியும். இவ்வாறு ஐ.ம.சு.முன்னணியின் முதன்மை வேட்பாளர் எஸ். தவராசா கூட்டமைப்பின் முதன்மை வேட்பாளர் சி.வி. விக்னேஸ்வரன் அவர்களுக்கு பகிரங்க அழைப் பொன்றை விடுத்துள்ளார். அவ்வழைப்பில் மேலும் தெரிவிக்கப் பட்டுள்ளதாவது,
சகவேட்பாளர் என்பதற்கு அப்பால் நீதிபதி என்ற மரியாதைக்குரியவராக நீங்கள் இருந்திருக்கின்றீர்கள். அந்த மரியாதை காரணமாகவும் உங்கள் மீதுள்ள நம்பிக்கை காரணமாகவும் ஒர் அழைப்பை விடுகின்றேன்.
பொது மேடை ஒன்றில் உங்கள் கருத்தை நீங்களும் எமது கருத்தை நானும் தமிழ்மக்களிடம் எடுத்துச் சொல்வோம். மேலைநாடுகளில் இவ்வாறானதொரு நாகரீகமான பிரசார நடைமுறை உண்டு என்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள் என்று நம்புகின்றேன்.
ஒரேமேடையில் இருவேறு கருத்துக்கள் கொண்டவர்கள் இருந்து தமது கருத்துக்களை மக்கள் முன்னிலையில் வைக்கும் பக்குவம் இங்கு எவருக்கும் பழக்கப்பட்டதாகத் தெரியவில்லை. கொண்ட கொள்கையில் உறுதியும் உண்மையும் உள்ளது என்று நம்புகின்றவர்களுக்கு இதுசாத்தியம். நான் ஏற்றிருக்கும் கொள்கை உண்மையானது என்ற உறுதியும் நம்பிக்கையும் எனக்கு உண்டு. மதிப்புக்குரிய உங்களுக்கும் அவ்வாறு இருந்தால் நாம் பொது மேடையில் தோன்ற முடியும்.
இந்த பகிரங்க அழைப்பை நீங்கள் ஏற்றுக் கொள்வீர்களாயின் எதிர்கால அரசியலாளர்களுக்கு நாம் வழிகாட்டிகளாக இருந்தவர்களாவோம். தனித்தனியாக பலமேடைகளில் ஒருவரை ஒருவர் சாடுவது அர்த்தமற்றது. அது உங்களைப் போன்றவர்களுக்கும் என்னைப் போன்றவர்களுக்கும் பொருத்தமானதல்ல என்பது எனது பணிவான அபிப்பிராயமாகும்.
எனது இப் பகிரங்க வேண்டுகோளை ஏற்பீர்களாயின் இது தொடர்பான மேலதிக ஏற்பாடுகளை இணைந்து செய்வதற்கு என்னை தொடர்புகொள்வீர்கள் என நம்புகின்றேன் என்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணயின் E.P.D.P வேட்பாளர் எஸ்.தவராசா வேண்டுகோள் விடுத்துள்ள அழைப்புக் கோரிக்கையில் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகளுக் கான ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் யாழ். விஜயத்தின் போது அங்கு வட மாகாண சபை தேர்தலுக்காக போட்டியிடும் ஏனைய கட்சிகளினது பிரதிநிதிகளைச் சந்திக்காமல் வெறுமனே தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளை மட்டும் சந்தித்துள்ளமை ஏனைய கட்சிகளுக்கு இழைக்கப்பட்ட அநீதியாக கருதுகிறேன் என கபே அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் நாயகம் கீர்த்தி தென்னக்கோன் தெரிவித்தார்.
வட மாகாணத்தில் தற்போது தேர்தலொன்றுக்கான ஆயத்தங்கள் இடம்பெற்று வரும் நிலையில் களத்தில் உள்ள அனைத்து கட்சிகளையும் சந்திப்பதே அவர்களுக்கு வழங்கும் சம உரிமையும் தார்மீக பொறுப்பும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார். கண்டி ஜனமெதுர கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற ஊடகச் சந்திப்பின் போதே பணிப்பாளர் நாயகம் மேற் கண்டவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், வட மாகாண சபை தேர்தல் முழு சர்வதேச மட்டத்தில் அவதானத்துடன் நோக்கப்படும் வேளை தமிழ் தேசிய கூட்டமைப்பை மட்டும் சந்தித்து செல்வது ஒரு குறித்த பிரிவினருக்கு மட்டும் வழங்கப்படும் விளம்பரமாகும். ஆகவே இவ்வாறான இந்த நடவடிக்கையை நாம் ஒரு போதும் ஏற்றுக்கொள்ள முடியாது.
ஆகவே இன்னும் சில தினங்கள் இலங்கையில் தங்கவிருக்கும் மனித உரிமைக்கான ஆணையாளர் இந்த நேரத்தில் குறைந்தது அரை மணி நேரமாவது காலத்தை ஒதுக்கி வட மாகாண சபையில் போட்டியிடும் ஏனைய கட்சிகளையும் அதன் ஒரு சில பிரதிநிதிகளையும் சந்தித்துச் செல்ல நேரமெடுக்க வேண்டும் என்றும் சுட்டிக்காட்டினார்.
வட மாகாணத்தில் தற்போது தேர்தலொன்றுக்கான ஆயத்தங்கள் இடம்பெற்று வரும் நிலையில் களத்தில் உள்ள அனைத்து கட்சிகளையும் சந்திப்பதே அவர்களுக்கு வழங்கும் சம உரிமையும் தார்மீக பொறுப்பும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார். கண்டி ஜனமெதுர கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற ஊடகச் சந்திப்பின் போதே பணிப்பாளர் நாயகம் மேற் கண்டவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், வட மாகாண சபை தேர்தல் முழு சர்வதேச மட்டத்தில் அவதானத்துடன் நோக்கப்படும் வேளை தமிழ் தேசிய கூட்டமைப்பை மட்டும் சந்தித்து செல்வது ஒரு குறித்த பிரிவினருக்கு மட்டும் வழங்கப்படும் விளம்பரமாகும். ஆகவே இவ்வாறான இந்த நடவடிக்கையை நாம் ஒரு போதும் ஏற்றுக்கொள்ள முடியாது.
ஆகவே இன்னும் சில தினங்கள் இலங்கையில் தங்கவிருக்கும் மனித உரிமைக்கான ஆணையாளர் இந்த நேரத்தில் குறைந்தது அரை மணி நேரமாவது காலத்தை ஒதுக்கி வட மாகாண சபையில் போட்டியிடும் ஏனைய கட்சிகளையும் அதன் ஒரு சில பிரதிநிதிகளையும் சந்தித்துச் செல்ல நேரமெடுக்க வேண்டும் என்றும் சுட்டிக்காட்டினார்.
கடந்த 30 வருடங்களாக நடைபெற்ற யுத்தத்தின்போது, பயங்கரவாதிகளால் கடத்தப்பட்டு காணாமல் போனதாக கருதப்படும் முப்படையினர், பொலிசார், பொதுமக்கள் என 5 ஆயிரத்திற்கும் அதிகமானோர் புலிகளால் கடத்தப்பட்டு காணாமல் பேயுள்ளதாக புலனாய்வுத்துறை தெரிவித் துள்ளது.
கடந்த 1972 ம் ஆண்டிலிருந்தே பொதுமக்களை கடத்தும் செயலில் புலிகள் ஈடுபட்டுள்ளனர். 1981 ம் ஆண்டிலிருந்து பாதுகாப்பு தரப்பினரையும் கடத்தும் செயலில் புலிகள் ஈடுபட்டுள்ளனர். அன்றிலிருந்து புலிகள் அழிக்கப்படும் வரையும் ஆட்களை கடத்தும் செயல்களில் புலிகள் ஈடுபட்டு வந்துள்ளமையும் தெரியவந்துள்ளது.
பெருந்தொகையானோரை அவர்கள் இவ்வாறு கடத்திச்சென்றுள்ள போதும், அவர்கள் பற்றிய தகவல்களை அறிய முடியவில்லை. பாதுகாப்பு தரப்பைச்சேர்ந்த 3 ஆயிரத்து 484 பேரும், ஆயிரத்து 181 பொலிசாரையும், ஆயிரத்து 175 பொதுமக்களையும் அவர்கள் கடத்திச்சென்றுள்ளனர். குறிப்பாக வடக்கு, கிழக்கில் கடமையில் ஈடுபட்டிருந்தவர்களையே அவர்கள் கடத்தியுள்ளனர்.
புலிகள் இயக்கத்திற்கு பலாத்காரமாக இணைத்துக்கொள்வதற்காக சுமார் 609 பேரை கடத்திச்சென்றுள்ளமையும் பதிவாகியுள்ளதாக பாதுகாப்பு பிரிவின் புலனாய்வு துறை தெரிவிக்கிறது. இதற்கு மேலதிகமாக எல்லைக் கிராமங்களுக்குள் புகுந்து, மேலும் பலரையும் எல்.ரீ.ரீ.ஈ.யினர் கடத்திச்சென்றுள்ளனர். கடத்திக் கொண்டு சென்றவர்களை அடிமைகளாக நடத்தியது மாத்திரமன்றி சிலரை சித்திரவதைக் குள்ளாக்கி படுகொலை செய்துள்ளமையை தற்போது கைதுசெய்யப்பட்டுள்ள எல்.ரீ.ரீ.ஈ இயக்கத்தை சேர்ந்தவர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர்.
இநநிலையில் எல்.ரீ.ரீ.ஈ.யினரின் கோர தாண்டவம் குறித்து தொடர்ந்தும் பல உண்மைகள் வெளிவந்தமுள்ளன. இதேவேளை புலிகளின் இவ்வாறான செயல்கள் காரணமாக பொதுமக்களுக்கும், பாதுகாப்பு பிரிவினருக்கும் ஏற்பட்ட இழப்புக்கள், அழிவுகள் தொடர்பில் சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள் கண்டு கொள்ளவில்லை. ஏன் என்ற கேள்விக்கும் அவர்களிடம் இடமில்லை. எனினும் இவ்வாறு கடத்திச்செல்லப்பட்டவர்களின் நிலை என்னவானது என்பது இதுவரையும் கேள்விக்குரியாகவே உள்ளதாக பாதுகாப்பு பிரிவின் புலனாய்வுத்துறையினர் மேலும் தெரிவித்துள்ளனர்.
கடந்த 1972 ம் ஆண்டிலிருந்தே பொதுமக்களை கடத்தும் செயலில் புலிகள் ஈடுபட்டுள்ளனர். 1981 ம் ஆண்டிலிருந்து பாதுகாப்பு தரப்பினரையும் கடத்தும் செயலில் புலிகள் ஈடுபட்டுள்ளனர். அன்றிலிருந்து புலிகள் அழிக்கப்படும் வரையும் ஆட்களை கடத்தும் செயல்களில் புலிகள் ஈடுபட்டு வந்துள்ளமையும் தெரியவந்துள்ளது.
பெருந்தொகையானோரை அவர்கள் இவ்வாறு கடத்திச்சென்றுள்ள போதும், அவர்கள் பற்றிய தகவல்களை அறிய முடியவில்லை. பாதுகாப்பு தரப்பைச்சேர்ந்த 3 ஆயிரத்து 484 பேரும், ஆயிரத்து 181 பொலிசாரையும், ஆயிரத்து 175 பொதுமக்களையும் அவர்கள் கடத்திச்சென்றுள்ளனர். குறிப்பாக வடக்கு, கிழக்கில் கடமையில் ஈடுபட்டிருந்தவர்களையே அவர்கள் கடத்தியுள்ளனர்.
புலிகள் இயக்கத்திற்கு பலாத்காரமாக இணைத்துக்கொள்வதற்காக சுமார் 609 பேரை கடத்திச்சென்றுள்ளமையும் பதிவாகியுள்ளதாக பாதுகாப்பு பிரிவின் புலனாய்வு துறை தெரிவிக்கிறது. இதற்கு மேலதிகமாக எல்லைக் கிராமங்களுக்குள் புகுந்து, மேலும் பலரையும் எல்.ரீ.ரீ.ஈ.யினர் கடத்திச்சென்றுள்ளனர். கடத்திக் கொண்டு சென்றவர்களை அடிமைகளாக நடத்தியது மாத்திரமன்றி சிலரை சித்திரவதைக் குள்ளாக்கி படுகொலை செய்துள்ளமையை தற்போது கைதுசெய்யப்பட்டுள்ள எல்.ரீ.ரீ.ஈ இயக்கத்தை சேர்ந்தவர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர்.
இநநிலையில் எல்.ரீ.ரீ.ஈ.யினரின் கோர தாண்டவம் குறித்து தொடர்ந்தும் பல உண்மைகள் வெளிவந்தமுள்ளன. இதேவேளை புலிகளின் இவ்வாறான செயல்கள் காரணமாக பொதுமக்களுக்கும், பாதுகாப்பு பிரிவினருக்கும் ஏற்பட்ட இழப்புக்கள், அழிவுகள் தொடர்பில் சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள் கண்டு கொள்ளவில்லை. ஏன் என்ற கேள்விக்கும் அவர்களிடம் இடமில்லை. எனினும் இவ்வாறு கடத்திச்செல்லப்பட்டவர்களின் நிலை என்னவானது என்பது இதுவரையும் கேள்விக்குரியாகவே உள்ளதாக பாதுகாப்பு பிரிவின் புலனாய்வுத்துறையினர் மேலும் தெரிவித்துள்ளனர்.