உடதும்புர பிரதேச பாடசாலை ஒன்றில் க.பொ.த. சாதாரண தர வகுப்பில் கல்வி பயிலும் 15 வயதான மாணவி ஒருவர் தனது காதலுக்கு பெற்றோர் தடையாக இருந்ததன் காரணமாக பாழடைந்த வீடொன்றுக்குள் தனக்குத்தானே தீ வைத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஒன்று உடதும்பர பொலிஸ் பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் குறித்து உடதும்பர பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்ட போது இம்மாணவி இளைஞர் ஒருவருடன் காதல் கொண்டிருந்ததாகவும் இதற்கு பெற்றோர் எதிர்ப்புத் தெரிவித்து வந்ததால் மன வேதனையில் பாடசாலை சென்ற இவர் திரும்பி வந்து பாழடைந்த வீட்டுக்குள் சென்று தனக்குத் தானே தீ வைத்துக் கொண்டிருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இம்மாணவியின் மரணம் தொடர்பான விசாரணைகளை பொலிஸார் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.
சம்பவம் குறித்து உடதும்பர பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்ட போது இம்மாணவி இளைஞர் ஒருவருடன் காதல் கொண்டிருந்ததாகவும் இதற்கு பெற்றோர் எதிர்ப்புத் தெரிவித்து வந்ததால் மன வேதனையில் பாடசாலை சென்ற இவர் திரும்பி வந்து பாழடைந்த வீட்டுக்குள் சென்று தனக்குத் தானே தீ வைத்துக் கொண்டிருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இம்மாணவியின் மரணம் தொடர்பான விசாரணைகளை பொலிஸார் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.
400 கோடி ரூபா வட் வரி மோசடியில் குற்றச்சாட்டை ஏற்றுக்கொண்ட உள்நாட்டு இறைவரி திணைக்களத்தின் முன்னாள் ஆணையாளர் ஏ.டபிள்யு. அம்பேபிட்டியவுக்கு சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது. கொழும்பு உயர்நீதிமன்றம் ஏ.டபிள்யு. அம்பேபிட்டியவுக்கு 14 மாத கால கடூழிய சிறை தண்டனை விதித்துள்ளது. அத்துடன் 5 லட்சம் ரூபா அபராதம் செலுத்த வேண்டுமென்றும், உத்தரவிட்டுள்ளது. அபராத தொகையை செலுத்த தவறினால், மேலும் ஈராண்டுகால சிறை தண்டனை விதிக்கப்படலாமென, மேல் நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்ததுள்ளது.
மேல் நீதிமன்ற நீதிபதி குமுதினி விக்ரமசிங்க முன்னிலையில், வட் வரி மோசடி தொடர்பான வழக்கு விசாரணைக்கு எடுததுக்கொள்ளப்பட்டது. வட் வரி மோசடியின் பிரதி வாதியான எஸ்.எம். அஷ்ரப் எனும் வர்த்தகருக்கு, ஈராண்டுகால கடூழிய சிறை தண்டனையும், 6 கோடி ரூபா அபராதமும் விதிக்கப்பட்டது. இதனை செலுத்த தவறினால், அவரது சொத்துகளை பறிமுதல் செய்வதற்கும், கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டடுள்ளது.
2002 மற்றும் 2004ம் ஆண்டு காலப்பகுதியில் உள்நாட்டு இறைவரி திணைக்களத்தில் வட் வரி மோசடி தொடர்பான 13 பிரதிவாதிகள் இனங்காணப்பட்டுள்ளனர். குற்றத்தை ஒப்புக்கொண்ட மூவருக்கு, இதற்கு முன்னர் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. மற்றொரு சந்தேக நபர் தொடாபான விசாரணைகள், தொடாந்தும் இடம்பெறுகின்றன.
மேல் நீதிமன்ற நீதிபதி குமுதினி விக்ரமசிங்க முன்னிலையில், வட் வரி மோசடி தொடர்பான வழக்கு விசாரணைக்கு எடுததுக்கொள்ளப்பட்டது. வட் வரி மோசடியின் பிரதி வாதியான எஸ்.எம். அஷ்ரப் எனும் வர்த்தகருக்கு, ஈராண்டுகால கடூழிய சிறை தண்டனையும், 6 கோடி ரூபா அபராதமும் விதிக்கப்பட்டது. இதனை செலுத்த தவறினால், அவரது சொத்துகளை பறிமுதல் செய்வதற்கும், கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டடுள்ளது.
2002 மற்றும் 2004ம் ஆண்டு காலப்பகுதியில் உள்நாட்டு இறைவரி திணைக்களத்தில் வட் வரி மோசடி தொடர்பான 13 பிரதிவாதிகள் இனங்காணப்பட்டுள்ளனர். குற்றத்தை ஒப்புக்கொண்ட மூவருக்கு, இதற்கு முன்னர் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. மற்றொரு சந்தேக நபர் தொடாபான விசாரணைகள், தொடாந்தும் இடம்பெறுகின்றன.
(சுன்னாகம் நிருபர்)1980களில் யாழ்ப்பாணத்தில் செயல்பட்ட ‘சப்றா ஃபினான்ஸ்’ நிதி நிறுவனத்தில் நடைபெற்ற பெரும் மோசடிகள் குறித்து அரசாங்கம் விசாரணைகளை நடாத்தத் தீர்மானித்துள்ளதாகத் தெரிய வருகிறது. இந்த நிறுவனம் அந்த நேரத்தில் அறிவித்த வட்டி வீதங்களால் கவரப்பட்ட வட பகுதி மக்கள் தமது கோடிக்கான பணத்தை இந்த நிதி நிறுவனத்தில் வைப்புச் செய்தனர். அவர்களில் பலதரப்பட்ட மக்கள், அதாவது தமது பிற்கால சீவியத்துக்கென பணத்தைச் சேமித்து வைத்திருந்தோர், பிள்ளைகளின் திருமணத்துக்காக பணம் வைத்திருந்தோர், காணி பூமிகளை விற்றுப் பணம் வைத்திருந்தோர் என பல வகையினர் அடங்கியிருந்தனர்.
ஆனால் ஒரு குறிப்பிட்ட காலத்தின் பின்னர் இந்த நிதி நிறுவனம் தனது காரியாலயத்தை இழுத்து மூடிவிட்டு பொதுமக்கள் வைப்பிலிட்ட பணத்துக்கு கையை விரித்துவிட்டது.
அதனால் பலர் ஒன்றும் செய்ய முடியாது பரிதவித்ததுடன், சிலர் அதனால் ஏற்பட்ட மனமுடைவதால் மரணித்த சம்பவங்களும் நிகழ்ந்தன. பலர் தமது பணத்தை மீளப்பெற எடுத்த முயற்சிகள் பயனளிக்கவில்லை.
இந்த நிதி நிறுவனத்தில் பணம் வைப்பிலிட்டோர் சேர்ந்து ஒரு சங்கத்தை அமைத்து செயல்பட முற்பட்டாராயினும், அதுவும் பலனளிக்கவில்லை. அந்தக் காலகட்டத்தில் இலங்கையில் நடந்த மிகப்பெரிய துணிகரமான நிதி மோசடி இதுதான்.
பிற்காலத்தில் சிலர் இது சம்பந்தமாகப் புலிகளின் உதவியை நாடிய போதிலும், புலிகள் அது சம்பந்தமாக அக்கறை செலுத்தாததுடன், அந்த நிதி நிறுவனத்தின் முக்கிய நிர்வாகிகளைப் பாதுகாக்கவும் செய்தனர்.
தமிழர் விடுதலைக் கூட்ணியின் முன்னாள் தலைவரும், உடுப்பிட்டித் தொகுதி பாராளுமன்ற உறுப்பினராக இருந்தவருமான காலஞ்சென்ற மு.சிவசிதம்பரம் அவர்கள் இந்தப் பண மோசடி சம்பந்தமாக அப்போதைய சட்டமா அதிபருடன் பேசி சில நடவடிக்கைகளை எடுக்க முன்வந்தாராயினும், அவர் பின்னர் இறந்துவிட்டதால் அம்முயற்சிகள் கைகூடவில்லை.
இந்த நிதி நிறுவனத்தில் தற்போது தமிழ் தேசியக் கூட்டமைப்பில் பாராளுமன்ற உறுப்பினராக இருக்கும் ஈ.சரவணபவன் ஒரு முக்கிய நிர்வாகியாக செயல்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. அதனால் அவர் மீதும் பொதுமக்களால் குற்றம் சுமத்தப்பட்டது.
அவர் இந்த நிதி நிறுவனத்தில் மோசடி செய்த பணத்தை வைத்துத்தான் இன்று அவர் நடாத்தி வரும் ‘உதயன்’ பத்திரிகையை ஆரம்பித்தார் என்ற குற்றச்சாட்டுகளும் பொதுமக்களால் சுமத்தப்பட்டது. அவரை ‘இன்ரபோல்’ என்ற சர்வதேச பொலிஸ் நிறுவனம் தேடி வருவதாகவும் பரவலாகக் கதைகள் இருந்தன. அவரும் சில காலம் பொதுமக்களின் கண்களில் படாமலும், யாழ்ப்பாணம் வருவதைத் தவிர்த்தும் இருந்தார்.
காலம் தாழ்த்தியாயினும் அரசாங்கம் இப்பொழுது இந்த நிதி நிறுவன மோசடி குறித்து விசாரிக்க முன்வந்ததை, இந்த நிதி நிறுவனத்தில் பணம் வைப்பிலிட்டவர்கள் மட்டுமின்றி, வட பகுதிப் பொதுமக்கள் அனைவரும் வரவேற்றுள்ளனர்.
இது சம்பந்தமான விசாரணைகளின் போது பாராளுமன்ற உறுப்பினர் சரவணபவன் மீதும் விசாரணை நடாத்தப்படுமா என்பது இன்னமும் நிச்சயமாகத் தெரிய வரவில்லை. இருந்த போதிலும,; ‘சப்றா ஃபினான்ஸ்’ என்றவுடன் மக்கள் சரவணபவனை நினைப்பதாலும், அவர் இந்த நிறுவனத்தில’ முக்கியமான பதவியொன்றை வகித்ததாலும், அவரை நிச்சயமாக விசாரிக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் அபிப்பிராயமாக உள்ளது.
விரைவில் நடைபெறவுள்ள வட மாகாணசபைத் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக தனது மைத்துனர் ந.வித்தியாதரனை களமிறக்க சரவணபவன் எம்.பி முற்பட்டு வருவதாகக் கூறப்படும் நிலையில் இந்த விசாரணை வர இருப்பது, அவருக்கு ஒரு சோதனை என்றே சொல்ல வேண்டும். அவருக்கு மட்டுமின்றி வட மாகாணசபைத் தேர்தலில் களமிறங்கக் காத்திருக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும் இது ஒரு சோதனை என்றுதான் கூற வேண்டும்.
நன்றி தேனீ
ஆனால் ஒரு குறிப்பிட்ட காலத்தின் பின்னர் இந்த நிதி நிறுவனம் தனது காரியாலயத்தை இழுத்து மூடிவிட்டு பொதுமக்கள் வைப்பிலிட்ட பணத்துக்கு கையை விரித்துவிட்டது.
அதனால் பலர் ஒன்றும் செய்ய முடியாது பரிதவித்ததுடன், சிலர் அதனால் ஏற்பட்ட மனமுடைவதால் மரணித்த சம்பவங்களும் நிகழ்ந்தன. பலர் தமது பணத்தை மீளப்பெற எடுத்த முயற்சிகள் பயனளிக்கவில்லை.
இந்த நிதி நிறுவனத்தில் பணம் வைப்பிலிட்டோர் சேர்ந்து ஒரு சங்கத்தை அமைத்து செயல்பட முற்பட்டாராயினும், அதுவும் பலனளிக்கவில்லை. அந்தக் காலகட்டத்தில் இலங்கையில் நடந்த மிகப்பெரிய துணிகரமான நிதி மோசடி இதுதான்.
பிற்காலத்தில் சிலர் இது சம்பந்தமாகப் புலிகளின் உதவியை நாடிய போதிலும், புலிகள் அது சம்பந்தமாக அக்கறை செலுத்தாததுடன், அந்த நிதி நிறுவனத்தின் முக்கிய நிர்வாகிகளைப் பாதுகாக்கவும் செய்தனர்.
தமிழர் விடுதலைக் கூட்ணியின் முன்னாள் தலைவரும், உடுப்பிட்டித் தொகுதி பாராளுமன்ற உறுப்பினராக இருந்தவருமான காலஞ்சென்ற மு.சிவசிதம்பரம் அவர்கள் இந்தப் பண மோசடி சம்பந்தமாக அப்போதைய சட்டமா அதிபருடன் பேசி சில நடவடிக்கைகளை எடுக்க முன்வந்தாராயினும், அவர் பின்னர் இறந்துவிட்டதால் அம்முயற்சிகள் கைகூடவில்லை.
இந்த நிதி நிறுவனத்தில் தற்போது தமிழ் தேசியக் கூட்டமைப்பில் பாராளுமன்ற உறுப்பினராக இருக்கும் ஈ.சரவணபவன் ஒரு முக்கிய நிர்வாகியாக செயல்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. அதனால் அவர் மீதும் பொதுமக்களால் குற்றம் சுமத்தப்பட்டது.
அவர் இந்த நிதி நிறுவனத்தில் மோசடி செய்த பணத்தை வைத்துத்தான் இன்று அவர் நடாத்தி வரும் ‘உதயன்’ பத்திரிகையை ஆரம்பித்தார் என்ற குற்றச்சாட்டுகளும் பொதுமக்களால் சுமத்தப்பட்டது. அவரை ‘இன்ரபோல்’ என்ற சர்வதேச பொலிஸ் நிறுவனம் தேடி வருவதாகவும் பரவலாகக் கதைகள் இருந்தன. அவரும் சில காலம் பொதுமக்களின் கண்களில் படாமலும், யாழ்ப்பாணம் வருவதைத் தவிர்த்தும் இருந்தார்.
காலம் தாழ்த்தியாயினும் அரசாங்கம் இப்பொழுது இந்த நிதி நிறுவன மோசடி குறித்து விசாரிக்க முன்வந்ததை, இந்த நிதி நிறுவனத்தில் பணம் வைப்பிலிட்டவர்கள் மட்டுமின்றி, வட பகுதிப் பொதுமக்கள் அனைவரும் வரவேற்றுள்ளனர்.
இது சம்பந்தமான விசாரணைகளின் போது பாராளுமன்ற உறுப்பினர் சரவணபவன் மீதும் விசாரணை நடாத்தப்படுமா என்பது இன்னமும் நிச்சயமாகத் தெரிய வரவில்லை. இருந்த போதிலும,; ‘சப்றா ஃபினான்ஸ்’ என்றவுடன் மக்கள் சரவணபவனை நினைப்பதாலும், அவர் இந்த நிறுவனத்தில’ முக்கியமான பதவியொன்றை வகித்ததாலும், அவரை நிச்சயமாக விசாரிக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் அபிப்பிராயமாக உள்ளது.
விரைவில் நடைபெறவுள்ள வட மாகாணசபைத் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக தனது மைத்துனர் ந.வித்தியாதரனை களமிறக்க சரவணபவன் எம்.பி முற்பட்டு வருவதாகக் கூறப்படும் நிலையில் இந்த விசாரணை வர இருப்பது, அவருக்கு ஒரு சோதனை என்றே சொல்ல வேண்டும். அவருக்கு மட்டுமின்றி வட மாகாணசபைத் தேர்தலில் களமிறங்கக் காத்திருக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும் இது ஒரு சோதனை என்றுதான் கூற வேண்டும்.
நன்றி தேனீ
முன்னாள் பிரதம நீதியரசர் ஷிரானி பண்டாரநாயகவிற்கு உச்சநீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. சலீம் மர்சூப், பிரியசாத் டெப், ஈவா வனசுந்தர ஆகிய மூவரடங்கிய உச்சநீதிமன்ற நீதியரசர்கள் குழு, இவ்வுத்தரவை பிறப்பித்துள்ளனர். எதிர்வரும் 29ம் திகதி ஷிரானி பண்டாரநாயக உச்சநீதிமன்றத்தில் ஆஜராக வேண்டுமென, இவர்கள் தெரிவித்துள்ளனர்.
பாராளுமன்ற விசேட தெரிக்குழுவின் தீர்மானத்தை வலுவற்றதாக்குமாறு கோரி, ஷிரானி பண்டாரநாயக சமர்ப்பித்த மேன்முறையீட்டு மனுவை விலக்கிக்கொள்ளூறு கூறி, சட்டமா அதிபர் பாலித பெர்னாண்டோ உச்சநீதிமன்றத்தில் சமர்ப்பித்த மனு, இன்று கவனத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதனடிப்படையில் இந்த வழக்கு விசாரணையில் ஆஜராகுமாறு ஷிரானி பண்டாரநாயகவிற்கு உச்சநீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்தது.
அத்துடன் இடைக்கால மனுக்களை தாக்கல் செய்த பாராளுமன்ற உறுப்பினர்களான, ஆர். சம்பந்தன் விஜித ஹேரத் ஆகியோருக்கும், எதிர்வரும் 29ம் திகதி உச்சநீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டு, அழைப்பாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. சட்டமா அதிபர் பாலித பெர்னாண்டோ விளக்கமளிக்கையில், மேல் நீதிமன்றத்தில் உள்ள நீதியரசர்கள் தொடாபாக, ஒழுக்காற்று நடவடிக்கைகளை மேற்கொள்ளும் தீர்மானத்தை எடுக்கும் அதிகாரம், பாராளுமன்றத்திற்கே உண்டு என தெரிவித்தார். இதற்கு எதிராக, உத்தரவு பிறப்பிப்பதற்கு, எந்தவொரு நீதிமன்றத்திற்கும் அதிகாரம் இல்லையென பாலித பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். பாராளுமன்ற தெரிவுக்குழுவின் தீர்ப்பு, உச்சநீதிமன்றத்தினால் வலுவிழக்கச்செய்வது, பிழையான முன்னுதாரணமாகுமென்றும், சட்டமா அதிபர் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்ற விசேட தெரிக்குழுவின் தீர்மானத்தை வலுவற்றதாக்குமாறு கோரி, ஷிரானி பண்டாரநாயக சமர்ப்பித்த மேன்முறையீட்டு மனுவை விலக்கிக்கொள்ளூறு கூறி, சட்டமா அதிபர் பாலித பெர்னாண்டோ உச்சநீதிமன்றத்தில் சமர்ப்பித்த மனு, இன்று கவனத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதனடிப்படையில் இந்த வழக்கு விசாரணையில் ஆஜராகுமாறு ஷிரானி பண்டாரநாயகவிற்கு உச்சநீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்தது.
அத்துடன் இடைக்கால மனுக்களை தாக்கல் செய்த பாராளுமன்ற உறுப்பினர்களான, ஆர். சம்பந்தன் விஜித ஹேரத் ஆகியோருக்கும், எதிர்வரும் 29ம் திகதி உச்சநீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டு, அழைப்பாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. சட்டமா அதிபர் பாலித பெர்னாண்டோ விளக்கமளிக்கையில், மேல் நீதிமன்றத்தில் உள்ள நீதியரசர்கள் தொடாபாக, ஒழுக்காற்று நடவடிக்கைகளை மேற்கொள்ளும் தீர்மானத்தை எடுக்கும் அதிகாரம், பாராளுமன்றத்திற்கே உண்டு என தெரிவித்தார். இதற்கு எதிராக, உத்தரவு பிறப்பிப்பதற்கு, எந்தவொரு நீதிமன்றத்திற்கும் அதிகாரம் இல்லையென பாலித பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். பாராளுமன்ற தெரிவுக்குழுவின் தீர்ப்பு, உச்சநீதிமன்றத்தினால் வலுவிழக்கச்செய்வது, பிழையான முன்னுதாரணமாகுமென்றும், சட்டமா அதிபர் தெரிவித்துள்ளார்.
மே தினத்தையொட்டி, விசேட பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு, பாதுகாப்பு செயலாளர், பொலிஸ் மா அதிபருக்கு பணிப்புரை வழங்கியுள்ளார். நாளை இடம்பெறவுள்ள உலக தொழிலாளர் தினத்தையொட்டி மே தின ஊர்வலங்கள் மற்றும் மே தின கூட்டங்கள், கொழும்பில் நடைபெறவுள்ளன. கொழம்பு மற்றும் அதனை சூழவுள்ள பிரதேசங்களில் 13 மேதின ஊர்வலங்களும், 17 மே தின கூட்டங்களும் நடைபெறவுள்ளன.
இதில் கலந்து கொள்ளும் மக்களின் பாதுகாப்பு கருதி, விசேட வேலைத்திட்டங்களை மேற்கொள்ளுமாறு, பதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ, பொலிஸ் மா அதிபர் என்.கே. இளங்ககோனுக்கு பணிப்புரை வழங்கியுள்ளார். இதற்கமைய, விசேட போக்குவரத்து ஒழுங்குகள் மற்றும் மக்களின் பாதுகாப்பு கருதி 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொலிஸாரை கடமையில் ஈடுபடுத்தவும், நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
வெளி மாகாணங்களிலிருந்து மே தின ஊர்வலம் மற்றும் கூட்டங்களில் கலந்து கொள்ள வருகை தரும் மக்களுக்கு கொழும்பில் பிரவேசிப்பதற்கான விரிவான வேலைத்திட்டங்களும் வகுக்கப்பட்டுள்ளன. பிரதான வீதிகளுடாக கொழும்பில் பிரவேசிக்கும் வாகனங்களை நிறுத்துவதற்கு, தனியான இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு தரப்பினர் வழங்கும் ஆலோசனைகளுக்கமைய, செயற்படுமாறு, மேதின ஊர்வலங்கள் மற்றும் கூட்டங்களில் கலந்து கொள்ளும் மக்களை பொலிஸார் கேட்டுள்ளனர்.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் மே தின கூட்டம், பொரளை கெம்பல் மைதானத்தில் நடைபெறவிருப்பதுடன், ஊர்வலம், தாமரை தடாகத்திற்கு அருகாமையிலிருந்து ஆரம்பமாகும். மருதானை வைட் மைதானத்திலிருந்து மக்கள் கட்சியின் ஊர்வலமும், தேச விமுக்தி மக்கள் கட்சியின் மே தின ஊர்வலம், மருதானை வீதியூடாக வந்து, பொரளை சந்தியில் ஐககிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் மே தின ஊர்வலத்தில் இணைவுள்ளது. மக்கள் ஐக்கிய முன்னணியின் மே தின ஊர்வலம் ஆயுர்வேத சநதி, சிறுவுர் விளையாட்டு மைதானத்திற்கு அருகாமையில் காசல் வீதியூடாக வந்து, பொரளை டி.எஸ். சந்தியில் பிரதான ஊர்வலத்தில் இணையவுள்ளது. ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் மே தின கூட்டத்தை, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில், சகல பங்காளி கட்சிகளின் பங்கேற்புடன் அதிவிமர்சையாக நடாத்த, ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதில் கலந்து கொள்ளும் மக்களின் பாதுகாப்பு கருதி, விசேட வேலைத்திட்டங்களை மேற்கொள்ளுமாறு, பதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ, பொலிஸ் மா அதிபர் என்.கே. இளங்ககோனுக்கு பணிப்புரை வழங்கியுள்ளார். இதற்கமைய, விசேட போக்குவரத்து ஒழுங்குகள் மற்றும் மக்களின் பாதுகாப்பு கருதி 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொலிஸாரை கடமையில் ஈடுபடுத்தவும், நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
வெளி மாகாணங்களிலிருந்து மே தின ஊர்வலம் மற்றும் கூட்டங்களில் கலந்து கொள்ள வருகை தரும் மக்களுக்கு கொழும்பில் பிரவேசிப்பதற்கான விரிவான வேலைத்திட்டங்களும் வகுக்கப்பட்டுள்ளன. பிரதான வீதிகளுடாக கொழும்பில் பிரவேசிக்கும் வாகனங்களை நிறுத்துவதற்கு, தனியான இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு தரப்பினர் வழங்கும் ஆலோசனைகளுக்கமைய, செயற்படுமாறு, மேதின ஊர்வலங்கள் மற்றும் கூட்டங்களில் கலந்து கொள்ளும் மக்களை பொலிஸார் கேட்டுள்ளனர்.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் மே தின கூட்டம், பொரளை கெம்பல் மைதானத்தில் நடைபெறவிருப்பதுடன், ஊர்வலம், தாமரை தடாகத்திற்கு அருகாமையிலிருந்து ஆரம்பமாகும். மருதானை வைட் மைதானத்திலிருந்து மக்கள் கட்சியின் ஊர்வலமும், தேச விமுக்தி மக்கள் கட்சியின் மே தின ஊர்வலம், மருதானை வீதியூடாக வந்து, பொரளை சந்தியில் ஐககிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் மே தின ஊர்வலத்தில் இணைவுள்ளது. மக்கள் ஐக்கிய முன்னணியின் மே தின ஊர்வலம் ஆயுர்வேத சநதி, சிறுவுர் விளையாட்டு மைதானத்திற்கு அருகாமையில் காசல் வீதியூடாக வந்து, பொரளை டி.எஸ். சந்தியில் பிரதான ஊர்வலத்தில் இணையவுள்ளது. ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் மே தின கூட்டத்தை, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில், சகல பங்காளி கட்சிகளின் பங்கேற்புடன் அதிவிமர்சையாக நடாத்த, ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மாணவி ஒருவர் மீது பாலியல் சேஷ்டை புரிந்தார் என்ற குற்றச்சாட்டு சம்பந்தமாக பொலிஸாரினால் தேடப்பட்டு வந்த காத்தான்குடி ஆளுங்கட்சி நகர சபை உறுப்பினறும், பொருளியல் பாட ஆசிரியருமான பாக்கீர் இன்று செவ்வாய்க்கிழமை காலை மட்டக்களப்பு மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார்.
சரணடைந்த இவரை எதிர்வரும் 08ம் திகதி புதன்கிழமை வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி என்.எம்.அப்துல்லாஹ் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
சரணடைந்த இவரை எதிர்வரும் 08ம் திகதி புதன்கிழமை வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி என்.எம்.அப்துல்லாஹ் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
2008 இல் கோமறங்கடவல பகுதியில் இடம்பெற்ற முக்கொலையுடன் தொடர்புடையவர்களென்ற சந்தேகத்தின் பேரில் நேற்று இரகசிய குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் மூன்று பொலிஸ் உத்தியோகத்தர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவர்கள் நேற்று திருகோணமலை மஜிஸ்திரேட் நீதிமன்றில் இரகசிய புலனாய்வு பிரிவினரால் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர்.
திருகோணமலை கொமறங்கடவல பிரதேசத்தில் 05 வருடத்திற்கு முன்னர் இடம் பெற்ற முக்கொலைகளுடன் தொடர்புடைய சந்தேக நபர்களான கந்தளாய் பொலிஸ் பரிசோதகர் மற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஆகியோர் ஞாயிற்றுக்கிழமை இரவு இரகசிய புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
2008 ம் ஆண்டு கோமறங்கடவல பம்புறுவௌ பிரதேசத்தில் விறகு வெட்டுவதற்கு காட்டுக்கு சென்ற கணவன் மனைவி உட்பட இன்னுமொரு நபர் சந்தேகமான முறை யில் வெட்டிக் கொல்லப்பட்டனர். இக் கொலைச் சம்பவம் நடைபெற்ற போது ரத்னாயகே முதியன்சலாகே றுவன் சமிந்த ரத்னாயக்க (பொலிஸ் பரிசோதகர் கந்தளாய்), கேவவிதானகே சமிச்தலால், விதானகே சுசில் பிரேமலால் கருணாசே (அனுராதபுரம்) ஆகியோர் கோமறங்கடவல பகுதியில் பணி புரிந்த வர்கள் என தெரிய வருகிறது. கிராமவாசிகள் இவர்களே இக்கொலைகளைச் செய்திருக்க வேண்டுமென விடுத்த முறைப்பாட்டைக் கொண்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.
இரகசிய புலனாய்வுப் பிரிவினர் தேடுவதை அறிந்த கந்தளாய் பொலிஸ் பரிசோதகர் கடந்த ஞாயிற்றுக்கிழமை கந்தளாய் தள வைத்தியசாலையில் மாரடைப்பு என அனுமதியானார். புலனாய்வு பிரிவினர் வைத்திய அதிகாரி யிடம் இவரது நோய் உண்மையா எனக் கேட்ட போது இவருக்கு இவ்வா றான நோய் இல்லை எனவும் தெரிவித்தார்.
நீதிமன்ற விசாரணைகளைத் தொடர்ந்து நீதிபதி எஸ். சதீஸ்தரன் குற்றவாளிகளை மே 13 ஆம் திகதி வரை திருகோணமலை விளக்கமறியலிலும் கந்தளாய் விளக்க மறியலிலும் வைக்கும்படி உத்தரவிட்டார்.
திருகோணமலை கொமறங்கடவல பிரதேசத்தில் 05 வருடத்திற்கு முன்னர் இடம் பெற்ற முக்கொலைகளுடன் தொடர்புடைய சந்தேக நபர்களான கந்தளாய் பொலிஸ் பரிசோதகர் மற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஆகியோர் ஞாயிற்றுக்கிழமை இரவு இரகசிய புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
2008 ம் ஆண்டு கோமறங்கடவல பம்புறுவௌ பிரதேசத்தில் விறகு வெட்டுவதற்கு காட்டுக்கு சென்ற கணவன் மனைவி உட்பட இன்னுமொரு நபர் சந்தேகமான முறை யில் வெட்டிக் கொல்லப்பட்டனர். இக் கொலைச் சம்பவம் நடைபெற்ற போது ரத்னாயகே முதியன்சலாகே றுவன் சமிந்த ரத்னாயக்க (பொலிஸ் பரிசோதகர் கந்தளாய்), கேவவிதானகே சமிச்தலால், விதானகே சுசில் பிரேமலால் கருணாசே (அனுராதபுரம்) ஆகியோர் கோமறங்கடவல பகுதியில் பணி புரிந்த வர்கள் என தெரிய வருகிறது. கிராமவாசிகள் இவர்களே இக்கொலைகளைச் செய்திருக்க வேண்டுமென விடுத்த முறைப்பாட்டைக் கொண்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.
இரகசிய புலனாய்வுப் பிரிவினர் தேடுவதை அறிந்த கந்தளாய் பொலிஸ் பரிசோதகர் கடந்த ஞாயிற்றுக்கிழமை கந்தளாய் தள வைத்தியசாலையில் மாரடைப்பு என அனுமதியானார். புலனாய்வு பிரிவினர் வைத்திய அதிகாரி யிடம் இவரது நோய் உண்மையா எனக் கேட்ட போது இவருக்கு இவ்வா றான நோய் இல்லை எனவும் தெரிவித்தார்.
நீதிமன்ற விசாரணைகளைத் தொடர்ந்து நீதிபதி எஸ். சதீஸ்தரன் குற்றவாளிகளை மே 13 ஆம் திகதி வரை திருகோணமலை விளக்கமறியலிலும் கந்தளாய் விளக்க மறியலிலும் வைக்கும்படி உத்தரவிட்டார்.
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோ கடந்த 2007-ம் ஆண்டு டிசம்பரில் ராவல்பிண்டியில் நடந்த தேர்தல் பிரசார பேரணியின் போது வெடிகுண்டு வீசியும், துப்பாக்கியால் சுட்டும் படுகொலை செய்யப்பட்டார். அப்போது, ஜனாதிபதியாக இருந்த முஷாரப் போதிய அளவு பாதுகாப்பு கொடுக்காததால்தான் இச்சம்பவம் நடந்ததாக குற்றம் சுமத்தப்பட்டது.
இவர் மேல் தீவிரவாத தடுப்பு நீதிமன்றத்தில் 57 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. பாகிஸ்தானைவிட்டு வெளியேறி பல நாடுகளில் வாழ்ந்து வந்த முஷாரப், பாகிஸ்தானில் வரும் மே 11-ம் திகதி நடைபெற உள்ள தேர்தலில் போட்டியிடுவதற்காக நாடு திரும்பினர்.
அப்போது, 60 நீதிபதிகளை பதவி நீக்கம் செய்த வழக்கில் வழக்கில் முஷாரப் கைது செய்யப்பட்டு 2 வார வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார். இந்த காவல் மே 4-ம் திகதியுடன் முடிவடைகிறது. இந்நிலையில் ராவல்பிண்டி நீதிமன்றம் பெனசீர் புட்டோ கொலை வழக்கில் அவரை மே 14-ம் திகதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டுள்ளது. இதனால் தேர்தல் தினத்தின் போதும் அவர் வீட்டுக் காவலில் இருப்பார் என தெரிகிறது.
இவர் மேல் தீவிரவாத தடுப்பு நீதிமன்றத்தில் 57 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. பாகிஸ்தானைவிட்டு வெளியேறி பல நாடுகளில் வாழ்ந்து வந்த முஷாரப், பாகிஸ்தானில் வரும் மே 11-ம் திகதி நடைபெற உள்ள தேர்தலில் போட்டியிடுவதற்காக நாடு திரும்பினர்.
அப்போது, 60 நீதிபதிகளை பதவி நீக்கம் செய்த வழக்கில் வழக்கில் முஷாரப் கைது செய்யப்பட்டு 2 வார வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார். இந்த காவல் மே 4-ம் திகதியுடன் முடிவடைகிறது. இந்நிலையில் ராவல்பிண்டி நீதிமன்றம் பெனசீர் புட்டோ கொலை வழக்கில் அவரை மே 14-ம் திகதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டுள்ளது. இதனால் தேர்தல் தினத்தின் போதும் அவர் வீட்டுக் காவலில் இருப்பார் என தெரிகிறது.
பலாலி விமான நிலையம், காங்கேசன் துறைமுகம் ஆகியவற்றைச் சுற்றியுள்ள தமிழர்களின் 6,000 ஏக்கர் காணிகளை இராணுவத்துக்காகச் சுவீகரிக்க அரசு எடுக்கும் நடவடிக்கைகளை எதிர்த்து குறைந்தது 5,000 வழக்குகளைத் தாக்கல் செய்வதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
தெல்லிப்பழையில் நேற்று(29.04.2013) திங்கட்கிழமை நடைபெற்ற எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் மற்றும் மறியல் போராட்டத்தில் இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் இந்த அறிவிப்பை விடுத்தார்.
வழக்குகளைத் தாக்கல் செய்வதற்கு ஏதுவாக, காணி ஆவணங்களைத் தருமாறு உரிமையாளர்களிடம் அவர் கோரிக்கை முன்வைத்தார். தற்போதைய நிலையில் இலங்கையில் உள்ள நீதிமன்றங்கள் அனைத்தையும் நிரம்பும் வகையிலான போராட்டமாக இந்த 5,000 வழக்குகளையும் தாம் தாக்கல் செய்யப் போவதாகவும் அவர் கூறினார்.
மே மாதம் 2ஆம் திகதி வழக்குகள் தாக்கல் செய்யப்படும் என்றும் அவர் கூறினார்.
தெல்லிப்பழையில் நேற்று(29.04.2013) திங்கட்கிழமை நடைபெற்ற எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் மற்றும் மறியல் போராட்டத்தில் இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் இந்த அறிவிப்பை விடுத்தார்.
வழக்குகளைத் தாக்கல் செய்வதற்கு ஏதுவாக, காணி ஆவணங்களைத் தருமாறு உரிமையாளர்களிடம் அவர் கோரிக்கை முன்வைத்தார். தற்போதைய நிலையில் இலங்கையில் உள்ள நீதிமன்றங்கள் அனைத்தையும் நிரம்பும் வகையிலான போராட்டமாக இந்த 5,000 வழக்குகளையும் தாம் தாக்கல் செய்யப் போவதாகவும் அவர் கூறினார்.
மே மாதம் 2ஆம் திகதி வழக்குகள் தாக்கல் செய்யப்படும் என்றும் அவர் கூறினார்.
வீட்டு மின்சாரப் பாவனைக்கான கட்டண அதிகரிப்பைத் தளர்த்துமாறு ஜனாதிபதியினால் ஆணையொன்று பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதற்கேற்ப, மின்வலு சக்தி அமைச்சு திட்டமொன்றை மேற்கொண்டு வருகின்றதென அறியவந்துள்ளது.
மின்கட்டண உயர்வினால் வீட்டுமின் பாவனையாளர்கள்பெரிதும் பாதிக்கப்படுவதனால், கட்டணத்தைக் குறைத்து அவர்களுக்குச் சலுகை வழங்குமாறு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவினால் வழங்கப்பட்டுள்ள பணிப்புரைக்கேற்பவே மின்கட்டணம் குறைக்கப்படவுள்ளது.
இத்திட்டத்திற்கேற்ப, மாதாந்தம் 150 அலகுகளுக்குக் குறைவாக மின்சாரத்தைப் பயன்படுத்தும் குடும்பங்களுக்கு நூற்றுக்கு 20 வீத கட்டணக் குறைவு வழங்கப்படவுள்ளதாக அமைச்சிலிருந்து நம்பத்தகுந்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
மின்கட்டணத்தை உயர்த்துவதன் மூலம் மின்சார சபை 3,500 கோடி ரூபாய்களை இலாபமாகப் பெறுவதற்கு உத்தேசித்திருந்தது. என்றாலும், கட்டணக் குறைப்பின் காரணமாக அந்த இலாபத் தொகை ரூபா 2,800 கோடியில் வீழ்ச்சியடைவதாகவும் குறிப்பிடப்படுகிறது.
(கேஎப்)
மின்கட்டண உயர்வினால் வீட்டுமின் பாவனையாளர்கள்பெரிதும் பாதிக்கப்படுவதனால், கட்டணத்தைக் குறைத்து அவர்களுக்குச் சலுகை வழங்குமாறு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவினால் வழங்கப்பட்டுள்ள பணிப்புரைக்கேற்பவே மின்கட்டணம் குறைக்கப்படவுள்ளது.
இத்திட்டத்திற்கேற்ப, மாதாந்தம் 150 அலகுகளுக்குக் குறைவாக மின்சாரத்தைப் பயன்படுத்தும் குடும்பங்களுக்கு நூற்றுக்கு 20 வீத கட்டணக் குறைவு வழங்கப்படவுள்ளதாக அமைச்சிலிருந்து நம்பத்தகுந்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
மின்கட்டணத்தை உயர்த்துவதன் மூலம் மின்சார சபை 3,500 கோடி ரூபாய்களை இலாபமாகப் பெறுவதற்கு உத்தேசித்திருந்தது. என்றாலும், கட்டணக் குறைப்பின் காரணமாக அந்த இலாபத் தொகை ரூபா 2,800 கோடியில் வீழ்ச்சியடைவதாகவும் குறிப்பிடப்படுகிறது.
(கேஎப்)
மதுகுடிக்கும் போட்டியில் தவறுதலாக பரிசுக்குரிய வைரத்தையும் சேர்த்து விழுங்கி பார்வையாளைகளை படபடக்க வைத்தார் 80 வயது அமெரிக்க பாட்டி.
அமெரிக்காவில் வாஷிங்டனில் தம்பா பெண்கள் சங்கம் உள்ளது. இந்த சங்கத்துக்கு நிதி திரட்டுவதற்காக ஷாம்பெயின்(திராட்சை ரசம் மது) குடிக்கும் போட்டி நடந்தது.
அதற்காக 400 கோப்பைகளில் திராட்சை மது ரசம் ஊற்றப்பட்டிருந்தது. அதில், ஒரு கோப்பையில் மட்டும் தனியார் நிறுவனம் அன்பளிப்பாக அளித்த ரூ.3 லட்சம் மதிப்பிலான வைரத்தை போட்டு இருந்தனர். அந்த மது கோப்பை யாருக்கு கிடைக்கிறதோ அவருக்கே அதில் போடப்பட்டிருக்கும் வைரம் சொந்தம் என அறிவிக்கப்பட்டிருந்தது. வைரத்தை வெல்ல போட்டி கடுமையாக இருந்தது.
இந்நிலையில் வைரம் போட்டிருந்த கோப்பை மிரியம் என்ற 80 வயது பெண்ணின் கைக்கு கிடைத்தது. அந்த கோப்பையில் ஊற்றப்பட்டிருந்த மதுவை குடித்த மிரியம் அப்படியே வைரத்தையும் சேர்த்து தவறுதலாக விழுங்கிவிட்டார்.
இதனால் அங்கு மது குடி போட்டியில் பங்கேற்றிருந்தவர்கள் பதற்றமடைந்தனர். பின்னர் டாக்டரிடம் விரைந்து சென்று தமது வயிற்றுக்குள் வைரம் இருப்பதை உறுதி செய்து ஒருவழியே வெளியே எடுத்து உயிர் தப்பியிருக்கிறார் மிரியம்!
அமெரிக்காவில் வாஷிங்டனில் தம்பா பெண்கள் சங்கம் உள்ளது. இந்த சங்கத்துக்கு நிதி திரட்டுவதற்காக ஷாம்பெயின்(திராட்சை ரசம் மது) குடிக்கும் போட்டி நடந்தது.
அதற்காக 400 கோப்பைகளில் திராட்சை மது ரசம் ஊற்றப்பட்டிருந்தது. அதில், ஒரு கோப்பையில் மட்டும் தனியார் நிறுவனம் அன்பளிப்பாக அளித்த ரூ.3 லட்சம் மதிப்பிலான வைரத்தை போட்டு இருந்தனர். அந்த மது கோப்பை யாருக்கு கிடைக்கிறதோ அவருக்கே அதில் போடப்பட்டிருக்கும் வைரம் சொந்தம் என அறிவிக்கப்பட்டிருந்தது. வைரத்தை வெல்ல போட்டி கடுமையாக இருந்தது.
இந்நிலையில் வைரம் போட்டிருந்த கோப்பை மிரியம் என்ற 80 வயது பெண்ணின் கைக்கு கிடைத்தது. அந்த கோப்பையில் ஊற்றப்பட்டிருந்த மதுவை குடித்த மிரியம் அப்படியே வைரத்தையும் சேர்த்து தவறுதலாக விழுங்கிவிட்டார்.
இதனால் அங்கு மது குடி போட்டியில் பங்கேற்றிருந்தவர்கள் பதற்றமடைந்தனர். பின்னர் டாக்டரிடம் விரைந்து சென்று தமது வயிற்றுக்குள் வைரம் இருப்பதை உறுதி செய்து ஒருவழியே வெளியே எடுத்து உயிர் தப்பியிருக்கிறார் மிரியம்!
கணினியின் வேகத்தை கட்டுப்படுத்தும் தற்காலிக கோப்புக்கள் உட்பட அநாவசியமான கோப்புக்களை நீக்கி சிறந்த முறையில் கணினியை இயங்குவதற்கு கைகொடுக்கும் மென்பொருளான CCleaner மென்பொருளின் புதிய பதிப்பான CCleaner 4.01 வெளியிடப்பட்டுள்ளது.
விண்டோஸ் இயங்குதளங்களுக்காக வெளியிடப்பட்ட இப்புதிய பதிப்பில் முன்னைய பதிப்பில் காணப்பட்ட சில தவறுகள் நீங்கலாக புதிய சில அம்சங்களும் உள்ளடக்கப்பட்டுள்ளன.
இப்பதிப்பானது அனேகமான இணைய உலாவிகளுக்கு சிறந்த ஒத்திசைவாக்கத்தினைக் கொண்டுள்ளதுடன் Windows 8 இயங்குதளத்தின் Registry – இனை சிறந்த முறையில் துப்புரவு செய்யக் கூடியதாகவும் காணப்படுகின்றன.
மேலும் File Finder, System மற்றும் Browser Monitoring எனும் இரு புதிய அம்சங்களும் உள்ளடக்கப்பட்டுள்ளன.
விண்டோஸ் இயங்குதளங்களுக்காக வெளியிடப்பட்ட இப்புதிய பதிப்பில் முன்னைய பதிப்பில் காணப்பட்ட சில தவறுகள் நீங்கலாக புதிய சில அம்சங்களும் உள்ளடக்கப்பட்டுள்ளன.
இப்பதிப்பானது அனேகமான இணைய உலாவிகளுக்கு சிறந்த ஒத்திசைவாக்கத்தினைக் கொண்டுள்ளதுடன் Windows 8 இயங்குதளத்தின் Registry – இனை சிறந்த முறையில் துப்புரவு செய்யக் கூடியதாகவும் காணப்படுகின்றன.
மேலும் File Finder, System மற்றும் Browser Monitoring எனும் இரு புதிய அம்சங்களும் உள்ளடக்கப்பட்டுள்ளன.
சவூதி வைத்தியசாலையொன்றின் பிண அறையில் வேலை பார்க்கும் ஊழியர் ஒருவர் இறந்த பெண் ஒருவரின் சடலத்துடன் உடலுறவு கொண்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். பங்காளதேசைச் சேர்ந்த சாகிர் என்ற 33 வயதான நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டவராவார்.
வைத்திய சாலையின் ஏனைய ஊழியர்கள் பின்னிரவு நேரத்தில் கடமை நிறைவடைந்து திரும்பும் நிலையில் குறித்த நபர் பிண அறையில் பதுங்கியிருந்தே மேற்படி குற்றச் செயலினைப் புரியும் போது கையும் களவுமாக பிடிபட்டுள்ளார்.
சவூதி அரேபியாவின் மேற்கு மாகாண நகரங்களில் ஒன்றான மக்காவிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த வைத்தியசாலையின் சக ஊழியர் ஒருவர் சந்தேகநபரை மடக்கிப் பிடித்துள்ளதுடன் அவரது முகத்தில் பல முறை அறைந்துள்ளார். இதனை அடுத்து வைத்தியசாலை நிர்வாகம் குறித்த நபரை பொலிசாரிடம் ஒப்படைத்ததாகவும் தெரிய வருகிறது.
குறித்த பங்களாதேசை சேர்ந்த ஊழியர் பிணங்களுடன் இவ்வாறு அநாகரீகமாக நடந்து கொள்வது இது முதன் முறை அல்ல என்பதும் ஏற்கனவே பல முறை இவ்வாறு அநாகரீகமாக பிண அறையில் நடந்து கொண்டுள்ளமையும் பொலிசாருக்கு அளித்த வாக்குமூலத்திலிருந்து தெரிய வந்துள்ளது.
சவூதி அரேபியாவை பொறுத்தவரை இவ்வாறானதொரு சம்பவம் பதிவாவது இதுவே முதன் முறையாகும். இந் நிலையில் அனைத்து வைத்திய சாலைகளினதும் பிணவறைகளை கண்காணிக்கும் விதமாக கண்காணிப்பு கமராக்களை பொருத்த ஆலோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். குற்றங்கள் தொடர்பில் இறுக்கமான சட்டங்களை கொண்டுள்ள சவூதியில் குறித்த நபருக்கு அதிகபட்ச தண்டனை வழங்கப்படலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
வைத்திய சாலையின் ஏனைய ஊழியர்கள் பின்னிரவு நேரத்தில் கடமை நிறைவடைந்து திரும்பும் நிலையில் குறித்த நபர் பிண அறையில் பதுங்கியிருந்தே மேற்படி குற்றச் செயலினைப் புரியும் போது கையும் களவுமாக பிடிபட்டுள்ளார்.
சவூதி அரேபியாவின் மேற்கு மாகாண நகரங்களில் ஒன்றான மக்காவிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த வைத்தியசாலையின் சக ஊழியர் ஒருவர் சந்தேகநபரை மடக்கிப் பிடித்துள்ளதுடன் அவரது முகத்தில் பல முறை அறைந்துள்ளார். இதனை அடுத்து வைத்தியசாலை நிர்வாகம் குறித்த நபரை பொலிசாரிடம் ஒப்படைத்ததாகவும் தெரிய வருகிறது.
குறித்த பங்களாதேசை சேர்ந்த ஊழியர் பிணங்களுடன் இவ்வாறு அநாகரீகமாக நடந்து கொள்வது இது முதன் முறை அல்ல என்பதும் ஏற்கனவே பல முறை இவ்வாறு அநாகரீகமாக பிண அறையில் நடந்து கொண்டுள்ளமையும் பொலிசாருக்கு அளித்த வாக்குமூலத்திலிருந்து தெரிய வந்துள்ளது.
சவூதி அரேபியாவை பொறுத்தவரை இவ்வாறானதொரு சம்பவம் பதிவாவது இதுவே முதன் முறையாகும். இந் நிலையில் அனைத்து வைத்திய சாலைகளினதும் பிணவறைகளை கண்காணிக்கும் விதமாக கண்காணிப்பு கமராக்களை பொருத்த ஆலோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். குற்றங்கள் தொடர்பில் இறுக்கமான சட்டங்களை கொண்டுள்ள சவூதியில் குறித்த நபருக்கு அதிகபட்ச தண்டனை வழங்கப்படலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
நெதர்லாந்தின் நிதியுதவில் 700 கோடி ரூபா செலவில் 650 கட்டில்களுடன் நவீன மருத்துவ உபகரணங்கள் அடங்கிய வைத்தியசாலையொன்று ஹம்பாந்தோட்டையில் நிர்மாணிக்கப்படவுள்ளதென சபாநாயகர் சமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
ஹம்பாந்தோட்டை வைத்தியசாலை உட்பட அதனை அண்டிய பிரதேசங்களில் உள்ள ஏனைய வைத்தியசாலைகளின் குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்கு, நிதி உதவியளிக்கும் வைபவத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே, சபாநாயகர் இதனை தெரிவித்துள்ளார்.
ஹம்பாந்தோட்டை வைத்தியசாலை உட்பட அதனை அண்டிய பிரதேசங்களில் உள்ள ஏனைய வைத்தியசாலைகளின் குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்கு, நிதி உதவியளிக்கும் வைபவத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே, சபாநாயகர் இதனை தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பிரதி தலைவராக உள்ளார் கருணா எனப்படுகின்ற வினாயகமூர்த்தி முரளிதரன். இதேகட்சியின் மட்டக்களப்பு மாவட்ட தேசிய அமைப்பாளராக உள்ளார் சாம் தம்பிமுத்துவின் மகன் அருண். இவர் புலிகளை மஹிந்தர் சமாதி கட்டிய பின்னர் அரசியலுக்கு வந்துள்ளார்.
ஆழும் கட்சியின் பங்காளிகளான கருணா , பிள்ளையானிடையே இருந்து வந்து வந்த „நானா நீயா' என்ற போட்டிக்குள் அதிரடியாக நுழைந்த அருண் நீங்கள் இருவருமே இல்லை „நான்தான்' என்று நிற்கின்றார்.
நாளை தொழிலாளர்தினம். சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பிரதான மேதின ஊர்வலம் கொழும்பில் இடம்பெறவுள்ளது. இந்த ஊர்வலத்திற்கு சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் சகல மாவட்டங்களிலிருந்தும் அந்தந்த மாவட்டங்களின்; கட்சிப் பிரமுகர்கள் தங்கள் ஆதரவாளர்களை அழைத்துச் செல்வது வழக்கம். தொழிலாளர் தினக் கொண்டாட்டத்திற்காக என்பதை விட தங்களுக்கு பிரதேசத்தில் எத்தனை ஆதரவாளர்கள் உள்ளார்கள் என்பதை கட்சியின் நிருபித்துக்காட்ட என்றால் பொருத்தமானதாகும்.
இந்நிலையில் கருணாவும் அருணும் தமக்கு பிரதேசத்திலுள்ள செல்வாக்கினை நிருபித்துக்காட்ட களமிறங்கியுள்ளார்கள். கருணா கொக்கட்டிச்சோலை பிரதேசத்திலும் அருண் வந்தாறுமூலைப் பிரதேசத்திலும் பேருந்துகளை தயார் செய்துள்ளார்கள்.
ஆழும் கட்சியின் பங்காளிகளான கருணா , பிள்ளையானிடையே இருந்து வந்து வந்த „நானா நீயா' என்ற போட்டிக்குள் அதிரடியாக நுழைந்த அருண் நீங்கள் இருவருமே இல்லை „நான்தான்' என்று நிற்கின்றார்.
நாளை தொழிலாளர்தினம். சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பிரதான மேதின ஊர்வலம் கொழும்பில் இடம்பெறவுள்ளது. இந்த ஊர்வலத்திற்கு சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் சகல மாவட்டங்களிலிருந்தும் அந்தந்த மாவட்டங்களின்; கட்சிப் பிரமுகர்கள் தங்கள் ஆதரவாளர்களை அழைத்துச் செல்வது வழக்கம். தொழிலாளர் தினக் கொண்டாட்டத்திற்காக என்பதை விட தங்களுக்கு பிரதேசத்தில் எத்தனை ஆதரவாளர்கள் உள்ளார்கள் என்பதை கட்சியின் நிருபித்துக்காட்ட என்றால் பொருத்தமானதாகும்.
இந்நிலையில் கருணாவும் அருணும் தமக்கு பிரதேசத்திலுள்ள செல்வாக்கினை நிருபித்துக்காட்ட களமிறங்கியுள்ளார்கள். கருணா கொக்கட்டிச்சோலை பிரதேசத்திலும் அருண் வந்தாறுமூலைப் பிரதேசத்திலும் பேருந்துகளை தயார் செய்துள்ளார்கள்.
அல்கொய்தா தீவிரவாத இயக்கத் தலைவர் ஒசாமா பின்லேடன் பாகிஸ்தானில் உள்ள அபோதாபாத்தில் அமெரிக்க அதிரடிப் படையால் சுட்டுக்கொல்லப்பட்டார். அவரை பாகிஸ்தானை சேர்ந்த ஷகில் அப்ரிடி என்ற டாக்டர் அமெரிக்க உளவுப் படையான சிஐஏவிடம் காட்டிக்கொடுத்தார். சிறையில் அடைக்கப்பட்டுள்ள டாக்டர் தற்போது சிறையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
நோய் தடுப்பு முகாம் நடத்துவது போன்று போலியாக நாடகமாடி பின்லேடன் பதுங்கி இருந்த பங்களைாவுக்குள் நுழைந்தார். அங்கு பின்லேடனின் மனைவி மற்றும் குழந்தைகளிடமிருந்து ரத்த மாதிரிகளை சேகரித்தார். பின்னர் மரபணு பரிசோதனை மூலம் அங்கு பதுங்கி இருப்பது பின்லேடன் தான் என்பதை உறுதி செய்தார். அதைத் தொடர்ந்து அங்கு புகுந்த அமெரிக்க ராணுவம் பின்லேடனை சுட்டுக்கொன்றது. அவர் கொல்லப்பட்டவுடன் டாக்டர் ஷரில் அப்ரிடியை பாகிஸ்தான் அரசு கைது செய்து கராச்சி சிறையில் அடைத்தது.
இவருக்கு பாகிஸ்தானில் தடை செய்யப்பட்டுள்ள லஸ்கர் இ இஸ்லாம் என்ற தீவிரவாத அமைப்புடன் தொடர்பு இருப்பதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த நிலையில் சிறையில் இருக்கும் இவர் அங்கு உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகிறார். சிறை அதிகாரிகள் அவரை கொடுமைப்படுத்துவதாகவும் அவமரியாதையாக நடத்துவதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
நோய் தடுப்பு முகாம் நடத்துவது போன்று போலியாக நாடகமாடி பின்லேடன் பதுங்கி இருந்த பங்களைாவுக்குள் நுழைந்தார். அங்கு பின்லேடனின் மனைவி மற்றும் குழந்தைகளிடமிருந்து ரத்த மாதிரிகளை சேகரித்தார். பின்னர் மரபணு பரிசோதனை மூலம் அங்கு பதுங்கி இருப்பது பின்லேடன் தான் என்பதை உறுதி செய்தார். அதைத் தொடர்ந்து அங்கு புகுந்த அமெரிக்க ராணுவம் பின்லேடனை சுட்டுக்கொன்றது. அவர் கொல்லப்பட்டவுடன் டாக்டர் ஷரில் அப்ரிடியை பாகிஸ்தான் அரசு கைது செய்து கராச்சி சிறையில் அடைத்தது.
இவருக்கு பாகிஸ்தானில் தடை செய்யப்பட்டுள்ள லஸ்கர் இ இஸ்லாம் என்ற தீவிரவாத அமைப்புடன் தொடர்பு இருப்பதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த நிலையில் சிறையில் இருக்கும் இவர் அங்கு உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகிறார். சிறை அதிகாரிகள் அவரை கொடுமைப்படுத்துவதாகவும் அவமரியாதையாக நடத்துவதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
பாட்டாளி மக்களின் உரிமைக்குரல் எழுப்பப்படும் மே முதலாம் திகதி கொழும்பு நகரில் 17 மே தின ஊர்வலங்கள் உட்பட 16 கூட்டங்கள் நடைபெறவுள்ளன. இதனையொட்டி, விசேட பாதுகாப்பு ஒழுங்குகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மே முதலாம் திகதி கொழும்பு நகரின் போக்குவரத்து ஒழங்குகள் மற்றும் பாதுகாப்பு தொடர்பில், அறிவுறுத்தும் செய்தியாளர் மாநாடு, கொழும்பு பிரதி பொலிஸ் மா அதிபர் அலுவலகத்தில், சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அநுர சேனாநாயக தலைமையில் இடம்பெற்றது. இம்மாநாட்டில் பேசிய பிரதி பொலிஸ் மா அதிபர் அநுர சேனாநாயக மே தினத்தில் கொழும்பு நகரின் பாதுகாப்பிற்கென, விசேட ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
மே தினம் பொது விடுமுறை என்பதனால், அலுவல்களுக்காக கொழும்பு நகருக்கு வருகை தருவதை மட்டுப்படுத்திக்கொள்ளுமாறு, அநுர சேனாநாயக, மக்களை கேட்டுள்ளார். ஊர்வலங்கள் மற்றும் கூட்டங்கள் காரணமாக, பல பிரதான வீதிகளில் போக்குவரத்து ஒழுங்குகள் அமுல்ப்படுத்தப்பட்டுள்ளன. இதன்மூலம் ஏற்படக்கூடிய சிரமங்களை தவிர்ப்பதற்காக, கொழும்பு நகரில் பிரவேசிக்கும்போது மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு, அநுர சேனாநாயக அவர் கேட்டுள்ளார்.
சர்வதேச தொழிலாளர் தினத்தை கொண்டாடுவதற்கு, கொழும்பு நகரில் அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. போதியளவு பாதுகாப்பு ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொலிஸார், கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். வாகன போக்குவரத்து ஒழுங்குகளை மேற்கொள்ளவும், 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். குழப்பகரமான நிலைமைகள் ஏற்படுவதை தடுக்க, அனைவரும் ஒத்துழைப்பு வழங்குவதன் மூலம், மே தினத்தை மகிழ்ச்சியுடன் கொண்டாட எமக்கு சந்தர்ப்பம் கிடைக்கும் போக்குவரத்து நிர்வாக மற்றும் வீதி பாதுகாப்பு தொடர்பான பிரதி பொலிஸ் மா அதிபர் அமரசிறி சேனாரட்ன, வாகன போக்குவரத்து திட்டமிடல்கள் தொடர்பில் பொது மக்கள் சிறந்த விளக்கத்துடன் செயற்பட வேண்டுமென, கேட்டுள்ளார். இத்தினங்களில் பல வீதிகளில் போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும், அவர் தெரிவித்தார்.
பிரதான ஊர்வலம், தாமரை தடாகத்திலிருந்து க்ரீன்பாத் வீதி வரை இடம்பெறும். காலை 09.00 மணிக்கு இந்த வீதி மூடப்படும். பிரதான ஊர்வலம் நண்பகல் 12.00 மணிக்கு ஆரம்பமாகும். பொரளை ஊடாக வரும் வாகனங்கள் பழைய புலொஸ் வீதி ஊடாக செல்ல வேண்டும். பித்தல சந்தியிலிருந்து தர்மபால மாவத்தை ஊடாக ஊர்வலம் செல்லும்போது, ஊர்வலத்தில் செல்லும் வாகனங்கள் மற்றும் அப்பிரதேசத்தில் வசிப்போரின் வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும். பித்தல சந்தியிலிருந்து நகர மண்டபம் வரை, இவ்வாறு வாகன போக்குவரத்து ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டிருக்கும்.
நுகேகொடையிலிருந்து பத்தரமுல்ல ஊடாக கண்டி மற்றும் நீர்கொழும்பு செல்லும் வாகனங்கள், வெலிகட சந்தியிலிருந்து ஓபேசேகரபுர வீதியுடாக, கொலன்னாவை நீர்த்தாங்கி ஊடாக, வெல்லம்பிட்டி பொலிஸ், ஒறுகொடவத்த ஊடாக, கண்டி வீதிக்கு செல்ல முடியும். கடுகதி வீதியூடாக வரும் வாகனங்கள், மாலபே, கடுவெல, களனி ஊடாக கட்டுநாயக வீதியை சென்றடைவதற்கான ஒழுங்குகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மே முதலாம் திகதி கொழும்பு நகரின் போக்குவரத்து ஒழங்குகள் மற்றும் பாதுகாப்பு தொடர்பில், அறிவுறுத்தும் செய்தியாளர் மாநாடு, கொழும்பு பிரதி பொலிஸ் மா அதிபர் அலுவலகத்தில், சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அநுர சேனாநாயக தலைமையில் இடம்பெற்றது. இம்மாநாட்டில் பேசிய பிரதி பொலிஸ் மா அதிபர் அநுர சேனாநாயக மே தினத்தில் கொழும்பு நகரின் பாதுகாப்பிற்கென, விசேட ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
மே தினம் பொது விடுமுறை என்பதனால், அலுவல்களுக்காக கொழும்பு நகருக்கு வருகை தருவதை மட்டுப்படுத்திக்கொள்ளுமாறு, அநுர சேனாநாயக, மக்களை கேட்டுள்ளார். ஊர்வலங்கள் மற்றும் கூட்டங்கள் காரணமாக, பல பிரதான வீதிகளில் போக்குவரத்து ஒழுங்குகள் அமுல்ப்படுத்தப்பட்டுள்ளன. இதன்மூலம் ஏற்படக்கூடிய சிரமங்களை தவிர்ப்பதற்காக, கொழும்பு நகரில் பிரவேசிக்கும்போது மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு, அநுர சேனாநாயக அவர் கேட்டுள்ளார்.
சர்வதேச தொழிலாளர் தினத்தை கொண்டாடுவதற்கு, கொழும்பு நகரில் அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. போதியளவு பாதுகாப்பு ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொலிஸார், கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். வாகன போக்குவரத்து ஒழுங்குகளை மேற்கொள்ளவும், 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். குழப்பகரமான நிலைமைகள் ஏற்படுவதை தடுக்க, அனைவரும் ஒத்துழைப்பு வழங்குவதன் மூலம், மே தினத்தை மகிழ்ச்சியுடன் கொண்டாட எமக்கு சந்தர்ப்பம் கிடைக்கும் போக்குவரத்து நிர்வாக மற்றும் வீதி பாதுகாப்பு தொடர்பான பிரதி பொலிஸ் மா அதிபர் அமரசிறி சேனாரட்ன, வாகன போக்குவரத்து திட்டமிடல்கள் தொடர்பில் பொது மக்கள் சிறந்த விளக்கத்துடன் செயற்பட வேண்டுமென, கேட்டுள்ளார். இத்தினங்களில் பல வீதிகளில் போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும், அவர் தெரிவித்தார்.
பிரதான ஊர்வலம், தாமரை தடாகத்திலிருந்து க்ரீன்பாத் வீதி வரை இடம்பெறும். காலை 09.00 மணிக்கு இந்த வீதி மூடப்படும். பிரதான ஊர்வலம் நண்பகல் 12.00 மணிக்கு ஆரம்பமாகும். பொரளை ஊடாக வரும் வாகனங்கள் பழைய புலொஸ் வீதி ஊடாக செல்ல வேண்டும். பித்தல சந்தியிலிருந்து தர்மபால மாவத்தை ஊடாக ஊர்வலம் செல்லும்போது, ஊர்வலத்தில் செல்லும் வாகனங்கள் மற்றும் அப்பிரதேசத்தில் வசிப்போரின் வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும். பித்தல சந்தியிலிருந்து நகர மண்டபம் வரை, இவ்வாறு வாகன போக்குவரத்து ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டிருக்கும்.
நுகேகொடையிலிருந்து பத்தரமுல்ல ஊடாக கண்டி மற்றும் நீர்கொழும்பு செல்லும் வாகனங்கள், வெலிகட சந்தியிலிருந்து ஓபேசேகரபுர வீதியுடாக, கொலன்னாவை நீர்த்தாங்கி ஊடாக, வெல்லம்பிட்டி பொலிஸ், ஒறுகொடவத்த ஊடாக, கண்டி வீதிக்கு செல்ல முடியும். கடுகதி வீதியூடாக வரும் வாகனங்கள், மாலபே, கடுவெல, களனி ஊடாக கட்டுநாயக வீதியை சென்றடைவதற்கான ஒழுங்குகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பில் வட மாகாணத் தேர்தலில் போட்டியிட தனக்கொரு சந்தர்ப்பம் பெற்றுத்தருமாறு கேட்டபோதும், இன்றுவரை அதற்கு எந்தவொரு பதிலையும் தரவில்லை என முன்னாள் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் ஊடகப் பேச்சாளர் தயா மாஸ்டர் குறிப்பிடுகிறார்.
போரினால் நிர்க்கதியாகியிருக்கும் தமிழ் மக்களின் வாழ்க்கையை மீளவும் கட்டியெழுப்புவதே தனது உயரிய இலட்சியம் என்றும், விடுதலைப் புலிகளில் இயக்கத்திலிருந்து சுதந்திரம் பெற்றுள்ள விடுதலைப் புலி உறுப்பினர்கள் ஏராளமானோர் உள்ளனர். அவர்கள் வாழும் வழி யாதென்று தெரியாமல் துன்புற்றுக் கொண்டிருக்கிறார்கள். அவர்களது துன்பங்களைத் துடைப்பதற்கு தான் எண்ணியுள்ளதனால் அரசாங்கம் சார்பாக தனது பெயரையும் பதிந்துகொள்ள தான் விரும்பியுள்ளதாகவும் அவர் ஊடகம் ஒன்றிற்கு தெரிவித்துள்ளார்.
இதேவேளை, வட மாகாணத்தைச் சேர்ந்த இரண்டு முன்னணி அரசியலாளர்கள் தம்மைச் சந்தித்து அவ்வக் கட்சிகளில் போட்டியிடுமாறு கேட்டுள்ளனர். என்றாலும், தான் ஒருபோதும் அவற்றைச் சார்ந்து அவற்றுக்கு விருப்புத் தெரிவிக்க மாட்டேன் எனவும் தயா மாஸ்டர் குறிப்பிட்டுள்ளார்.
(கேஎப்)
போரினால் நிர்க்கதியாகியிருக்கும் தமிழ் மக்களின் வாழ்க்கையை மீளவும் கட்டியெழுப்புவதே தனது உயரிய இலட்சியம் என்றும், விடுதலைப் புலிகளில் இயக்கத்திலிருந்து சுதந்திரம் பெற்றுள்ள விடுதலைப் புலி உறுப்பினர்கள் ஏராளமானோர் உள்ளனர். அவர்கள் வாழும் வழி யாதென்று தெரியாமல் துன்புற்றுக் கொண்டிருக்கிறார்கள். அவர்களது துன்பங்களைத் துடைப்பதற்கு தான் எண்ணியுள்ளதனால் அரசாங்கம் சார்பாக தனது பெயரையும் பதிந்துகொள்ள தான் விரும்பியுள்ளதாகவும் அவர் ஊடகம் ஒன்றிற்கு தெரிவித்துள்ளார்.
இதேவேளை, வட மாகாணத்தைச் சேர்ந்த இரண்டு முன்னணி அரசியலாளர்கள் தம்மைச் சந்தித்து அவ்வக் கட்சிகளில் போட்டியிடுமாறு கேட்டுள்ளனர். என்றாலும், தான் ஒருபோதும் அவற்றைச் சார்ந்து அவற்றுக்கு விருப்புத் தெரிவிக்க மாட்டேன் எனவும் தயா மாஸ்டர் குறிப்பிட்டுள்ளார்.
(கேஎப்)
மட்டக்களப்பு மாவட்ட காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் பிரதி இயக்குனராக உள்ளார் மனோகரன். இவருக்கு மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து யாழ் மாவட்டத்திற்கு இடமாற்ற உத்தரவு கிடைக்கப்பெற்றுள்ளதாம். இந்த இடமாற்றத்தின் பின்னணியில் கருணா எனப்படுகின்ற வினாயகமூர்த்தி முரளிதரன் உள்ளதாக அறியக்கிடைக்கின்றது. கருணாவின் உத்தரவுகளை மனோகரன் செயற்படுத்தவில்லை என்றும் அவருக்கு கைப்பொம்மையாக இருக்க வில்லை என்றுமே இவருக்கான இடமாற்றம் தயார் செய்யப்பட்டதாக அலுவலக வட்டாரங்களில் இருந்து இலங்கைநெற் இற்கு தகவல் கிடைத்தது.
இது தொடர்பாக நாம் மனோகரனை தொடர்பு கொண்டு கேட்டபோது, இடமாற்ற உத்தரவு வந்துள்ளதாகவும் அதனை செயலிழக்க செய்வதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாகவும் தெரிவித்த அவர் ஊடகங்களுக்கு மேலதிகமாக எவ்வித கருத்தும் தெரிவிக்க முடியாது என்றார்.
இலங்கையில் விடுதலைப்போராட்டம் என்ற பெயரில் ஆயுதக்குழுக்கள் உருவாகின. அவர்கள் மக்களின் உரிமைகளுக்காக போராடுவதாக கூறிக்கொண்டு மக்களின் உரிமைகளை பறித்ததே வரலாறு கண்ட உண்மை. அதற்கு வடகிழக்கு தமிழ் அதிகாரிகளும் முக்கிய பங்கு வகித்திருக்கின்றார்கள். அதிகாரிகள் தமது கடமைகளை சரிவர செய்வதை விடுத்து ஆயுததாரிகளுக்கு தலையாட்டும் பொம்மைகளாக செயற்பட்டு வடகிழக்கின் நிர்வாகத்தை ஆயுததாரிகளிடம் கையளித்திருந்தனர்.
இலங்கை அரசிடம் சம்பளத்தை பெற்றுக்கொண்டு மக்களுக்கு சேவை செய்யாமல் ஆயுதக்குழுக்களுக்களின் முன் கைகட்டி மண்டியிட்டு நின்ற அதிகாரிகளின் செயற்பாடுகளாலேயே மக்கள் ஆயுததாரிகளுக்கு கட்டுப்படவேண்டிய நிர்ப்பதந்தம் எற்பட்டது என்பது வரலாற்று துரோகம் ஆனால் இத்துரோகம் தொடர்ந்தும் அனுமதிக்கப்பட முடியாதது.
இன்று பயங்கரவாதிகளிடமிருந்து இலங்கை மீட்கப்பட்டிருக்கின்றது. முன்னாள் பயங்கரவாதிகள் இன்று அரசியல்வாதிகளாக வலம் வந்து கொண்டிருக்கின்றனர். ஆனால் இன்றும் முன்னாள் பயங்கரவாதிகளின் முன் வடகிழக்கு அதிகாகரிகள் மண்டியிட்டு நிற்கவே செய்கின்றனர்.
அதிகாரிகளின் இச்செயற்பாடுகள் நீடிக்குவரை முன்னாள் ஆயுததாரிகளின் ஆதிக்கம் நிலைத்து நிற்கவே செய்யும்.
எனவே அதிகாரிகள் மீது முன்னாள் ஆயுததாரிகள் ஆழுமை செலுத்த முற்படுகின்றபோது, அதை எதிர்த்து நிற்க தம்மை தயார்படுத்திக்கொள்ளவேண்டும்.
மனோகரன் தனது இடமாற்றத்தை தனக்கு உள்ள தொடர்புகள் ஊடாக செயலிழக்க செய்து கொள்ளலாம். ஆனால் மனோகரன் இதேபோன்றதோர் அநீதி சக ஊழியர் ஒருவருக்கு இடம்பெறக்கூடாது என நினைத்திருப்பாராக இருந்திருந்தால் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்க முடியாது என தெரிவித்திருக்க மாட்டார். மாறாக அநீதிக்கு எதிராக பின்கதவால் கள்ளக்கோழி பிடிக்காமல் வெளிப்படையாக செயற்பட்டிருக்க முடியும்.
அதாவது என்றோ ஒருநாள் நான் கருணாவின் காலில் விழவேணடி வரும் நான் அவரை பகைத்துக்கொள்ளக்கூடாது என்பது மனோகரனின் எதிர்பார்ப்பு.
சக அதிகாரி ஒருவனுக்கு எதிர்காலத்தில் இதுபோன்று அநீதி இடம்பெறக்கூடாது என்ற பொது நோக்கம் மனோகரனுக்கு மாத்திரமல்ல வடகிழக்கிலுள்ள அதிகாரிகள் 98 விழுக்காடு அதிகாரிகளிடம் இல்லை என்பது கவலைக்குரியதே.
இது தொடர்பாக நாம் மனோகரனை தொடர்பு கொண்டு கேட்டபோது, இடமாற்ற உத்தரவு வந்துள்ளதாகவும் அதனை செயலிழக்க செய்வதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாகவும் தெரிவித்த அவர் ஊடகங்களுக்கு மேலதிகமாக எவ்வித கருத்தும் தெரிவிக்க முடியாது என்றார்.
இலங்கையில் விடுதலைப்போராட்டம் என்ற பெயரில் ஆயுதக்குழுக்கள் உருவாகின. அவர்கள் மக்களின் உரிமைகளுக்காக போராடுவதாக கூறிக்கொண்டு மக்களின் உரிமைகளை பறித்ததே வரலாறு கண்ட உண்மை. அதற்கு வடகிழக்கு தமிழ் அதிகாரிகளும் முக்கிய பங்கு வகித்திருக்கின்றார்கள். அதிகாரிகள் தமது கடமைகளை சரிவர செய்வதை விடுத்து ஆயுததாரிகளுக்கு தலையாட்டும் பொம்மைகளாக செயற்பட்டு வடகிழக்கின் நிர்வாகத்தை ஆயுததாரிகளிடம் கையளித்திருந்தனர்.
இலங்கை அரசிடம் சம்பளத்தை பெற்றுக்கொண்டு மக்களுக்கு சேவை செய்யாமல் ஆயுதக்குழுக்களுக்களின் முன் கைகட்டி மண்டியிட்டு நின்ற அதிகாரிகளின் செயற்பாடுகளாலேயே மக்கள் ஆயுததாரிகளுக்கு கட்டுப்படவேண்டிய நிர்ப்பதந்தம் எற்பட்டது என்பது வரலாற்று துரோகம் ஆனால் இத்துரோகம் தொடர்ந்தும் அனுமதிக்கப்பட முடியாதது.
இன்று பயங்கரவாதிகளிடமிருந்து இலங்கை மீட்கப்பட்டிருக்கின்றது. முன்னாள் பயங்கரவாதிகள் இன்று அரசியல்வாதிகளாக வலம் வந்து கொண்டிருக்கின்றனர். ஆனால் இன்றும் முன்னாள் பயங்கரவாதிகளின் முன் வடகிழக்கு அதிகாகரிகள் மண்டியிட்டு நிற்கவே செய்கின்றனர்.
அதிகாரிகளின் இச்செயற்பாடுகள் நீடிக்குவரை முன்னாள் ஆயுததாரிகளின் ஆதிக்கம் நிலைத்து நிற்கவே செய்யும்.
எனவே அதிகாரிகள் மீது முன்னாள் ஆயுததாரிகள் ஆழுமை செலுத்த முற்படுகின்றபோது, அதை எதிர்த்து நிற்க தம்மை தயார்படுத்திக்கொள்ளவேண்டும்.
மனோகரன் தனது இடமாற்றத்தை தனக்கு உள்ள தொடர்புகள் ஊடாக செயலிழக்க செய்து கொள்ளலாம். ஆனால் மனோகரன் இதேபோன்றதோர் அநீதி சக ஊழியர் ஒருவருக்கு இடம்பெறக்கூடாது என நினைத்திருப்பாராக இருந்திருந்தால் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்க முடியாது என தெரிவித்திருக்க மாட்டார். மாறாக அநீதிக்கு எதிராக பின்கதவால் கள்ளக்கோழி பிடிக்காமல் வெளிப்படையாக செயற்பட்டிருக்க முடியும்.
அதாவது என்றோ ஒருநாள் நான் கருணாவின் காலில் விழவேணடி வரும் நான் அவரை பகைத்துக்கொள்ளக்கூடாது என்பது மனோகரனின் எதிர்பார்ப்பு.
சக அதிகாரி ஒருவனுக்கு எதிர்காலத்தில் இதுபோன்று அநீதி இடம்பெறக்கூடாது என்ற பொது நோக்கம் மனோகரனுக்கு மாத்திரமல்ல வடகிழக்கிலுள்ள அதிகாரிகள் 98 விழுக்காடு அதிகாரிகளிடம் இல்லை என்பது கவலைக்குரியதே.
பாதுகாப்புப் பிரிவினரால் தன்னைக் கைது செய்வதற்கு சூட்சுமங்கள் நடைபெற்றுவருவதால் தான் மறைந்து வாழ்வதாக தமிழ் முஸ்லிம் ஐக்கிய முன்னணியின் தலைவர் அஸாத் ஸாலி குறிப்பிட்டார்.
மறைந்து கொண்டு தனியார் தொலைக்காட்சிச் சேவையொன்றுக்கு, கைத்தொலைபேசி மூலம் கருத்துரைத்த அஸாத்ஸாலி மேலும் குறிப்பிட்டதாவது,
'கடந்த சில காலங்களாக என்னைக் கைது செய்வதிலேயே குறியாய் இருக்கிறார்கள். குறுந்தகவல் அனுப்பியதாய்ச் சொல்கிறார்கள், பயங்கரவாதிகளுக்கு உடந்தையாய் இருப்பதாகச் சொல்கிறார்கள், அல்கைதா என்கிறார்கள்... இவ்வாறு பல்வேறு பெயர்களில் என்னை அழைக்கிறார்கள். ஏதேனும் குற்றங்களை எப்படியேனும் என்தலைமேல் சுமத்தி என்னைக் கைது செய்ய முயற்சி செய்கிறது அரசாங்கம்...! நாங்கள் ஒருபோதும் பிழையான எதனையும் சொல்லவில்லை. சரியானதைத்தான் சொன்னோம். தாங்களே எங்களிடம் உடன்பட்ட '13 ப்ளஸ்' தரச் சொல்கிறீர்கள்... எல்எல்ஆர்ஸியினை செயற்படுத்துமாறு கூறுகிறீர்கள்... நாங்கள் அவ்வாறு குறிப்பிடும்போது உங்களுக்கு வலிக்கிறது.... அதனால், ஏதேனும் ஒருவிடயத்தை முன்கொணர்ந்து அஸாத் ஸாலியை கைது செய்வதற்கே அரசாங்கம் முயற்சி செய்கிறது. இப்போது நான் மறைந்திருந்திருக்கிறேன்... என் உயிருக்குப் பேரபாயம் காத்திருக்கிறது'
(கேஎப்)
மறைந்து கொண்டு தனியார் தொலைக்காட்சிச் சேவையொன்றுக்கு, கைத்தொலைபேசி மூலம் கருத்துரைத்த அஸாத்ஸாலி மேலும் குறிப்பிட்டதாவது,
'கடந்த சில காலங்களாக என்னைக் கைது செய்வதிலேயே குறியாய் இருக்கிறார்கள். குறுந்தகவல் அனுப்பியதாய்ச் சொல்கிறார்கள், பயங்கரவாதிகளுக்கு உடந்தையாய் இருப்பதாகச் சொல்கிறார்கள், அல்கைதா என்கிறார்கள்... இவ்வாறு பல்வேறு பெயர்களில் என்னை அழைக்கிறார்கள். ஏதேனும் குற்றங்களை எப்படியேனும் என்தலைமேல் சுமத்தி என்னைக் கைது செய்ய முயற்சி செய்கிறது அரசாங்கம்...! நாங்கள் ஒருபோதும் பிழையான எதனையும் சொல்லவில்லை. சரியானதைத்தான் சொன்னோம். தாங்களே எங்களிடம் உடன்பட்ட '13 ப்ளஸ்' தரச் சொல்கிறீர்கள்... எல்எல்ஆர்ஸியினை செயற்படுத்துமாறு கூறுகிறீர்கள்... நாங்கள் அவ்வாறு குறிப்பிடும்போது உங்களுக்கு வலிக்கிறது.... அதனால், ஏதேனும் ஒருவிடயத்தை முன்கொணர்ந்து அஸாத் ஸாலியை கைது செய்வதற்கே அரசாங்கம் முயற்சி செய்கிறது. இப்போது நான் மறைந்திருந்திருக்கிறேன்... என் உயிருக்குப் பேரபாயம் காத்திருக்கிறது'
(கேஎப்)
நேற்று முன்தினம் அரசாங்கத்தால் மின்சாரக் கட்டணம் உயர்த்தப்படுவது சம்பந்தமாக விடுக்கப்பட்ட தீர்மானம் சரியானதல்ல என்ற பிரேரணை மாத்தறை பிரதேச சபையில் முன்வைக்கப்பட்டு அதிகூடிய வாக்குகளால் வெற்றிபெற்றுள்ளது.
பிரேரணை எதிர்க்கட்டசியினராலேயேமுன்வைக்கப்பட்டுள்ளது. என்றாலும், ஐதேக உறுப்பினர்கள் ஏழு பேரும், மக்கள் விடுதலை முன்னணியைச் சேர்ந்த ஒருவரும் அந்தப் பிரேரணையை ஆதரித்து வாக்களித்துள்ளனர்.
ஆளும் கட்சியைச் சேர்ந்த ஒரேயொரு உறுப்பினர் மாத்திரம் எதிராக வாக்களித்துள்ளார்.
வாக்களிக்கும் சந்தர்ப்பத்தில் ஆளும்கட்சியைச் சேர்ந்த ஐவர் வாக்களிக்காமல் இருந்திருக்கின்றனர்.
( கேஎப்)
பிரேரணை எதிர்க்கட்டசியினராலேயேமுன்வைக்கப்பட்டுள்ளது. என்றாலும், ஐதேக உறுப்பினர்கள் ஏழு பேரும், மக்கள் விடுதலை முன்னணியைச் சேர்ந்த ஒருவரும் அந்தப் பிரேரணையை ஆதரித்து வாக்களித்துள்ளனர்.
ஆளும் கட்சியைச் சேர்ந்த ஒரேயொரு உறுப்பினர் மாத்திரம் எதிராக வாக்களித்துள்ளார்.
வாக்களிக்கும் சந்தர்ப்பத்தில் ஆளும்கட்சியைச் சேர்ந்த ஐவர் வாக்களிக்காமல் இருந்திருக்கின்றனர்.
( கேஎப்)
இங்கிலாந்து இளவரசர் வில்லியம், அந்நாட்டின் விமானப்படையின் 'சீ கிங்' மீட்பு மற்றும் தேடுதல் பிரிவில் ஹெலிகாப்டர் விமானியாக உள்ளார். ஆப்கானிஸ்தானில் தலிபான் தீவிரவாதிகளை வேட்டையாடிய 'நேட்டோ' படையில் இவர் இடம்பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. சுமார் 3 ஆண்டுகளாக இப்பணியில் உள்ள வில்லியம், கடந்த ஆண்டு தனது காதலி கேட் மிடில்டனை திருமணம் செய்துக்கொண்டார். இளவரசி கேட் மிடில்டன் தற்போது கர்ப்பிணியாக உள்ளார். வரும் ஜுலை மாதம் இத்தம்பதியருக்கு குழந்தை பிறக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தனது முதல்வாரிசு பிறக்கும் வேளையில் குடும்பத்தை விட்டு வெகு தொலைவில், வெகு நாட்கள் பிரிந்திருப்பதை விரும்பவில்லை என சில மாதங்களுக்கு முன்னர் ஒரு பேட்டியின் போது வில்லியம் கூறியிருந்தார்.
இந்நிலையில், இன்னும் ஓரிரு மாதங்களில் விமானப்படை பணியை விட்டு விலகப்போவதாக வில்லியம் தனது உயரதிகாரியிடம் தெரிவித்துள்ளதாக இங்கிலாந்தில் இருந்து வெளியாகும் 'சன்டே டைம்ஸ்' பத்திரிகை, செய்தி வெளியிட்டுள்ளது.
தனது முதல்வாரிசு பிறக்கும் வேளையில் குடும்பத்தை விட்டு வெகு தொலைவில், வெகு நாட்கள் பிரிந்திருப்பதை விரும்பவில்லை என சில மாதங்களுக்கு முன்னர் ஒரு பேட்டியின் போது வில்லியம் கூறியிருந்தார்.
இந்நிலையில், இன்னும் ஓரிரு மாதங்களில் விமானப்படை பணியை விட்டு விலகப்போவதாக வில்லியம் தனது உயரதிகாரியிடம் தெரிவித்துள்ளதாக இங்கிலாந்தில் இருந்து வெளியாகும் 'சன்டே டைம்ஸ்' பத்திரிகை, செய்தி வெளியிட்டுள்ளது.
சகல சமயங்களினதும் விழாக்களை அதிவிமர்சையாக கொண்டாடி, நாட்டில் சமயங்களுக்கிடையிலான நல்லுறவினை கட்டியெழுப்புவோம் என, ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
புத்த ரஷ்மி தேசிய வெசாக் வலயம் வருடந்தோறும் ஜனாதிபதி செயலகம், ஹூனுபிட்டிய கங்காராம விஹாரையின் ஏற்பாட்டில் இடம்பெறுகிறது. இதன் நிகழ்வுகள் தொடர்பில் அலரி மாளிகையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையிலேயே, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இவ்வாறு கூறினார்.
அலரி மாளிகையில், பேரே வாவி மற்றும் காங்காராம விஹாரையை கேந்திரமாகக் கொண்டு, புத்த ரஷ்மி வெசாக் வலயம் இம்முறை அதிவிமர்சையாக கொண்டாட, ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
சமய விழாவாக மாத்திரமன்றி, எமது பாரம்பரிய உரிமைகளையும், கலாசாரத்தையும் சித்தரித்துக்காட்டும் வகையில், இவ்விழாவை ஒழுங்கு செய்ய வேண்டியதன் முக்கியத்துவத்தை, ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
பெற்ற சுதந்திரத்தை பாதுகாத்து, சுபீட்சமிகுந்த தேசத்தை கட்டியெழுப்புவதற்காக, இன மத பேதங்களை மறந்து, செயற்பட வேண்டியதன் அவசியத்தையும், ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
வெசாக் வலயத்தை பார்வையிட வருகை தரும் வடக்கு கிழக்கு மாகாண பாடசாலை மாணவர்களுக்கும், விசேட வசதிகள் ஏற்படுத்திக்கொடுக்கப்பட்டுள்ளன. அத்துடன் வெசாக் வலய வெளிச்சக்கூட்டு போட்டிகளில் கலந்து கொள்ளும் மாணவர்களுக்கு, சான்றிதழ்களும், பணப் பரிசில்களும் வழங்கப்படவுள்ளன.
இந்த பேச்சுவார்த்தையில் ஹூனுபிட்டிய கங்காராம விஹாராதிபதி கலபொட ஞானிஸ்ஸர தேரர், கலாநிதி சங்கைக்குரிய கிரிந்தே அஸ்ஸஜீ தேரர் உள்ளிட்ட மகாசங்கத்தினர், அமைச்சர் தினேஷ் குணவர்தன உட்பட பலர், கலந்து கொண்டுள்ளனர்.
புத்த ரஷ்மி தேசிய வெசாக் வலயம் வருடந்தோறும் ஜனாதிபதி செயலகம், ஹூனுபிட்டிய கங்காராம விஹாரையின் ஏற்பாட்டில் இடம்பெறுகிறது. இதன் நிகழ்வுகள் தொடர்பில் அலரி மாளிகையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையிலேயே, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இவ்வாறு கூறினார்.
அலரி மாளிகையில், பேரே வாவி மற்றும் காங்காராம விஹாரையை கேந்திரமாகக் கொண்டு, புத்த ரஷ்மி வெசாக் வலயம் இம்முறை அதிவிமர்சையாக கொண்டாட, ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
சமய விழாவாக மாத்திரமன்றி, எமது பாரம்பரிய உரிமைகளையும், கலாசாரத்தையும் சித்தரித்துக்காட்டும் வகையில், இவ்விழாவை ஒழுங்கு செய்ய வேண்டியதன் முக்கியத்துவத்தை, ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
பெற்ற சுதந்திரத்தை பாதுகாத்து, சுபீட்சமிகுந்த தேசத்தை கட்டியெழுப்புவதற்காக, இன மத பேதங்களை மறந்து, செயற்பட வேண்டியதன் அவசியத்தையும், ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
வெசாக் வலயத்தை பார்வையிட வருகை தரும் வடக்கு கிழக்கு மாகாண பாடசாலை மாணவர்களுக்கும், விசேட வசதிகள் ஏற்படுத்திக்கொடுக்கப்பட்டுள்ளன. அத்துடன் வெசாக் வலய வெளிச்சக்கூட்டு போட்டிகளில் கலந்து கொள்ளும் மாணவர்களுக்கு, சான்றிதழ்களும், பணப் பரிசில்களும் வழங்கப்படவுள்ளன.
இந்த பேச்சுவார்த்தையில் ஹூனுபிட்டிய கங்காராம விஹாராதிபதி கலபொட ஞானிஸ்ஸர தேரர், கலாநிதி சங்கைக்குரிய கிரிந்தே அஸ்ஸஜீ தேரர் உள்ளிட்ட மகாசங்கத்தினர், அமைச்சர் தினேஷ் குணவர்தன உட்பட பலர், கலந்து கொண்டுள்ளனர்.
இந்திய எல்லைக்குள் ஊடுருவிய சீன ராணுவம், லடாக் பகுதியில் கூடாரம் அமைத்து தங்கியுள்ளது. முதலில் இந்த ஊடுருவலை மறுத்த சீன அரசு, பின்னர் அந்த இடம் தங்கள் பகுதி என்று தெரிவித்தது. இதுதொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துவதற்காக மத்திய வெளியுறவுத்துறை மந்திரி சல்மான் குர்ஷித் 9-ம் திகதி சீனா செல்ல உள்ளார்.
எல்லை தாண்டி வந்து 2 வாரங்கள் ஆகியும் சீனப் படைகள் வாபஸ் பெறுவற்கு எந்த அறிகுறியும் இல்லாத நிலையில், லடாக்கில் மேலும் ஒரு கூடாரம் அமைத்து தங்கள் வலிமையை அதிகரித்து வருவதாக புதிய தகவல்கள் வெளியாகி உள்ளன. இதன்மூலம் லடாக் பகுதியில் சீனப் படைகளின் கூடாரங்கள் 5 ஆக அதிகரித்துள்ளது தெரிவிக்கப்படுகின்றது.
லடாக்கில் இருந்து 70 கி.மீ. தொலைவில் உள்ள பர்ஸ்ட் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள இந்த கூடாரத்திற்கு வெளியில் 'நீங்கள் சீனப் பகுதிக்குள் இருக்கிறீர்கள்' என்று ஆங்கிலத்தில் எழுதப்பட்ட பேனர் இருப்பதாகவும், அங்கு சீன ராணுவ வீரர்கள் மோப்ப நாயுடன் 24 மணி நேரமும் காவல் பணியில் ஈடுபட்டிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
எல்லை தாண்டி வந்து 2 வாரங்கள் ஆகியும் சீனப் படைகள் வாபஸ் பெறுவற்கு எந்த அறிகுறியும் இல்லாத நிலையில், லடாக்கில் மேலும் ஒரு கூடாரம் அமைத்து தங்கள் வலிமையை அதிகரித்து வருவதாக புதிய தகவல்கள் வெளியாகி உள்ளன. இதன்மூலம் லடாக் பகுதியில் சீனப் படைகளின் கூடாரங்கள் 5 ஆக அதிகரித்துள்ளது தெரிவிக்கப்படுகின்றது.
லடாக்கில் இருந்து 70 கி.மீ. தொலைவில் உள்ள பர்ஸ்ட் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள இந்த கூடாரத்திற்கு வெளியில் 'நீங்கள் சீனப் பகுதிக்குள் இருக்கிறீர்கள்' என்று ஆங்கிலத்தில் எழுதப்பட்ட பேனர் இருப்பதாகவும், அங்கு சீன ராணுவ வீரர்கள் மோப்ப நாயுடன் 24 மணி நேரமும் காவல் பணியில் ஈடுபட்டிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மக்கள் மாமிசம் சாப்பிடுவதையும், மது அருந்துவதையும் விட்டுவிட்டால் கற்பழிப்பு குற்றங்கள் குறையும் என்று சுவாமி அக்னிவேஷ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், போலீசாரை வைத்து மட்டும் கற்பழிப்பு போன்ற குற்றத்தை நிறுத்திவிட முடியாது. மக்கள் மாமிசம் சாப்பிடுவதை நிறுத்திவிட்டால் கற்பழிப்பு குற்றங்கள் பெருமளவு குறையும் என்று நான் நினைக்கிறேன்.
இது குறித்து பல ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மது அருந்துவதை தவிர்த்தால் கற்பழிப்பு குற்றங்கள் குறையும். மது அருந்துவதால் தான் பல்வேறு குற்றங்கள் மற்றும் விபத்துகள் நடக்கின்றன.
ஜப்பானிய ஆராய்ச்சியாளர்கள் உலகின் வயதான மனிதர் குறித்து ஆய்வு செய்ததில் அவர் ஒரு சைவப் பிரியர் என்பது தெரிய வந்துள்ளது. அனைத்து நோய்கள் ஏற்பட மாமிசம் தான் காரணம் என்று பல்வேறு ஆய்வுகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் ஓடும் பேருந்தில் இளம்பெண்ணை கற்பழித்தவர்களும் சரி, 5 வயது சிறுமியை கற்பழித்தவர்களும் சரி குடிபோதையில் இருந்துள்ளனர். இதன் மூலம் மது தான் அவர்களை குற்றம் செய்ய தூண்டியுள்ளது என்பது தெரிய வருகிறது.
வருவாய் வருவதால் அரசு மது உற்பத்தியை நிறுத்தவில்லை. அனைத்து மாநிலங்களும் போட்டி போட்டு மது உற்பத்தி செய்கின்றன. தினமும் ஒரு பில்லியன் மிருகங்கள் மாமிசத்திற்காக கொல்லப்படுகின்றன. இதன் பின்விளைவு பயங்கரமாக இருக்கும்.
பள்ளிகளில் மதுவால் ஏற்படும் சீர்கேடுகள் குறித்து குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுப்பது இல்லை.
ஒரு குற்றத்திற்காக தனி நபரை குறை கூற முடியாது. ஒட்டுமொத்த சமுதாயமும் தான் பொறுப்பு.
கற்பழிப்புக்கு மரண தண்டனை என்பதை நான் ஆதரிக்க மாட்டேன். மரண தண்டனையால் ஒன்றும் நடக்கப் போவதில்லை. நாடாளுமன்றத்தை தாக்கியவர்கள் உள்பட யாருக்கும் தூக்கு தண்டனை விதிக்கக் கூடாது. கசாபை தூக்கில் போட்டிருக்கக் கூடாது என்றார்..
இது குறித்து பல ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மது அருந்துவதை தவிர்த்தால் கற்பழிப்பு குற்றங்கள் குறையும். மது அருந்துவதால் தான் பல்வேறு குற்றங்கள் மற்றும் விபத்துகள் நடக்கின்றன.
ஜப்பானிய ஆராய்ச்சியாளர்கள் உலகின் வயதான மனிதர் குறித்து ஆய்வு செய்ததில் அவர் ஒரு சைவப் பிரியர் என்பது தெரிய வந்துள்ளது. அனைத்து நோய்கள் ஏற்பட மாமிசம் தான் காரணம் என்று பல்வேறு ஆய்வுகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் ஓடும் பேருந்தில் இளம்பெண்ணை கற்பழித்தவர்களும் சரி, 5 வயது சிறுமியை கற்பழித்தவர்களும் சரி குடிபோதையில் இருந்துள்ளனர். இதன் மூலம் மது தான் அவர்களை குற்றம் செய்ய தூண்டியுள்ளது என்பது தெரிய வருகிறது.
வருவாய் வருவதால் அரசு மது உற்பத்தியை நிறுத்தவில்லை. அனைத்து மாநிலங்களும் போட்டி போட்டு மது உற்பத்தி செய்கின்றன. தினமும் ஒரு பில்லியன் மிருகங்கள் மாமிசத்திற்காக கொல்லப்படுகின்றன. இதன் பின்விளைவு பயங்கரமாக இருக்கும்.
பள்ளிகளில் மதுவால் ஏற்படும் சீர்கேடுகள் குறித்து குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுப்பது இல்லை.
ஒரு குற்றத்திற்காக தனி நபரை குறை கூற முடியாது. ஒட்டுமொத்த சமுதாயமும் தான் பொறுப்பு.
கற்பழிப்புக்கு மரண தண்டனை என்பதை நான் ஆதரிக்க மாட்டேன். மரண தண்டனையால் ஒன்றும் நடக்கப் போவதில்லை. நாடாளுமன்றத்தை தாக்கியவர்கள் உள்பட யாருக்கும் தூக்கு தண்டனை விதிக்கக் கூடாது. கசாபை தூக்கில் போட்டிருக்கக் கூடாது என்றார்..
300 வரையான உள்ளுர் நோயாளிகளுக்கு உணவு வழங்கும் பொறுப்பில் உள்ள யாழ்ப்பாணம் ஆஸ்பத்திரி உணவகம் (கன்ரீன்) என்ன நிலையில் நடக்கிறது என்று தெரியுமா? 12 சமையல் பணியாளர்கள் நியமனம் செய்யக்கூடிய இடத்தில் 6 பேர் மட்டும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இந்த 6 பேரிலும் இரவுக்கடமை, விடுமுறை, சிறுவிடுப்பு நேரங்களில் 2 அல்லது 3 பணியாளர்கள் மட்டுமே சகல நோயாளர்களுக்கும் உணவு பரிமாற வேண்டி ஏற்படுகிறது. இதனால் நோயாளிகளுக்கு சரியான கவனிப்பு கிடைக்காமல் அவர்கள் அவதிப்பட வேண்டியுள்ளனர்.
இதனை விட ஜப்பானிய அரசாங்கத்தால் பல மில்லியன் ரூபா பணம் செலவு செய்து கட்டப்பட்ட நவீன மருத்துவமனை அமைந்துள்ள ஆஸ்பத்திரி வளாகத்திலே உணவகத்தின் நிர்வாகப் பணியாளர்களின் நிலமை இவ்வாறு இருக்கும்போது, உணவகத்தின் நிலமை இதனை விட வெட்கக்கேடானது.
இவ்வுணவகமானது சிறிய மழைக்குக்கூட ஒழுகும் நிலையில் உள்ளது. ஒழுகும் மழை நீரால் உணவகத்தினதும், நோயாளர்களினதும் சுகாதாரம் பாதிக்கப்படுகிறது. கடந்த 03 வருடமாக இதே நிலமையிலேயே இது உள்ளது. மழை பெய்யும் போது அவர்களிடம் சென்று முறையிட்டால் கூரையை உடனடியாக மாற்றுவதாக கூறுவார்கள் பிறகு கண்டுகொள்ள மாட்டார்கள்.
இதனை விட சகல நோயாளிகளுக்கும் தயாரிக்கப்படும் உணவுக்கான மிளகாய்த்தூளை இன்று வரை அவர்கள் உரலில் இட்டு இடித்து தான் பயன்படுத்துகிறார்கள். மிளகாய்த்தூள் இடிக்கும் பணியில் சென்ஜோன்ஸ் அம்புலன்ஸ் படைப்பிரிவை சேர்ந்த 15 – 16 வயது மாணவர்களே (சாரணர்கள்)ஈடுபடுகின்றார்கள்.
யாழ் மாவட்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை தலைவராக கொண்ட யாழ்ப்பாண ஆஸ்பத்திரியில் நோயாளருக்கான உணவு விடுதியில் தெரிந்தே விடப்பட்டுள்ள குறைபாடுகளை மக்கள் ஊழலாகவே கருதுகிறார்கள். தமிழ் மக்களுக்கு வேலைவாய்ப்பை பெற்றுத்தருவதாகவும், மீள்கட்டுமானத்தை செய்வதாகவும் பீற்றிக்கொள்ளும் டக்ளஸ் தேவானந்தா தனது அதிகாரத்திற்கு உட்பட்ட யாழ் ஆஸ்பத்திரியில் சமையலறை பணியாளர் வெற்றிடத்தை நிரப்பாமல் இருப்பது ஏன்? கடந்த 3 வருடமாக ஒழுகும் கூரையை திருத்தாமல் இருப்பது ஏன்? சென்ஜோன்ஸ் அம்புலன்ஸ் பிரிவு சாரணர்கள் உருவாக்கப்பட்ட நோக்கம் யாழ்ப்பாண ஆஸ்பத்திரியில் மிளகாய்த்தூள் இடிப்பதற்காகவா என்று மக்கள் கேள்வி எழுப்புகின்றார்கள்.
இந்த நிலையில் ஜப்பான்காரன் என்ன அமெரிக்கா உட்பட அகில உலகமே வந்து அபிவிருத்திக்காக பாடுபட்டாலும் ஒன்றும் நடக்காது. ஊழல் அற்ற நிர்வாகம் ஒன்று ஏற்படும் வரை வடக்கை பொறுத்தவரை எல்லாமே கானல் நீர்தான்.
இவ்வண்ணம்
வி.சகாதேவன்
தலைவர்
போரால் பாதிக்கப்பட்ட மக்கள் இயக்கம்.
இதனை விட ஜப்பானிய அரசாங்கத்தால் பல மில்லியன் ரூபா பணம் செலவு செய்து கட்டப்பட்ட நவீன மருத்துவமனை அமைந்துள்ள ஆஸ்பத்திரி வளாகத்திலே உணவகத்தின் நிர்வாகப் பணியாளர்களின் நிலமை இவ்வாறு இருக்கும்போது, உணவகத்தின் நிலமை இதனை விட வெட்கக்கேடானது.
இவ்வுணவகமானது சிறிய மழைக்குக்கூட ஒழுகும் நிலையில் உள்ளது. ஒழுகும் மழை நீரால் உணவகத்தினதும், நோயாளர்களினதும் சுகாதாரம் பாதிக்கப்படுகிறது. கடந்த 03 வருடமாக இதே நிலமையிலேயே இது உள்ளது. மழை பெய்யும் போது அவர்களிடம் சென்று முறையிட்டால் கூரையை உடனடியாக மாற்றுவதாக கூறுவார்கள் பிறகு கண்டுகொள்ள மாட்டார்கள்.
இதனை விட சகல நோயாளிகளுக்கும் தயாரிக்கப்படும் உணவுக்கான மிளகாய்த்தூளை இன்று வரை அவர்கள் உரலில் இட்டு இடித்து தான் பயன்படுத்துகிறார்கள். மிளகாய்த்தூள் இடிக்கும் பணியில் சென்ஜோன்ஸ் அம்புலன்ஸ் படைப்பிரிவை சேர்ந்த 15 – 16 வயது மாணவர்களே (சாரணர்கள்)ஈடுபடுகின்றார்கள்.
யாழ் மாவட்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை தலைவராக கொண்ட யாழ்ப்பாண ஆஸ்பத்திரியில் நோயாளருக்கான உணவு விடுதியில் தெரிந்தே விடப்பட்டுள்ள குறைபாடுகளை மக்கள் ஊழலாகவே கருதுகிறார்கள். தமிழ் மக்களுக்கு வேலைவாய்ப்பை பெற்றுத்தருவதாகவும், மீள்கட்டுமானத்தை செய்வதாகவும் பீற்றிக்கொள்ளும் டக்ளஸ் தேவானந்தா தனது அதிகாரத்திற்கு உட்பட்ட யாழ் ஆஸ்பத்திரியில் சமையலறை பணியாளர் வெற்றிடத்தை நிரப்பாமல் இருப்பது ஏன்? கடந்த 3 வருடமாக ஒழுகும் கூரையை திருத்தாமல் இருப்பது ஏன்? சென்ஜோன்ஸ் அம்புலன்ஸ் பிரிவு சாரணர்கள் உருவாக்கப்பட்ட நோக்கம் யாழ்ப்பாண ஆஸ்பத்திரியில் மிளகாய்த்தூள் இடிப்பதற்காகவா என்று மக்கள் கேள்வி எழுப்புகின்றார்கள்.
இந்த நிலையில் ஜப்பான்காரன் என்ன அமெரிக்கா உட்பட அகில உலகமே வந்து அபிவிருத்திக்காக பாடுபட்டாலும் ஒன்றும் நடக்காது. ஊழல் அற்ற நிர்வாகம் ஒன்று ஏற்படும் வரை வடக்கை பொறுத்தவரை எல்லாமே கானல் நீர்தான்.
இவ்வண்ணம்
வி.சகாதேவன்
தலைவர்
போரால் பாதிக்கப்பட்ட மக்கள் இயக்கம்.
மதவாச்சி, வவுனியா, கெபித்திகொல்லாவ, வாஹல்கட, புல்மோட்டை , பதவிய ஆகிய பிரதேசங்களை உள்ளடக்கும் வகையில் புதிய பொருளாதார வலயம் ஒன்றை உருவாக்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
விவசாயம். கடற்றொழில் உற்பத்திகள் ஆகியவற்றிற்கு அதிக விலையை பெற்றுக் கொடுக்கும் நோக்கில் இத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. மதவாச்சி நகரை கேந்திரமாக வைத்து, புதிய பொருளாதார மத்திய நிலையம் ஆரம்பிக்கப்படுவதுடன், உற்பத்தி பொருட்களை விற்பனை செய்வதற்காக பல்வேறு வசதிகளையும் அரசாங்கம் ஏற்படுத்தி கொடுக்கவுள்ளது.
பல்வேறு காரணங்களினால் செயலிழந்துள்ள மதவாச்சி, பொருளாதார மத்திய நிலையத்தின் நிர்மாணப்பணிகள், துரிதப்படுத்தப்படவுள்ளதாக மதவாச்சி பிரதேச சபையின் தலைவர் கே.சி.மென்டிஸ் தெரிவித்தார். வடமத்திய மாகாண சபை இதற்கான நிதியை வழங்கியுள்ளது.
விவசாயம். கடற்றொழில் உற்பத்திகள் ஆகியவற்றிற்கு அதிக விலையை பெற்றுக் கொடுக்கும் நோக்கில் இத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. மதவாச்சி நகரை கேந்திரமாக வைத்து, புதிய பொருளாதார மத்திய நிலையம் ஆரம்பிக்கப்படுவதுடன், உற்பத்தி பொருட்களை விற்பனை செய்வதற்காக பல்வேறு வசதிகளையும் அரசாங்கம் ஏற்படுத்தி கொடுக்கவுள்ளது.
பல்வேறு காரணங்களினால் செயலிழந்துள்ள மதவாச்சி, பொருளாதார மத்திய நிலையத்தின் நிர்மாணப்பணிகள், துரிதப்படுத்தப்படவுள்ளதாக மதவாச்சி பிரதேச சபையின் தலைவர் கே.சி.மென்டிஸ் தெரிவித்தார். வடமத்திய மாகாண சபை இதற்கான நிதியை வழங்கியுள்ளது.
நாட்டில் வாழும் சிங்கள-தமிழ் மக்களின் கலை, கலாசாரங்கள் மிக நெருங்கிய தொடர்புகளை கொண்டதென, அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். பம்பலபிட்டி, அரச தொடர் மாடி குடியிருப்பில் வாழும் தமிழ் குடியிருப்பாளர்கள் ஏற்பாடு செய்த சித்திரை புத்தாண்டு நிகழ்வுகளில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும்போதே, அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.
கோலம் போடுதல், பரதநாட்டியம், பூமாலை கோர்த்தல், கிடுகு பின்னுதல், திருக்குறள் மனப்பாடம், விபுலானந்த அடிகளின் வேடம், கயிறிழுத்தல் உட்பட தமிழ் இசை நிகழ்ச்சிகள் பலவும் இங்கு இடம்பெற்றன. தமிழ், சிங்கள மக்கள் சகோதர வாஞ்சையுடன் ஒற்றுமையாக வாழ்ந்த போதிலும், கடந்த காலங்களில் சில விசமிகள், இனங்களுக்pகடையே குரோதத்தை வளர்த்தனர். எனினும், கொழும்பு மாவட்டத்தில் உள்ள தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் கீழ் காணப்படும் தொடர்மாடி வீடுகளில் மூவின மக்களும், ஐக்கியமாகவும், சகோதர வாஞ்சையுடனும் வாழ்ந்து வருவதாகவும், அமைச்சர் அங்கு தெரிவித்தார்.
கொழும்பு மாநகர சபை உறுப்பினர் மொஹமட் முஸம்மில், கூட்டதான முகாமைத்து அதிகார சபையின் தலைவர் கபில கமகே, தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் பொது முகாமையாளர் பிரிகேடியர் மஹிந்த முதலிகே உட்பட பலர், இதில் கலந்து கொண்டனர்.
கோலம் போடுதல், பரதநாட்டியம், பூமாலை கோர்த்தல், கிடுகு பின்னுதல், திருக்குறள் மனப்பாடம், விபுலானந்த அடிகளின் வேடம், கயிறிழுத்தல் உட்பட தமிழ் இசை நிகழ்ச்சிகள் பலவும் இங்கு இடம்பெற்றன. தமிழ், சிங்கள மக்கள் சகோதர வாஞ்சையுடன் ஒற்றுமையாக வாழ்ந்த போதிலும், கடந்த காலங்களில் சில விசமிகள், இனங்களுக்pகடையே குரோதத்தை வளர்த்தனர். எனினும், கொழும்பு மாவட்டத்தில் உள்ள தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் கீழ் காணப்படும் தொடர்மாடி வீடுகளில் மூவின மக்களும், ஐக்கியமாகவும், சகோதர வாஞ்சையுடனும் வாழ்ந்து வருவதாகவும், அமைச்சர் அங்கு தெரிவித்தார்.
கொழும்பு மாநகர சபை உறுப்பினர் மொஹமட் முஸம்மில், கூட்டதான முகாமைத்து அதிகார சபையின் தலைவர் கபில கமகே, தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் பொது முகாமையாளர் பிரிகேடியர் மஹிந்த முதலிகே உட்பட பலர், இதில் கலந்து கொண்டனர்.
மன்னாரில் இன்று (28) இடம்பெற்ற ஐக்கிய தேசியக் கட்சி செயற்குழு உறுப்பினர்கள் சந்திப்பொன்றின்போது, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க உரையாற்றும் போது, முஸ்லிம்களுக்காக தான் குரல்கொடுப்பதாகவும், முஸ்லிம்களுக்காக முன்னின்றுஉழைப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
ஆளும் கட்சியிலுள்ள முஸ்லிம் தலைவர்கள், முஸ்லிம்களின் உரிமைகளை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவிடம் விட்டுவைத்திருக்கின்றார்கள்.
இந்நாட்டுத் தமிழர்களுக்காக சம்பந்தன் எழுந்து குரல்கொடுக்கிறார். ஆனால், முஸ்லிம்களுக்காக குரல்கொடுக்க யாரும் இல்லை. இந்தக் குறையை இல்லாமற்செய்து தான் முஸ்லிம்களுக்காக்க் குரல்கொடுக்கப்போவதாக விக்கிரமசிங்க அங்கு மேலும் தெரிவித்துள்ளார்.
ஆளும் கட்சியில் முஸ்லிம் அமைச்சர்களும், பாராளுமன்ற உறுப்பினர்களும் அதிகளவு நிற்கின்றபோதும், யாரும் முஸ்லிம்களுக்கு ஆதரவாக, அவர்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்காகப் பேசுவதற்கு யரைம் முன்வருகிறார்கள் இல்லை எனவும் ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.
(கேஎப்)
ஆளும் கட்சியிலுள்ள முஸ்லிம் தலைவர்கள், முஸ்லிம்களின் உரிமைகளை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவிடம் விட்டுவைத்திருக்கின்றார்கள்.
இந்நாட்டுத் தமிழர்களுக்காக சம்பந்தன் எழுந்து குரல்கொடுக்கிறார். ஆனால், முஸ்லிம்களுக்காக குரல்கொடுக்க யாரும் இல்லை. இந்தக் குறையை இல்லாமற்செய்து தான் முஸ்லிம்களுக்காக்க் குரல்கொடுக்கப்போவதாக விக்கிரமசிங்க அங்கு மேலும் தெரிவித்துள்ளார்.
ஆளும் கட்சியில் முஸ்லிம் அமைச்சர்களும், பாராளுமன்ற உறுப்பினர்களும் அதிகளவு நிற்கின்றபோதும், யாரும் முஸ்லிம்களுக்கு ஆதரவாக, அவர்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்காகப் பேசுவதற்கு யரைம் முன்வருகிறார்கள் இல்லை எனவும் ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.
(கேஎப்)
தன்னை யாராவது விஷம் வைத்து கொன்று விடுவார்கள் என்ற பயந்த ஹிட்லர் தான் உண்ணும் உணவில் விஷம் கலந்துள்ளதா என்பதை அறிய 15 இளம் பெண்களை அந்த உணவை முதலில் சாப்பிட வைத்து பிறகு தான் சாப்பிட்டது தெரிய வந்துள்ளது. ஜெர்மனியை சர்வாதிகாரம் செய்த ஹிட்லர் இரண்டாம் உலகப் போரின் இறுதி கட்டத்தில் உல்ப்ஸ் லையர் என்னும் பாதுகாப்பான இடத்தில் இருந்தார்.
இந்த இடம் தற்போது போலந்தில் உள்ளது. அப்போது அவரிடம் இரண்டரை ஆண்டுகள் பணிபுரிந்த மார்கட் வோயல்க் என்ற பெண் இத்தனை ஆண்டுகள் கழித்து தனது 95வது வயதில் தனது அனுபவங்களை உலகிற்கு தெரிவித்துள்ளார்.
மார்கட் இருபதுகளில் இருந்தபோது ஹிட்லரிடம் பணியாற்றியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், ஹிட்லர் ஒரு சைவப் பிரியர். அவரிடம் நான் பணிபுரிந்த காலத்தில் அவர் மாமிசம் சாப்பிட்டு நான் பார்த்ததில்லை. இங்கிலாந்துக்காரர்கள் தன்னை விஷம் வைத்து கொன்றுவிடுவார்களோ என்று அவர் அஞ்சினார். அதனால் அவர் சாப்பிடும் முன்பு அவரது உணவை சாப்பிட்டு விஷம் உள்ளதா என்பதை கண்டறிய 15 இளம் பெண்களை பணியமர்த்தி இருந்தார். அதில் நானும் ஒருத்தி. போர் காலத்தில் மக்கள் உணவுக்கு கஷ்டப்பட்ட நேரத்தில் நாங்கள் ஹிட்லருக்கு வழங்கப்படும் சுவையான உணவை ருசி பார்த்தோம். ஆனால் அதில் விஷம் இருக்குமோ என்ற பயத்திலேயே அதை ரசித்து சாப்பிட்டதில்லை. ஒவ்வொரு வேளையும் உணவை சாப்பிடுகையில் இது தான் நம் கடைசி உணவு என்று நினைப்போம். போர் மோசமடைந்ததையடுத்து நான் பெர்லினுக்கு சென்றுவிட்டேன். அதன் பிறகு என்னுடன் பணிபுரிந்த 14 பேரையும் ரஷ்ய படை சுட்டுக் கொன்று விட்டதாக கேள்விப்பட்டேன் என்றார்.
இந்த இடம் தற்போது போலந்தில் உள்ளது. அப்போது அவரிடம் இரண்டரை ஆண்டுகள் பணிபுரிந்த மார்கட் வோயல்க் என்ற பெண் இத்தனை ஆண்டுகள் கழித்து தனது 95வது வயதில் தனது அனுபவங்களை உலகிற்கு தெரிவித்துள்ளார்.
மார்கட் இருபதுகளில் இருந்தபோது ஹிட்லரிடம் பணியாற்றியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், ஹிட்லர் ஒரு சைவப் பிரியர். அவரிடம் நான் பணிபுரிந்த காலத்தில் அவர் மாமிசம் சாப்பிட்டு நான் பார்த்ததில்லை. இங்கிலாந்துக்காரர்கள் தன்னை விஷம் வைத்து கொன்றுவிடுவார்களோ என்று அவர் அஞ்சினார். அதனால் அவர் சாப்பிடும் முன்பு அவரது உணவை சாப்பிட்டு விஷம் உள்ளதா என்பதை கண்டறிய 15 இளம் பெண்களை பணியமர்த்தி இருந்தார். அதில் நானும் ஒருத்தி. போர் காலத்தில் மக்கள் உணவுக்கு கஷ்டப்பட்ட நேரத்தில் நாங்கள் ஹிட்லருக்கு வழங்கப்படும் சுவையான உணவை ருசி பார்த்தோம். ஆனால் அதில் விஷம் இருக்குமோ என்ற பயத்திலேயே அதை ரசித்து சாப்பிட்டதில்லை. ஒவ்வொரு வேளையும் உணவை சாப்பிடுகையில் இது தான் நம் கடைசி உணவு என்று நினைப்போம். போர் மோசமடைந்ததையடுத்து நான் பெர்லினுக்கு சென்றுவிட்டேன். அதன் பிறகு என்னுடன் பணிபுரிந்த 14 பேரையும் ரஷ்ய படை சுட்டுக் கொன்று விட்டதாக கேள்விப்பட்டேன் என்றார்.
அல்குர்ஆனை இழிந்துரைத்தார்கள் என்று குற்றம் சுமத்தப்பட்டு பொதுபல சேனா மற்றும் ராவண பலய அமைப்புகளின் முக்கிய உறுப்பினர்கள் நால்வருக்கு எதிராக வெவ்வேறாக வழக்குரைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தேசிய ஐக்கிய முன்னணியின் பிரதம செயலாளர் அஸாத் ஸாலி குறிப்பிடுகிறார்.
அல்குர்ஆனின் போதனைகளை திரிபு படுத்துவது, திரிபுபடுத்தப்பட்ட தமது சுயகருத்துக்களை வெளியிடுதல், முஸ்லிம்கள் பற்றி சிங்களவர்களிடையே தப்பபிப்பிராயத்தை வளர்த்தல் முதலிய 6 குற்றச்சாட்டுக்களின் பேரில் பொதுபல சேனா, ராவண அமைப்புக்களின் செயலாளர் உட்பட நால்வருக்கு எதிராக அடுத்த வாரம் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அஸாத் ஸாலி குறிப்பிட்டுள்ளார்.
(கேஎப்)
அல்குர்ஆனின் போதனைகளை திரிபு படுத்துவது, திரிபுபடுத்தப்பட்ட தமது சுயகருத்துக்களை வெளியிடுதல், முஸ்லிம்கள் பற்றி சிங்களவர்களிடையே தப்பபிப்பிராயத்தை வளர்த்தல் முதலிய 6 குற்றச்சாட்டுக்களின் பேரில் பொதுபல சேனா, ராவண அமைப்புக்களின் செயலாளர் உட்பட நால்வருக்கு எதிராக அடுத்த வாரம் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அஸாத் ஸாலி குறிப்பிட்டுள்ளார்.
(கேஎப்)
குழந்தைகள் பிறக்கும்போதே சமூக விரோதிகளாக பிறப்பதில்லை. அவர்கள் வாழும் சூழலே அதற்கு வழிவகுக்கின்றது. சினிமா அதற்கு உறுதுணையாக அமைவதாக உளவியல் நிபுணர் டாக்டர் சிவதாஸ் தெரிவித்தார்.
மட்டக்களப்பில் 16 வயதான மாணவர்கள் தம் காதலை எதிர்த்த பெற்றோரை திட்டமிட்டுக் கொலை செய்த சம்பவம் அனைவரையும் திகிலடையச் செய்துள்ளதுடன் இதுபோன்று அண்மைக் காலமாக திட்டமிட்டுச் செய்யும் கொலைகள் அதிகரித்து வருகின்றன. இது தொடர்பில் டாக்டர் சிவதாஸை தொடர்பு கொண்டு கேட்டபோதே அவர் மேற்கண்ட கருத்தினை முன்வைத்தார்.
சினிமா இன்று மக்களின் வாழ்க்கையில் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. அதுவே உண்மை. சினிமாவை வாழ்க்கையென நினைக்கும் இளைஞர்கள் அதில் காட்சிபடுத்தப்படும் வன்முறைகளுக்கு அடிமையாகியுள்ளார்கள். இந்த வகையில் சிறு வயது முதலே இவர்கள் மனதில் வெறுப்பு விதைக்கப்படுகிறது. வன்முறைகளுக்கு முக்கியத்துவம் அதிகரிக்கப்படுவதுடன் உயிருக்கான மதிப்பினைக் குறைத்தே தற்போதைய சினிமாக்கள் படம் பிடித்துக் காட்டுக்கின்றன. ஆகையினால் பணம், காதல் என்பவற்றை பெற்றுக் கொள்ள உயிரை துச்சமென நினைத்துக் கொலை செய்ய இன்றைய இளைஞர்கள் துணிந்து விடுகிறார்கள்.
இந்நிலைமையை மாற்றியமைக்கும் வகையில் உயிர், உறவு, கல்வி ஆகியவற்றின் முக்கியத்துவங்கள் சிறு வயது முதலே உணர்த்தப்படுவது அவசியம் என குறிப்பிட்டார்.
மேலும் பிள்ளைகளுடனான பிணைப்பை அதிகரிக்கும் வகையில் பெற்றோர் பிள்ளைகளுடன் சிறந்த உறவு முறையை பேணுவதும் கூட எதிர்காலத்தில் இது போன்ற சமூக விரோதிகளை உருவாக்குவதனை தடுக்க வழிவகுக்குமென உளவியல் நிபுணர் டாக்டர் சிவதாஸ் கூறிப்பிட்டார்.
மட்டக்களப்பில் 16 வயதான மாணவர்கள் தம் காதலை எதிர்த்த பெற்றோரை திட்டமிட்டுக் கொலை செய்த சம்பவம் அனைவரையும் திகிலடையச் செய்துள்ளதுடன் இதுபோன்று அண்மைக் காலமாக திட்டமிட்டுச் செய்யும் கொலைகள் அதிகரித்து வருகின்றன. இது தொடர்பில் டாக்டர் சிவதாஸை தொடர்பு கொண்டு கேட்டபோதே அவர் மேற்கண்ட கருத்தினை முன்வைத்தார்.
சினிமா இன்று மக்களின் வாழ்க்கையில் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. அதுவே உண்மை. சினிமாவை வாழ்க்கையென நினைக்கும் இளைஞர்கள் அதில் காட்சிபடுத்தப்படும் வன்முறைகளுக்கு அடிமையாகியுள்ளார்கள். இந்த வகையில் சிறு வயது முதலே இவர்கள் மனதில் வெறுப்பு விதைக்கப்படுகிறது. வன்முறைகளுக்கு முக்கியத்துவம் அதிகரிக்கப்படுவதுடன் உயிருக்கான மதிப்பினைக் குறைத்தே தற்போதைய சினிமாக்கள் படம் பிடித்துக் காட்டுக்கின்றன. ஆகையினால் பணம், காதல் என்பவற்றை பெற்றுக் கொள்ள உயிரை துச்சமென நினைத்துக் கொலை செய்ய இன்றைய இளைஞர்கள் துணிந்து விடுகிறார்கள்.
இந்நிலைமையை மாற்றியமைக்கும் வகையில் உயிர், உறவு, கல்வி ஆகியவற்றின் முக்கியத்துவங்கள் சிறு வயது முதலே உணர்த்தப்படுவது அவசியம் என குறிப்பிட்டார்.
மேலும் பிள்ளைகளுடனான பிணைப்பை அதிகரிக்கும் வகையில் பெற்றோர் பிள்ளைகளுடன் சிறந்த உறவு முறையை பேணுவதும் கூட எதிர்காலத்தில் இது போன்ற சமூக விரோதிகளை உருவாக்குவதனை தடுக்க வழிவகுக்குமென உளவியல் நிபுணர் டாக்டர் சிவதாஸ் கூறிப்பிட்டார்.
மே தினம் முடிவுற்றதும் வட மாகாணத்தில் தேர்தலை எதிர்கொள்வது தொடர்பான நடவடிக்கைகளை ஆரம்பிக்கவுள்ளதாக ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் பொருளாளரும் அமைச்சருமான டளஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.
ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியானது தற்போது மே தினக் கொண்டாட்டங்களை சிறப்பாக நடத்துவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகத் தெரிவித்த அமைச்சர். ஓரிரு வாரங்களில் வேட்பு மனுக்கான விண்ணப்பங்களை கோரவுள்ளதாகவும் தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்பு மனுவில் வடக்கிலுள்ளோர் இணைத்துக் கொள்ளப்படுவதுடன் அதற்கென அவர்கள் விண்ணபிப்பதற்கு வாய்ப்பளிக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
வடமாகாண தேர்தல் தொடர்பில் ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் உபதலைவர் அமைச்சர் டபிள்யூ ஜோன் செனவிரத்ன தெரிவிக் கையில். வேட்பு மனுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டு நேர்முகப்பரீட்சை மூலம் பொருத்தமானோர் வேட்பாளர்களாகத் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் எனத் தெரிவித்தார்.
விண்ணப்பம் கோரலுக்கான விளம்பரங்கள் தேசிய பத்திரிகைகளில் பிரசுரிக்கப்படும் என தெரிவித்தார்.
ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியானது தற்போது மே தினக் கொண்டாட்டங்களை சிறப்பாக நடத்துவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகத் தெரிவித்த அமைச்சர். ஓரிரு வாரங்களில் வேட்பு மனுக்கான விண்ணப்பங்களை கோரவுள்ளதாகவும் தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்பு மனுவில் வடக்கிலுள்ளோர் இணைத்துக் கொள்ளப்படுவதுடன் அதற்கென அவர்கள் விண்ணபிப்பதற்கு வாய்ப்பளிக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
வடமாகாண தேர்தல் தொடர்பில் ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் உபதலைவர் அமைச்சர் டபிள்யூ ஜோன் செனவிரத்ன தெரிவிக் கையில். வேட்பு மனுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டு நேர்முகப்பரீட்சை மூலம் பொருத்தமானோர் வேட்பாளர்களாகத் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் எனத் தெரிவித்தார்.
விண்ணப்பம் கோரலுக்கான விளம்பரங்கள் தேசிய பத்திரிகைகளில் பிரசுரிக்கப்படும் என தெரிவித்தார்.
தன்னை அவமானப்படுத்தும் நோக்கிலும், அவதூறுக்கு உள்ளாக்கும் நோக்கிலும் நியு உதயன் பப்ளிகேசன் (பிறைவேட்) லிமிடட் கம்பனி தான் வெளியிடும் “உதயன்” பத்திரிகையின் மூலமாக பல தவறான செய்தி அறிக்கைகளை பிரசுரம் செய்துள்ளதென்றும், அத்தகைய மூன்று செய்திப் பிரசுரங்கள் தொடர்பாக மேற்படி கம்பனிக்கு எதிராக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் யாழ்ப்பாண மாவட்ட நீதிமன்றத்தில் மூன்று மானநட்டஈடு கோரும் வழக்குகளை ஏற்கனவே தாக்கல் செய்து, இவ்வழக்குகள் மூன்றும் தற்போது இந்நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வருகின்ற நிலையில், மேற்படி கம்பனிக்கு எதிராக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் மேலும் ஒரு வழக்கினை தனது சட்டத்தரணி செலஸ்ரீன் ஸ்ரனிஸ்லொஸ் மூலம் கடந்த வெள்ளிக்கிழமை தாக்கல் செய்துள்ளார்.
நியு உதயன் பப்ளிகேசன் (பிறைவேட்) லிமிடட் கம்பனியால் 2012 நவம்பர் மாதம் 07 ஆம் திகதி பிரசுரம் செய்து வெளியிடப்பட்டு பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்பட்ட உதயன் பத்திரிகையின் பிரதான செய்தியாக அதன் முன்பக்கத்தில் “தேடப்படும் குற்றவாளிகளான டக்ளஸ், கே.பி. ஆகியோரை தமிழர்களின் தலைவர்களாக்க அரசு முயற்சிப்பது ஏன்” ” நாடாளுமன்றத்தில் சுமந்திரன் எம்.பி. கேள்வி” எனும் தலைப்பின் கீழ் செய்தி ஒன்று பிரசுரிக்கப்பட்டிருந்தது.
மேற்கூறப்பட்ட செய்திப் பிரசுரத்தின் உள்ளடக்கமானது முற்றிலும் உண்மைக்குப் புறம்பானதுடன் பொய்யான விடயமெனவும், உண்மையான காரணங்களைக் கண்டறியாத வகையிலும், உறுதிப்படுத்தாத வகையிலும் தீய நோக்கத்துடன் செயற்பட்டு, மேற்படி கம்பனியானது இப்பிரசுரத்தைப் பிரசுரித்து விநியோகித்துள்ளது என்பதுடன் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் எம்.சுமந்திரன் அவர்கள் பாராளுமன்றத்தில் பேசியதாக தன்னை அவதூறுக்கு உள்ளாக்கும் பொய்யாகப் புனையப்பட்ட மேற்கூறப்பட்ட செய்திப் பிரசுரத்தை மேற்படி கம்பனியானது தனது உதயன் பத்திரிகையில் பிரசுரித்து அதனை பொதுமக்களுக்கு விநியோகித்து விற்பனை செய்துள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் இவ் வழக்கில் மேலும் தெரிவித்துள்ளார்.
மேற்படி கம்பனியால் செய்யப்பட்டுள்ள மேற்படி செய்திப் பிரசுரமானது அதனளவில் தன்னை அவதூறுக்கும், அவமானத்திற்கும் உள்ளாக்கும் பிரசுரமாகும் எனவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளார்.
ஐநூறு (500) மில்லியன் ரூபா பணத்தை இவ்வழக்குத் தொடுக்கப்பட்ட தினத்திலிருந்து தீர்ப்பளிக்கும் தினம் வரையிலான சட்டரீதியான வட்டியுடனும், அதன் பின்னர் தீர்ப்பளிக்கப்பட்ட தினத்திலிருந்து அத்தீர்ப்பில் குறிப்பிடப்படும் முழுத்தொகைக்கும் உரிய முழுப்பணமும் செலுத்தி முடியும் தினம் வரைக்கும் உரித்தான சட்டரீதியான வட்டியையும் எதிராளியிடமிருந்து அறவிட்டுத் தருமாறு கோரி அமைச்சர் இவ் வழக்கை தாக்கல் செய்துள்ளார்.
இவ் வழக்கினை ஏற்றுக் கொண்ட யாழ்ப்பாண மாவட்ட நீதிமன்றம் மே மாதம் 17 ஆம் திகதிக்கு எதிராளி கம்பனியை நீதிமன்றத்திற்கு ஆஜராகி இவ்வழக்கிற்கு பதிலிடுமாறு அழைப்பானை அனுப்ப உத்தரவிட்டுள்ளது.
நியு உதயன் பப்ளிகேசன் (பிறைவேட்) லிமிடட் கம்பனியால் 2012 நவம்பர் மாதம் 07 ஆம் திகதி பிரசுரம் செய்து வெளியிடப்பட்டு பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்பட்ட உதயன் பத்திரிகையின் பிரதான செய்தியாக அதன் முன்பக்கத்தில் “தேடப்படும் குற்றவாளிகளான டக்ளஸ், கே.பி. ஆகியோரை தமிழர்களின் தலைவர்களாக்க அரசு முயற்சிப்பது ஏன்” ” நாடாளுமன்றத்தில் சுமந்திரன் எம்.பி. கேள்வி” எனும் தலைப்பின் கீழ் செய்தி ஒன்று பிரசுரிக்கப்பட்டிருந்தது.
மேற்கூறப்பட்ட செய்திப் பிரசுரத்தின் உள்ளடக்கமானது முற்றிலும் உண்மைக்குப் புறம்பானதுடன் பொய்யான விடயமெனவும், உண்மையான காரணங்களைக் கண்டறியாத வகையிலும், உறுதிப்படுத்தாத வகையிலும் தீய நோக்கத்துடன் செயற்பட்டு, மேற்படி கம்பனியானது இப்பிரசுரத்தைப் பிரசுரித்து விநியோகித்துள்ளது என்பதுடன் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் எம்.சுமந்திரன் அவர்கள் பாராளுமன்றத்தில் பேசியதாக தன்னை அவதூறுக்கு உள்ளாக்கும் பொய்யாகப் புனையப்பட்ட மேற்கூறப்பட்ட செய்திப் பிரசுரத்தை மேற்படி கம்பனியானது தனது உதயன் பத்திரிகையில் பிரசுரித்து அதனை பொதுமக்களுக்கு விநியோகித்து விற்பனை செய்துள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் இவ் வழக்கில் மேலும் தெரிவித்துள்ளார்.
மேற்படி கம்பனியால் செய்யப்பட்டுள்ள மேற்படி செய்திப் பிரசுரமானது அதனளவில் தன்னை அவதூறுக்கும், அவமானத்திற்கும் உள்ளாக்கும் பிரசுரமாகும் எனவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளார்.
ஐநூறு (500) மில்லியன் ரூபா பணத்தை இவ்வழக்குத் தொடுக்கப்பட்ட தினத்திலிருந்து தீர்ப்பளிக்கும் தினம் வரையிலான சட்டரீதியான வட்டியுடனும், அதன் பின்னர் தீர்ப்பளிக்கப்பட்ட தினத்திலிருந்து அத்தீர்ப்பில் குறிப்பிடப்படும் முழுத்தொகைக்கும் உரிய முழுப்பணமும் செலுத்தி முடியும் தினம் வரைக்கும் உரித்தான சட்டரீதியான வட்டியையும் எதிராளியிடமிருந்து அறவிட்டுத் தருமாறு கோரி அமைச்சர் இவ் வழக்கை தாக்கல் செய்துள்ளார்.
இவ் வழக்கினை ஏற்றுக் கொண்ட யாழ்ப்பாண மாவட்ட நீதிமன்றம் மே மாதம் 17 ஆம் திகதிக்கு எதிராளி கம்பனியை நீதிமன்றத்திற்கு ஆஜராகி இவ்வழக்கிற்கு பதிலிடுமாறு அழைப்பானை அனுப்ப உத்தரவிட்டுள்ளது.
வொஷிங்டனின் இரகசிய உளவு விமானம் தொடர்பில் யெமன் மக்கள் அமெரிக்காவுக்கு எதிராக கிளர்ந்துள்ளனர். இதன் மூலம் அல்கைதா இயக்கம் சந்தோசப்படுகிறது. இந்த உளவு விமானக் கதையை மேலும் சோடித்து அல்கைதா இயக்கம், தமது இயக்கத்துக்கு ஆட்களை சேர்த்துவருகின்றது என வோஷிங்டன் செனட் சபைக்கு சாட்சியளித்த ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.யெமன் நாட்டின் எழுத்தாளர்களில் ஒருவரான பெரியர் அல் முஸ்லிமாயினுடைய வீட்டுக்கும் இந்த உளவு விமானம் தாக்குதல் நடாத்தியிருப்பதனால், அமெரிக்கா மீது தமக்குள்ள கோபத்தின் அளவை இவ்வளவுதான் என்று கூறமுடியாதுள்ளது எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும் இவ்வூருக்கு வீசப்பட்ட குண்டு மக்களிடையே பும் பீதியைக் கிளப்பியுள்ளது. விவசாயிகள் மிகவும் பயப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள் எனவும், அவர்களுக்காகத் தாமும் மிகவும் கவலைப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
தங்களைப் பீதிக்குள்ளாக்கி துன்புறச் செய்த்தற்கு நல்ல பாடம் பொஸ்டன் தாக்குதல் மூலம் அவர்களுக்குக் கிடைத்துள்ளது. தங்கள் நாட்டுக்கு எதிராகச் செயற்படுவதற்காக சிறந்த பாடம் அதன் மூலம் அவர்களுக்குக் கிடைத்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அமெரிக்கா அத்தாக்குதலில் அல்கைதா இயக்கத்தைச் சேர்ந்த தலைவர் ஒருவரும், படைவீர்ர்கள் நால்வரும் இறந்ததாக்க் குறிப்பிட்டபோதும், அவர்களை உயிருடன் பிடிப்பதற்கு அமெரிக்கா யெமன் அரசிடம் கேட்டிருந்தால் இலகுவாக அவர்களைக் கைதுசெய்து சிறைப்படுத்தியிருக்கலாம் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
2012 இல் ஒபாமா ஆட்சிக் காலத்தில் யெமனுக்கெதிரான தாக்குதல்கள் 46 இனை மேற்கொள்வதற்கு உடன்பாடு தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், புஷ்ஷின் ஆட்சிக் காலத்தில் தாக்குதல் ஒன்றை மட்டுமே நடாத்த உடன்பாடு தெரிவிக்கப்பட்டது என அமெரிக்க தேசிய பாதுகாப்புத் தொடர்பான அமைப்பின் பணிப்பாளர் நாயகம் பீட்டர் பாகேன் தெரிவித்துள்ளார்.
தங்களைப் பீதிக்குள்ளாக்கி துன்புறச் செய்த்தற்கு நல்ல பாடம் பொஸ்டன் தாக்குதல் மூலம் அவர்களுக்குக் கிடைத்துள்ளது. தங்கள் நாட்டுக்கு எதிராகச் செயற்படுவதற்காக சிறந்த பாடம் அதன் மூலம் அவர்களுக்குக் கிடைத்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அமெரிக்கா அத்தாக்குதலில் அல்கைதா இயக்கத்தைச் சேர்ந்த தலைவர் ஒருவரும், படைவீர்ர்கள் நால்வரும் இறந்ததாக்க் குறிப்பிட்டபோதும், அவர்களை உயிருடன் பிடிப்பதற்கு அமெரிக்கா யெமன் அரசிடம் கேட்டிருந்தால் இலகுவாக அவர்களைக் கைதுசெய்து சிறைப்படுத்தியிருக்கலாம் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
2012 இல் ஒபாமா ஆட்சிக் காலத்தில் யெமனுக்கெதிரான தாக்குதல்கள் 46 இனை மேற்கொள்வதற்கு உடன்பாடு தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், புஷ்ஷின் ஆட்சிக் காலத்தில் தாக்குதல் ஒன்றை மட்டுமே நடாத்த உடன்பாடு தெரிவிக்கப்பட்டது என அமெரிக்க தேசிய பாதுகாப்புத் தொடர்பான அமைப்பின் பணிப்பாளர் நாயகம் பீட்டர் பாகேன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் நெல்லை மாவட்டம் ஆலங்குளம் அருகேயுள்ள கிராமத்தை சேர்ந்த 3 வயது சிறுமி ஒருவரை 14 வயது சிறுவன் ஒருவன் பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தியுள்ளான். சம்பவத்துடன் தொடர்புடைய சிறுவனை கைது செய்து நெல்லையில் உள்ள சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் இன்று அடைத்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது, ஆலங்குளம் அருகே உள்ள ரெட்டியார் பட்டியை சேர்ந்த தொழிலாளி ஒருவரின் மகளான 3 வயது சிறுமி ஒருவர், நேற்று மாலை தனது வீட்டின் முன் விளையாடிக் கொண்டிருந்தாள்.
அங்கு முத்துராஜ் என்ற சிறுவன் அங்குள்ள பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வருகிறான். பள்ளி விடுமுறை என்பதால் குறித்த சிறுவன் மடடும் வீட்டில் தனியாக இருந்தான். அவனது பெற்றோர் வேலைக்குச் சென்று விட்டனர். அப்போது தெருவில் விளையாடிக் கொண்டிருந்த மூன்றரை வயது சிறுமியை 'என்னுடன் விளையாட வா' என வீட்டிற்கு அழைத்து வந்து பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.
தெருவில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமி திடீரென காணாமல் போனதையடுத்து அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் அவளை அக்கம்பக்கத்தில் தேடினர். அப்போது அவர்களது பக்கத்து வீடான முருகன் என்பவரின் வீட்டில் உள்ளே இருந்து சிறுமியின் அழுகுரல் கேட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள் வீட்டுக்குள் சென்று பார்த்தனர்.அப்போது அங்கு முருகனின் மகனான முத்துராஜ் (வயது 14), சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். அவனிடமிருந்து சிறுமியை மீட்டனர்.
இது குறித்து சிறுமியின் பெற்றோர் ஊத்துமலை பொலிஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பேரில் பொலிஸ் இன்ஸ்பெக்டர் சக்கரவர்த்தி வழக்குப்பதிந்து முத்துராஜை கைது செய்து நெல்லையில் உள்ள சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் இன்று அடைத்தனர்.
அங்கு முத்துராஜ் என்ற சிறுவன் அங்குள்ள பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வருகிறான். பள்ளி விடுமுறை என்பதால் குறித்த சிறுவன் மடடும் வீட்டில் தனியாக இருந்தான். அவனது பெற்றோர் வேலைக்குச் சென்று விட்டனர். அப்போது தெருவில் விளையாடிக் கொண்டிருந்த மூன்றரை வயது சிறுமியை 'என்னுடன் விளையாட வா' என வீட்டிற்கு அழைத்து வந்து பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.
தெருவில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமி திடீரென காணாமல் போனதையடுத்து அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் அவளை அக்கம்பக்கத்தில் தேடினர். அப்போது அவர்களது பக்கத்து வீடான முருகன் என்பவரின் வீட்டில் உள்ளே இருந்து சிறுமியின் அழுகுரல் கேட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள் வீட்டுக்குள் சென்று பார்த்தனர்.அப்போது அங்கு முருகனின் மகனான முத்துராஜ் (வயது 14), சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். அவனிடமிருந்து சிறுமியை மீட்டனர்.
இது குறித்து சிறுமியின் பெற்றோர் ஊத்துமலை பொலிஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பேரில் பொலிஸ் இன்ஸ்பெக்டர் சக்கரவர்த்தி வழக்குப்பதிந்து முத்துராஜை கைது செய்து நெல்லையில் உள்ள சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் இன்று அடைத்தனர்.
காலி, கரன்தெனிய பிரதேசத்திலுள்ள கொடவெல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வீடொன்றிலிருந்து மூன்று சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 39 வயது மதிக்கத்தக்க தாயொருவரினதும் அவரது 9 வயதான மகன் மற்றும் 7 வயதான மகளினதும் சடலங்களே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இது குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
சீனாவுக்கும், ஜப்பானுக்கும் இடையே ஓகிநாவா என்ற தீவு கூட்டம் உள்ளது. தற்போது இந்த தீவு ஜப்பானிடம் உள்ளது. இந்த தீவு தங்கள் நாட்டுக்கு சொந்மானது என்று சீனாவும் கூறுகிறது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையே மோதல் போக்கு நடந்து வருகிறது.
சீனா திடீரென இந்த தீவுகளை கைப்பற்றும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையே பதட்டம் நிலவி வந்தது. இதற்கிடையே பேச்சுவார்த்தைகளும் நடந்து வந்தன.
இந்நிலையில் சீனா 8 போர் கப்பல்களை தீவு அருகே அனுப்பி உள்ளது. அந்த கப்பல்கள் தீவு அருகே 12 நாட்டிக்கல் மைல் தூரத்தில் முகாமிட்டுள்ளன. இதற்கிடையே சீனா திடீரென போர் விமானங்களை அந்த பகுதிக்கு அனுப்பி வைத்தது. 40 விமானங்கள் அந்த தீவு கூட்டத்தின் வழியாக பறந்து சென்றன.
திடீரென போர் விமானங்களை சீனா அனுப்பி வைத்தது ஏன் என்று தெரியவில்லை. இது மீண்டும் அந்த பகுதியில் பதட்டத்தை ஏற்படுத்தி உள்ளது. போர் விமானங்கள் பறந்ததையடுத்து ஜப்பானும் உஷார் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
சீனா திடீரென இந்த தீவுகளை கைப்பற்றும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையே பதட்டம் நிலவி வந்தது. இதற்கிடையே பேச்சுவார்த்தைகளும் நடந்து வந்தன.
இந்நிலையில் சீனா 8 போர் கப்பல்களை தீவு அருகே அனுப்பி உள்ளது. அந்த கப்பல்கள் தீவு அருகே 12 நாட்டிக்கல் மைல் தூரத்தில் முகாமிட்டுள்ளன. இதற்கிடையே சீனா திடீரென போர் விமானங்களை அந்த பகுதிக்கு அனுப்பி வைத்தது. 40 விமானங்கள் அந்த தீவு கூட்டத்தின் வழியாக பறந்து சென்றன.
திடீரென போர் விமானங்களை சீனா அனுப்பி வைத்தது ஏன் என்று தெரியவில்லை. இது மீண்டும் அந்த பகுதியில் பதட்டத்தை ஏற்படுத்தி உள்ளது. போர் விமானங்கள் பறந்ததையடுத்து ஜப்பானும் உஷார் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
தமிழர் விடுதலைக் கூட்டணி, ஈ.பி.ஆர்.எல்.எப், புளோட் மற்றும் டெலோ ஆகிய நான்கு கட்சிகளும் இணைந்து 'தமிழ் தேசியக் கூட்டமைப்பு' என்ற பெயரில் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை ஏற்படுத்தி அதன் அடிப்படையில் ஒரு முன்னணிக் கட்சியாக பதிவுசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என டெலோ மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
தமிழ் தேசியக் கூட்டமைப்பை பதிவு செய்யும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படாவிடின் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட வேண்டும் என்று மேற்படி மாநாட்டில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
நேற்று சனிக்கிழமை மாலை திருகோணமலையில் நடைபெற்ற தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (டெலோ) மாநாட்டின் போதே இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தலைமையில் நடைபெற்ற இந்த மத்திய குழு கூட்டத்தில் கட்சியின் மத்திய குழு உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டனர்.
இங்கு இடம்பெற்ற கூட்டத்தினைத் தொடர்ந்து மத்திய குழுவினால் தீர்மானிக்கப்பட்ட விடயங்கள் வெளியிடப்பட்டன. அத்தீர்மானங்கள் பின்வருமாறு,
• தமிழ் மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றுவதற்காக உழைக்கக்கூடிய அரசியல் கட்சிகள், தமிழ் தேசிய கூட்டமைப்பு என்ற பெயரில் இயங்கி வந்தாலும் இலங்கை தேர்தல் திணைக்களத்தில் ஒரு அரசியல் முன்னணியாகவோ தனி அரசியல் கட்சியாகவோ பதிவு செய்யப்படவில்லை.
• பதிவு செய்வதற்கான இழுபறி நிலைகளை நீக்குவதற்கு மன்னார் இராஜப்பு ஜோசப் ஆண்டகை தலைமையிலான புத்திஜீவிகள், சிவில் சமூகம் எடுக்கும் முயற்சிகளுக்கு பூரண ஆதரவை வழங்குவது எனவும் இலங்கை தமிழரசுக் கட்சியுடன் தமிழ் ஈழ விடுதலை இயக்கம் நேரடி பேச்சுவார்த்தைகளை நடத்தி சுமுக நிலைகளை எட்டுவதற்காக முழு முயற்சிகளை எடுக்க வேண்டும்.
• ஏனைய கட்சிகளான தமிழர் விடுதலைக் கூட்டணி, ஈ.பி.ஆர்.எல்.எப், புளோட் ஆகிய கட்சிகளுடன் ஒற்றுமையை பலப்படுத்த முழு முயற்சிகள் இரு வாரங்களுக்குள் எடுக்கப்பட வேண்டும்.
• இந்த முயற்சிகள் வெற்றிபெறமுடியாத சூழ்நிலையேற்படுமிடத்து இதுவரை இணக்கம் கண்டுள்ள தமிழர் விடுதலைக் கூட்டணி, ஈ.பி.ஆர்.எல்.எப், புளோட், டெலோ ஆகிய நான்கு கட்சிகளும் இணைந்து தமிழ் தேசிய கூட்டமைப்பு என்ற பெயரில் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில் விரைவில் ஒரு முன்னணியாக, தனி அரசியல் கட்சியாக பதிவு செய்யப்பட வேண்டும்.
• தமிழ் தேசிய கூட்டமைப்பு பதிவு செய்யப்பட்டதன் பின்னர் இதில் சேர விரும்பும் தமிழ் மக்களின் அபிலாஷைகளை வெளிப்படுத்தக்கூடிய ஏனைய கட்சிகளையும் இணைத்து தமிழர்களின் அபிலாஷைகளை நிறைவேற்றும் தீர்வொன்றை வென்றெடுக்க வேண்டும்' என்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தமிழ் தேசியக் கூட்டமைப்பை பதிவு செய்யும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படாவிடின் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட வேண்டும் என்று மேற்படி மாநாட்டில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
நேற்று சனிக்கிழமை மாலை திருகோணமலையில் நடைபெற்ற தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (டெலோ) மாநாட்டின் போதே இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தலைமையில் நடைபெற்ற இந்த மத்திய குழு கூட்டத்தில் கட்சியின் மத்திய குழு உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டனர்.
இங்கு இடம்பெற்ற கூட்டத்தினைத் தொடர்ந்து மத்திய குழுவினால் தீர்மானிக்கப்பட்ட விடயங்கள் வெளியிடப்பட்டன. அத்தீர்மானங்கள் பின்வருமாறு,
• தமிழ் மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றுவதற்காக உழைக்கக்கூடிய அரசியல் கட்சிகள், தமிழ் தேசிய கூட்டமைப்பு என்ற பெயரில் இயங்கி வந்தாலும் இலங்கை தேர்தல் திணைக்களத்தில் ஒரு அரசியல் முன்னணியாகவோ தனி அரசியல் கட்சியாகவோ பதிவு செய்யப்படவில்லை.
• பதிவு செய்வதற்கான இழுபறி நிலைகளை நீக்குவதற்கு மன்னார் இராஜப்பு ஜோசப் ஆண்டகை தலைமையிலான புத்திஜீவிகள், சிவில் சமூகம் எடுக்கும் முயற்சிகளுக்கு பூரண ஆதரவை வழங்குவது எனவும் இலங்கை தமிழரசுக் கட்சியுடன் தமிழ் ஈழ விடுதலை இயக்கம் நேரடி பேச்சுவார்த்தைகளை நடத்தி சுமுக நிலைகளை எட்டுவதற்காக முழு முயற்சிகளை எடுக்க வேண்டும்.
• ஏனைய கட்சிகளான தமிழர் விடுதலைக் கூட்டணி, ஈ.பி.ஆர்.எல்.எப், புளோட் ஆகிய கட்சிகளுடன் ஒற்றுமையை பலப்படுத்த முழு முயற்சிகள் இரு வாரங்களுக்குள் எடுக்கப்பட வேண்டும்.
• இந்த முயற்சிகள் வெற்றிபெறமுடியாத சூழ்நிலையேற்படுமிடத்து இதுவரை இணக்கம் கண்டுள்ள தமிழர் விடுதலைக் கூட்டணி, ஈ.பி.ஆர்.எல்.எப், புளோட், டெலோ ஆகிய நான்கு கட்சிகளும் இணைந்து தமிழ் தேசிய கூட்டமைப்பு என்ற பெயரில் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில் விரைவில் ஒரு முன்னணியாக, தனி அரசியல் கட்சியாக பதிவு செய்யப்பட வேண்டும்.
• தமிழ் தேசிய கூட்டமைப்பு பதிவு செய்யப்பட்டதன் பின்னர் இதில் சேர விரும்பும் தமிழ் மக்களின் அபிலாஷைகளை வெளிப்படுத்தக்கூடிய ஏனைய கட்சிகளையும் இணைத்து தமிழர்களின் அபிலாஷைகளை நிறைவேற்றும் தீர்வொன்றை வென்றெடுக்க வேண்டும்' என்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
1. 1983 இல் தமிழ் மக்களின் இதய பூமியாக விளங்கிய மணலாறு பிரதேச மக்களை விரட்டியடித்து சிங்கள குடியேற்றங்களை உருவாக்கியது யார்?
2. அம்பாறையில் சேனநாயக்க சமுத்திரத்தினை உருவாக்கி, கல்லோயா என்ற சிங்கள குடியேற்றத்தினை உருவாக்கியது யார்?
3. திருமலையில் கிளிவெட்டி, சம்பூர், சேருவில தமிழ் மக்களை நடுத்தெருவிற்கு வர திட்டம் தீட்டியவர்கள் யார்?
4. தமிழ் பிரதேசம் எங்கும் வலி.வடக்கு உட்பட அதியுயர் பாதுகாப்பு வலயங்களை உருவாக்கி, தமிழ் மக்களை உள்ளுர் அகதிகள் ஆக்கியவர்கள் யார்?
5. 1990ஆம் ஆண்டு வெற்றியின் விளிம்பில்இருந்த தமிழ் இனத்தை இந்தியாவுக்கு விரோதமாக தூண்டிவிட்டு, இந்திய தீர்வுத்திட்டத்தை குழப்பி, விடுதலைப் புலிகளிடம் கபட நாடகம் ஆடியவர்கள் யார்?
6. நிராயுதபாணிகளான தமிழ் மக்களிடம் 'போர் என்றால் போர், சமாதானம் என்றால் சமாதானம்' என்று போர் முழக்கம் செய்தவர்கள் யார்?
7. தமிழ் மக்களின் பாரம்பரிய சொத்தாக, உலக மக்களின் அறிவு கருவூலமாக இருந்த, ஆசியாவிலே பெரிய நூலகமான யாழ் நூலகத்தை எரித்தவர்கள் யார்?
8. சன்னிதியானின் தேரை எரித்து சாம்பலாக்கியது யார்?
9. மகாவலி நீரை வடக்கே வரவிட்டால் தமிழர்கள் விவசாயத்தில் முன்னேறி விடுவார்கள் என்ற வஞ்சக நோக்குடன் மகாவலி திட்டத்தினை வடக்கிற்குள் செல்லவிடாமல் தடுத்தவர்கள் யார்?
10. விடுதலைப்புலிகளை சமாதான வலையில் விழச்செய்து, தமிழரின் இராணுவ பலத்தை சூறையாடியவர்கள் யார்?
இத்தனையும் போதுமா? இல்லை நான் இன்னும் சொல்ல வேண்டுமா?
ஐக்கிய தேசிய கட்சியானது தமிழர்களை பொறுத்தவரை ஒரு சதிகார கட்சி, தமிழர்களின் நிலங்களைப் பறித்து, தமிழர்களின் வாழ்வுரிமைகளைப் பறித்து, தமிழர்களின் கலாச்சாரத்தினை அழித்து, தமிழர்களின் பூர்வீக வாழ்விடங்களை பறித்தது மட்டுமல்ல, சமாதானம் என்ற பொறிக்குள் தமிழ் மக்களின் போரட்டத்தினை தள்ளி, தமிழ் மக்களின் இராணுவ பலத்தை சிதைத்த கட்சியாகும். எனவே ஐக்கிய தேசியக் கட்சியையும், ரணில் விக்கிரமசிங்கவையும் தமிழர்கள் ஒருபோதும் நம்பமாட்டார்கள்.
இந்திய இராணுவத்துடன் இணைந்து பல்வேறு தமிழ் இளைஞர்களை படுகொலை செய்த, தமிழ் இளைஞர்களை சித்திரவதை செய்த, மண்டையன் குழுத்தலைவன் சுரேஷ்பிரேமச்சந்திரன் எதற்காக ரணிலுடன் இரகசியச் சந்திப்பு செய்திருக்கிறார்?
மீண்டும் தமிழ் இளைஞர்களை அழிவிற்குள் தள்ளவா? அவர்களுக்கு மீண்டும் புதைகுழி தோண்டவா? நீங்கள் புல்லுக்குளத்திற்குள் தமிழ் இளைஞர்களை புதைத்து விட்டு அசோகா கோட்டலுக்குள் உல்லாசமாக இருந்ததை மறந்து போவதற்கு யாழ்ப்பாணத் தமிழன் என்ன மடையனா?
சுரேஷ் ஐயா நீங்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளராக அச்சுவேலிக்கு தேல்தல் பிரச்சாரத்திற்கு சென்ற வேளை என்ன நடந்தது என்பதனை தாங்கள் மறக்கக்கூடாது. அப்போது புலிகள் இருந்ததால் உங்களை மக்களிடமிருந்து காப்பாற்ற முடிந்தது. இப்போது அது நடக்காது.
இந்திய அமைதி காக்கும் படையுடன் இணைந்து விடுதலைப் போராட்டத்தினை அழிப்பதற்காக நீங்கள் நடத்திய கோப்பாய், அச்சுவேலி வதை முகாம்களை தமிழ் மக்கள் என்றுமே மறக்கமாட்டார்கள்.
நரி வடைக்கு ஆசைப்படலாம், நரியும், காகமும் சேர்ந்து தயிர்வடைக்கும், தக்காளி சட்னிக்கும் ஆசைப்படுவது போல் உள்ளது உங்களின் வடமாகாண ஆட்சிக்கனவு.
உங்கள் கனவை தமிழ் மக்கள் நிச்சயம் கலைப்பார்கள்.
இவ்வண்ணம்
வி.சகாதேவன்
தலைவர்
போரால் பாதிக்கப்பட்ட மக்கள் இயக்கம்
2. அம்பாறையில் சேனநாயக்க சமுத்திரத்தினை உருவாக்கி, கல்லோயா என்ற சிங்கள குடியேற்றத்தினை உருவாக்கியது யார்?
3. திருமலையில் கிளிவெட்டி, சம்பூர், சேருவில தமிழ் மக்களை நடுத்தெருவிற்கு வர திட்டம் தீட்டியவர்கள் யார்?
4. தமிழ் பிரதேசம் எங்கும் வலி.வடக்கு உட்பட அதியுயர் பாதுகாப்பு வலயங்களை உருவாக்கி, தமிழ் மக்களை உள்ளுர் அகதிகள் ஆக்கியவர்கள் யார்?
5. 1990ஆம் ஆண்டு வெற்றியின் விளிம்பில்இருந்த தமிழ் இனத்தை இந்தியாவுக்கு விரோதமாக தூண்டிவிட்டு, இந்திய தீர்வுத்திட்டத்தை குழப்பி, விடுதலைப் புலிகளிடம் கபட நாடகம் ஆடியவர்கள் யார்?
6. நிராயுதபாணிகளான தமிழ் மக்களிடம் 'போர் என்றால் போர், சமாதானம் என்றால் சமாதானம்' என்று போர் முழக்கம் செய்தவர்கள் யார்?
7. தமிழ் மக்களின் பாரம்பரிய சொத்தாக, உலக மக்களின் அறிவு கருவூலமாக இருந்த, ஆசியாவிலே பெரிய நூலகமான யாழ் நூலகத்தை எரித்தவர்கள் யார்?
8. சன்னிதியானின் தேரை எரித்து சாம்பலாக்கியது யார்?
9. மகாவலி நீரை வடக்கே வரவிட்டால் தமிழர்கள் விவசாயத்தில் முன்னேறி விடுவார்கள் என்ற வஞ்சக நோக்குடன் மகாவலி திட்டத்தினை வடக்கிற்குள் செல்லவிடாமல் தடுத்தவர்கள் யார்?
10. விடுதலைப்புலிகளை சமாதான வலையில் விழச்செய்து, தமிழரின் இராணுவ பலத்தை சூறையாடியவர்கள் யார்?
இத்தனையும் போதுமா? இல்லை நான் இன்னும் சொல்ல வேண்டுமா?
ஐக்கிய தேசிய கட்சியானது தமிழர்களை பொறுத்தவரை ஒரு சதிகார கட்சி, தமிழர்களின் நிலங்களைப் பறித்து, தமிழர்களின் வாழ்வுரிமைகளைப் பறித்து, தமிழர்களின் கலாச்சாரத்தினை அழித்து, தமிழர்களின் பூர்வீக வாழ்விடங்களை பறித்தது மட்டுமல்ல, சமாதானம் என்ற பொறிக்குள் தமிழ் மக்களின் போரட்டத்தினை தள்ளி, தமிழ் மக்களின் இராணுவ பலத்தை சிதைத்த கட்சியாகும். எனவே ஐக்கிய தேசியக் கட்சியையும், ரணில் விக்கிரமசிங்கவையும் தமிழர்கள் ஒருபோதும் நம்பமாட்டார்கள்.
இந்திய இராணுவத்துடன் இணைந்து பல்வேறு தமிழ் இளைஞர்களை படுகொலை செய்த, தமிழ் இளைஞர்களை சித்திரவதை செய்த, மண்டையன் குழுத்தலைவன் சுரேஷ்பிரேமச்சந்திரன் எதற்காக ரணிலுடன் இரகசியச் சந்திப்பு செய்திருக்கிறார்?
மீண்டும் தமிழ் இளைஞர்களை அழிவிற்குள் தள்ளவா? அவர்களுக்கு மீண்டும் புதைகுழி தோண்டவா? நீங்கள் புல்லுக்குளத்திற்குள் தமிழ் இளைஞர்களை புதைத்து விட்டு அசோகா கோட்டலுக்குள் உல்லாசமாக இருந்ததை மறந்து போவதற்கு யாழ்ப்பாணத் தமிழன் என்ன மடையனா?
சுரேஷ் ஐயா நீங்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளராக அச்சுவேலிக்கு தேல்தல் பிரச்சாரத்திற்கு சென்ற வேளை என்ன நடந்தது என்பதனை தாங்கள் மறக்கக்கூடாது. அப்போது புலிகள் இருந்ததால் உங்களை மக்களிடமிருந்து காப்பாற்ற முடிந்தது. இப்போது அது நடக்காது.
இந்திய அமைதி காக்கும் படையுடன் இணைந்து விடுதலைப் போராட்டத்தினை அழிப்பதற்காக நீங்கள் நடத்திய கோப்பாய், அச்சுவேலி வதை முகாம்களை தமிழ் மக்கள் என்றுமே மறக்கமாட்டார்கள்.
நரி வடைக்கு ஆசைப்படலாம், நரியும், காகமும் சேர்ந்து தயிர்வடைக்கும், தக்காளி சட்னிக்கும் ஆசைப்படுவது போல் உள்ளது உங்களின் வடமாகாண ஆட்சிக்கனவு.
உங்கள் கனவை தமிழ் மக்கள் நிச்சயம் கலைப்பார்கள்.
இவ்வண்ணம்
வி.சகாதேவன்
தலைவர்
போரால் பாதிக்கப்பட்ட மக்கள் இயக்கம்
ஆப்கானிஸ்தானில் தலிபான்களை அடக்க நேட்டோ படையின் அனைத்து நாடுகளையும் நேர்ந்த சுமார் 1 லட்சம் வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். இன்நிலையில் தலிபான்கள் பதுங்கியுள்ளதாக கருதப்படும் மலைக்குகைகளில் விமானம் மூலம் நேட்டோ படையினர் தாக்குதல்களை மேற்கெண்டு வருகின்றனர். இவ்வாறு தேடுதல் வேட்டையில் ஈடுபடும் விமானங்களில் சிலவற்றை தலிபான்கள் பீரங்கி மூலம் சுட்டு வீழ்த்தியுள்ளனர்.
இந்நிலையில், நேற்று தெற்கு ஆப்கானிஸ்தான் பகுதியில் பறந்து சென்ற நேட்டோ விமானம் கீழே விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் 4 வீரர்கள் சம்பவ இடத்திலேயே பலியாகினர். பலியானவர்கள் எந்த நாட்டைச் சேர்ந்த வீரர்கள்? என்ற தகவல் ஏதும் வெளியிடப்படவில்லை.
இந்த சம்பவம் நடந்த இடத்தில் எதிரிகள் நடமாட்டம் ஏதுமில்லை. இது, தற்செயலாக நடந்த விபத்து தான் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில், நேற்று தெற்கு ஆப்கானிஸ்தான் பகுதியில் பறந்து சென்ற நேட்டோ விமானம் கீழே விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் 4 வீரர்கள் சம்பவ இடத்திலேயே பலியாகினர். பலியானவர்கள் எந்த நாட்டைச் சேர்ந்த வீரர்கள்? என்ற தகவல் ஏதும் வெளியிடப்படவில்லை.
இந்த சம்பவம் நடந்த இடத்தில் எதிரிகள் நடமாட்டம் ஏதுமில்லை. இது, தற்செயலாக நடந்த விபத்து தான் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
நேற்று முன்தினம் இலண்டனில் இடம்பெற்ற மரதன் ஓட்டப்போட்டியில் 35,000 இற்கும் அதிகமான போட்டியாளர்கள் கலந்துகொண்டனர். அவர்களுள் 14 ஆவது இடத்தைப் பெற்று, அதிதிறமையைக் காட்டிய அநுராத இந்திரஜித் குரேவுக்கு இலண்டனிலுள்ள இலங்கையர்கள் மலர்ச் செண்டு கையளித்துப்பாராட்டியுள்ளனர்.
2012 இல் இலண்டனில் இடம்பெற்ற ஒலிம்பிக் போட்டியிலும் இலங்கை சார்பாக கலந்துகொண்ட அநுராத, இம்முறை இலண்டனில் இடம்பெற்ற மரதன் ஓட்டப்போட்டிக்கு, அவர் பயிற்சிபெறுகின்ற பகிங்ஹோம் பிராந்தியத்தில் உள்ள ’வேல் ஒப் எயல்ஸ்பரி’ விளையாட்டுக் கழகத்தை பிரதிநிதித்துவப்படுத்தியே கலந்துகொண்டுள்ளார்.
அநுராதவின் பிரித்தானியப் பயிற்றுவிப்பாளர் நிக் டெய்லர் குறிப்பிடும்போது,
‘அநுராத பயிற்சியளிக்கப்படுவது பிரத்தானியாவினுள் இடம்பெறும் அரச மட்டப்போட்டிகளில் கலந்துகொள்வதற்காக மட்டுமே! இலங்கையில் பொறுப்புச்சொல்ல வேண்டியவர்கள் அநுராதவுக்குச் சிறந்த முறையில் கைகொடுத்தால் மிகச் சிறந்த பெறுபேற்றை அவரிடமிருந்து எதிர்பார்க்கலாம்.
இவ்வாண்டு ஆகஸ்ற்றில் மொஸ்கவ் நகரில் நடைபெறவுள்ள உலக மட்ட விளையாட்டுப் போட்டியிலும், 2014 ஆம் ஆண்டு ஸ்கொட்லாந்தில் நடைபெறவுள்ள போட்டியிலும், நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டியிலும் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தவுள்ளதனால், இலங்கையிலுள்ள விளையாட்டுக்குப் பொறுப்பானவர்கள் தமக்கு உதவுவார்கள் எனப் பெரிதும் தான் நம்பிக்கைகொண்டிருப்பதாக, போட்டியின் இறுதியில் அநுராத தெரிவித்துள்ளார்.
(படங்கள்: ஜனக அலகப்பெரும/ நிக்டெய்லர்)
2012 இல் இலண்டனில் இடம்பெற்ற ஒலிம்பிக் போட்டியிலும் இலங்கை சார்பாக கலந்துகொண்ட அநுராத, இம்முறை இலண்டனில் இடம்பெற்ற மரதன் ஓட்டப்போட்டிக்கு, அவர் பயிற்சிபெறுகின்ற பகிங்ஹோம் பிராந்தியத்தில் உள்ள ’வேல் ஒப் எயல்ஸ்பரி’ விளையாட்டுக் கழகத்தை பிரதிநிதித்துவப்படுத்தியே கலந்துகொண்டுள்ளார்.
அநுராதவின் பிரித்தானியப் பயிற்றுவிப்பாளர் நிக் டெய்லர் குறிப்பிடும்போது,
‘அநுராத பயிற்சியளிக்கப்படுவது பிரத்தானியாவினுள் இடம்பெறும் அரச மட்டப்போட்டிகளில் கலந்துகொள்வதற்காக மட்டுமே! இலங்கையில் பொறுப்புச்சொல்ல வேண்டியவர்கள் அநுராதவுக்குச் சிறந்த முறையில் கைகொடுத்தால் மிகச் சிறந்த பெறுபேற்றை அவரிடமிருந்து எதிர்பார்க்கலாம்.
இவ்வாண்டு ஆகஸ்ற்றில் மொஸ்கவ் நகரில் நடைபெறவுள்ள உலக மட்ட விளையாட்டுப் போட்டியிலும், 2014 ஆம் ஆண்டு ஸ்கொட்லாந்தில் நடைபெறவுள்ள போட்டியிலும், நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டியிலும் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தவுள்ளதனால், இலங்கையிலுள்ள விளையாட்டுக்குப் பொறுப்பானவர்கள் தமக்கு உதவுவார்கள் எனப் பெரிதும் தான் நம்பிக்கைகொண்டிருப்பதாக, போட்டியின் இறுதியில் அநுராத தெரிவித்துள்ளார்.
(படங்கள்: ஜனக அலகப்பெரும/ நிக்டெய்லர்)