வெகு சிறப்பாக நடந்தேறிய 'வடக்கே போகும் மெயில்' சிறுகதை நூல் வெளியீட்டு விழா (படங்கள் இணைப்பு)

மூத்த ஊடகவியலாளர் வி.தேவராஜ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், நூலின் முதற் பிரதியை புரவலர் ஹாசிம் உமர் பெற்றுகொண்டார்.
நூலின் அறிமுகம் மற்றும் வாழ்த்துரையை பேராசிரியர் மா.கருணாநிதி வழங்கினார். கருத்துரைகளை பிரபல தமிழ் - ஆங்கில பத்தி எழுத்தாளர் கே.எஸ்.சிவகுமாரன், ஏ.ஆர்.வி.வாமலோஜன் இருவரும் ஏற்புரையை சூரன்.ஏ.ரவிவர்மாவும் வழங்கினர். ராஜ ஸ்ரீகாந்தன் நினைவுரையை பிரபல எழுத்தாளர் மேமன் கவி நிகழ்த்தினார்.
இந்நிகழ்வில், கலைஞர்கள் ஆர்வலர்கள் என பெருந்திரளானோர் கலந்துகொண்டனர்.
(பி.எம்.எம்.ஏ.காதர்)











0 comments
Write Down Your Responses