”என்னுடைய தேவைக்காக நான் யாரையும் காட்டிக் கொடுப்பன் யாரும் என்னை கேட்க முடியாது”
தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்பான சில நுண்ணிய தகவல்களை தமக்கு தெரிவித்து வருபவர் சம்பந்தன் ஐயா தான் என, அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளதாக ஆதாரபூர்வமான தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது. 2004ம் ஆண்டு ஜூன் மாதம் , அமெரிக்க விசாவுக்கு விண்ணப்பித்துள்ளார் சம்பந்தர். ஆனால் அமெரிக்காவில் உள்ள அதிகாரிகள் அவருக்கு விசா தர மறுத்துள்ளார்கள். இதற்கான காரணம் என்னவென்றால், சம்பந்தன் ஐயா ஒரு விடுதலைப் புலிகளின் அபிமானி என்பதனால் என்று கூறப்பட்டுள்ளது.
இதனையடுத்து தனக்கு தெரிந்த நபர் ஒருவர் ஊடாக சம்பந்தர் கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்தை அணுகியுள்ளார். இதனையடுத்து, கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் ஜூன் மாதம் 10ம் திகதி, தமது தலைமைக்கு பாதுகாப்பான கேபில் மூலமாக ஒரு செய்தியை அனுப்புயுள்ளது.
டபுள் 00 என்று குறியிடப்பட்டுள்ள இந்த இரகசியத் தகவலை, விக்கி லீக்ஸ் கைப்பற்றி தற்போது வெளியிட்டுள்ளது. விக்கி லீக்ஸ் தரவுகள் இணையத்தில் இருந்து இச் செய்தியைப் பெற்று வெளியிடுகிறது.
இந்த இரகசியத் தகவலில், கொழும்பில் உள்ள அமெரிக்க தூதுவர் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார். தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் எமக்கு அவ்வப்போது, விடுதலைப் புலிகளின் நிலைப்பாடு குறித்து தகவல்களை வழங்கிவந்துள்ளார்.
விடுதலைப் புலிகளின் உள்வீட்டு தகவல்கள் பலவற்றை நாம் பெற்றுக்கொள்ள சம்பந்தனே காரணமாக அமைந்துள்ளார். சமாதான கால கட்டத்தில் இவை முக்கியமானவை. என கொழும்பில் உள்ள அமெரிக்க தூதுவர் தனது இரகசிய தகவலில் குறிப்பிட்டுள்ளார். (விக்கி லீக்ஸ் ஆதாரங்கள் இணைப்பு)
தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்பான சில நுண்ணிய தகவல்களை தமக்கு தெரிவித்து வருபவர் சம்பந்தன் ஐயா தான் என, அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளதாக ஆதாரபூர்வமான தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது. 2004ம் ஆண்டு ஜூன் மாதம் , அமெரிக்க விசாவுக்கு விண்ணப்பித்துள்ளார் சம்பந்தர். ஆனால் அமெரிக்காவில் உள்ள அதிகாரிகள் அவருக்கு விசா தர மறுத்துள்ளார்கள். இதற்கான காரணம் என்னவென்றால், சம்பந்தன் ஐயா ஒரு விடுதலைப் புலிகளின் அபிமானி என்பதனால் என்று கூறப்பட்டுள்ளது.
இதனையடுத்து தனக்கு தெரிந்த நபர் ஒருவர் ஊடாக சம்பந்தர் கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்தை அணுகியுள்ளார். இதனையடுத்து, கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் ஜூன் மாதம் 10ம் திகதி, தமது தலைமைக்கு பாதுகாப்பான கேபில் மூலமாக ஒரு செய்தியை அனுப்புயுள்ளது.
டபுள் 00 என்று குறியிடப்பட்டுள்ள இந்த இரகசியத் தகவலை, விக்கி லீக்ஸ் கைப்பற்றி தற்போது வெளியிட்டுள்ளது. விக்கி லீக்ஸ் தரவுகள் இணையத்தில் இருந்து இச் செய்தியைப் பெற்று வெளியிடுகிறது.
இந்த இரகசியத் தகவலில், கொழும்பில் உள்ள அமெரிக்க தூதுவர் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார். தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் எமக்கு அவ்வப்போது, விடுதலைப் புலிகளின் நிலைப்பாடு குறித்து தகவல்களை வழங்கிவந்துள்ளார்.
விடுதலைப் புலிகளின் உள்வீட்டு தகவல்கள் பலவற்றை நாம் பெற்றுக்கொள்ள சம்பந்தனே காரணமாக அமைந்துள்ளார். சமாதான கால கட்டத்தில் இவை முக்கியமானவை. என கொழும்பில் உள்ள அமெரிக்க தூதுவர் தனது இரகசிய தகவலில் குறிப்பிட்டுள்ளார். (விக்கி லீக்ஸ் ஆதாரங்கள் இணைப்பு)
மொனராகலை, படல்கும்புர பிரதேச செயலகத்தின் செயலாளர் பாலியல் லஞ்சம் பெற முயற்சித்த போது கைது செய்யப்பட்டதாக லஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
படல்கும்புர, புத்தல வீதியில் வசிக்கும் பெண் ஒருவர் தனக்கு இருப்பதற்கு காணி இல்லை என கேட்டு பிரதேச செயலாளரிடம் போய் பேசியுள்ளார் இதனை கேட்ட பிரதேச செயலாளர் அந்த பெண்ணிடம் உம்முடைய பெயருக்கு அரச காணி. ஒன்றை பதிவு செய்து தருவதாகவும் ஆனால் இவ்வாறு ஒரு காணியை உமக்கு வழங்க வேண்டுமாயின் நீர் என்னோடு உறவு கொள்ள வேண்டும் என பிரதேச செயலாளர் கேட்டுக் கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி பதுள்ளை துன்ஹிந்த பிரதேச ஹோட்டல் ஒன்றிற்கு பெண்ணை அழைத்துச் சென்று பாலியல் லஞ்சத்தை பெற்றுக் கொள்ள முயற்சித்த
வேளை பிரதேச செயலாளர் கைது செய்யப்பட்டதாக லஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு பிரிவினர் தெரிவித்தனர்.
படல்கும்புர, புத்தல வீதியில் வசிக்கும் பெண் ஒருவர் தனக்கு இருப்பதற்கு காணி இல்லை என கேட்டு பிரதேச செயலாளரிடம் போய் பேசியுள்ளார் இதனை கேட்ட பிரதேச செயலாளர் அந்த பெண்ணிடம் உம்முடைய பெயருக்கு அரச காணி. ஒன்றை பதிவு செய்து தருவதாகவும் ஆனால் இவ்வாறு ஒரு காணியை உமக்கு வழங்க வேண்டுமாயின் நீர் என்னோடு உறவு கொள்ள வேண்டும் என பிரதேச செயலாளர் கேட்டுக் கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி பதுள்ளை துன்ஹிந்த பிரதேச ஹோட்டல் ஒன்றிற்கு பெண்ணை அழைத்துச் சென்று பாலியல் லஞ்சத்தை பெற்றுக் கொள்ள முயற்சித்த
வேளை பிரதேச செயலாளர் கைது செய்யப்பட்டதாக லஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு பிரிவினர் தெரிவித்தனர்.
விசேட அதிரடிப்படையினருடன் உல்லாசமாக ஒய்யாரம் செய்யும் நம்மட தமிழ் தேசியவாதிகள் யாரென்று மக்களாகிய நீங்களும் ஒருக்கா அறிந்து கொள்ளவேண்டும் பாருங்கோ. ஓடம் ஒன்றில் ஆறு ஒன்றினுள் இடம்பெறும் இந்த அபூவர்வமான காட்சியை உங்களில் பலர் அறிந்திருக்க மாட்டிர்கள்.
எல்லை நிர்ணய செயற்பாடுகள் நிறைவுற்ற பின்னரே மட்டக்களப்பு மாநகர சபை மற்றும் அம்மாவட்டத்தின் எட்டு பிரதேச சபைகளுக்குமான தேர்தல்களை நடத்த முடியுமென தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் மஹிந்த தேசப் பிரிய தெரிவித்தார்.புதிய உள்ளூராட்சிச் சபை தேர்தல் திருத்தச் சட்டத்திற்கிணங்க உள்ளூர் அதிகார சபைகளின் எல்லைகள் நிர்ணயம் செய்யும் பணிகள் நிறைவு பெறும்வரை மேற்படி தேர்தல்களை நடத்த சட்டரீதியான சாத்தியப்பாடுகள் இல்லையெனவும் தேர்தல்கள் ஆணையாளர் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாநகர சபைக்கான தேர்தல் மற்றும் அத்தோடிணைந்ததாக மேலும் எட்டு பிரதேச சபைகளுக்குமான தேர்தல்கள் பாதுகாப்புக் காரணங்களுக்காகப் பின்போடப்பட்டிருந்ததுடன் அத்தேர்தல்கள் மீண்டும் 2008 மார்ச் மாதம் 10 ஆம் திகதி நடாத்தப்பட்ட இந்த உள்ளூராட்சிச் சபைகளுக்கான பதவிக் காலம் 2012 மார்ச் 10 ஆம் திகதி நிறைவடைந்தது எனினும் சில தவிர்க்க முடியாத காரணங்களால் அவற்றின் பதவிக் காலத்தை 2013 மார்ச் 17 ஆம் திகதி வரை உள்ளூராட்சி மாகாண சபை அமைச்சரினால் ஒத்திவைக்கப்பட்டது.இதற்கிணங்க தேர்தல்களை நடத்துவதற்கான பெயர் குறித்த நியமனங்களைக் கோரும் அறிவித்தல் 2013 ஜனவரி மாதம் முதல் இருவாரங்களுக்குள் வெளியிட உத்தேசித்திருந்த போதிலும் தேர்தல்களை நடத்துதல் தொடர்பான உள்ளூராட்சிச் சபைகள் தேர்தல்கள் திருத்தச் சட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட புதிய திருத்த சட்டம் ஜனவரி முதலாம் திகதி முதல் நடைமுறைக்கு வருவதாக மாகாண சபைகள் உள்ளூராட்சி அமைச்சு வர்த்தமானி அறிவித்தலினூடாக பிரகடனம் செய்தது.இதன்படி புதிய திருத்தத்திற்கிணங்க உள்ளூராட்சி சபைகளின் வட்டார எல்லைகள் நிர்ணயம் செய்யும் பணிகள் நிறைவுறும் வரை மட்டக்கள்பபு மாநகர சபை மற்றும் மேலும் 8 உள்ளூராட்சி சபைகளின் தேர்தல்களை நடத்தமுடியாதுள்ளது எனவும் தேர்தல்கள் ஆணையாளர் தெரிவித்தார்.
அத்துடன் குறிப்பிட்ட திருத்தத்தில் உள்ளூராட்சிச் சபைகளின் பிரதிநிதிகளின் வெற்றிடங்களை நிரப்புதலுடன் தொடர்புடைய பிரிவு திருத்தம் செய்யப்பட்டுள்ளதால் தற்போது செயற்பாட்டிலுள்ள மாநகர சபைகள், நகர சபைகள் மற்றும் உள்ளூராட்சிச் சபைகளின் மக்கள் பிரதிநிதிகளுக்கான வெற்றிடத்தை நிரப்ப முடியாதுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாநகர சபைக்கான தேர்தல் மற்றும் அத்தோடிணைந்ததாக மேலும் எட்டு பிரதேச சபைகளுக்குமான தேர்தல்கள் பாதுகாப்புக் காரணங்களுக்காகப் பின்போடப்பட்டிருந்ததுடன் அத்தேர்தல்கள் மீண்டும் 2008 மார்ச் மாதம் 10 ஆம் திகதி நடாத்தப்பட்ட இந்த உள்ளூராட்சிச் சபைகளுக்கான பதவிக் காலம் 2012 மார்ச் 10 ஆம் திகதி நிறைவடைந்தது எனினும் சில தவிர்க்க முடியாத காரணங்களால் அவற்றின் பதவிக் காலத்தை 2013 மார்ச் 17 ஆம் திகதி வரை உள்ளூராட்சி மாகாண சபை அமைச்சரினால் ஒத்திவைக்கப்பட்டது.இதற்கிணங்க தேர்தல்களை நடத்துவதற்கான பெயர் குறித்த நியமனங்களைக் கோரும் அறிவித்தல் 2013 ஜனவரி மாதம் முதல் இருவாரங்களுக்குள் வெளியிட உத்தேசித்திருந்த போதிலும் தேர்தல்களை நடத்துதல் தொடர்பான உள்ளூராட்சிச் சபைகள் தேர்தல்கள் திருத்தச் சட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட புதிய திருத்த சட்டம் ஜனவரி முதலாம் திகதி முதல் நடைமுறைக்கு வருவதாக மாகாண சபைகள் உள்ளூராட்சி அமைச்சு வர்த்தமானி அறிவித்தலினூடாக பிரகடனம் செய்தது.இதன்படி புதிய திருத்தத்திற்கிணங்க உள்ளூராட்சி சபைகளின் வட்டார எல்லைகள் நிர்ணயம் செய்யும் பணிகள் நிறைவுறும் வரை மட்டக்கள்பபு மாநகர சபை மற்றும் மேலும் 8 உள்ளூராட்சி சபைகளின் தேர்தல்களை நடத்தமுடியாதுள்ளது எனவும் தேர்தல்கள் ஆணையாளர் தெரிவித்தார்.
அத்துடன் குறிப்பிட்ட திருத்தத்தில் உள்ளூராட்சிச் சபைகளின் பிரதிநிதிகளின் வெற்றிடங்களை நிரப்புதலுடன் தொடர்புடைய பிரிவு திருத்தம் செய்யப்பட்டுள்ளதால் தற்போது செயற்பாட்டிலுள்ள மாநகர சபைகள், நகர சபைகள் மற்றும் உள்ளூராட்சிச் சபைகளின் மக்கள் பிரதிநிதிகளுக்கான வெற்றிடத்தை நிரப்ப முடியாதுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
வடக்கு, கிழக்கில் சிவில் நிர்வாகத்தை ஏற்படுத்துமாறு கோரி சகோதரத்துவத்திற்கான மக்கள் அரண் அமைப்பினால் வவுனியா பஸ் நிலையத்திற்கு முன்பாக் ஆர்ப்பாட்டம் ஒன்று இன்று காலை நடாத்தப்பட்டுள்ளது.மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் இராமலிங்கம் சந்திரசேகரன் உட்பட சகோதாரத்துவத்திற்கான மக்கள் அரண் அமைப்பின் உறுப்பினர்கள் பலரும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.
இதன் போது 'வடக்கு, கிழக்கில் சிவில் நிர்வாகத்தை உறுதிசெய்', 'சட்டவிரோதக் கைதுகள், கடத்தல்களை உடனடியாக நிறுத்து', 'வடக்கில் நடத்தும் காணி அபகரிப்பை உடன் நிறுத்து', 'அனைத்து அரசியல் கைதிகளையும் உடன் விடுதலை செய்', 'கைதுசெய்யப்பட்ட பல்கலைக்கழக மாணவர்களை விடுதலை செய்' ஆகிய கோஷங்களை ஆர்ப்பாட்டக்காரர்கள் எழுப்பியதுடன், பதாகைகளையும் தாங்கியிருந்தனர்.
இதன் போது 'வடக்கு, கிழக்கில் சிவில் நிர்வாகத்தை உறுதிசெய்', 'சட்டவிரோதக் கைதுகள், கடத்தல்களை உடனடியாக நிறுத்து', 'வடக்கில் நடத்தும் காணி அபகரிப்பை உடன் நிறுத்து', 'அனைத்து அரசியல் கைதிகளையும் உடன் விடுதலை செய்', 'கைதுசெய்யப்பட்ட பல்கலைக்கழக மாணவர்களை விடுதலை செய்' ஆகிய கோஷங்களை ஆர்ப்பாட்டக்காரர்கள் எழுப்பியதுடன், பதாகைகளையும் தாங்கியிருந்தனர்.
பிச்சையெடுப்பவர்களை எப்போது சமூகத்தில் தாழ்ந்தவர்களாகவே பார்ப்பார்கள். ஆனால் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட ஒரு பிச்சைக்காரி மாதமொன்றிற்கு ஒரு லட்சத்திற்கு அதிகமாக சம்பாதிப்பது பெரும் அதிர்ச்சியையும் வியப்பையும் ஏற்படுத்தியுள்ளது. பிச்சை எடுத்து வந்த பெண்ணொருவர் கொழும்பு-நீர்கொழும்பு ரயிலில் பிச்சை எடுத்துக்கொண்டிருந்தபோது கைது செய்யப்பட்டுள்ளார். இவருக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளன.
இவரை கைது செயயும் போது இவரிடமிருந்து 1800 ரூபா வரை இருந்துள்ளது. இது அவர் ஒரு மணித்தியாலத்தில் பிச்சை எடுத்து உழைத்த பணமாகும் என ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இவர் களனி விஹாரையில் போயா தினத்தில் 9000 ரூபாவிற்கு மேல் சம்பாதிப்பதாகவும் தெரியவந்துள்ளது.
தனது வயிற்றுப்பகுதியிலுள்ள ஒரு கட்டியை காண்பித்து மக்களின் அனுதாபத்தை பெற்று பிச்சை எடுத்துவருவதாக அவர் விசாரணைகளின் போது தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த கட்டியை காண்பித்து பிச்சை எடுப்பதனால் தான் தனது பிள்ளைகளை படிக்கவைத்துக்கொண்டு செழிப்பான வாழ்வை நடத்தமுடிந்துள்ளது என பொலிஸாரை அதிர்ச்சிக்குள்ளாகியிருக்கிறார்.
இவரை கைது செயயும் போது இவரிடமிருந்து 1800 ரூபா வரை இருந்துள்ளது. இது அவர் ஒரு மணித்தியாலத்தில் பிச்சை எடுத்து உழைத்த பணமாகும் என ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இவர் களனி விஹாரையில் போயா தினத்தில் 9000 ரூபாவிற்கு மேல் சம்பாதிப்பதாகவும் தெரியவந்துள்ளது.
தனது வயிற்றுப்பகுதியிலுள்ள ஒரு கட்டியை காண்பித்து மக்களின் அனுதாபத்தை பெற்று பிச்சை எடுத்துவருவதாக அவர் விசாரணைகளின் போது தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த கட்டியை காண்பித்து பிச்சை எடுப்பதனால் தான் தனது பிள்ளைகளை படிக்கவைத்துக்கொண்டு செழிப்பான வாழ்வை நடத்தமுடிந்துள்ளது என பொலிஸாரை அதிர்ச்சிக்குள்ளாகியிருக்கிறார்.
இலங்கையில் இடம் பெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் உச்சி மாநாட்டில் பிரிட்டிஸ் மகாராணியார் கலந்து கொள்வாரா? இல்லையா? என்பது குறித்து இதுவரை எந்தவிதமான தீர்மானவும் எடுக்கப்படவில்லை. என இலங்கை வந்துள்ள பிரித்தானிய வெளிவிவகார செயலாளர் அலிஸ்டர் பேர்ட் தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவிற்கு இன்று விஜயம் செய்த அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
பொதுநலவாய மாநாட்டில் மகாராணியார் கலந்து கொள்ளாதது எந்த வகையிலும் பொதுநலவாய உச்சி மாநாட்டிற்கு பாதகத்தை ஏற்படுத்த போவதில்லை என நான் நினைக்கின்றேன்.
பொது நலவாய நாடுகளின் மாநாட்டில் பிரிட்டிஸ் பிரதமர் கலந்து கொள்வது குறித்தும் எந்தவிதமான தீர்மானமும் எடுக்கப்படவில்லை என பிரித்தானிய வெளிவிவகார செயலாளர் அலிஸ்ட் பேர்ட் தெரிவித்தார்.
முல்லைத்தீவிற்கு இன்று விஜயம் செய்த அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
பொதுநலவாய மாநாட்டில் மகாராணியார் கலந்து கொள்ளாதது எந்த வகையிலும் பொதுநலவாய உச்சி மாநாட்டிற்கு பாதகத்தை ஏற்படுத்த போவதில்லை என நான் நினைக்கின்றேன்.
பொது நலவாய நாடுகளின் மாநாட்டில் பிரிட்டிஸ் பிரதமர் கலந்து கொள்வது குறித்தும் எந்தவிதமான தீர்மானமும் எடுக்கப்படவில்லை என பிரித்தானிய வெளிவிவகார செயலாளர் அலிஸ்ட் பேர்ட் தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்திலுள்ள பிரபல ஆரம்ப பிரிவு பாடசாலையில் கல்வி கற்ற ஒன்பது பாடசாலை மாணவியொருவரை அங்கு பணியாற்றி 65 வயதுள்ள காவலாளியான நபர் பாலியல் வன்புணர்வுக்கு உட்டுத்திய சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் நேற்று பிற்பகல் இடமபெற்றுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
தற்போது குறித்த மாணவி யாழ்.போதனா வைத்தியசாலையில ;சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவத்துடன் தொடர்புடைய குருநகரைச் சேர்ந்த காவலாளியான நபர் இன்று யாழ்.பொலிஸாரல் கைது செய்யப்பட்டுள்ளார்.
தற்போது குறித்த மாணவி யாழ்.போதனா வைத்தியசாலையில ;சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவத்துடன் தொடர்புடைய குருநகரைச் சேர்ந்த காவலாளியான நபர் இன்று யாழ்.பொலிஸாரல் கைது செய்யப்பட்டுள்ளார்.
மரதன் ஓடிக்கொண்டிருந்த சிலாபம் ஆனந்த தேசிய பாடசாலையில மாணவி வடிகானில் விழுந்து உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் சிலாபத்தில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்றுள்ளது. இதில் கௌசல்யா பவித்ராணி (வயது 19) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.பாடசாலையில் நடைபெறவிருக்கின்ற இல்லங்களுக்கு இடையிலான விளையாட்டுப் போட்டியை முன்னிட்டு மரதன் ஓட்டப் போட்டி நடத்தப்பட்டது.
இவ்வாறு நடத்தப்பட்ட மரதன் ஓட்டப்போட்டியில் பங்குபற்றிய மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
வடிகானில் விழுந்த மாணவியை உடனடியாக வைத்தியசாலைக்கு கொண்டுசென்ற போதில் அவர் உயிரிழந்துவிட்டார்.
இவ்வாறு நடத்தப்பட்ட மரதன் ஓட்டப்போட்டியில் பங்குபற்றிய மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
வடிகானில் விழுந்த மாணவியை உடனடியாக வைத்தியசாலைக்கு கொண்டுசென்ற போதில் அவர் உயிரிழந்துவிட்டார்.
இலங்கைக்கு எதிராக அமெரிக்காவினால் கொண்டு வரப்படவுள்ள புதிய பிரேரணைக்கு கடந்தவருடம் ஆதரவளித்தது போலவே இந்த முறையும் இந்தியா முழுமையாக ஆதரவளிக்கும் என்று அமெரிக்கா நம்பிக்கை கொண்டிருப்பதாக இந்திய ஊடகங்களின் செய்திகள் தெரிவிக்கின்றன.
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக அமெரிக்காவில் 2வது தீர்மானம் ஒன்று கொண்டு வரப்படவுள்ளது.
இலங்கைக்கு எதிராக கொண்டுவரவிருக்கின்ற இந்த புதிய தீர்மானம் நேரடியான – நடைமுறைத் தீர்மானமாக இருக்கும். நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்தக் கோரும் 2012 ஆம் ஆண்டு தீர்மானத்தை அடிப்படையாக கொண்டிருக்கும் என்று அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் பிரதி உதவிச்செயலர் ஜேம்ஸ் மூர் ஏற்கனவே தெரிவித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக அமெரிக்காவில் 2வது தீர்மானம் ஒன்று கொண்டு வரப்படவுள்ளது.
இலங்கைக்கு எதிராக கொண்டுவரவிருக்கின்ற இந்த புதிய தீர்மானம் நேரடியான – நடைமுறைத் தீர்மானமாக இருக்கும். நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்தக் கோரும் 2012 ஆம் ஆண்டு தீர்மானத்தை அடிப்படையாக கொண்டிருக்கும் என்று அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் பிரதி உதவிச்செயலர் ஜேம்ஸ் மூர் ஏற்கனவே தெரிவித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இலங்கையின் பொருளாதார மையமான மத்திய வங்கி மீது எல்ரிரிஈ பயங்கரவாதிகள் தாக்குதல் நடாத்தி, இன்றுடன் 17 ஆண்டுகள் பூர்த்தியாகின்றன. 1996 ம் ஆண்டு ஜனவரி 31 ஆம் திகதி இத்தாக்குதல் இடம்பெற்றது. 440 இறாத்தல் எடைகொண்ட அதிசக்தி வாய்ந்த வெடிபொருட்களை ஏற்றிய லொறியொன்று, இலங்கை மத்திய வங்கியின் பிரதான படலையை தோசம் செய்து கொண்டு, மத்திய வங்கியை தாக்கியது.
தற்கொலை குண்டுதாரியான ராஜூ செலுத்திய வந்த அந்த லொறியில் ஏற்றப்பட்டிருந்த வெடிபொருட்கள், மத்திய வங்கியை மட்டுமல்லாது, அருகில் உள்ள 8 க்கும் மேற்பட்ட கட்டிடங்களையும் அழித்தொழித்தது. இதனால் 91 பேர், மரணமடைந்ததுடன், ஆயிரத்து 400 பேர், காயமடைந்தும், நூற்றுக்கணக்கானோர், தமது கண்பார்வையையும் இழந்தனர்.
இலங்கையில் மட்டுமல்லாமல், முழு உலகையும் அதிர்ச்சியில் ஆழ்த்திய இந்த தாக்குதலில், இலங்கையர்கள் மட்டுமல்லாமல், 2 அமெரிக்க பிரஜைகளும், 6 ஜப்பானியர்களும், நெதர்லாந்து பிரஜையொருவரும் காயமடைந்தனர்.
முழு நாட்டையும் அதிர்ச்சியில் ஆழ்த்திய இதுபோன்ற தாக்குதல் நடைபெற்ற யுகத்திற்கு, தற்போது முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமைத்துவத்தின் கீழ், பாதுகாப்பு படைவீரர்களின் அர்ப்பணிப்புடன், 2009ம் ஆண்டு புலிப் பயங்கரவாதம் முற்றாக துடைத்தெறியப்பட்டது.
இதனால் மக்கள் தற்போது சுதந்திரக் காற்றை சுவாசிக்கின்றனர். இலங்கை மத்திய வங்கியை மீள கட்டியெழுப்பி, நாட்டின் பொருளாதாரத்திற்கு பங்களிப்பு செய்யும் வகையில், அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டது.
தற்கொலை குண்டுதாரியான ராஜூ செலுத்திய வந்த அந்த லொறியில் ஏற்றப்பட்டிருந்த வெடிபொருட்கள், மத்திய வங்கியை மட்டுமல்லாது, அருகில் உள்ள 8 க்கும் மேற்பட்ட கட்டிடங்களையும் அழித்தொழித்தது. இதனால் 91 பேர், மரணமடைந்ததுடன், ஆயிரத்து 400 பேர், காயமடைந்தும், நூற்றுக்கணக்கானோர், தமது கண்பார்வையையும் இழந்தனர்.
இலங்கையில் மட்டுமல்லாமல், முழு உலகையும் அதிர்ச்சியில் ஆழ்த்திய இந்த தாக்குதலில், இலங்கையர்கள் மட்டுமல்லாமல், 2 அமெரிக்க பிரஜைகளும், 6 ஜப்பானியர்களும், நெதர்லாந்து பிரஜையொருவரும் காயமடைந்தனர்.
முழு நாட்டையும் அதிர்ச்சியில் ஆழ்த்திய இதுபோன்ற தாக்குதல் நடைபெற்ற யுகத்திற்கு, தற்போது முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமைத்துவத்தின் கீழ், பாதுகாப்பு படைவீரர்களின் அர்ப்பணிப்புடன், 2009ம் ஆண்டு புலிப் பயங்கரவாதம் முற்றாக துடைத்தெறியப்பட்டது.
இதனால் மக்கள் தற்போது சுதந்திரக் காற்றை சுவாசிக்கின்றனர். இலங்கை மத்திய வங்கியை மீள கட்டியெழுப்பி, நாட்டின் பொருளாதாரத்திற்கு பங்களிப்பு செய்யும் வகையில், அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டது.
துருவம் ஊடக வலையமைப்பு, சிம்ஸ் கெம்பஸ் உடன் இணைந்து நடாத்திய அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்கள் மற்றும் ஊடகத்துறை சார்ந்தோருக்கான இருநாள் ஊடக செயலமர்வு அண்மையில் கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரியில் நடைபெற்றது. இச்செயலமர்வில், மாணவர்கள் மற்றும் ஊடகத்துற ஆர்வலர்கள் உட்பட சுமார் நுற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
இச்செயலமர்வில் பல்வேறு தலைப்புக்களில் தலைசிறந்த வளவாளர்களால் விரிவுரைகளும் பயிற்சிகளும் நடாத்தப்பட்டது. முதல்நாள் அமர்வில் நேர்காணல் என்ற தலைப்பில் இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபன சிரேஷ்ட அறிவிப்பாளர் ஏ.எம். தாஜ், பத்திரிகை செய்திக் கட்டமைப்பு என்ற தலைப்பில் விடிவெள்ளி பிரதம ஆசிரியர் எம்.பி.எம். பைறூஸ், பத்தி எழுத்து என்ற தலைப்பில் ஊடகவியலாளர் ஜெஸ்மி எம். மூஸா, செய்தி, அறிவிப்புக்கலை நுணுக்கங்கள் என்ற தலைப்புக்களில் இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபன சிரேஷ்ட ஒலிபரப்பாளர் சனுஸ் முஹம்மது பெறோஸ் ஆகியோர் விரிவுரைகளை நிகழ்த்தினார்கள்.
இரண்டாம் நாள் செயலமர்வில் சமூக வலையமைப்பும், ஊடகத் தொழில்நுட்பமும் என்ற தலைப்பில் சிம்ஸ் கெம்பஸ் பணிப்பாளர் அன்வர் எம். முஸ்தபா, ஊடகத்தில் தமிழ்மொழி என்ற தலைப்பில் கொழும்பு தொழில்நுட்பக் கல்லூரி விரிவுரையாளர் வீ.எஸ். இந்திரகுமார், அச்சு ஊடகத்துறையும் சட்டமும் என்ற தலைப்பில் இலங்கை தமிழ் பத்திரிகையாளர் சங்கத்தின் செயலாளர் அ.நிக்ஸன் மற்றும் ஊடக வரலாறும் ஊடக உளவியலும், அறிவிப்பும் விளம்பரமும் எனும் தலைப்புக்களில் இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபன சிரேஷ்ட ஒலிபரப்பாளரும், இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபன ஒளிபரப்பாளருமான ஏ.ஆர்.எம். ஜிப்ரி ஆகியோர் விரிவுரைகளை நிகழ்த்தினார்கள்.
துருவம் ஊடக வலையமைப்பின் தலைவர் முஹம்மட் பிறவ்ஸ் தலைமையில் நடைபெற்ற இச்செயலமர்வில், துருவம் ஊடக வலையமைப்பின் செயலாளர் எஸ். ஜனூஸ் நிகழ்வின் பதிவுகள் குறித்து உரையாற்றினார்.
துருவம் ஊடக வலையமைப்பின் ஆலோசகர்களான ஒரேஞ் டீ கம்பனியின் பணிப்பாளர் அல்ஹாஜ் ஏ.எம்.ஏ. நாஸர், கட்டிடக் கலைஞரும் அறன்கோ நிறுவனத்தின் பணிப்பாளருமான எம்.ரி.ஏ. ரஹீம், மோட்டார் போக்குவரத்து திணைக்களப் பரிசோதகர் ஏ.எல்.எம். பாறுக், பிரதம பொறியியலாளர் அல்ஹாஜ் தம்பிலெப்பை இஸ்மாயில் உட்பட அக்கரைப்பற்று கல்வி ஆலோசகர் எஸ்.எல்.மன்சூர், கலைமகள் ஹிதாயா றிஸ்வி மற்றும் பல பிரமுகர்களும் கலந்து கொண்டனர். இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் பிறை எப்.எம். அறிவிப்பாளர் ஏ.எல். நயீம் நிகழ்வுகளை தொகுத்து வழங்கினார்.
இச்செயலமர்வில் பல்வேறு தலைப்புக்களில் தலைசிறந்த வளவாளர்களால் விரிவுரைகளும் பயிற்சிகளும் நடாத்தப்பட்டது. முதல்நாள் அமர்வில் நேர்காணல் என்ற தலைப்பில் இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபன சிரேஷ்ட அறிவிப்பாளர் ஏ.எம். தாஜ், பத்திரிகை செய்திக் கட்டமைப்பு என்ற தலைப்பில் விடிவெள்ளி பிரதம ஆசிரியர் எம்.பி.எம். பைறூஸ், பத்தி எழுத்து என்ற தலைப்பில் ஊடகவியலாளர் ஜெஸ்மி எம். மூஸா, செய்தி, அறிவிப்புக்கலை நுணுக்கங்கள் என்ற தலைப்புக்களில் இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபன சிரேஷ்ட ஒலிபரப்பாளர் சனுஸ் முஹம்மது பெறோஸ் ஆகியோர் விரிவுரைகளை நிகழ்த்தினார்கள்.
இரண்டாம் நாள் செயலமர்வில் சமூக வலையமைப்பும், ஊடகத் தொழில்நுட்பமும் என்ற தலைப்பில் சிம்ஸ் கெம்பஸ் பணிப்பாளர் அன்வர் எம். முஸ்தபா, ஊடகத்தில் தமிழ்மொழி என்ற தலைப்பில் கொழும்பு தொழில்நுட்பக் கல்லூரி விரிவுரையாளர் வீ.எஸ். இந்திரகுமார், அச்சு ஊடகத்துறையும் சட்டமும் என்ற தலைப்பில் இலங்கை தமிழ் பத்திரிகையாளர் சங்கத்தின் செயலாளர் அ.நிக்ஸன் மற்றும் ஊடக வரலாறும் ஊடக உளவியலும், அறிவிப்பும் விளம்பரமும் எனும் தலைப்புக்களில் இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபன சிரேஷ்ட ஒலிபரப்பாளரும், இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபன ஒளிபரப்பாளருமான ஏ.ஆர்.எம். ஜிப்ரி ஆகியோர் விரிவுரைகளை நிகழ்த்தினார்கள்.
துருவம் ஊடக வலையமைப்பின் தலைவர் முஹம்மட் பிறவ்ஸ் தலைமையில் நடைபெற்ற இச்செயலமர்வில், துருவம் ஊடக வலையமைப்பின் செயலாளர் எஸ். ஜனூஸ் நிகழ்வின் பதிவுகள் குறித்து உரையாற்றினார்.
துருவம் ஊடக வலையமைப்பின் ஆலோசகர்களான ஒரேஞ் டீ கம்பனியின் பணிப்பாளர் அல்ஹாஜ் ஏ.எம்.ஏ. நாஸர், கட்டிடக் கலைஞரும் அறன்கோ நிறுவனத்தின் பணிப்பாளருமான எம்.ரி.ஏ. ரஹீம், மோட்டார் போக்குவரத்து திணைக்களப் பரிசோதகர் ஏ.எல்.எம். பாறுக், பிரதம பொறியியலாளர் அல்ஹாஜ் தம்பிலெப்பை இஸ்மாயில் உட்பட அக்கரைப்பற்று கல்வி ஆலோசகர் எஸ்.எல்.மன்சூர், கலைமகள் ஹிதாயா றிஸ்வி மற்றும் பல பிரமுகர்களும் கலந்து கொண்டனர். இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் பிறை எப்.எம். அறிவிப்பாளர் ஏ.எல். நயீம் நிகழ்வுகளை தொகுத்து வழங்கினார்.
காஷ்மீர் எல்லையில் இந்திய இராணுவ வீரர் ஹேம்ராஜ் சிங்கின் தலையை துண்டித்த பாகிஸ்தான் தீவிரவாதிக்கு பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ புலனாய்வு அமைப்பு ரூ.5 இலட்சம் பணப்பரிசு கொடுத்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.இந்திய-பாகிஸ்தான எல்லையில் கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் இந்திய இராணுவ வீரர்கள் இருவர் கொல்லப்பட்டு அதில் ஹேமராஜ் சிங் எனும் இராணுவ வீரரின் தலை துண்டிக்கப்பட்டிருந்தது.
அன்வார் கான் எனும் நபர் பாகிஸ்தானின் காஷ்மீர் பகுதியில் கடை வைத்திருப்பதாகவும் அவரே இப்படுகொலையை செய்திருப்பதாகவும், 1996ம் ஆண்டு இதே போன்று இந்திய இராணுவ கேப்டன் ஒருவர் தலை துண்டிக்கப்பட்டு கொல்லப்பட்ட சம்பவத்திற்கும் இந்நபரே காரணம் எனவும் இராணுவ புலனாய்வை மேற்கோள்காட்டி இத்தகவல்கள் வெளிவந்துள்ளன.
மேலும், அந்நபருக்கு பாகிஸ்தானின் புலனாய்வு அமைப்பான ஐ.எஸ்.ஐயின் கேல்னல் சித்திக் என்பவரினால் பணப்பரிசு கொடுக்கப்பட்டதாகவும், அத்தாக்குதலில் ஈடுபட்டவர்களில் ஐ.எஸ்.ஐயை பின்னணியாக கொண்ட ஜிகாதி தீவிரவாத குழுவான லஷ்கர் மற்றும் ஜெயிஷ் இ மொஹ்மட் குழுவினருக்கும் தொடர்பிருப்பதாகவும் அத்தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்திய - காஷ்மீர் எல்லை பகுதியில் தொடர்ந்து பதற்றத்தை தக்கவைத்திருக்க வேண்டும் என்பதனால் இவ்வாறு தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் எனவும் அத்தகவல்கள் தெரிவிக்கின்றன.
அன்வார் கான் எனும் நபர் பாகிஸ்தானின் காஷ்மீர் பகுதியில் கடை வைத்திருப்பதாகவும் அவரே இப்படுகொலையை செய்திருப்பதாகவும், 1996ம் ஆண்டு இதே போன்று இந்திய இராணுவ கேப்டன் ஒருவர் தலை துண்டிக்கப்பட்டு கொல்லப்பட்ட சம்பவத்திற்கும் இந்நபரே காரணம் எனவும் இராணுவ புலனாய்வை மேற்கோள்காட்டி இத்தகவல்கள் வெளிவந்துள்ளன.
மேலும், அந்நபருக்கு பாகிஸ்தானின் புலனாய்வு அமைப்பான ஐ.எஸ்.ஐயின் கேல்னல் சித்திக் என்பவரினால் பணப்பரிசு கொடுக்கப்பட்டதாகவும், அத்தாக்குதலில் ஈடுபட்டவர்களில் ஐ.எஸ்.ஐயை பின்னணியாக கொண்ட ஜிகாதி தீவிரவாத குழுவான லஷ்கர் மற்றும் ஜெயிஷ் இ மொஹ்மட் குழுவினருக்கும் தொடர்பிருப்பதாகவும் அத்தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்திய - காஷ்மீர் எல்லை பகுதியில் தொடர்ந்து பதற்றத்தை தக்கவைத்திருக்க வேண்டும் என்பதனால் இவ்வாறு தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் எனவும் அத்தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கை கிரிக்கெட் அணியின் புதிய தேர்வுக்குழு தலைவராக, முன்னாள் நட்சத்திர வீரர் சனத் ஜெயசூர்ய நியமிக்கப்பட்டுள்ளார்.
இதுநாள் வரை தலைவராக இருந்த அசந்த டீ மெல்லின் பதவிக்காலம் நிறைவடைவதை தொடர்ந்து புதிய தேர்வுக்குழுவை விளையாட்டு அமைச்சு அறிவித்தது.அதன்படி எதிர்பார்த்தபடி தேர்வுக்குழு தலைவராக இலங்கை அணியின் முன்னால் கேப்டனும் ஆளும் கட்சி எம்.பியுமான சனத் ஜெயசூர்ய நியமிக்கப்பட்டுள்ளார். ஏனைய உறுப்பினர்களாக ஹேமந்த விக்ரமரத்ன, பிரமோதய விக்ரமசிங்க, ஷமிந்த மெண்டிஸ், எரிக் உப்பஷாந்த ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களில் விக்ரமரட்ன மட்டுமே இரண்டாவது தடவையாக தெரிவுக்குழுவில் நீடிக்கிறார். ஏனைய அனைவரும் புதியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தான் புதிய தலைவராக நியமிக்கப்பட்டது தொடர்பில் சனத் ஜெயசூர்ய கருத்து தெரிவிக்கையில், இலங்கை கிரிக்கெட் அணியில் திறமைகளுக்கு தட்டுப்பாடு கிடையாது. திறமைகளை சரியான முறையில் இணங்கண்டு தயார்படுத்துவதே தேவையாக உள்ளது. இலங்கை தேசிய அணிக்கு இளைய வீரர்கள் பலரை களமிறக்கலாம். அவர்கள் திறமையோடு காணப்படுகின்றனர். இவர்கள் சிரேஷ்ட வீரர்களின் இடங்களை தங்களால் நிரப்ப முடியும் என்பதனையும் தமது விளையாட்டின் மூலம் நிரூபித்துள்ளனர் என தெரிவித்தார்.
இதேவேளை ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் என்பதனால், இவரது நியமனம் அரசியல் சம்பந்தப்பட்டது என்ற கருத்துக்களை நிராகரித்த சனத் ஜெயசூர்ய, இரண்டு தசாப்தங்களுக்கு மேலாக இலங்கைக்காக போட்டிகளில் பங்குபற்றியுள்ளேன். தேர்வாளர் தலைமை பதவிக்கு தகுதியானவனாகவே தன்னை கருதுவதாக தெரிவித்தார்.
43 வயதான சனத் ஜெயசூர்ய, 1996 ம் ஆண்டு இலங்கை உலக கோப்பையை வெல்வதற்கு மிக முக்கிய காரணமாக இருந்தவர். அவர் 110 டெஸ்ட் போட்டிகளிலும் 445 ஒரு நாள் போட்டிகளிலும், 31 T20 போட்டிகளிலும் அவரது வாழ்நாள் கிரிக்கெட்டில் விளையாடியுள்ளார்.
அண்மையில் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த இலங்கை அணியில் பல இளம் வீரர்கள் இடம்பெற்றிருந்ததுடன் சிறப்பாக தங்களது திறமையை வெளிப்படுத்தியிருந்தனர். இதனால் ஒரு நாள் தொடரை சமப்படுத்தவும், T20 ஐ கைப்பற்றவும் இலங்கை அணியால் முடிந்தது குறிப்பிடத்தக்கது.
இதுநாள் வரை தலைவராக இருந்த அசந்த டீ மெல்லின் பதவிக்காலம் நிறைவடைவதை தொடர்ந்து புதிய தேர்வுக்குழுவை விளையாட்டு அமைச்சு அறிவித்தது.அதன்படி எதிர்பார்த்தபடி தேர்வுக்குழு தலைவராக இலங்கை அணியின் முன்னால் கேப்டனும் ஆளும் கட்சி எம்.பியுமான சனத் ஜெயசூர்ய நியமிக்கப்பட்டுள்ளார். ஏனைய உறுப்பினர்களாக ஹேமந்த விக்ரமரத்ன, பிரமோதய விக்ரமசிங்க, ஷமிந்த மெண்டிஸ், எரிக் உப்பஷாந்த ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களில் விக்ரமரட்ன மட்டுமே இரண்டாவது தடவையாக தெரிவுக்குழுவில் நீடிக்கிறார். ஏனைய அனைவரும் புதியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தான் புதிய தலைவராக நியமிக்கப்பட்டது தொடர்பில் சனத் ஜெயசூர்ய கருத்து தெரிவிக்கையில், இலங்கை கிரிக்கெட் அணியில் திறமைகளுக்கு தட்டுப்பாடு கிடையாது. திறமைகளை சரியான முறையில் இணங்கண்டு தயார்படுத்துவதே தேவையாக உள்ளது. இலங்கை தேசிய அணிக்கு இளைய வீரர்கள் பலரை களமிறக்கலாம். அவர்கள் திறமையோடு காணப்படுகின்றனர். இவர்கள் சிரேஷ்ட வீரர்களின் இடங்களை தங்களால் நிரப்ப முடியும் என்பதனையும் தமது விளையாட்டின் மூலம் நிரூபித்துள்ளனர் என தெரிவித்தார்.
இதேவேளை ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் என்பதனால், இவரது நியமனம் அரசியல் சம்பந்தப்பட்டது என்ற கருத்துக்களை நிராகரித்த சனத் ஜெயசூர்ய, இரண்டு தசாப்தங்களுக்கு மேலாக இலங்கைக்காக போட்டிகளில் பங்குபற்றியுள்ளேன். தேர்வாளர் தலைமை பதவிக்கு தகுதியானவனாகவே தன்னை கருதுவதாக தெரிவித்தார்.
43 வயதான சனத் ஜெயசூர்ய, 1996 ம் ஆண்டு இலங்கை உலக கோப்பையை வெல்வதற்கு மிக முக்கிய காரணமாக இருந்தவர். அவர் 110 டெஸ்ட் போட்டிகளிலும் 445 ஒரு நாள் போட்டிகளிலும், 31 T20 போட்டிகளிலும் அவரது வாழ்நாள் கிரிக்கெட்டில் விளையாடியுள்ளார்.
அண்மையில் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த இலங்கை அணியில் பல இளம் வீரர்கள் இடம்பெற்றிருந்ததுடன் சிறப்பாக தங்களது திறமையை வெளிப்படுத்தியிருந்தனர். இதனால் ஒரு நாள் தொடரை சமப்படுத்தவும், T20 ஐ கைப்பற்றவும் இலங்கை அணியால் முடிந்தது குறிப்பிடத்தக்கது.
நமது இரத்தத்தில் பலவிதமான செல்கள், கனிம, கரிமப்பொருட்கள் கலந்துள்ளன. இவை உறுப்புகளுக்கு தேவையான ஊட்டச்சத்தை தருவதுடன் செல் வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகின்றன.டிபன்ஸ் மெக்கானிசம் என்று சொல்லப்படும் செல்களின் தற்காப்பு செயலுக்கு இரத்த அணுக்கள் பெரிதும் உதவுகின்றன. உணவுப்பாதை, மூச்சுப்பாதை, தோல் போன்றவற்றின் வாயிலாக நமது உடலுக்குள் நுழையும் நுண்கிருமிகள் இரத்த அணுக்களுடன் சண்டையிடும் போது அழிந்துவிடுகின்றன அல்லது இரத்த அணுக்களால் தூக்கியயறிப்பட்டு தோலின் வாயிலாக வெளியேற்றப்படுகின்றன.
இவை வியர்வை துவாரங்களை அடைத்து கட்டிகளை உண்டுபண்ணுகின்றன. அதுமட்டுமின்றி தோலின் வாயிலாக உடலுக்குள் செல்லும் நுண்கிருமிகளும் இரத்தத்தை சென்றடைய முடியாமல் தோலிலேயே தங்கி ஆரம்பத்திலேயே அழிக்கப்பட்டு தோலில் கட்டிகளாக மாறுகின்றன.
இந்தக் கட்டிகள் நாட்கள் செல்லச் செல்ல பெரிதாகி, சிவந்து, உடைந்து சீழாக வெளியேறி பின் புண்களாக மாறி ஆறுகின்றன. இதனால் இயற்கையாகவே கிருமிகள் கிருமிகளாலே அழிக்கப்பட்டு உடல் பாதுகாக்கப்படுகிறது. இவ்வாறு தோன்றும் கட்டிகள் சிலந்தி கட்டிகள், உஷ்ண கட்டிகள், பிளவை கட்டிகள் என பல வழக்கப் பெயர்களால் அழைக்கப்படுகின்றன.
இவ்வாறு தோலில் தோன்றும் கட்டிகள் நாளுக்குநாள் பெரிதாகி கடும் வேதனையை உண்டாக்குவதுடன் குறிப்பிட்ட அளவு வளர்ந்ததும், சீழ் கோர்த்து உடைகின்றன. கட்டிகள் முற்ற ஆரம்பித்ததும் அவற்றை மருத்துவரின் மேற்பார்வையில் கீறி, புண்களை ஆற்ற வேண்டும். இல்லாவிட்டால் உறுப்புகள் அழுகிப் போக ஆரம்பித்துவிடும். சாதாரண கட்டிகளை ஆரம்ப நிலையிலேயே பழுக்கச் செய்து உடைத்து விடவேண்டும். கட்டியை எளிதாக பழுக்கச் செய்து உடைக்கும் அற்புத ஆற்றலுடையது மட்டுமின்றி வறண்ட பகுதிகளில் கூட செழித்து, வளர்ந்து காணப்படும் எளிய மூலிகைதான் சப்பாத்திக்கள்ளி.
ஒபன்சியா டிலேனி என்ற தாவரவியல் பெயர் கொண்ட கேக்டேசியே குடும்பத்தைச் சார்ந்த சப்பாத்திக்கள்ளியின் தண்டுகளே இலைகளாக மாற்றுரு கொண்டுள்ளன. இதன் இலைகளில் ஏராளமான அளவு நீர்ச்சத்தும், ஆர்பினோகேலக்டன், குர்சிட்டின் மற்றும் பிளேவனால்கள் போன்ற வேதிச்சத்துக்களும் காணப்படுகின்றன. இவை கிருமிகளை அழித்து இரத்தக் கட்டிகளை கரைக்கும் தன்மையுடையவை.
முட்களுள்ள சப்பாத்திக்கள்ளியின் இலைத்தண்டை பிளந்து, வெளிப்புறமுள்ள முட்களை நீக்கி, உட்புறமாக சிறிது மஞ்சளை தடவி, அனலில் வாட்டி, கட்டிகளின் மேல் இறுக்கமாக கட்டி வைத்து வர ஆரம்ப நிலையிலுள்ள கட்டிகள் விரைவில் உடைந்து புண் எளிதில் ஆறும். புண் ஆற தாமதமானால் மஞ்சளை தேங்காய் எண்ணெயுடன் கலந்து தடவி வர விரைவில் குணமுண்டாகும்.
இவை வியர்வை துவாரங்களை அடைத்து கட்டிகளை உண்டுபண்ணுகின்றன. அதுமட்டுமின்றி தோலின் வாயிலாக உடலுக்குள் செல்லும் நுண்கிருமிகளும் இரத்தத்தை சென்றடைய முடியாமல் தோலிலேயே தங்கி ஆரம்பத்திலேயே அழிக்கப்பட்டு தோலில் கட்டிகளாக மாறுகின்றன.
இந்தக் கட்டிகள் நாட்கள் செல்லச் செல்ல பெரிதாகி, சிவந்து, உடைந்து சீழாக வெளியேறி பின் புண்களாக மாறி ஆறுகின்றன. இதனால் இயற்கையாகவே கிருமிகள் கிருமிகளாலே அழிக்கப்பட்டு உடல் பாதுகாக்கப்படுகிறது. இவ்வாறு தோன்றும் கட்டிகள் சிலந்தி கட்டிகள், உஷ்ண கட்டிகள், பிளவை கட்டிகள் என பல வழக்கப் பெயர்களால் அழைக்கப்படுகின்றன.
இவ்வாறு தோலில் தோன்றும் கட்டிகள் நாளுக்குநாள் பெரிதாகி கடும் வேதனையை உண்டாக்குவதுடன் குறிப்பிட்ட அளவு வளர்ந்ததும், சீழ் கோர்த்து உடைகின்றன. கட்டிகள் முற்ற ஆரம்பித்ததும் அவற்றை மருத்துவரின் மேற்பார்வையில் கீறி, புண்களை ஆற்ற வேண்டும். இல்லாவிட்டால் உறுப்புகள் அழுகிப் போக ஆரம்பித்துவிடும். சாதாரண கட்டிகளை ஆரம்ப நிலையிலேயே பழுக்கச் செய்து உடைத்து விடவேண்டும். கட்டியை எளிதாக பழுக்கச் செய்து உடைக்கும் அற்புத ஆற்றலுடையது மட்டுமின்றி வறண்ட பகுதிகளில் கூட செழித்து, வளர்ந்து காணப்படும் எளிய மூலிகைதான் சப்பாத்திக்கள்ளி.
ஒபன்சியா டிலேனி என்ற தாவரவியல் பெயர் கொண்ட கேக்டேசியே குடும்பத்தைச் சார்ந்த சப்பாத்திக்கள்ளியின் தண்டுகளே இலைகளாக மாற்றுரு கொண்டுள்ளன. இதன் இலைகளில் ஏராளமான அளவு நீர்ச்சத்தும், ஆர்பினோகேலக்டன், குர்சிட்டின் மற்றும் பிளேவனால்கள் போன்ற வேதிச்சத்துக்களும் காணப்படுகின்றன. இவை கிருமிகளை அழித்து இரத்தக் கட்டிகளை கரைக்கும் தன்மையுடையவை.
முட்களுள்ள சப்பாத்திக்கள்ளியின் இலைத்தண்டை பிளந்து, வெளிப்புறமுள்ள முட்களை நீக்கி, உட்புறமாக சிறிது மஞ்சளை தடவி, அனலில் வாட்டி, கட்டிகளின் மேல் இறுக்கமாக கட்டி வைத்து வர ஆரம்ப நிலையிலுள்ள கட்டிகள் விரைவில் உடைந்து புண் எளிதில் ஆறும். புண் ஆற தாமதமானால் மஞ்சளை தேங்காய் எண்ணெயுடன் கலந்து தடவி வர விரைவில் குணமுண்டாகும்.
அண்மைய நாட்களாகப் பரபரப்பாகப் பேசப்படுகின்ற விடயங்களில் இந்தியத் திரைப்பட நடிகர் கமல் ஹாசன் அவர்கள் எழுதி, இயக்கி, நடித்த ‘’விஸ்வரூபம்” எனும் திரைப்படம் வெளியிடப்படுவதில் இஸ்லாமியர்கள் காட்டுகின்ற எதிர்ப்பு தொடர்பான விடயமும் ஒன்றாகும்.
தமிழகத்தில் இஸ்லாமியர்கள் அந்தத் திரைப்படம் வெளியிடத் தடை விதிக்குமாறு கோரியதை அடுத்து தமிழக அரசு தடை விதித்தமை, இந்தத் திரைப்படத்தை பெரும்பாலான இஸ்லாமியர் விரும்புகிறார்கள் என கமல் தெரிவித்தமை, விஸ்வரூபம் படத்தைத் தடை செய்யவேண்டாம் என நபிகளாரின் பிறந்த தின வாழ்த்தோடு சேர்த்து இஸ்லாமிய நண்பர்களிடம் பிரபல நடிகர் ரஜனிகாந்த் வேண்டிக்கொண்டமை மற்றும் இலங்கையில் விஸ்வரூபம் பட வெளியீட்டைத் தடை செய்ய தாங்கள் எடுத்த முயற்சி வெற்றியளித்துள்ளதாக அகில இலங்கை தௌஹீத் ஜமாத்தினர் தெரிவித்தமை என இந்தத் திரைப்படம் தொடர்பான சேதிகளும் மறைமுக விளம்பரங்களும் தொடர்ச்சியாக ஊடகங்களில் வெளியாகிக் கொண்டே இருக்கின்றன.
இதற்கு முன்னர் முஹம்மது நபியைக் கேவலப்படுத்துவதான அமெரிக்கத் திரைப்பட விவகாரம் சூடுபிடித்திருந்தது.
இந்த செய்திகள் அனைத்தையும் பார்க்கும் போது எனக்குள் சில வினாக்கள் எழுந்துகொண்டே இருக்கின்றன. எனது அறிவிற்கு அதனால் விடை காண முடியவில்லை. இந்தப் பட வெளியீட்டைத் தடை செய்யக் கோசமிடும் மற்றும் கோரிக்கை விடும் அமைப்பினர், தனிமனிதர்கள் இந்த வினாக்களுக்குத் தெளிவான விடையினைப் பகர வேண்டும் என வினயமாய் வேண்டி இக் கட்டுரையை ஆரம்பிக்கிறேன்.
1. விஸ்வரூபம் எனும் படத்திற்கு எதிராய் மட்டும் இஸ்லாத்தின் பேரில் இவ்வளவு கோசங்களும் கோரிக்கைகளும் முன்வைக்கப்படுகிறதென்றால் இதுவரைக்கும் தமிழகத்திலிருந்து வெளியான ஏனைய திரைப்படங்களனைத்தையும் நீங்கள் ஏற்று அவைகளை இஸ்லாமியர்கள் பார்க்க முடியும் என அங்கீகரிக்கின்றீர்களா?
2. இஸ்லாம் அல்லாத ஒருத்தரின் தொழில் முயற்சி அல்லது கருத்துச் சுதந்திரத்திற்கு தடைவிதிக்குமாறும் கண்டிக்குமாறும் மார்க்கத்தில் எங்காவது தெரிவிக்கப்பட்டிருக்கிறதா?
3. இஸ்லாமியர்கள் தீவிரவாதிகளாக சித்தரிக்கப்படுகின்ற திரைப்படக் காட்சிகள் குறித்து கண்டனங்களையும் கடுமையான விமர்சனங்களையும் முன்வைக்கும் நீங்கள் இஸ்லாத்தின் பெயரில் தீவிரவாதம் செய்துகொண்டிருப்போருக்கு எதிராக எப்போதாவது குரல் கொடுத்திருக்கிறீர்களா? அன்றேல் அவர்கள் எம்மைச் சார்ந்தவர்களல்ல என பகிரங்கமாக அறிக்கை விட்டிருக்கிறீர்களா?
4. தமிழக சினிமாக்கள் சில பாகிஸ்தானிய தீவிரவாதிகளின் செயற்பாடுகளைச் சித்தரிக்கின்றன. அவற்றை நீங்கள் இஸ்லாமியர்களைப் புண்படுத்துவதாகக் கோசமிடுகிறீர்கள். அவ்வாறானால் அவர்களின் தீவிரவாதத்தை நீங்கள் ஏற்றுக்கொள்கிறீர்களா? அன்றேல் அவர்களைச் சித்தரிக்கும் போது நீங்கள் ஏன் கொதித்தெழவேண்டும்?
5. அண்மையில் காஷ;மீரின் பூஞ்ச் மாவட்டதில் அத்துமீறி நுழைந்த பாகிஸ்தானியப் படையினர் தாக்குதல் நடாத்தியது மாத்திரமல்லாமல் ரத்தவெள்ளத்தில் கிடந்த இந்தியச் சிப்பாய்களின் தலையையும் துண்டித்துச் சென்றனர். இந்தச் செயல் குறித்து எந்த இஸ்லாமிய அமைப்பாவது இது வரைக்கும் எந்தக் கண்டனத்தையாவது தெரிவித்துள்ளனவா? ஆனால் இந்தச் சம்பவம் படமாக்கப்படும் போது மாத்திரம் அந்தப் படத்திற்கு எதிராகக் காரமான கண்டனங்கள் எழுப்பப்படுகிறதே அது நியாயமா?
6. இஸ்லாம் அறியாத ஒருத்தர் இஸ்லாத்தைக் கொச்சைப்படுத்திய தருணங்களில் எப்போதாவது தேசத்தின் அமைதி சீர்குழையும் வகையில் முஹம்மது நபி எதிர்ப்புத் தெரிவித்ததாய் ஏதும் வரலாறு இருக்கின்றதா? அன்றேல் முஹம்மது நபி இன்று இருந்திருந்தால் அவர்கள் இவ்வாறுதான் அதை எதிர்கொண்டிருப்பார்கள் என்பதற்கு ஏதாவது ஆதாரம் வைத்திருக்கிறீர்களா?
7. இஸ்லாமியர்களைத் தீவிரவாதியாய்ச் சித்தரிக்கும் சினிமாக்களுக்கு எதிராய்க் குரல் கொடுக்கும் நீங்கள் இஸ்லாமியராய் இருந்து தீவிரவாதம் செய்வோர்களுக்கெதிராய் மட்டும் ஏன் மூச்சுக்கூட விடுவதில்லை?
8. இஸ்லாமியர்களே இஸ்லாத்தில் இல்லாத விடயங்களை இஸ்லாம் என்று அரங்கேற்றம் போது கண்டும் காணாதது போல் இருந்துகொள்ளும் நீங்கள் இஸ்லாம் அல்லாத ஒருத்தர் இஸ்லாம் பற்றிய புரிதலின்றிச் செய்யும் செயல்களை மட்டும் ஏன் இவ்வளவு அலட்டிக்கொள்கிறீர்கள்? தங்களுக்குப் பாதகம் ஏற்படாதவாறு வசதிக்கேற்றாற் போல தூரத்திலுள்ள பிரச்சினைக்கு கண்டனம் தெரிவிப்பவர்கள் பக்கத்திலே சூழ நடைபெறுகின்ற இஸ்லாமிய விரோதச் செயலைக் கண்டுகொள்ளாதது ஏன்?
9. விஸ்வரூபம் படத்திற்கு இலங்கையில் தடைவிதிக்க கடும் பிரயத்தணம் எடுத்த அகில இலங்கை தௌஹீத் ஜமாஆத்தினரிடத்திலும் முஹம்மது நபியைக் கேவலப்படுத்துவதான திரைப்படத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்த உள்ளங்களிடத்திலும் வினவ ஒரு பிரத்தியோகமான வினா இருக்கிறது. அண்மைக் காலங்களாக இலங்கையின் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர் ஒருத்தர் ஷpர்க்கான விடயங்களை அடிக்கடி பாராளுமன்றத்தில் பேசி வருகிறார். அவருக்கெதிராகக் கிளர்ந்தெழுவதும் ஆர்ப்பாட்டம் நடாத்துவதும் எப்போது?
இந்தக் கேள்விகள் அனைத்துக்குமான தெளிவை சம்பந்தப்பட்டவர்களிடமிருந்து நான் எதிர்பார்த்து நிற்கின்றேன்.
இந்த உலகம் ஒன்றும் குறித்த சமயத்தவருக்காய் மட்டும் படைக்கப்பட்ட ஒன்றல்ல. இங்கு எல்லோரும் வாழ்கிறார்கள். எல்லோரும் தங்கள் தங்கள் கொள்கையைப் பின்பற்றுகிறார்கள். யாரின் மீதும் யாரும் தமது கொள்கையைப் திணிக்க முடியாது. ஆனால் விரும்புபவர்கள் தமது கொள்கையை மாற்றிக்கொண்டு இன்னொன்றைப் பின்பற்றவும் கூடும். ஸூறதுல் பகராவில் இடம்பெறும் அதிகாரத்தின் வசனம் (ஆயத்துல் குர்ஸி) இதனைத் தெளிவாக வலியுறுத்துகின்றது.
அண்மையில் கூட ஷஷசகிப்புத் தன்மையின் விளைவுதான் சகவாழ்வு என இஸ்லாம் கருதுகிறது|| என்று இஸ்லாமியச் சகோதரர் ஒருத்தர் தெளிவாகப் பேசியிருந்தார். இப்படியாக இஸ்லாம் மிக அழகாக மாற்று மதக் காரர்களுடனான உறவை ஒழுங்குபடுத்தி வரவேற்கும் போது அவர்களில் குறைகண்டு அவர்களது செயற்பாடுகளுக்குக் கண்டனங்களும் ஆர்ப்பாட்டங்களும் செய்து அவர்களை ஒட்டுமொத்த இஸ்லாமியர்களினதும் எதிரிகளாகச் சித்தரித்தல் எந்தளவு இஸ்லாமிய நடைமுறை என்பதனை நாமனைவரும் சற்று சிந்தித்துப் பார்க்கவேண்டும்.
தற்போது சினிமாத்துறை மற்றும் ஏனைய ஊடகங்கள் யாவும் பெரும்பாலும் இஸ்லாமிய மார்க்கத்தில் அனுமதிக்கப்படாத ஏராளமான விடயங்களைத் தாங்கியே வருகின்றன. அதற்காக அந்த விடயங்களைச் செய்யும் மாற்று மதச் சகோதரர்களுடன் நாம் சண்டை போட முடியாது. அவர்கள் எமது மார்க்கத்திற்கு இசைவாகத்தான் தமது வேலைகளைச் செய்யவேண்டும் என எதிர்பார்க்கவும் முடியாது. இங்குதான் சகவாழ்வுக்கான சகிப்புத் தன்மை அவசியமாகின்றது.
இதற்கான நிகழ்காலத் தீர்வு யாதெனில் இஸ்லாமியர்களை அவ்வாறான விடயங்களிலிருந்து தூரமாகுமாறு அறிவுறுத்துவது மட்டுமேயன்றி வேறில்லை. எமக்குள்ளே தீர்வை சரிசெய்ய முயற்சிக்காமல் மற்றவர்களுடன் முட்டிமோதுதல் ஒருபோதும் இஸ்லாமிய வழிமுறையாகாது. மற்றப்படி எமது மார்க்கத்தை இழிவு படுத்துவதற்கே திட்டமிட்டு மாற்றுமதச் சகோதரர்கள் முயற்சித்தால் அவர்களுக்கு ஏதோ ஒரு வகையில் அமைதியாகத் தெளிவுபடுத்த முயற்சிக்கலாம். அதுவும் அவர்கள் பிழையாகச் சொல்லுகின்ற, சித்தரிக்கின்ற விடயம் எம்மிடத்தே இல்லாதபட்சத்தில் மாத்திரமே. அத்தைகைய தவறு உண்மையிலேயே எம்மவர்களிடம் காணப்பட்டால் அதை சரிசெய்வதில்தான் அதிக அக்கறை காட்ட வேண்டும்.
இந்த சினிமாக்கள் தொடர்பான பிரச்சினையில் இஸ்லாமியர்களைத் தீவிரவாதிகளாகக் காட்ட இந்திய சினிமா முற்படுவது தொடர்பில்தான் இதுவரைக்கும் பல சர்ச்சைககள் கிளம்பியுள்ளன. ஏனெனில் இஸ்லாம் யுத்தத்தினையோ வன்முறையையோ வரவேற்று வளர்க்கும் மார்க்கம் அல்ல. மாறாக இஸ்லாம் என்ற சொல்லின் அர்த்தமே அமைதியும் சமாதானமும்தான்.
அல்குர்ஆனில் யுத்தம் என்பதைக்குறிக்கும் “ஹர்ப்” எனும் சொல் 6 இடங்களில் மாத்திரமே இடம்பெற்றுள்ளது. ஆனால் சமாதானத்தைக் குறிக்கும் “சில்ம்” எனும் சொல் 110 இடங்களில் இடம்பெற்றுள்ளது.
ஆனால் இஸ்லாமியர்களைத் தீவிரவாதிகளாகக் காண்பிக்க சினிமாக்கள் மற்றும் பிற ஊடகங்கள் முற்படுகிறதென்றால் அவர்களொன்றும் எந்தவொரு அடிப்படையுமின்றி அதனைச் செய்யவில்லை. இஸ்லாமியர்களின் பேரில் உண்மையிலேயே உலகில் தீவிரவாத இயக்கங்கள் இயங்குவதனாலேயே இதுவரைக்கும் அவர்கள் அவ்வாறு காண்பிக்கிறார்கள். எனவே இங்கு மாற்று மதத்தவர்களுடன் சீரிப்பாய்வதை விடுத்து எம்மவர்களை அவ்வாறான தீவிரவாதச் செயல்ககளைப் புரிவதிலிருந்து தடுத்து நிறுத்தவேண்டும். அன்றேல் அவர்கள் எமது மார்க்கத்தில் இல்லாத ஒன்றையே செய்கிறார்கள், அவர்கள் எம்மைச் சார்ந்தவர்களல்ல என்று பகிரங்கப்படுத்த வேண்டும். அவ்வாறு செய்தால் அந்தச் சினிமாக்களின் சித்தரிப்புக்கள் எம்மை ஒரு போதும் காயப்படுத்தாது. ஏனெனில் அந்தச் சினிமாக்கள் காண்பிப்பது எம்மைச் சாராத ஒரு கூட்டத்தினரையே என ஆறுதலடைய முடியும்.
இப்படியாகப் பிரச்சினைகள் எமக்குள்ளேயே இருக்க கண்டனங்கள் என்றும் ஆர்ப்பாட்டங்கள் என்றும் தேசத்தின் அமைதி சீர்கெடும் வகையில் நாம் நடந்துகொள்வதும் எமது மாற்றுமதச் சகோதரர்களின் தொழில் முயற்சிக்குத் தடை விதிப்பதும் இஸ்லாமிய நடைமுறைகளல்ல என்பதே எனது வாதம். இவ்வாறான நடைமுறைகளானது மென்மேலும் எம்மீதான தப்பான அபிப்பிராயங்களையே மற்றவர்களுக்கு உண்டுபண்ணும் என்பதில் எவ்விதச் சந்தேகமுமில்லை.
கடைசியாக ஒரு உதாரணத்தைச் சொல்லி இந்தக் கட்டுரையை முடிக்கிறேன். பல்லின மக்கள் வாழும் ஒரு பிரதேசத்தில் மாற்று மத சகோதரன் ஒருத்தன் பன்றியிறைச்சி வியாபாரம் செய்கிறானென்றால் இரவோடு இரவாச் சென்று அவனது கடையைத் தீயிட்டுக்கொழுத்திவிட்டு வருவதோ அல்லது அந்தக் கடையை மூடுமாறு ஆர்ப்பாட்டம் நடாத்துவதோ, அரசாங்கத்திடம் கோரிக்கை விடுப்பதோ தீர்வு அல்ல. எமது சமயத்தாரிடம், பன்றியிறைச்சி ஹராமானது. அதனை உட்கொள்வதற்கு மார்க்கத்தில் தடைசெய்யப்பட்டுள்ளது என அறிவுறுத்தி அதிலிருந்து ஒதுங்கியிருப்பதே சகவாழ்வுக்கான சகிப்புத் தன்மையாகும்.
நன்றி: ''கிழக்கு'' வார இதழ் - 14
தமிழகத்தில் இஸ்லாமியர்கள் அந்தத் திரைப்படம் வெளியிடத் தடை விதிக்குமாறு கோரியதை அடுத்து தமிழக அரசு தடை விதித்தமை, இந்தத் திரைப்படத்தை பெரும்பாலான இஸ்லாமியர் விரும்புகிறார்கள் என கமல் தெரிவித்தமை, விஸ்வரூபம் படத்தைத் தடை செய்யவேண்டாம் என நபிகளாரின் பிறந்த தின வாழ்த்தோடு சேர்த்து இஸ்லாமிய நண்பர்களிடம் பிரபல நடிகர் ரஜனிகாந்த் வேண்டிக்கொண்டமை மற்றும் இலங்கையில் விஸ்வரூபம் பட வெளியீட்டைத் தடை செய்ய தாங்கள் எடுத்த முயற்சி வெற்றியளித்துள்ளதாக அகில இலங்கை தௌஹீத் ஜமாத்தினர் தெரிவித்தமை என இந்தத் திரைப்படம் தொடர்பான சேதிகளும் மறைமுக விளம்பரங்களும் தொடர்ச்சியாக ஊடகங்களில் வெளியாகிக் கொண்டே இருக்கின்றன.
இதற்கு முன்னர் முஹம்மது நபியைக் கேவலப்படுத்துவதான அமெரிக்கத் திரைப்பட விவகாரம் சூடுபிடித்திருந்தது.
இந்த செய்திகள் அனைத்தையும் பார்க்கும் போது எனக்குள் சில வினாக்கள் எழுந்துகொண்டே இருக்கின்றன. எனது அறிவிற்கு அதனால் விடை காண முடியவில்லை. இந்தப் பட வெளியீட்டைத் தடை செய்யக் கோசமிடும் மற்றும் கோரிக்கை விடும் அமைப்பினர், தனிமனிதர்கள் இந்த வினாக்களுக்குத் தெளிவான விடையினைப் பகர வேண்டும் என வினயமாய் வேண்டி இக் கட்டுரையை ஆரம்பிக்கிறேன்.
1. விஸ்வரூபம் எனும் படத்திற்கு எதிராய் மட்டும் இஸ்லாத்தின் பேரில் இவ்வளவு கோசங்களும் கோரிக்கைகளும் முன்வைக்கப்படுகிறதென்றால் இதுவரைக்கும் தமிழகத்திலிருந்து வெளியான ஏனைய திரைப்படங்களனைத்தையும் நீங்கள் ஏற்று அவைகளை இஸ்லாமியர்கள் பார்க்க முடியும் என அங்கீகரிக்கின்றீர்களா?
2. இஸ்லாம் அல்லாத ஒருத்தரின் தொழில் முயற்சி அல்லது கருத்துச் சுதந்திரத்திற்கு தடைவிதிக்குமாறும் கண்டிக்குமாறும் மார்க்கத்தில் எங்காவது தெரிவிக்கப்பட்டிருக்கிறதா?
3. இஸ்லாமியர்கள் தீவிரவாதிகளாக சித்தரிக்கப்படுகின்ற திரைப்படக் காட்சிகள் குறித்து கண்டனங்களையும் கடுமையான விமர்சனங்களையும் முன்வைக்கும் நீங்கள் இஸ்லாத்தின் பெயரில் தீவிரவாதம் செய்துகொண்டிருப்போருக்கு எதிராக எப்போதாவது குரல் கொடுத்திருக்கிறீர்களா? அன்றேல் அவர்கள் எம்மைச் சார்ந்தவர்களல்ல என பகிரங்கமாக அறிக்கை விட்டிருக்கிறீர்களா?
4. தமிழக சினிமாக்கள் சில பாகிஸ்தானிய தீவிரவாதிகளின் செயற்பாடுகளைச் சித்தரிக்கின்றன. அவற்றை நீங்கள் இஸ்லாமியர்களைப் புண்படுத்துவதாகக் கோசமிடுகிறீர்கள். அவ்வாறானால் அவர்களின் தீவிரவாதத்தை நீங்கள் ஏற்றுக்கொள்கிறீர்களா? அன்றேல் அவர்களைச் சித்தரிக்கும் போது நீங்கள் ஏன் கொதித்தெழவேண்டும்?
5. அண்மையில் காஷ;மீரின் பூஞ்ச் மாவட்டதில் அத்துமீறி நுழைந்த பாகிஸ்தானியப் படையினர் தாக்குதல் நடாத்தியது மாத்திரமல்லாமல் ரத்தவெள்ளத்தில் கிடந்த இந்தியச் சிப்பாய்களின் தலையையும் துண்டித்துச் சென்றனர். இந்தச் செயல் குறித்து எந்த இஸ்லாமிய அமைப்பாவது இது வரைக்கும் எந்தக் கண்டனத்தையாவது தெரிவித்துள்ளனவா? ஆனால் இந்தச் சம்பவம் படமாக்கப்படும் போது மாத்திரம் அந்தப் படத்திற்கு எதிராகக் காரமான கண்டனங்கள் எழுப்பப்படுகிறதே அது நியாயமா?
6. இஸ்லாம் அறியாத ஒருத்தர் இஸ்லாத்தைக் கொச்சைப்படுத்திய தருணங்களில் எப்போதாவது தேசத்தின் அமைதி சீர்குழையும் வகையில் முஹம்மது நபி எதிர்ப்புத் தெரிவித்ததாய் ஏதும் வரலாறு இருக்கின்றதா? அன்றேல் முஹம்மது நபி இன்று இருந்திருந்தால் அவர்கள் இவ்வாறுதான் அதை எதிர்கொண்டிருப்பார்கள் என்பதற்கு ஏதாவது ஆதாரம் வைத்திருக்கிறீர்களா?
7. இஸ்லாமியர்களைத் தீவிரவாதியாய்ச் சித்தரிக்கும் சினிமாக்களுக்கு எதிராய்க் குரல் கொடுக்கும் நீங்கள் இஸ்லாமியராய் இருந்து தீவிரவாதம் செய்வோர்களுக்கெதிராய் மட்டும் ஏன் மூச்சுக்கூட விடுவதில்லை?
8. இஸ்லாமியர்களே இஸ்லாத்தில் இல்லாத விடயங்களை இஸ்லாம் என்று அரங்கேற்றம் போது கண்டும் காணாதது போல் இருந்துகொள்ளும் நீங்கள் இஸ்லாம் அல்லாத ஒருத்தர் இஸ்லாம் பற்றிய புரிதலின்றிச் செய்யும் செயல்களை மட்டும் ஏன் இவ்வளவு அலட்டிக்கொள்கிறீர்கள்? தங்களுக்குப் பாதகம் ஏற்படாதவாறு வசதிக்கேற்றாற் போல தூரத்திலுள்ள பிரச்சினைக்கு கண்டனம் தெரிவிப்பவர்கள் பக்கத்திலே சூழ நடைபெறுகின்ற இஸ்லாமிய விரோதச் செயலைக் கண்டுகொள்ளாதது ஏன்?
9. விஸ்வரூபம் படத்திற்கு இலங்கையில் தடைவிதிக்க கடும் பிரயத்தணம் எடுத்த அகில இலங்கை தௌஹீத் ஜமாஆத்தினரிடத்திலும் முஹம்மது நபியைக் கேவலப்படுத்துவதான திரைப்படத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்த உள்ளங்களிடத்திலும் வினவ ஒரு பிரத்தியோகமான வினா இருக்கிறது. அண்மைக் காலங்களாக இலங்கையின் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர் ஒருத்தர் ஷpர்க்கான விடயங்களை அடிக்கடி பாராளுமன்றத்தில் பேசி வருகிறார். அவருக்கெதிராகக் கிளர்ந்தெழுவதும் ஆர்ப்பாட்டம் நடாத்துவதும் எப்போது?
இந்தக் கேள்விகள் அனைத்துக்குமான தெளிவை சம்பந்தப்பட்டவர்களிடமிருந்து நான் எதிர்பார்த்து நிற்கின்றேன்.
இந்த உலகம் ஒன்றும் குறித்த சமயத்தவருக்காய் மட்டும் படைக்கப்பட்ட ஒன்றல்ல. இங்கு எல்லோரும் வாழ்கிறார்கள். எல்லோரும் தங்கள் தங்கள் கொள்கையைப் பின்பற்றுகிறார்கள். யாரின் மீதும் யாரும் தமது கொள்கையைப் திணிக்க முடியாது. ஆனால் விரும்புபவர்கள் தமது கொள்கையை மாற்றிக்கொண்டு இன்னொன்றைப் பின்பற்றவும் கூடும். ஸூறதுல் பகராவில் இடம்பெறும் அதிகாரத்தின் வசனம் (ஆயத்துல் குர்ஸி) இதனைத் தெளிவாக வலியுறுத்துகின்றது.
அண்மையில் கூட ஷஷசகிப்புத் தன்மையின் விளைவுதான் சகவாழ்வு என இஸ்லாம் கருதுகிறது|| என்று இஸ்லாமியச் சகோதரர் ஒருத்தர் தெளிவாகப் பேசியிருந்தார். இப்படியாக இஸ்லாம் மிக அழகாக மாற்று மதக் காரர்களுடனான உறவை ஒழுங்குபடுத்தி வரவேற்கும் போது அவர்களில் குறைகண்டு அவர்களது செயற்பாடுகளுக்குக் கண்டனங்களும் ஆர்ப்பாட்டங்களும் செய்து அவர்களை ஒட்டுமொத்த இஸ்லாமியர்களினதும் எதிரிகளாகச் சித்தரித்தல் எந்தளவு இஸ்லாமிய நடைமுறை என்பதனை நாமனைவரும் சற்று சிந்தித்துப் பார்க்கவேண்டும்.
தற்போது சினிமாத்துறை மற்றும் ஏனைய ஊடகங்கள் யாவும் பெரும்பாலும் இஸ்லாமிய மார்க்கத்தில் அனுமதிக்கப்படாத ஏராளமான விடயங்களைத் தாங்கியே வருகின்றன. அதற்காக அந்த விடயங்களைச் செய்யும் மாற்று மதச் சகோதரர்களுடன் நாம் சண்டை போட முடியாது. அவர்கள் எமது மார்க்கத்திற்கு இசைவாகத்தான் தமது வேலைகளைச் செய்யவேண்டும் என எதிர்பார்க்கவும் முடியாது. இங்குதான் சகவாழ்வுக்கான சகிப்புத் தன்மை அவசியமாகின்றது.
இதற்கான நிகழ்காலத் தீர்வு யாதெனில் இஸ்லாமியர்களை அவ்வாறான விடயங்களிலிருந்து தூரமாகுமாறு அறிவுறுத்துவது மட்டுமேயன்றி வேறில்லை. எமக்குள்ளே தீர்வை சரிசெய்ய முயற்சிக்காமல் மற்றவர்களுடன் முட்டிமோதுதல் ஒருபோதும் இஸ்லாமிய வழிமுறையாகாது. மற்றப்படி எமது மார்க்கத்தை இழிவு படுத்துவதற்கே திட்டமிட்டு மாற்றுமதச் சகோதரர்கள் முயற்சித்தால் அவர்களுக்கு ஏதோ ஒரு வகையில் அமைதியாகத் தெளிவுபடுத்த முயற்சிக்கலாம். அதுவும் அவர்கள் பிழையாகச் சொல்லுகின்ற, சித்தரிக்கின்ற விடயம் எம்மிடத்தே இல்லாதபட்சத்தில் மாத்திரமே. அத்தைகைய தவறு உண்மையிலேயே எம்மவர்களிடம் காணப்பட்டால் அதை சரிசெய்வதில்தான் அதிக அக்கறை காட்ட வேண்டும்.
இந்த சினிமாக்கள் தொடர்பான பிரச்சினையில் இஸ்லாமியர்களைத் தீவிரவாதிகளாகக் காட்ட இந்திய சினிமா முற்படுவது தொடர்பில்தான் இதுவரைக்கும் பல சர்ச்சைககள் கிளம்பியுள்ளன. ஏனெனில் இஸ்லாம் யுத்தத்தினையோ வன்முறையையோ வரவேற்று வளர்க்கும் மார்க்கம் அல்ல. மாறாக இஸ்லாம் என்ற சொல்லின் அர்த்தமே அமைதியும் சமாதானமும்தான்.
அல்குர்ஆனில் யுத்தம் என்பதைக்குறிக்கும் “ஹர்ப்” எனும் சொல் 6 இடங்களில் மாத்திரமே இடம்பெற்றுள்ளது. ஆனால் சமாதானத்தைக் குறிக்கும் “சில்ம்” எனும் சொல் 110 இடங்களில் இடம்பெற்றுள்ளது.
ஆனால் இஸ்லாமியர்களைத் தீவிரவாதிகளாகக் காண்பிக்க சினிமாக்கள் மற்றும் பிற ஊடகங்கள் முற்படுகிறதென்றால் அவர்களொன்றும் எந்தவொரு அடிப்படையுமின்றி அதனைச் செய்யவில்லை. இஸ்லாமியர்களின் பேரில் உண்மையிலேயே உலகில் தீவிரவாத இயக்கங்கள் இயங்குவதனாலேயே இதுவரைக்கும் அவர்கள் அவ்வாறு காண்பிக்கிறார்கள். எனவே இங்கு மாற்று மதத்தவர்களுடன் சீரிப்பாய்வதை விடுத்து எம்மவர்களை அவ்வாறான தீவிரவாதச் செயல்ககளைப் புரிவதிலிருந்து தடுத்து நிறுத்தவேண்டும். அன்றேல் அவர்கள் எமது மார்க்கத்தில் இல்லாத ஒன்றையே செய்கிறார்கள், அவர்கள் எம்மைச் சார்ந்தவர்களல்ல என்று பகிரங்கப்படுத்த வேண்டும். அவ்வாறு செய்தால் அந்தச் சினிமாக்களின் சித்தரிப்புக்கள் எம்மை ஒரு போதும் காயப்படுத்தாது. ஏனெனில் அந்தச் சினிமாக்கள் காண்பிப்பது எம்மைச் சாராத ஒரு கூட்டத்தினரையே என ஆறுதலடைய முடியும்.
இப்படியாகப் பிரச்சினைகள் எமக்குள்ளேயே இருக்க கண்டனங்கள் என்றும் ஆர்ப்பாட்டங்கள் என்றும் தேசத்தின் அமைதி சீர்கெடும் வகையில் நாம் நடந்துகொள்வதும் எமது மாற்றுமதச் சகோதரர்களின் தொழில் முயற்சிக்குத் தடை விதிப்பதும் இஸ்லாமிய நடைமுறைகளல்ல என்பதே எனது வாதம். இவ்வாறான நடைமுறைகளானது மென்மேலும் எம்மீதான தப்பான அபிப்பிராயங்களையே மற்றவர்களுக்கு உண்டுபண்ணும் என்பதில் எவ்விதச் சந்தேகமுமில்லை.
கடைசியாக ஒரு உதாரணத்தைச் சொல்லி இந்தக் கட்டுரையை முடிக்கிறேன். பல்லின மக்கள் வாழும் ஒரு பிரதேசத்தில் மாற்று மத சகோதரன் ஒருத்தன் பன்றியிறைச்சி வியாபாரம் செய்கிறானென்றால் இரவோடு இரவாச் சென்று அவனது கடையைத் தீயிட்டுக்கொழுத்திவிட்டு வருவதோ அல்லது அந்தக் கடையை மூடுமாறு ஆர்ப்பாட்டம் நடாத்துவதோ, அரசாங்கத்திடம் கோரிக்கை விடுப்பதோ தீர்வு அல்ல. எமது சமயத்தாரிடம், பன்றியிறைச்சி ஹராமானது. அதனை உட்கொள்வதற்கு மார்க்கத்தில் தடைசெய்யப்பட்டுள்ளது என அறிவுறுத்தி அதிலிருந்து ஒதுங்கியிருப்பதே சகவாழ்வுக்கான சகிப்புத் தன்மையாகும்.
நன்றி: ''கிழக்கு'' வார இதழ் - 14
பொலன்னறுவை பெரக்கும்புர விவசாய பிரதேச குளாய் கிணறு ஒன்றிலிருந்து எரிபொருளையொத்த திரவம் ஒன்று வெளிவந்து கொண்டிருப்பதாக பிரதேசத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 185 அடி ஆழம் கொண்டதாக 2011 ஆம் ஆண்டு குறித்த குளாய் கிணறு அமைக்கப்பட்டது. கடந்த சில நாட்களாக இந்த கிணற்றிலிருந்து எரிபொருளையொத்த திரவம் ஒன்று வெளிவந்தவண்ணமுள்ளது.
இதனால் கடந்த சில நாட்களாக இந்த கிணற்று தண்ணீரை பயன்படுத்துவதை மக்கள் தவிர்த்து வருகின்றனர்.
இதேவேளை இச்செய்தியானது காட்டுத்தீ போல அப்பிரதேசம் எங்கும் பரவியதை அடுத்து இதனைப் பார்வையிடுவதற்கு பெருந்தொகையான மக்கள் வருகைதந்தவண்ணம் உள்ளனர்.
இதனால் கடந்த சில நாட்களாக இந்த கிணற்று தண்ணீரை பயன்படுத்துவதை மக்கள் தவிர்த்து வருகின்றனர்.
இதேவேளை இச்செய்தியானது காட்டுத்தீ போல அப்பிரதேசம் எங்கும் பரவியதை அடுத்து இதனைப் பார்வையிடுவதற்கு பெருந்தொகையான மக்கள் வருகைதந்தவண்ணம் உள்ளனர்.
2012 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் சற்று முன்னர் வெளியிடப்பட்டுள்ளது என பரீட்சைகள் திணைக்கள ஆணையாளர் நாயகம் ஜகத் புஷ்பகுமார தெரிவித்தார்.
பரீட்சை பெறுபேறுகளை பரீட்சைகள் திணைக்களத்தின் http://www.doenets.lk என்ற இணையத்தளத்தினூடாக அறிந்துகொள்ள முடியும் என குறிப்பிட்டதுடன் பத்தரமுல்லை மற்றும் கொழும்பை அண்மித்த பாடசாலைகளை சேர்ந்த அதிபர்கள் பெறுபேறுகளை நாளை (31.01.2013) வியாழக்கிழமை காலை பெற்றுக்கொள்ளமுடியும் என குறிப்பிட்டதுடன் ஏனைய பாடசாலைகளுக்கு தபால்மூலம் அனுப்பப்படும் என குறிப்பிட்டார்.
பரீட்சை பெறுபேறுகளை பரீட்சைகள் திணைக்களத்தின் http://www.doenets.lk என்ற இணையத்தளத்தினூடாக அறிந்துகொள்ள முடியும் என குறிப்பிட்டதுடன் பத்தரமுல்லை மற்றும் கொழும்பை அண்மித்த பாடசாலைகளை சேர்ந்த அதிபர்கள் பெறுபேறுகளை நாளை (31.01.2013) வியாழக்கிழமை காலை பெற்றுக்கொள்ளமுடியும் என குறிப்பிட்டதுடன் ஏனைய பாடசாலைகளுக்கு தபால்மூலம் அனுப்பப்படும் என குறிப்பிட்டார்.
புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் இறுதியில் மறைந்திருந்த பிரதேசத்தை அண்டிய பகுதிகளில் 50 ஆயிரம் கண்ணி வெடிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. கண்ணி வெடிகளை அகற்றும் நிறுவனங்களின் பங்களிப்புடன் கண்ணி வெடிகள் அகற்றப்படுகின்றன. இப்பிரதேசத்தில் டேஸ் நிறுவனம் 4 ஆயிரத்து 776 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் கண்ணி வெடிகள் அகற்றப்பட்டுள்ளன.
இதன் போது எல்ரிரிஈயினால் புதைக்கப்பட்ட ஆயிரக்கணக்கான கண்ணி வெடிகளும் அகற்றப்பட்டன. நாளொன்றுக்கு 80 வீதமான கண்ணி வெடிகள் அகற்றப்படுகின்றன. சர்வதேச சாசனங்களை மீறும் வகையில் எல்ரிரிஈயினால் இவ்வாறு கண்ணி வெடிகள் புதைக்கப்பட்டுள்ளதாக டேஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. முல்லைத்தீவு காட்டில் சுற்றாடலுக்கு பாதிப்பில்லாமல் கண்ணிவெடிகள் அகற்றும் பணிகள் இடம்பெறுகின்றன என்று சுயாதின தொலைக்காட்சி தெரிவிக்கின்றது.
இதன் போது எல்ரிரிஈயினால் புதைக்கப்பட்ட ஆயிரக்கணக்கான கண்ணி வெடிகளும் அகற்றப்பட்டன. நாளொன்றுக்கு 80 வீதமான கண்ணி வெடிகள் அகற்றப்படுகின்றன. சர்வதேச சாசனங்களை மீறும் வகையில் எல்ரிரிஈயினால் இவ்வாறு கண்ணி வெடிகள் புதைக்கப்பட்டுள்ளதாக டேஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. முல்லைத்தீவு காட்டில் சுற்றாடலுக்கு பாதிப்பில்லாமல் கண்ணிவெடிகள் அகற்றும் பணிகள் இடம்பெறுகின்றன என்று சுயாதின தொலைக்காட்சி தெரிவிக்கின்றது.
இந்த புதிய விமானம் மூலம் எமது கையடகட்க தொலைபேசியையும் அவதானிக்கலாமாம் அப்ப வாசித்து சிந்தியுங்கள் வேற என்னவெல்லாம் இனி அவதானிக்கப்பட போகுது என்று!
முழு நகரையும் ஒரே நேரத்தில் கண்காணிக்கக்கூடிய திறன்கொண்ட ஆளில்லா உளவு விமானத்தை அமெரிக்கா தயாரித்துள்ளது.இந்த விமானத்தின் மூலம் 20.000 அடி மேலே இருந்து 30 சதுர மைல் பரப்பளவை தெளிவாகக் கண்காணிக்க முடியும். இந்த உளவு விமான தொழிநுட்பத்திற்கு கிரேக்கத்தின் 100 கண்கொண்ட கடவுளான அர்குயினின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
அமெரிக்க பாதுகாப்பு தலைமையகமான பென்டகனின் பாதுகாப்பு தொழிநுட்ப ஆய்வு மையத்தின் 18.5 மில்லியன் டொலர் திட்டத்தில் அர்குஸ் உளவு விமானம் தயாரிக்கப்பட்டுள்ளது.இந்த விமானத்தில் பொருத்தப்பட்டுள்ள கெமராக்கள் ஒரு ஐபோன் கெமராவை விடவும் 225 மடங்கு திறன் கொண்டதாக இருக்கும். இதன்மூலம் இந்த உளவு விமானத்தால் 20,000 அடி உயரத்திலிருந்து 6 அங்குல சிறு பொருளையும் தெளிவாக கண்காணிக்க முடியும்.
அதாவது நாம் கொண்டு செல்லும் கையடக்க தொலைபேசியின் ரகம் குறித்தும் இந்த உளவு விமானத்தால் அவதானிக்க முடியும். இதன்படி முழு யுத்தகளத்திலும் எதிரிப்படைகளின் நகர்வுகளை மட்டுமன்றி அவர்கள் ஏந்திச் செல்லும் பொருட்களையும் தெளிவாக கண்காணிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா கடந்த 2007 ஆம் ஆண்டு தொடக்கம் ஆளில்லா கண்காணிப்பு உளவு விமானங்களை மேம்படுத்தி வரும் போதும் அதனுடைய யுத்தகள செயற்பாடுகள் குறித்து ரகசியம் பேணப்படுகிறது.
முழு நகரையும் ஒரே நேரத்தில் கண்காணிக்கக்கூடிய திறன்கொண்ட ஆளில்லா உளவு விமானத்தை அமெரிக்கா தயாரித்துள்ளது.இந்த விமானத்தின் மூலம் 20.000 அடி மேலே இருந்து 30 சதுர மைல் பரப்பளவை தெளிவாகக் கண்காணிக்க முடியும். இந்த உளவு விமான தொழிநுட்பத்திற்கு கிரேக்கத்தின் 100 கண்கொண்ட கடவுளான அர்குயினின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
அமெரிக்க பாதுகாப்பு தலைமையகமான பென்டகனின் பாதுகாப்பு தொழிநுட்ப ஆய்வு மையத்தின் 18.5 மில்லியன் டொலர் திட்டத்தில் அர்குஸ் உளவு விமானம் தயாரிக்கப்பட்டுள்ளது.இந்த விமானத்தில் பொருத்தப்பட்டுள்ள கெமராக்கள் ஒரு ஐபோன் கெமராவை விடவும் 225 மடங்கு திறன் கொண்டதாக இருக்கும். இதன்மூலம் இந்த உளவு விமானத்தால் 20,000 அடி உயரத்திலிருந்து 6 அங்குல சிறு பொருளையும் தெளிவாக கண்காணிக்க முடியும்.
அதாவது நாம் கொண்டு செல்லும் கையடக்க தொலைபேசியின் ரகம் குறித்தும் இந்த உளவு விமானத்தால் அவதானிக்க முடியும். இதன்படி முழு யுத்தகளத்திலும் எதிரிப்படைகளின் நகர்வுகளை மட்டுமன்றி அவர்கள் ஏந்திச் செல்லும் பொருட்களையும் தெளிவாக கண்காணிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா கடந்த 2007 ஆம் ஆண்டு தொடக்கம் ஆளில்லா கண்காணிப்பு உளவு விமானங்களை மேம்படுத்தி வரும் போதும் அதனுடைய யுத்தகள செயற்பாடுகள் குறித்து ரகசியம் பேணப்படுகிறது.
தமிழர்களின் அரசியல் உரிமைப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கு ஒத்துழைக்காமல் அடம் பிடிக்கும் அரசியல் கட்சிகளுக்கு இம் முயற்சியில் இணைந்துகொள்வதற்கு காலக்கெடு ஒன்றை விதிக்கவேண்டும். குறித்த கால எல்லைக்குள் அவர்கள் ஒத்துழைக்காவிடின் அவர்களைத் தவிர்த்துவிட்டு ஏனைய கட்சிகளுடன்பேசி தமிழர்களின் அரசியல் உரிமைப் பிரச்சினைக்குத் தீர்வை எட்டவேண்டும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
கடந்த 24 ஆம் திகதி நடைபெற்ற மேற்படி ஜனாதிபதியுடனான விஷேட சந்திப்பின் போது, தாம் விடுத்த கோரிக்கைகளை நடைமுறைப்படுத்துவது குறித்து ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச விஷேட கவனம் செலுத்துவார் எனவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியுடனான இச்சந்திப்பின் போது பின்வரும் விடயங்கள் குறித்து ஆராயப்பட்டன.
• இறுதி யுத்தத்தின்போது சரணடைந்து, தொடர்ந்தும் புனர்வாழ்வு பெற்றுவரும் முன்னாள் புலிகள் இயக்க உறுப்பினர்களில், இதுவரை விடுவிக்கப்படாதவர்களை விரைவாக அவர்களது பெற்றோர்கள், உறவினர்களிடம் ஒப்படைத்தல்.
• புனர்வாழ்வு பெற்று வரும் யாழ்.பல்கலைக்கழக மாணவர்களை அவர்களது பெற்றோர்களிடம்
ஒப்படைப்பதை தொடர்ந்தும் முன்னெடுத்தல்.
• இடம் பெயர்ந்த மக்களில் மீளக்குடியேற்றப்பட்டவர்களுக்கான மேலும் விஷேட வாழ்வாதாரத் திட்டங்களை முன்னெடுத்தல்.
• புலிகள் இயக்கத்தில் இருந்தவர்கள் உட்பட அனைத்து இயக்கங்களிலும் இருந்த முன்னாள் உறுப்பினர்களுக்கும் வேலை வாய்ப்புகளில் முன்னுரிமை வழங்குதல்.
• ஜனாதிபதியின் விஷேட நிதி ஒதுக்கீட்டில் தொழிற்சாலைகள், மற்றும் கைத்தொழில் நிறுவனங்களை வடக்கில் நிறுவுவதன் மூலம் வேலையற்ற இளைஞர் , யுவதிகளின் பிரச்சினைக்குத் தீர்வு காணுதல்.
• வட மாகாணத்திற்கான தேர்தல் நடைபெறும் வரை, மாகாண நிர்வாக செயற்பாடுகளை கண்காணிப்பதில் கவனம் செலுத்துதல்.
• இந்திய இழுவலைப் படகுகளின் வருகை காரணமாக வட பகுதி வாழ் கடற்றொழிலாளர்கள் முகங்கொடுக்கும் தொழில் ரீதியான மற்றும் வாழ்வாதாரப் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு காணுதல்.
• உள்நாட்டினுள்ளேயே ஒரு பிரதேசத்து கடற்றொழிலாளர்கள், இன்னொரு பிரதேச மக்களின் கடல் எல்லைக்குள் கடற்றொழிலில் ஈடுபடுவதால் ஏற்படும் அசௌகரியங்களுக்கு தீர்வு காணுதல்.
• புலம் பெயர்ந்து வாழும் தமிழ் பேசும் மக்கள் இரட்டை பிரஜாவுரிமை பெற்றுக்கொள்வதற்கான இலகு நடைமுறையினை துரிதப்படுத்துதல். இதனூடாக இவர்களுக்கு தமது தாய்நாட்டில் முதலீடுகளை மேற்கொள்வதற்கும், தங்களது ஆற்றல்களை தாய்நாட்டின் அபிவிருத்தி மற்றும் சமூக நலன் சார்ந்து பயன்படுத்துவதற்கும், இந்நாட்டின் பிரஜைகள் என்ற வகையில் அரசியலை முன்னெடுப்பதற்கும், அதனூடாக தங்களுக்கு வேண்டிய, சரியான பிரதிநிதிகளைத் தெரிவு செய்வதற்கும் வாய்ப்பளித்தல்.
• அரசியலுரிமை பிரச்சினைக்குத் தீர்வு காணும் விடயத்தில் தொடர்ந்தும் ஒத்துழையாமையை கடைப்பிடித்து வரும் கட்சிகளுக்கு, குறிப்பிட்ட காலக்கேட்டை வழங்குவதோடு, அக்கட்சிகள் தொடர்ந்தும் ஒத்துவராத பட்சத்தில், பங்களிப்பு வழங்குவதற்கு முன்வரும் அரசியல் கட்சிகளோடு பேசி அரசியலுரிமை பிரச்சினைக்குத் தீர்வு காணுதல்.
• வடக்கின் சுதந்திரமான சிவில் நிர்வாக செயற்பாடுகளில் படையினரின் ஒத்துழைப்பை மேலும் அதிகமாக வலுப்படுத்துதல், ஆகிய விடயங்களை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்களிடம் எடுத்து விளக்கியிருந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள், இது போன்ற ஜனாதிபதி அவர்களுடான விஷேட சந்திப்புகள் தொடரும் என்றும் தமிழ் பேசும் மக்களின் அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு காண்பதற்கான நடைமுறைச் சாத்தியமான சகல வழிமுறைகளும் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இச்சந்திப்பில் அமைச்சர்களான பசில் ராஜபக்ஷ, நிமல் சிறிபால டி சில்வா, றிஷாட் பதியுதீன், ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க, ஈ.பி.டி.பி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.தவராஜா ஆகியோர் உடனிருந்தனர்.
கடந்த 24 ஆம் திகதி நடைபெற்ற மேற்படி ஜனாதிபதியுடனான விஷேட சந்திப்பின் போது, தாம் விடுத்த கோரிக்கைகளை நடைமுறைப்படுத்துவது குறித்து ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச விஷேட கவனம் செலுத்துவார் எனவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியுடனான இச்சந்திப்பின் போது பின்வரும் விடயங்கள் குறித்து ஆராயப்பட்டன.
• இறுதி யுத்தத்தின்போது சரணடைந்து, தொடர்ந்தும் புனர்வாழ்வு பெற்றுவரும் முன்னாள் புலிகள் இயக்க உறுப்பினர்களில், இதுவரை விடுவிக்கப்படாதவர்களை விரைவாக அவர்களது பெற்றோர்கள், உறவினர்களிடம் ஒப்படைத்தல்.
• புனர்வாழ்வு பெற்று வரும் யாழ்.பல்கலைக்கழக மாணவர்களை அவர்களது பெற்றோர்களிடம்
ஒப்படைப்பதை தொடர்ந்தும் முன்னெடுத்தல்.
• இடம் பெயர்ந்த மக்களில் மீளக்குடியேற்றப்பட்டவர்களுக்கான மேலும் விஷேட வாழ்வாதாரத் திட்டங்களை முன்னெடுத்தல்.
• புலிகள் இயக்கத்தில் இருந்தவர்கள் உட்பட அனைத்து இயக்கங்களிலும் இருந்த முன்னாள் உறுப்பினர்களுக்கும் வேலை வாய்ப்புகளில் முன்னுரிமை வழங்குதல்.
• ஜனாதிபதியின் விஷேட நிதி ஒதுக்கீட்டில் தொழிற்சாலைகள், மற்றும் கைத்தொழில் நிறுவனங்களை வடக்கில் நிறுவுவதன் மூலம் வேலையற்ற இளைஞர் , யுவதிகளின் பிரச்சினைக்குத் தீர்வு காணுதல்.
• வட மாகாணத்திற்கான தேர்தல் நடைபெறும் வரை, மாகாண நிர்வாக செயற்பாடுகளை கண்காணிப்பதில் கவனம் செலுத்துதல்.
• இந்திய இழுவலைப் படகுகளின் வருகை காரணமாக வட பகுதி வாழ் கடற்றொழிலாளர்கள் முகங்கொடுக்கும் தொழில் ரீதியான மற்றும் வாழ்வாதாரப் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு காணுதல்.
• உள்நாட்டினுள்ளேயே ஒரு பிரதேசத்து கடற்றொழிலாளர்கள், இன்னொரு பிரதேச மக்களின் கடல் எல்லைக்குள் கடற்றொழிலில் ஈடுபடுவதால் ஏற்படும் அசௌகரியங்களுக்கு தீர்வு காணுதல்.
• புலம் பெயர்ந்து வாழும் தமிழ் பேசும் மக்கள் இரட்டை பிரஜாவுரிமை பெற்றுக்கொள்வதற்கான இலகு நடைமுறையினை துரிதப்படுத்துதல். இதனூடாக இவர்களுக்கு தமது தாய்நாட்டில் முதலீடுகளை மேற்கொள்வதற்கும், தங்களது ஆற்றல்களை தாய்நாட்டின் அபிவிருத்தி மற்றும் சமூக நலன் சார்ந்து பயன்படுத்துவதற்கும், இந்நாட்டின் பிரஜைகள் என்ற வகையில் அரசியலை முன்னெடுப்பதற்கும், அதனூடாக தங்களுக்கு வேண்டிய, சரியான பிரதிநிதிகளைத் தெரிவு செய்வதற்கும் வாய்ப்பளித்தல்.
• அரசியலுரிமை பிரச்சினைக்குத் தீர்வு காணும் விடயத்தில் தொடர்ந்தும் ஒத்துழையாமையை கடைப்பிடித்து வரும் கட்சிகளுக்கு, குறிப்பிட்ட காலக்கேட்டை வழங்குவதோடு, அக்கட்சிகள் தொடர்ந்தும் ஒத்துவராத பட்சத்தில், பங்களிப்பு வழங்குவதற்கு முன்வரும் அரசியல் கட்சிகளோடு பேசி அரசியலுரிமை பிரச்சினைக்குத் தீர்வு காணுதல்.
• வடக்கின் சுதந்திரமான சிவில் நிர்வாக செயற்பாடுகளில் படையினரின் ஒத்துழைப்பை மேலும் அதிகமாக வலுப்படுத்துதல், ஆகிய விடயங்களை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்களிடம் எடுத்து விளக்கியிருந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள், இது போன்ற ஜனாதிபதி அவர்களுடான விஷேட சந்திப்புகள் தொடரும் என்றும் தமிழ் பேசும் மக்களின் அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு காண்பதற்கான நடைமுறைச் சாத்தியமான சகல வழிமுறைகளும் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இச்சந்திப்பில் அமைச்சர்களான பசில் ராஜபக்ஷ, நிமல் சிறிபால டி சில்வா, றிஷாட் பதியுதீன், ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க, ஈ.பி.டி.பி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.தவராஜா ஆகியோர் உடனிருந்தனர்.
அரசியல் தீர்வுப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காணப்பட வேண்டும் என்பதில் அரசு அக்கறை காட்டவில்லை. எங்களைப் பொறுத்தவரை அரசியல் தீர்வு இல்லாத தற்போதைய நிலை தொடருமாக இருந்தால் எங்கள் மக்களுக்கு எதிர்காலத்தில் பெரும் ஆபத்து ஏற்படக் கூடும். இந்நிலை தொடர அனுமதிக்க முடியாது.
இவ்வாறு கொழும்புப் பத்திரிகை ஒன்றுக்கு அளித்த செவ்வியில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்திருக்கிறார். வழக்கம் போல விசயத்தை விளங்கிக் கொண்டுவிட்டதைப் போல அவர் காட்ட முற்பட்டுள்ளார். ஆனால் தலைவர்கள் எனப்படுவோரின் பொறுப்பு, ஆபத்தை நோக்கிப் போய்க்கொண்டிருக்கிறோம் என்பதைச் சொல்லிக்கொண்டிருப்ப தல்ல.
அதைத் தடுப்பதற்கு என்ன செய்துகொண்டிருக்கிறார்கள் என்பதையும் சொல்ல வேண்டும்.
தீர்வுக்கு அரசு அக்கறை காட்டவில்லை, இதைத் தொடர விட்டால் தமிழ்மக்களுக்கு எதிர்காலத்தில் இன்னும் மோசமான நிலைமைதான் என்று புரிந்துகொண்டிருக்கிறார் சரி. அக்கறை காட்டாத அரசை, அதே பகைநிலையில் வைத்துக்கொள்வதன் மூலமும் முகந்திருப்பிக்கொண்டு நிற்பதன் மூலமும் என்ன சாதிக் கலாம்? இவர்கள் விரும்பாததாகச் சொல்லிக்கொள்கிற, அரசு விரும்புகிற இதேநிலை தொடர்வதற்குத்தானே உதவிக்கொண்டிருக்கிறார்கள்?
சர்வதேசத்திடம் சொல்லி, இலங்கை அரசை தீர்வை வைக்கப் பண்ணிவிடலாம் என்பது இவர்களது நோக்கமாக இருந்தால், அந்தச் சர்வதேசத்திற்காவது நாம் எதிர்பார்க்கும் தீர்வு என்ன தீர்வு என்பதைச் சொல்லவேண்டுமல்லவா! இவர்கள் ஒவ்வொரு முறை யும் இங்கு வரும் சர்வதேச நாட்டினரிடம் என்ன சொல்கிறார்கள்? அரசாங்கம் தீர்வை வைக்குதில்லை, கொஞ்சம் கவனியுங்கோ – அவ்வளவுதான்.
அவர்கள் இதற்கு என்ன சொல்வார்கள்? என்ன தீர்வு வேணு மெண்டதை அரசாங்கத்துடன் இருந்து கதையுங்கோ. இவர்களோ அவர்கள் சொல்வதை விளங்காத மாதிரி அப்பாவிகளாக முகத்தை வைத்துக்கொண்டு, மீண்டும் அதையே அவர்களிடம் சொல்கிறார்கள். தீர்வை எழுதிக்கொண்டு வந்து இலங்கை அரசிடம் கொடுத்துப் பேசவேண்டியது அமெரிக்காவினதோ தென்னாபிரிக்காவினதோ வேலை என்று நினைக்கிறார்களா?
இவர்கள் முதலில் ஒரு தீர்வுத்திட்ட நகலை வரைய வேண்டும். அது இந்த நாட்டிலுள்ள அனைத்து சமூகங்களும் மறுக்க முடியாத தொரு திட்டம்தான் என்று சர்வதேச நாடுகளுக்கு உணர்த்த வேண்டும். அதன்பிறகல்லவா அவர்கள் அரசிடம் அதற்கு அழுத்தம் தருவார்கள். அதன்பிறகுதானே பேச்சுக்கள் நடந்து ஒரு சமரசப்புள்ளி உருவாகும்.
இன்றைய நிலை தொடர்ந்தால் எதிர்காலத்தில் எங்களுக்குத் தான் இழப்பு அதிகம் என்றுணர்ந்த நாங்கள், இதை அவசரமாகச் செய்யவேண்டுமா? அல்லது இலங்கை அரசுதான் தீர்வை வைக்க வேண்டும் என்று சொல்லிக்கொண்டே காலத்தை இழுப்பதா? சம்பந்தர் அந்தப் பேட்டியில், சர்வதேச சமூகத்துக்கு எமது நிலைமையை தெளிவாக எடுத்துக்காட்ட வேண்டுமானால் எமது மக்கள் மீண்டும் சாத்வீகப் போராட்டத்தில் இறங்கவேண்டும் என்றும் சொல்கிறார். என்ன சுத்த வருகிறார்? சர்வதேசத்துக்கு எங்கள் நிலைமை இன்னும் விளங்கவில்லை என்றா? அப்போ இதற்கு முன் நடந்த ஒவ்வொரு தேர்தலின் முடிவிலும் சர்வதேசம் வந்து இறங்கும் என்று சொன்னது, விளங்காமலே வருவார்கள் என்ற நம்பிக்கையிலா?
மீண்டும் ஆரம்பத்திலிருந்து தொடங்கி, இந்த நிலைமையை மேலும் 60 வருசத்துக்கு இழுத்துச் செல்லவா மறுபடியும் சாத்வீகப் போராட்டம்? எருமைமாடு ஏரோப்பிளேன் ஓட்டும் என்று சொன்னாலும் கேட்டுக்கொண்டிருக்கக் கூடிய கேணையர்கள் என்றா இந்தத் தலைவர்கள் எங்களை நினைக்கிறார்கள்?
இவ்வாறு கொழும்புப் பத்திரிகை ஒன்றுக்கு அளித்த செவ்வியில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்திருக்கிறார். வழக்கம் போல விசயத்தை விளங்கிக் கொண்டுவிட்டதைப் போல அவர் காட்ட முற்பட்டுள்ளார். ஆனால் தலைவர்கள் எனப்படுவோரின் பொறுப்பு, ஆபத்தை நோக்கிப் போய்க்கொண்டிருக்கிறோம் என்பதைச் சொல்லிக்கொண்டிருப்ப தல்ல.
அதைத் தடுப்பதற்கு என்ன செய்துகொண்டிருக்கிறார்கள் என்பதையும் சொல்ல வேண்டும்.
தீர்வுக்கு அரசு அக்கறை காட்டவில்லை, இதைத் தொடர விட்டால் தமிழ்மக்களுக்கு எதிர்காலத்தில் இன்னும் மோசமான நிலைமைதான் என்று புரிந்துகொண்டிருக்கிறார் சரி. அக்கறை காட்டாத அரசை, அதே பகைநிலையில் வைத்துக்கொள்வதன் மூலமும் முகந்திருப்பிக்கொண்டு நிற்பதன் மூலமும் என்ன சாதிக் கலாம்? இவர்கள் விரும்பாததாகச் சொல்லிக்கொள்கிற, அரசு விரும்புகிற இதேநிலை தொடர்வதற்குத்தானே உதவிக்கொண்டிருக்கிறார்கள்?
சர்வதேசத்திடம் சொல்லி, இலங்கை அரசை தீர்வை வைக்கப் பண்ணிவிடலாம் என்பது இவர்களது நோக்கமாக இருந்தால், அந்தச் சர்வதேசத்திற்காவது நாம் எதிர்பார்க்கும் தீர்வு என்ன தீர்வு என்பதைச் சொல்லவேண்டுமல்லவா! இவர்கள் ஒவ்வொரு முறை யும் இங்கு வரும் சர்வதேச நாட்டினரிடம் என்ன சொல்கிறார்கள்? அரசாங்கம் தீர்வை வைக்குதில்லை, கொஞ்சம் கவனியுங்கோ – அவ்வளவுதான்.
அவர்கள் இதற்கு என்ன சொல்வார்கள்? என்ன தீர்வு வேணு மெண்டதை அரசாங்கத்துடன் இருந்து கதையுங்கோ. இவர்களோ அவர்கள் சொல்வதை விளங்காத மாதிரி அப்பாவிகளாக முகத்தை வைத்துக்கொண்டு, மீண்டும் அதையே அவர்களிடம் சொல்கிறார்கள். தீர்வை எழுதிக்கொண்டு வந்து இலங்கை அரசிடம் கொடுத்துப் பேசவேண்டியது அமெரிக்காவினதோ தென்னாபிரிக்காவினதோ வேலை என்று நினைக்கிறார்களா?
இவர்கள் முதலில் ஒரு தீர்வுத்திட்ட நகலை வரைய வேண்டும். அது இந்த நாட்டிலுள்ள அனைத்து சமூகங்களும் மறுக்க முடியாத தொரு திட்டம்தான் என்று சர்வதேச நாடுகளுக்கு உணர்த்த வேண்டும். அதன்பிறகல்லவா அவர்கள் அரசிடம் அதற்கு அழுத்தம் தருவார்கள். அதன்பிறகுதானே பேச்சுக்கள் நடந்து ஒரு சமரசப்புள்ளி உருவாகும்.
இன்றைய நிலை தொடர்ந்தால் எதிர்காலத்தில் எங்களுக்குத் தான் இழப்பு அதிகம் என்றுணர்ந்த நாங்கள், இதை அவசரமாகச் செய்யவேண்டுமா? அல்லது இலங்கை அரசுதான் தீர்வை வைக்க வேண்டும் என்று சொல்லிக்கொண்டே காலத்தை இழுப்பதா? சம்பந்தர் அந்தப் பேட்டியில், சர்வதேச சமூகத்துக்கு எமது நிலைமையை தெளிவாக எடுத்துக்காட்ட வேண்டுமானால் எமது மக்கள் மீண்டும் சாத்வீகப் போராட்டத்தில் இறங்கவேண்டும் என்றும் சொல்கிறார். என்ன சுத்த வருகிறார்? சர்வதேசத்துக்கு எங்கள் நிலைமை இன்னும் விளங்கவில்லை என்றா? அப்போ இதற்கு முன் நடந்த ஒவ்வொரு தேர்தலின் முடிவிலும் சர்வதேசம் வந்து இறங்கும் என்று சொன்னது, விளங்காமலே வருவார்கள் என்ற நம்பிக்கையிலா?
மீண்டும் ஆரம்பத்திலிருந்து தொடங்கி, இந்த நிலைமையை மேலும் 60 வருசத்துக்கு இழுத்துச் செல்லவா மறுபடியும் சாத்வீகப் போராட்டம்? எருமைமாடு ஏரோப்பிளேன் ஓட்டும் என்று சொன்னாலும் கேட்டுக்கொண்டிருக்கக் கூடிய கேணையர்கள் என்றா இந்தத் தலைவர்கள் எங்களை நினைக்கிறார்கள்?
இலங்கையில் எதிர்காலத்தில் காட்டுவாசிகளின் மொழியிலும் தேசிய கீதம் பாடநேரிடும் என எல்லாவல மேதானந்ததேரர் தெரிவித்துள்ளார். நினைத்த மாதிரி தேசிய கீதத்தில் புதிய மொழிகளை இணைக்கக் கூடாது. தேசிய கீதத்தில் தமிழ் மொழியை இணைக்க வேண்டும் என்ற கோரிக்கையை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது.
இந்தியாவில் பல்வேறு மொழிகள் பேசப்பட்டாலும் ஒரே மொழியில் தேசிய கீதம் பாடப்படுகின்றது. எந்தவொரு நாட்டிலும் தேசிய கீதம் பிரதான மொழியில் பாடப்படுவது வழமையாகும்.இலங்கையில் பல இன மக்கள் வாழ்கின்றார்கள் என்பதற்காக தேசிய கீதத்தை பல மொழிகளில் பாடினால் அது குழப்பமாகிவிடும் என குறிப்பிட்டதுடன் தேசிய கீதம் தமிழிலும் பாடப்பட வேண்டும் என தமிழ் மக்கள் கேட்கவில்லை மக்களின் மனதை குழப்பிவிட்டு அதில் தமது அரசியலை மேற்கொள்ள திட்மிட்டுள்ள அரசியல் வாதிகளே இவ்வாறு செயற்படுகின்றனர் எனவே மக்கள் அனைவரும் விளிப்பாக இருக்கவேண்டும் என குறிப்பிட்டார்.
இவர்கள் கேட்பது போன்று தமிழ் மொழியில் தேசிய கீதம் இணைக்கப்பட்டால், எதிர் காலத்தில் காட்டுமொழிகளையும் இணைக்க நேரிடும் என குறிப்பிடப்பட்டதுடன் வடக்கு, கிழக்கில் தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் குறிப்பிடப்பட்டுள்ள பெயர்ப் பலகைகளே அதிகம் காணப்படுகிறது இவற்றில் சிங்கள மொழி இணைக்கப்பட வேண்டும் என எல்லாவல மேதானந்த தேரர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் பல்வேறு மொழிகள் பேசப்பட்டாலும் ஒரே மொழியில் தேசிய கீதம் பாடப்படுகின்றது. எந்தவொரு நாட்டிலும் தேசிய கீதம் பிரதான மொழியில் பாடப்படுவது வழமையாகும்.இலங்கையில் பல இன மக்கள் வாழ்கின்றார்கள் என்பதற்காக தேசிய கீதத்தை பல மொழிகளில் பாடினால் அது குழப்பமாகிவிடும் என குறிப்பிட்டதுடன் தேசிய கீதம் தமிழிலும் பாடப்பட வேண்டும் என தமிழ் மக்கள் கேட்கவில்லை மக்களின் மனதை குழப்பிவிட்டு அதில் தமது அரசியலை மேற்கொள்ள திட்மிட்டுள்ள அரசியல் வாதிகளே இவ்வாறு செயற்படுகின்றனர் எனவே மக்கள் அனைவரும் விளிப்பாக இருக்கவேண்டும் என குறிப்பிட்டார்.
இவர்கள் கேட்பது போன்று தமிழ் மொழியில் தேசிய கீதம் இணைக்கப்பட்டால், எதிர் காலத்தில் காட்டுமொழிகளையும் இணைக்க நேரிடும் என குறிப்பிடப்பட்டதுடன் வடக்கு, கிழக்கில் தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் குறிப்பிடப்பட்டுள்ள பெயர்ப் பலகைகளே அதிகம் காணப்படுகிறது இவற்றில் சிங்கள மொழி இணைக்கப்பட வேண்டும் என எல்லாவல மேதானந்த தேரர் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு எதிராக அமெரிக்காவினால் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேரவையில் கொண்டுவரவிருக்கின்ற பிரேரணையை எதிர்கொள்வதற்கு அரசாங்கம் தயார் என வெளிவிவகார அமைச்சின் செயலாளர் கருணாரத்ன அமுனுகம தெரிவித்துள்ளார். இலங்கைக்கு விஜயம் செய்த அமெரிக்க உயர் மட்ட இராஜதந்திரிகள் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா தீர்மானம் ஒன்றைக் கொண்டு வரவுள்ளதாகத் தெரிவித்துள்ள நிலையிலேயே அரசாங்கம் இதனைத் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் செயலாளர் மேலும் தெரிவிக்கையில்,
நாங்கள் ஜனாதிபதி செயலகத்துடன் மிக அண்மித்தே செயற்படுகின்றோம். ஜனாதிபதி செயலகமும் இதனை கண்காணித்துகொண்டு வருகின்றது.
இலங்கை அரசு பல நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகவும் அது குறித்து சர்வதேசத்திற்கு போதியளவு விளக்கமளித்துள்ளோம்.
மனித உரிமை பேரவையில் கொண்டுவரப்படவிருக்கின்ற விவகாரம் எந்தவிதமான பாதகங்களையும் ஏற்படுத்தாது அதனை தயாராகவும் நம்பிக்கையுடனும எதிர்கொள்வோம் என்றார்.
இது தொடர்பில் செயலாளர் மேலும் தெரிவிக்கையில்,
நாங்கள் ஜனாதிபதி செயலகத்துடன் மிக அண்மித்தே செயற்படுகின்றோம். ஜனாதிபதி செயலகமும் இதனை கண்காணித்துகொண்டு வருகின்றது.
இலங்கை அரசு பல நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகவும் அது குறித்து சர்வதேசத்திற்கு போதியளவு விளக்கமளித்துள்ளோம்.
மனித உரிமை பேரவையில் கொண்டுவரப்படவிருக்கின்ற விவகாரம் எந்தவிதமான பாதகங்களையும் ஏற்படுத்தாது அதனை தயாராகவும் நம்பிக்கையுடனும எதிர்கொள்வோம் என்றார்.
மன்னார், பெரியகடை பகுதியில் உள்ள வீடொன்றினுள் வேற்றுக் கிரகவாசி போன்ற மர்ம மனிதர் ஒருவர் திடீரென வந்து மறைந்ததாக குறித்த வீட்டின் உரிமையாளர் தெரிவித்துள்ள பெரும் பரபரப்பையும் மக்கள் மத்தியில் பீதியையும் ஏற்படுத்தியுள்ளது. குறித்த மர்ம நபர் சில நிமிடங்கள் மட்டும் தென்பட்டதாகவும் அதன் பின்னர் அவர் மறைந்து விட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இச்சம்பவம் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை இடம்பெற்றதாகவும் தனது வீட்டுக்குள் புகுந்த மர்ம உருவம் கொண்ட நபரை தான் கையடக்கத்தொலைபேசி மூலம் படம் பிடித்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் மக்கள் மத்தியல் ஒரு வித பீதியும் பயமும் உண்டாகியுள்ளது.
இச்சம்பவம் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை இடம்பெற்றதாகவும் தனது வீட்டுக்குள் புகுந்த மர்ம உருவம் கொண்ட நபரை தான் கையடக்கத்தொலைபேசி மூலம் படம் பிடித்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் மக்கள் மத்தியல் ஒரு வித பீதியும் பயமும் உண்டாகியுள்ளது.
‘விஸ்வரூபம்’ படத்துக்கு தமிழக அரசு விதித்துள்ள தடையை நீக்கக் கோரி கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் சார்பில் ஐகோர்ட்டில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அப்போது அரசுத் தரப்பில் வாதராடிய வழக்கறிஞர், முதலில் சட்டம் ஒழுங்கு கெடும் என்பதால் படம் தடை செய்யப்பட்டது என்று குறிப்பிட்டார்.பின்னர், அரசு தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டது.
“விஸ்வரூபம் படத்துக்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்கியது சட்டப்படியாக நடைபெறவில்லை. தணிக்கை சான்றிதழ் வழங்கியதில் நிறைய முறைகேடுகள் நடந்துள்ளன” என்று சென்சார் போர்டு மீது தமிழக அரசின் வழக்கறிஞர் நவநீதகிருஷ்ணன் குற்றம் சாட்டியுள்ளார்.
அண்டை மாநிலங்களில் விஸ்வரூபம் படம் திரையிடப்பட்டு எந்த பிரச்சினையும் இன்றி ஓடுகிறது என்றும், சர்ச்சைக்குரிய காட்சிகள் ஏற்கனவே வெட்டப்பட்டுள்ளன என்றும் கமல் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ராமன் வாதாடினார்.
மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு விசாரணை தொடர்ந்தபோது, அரசுத் தரப்பு வாதம் வேறொரு பாதையில் சென்றது. கமல்ஹாசன் தனது ‘விஸ்வரூபம்’ படத்தை வினியோகஸ்தர்களுக்கு விற்றுவிட்டதால், அவருக்கு வழக்குத் தொடரும் உரிமை இல்லை என அரசு வழக்கறிஞர் வாதிட்டார். 4 தரப்பு விசாரணை முடிவடைந்த நிலையில், இன்று இரவு 8 மணிக்குத் தீர்ப்பு வழங்கப்படும் என நீதிபதி அறிவித்தார். பின்னர் 10 மணிக்கு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இந்த தீர்ப்பை உலகம் முழுவதும் உள்ள கமல்ஹாசன் ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர். கோர்ட் வளாகத்தில் ஏராளமான பத்திரிக்கையாளர்கள் திரண்டிருந்தனர். மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கோர்ட் வளாகத்தில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர்.
இந்நிலையில் இரவு 10 மணிக்கு நீதிபதி தீர்ப்பை வாசித்தார். அவர் தனது தீர்ப்பில், ‘தமிழகத்தல் விஸ்வரூபம்’ படத்து விதிக்கப்பட்ட தடையை நீக்கப்படுகிறது. நாளை படத்தை வெளியிடலாம். வழக்கு தொடர்பான இறுதி விசாரணை பின்னர் நடைபெறும்‘ என்று குறிப்பிட்டார். இதனால் கமல் ரசிகர்கள் உற்சாகமடைந்தனர்.
முன்னதாக, மேல்முறையீடு செய்வதற்கு ஏதுவாக தீர்ப்பை நாளை காலை 10.30 மணி வரை ஒத்திவைக்க வேண்டும் என்று அரசுத் தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டது. ஆனால் அரசின் கோரிக்கையை நீதிபதி ஏற்கவில்லை. இந்தத் தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்போவதாக அரசு தரப்பில் கூறப்படுகிறது.
“விஸ்வரூபம் படத்துக்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்கியது சட்டப்படியாக நடைபெறவில்லை. தணிக்கை சான்றிதழ் வழங்கியதில் நிறைய முறைகேடுகள் நடந்துள்ளன” என்று சென்சார் போர்டு மீது தமிழக அரசின் வழக்கறிஞர் நவநீதகிருஷ்ணன் குற்றம் சாட்டியுள்ளார்.
அண்டை மாநிலங்களில் விஸ்வரூபம் படம் திரையிடப்பட்டு எந்த பிரச்சினையும் இன்றி ஓடுகிறது என்றும், சர்ச்சைக்குரிய காட்சிகள் ஏற்கனவே வெட்டப்பட்டுள்ளன என்றும் கமல் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ராமன் வாதாடினார்.
மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு விசாரணை தொடர்ந்தபோது, அரசுத் தரப்பு வாதம் வேறொரு பாதையில் சென்றது. கமல்ஹாசன் தனது ‘விஸ்வரூபம்’ படத்தை வினியோகஸ்தர்களுக்கு விற்றுவிட்டதால், அவருக்கு வழக்குத் தொடரும் உரிமை இல்லை என அரசு வழக்கறிஞர் வாதிட்டார். 4 தரப்பு விசாரணை முடிவடைந்த நிலையில், இன்று இரவு 8 மணிக்குத் தீர்ப்பு வழங்கப்படும் என நீதிபதி அறிவித்தார். பின்னர் 10 மணிக்கு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இந்த தீர்ப்பை உலகம் முழுவதும் உள்ள கமல்ஹாசன் ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர். கோர்ட் வளாகத்தில் ஏராளமான பத்திரிக்கையாளர்கள் திரண்டிருந்தனர். மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கோர்ட் வளாகத்தில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர்.
இந்நிலையில் இரவு 10 மணிக்கு நீதிபதி தீர்ப்பை வாசித்தார். அவர் தனது தீர்ப்பில், ‘தமிழகத்தல் விஸ்வரூபம்’ படத்து விதிக்கப்பட்ட தடையை நீக்கப்படுகிறது. நாளை படத்தை வெளியிடலாம். வழக்கு தொடர்பான இறுதி விசாரணை பின்னர் நடைபெறும்‘ என்று குறிப்பிட்டார். இதனால் கமல் ரசிகர்கள் உற்சாகமடைந்தனர்.
முன்னதாக, மேல்முறையீடு செய்வதற்கு ஏதுவாக தீர்ப்பை நாளை காலை 10.30 மணி வரை ஒத்திவைக்க வேண்டும் என்று அரசுத் தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டது. ஆனால் அரசின் கோரிக்கையை நீதிபதி ஏற்கவில்லை. இந்தத் தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்போவதாக அரசு தரப்பில் கூறப்படுகிறது.
iPad விற்பனை உலகச் சந்தையில் சூடாக இருக்கும் நிலையில், iPad டேப்லெட் தயாரிப்பாளர் ஆப்பிள் நிறுவனத்துடன் சட்ட யுத்தத்தில்
இறங்கியுள்ளது ஒரு சீன நிறுவனம். உலகச் சந்தையில் iPad விற்பனையை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று சீன நிறுவனம் வழக்கு தொடர்ந்ததில், சீனாவின் சில பாகங்களில் iPad விற்பனை தடைசெய்யப்பட்டுள்ளது. விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த iPad டேப்லெட்கள் அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
iPad தயாரிப்பாளர் ஆப்பிள் நிறுவனத்துக்கு எதிராக வழக்கு தொடுத்துள்ள சீன நிறுவனத்தின் பெயர் ஷென்ஸென் ப்ரெவியூ டெக்னோலஜி.
iPad என்ற பெயர் (ட்ரேட்-நேம்) ப்ரெவியூ டெக்னோலஜி என்ற இந்த நிறுவனத்தால் பதிவு செய்யப்பட்டுள்ளது. 2001-ம் ஆண்டே iPad பெயரை சீன நிறுவனம் பதிவு செய்து, தனக்கு உரிமையாக்கி கொண்டுள்ளது. அதே பெயரில் ஆப்பிள் நிறுவனம் தமது டேப்லெட்டை விற்பனை செய்வது சட்டவிரோதமானது என்பதே சீன நிறுவனம் தொடர்ந்துள்ள வழக்கு.
இதில் வேறு ஒரு முக்கிய விவகாரமும் உள்ளது.
iPad என்றதும் ஆப்பிள் நிறுவனத்தின் பெயர்தான் அனைவருக்கும் ஞாபகம் வரும். ஆனால், உண்மையில் அந்தப் பெயரின் ஒரிஜினல் உரிமையாளர் ஆப்பிள் அல்ல. தாய்வான் நிறுவனம் ஒன்றிடம் இருந்தே iPad என்ற பெயரை பணம் கொடுத்து வாங்கி, அதைப் பிரபலப்படுத்தியது ஆப்பிள் நிறுவனம். அந்த தாய்வான் நிறுவனமும், தற்போது வழக்கு தொடர்ந்துள்ள சீன நிறுவனமும் சகோதர நிறுவனங்கள்.
அரசியல் ரீதியாக தாய்வானை ஒரு நாடாக சீனா இன்னமும் ஏற்றுக்கொள்ளவில்லை. இதனால், தாய்வானில் நடைபெற்ற விற்பனை சீனாவில் சட்டப்படி செல்லுபடியாகாது என்ற பாயின்டை வைத்திருக்கிறது சீன நிறுவனம். இதனால், சீனாவில் iPad என்ற ட்ரேட் நேமின் உரிமையாளர்கள் நாமே என்கிறது ப்ரெவியூ டெக்னோலஜி நிறுவனம்.
iPad என்ற பெயர் சீனாவிலும் தமக்கே சொந்தம் என்று ஆப்பிள் நிறுவனம் கடந்த வருடம் தொடர்ந்த வழக்கை டிஸ்மிஸ் செய்து தீர்ப்பளித்தது ஒரு சீன நீதிமன்றம்.
தற்போது iPad விற்பனை சூடுபிடித்துள்ள நிலையில், மீண்டும் கோர்ட்டுக்கு போய்விட்டது சீன நிறுவனம். கோர்ட் உத்தரவின்படி, சீனாவின் செங்சோ நகரம் உட்பட, மொத்தம் 8 நகரங்களில் ஆப்பிள் நிறுவன தயாரிப்பான iPad டேப்லெட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அடுத்த சில தினங்களில் 40 நகரங்களில் இதே நடவடிக்கையை சீன நிறுவனம் மேற்கொள்ள உள்ளது.
சரி. சிக்கல் சீனாவில் மட்டும்தானே.. இதனால் iPadன் உலக விற்பனை எப்படி பாதிக்கும்?
இங்குதான் உள்ளது மற்றொரு விவகாரம். ஆப்பிள் நிறுவனத்தின் தயாரிப்பாக iPad விற்பனையானாலும், அதன் தயாரிப்பு தொழிற்சாலைகள் அமைந்திருப்பது அமெரிக்காவில் அல்ல.. சீனாவில்! தயாரிப்பு செலவு குறைவு என்பதால் சீனாவில் வைத்தே அவற்றைத் தயாரிக்கிறது ஆப்பிள்.
இப்போது சீன நிறுவனம் தொடுத்துள்ள வழக்கில், iPad என்ற பெயரில் சீனாவில் விற்பனை செய்யக்கூடாது என்பதுடன் நின்றுவிடவில்லை. அந்தப் பெயரில் தயாரிப்பு வேலைகளோ, ஏற்றுமதியோகூட செய்ய முடியாது என்கிறது.
தமக்கு உரிமையான பெயரில் வெளிநாட்டு நிறுவனம் (ஆப்பிள்) டேப்லெட்களை தயாரித்து, ஏற்றுமதி செய்வதை நிறுத்துமாறு கஸ்டம்ஸ் இலாகாவுக்கு உத்தரவிடுமாறு கோர்ட்டை கேட்டுக் கொண்டிருக்கிறது சீன நிறுவனம். கோர்ட் அப்படியொரு உத்தரவு கொடுத்தால், சீனாவில் இருந்து iPad ஏற்றுமதி நின்றுபோகும். உலகச் சந்தையில் iPad கிடைக்காத நிலை ஏற்படும்.
சரி. இதற்கு தீர்வு என்ன?
வழக்கு தொடுத்துள்ள சீன நிறுவனமும், iPad என்ற பெயரின் ஒரிஜினல் உரிமையாளரான தாய்வான் நிறுவனமும் சகோதர நிறுவனம் என்று சொன்னோம் அல்லவா? இரண்டுக்கும் ஒரே உரிமையாளர். அவரது பெயர், யாங் லொன்-சாங். இவர் இப்போது கடும் பணமுடையில் உள்ளார். இவரது நிறுவனங்கள் மில்லியன் கணக்கான டாலர் கடனில் உள்ளன.
இவர் தமது கடன்களில் இருந்து விடுபடக்கூடிய தொகை செட்டில்மென்ட் ஒன்றுடன் ஆப்பிள் நிறுவனம் வரும் என்று எதிர்பார்க்கிறார். ஆப்பிள் பணம் கொடுத்து இவரது வாயை அடைக்காவிட்டால், உலகச் சந்தையில் iPad மார்க்கெட் ஷேரை இழக்கும்!.
இறங்கியுள்ளது ஒரு சீன நிறுவனம். உலகச் சந்தையில் iPad விற்பனையை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று சீன நிறுவனம் வழக்கு தொடர்ந்ததில், சீனாவின் சில பாகங்களில் iPad விற்பனை தடைசெய்யப்பட்டுள்ளது. விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த iPad டேப்லெட்கள் அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
iPad தயாரிப்பாளர் ஆப்பிள் நிறுவனத்துக்கு எதிராக வழக்கு தொடுத்துள்ள சீன நிறுவனத்தின் பெயர் ஷென்ஸென் ப்ரெவியூ டெக்னோலஜி.
iPad என்ற பெயர் (ட்ரேட்-நேம்) ப்ரெவியூ டெக்னோலஜி என்ற இந்த நிறுவனத்தால் பதிவு செய்யப்பட்டுள்ளது. 2001-ம் ஆண்டே iPad பெயரை சீன நிறுவனம் பதிவு செய்து, தனக்கு உரிமையாக்கி கொண்டுள்ளது. அதே பெயரில் ஆப்பிள் நிறுவனம் தமது டேப்லெட்டை விற்பனை செய்வது சட்டவிரோதமானது என்பதே சீன நிறுவனம் தொடர்ந்துள்ள வழக்கு.
இதில் வேறு ஒரு முக்கிய விவகாரமும் உள்ளது.
iPad என்றதும் ஆப்பிள் நிறுவனத்தின் பெயர்தான் அனைவருக்கும் ஞாபகம் வரும். ஆனால், உண்மையில் அந்தப் பெயரின் ஒரிஜினல் உரிமையாளர் ஆப்பிள் அல்ல. தாய்வான் நிறுவனம் ஒன்றிடம் இருந்தே iPad என்ற பெயரை பணம் கொடுத்து வாங்கி, அதைப் பிரபலப்படுத்தியது ஆப்பிள் நிறுவனம். அந்த தாய்வான் நிறுவனமும், தற்போது வழக்கு தொடர்ந்துள்ள சீன நிறுவனமும் சகோதர நிறுவனங்கள்.
அரசியல் ரீதியாக தாய்வானை ஒரு நாடாக சீனா இன்னமும் ஏற்றுக்கொள்ளவில்லை. இதனால், தாய்வானில் நடைபெற்ற விற்பனை சீனாவில் சட்டப்படி செல்லுபடியாகாது என்ற பாயின்டை வைத்திருக்கிறது சீன நிறுவனம். இதனால், சீனாவில் iPad என்ற ட்ரேட் நேமின் உரிமையாளர்கள் நாமே என்கிறது ப்ரெவியூ டெக்னோலஜி நிறுவனம்.
iPad என்ற பெயர் சீனாவிலும் தமக்கே சொந்தம் என்று ஆப்பிள் நிறுவனம் கடந்த வருடம் தொடர்ந்த வழக்கை டிஸ்மிஸ் செய்து தீர்ப்பளித்தது ஒரு சீன நீதிமன்றம்.
தற்போது iPad விற்பனை சூடுபிடித்துள்ள நிலையில், மீண்டும் கோர்ட்டுக்கு போய்விட்டது சீன நிறுவனம். கோர்ட் உத்தரவின்படி, சீனாவின் செங்சோ நகரம் உட்பட, மொத்தம் 8 நகரங்களில் ஆப்பிள் நிறுவன தயாரிப்பான iPad டேப்லெட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அடுத்த சில தினங்களில் 40 நகரங்களில் இதே நடவடிக்கையை சீன நிறுவனம் மேற்கொள்ள உள்ளது.
சரி. சிக்கல் சீனாவில் மட்டும்தானே.. இதனால் iPadன் உலக விற்பனை எப்படி பாதிக்கும்?
இங்குதான் உள்ளது மற்றொரு விவகாரம். ஆப்பிள் நிறுவனத்தின் தயாரிப்பாக iPad விற்பனையானாலும், அதன் தயாரிப்பு தொழிற்சாலைகள் அமைந்திருப்பது அமெரிக்காவில் அல்ல.. சீனாவில்! தயாரிப்பு செலவு குறைவு என்பதால் சீனாவில் வைத்தே அவற்றைத் தயாரிக்கிறது ஆப்பிள்.
இப்போது சீன நிறுவனம் தொடுத்துள்ள வழக்கில், iPad என்ற பெயரில் சீனாவில் விற்பனை செய்யக்கூடாது என்பதுடன் நின்றுவிடவில்லை. அந்தப் பெயரில் தயாரிப்பு வேலைகளோ, ஏற்றுமதியோகூட செய்ய முடியாது என்கிறது.
தமக்கு உரிமையான பெயரில் வெளிநாட்டு நிறுவனம் (ஆப்பிள்) டேப்லெட்களை தயாரித்து, ஏற்றுமதி செய்வதை நிறுத்துமாறு கஸ்டம்ஸ் இலாகாவுக்கு உத்தரவிடுமாறு கோர்ட்டை கேட்டுக் கொண்டிருக்கிறது சீன நிறுவனம். கோர்ட் அப்படியொரு உத்தரவு கொடுத்தால், சீனாவில் இருந்து iPad ஏற்றுமதி நின்றுபோகும். உலகச் சந்தையில் iPad கிடைக்காத நிலை ஏற்படும்.
சரி. இதற்கு தீர்வு என்ன?
வழக்கு தொடுத்துள்ள சீன நிறுவனமும், iPad என்ற பெயரின் ஒரிஜினல் உரிமையாளரான தாய்வான் நிறுவனமும் சகோதர நிறுவனம் என்று சொன்னோம் அல்லவா? இரண்டுக்கும் ஒரே உரிமையாளர். அவரது பெயர், யாங் லொன்-சாங். இவர் இப்போது கடும் பணமுடையில் உள்ளார். இவரது நிறுவனங்கள் மில்லியன் கணக்கான டாலர் கடனில் உள்ளன.
இவர் தமது கடன்களில் இருந்து விடுபடக்கூடிய தொகை செட்டில்மென்ட் ஒன்றுடன் ஆப்பிள் நிறுவனம் வரும் என்று எதிர்பார்க்கிறார். ஆப்பிள் பணம் கொடுத்து இவரது வாயை அடைக்காவிட்டால், உலகச் சந்தையில் iPad மார்க்கெட் ஷேரை இழக்கும்!.
மீனில் காணப்படும் `ஓமேகா 3′ என்ற பொருள், நம் சரும செல்களை புதுப்பிப்பதோடு, சருமத்தை பளபளக்கவும் செய்கிறது. அதனால், வாரத்துக்கு 3 நாள் மீன் சாப்பிடுவது நல்லது. மீன் சாப்பிடாதவர்கள் மீன் மாத்திரை சாப்பிடலாம்.சோயாபீன்சை வாரத்துக்கு 3 நாள் உணவில் சேர்த்துக்கொண்டால் சருமம் புதுப்பொலிவுடனும், ஈரப்பசையுடனும் இருக்கும். முகப்பருக்களும் வராது.
கேரட்டில் உள்ள பீட்டா கரோட்டின் சருமத்தை பொலிவுடன் வைக்கும். ஆரஞ்சு, பப்பாளி, பூசணி, மாம்பழம் சாப்பிட்டாலும் சருமம் பொலிவுடன் இருக்கும்.
சிலர் பார்ப்பதற்கு அழகாக இருந்தாலும், அவர்களது முகத்தில் ஏதோ ஒரு சோகம் இழையோடிக் காணப்படுவதுபோல் இருக்கும்.
இப்படிப்பட்டவர்கள் தினமும் அதிக அளவில் தண்ணீர் குடிப்பது நல்லது. அவ்வாறு தண்ணீர் குடித்து வந்தால் சருமம் புத்துணர்ச்சி பெற்று ஈரப்பசையுடன் இருக்கும். குறைந்தது ஒரு நாளுக்கு 3 லிட்டர் தண்ணீராவது குடிக்க வேண்டும். அதற்கு மேல் குடித்தாலும் தப்பில்லைதான்.
கேரட்டில் உள்ள பீட்டா கரோட்டின் சருமத்தை பொலிவுடன் வைக்கும். ஆரஞ்சு, பப்பாளி, பூசணி, மாம்பழம் சாப்பிட்டாலும் சருமம் பொலிவுடன் இருக்கும்.
சிலர் பார்ப்பதற்கு அழகாக இருந்தாலும், அவர்களது முகத்தில் ஏதோ ஒரு சோகம் இழையோடிக் காணப்படுவதுபோல் இருக்கும்.
இப்படிப்பட்டவர்கள் தினமும் அதிக அளவில் தண்ணீர் குடிப்பது நல்லது. அவ்வாறு தண்ணீர் குடித்து வந்தால் சருமம் புத்துணர்ச்சி பெற்று ஈரப்பசையுடன் இருக்கும். குறைந்தது ஒரு நாளுக்கு 3 லிட்டர் தண்ணீராவது குடிக்க வேண்டும். அதற்கு மேல் குடித்தாலும் தப்பில்லைதான்.
சம்பிரதாயபூர்வமாக வாழும் முஸ்லிம்களுக்கும் சிங்களவர்களுக்கும் எதிராகச் செயற்பட்டுக் கொண்டிருக்கும் ஸவுதி இஸ்லாமிய கொள்கைவாதிகளான ‘வஹாபி ஸலாபி’ அடிப்படைவாதிகளுக்கு எதிராக உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் பொதுமக்கள் எழவேண்டும், எதிராகக் குரல் கொடுக்க வேண்டும் என்று பொது பலசேனா கேட்டுக் கொண்டுள்ளது.
முஸ்லிம்களின் பழைய பள்ளிகளைக் கூட அழித்தொழிக்கும் தன்மை கொண்ட அடிப்படைவாதிகளான அந்த இயக்கம் பௌத்த மதத்தை இழிந்துரைப்பதோடு இந்த நாட்டில் மத மற்றும் இனங்களுக்கிடையில் வேற்றுமையை உண்டுபண்ணி வருவதாகவும் பொது பல சோனாவின் இணையத்தளம் குறிப்பிடுகிறது.
பொது பல சேனா இயக்கம் பயங்கரவாத இயக்கம் என்று மத்திய கிழக்கிலிருந்து வெளிவரும் ‘கல்ப் நிவ்ஸ்’ எனும் பத்திரிகையில் அறிக்கையொன்று சென்ற வாரம் வெளிவந்திருந்தது. அந்த அறிக்கை வெளிவந்து அடுத்த நாளே இலங்கையின் ‘பைனேன்சியல் டைம்ஸ்’ பத்திரிகையிலும் அது பிரசுரமானது. அதனால் சந்தேகத்திற்குரிய முறையில் முஸ்லிம் பயங்கரவாதக் குழுவொன்று இந்நாட்டில் இருப்பதாக நம்புகிறோம். அதனால் இவ்விடயத்தில் எல்லோரும் விழிப்புணர்வடைய வேண்டும் என்று பொது பல சேனாவின் இணையத்தளம் கூறுகிறது.
முஸ்லிம் கலவரம் ஒன்றின் காரணமாக, இந்நாட்டு அரசியல்வாதியொருவர் சென்ற சில நாட்களுக்கு முன்னர் ஆயுதத்தைக் கையிலெடுப்போம் என்றதை நனைவுறுத்துகின்ற அந்த இணையத்தளத்தின் மேலாளர் கிரம விமலஜோதி தேரர், தங்களது இயக்கம் காவியுடை தரித்த பயங்கரவாதிகள் என்று அரசாங்கத்தின் அமைச்சர் ஒருவர் குறிப்பிட்டதற்காக கடுமையான முறையில் சாடியிருக்கிறார்.
முஸ்லிம்கள் வடக்கிலிருந்து விரட்டியடிக்கப்பட்டமை, பள்ளிவாசல்களில் வைத்து படுகொலை செய்யப்பட்டமை, வடக்கில் பௌத்த கோவில்களுக்குச் சொந்தமான நிலத்தில் பள்ளிவாசல்களை அமைத்தல் ஆகியவற்றை மறந்துவிட்டிருக்கின்ற அந்த அரசியல்வாதிகள், இஸ்லாமிய சட்டத்திற்கு ஏற்புடையது எனும் சீர்கேடுகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்காமல் இருப்பதாகவும் அடிப்படைவாத முஸ்லிம்களுக்கு எதிராக சவால் விடுகின்ற மத்திய கிழக்கு மூடர்களுக்காகவோ, ஸவுதியில் மரண தண்டனை விதிக்கப்பட்ட ரிஸானா நபீக்கிற்கு எதிராக குரல் கொடுக்கவில்லை என்றும் தேரர் குறிப்பிட்டிருக்கிறார்....
இலங்கையில் வஹாபிஸம் உட்பட இன்னும் நான்கு இயக்கங்கள் இயங்கிக் கொண்டிருக்கின்றன என்று குறிப்பிடும் பொது பல சேனா இயக்கம், முஸ்லிம்கள் பள்ளிக்குச் செல்ல வேண்டியது கட்டாயக் கடமை என்றும், பெண்கள் உடல் உறுப்புக்களை மறைப்பது கட்டாயம் என்றும், மீசை கத்தரித்து தாடி வைப்பது கட்டாயம் என்றும் குறிப்பிடுகிறார்கள். இவர்கள் மற்றவர்களை அடித்து நொறுக்குவதையும், கொலை செய்வதையும் எந்தவொரு முஸ்லிம் அரசியல்வாதியும் கண்டுகொள்வதில்லை என்றும் சாடுகிறது. செய்ய வேண்டியது இருக்க, அவர்கள் பௌத்த மதகுருமார்ளையும். பௌத்த மக்களையும் அகௌரவப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் என்றும் அந்த இணையத்தளம் தெளிவுறுத்துகிறது.
கோவை ஐயூப், பீ. ஜெய்னுல் ஆபிதீன், ‘பீஸ் ரீவி’ அங்கத்தவர்களாகிய பிலால் பிலிப்ஸ், ஷாக்கிர் நாயக் ( தென்னிந்திய ஸவுதித்துவ தலைவர்) முஸ்டிமேன்க், லீமூ போன்றோர் அண்மைக் காலமாக இஸ்லாமிய மத்தை இலங்கையருக்கு போதிப்பதற்காக வருகை தந்த வெளிநாட்டு மதபோதகர்களாவர்.
IIRO (தெமட்டகொட மகாவலிப் பூங்கா), IRO (மாளிகாவத்தை), Alshabab (மாளிகாகந்த வீதி), Muslim Aid, WAMY (தெமட்டகொட மகாவலிப் பூங்கா) NDIA (ராஜகிரிய ரே மாவத்தை) HIRA (தெகிவளை), MFCD (புதுக்கடை) Serandib (தெமட்டகொட) ஆகிய இயக்கங்கள் இந்நாட்டில் இயங்குகின்ற ஸவுதித்துவ ‘வஹாபி ஸலாபி’ என்.ஜீ.ஓ இயக்கங்களை இயக்குகின்றன. இதுதவிர, இலங்கைத் தௌஹீதம் ஜமாஅத் இயக்கம் (தலைமைக் காரியாலயம் - மாளிகாவத்தை), அகில இலங்கை தௌஹீத் ஜமாஅத் இயக்கம் (தலைமைக் காரியாலயம் -தெமடகொட), சுன்னத்த அன்ஸார் இயக்கம் (தலைமைக் காரியாலயம் - பரகஹதெனிய), ஜமாஅத்தே இஸ்லாமி (தலைமைக் காரியாலயம் - தெமட்டகொட), ஸலாபி இயக்கம் (களுபோவில வைத்தியசாலை வீதி), உலமா சபை ஆகிய இஸ்லாமிய மதவாதிகள் பயங்கர இயக்கங்கள் என்று பொது பலசேனா இயக்கம் குறிப்பிட்டுள்ளது.
(கலைமகன் பைரூஸ்)
முஸ்லிம்களின் பழைய பள்ளிகளைக் கூட அழித்தொழிக்கும் தன்மை கொண்ட அடிப்படைவாதிகளான அந்த இயக்கம் பௌத்த மதத்தை இழிந்துரைப்பதோடு இந்த நாட்டில் மத மற்றும் இனங்களுக்கிடையில் வேற்றுமையை உண்டுபண்ணி வருவதாகவும் பொது பல சோனாவின் இணையத்தளம் குறிப்பிடுகிறது.
பொது பல சேனா இயக்கம் பயங்கரவாத இயக்கம் என்று மத்திய கிழக்கிலிருந்து வெளிவரும் ‘கல்ப் நிவ்ஸ்’ எனும் பத்திரிகையில் அறிக்கையொன்று சென்ற வாரம் வெளிவந்திருந்தது. அந்த அறிக்கை வெளிவந்து அடுத்த நாளே இலங்கையின் ‘பைனேன்சியல் டைம்ஸ்’ பத்திரிகையிலும் அது பிரசுரமானது. அதனால் சந்தேகத்திற்குரிய முறையில் முஸ்லிம் பயங்கரவாதக் குழுவொன்று இந்நாட்டில் இருப்பதாக நம்புகிறோம். அதனால் இவ்விடயத்தில் எல்லோரும் விழிப்புணர்வடைய வேண்டும் என்று பொது பல சேனாவின் இணையத்தளம் கூறுகிறது.
முஸ்லிம் கலவரம் ஒன்றின் காரணமாக, இந்நாட்டு அரசியல்வாதியொருவர் சென்ற சில நாட்களுக்கு முன்னர் ஆயுதத்தைக் கையிலெடுப்போம் என்றதை நனைவுறுத்துகின்ற அந்த இணையத்தளத்தின் மேலாளர் கிரம விமலஜோதி தேரர், தங்களது இயக்கம் காவியுடை தரித்த பயங்கரவாதிகள் என்று அரசாங்கத்தின் அமைச்சர் ஒருவர் குறிப்பிட்டதற்காக கடுமையான முறையில் சாடியிருக்கிறார்.
முஸ்லிம்கள் வடக்கிலிருந்து விரட்டியடிக்கப்பட்டமை, பள்ளிவாசல்களில் வைத்து படுகொலை செய்யப்பட்டமை, வடக்கில் பௌத்த கோவில்களுக்குச் சொந்தமான நிலத்தில் பள்ளிவாசல்களை அமைத்தல் ஆகியவற்றை மறந்துவிட்டிருக்கின்ற அந்த அரசியல்வாதிகள், இஸ்லாமிய சட்டத்திற்கு ஏற்புடையது எனும் சீர்கேடுகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்காமல் இருப்பதாகவும் அடிப்படைவாத முஸ்லிம்களுக்கு எதிராக சவால் விடுகின்ற மத்திய கிழக்கு மூடர்களுக்காகவோ, ஸவுதியில் மரண தண்டனை விதிக்கப்பட்ட ரிஸானா நபீக்கிற்கு எதிராக குரல் கொடுக்கவில்லை என்றும் தேரர் குறிப்பிட்டிருக்கிறார்....
இலங்கையில் வஹாபிஸம் உட்பட இன்னும் நான்கு இயக்கங்கள் இயங்கிக் கொண்டிருக்கின்றன என்று குறிப்பிடும் பொது பல சேனா இயக்கம், முஸ்லிம்கள் பள்ளிக்குச் செல்ல வேண்டியது கட்டாயக் கடமை என்றும், பெண்கள் உடல் உறுப்புக்களை மறைப்பது கட்டாயம் என்றும், மீசை கத்தரித்து தாடி வைப்பது கட்டாயம் என்றும் குறிப்பிடுகிறார்கள். இவர்கள் மற்றவர்களை அடித்து நொறுக்குவதையும், கொலை செய்வதையும் எந்தவொரு முஸ்லிம் அரசியல்வாதியும் கண்டுகொள்வதில்லை என்றும் சாடுகிறது. செய்ய வேண்டியது இருக்க, அவர்கள் பௌத்த மதகுருமார்ளையும். பௌத்த மக்களையும் அகௌரவப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் என்றும் அந்த இணையத்தளம் தெளிவுறுத்துகிறது.
கோவை ஐயூப், பீ. ஜெய்னுல் ஆபிதீன், ‘பீஸ் ரீவி’ அங்கத்தவர்களாகிய பிலால் பிலிப்ஸ், ஷாக்கிர் நாயக் ( தென்னிந்திய ஸவுதித்துவ தலைவர்) முஸ்டிமேன்க், லீமூ போன்றோர் அண்மைக் காலமாக இஸ்லாமிய மத்தை இலங்கையருக்கு போதிப்பதற்காக வருகை தந்த வெளிநாட்டு மதபோதகர்களாவர்.
IIRO (தெமட்டகொட மகாவலிப் பூங்கா), IRO (மாளிகாவத்தை), Alshabab (மாளிகாகந்த வீதி), Muslim Aid, WAMY (தெமட்டகொட மகாவலிப் பூங்கா) NDIA (ராஜகிரிய ரே மாவத்தை) HIRA (தெகிவளை), MFCD (புதுக்கடை) Serandib (தெமட்டகொட) ஆகிய இயக்கங்கள் இந்நாட்டில் இயங்குகின்ற ஸவுதித்துவ ‘வஹாபி ஸலாபி’ என்.ஜீ.ஓ இயக்கங்களை இயக்குகின்றன. இதுதவிர, இலங்கைத் தௌஹீதம் ஜமாஅத் இயக்கம் (தலைமைக் காரியாலயம் - மாளிகாவத்தை), அகில இலங்கை தௌஹீத் ஜமாஅத் இயக்கம் (தலைமைக் காரியாலயம் -தெமடகொட), சுன்னத்த அன்ஸார் இயக்கம் (தலைமைக் காரியாலயம் - பரகஹதெனிய), ஜமாஅத்தே இஸ்லாமி (தலைமைக் காரியாலயம் - தெமட்டகொட), ஸலாபி இயக்கம் (களுபோவில வைத்தியசாலை வீதி), உலமா சபை ஆகிய இஸ்லாமிய மதவாதிகள் பயங்கர இயக்கங்கள் என்று பொது பலசேனா இயக்கம் குறிப்பிட்டுள்ளது.
(கலைமகன் பைரூஸ்)
பிரதமர் தி.மு. ஜயரத்ன உடல் நலம் குன்றியிருப்பதனால் கவலைக்குரிய நிலையில் இருப்பதால், புதியதொரு பிரதமரை நியமிப்பதற்கான சிந்னையில் ஜனாதிபதி மற்றும் உயர் அதிகாரிகள் என்போர் ஈடுபட்டுள்ளனர். புதிய பிரதமராக தினேஷ் குணவர்தனவை நியமிப்பதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் உள்ளதாக அரசாங்கத்தின் உயர்மட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தினேஷ் குணவர்தன மக்கள் ஐக்கிய முன்னணியின் தலைவராக இருப்பதால்,அக்கட்சியைச் சேர்ந்த சிலர் இவ்விடயத்தில் தங்களது அதிருப்தியை தெரிவித்திருக்கின்றனர்.
இதனால், அமைச்சர் தினேஷ் குணவர்தன வெகுவிரைவில் தனது கட்சியான மக்கள் ஐக்கிய முன்னணியைக் கலைத்து இலங்கை சுதந்திரக் கட்சியின் அங்கத்துவத்தைப் பெற்றுக் கொள்ளவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. (கலைமகன் பைரூஸ்)
தினேஷ் குணவர்தன மக்கள் ஐக்கிய முன்னணியின் தலைவராக இருப்பதால்,அக்கட்சியைச் சேர்ந்த சிலர் இவ்விடயத்தில் தங்களது அதிருப்தியை தெரிவித்திருக்கின்றனர்.
இதனால், அமைச்சர் தினேஷ் குணவர்தன வெகுவிரைவில் தனது கட்சியான மக்கள் ஐக்கிய முன்னணியைக் கலைத்து இலங்கை சுதந்திரக் கட்சியின் அங்கத்துவத்தைப் பெற்றுக் கொள்ளவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. (கலைமகன் பைரூஸ்)
யாழ்.செம்மணிப் பகுதியில் வைத்து இனந்தெரியாத நபர்களால் 15 வயது சிறுமியொருவர் கடத்திச் செல்லப்பட்டுள்ளதாக யாழ்.பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடென்று பதிவு செய்யப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் எரிக் பெரேரா தெரிவித்துள்ளார்.
முச்சக்கரவண்டி மற்றும் மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத நபர்களே குறித்த சிறுமியை கடத்திச் சென்றுள்ளனர்.
இக்கடத்தல் சம்பவம் இன்று மாலை இடம்பெற்றுள்ளது. இதில் அருள்நேசன் ஆருனியா என்ற சிறுமியே இவ்வாறு கடத்தப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில்; மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
முச்சக்கரவண்டி மற்றும் மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத நபர்களே குறித்த சிறுமியை கடத்திச் சென்றுள்ளனர்.
இக்கடத்தல் சம்பவம் இன்று மாலை இடம்பெற்றுள்ளது. இதில் அருள்நேசன் ஆருனியா என்ற சிறுமியே இவ்வாறு கடத்தப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில்; மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
குளத்தில் மீன்பிடித்து விளையாடிய 14 வயது சிறுவன்; குளத்தில் இருந்து சடலமாக பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் கந்தரோடை இக்கிராயன் குளத்தில் இடம்பெற்றுள்ளது.நேற்று திங்கட்கிழமை காலை சுமார் 10 மணியளவில் வீட்டிலிருந்து மேற்படி குளத்தில் மீன்பிடிக்கவுள்ளதாகத் தெரிவித்துச் சென்றுள்ளார். இவரைத் உறவினர்கள் தேடிய போதும் எந்தவிதமான பதிலும் கிடைக்கவில்லை.
இதனைத் தொடர்ந்து இது தொடர்பில் ; முறைப்பாடென்றும் மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில் நேற்றுக் காலை குறித்த குளத்தில் சிறுவனது உயிரிழந்த சடலம் நீரில் மிதந்து கொண்டிருப்பது தொடர்பில் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு வருகைதந்த பொலிஸார் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைகளுக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒப்படைத்தனர்.
இதனைத் தொடர்ந்து இது தொடர்பில் ; முறைப்பாடென்றும் மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில் நேற்றுக் காலை குறித்த குளத்தில் சிறுவனது உயிரிழந்த சடலம் நீரில் மிதந்து கொண்டிருப்பது தொடர்பில் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு வருகைதந்த பொலிஸார் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைகளுக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒப்படைத்தனர்.
கஜகஸ்தான் நாட்டில் இடம்பெற்ற விமான விபத்தில் 22 பலியாகியுள்ளதாக வெளிநாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன. கொக்க்ஷேடோ நகரில் இருந்து வட கஜகஸ்தான் பகுதிக்கு இன்ற காலை விமானம் ஒன்று புறப்பட்டு சென்றது.வர்த்தக நகரமான அல்மாட்டி அருகே உள்ள கைசைல்டு என்ற கிராமத்தின் மீது பறந்துக் கொண்டிருந்த அந்த விமானம், கட்டுப்பாட்டை இழந்து தரையில் விழுந்து நொறுங்கியது.
விமானத்தில் இருந்த 22 பயணிகளும் இந்த விபத்தில் பலியாகி விட்டனர். மோசமான பனி மூட்டம் நிலவியதே இந்த விபத்துக்கு காரணம் என்று மீட்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.
இதில் 15 பயணிகளும் 5 பணியாளர்களும் இரண்டு விமானிகளும் பலியானதாக தெரிவிக்கப்படுகின்றது.
விமானத்தில் இருந்த 22 பயணிகளும் இந்த விபத்தில் பலியாகி விட்டனர். மோசமான பனி மூட்டம் நிலவியதே இந்த விபத்துக்கு காரணம் என்று மீட்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.
இதில் 15 பயணிகளும் 5 பணியாளர்களும் இரண்டு விமானிகளும் பலியானதாக தெரிவிக்கப்படுகின்றது.
வேப்பமரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் குடும்பத்தர் ; ஒருவருடைய சடலம் ஒன்றை யாழ்ப்பாணப் பொலிஸார் இன்று அதிகாலை மீட்டுள்ளனர். இச்சடலம் கண்டி வீதி அரியாலைப் பகுதியில் இருந்து காலை சுமார் 5.30 மணியளவில் மீட்கப்பட்டுள்ளது. இதில் அதே இடத்தைச் சேர்ந்த கோ.உதயசீலன் வயது 27 என்றவரே சடலமாக மீட்கப்பட்டவராவார்.
இவரது சடலம் பிரேதப் பரிசோதனைகளுக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். இவர் கடன் தொல்லையால் அவதிப்பட்டு வந்ததாக பொது மக்கள் தெரிவிக்கின்றனர்..
இவரது சடலம் பிரேதப் பரிசோதனைகளுக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். இவர் கடன் தொல்லையால் அவதிப்பட்டு வந்ததாக பொது மக்கள் தெரிவிக்கின்றனர்..
இந்தியாவின் மகாராஷ்டிர மாநிலம் புனேயில் சிகிச்சைக்கு வந்த பெண்ணொருவரை சிகிச்சையளிக்க வந்த வைத்தியர் ஒருவர் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. புனேயின் மாடர்ன் கல்லூரி மைதானத்தில் கடந்த 2010-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 16-ம் தேதி துர்கா பூஜை நடைபெற்றது.
இதில் கலந்துகொள்வதற்காக கணவன் மற்றும் குழந்தைகளுடன் வந்திருந்த 30 வயது பெண்ணுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது.
உடனடியாக அந்தப்பெண் வாஷியில் உள்ள லோட்டஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இரவில் அவரது உடல்நிலை மோசமடைந்ததால் ஐ.சி.யு. வார்டில் அனுமதிக்கப்பட்டார். பரிசோதனைக்குப் பிறகு நர்ஸ் வீட்டுக்கு சென்றுவிட்டார்.
அப்போது அந்தப் பெண்ணுக்கு சிகிச்சை அளித்த டாக்டர் விஷால் வன்னி (வயது 26), தூக்க மருந்து கலந்த ஊசி போட்டுள்ளார்.
பின்னர் அந்தப் பெண்ணை கற்பழித்துள்ளார். காலையில் கண்விழித்து பார்த்த அந்தப் பெண் தனக்கு நேர்ந்த கொடுமையை கணவனிடம் கூற, அனைவரும் டாக்டரைப் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
அவர் மீதான வழக்கு தானே கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நிதிபதி சந்தியா பச்சாவ், சிகிச்சைக்கு வந்த பெண்ணை கற்பழித்த டாக்டர் விஷாலுக்கு 10 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.
இதில் கலந்துகொள்வதற்காக கணவன் மற்றும் குழந்தைகளுடன் வந்திருந்த 30 வயது பெண்ணுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது.
உடனடியாக அந்தப்பெண் வாஷியில் உள்ள லோட்டஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இரவில் அவரது உடல்நிலை மோசமடைந்ததால் ஐ.சி.யு. வார்டில் அனுமதிக்கப்பட்டார். பரிசோதனைக்குப் பிறகு நர்ஸ் வீட்டுக்கு சென்றுவிட்டார்.
அப்போது அந்தப் பெண்ணுக்கு சிகிச்சை அளித்த டாக்டர் விஷால் வன்னி (வயது 26), தூக்க மருந்து கலந்த ஊசி போட்டுள்ளார்.
பின்னர் அந்தப் பெண்ணை கற்பழித்துள்ளார். காலையில் கண்விழித்து பார்த்த அந்தப் பெண் தனக்கு நேர்ந்த கொடுமையை கணவனிடம் கூற, அனைவரும் டாக்டரைப் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
அவர் மீதான வழக்கு தானே கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நிதிபதி சந்தியா பச்சாவ், சிகிச்சைக்கு வந்த பெண்ணை கற்பழித்த டாக்டர் விஷாலுக்கு 10 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.
அவுஸ்ரேலியா நோக்கி புகலிடக் கோரிக்கையாளர்களை ஏற்றிக் கொண்டு சென்ற படகொன்று விபத்திற்குள்ளாகியுள்ளது. இதில் இலங்கையில் இருவர் பலியாகியுள்ளதோடு 20 பேர் இந்தோனிசய மீனவர்களால் காப்பாற்றப்பட்டுள்ளனர். குறித்த படகு யாவாக் கரைக்கு அப்பால் ஒரு பாறையில் மோதியே இரண்டாக பிளவுப்பட்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில் இலங்கையர்கள் இருவர் நீரில் மூழ்கி மரணமடைந்ததாகவும் ஒருவர் காணாமல் போனதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
எஞ்சிய 20 பேரும் மீனவர்களால் காப்பாற்றப்பட்டு தற்போது இந்தோனேஷிய தீவான நுஸா கம்பன்கனில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு காப்பாற்றப்பட்டவர்களில் நான்கு வயது சிறுவனும் 10 வயது பெண்பிள்ளை ஒன்றும் அடங்குகின்றனர்.
இந்த விபத்தில் இலங்கையர்கள் இருவர் நீரில் மூழ்கி மரணமடைந்ததாகவும் ஒருவர் காணாமல் போனதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
எஞ்சிய 20 பேரும் மீனவர்களால் காப்பாற்றப்பட்டு தற்போது இந்தோனேஷிய தீவான நுஸா கம்பன்கனில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு காப்பாற்றப்பட்டவர்களில் நான்கு வயது சிறுவனும் 10 வயது பெண்பிள்ளை ஒன்றும் அடங்குகின்றனர்.
வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட கிழக்கு மாகாண மக்களுக்கு வெள்ளநிவாரணம் வழங்குவதற்காக யாழ்.நகர் பகுதியில் உள்ள வர்த்தக நிலையங்களில் நிவாரணப் பொருட்களை சேகரிக்குமு; நடவடிக்கையென்றை யாழ்.பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியம் மேற்கொள்ளவுள்ளது.
கடும் மழையினால் பாதிக்கப்பட்ட கிழக்கு மாகாணத்தின் அம்பாறை மட்டக்களப்பு மாவட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் முகமாகவே இந்நடவடிக்கையை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக கலைப்பீட மாணவர் ஒன்றியத் தலைவர் அறிவித்துள்ளார்.
இந்நிவாரணப் பொருட்களை சேகரிக்கும் நடவடிக்கையானது நாளை 30ஆம் திகதி காலை 8.30 மணி முதல் யாழ்.நகரிலுள்ள வர்த்தக நிலையங்களில் மேற்கொள்ளப்படவுள்ளது.
கடும் மழையினால் பாதிக்கப்பட்ட கிழக்கு மாகாணத்தின் அம்பாறை மட்டக்களப்பு மாவட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் முகமாகவே இந்நடவடிக்கையை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக கலைப்பீட மாணவர் ஒன்றியத் தலைவர் அறிவித்துள்ளார்.
இந்நிவாரணப் பொருட்களை சேகரிக்கும் நடவடிக்கையானது நாளை 30ஆம் திகதி காலை 8.30 மணி முதல் யாழ்.நகரிலுள்ள வர்த்தக நிலையங்களில் மேற்கொள்ளப்படவுள்ளது.
இளம் குடும்பப் பெண்ணொருவரின் சடலம் ஒன்று கிணற்றுக்குள் இருந்து கோப்பாய் பொலிஸாரால் மீட்கப்பட்ட சம்பவம் ஒன்று கோப்பாய் மத்திப் பகுதியில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.இச்சம்பவம் பலானை சூசையப்பர் வீதி வீதி கோப்பாய் மத்தி என்ற பகுதியில் இன்று இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவத்தில் அதே இடத்தைச் சேர்ந்த கமலதீபன் கயல்விழி (வயது 23) என்ற குடும்பப் பெண்ணே சடலமாக மீட்கப்பட்டவராவார்.
நேற்று முன்தினம் திங்கட்கிழமை இரவு கணவனுக்கும் மனைவிக்கும் இடையில் தகராறு இடம்பெற்றதாக அயலவர்கள் தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து அவர்களது காணியிலுள்ள கிணற்றுக்குள் குறித்த பெண் சடலமாக இருப்பதை அயலவர்கள் அவதானித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வருகைதந்த பதில் நீதிவான் மு.திருநாவுக்கரசு விசாரணைகளை மேற்கொண்டதோடு சடலத்தை பிரேதப் பரிசோதனைகளுக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்க உத்தரவிட்டார்.
மேலும் இச்சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பெயரில் பெண்ணின் கணவன் நேற்றுக் காலை கோப்பாய் பொலிஸாரல் கைது செய்யப்பட்டுள்ளார்.
இச்சம்பவத்தில் அதே இடத்தைச் சேர்ந்த கமலதீபன் கயல்விழி (வயது 23) என்ற குடும்பப் பெண்ணே சடலமாக மீட்கப்பட்டவராவார்.
நேற்று முன்தினம் திங்கட்கிழமை இரவு கணவனுக்கும் மனைவிக்கும் இடையில் தகராறு இடம்பெற்றதாக அயலவர்கள் தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து அவர்களது காணியிலுள்ள கிணற்றுக்குள் குறித்த பெண் சடலமாக இருப்பதை அயலவர்கள் அவதானித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வருகைதந்த பதில் நீதிவான் மு.திருநாவுக்கரசு விசாரணைகளை மேற்கொண்டதோடு சடலத்தை பிரேதப் பரிசோதனைகளுக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்க உத்தரவிட்டார்.
மேலும் இச்சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பெயரில் பெண்ணின் கணவன் நேற்றுக் காலை கோப்பாய் பொலிஸாரல் கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் கோப்பாய் மத்தி வீட்டுக் கிணற்றிலிருந்து அடிகாயங்களுடன் இளம் தாயின் சடலத்தை கோப்பாய் பொலிஸார் இன்று செவ்வாய்கிழமை நண்பகல் மீட்டுள்ளனர். ஒரு பிள்ளையின் தாயாரான கமலதீபன் கஜந்தினி (வயது 23) என்பவரே சடலமாக மீட்கப்பட்டவராவார். இவரது சடலத்தில் பலத்த அடிகாயங்கள் காணப்படுவதாகவும் இவரது மரணம் தொடர்பில் சந்தேகத்தில் அப்பெண்ணின் கணவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கோப்பாய் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
தற்போது சடலம் பிரேத பரிசோதனைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, யாழ். தொண்டைமானாறு வல்லை வீதியோரமாகவுள்ள ஒற்றைப்பனையடி வயல் கிணற்றிலிருந்து குடும்பஸ்தர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக வல்வெட்டித்துறைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று (28) இச்சடலம் மீட்கப்பட்டுள்ளதாகவும் இதில் கொத்தியகாடு கெருடாவில் தெற்கு தொண்டைமானாற்றைச் சேர்ந்த கிட்டினன் தவராசா (வயது - 50) என்ற 3 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
குறித்த நபர் கடந்த சனிக்கிழமை பி.ப. 6 மணியிலிருந்து காணாமல் போனதையடுத்து அவரது மனைவி மற்றும் உறவினர்கள் அவரைத் தேடிய நிலையில் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தனர்.
அதன் பின்னரும் தொடர்ந்து தேடிய நிலையில் வயல் கிணற்றிலிருந்து தொலைதூரத்தில் சைக்கிள் ஒன்று நிற்பதை அடுத்து உறவினர்கள் வயல் கிணறுகளில் தேடிப்பார்த்தபோதே குறித்த வயல் கிணற்றில் மேற்படி குடும்பஸ்தர் இறந்த நிலையில் சடலமாக கிடப்பது தெரியவந்தது.
இதனையடுத்து உறவினர்கள் பொலிஸாருக்கு தெரியப்படுத்தியதை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸாரும் வல்வெட்டித்துறை மரண விசாரணை அதிகாரி சுசீந்திரசிங்கம் ஆகியோர் விசாரணையை மேற்கொண்ட பின்னர் சடலம் பிரேத பரிசோதனைக்காக வல்வெட்டித்துறை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டதுடன் பிரேத பரிசோதனையை டாக்டர் மயிலேறும்பெருமாள் மேற்கொண்டார்.
இதன் பின்னர் மரண விசாரணையின் போது குறித்த நபர் கடந்த 2 வருடங்களாக வேலை இல்லாமல் மனஉளைச்சலுடன் காணப்பட்டதாகவும் அத்துடன் இவருக்கு ஏற்கனவே நோயுள்ளதாகவும் இவர் கிணற்றில் விழுந்து மூச்சுத் திணறியே இறந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
தற்போது சடலம் பிரேத பரிசோதனைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, யாழ். தொண்டைமானாறு வல்லை வீதியோரமாகவுள்ள ஒற்றைப்பனையடி வயல் கிணற்றிலிருந்து குடும்பஸ்தர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக வல்வெட்டித்துறைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று (28) இச்சடலம் மீட்கப்பட்டுள்ளதாகவும் இதில் கொத்தியகாடு கெருடாவில் தெற்கு தொண்டைமானாற்றைச் சேர்ந்த கிட்டினன் தவராசா (வயது - 50) என்ற 3 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
குறித்த நபர் கடந்த சனிக்கிழமை பி.ப. 6 மணியிலிருந்து காணாமல் போனதையடுத்து அவரது மனைவி மற்றும் உறவினர்கள் அவரைத் தேடிய நிலையில் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தனர்.
அதன் பின்னரும் தொடர்ந்து தேடிய நிலையில் வயல் கிணற்றிலிருந்து தொலைதூரத்தில் சைக்கிள் ஒன்று நிற்பதை அடுத்து உறவினர்கள் வயல் கிணறுகளில் தேடிப்பார்த்தபோதே குறித்த வயல் கிணற்றில் மேற்படி குடும்பஸ்தர் இறந்த நிலையில் சடலமாக கிடப்பது தெரியவந்தது.
இதனையடுத்து உறவினர்கள் பொலிஸாருக்கு தெரியப்படுத்தியதை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸாரும் வல்வெட்டித்துறை மரண விசாரணை அதிகாரி சுசீந்திரசிங்கம் ஆகியோர் விசாரணையை மேற்கொண்ட பின்னர் சடலம் பிரேத பரிசோதனைக்காக வல்வெட்டித்துறை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டதுடன் பிரேத பரிசோதனையை டாக்டர் மயிலேறும்பெருமாள் மேற்கொண்டார்.
இதன் பின்னர் மரண விசாரணையின் போது குறித்த நபர் கடந்த 2 வருடங்களாக வேலை இல்லாமல் மனஉளைச்சலுடன் காணப்பட்டதாகவும் அத்துடன் இவருக்கு ஏற்கனவே நோயுள்ளதாகவும் இவர் கிணற்றில் விழுந்து மூச்சுத் திணறியே இறந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
கொம்பனித்தெருவில் குடிசைகளுக்கு பதிலாக, சகல வசதிகளுடனும் கூடிய நிரந்தர மாடி வீட்டு கட்டிடத்தொகுதியை நிர்மாணிக்க, பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இத்திட்டத்தின் கீழ், 10 ஆயிரம் வீடுகள் நிர்மாணிக்கப்படுகின்றன. கொழும்பு நகரில் வாழும் குடிசை வாசிகள் மற்றும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கிடையே இவ்வீடுகள் வழங்கப்படவுள்ளன.
பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவின் மேற்பார்வையில் நிர்மாணிக்கப்படும் வீடுகள், ஹேனமுல்ல, அளுத்மாவத்தை, பேர்குசன் வீதி, சிவில் சி பெரேரா மாவத்தை, எதிரிசிங்க மாவத்தை, மாளிகாவத்த, மாளிகாவத்த புகையிரத நிலையத்திற்கு சொந்தமான காணி, தெமட்டகொட புகையிரத திணைக்களத்திற்கு சொந்தமான காணி, 31வது தோட்டம், ஒறுகொடவத்த செயற்திட்டம், 54 மற்றும் 66ஆம் தோட்ட செயற்திட்டம், கொலன்னாவ அரச தொழிற்சாலை வளாக பிரதேசங்களில் நிர்மாணப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
கொம்பனித்தெருவில் உள்ள குடிசைகளை அகற்றுவது தொடர்பாக மக்களை அறிவுறுத்தும் வேலைத்திட்டம், நேற்று பாதுகாப்பு செயலாளரின் தலைமையில் இடம்பெற்றது, பிரதேச மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், இதன்போது முன்வைக்கப்பட்டதுடன், அதற்காக செயற்படுத்த வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாகவும், பாதுகாப்பு செயலாளர் விளக்கமளித்தார். இம்மக்கள், தற்போது வாழும் நிலைமையை விட, உயரிய வாழ்க்கைத் தரத்தை வழங்குவதற்கு தேவையான சகல ஏற்பாடுகளும் அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, பாதுகாப்பு செயலாளர் தெரிவித்தார். கொம்பனித்தெருவில் வசிப்போருக்கான வீடமைப்பு கட்டிடத் தொகுதி, அப்பிரதேசத்திலேயே நிர்மாணிக்கப்படுகிறது. நிர்மாணப் பணிகள் பூர்த்தியடையும் வரை, இக்குடிசை வாசிகளை வேறு இடங்களில் குடியமர்த்த, விசேட வேலைத்திட்டங்கள் அமுல்ப்படுத்தப்பட்டுள்ளன. அவர்களுக்கு தேவையானவாறு மாற்று சந்தர்ப்பங்களை தேர்ந்தெடுக்கவும், வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன. அவர்களின் தீர்மானங்களை, ஒரு வாரத்திற்குள் நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு அறிவிக்க வேண்டும். எந்தவொரு நபருக்கும் அநீதி இழைக்கப்படாதவாறு தேவையான செயற்பாடுகள் மேற்கொள்ளப்படுமென, பாதுகாப்பு செயலாளர் கூறினார்.
இந்த மாடி வீட்டு கட்டிடத்தொகுதி நிர்மாணிக்கப்பட்டதன் பின்னர், தற்போதைய நிலைமையை விட, மக்களின் வாழ்வில் மாற்றங்கள் ஏற்படும். எவருக்கும் அநீதி இழைப்பது, எமது நோக்கமல்ல. தேவையான ஒழுங்குகளை மேற்கொண்டு, மக்களின் தேவைகளை பூர்த்தி செய், நடவடிக்கை எடுத்துள்ளோம். கொழும்பில் உள்ள வேறு மாடி கட்டிடங்களை போன்று அல்லாமல், மாற்றமான வசதிமிக்க மாடிவீட்டு கட்டிடத் தொகுதியாக இவை அமையவுள்ளன. அதி உயரிய வசதிகளுடனேயே, நாம் நிர்மாணிக்கின்றோம். சூழலில் ஏற்படக்கூடிய மாற்றம், மிகப்பெறுமதிமிக்கதாக அமையும். உங்களுக்கு இவ்வாறானதொரு வாழ்க்கைத் தரத்தை ஏற்படுத்திக்கொடுப்பதே, எமது நோக்கமாகும். உண்மையிலேயே, நீங்களே வெற்றியாளர்களாக மாற்றம் பெறுவீர்கள். வாழ்வதற்கு சிறந்த சூழவை ஏற்படுத்தி, மக்களின் வாழ்க்கைத் தரத்தை முன்னேற்றுவதே, நகர அபிவிருத்தி அதிகார சபையின் நோக்கமாகும். நாம் எந்த சந்தர்ப்பத்திலும் உங்களுக்கு கிடைக்குமு; வெற்றிகள் தொடர்பிலேயே, கவனம் செலுத்துகின்றோம். இதுவே இந்த செயற்திட்டத்தின் பிரதான நோக்கமாகும்.)
சிரேஷ்ட அமைச்சர் ஏ.எச்.எம். பௌஸி, பிரதியமைச்சர் பைஸர் முஸ்தபா, பாராளுமன்ற உறுப்பினர் திலங்க சுமதிபால உள்ளிட்டோரும், இதில் இணைந்திருந்தனர்.
பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவின் மேற்பார்வையில் நிர்மாணிக்கப்படும் வீடுகள், ஹேனமுல்ல, அளுத்மாவத்தை, பேர்குசன் வீதி, சிவில் சி பெரேரா மாவத்தை, எதிரிசிங்க மாவத்தை, மாளிகாவத்த, மாளிகாவத்த புகையிரத நிலையத்திற்கு சொந்தமான காணி, தெமட்டகொட புகையிரத திணைக்களத்திற்கு சொந்தமான காணி, 31வது தோட்டம், ஒறுகொடவத்த செயற்திட்டம், 54 மற்றும் 66ஆம் தோட்ட செயற்திட்டம், கொலன்னாவ அரச தொழிற்சாலை வளாக பிரதேசங்களில் நிர்மாணப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
கொம்பனித்தெருவில் உள்ள குடிசைகளை அகற்றுவது தொடர்பாக மக்களை அறிவுறுத்தும் வேலைத்திட்டம், நேற்று பாதுகாப்பு செயலாளரின் தலைமையில் இடம்பெற்றது, பிரதேச மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், இதன்போது முன்வைக்கப்பட்டதுடன், அதற்காக செயற்படுத்த வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாகவும், பாதுகாப்பு செயலாளர் விளக்கமளித்தார். இம்மக்கள், தற்போது வாழும் நிலைமையை விட, உயரிய வாழ்க்கைத் தரத்தை வழங்குவதற்கு தேவையான சகல ஏற்பாடுகளும் அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, பாதுகாப்பு செயலாளர் தெரிவித்தார். கொம்பனித்தெருவில் வசிப்போருக்கான வீடமைப்பு கட்டிடத் தொகுதி, அப்பிரதேசத்திலேயே நிர்மாணிக்கப்படுகிறது. நிர்மாணப் பணிகள் பூர்த்தியடையும் வரை, இக்குடிசை வாசிகளை வேறு இடங்களில் குடியமர்த்த, விசேட வேலைத்திட்டங்கள் அமுல்ப்படுத்தப்பட்டுள்ளன. அவர்களுக்கு தேவையானவாறு மாற்று சந்தர்ப்பங்களை தேர்ந்தெடுக்கவும், வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன. அவர்களின் தீர்மானங்களை, ஒரு வாரத்திற்குள் நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு அறிவிக்க வேண்டும். எந்தவொரு நபருக்கும் அநீதி இழைக்கப்படாதவாறு தேவையான செயற்பாடுகள் மேற்கொள்ளப்படுமென, பாதுகாப்பு செயலாளர் கூறினார்.
இந்த மாடி வீட்டு கட்டிடத்தொகுதி நிர்மாணிக்கப்பட்டதன் பின்னர், தற்போதைய நிலைமையை விட, மக்களின் வாழ்வில் மாற்றங்கள் ஏற்படும். எவருக்கும் அநீதி இழைப்பது, எமது நோக்கமல்ல. தேவையான ஒழுங்குகளை மேற்கொண்டு, மக்களின் தேவைகளை பூர்த்தி செய், நடவடிக்கை எடுத்துள்ளோம். கொழும்பில் உள்ள வேறு மாடி கட்டிடங்களை போன்று அல்லாமல், மாற்றமான வசதிமிக்க மாடிவீட்டு கட்டிடத் தொகுதியாக இவை அமையவுள்ளன. அதி உயரிய வசதிகளுடனேயே, நாம் நிர்மாணிக்கின்றோம். சூழலில் ஏற்படக்கூடிய மாற்றம், மிகப்பெறுமதிமிக்கதாக அமையும். உங்களுக்கு இவ்வாறானதொரு வாழ்க்கைத் தரத்தை ஏற்படுத்திக்கொடுப்பதே, எமது நோக்கமாகும். உண்மையிலேயே, நீங்களே வெற்றியாளர்களாக மாற்றம் பெறுவீர்கள். வாழ்வதற்கு சிறந்த சூழவை ஏற்படுத்தி, மக்களின் வாழ்க்கைத் தரத்தை முன்னேற்றுவதே, நகர அபிவிருத்தி அதிகார சபையின் நோக்கமாகும். நாம் எந்த சந்தர்ப்பத்திலும் உங்களுக்கு கிடைக்குமு; வெற்றிகள் தொடர்பிலேயே, கவனம் செலுத்துகின்றோம். இதுவே இந்த செயற்திட்டத்தின் பிரதான நோக்கமாகும்.)
சிரேஷ்ட அமைச்சர் ஏ.எச்.எம். பௌஸி, பிரதியமைச்சர் பைஸர் முஸ்தபா, பாராளுமன்ற உறுப்பினர் திலங்க சுமதிபால உள்ளிட்டோரும், இதில் இணைந்திருந்தனர்.