அமெரிக்காவில் தாயின் வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு வெற்றிகரமாக இருதய அறுவை சிகிச்சை மேற்கொண்டு மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர். அமெரிக்காவில் லாஸ்ஏஞ்சல்ஸ் நகரை சேர்ந்த ஒரு கர்ப்பிணி பெண்ணின் வயிற்றில் வளர்ந்த 25 வார கருக்குழந்தைக்கு இருதயத்தில் ரத்தக்குழாயில் அடைப்பு இருந்தது தெரிந்தது.
இதனால் அக்குழந்தைக்கு பிறந்த பிறகு மூச்சுதிணறல் உள் ளிட்ட இருதய நோயினால் அவதிப்படக்கூடிய சூழ்நிலை உருவாவதோடு, குழந்தை யின் உயிருக்கே ஆபத்தாக முடியும் நிலை ஏற்பட்டும் என்பதால், தாயின் வயிற்றுக்குள் கருப்பையில் வளரும் போதே குழந்தைக்கு இருதய அறுவை சிகிச்சை மேற்கொள்ள மருத்துவர்கள் முடிவு செய்தனர்.
கருவில் இருக்கும் குழந்தைக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டுமென்பதால் மயிரிழை அடர்த்தி உள்ள சிறிய வயர் , 7 செ.மீ அளவிலான மெல்லிய ஊசி போன்றவற்றின் மூலம் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது என தெரிவிக்கப்படுகின்றது
இதனால் அக்குழந்தைக்கு பிறந்த பிறகு மூச்சுதிணறல் உள் ளிட்ட இருதய நோயினால் அவதிப்படக்கூடிய சூழ்நிலை உருவாவதோடு, குழந்தை யின் உயிருக்கே ஆபத்தாக முடியும் நிலை ஏற்பட்டும் என்பதால், தாயின் வயிற்றுக்குள் கருப்பையில் வளரும் போதே குழந்தைக்கு இருதய அறுவை சிகிச்சை மேற்கொள்ள மருத்துவர்கள் முடிவு செய்தனர்.
கருவில் இருக்கும் குழந்தைக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டுமென்பதால் மயிரிழை அடர்த்தி உள்ள சிறிய வயர் , 7 செ.மீ அளவிலான மெல்லிய ஊசி போன்றவற்றின் மூலம் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது என தெரிவிக்கப்படுகின்றது
தமிழகத்தில் கல்லூரி அதிபர் ஒருவர் கொலை செய்யப் பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள மூன்று மாணவர்களுள் ஒருவர், இலங்கை தமிழர் என்றும் ஜீ.டனீஸ் என்ற 21 வயதான தகவல் தொழில்நுட்பவியல் மாணவரான அவர், தூத்துக்குடியில் உள்ள சிவகங்கா அகதி முகாமில் வசித்து வருபவர் என்றும் ஹிந்து பத்திரிகை இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.
அத்துடன் குறித்த கொலையை செய்துவிட்டு ஏன் கொலை செய்தோம் என்று வாக்குமூலமும் அளித்துள்ளனர். அவர்கள் வாக்குமூலம் வருமாறு: எங்கள் கல்லூரி முதல்வர் சுரேஷ் சிறிய சிறிய பிரச்சினைகளுக்கெல்லாம் தண்டனை வழங்குவார். 5 நிமிடம் கல்லூரிக்கு தாமதமாக வந்தால் கூட ரூ.500 வரை அபராதம் விதிப்பார். நாங்கள் 3 பேரும் கஷ்டப்பட்ட குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்பதால் அதனை எங்களால் கட்டமுடியவில்லை.
டனிசையும், பிரபாகரனையும் சஸ்பெண்டு செய்தார். பெற்றோரை அழைத்து வந்தால்தான் கல்லூரியில் சேர்ப்பேன் என்று கூறியதால், இரண்டு பேரும் கல்லூரிக்கு பெற்றோரை அழைத்து வந்தனர். அப்போது பெற்றோர் முன்பு இரண்டு பேரையும் அவதூறாக பேசினார். இதனால் இருவரும் மன உளைச்சலுக்கு ஆளானார்கள்.
இந்நிலையில் கடந்த 7-ந் திகதி என்னை சஸ்பெண்டு செய்தார். இது பற்றி கேட்ட போது, மாணவிகளை கேலி செய்ததால் சஸ்பெண்டு செய்துள்ளேன் என்றார். இது எனக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. மேலும் எனது பெற்றோரையும் அழைத்து அவர்கள் முன்பு என்னை அவமானப்படுத்தினார். இது பற்றி நான் எனது நண்பர்கள் டேனிஸ், பிரபாகரனிடம் கூறினேன். அப்போது பெற்றோர் முன்பு அவமானபடுத்திய கல்லூரி முதல்வர் சுரேசை கொலை செய்ய திட்டமிட்டோம்.
அதன்படி நேற்று காலை கல்லூரிக்கு அரிவாளுடன் சென்றோம். கல்லூரி வளாகத் திற்குள் சென்ற போது அங்கு வந்த சுரேஷ் என்னை பார்த்து கடுமையாக திட்டினார். மேலும் என்னை படிக்க வைக்க விடாமல் செய்து விடுவேன் என்று மிரட்டினார். இதனால் ஆத்திரமடைந்த நான் எனது நண்பர்கள் டேனிஸ், பிரபாகரனுடன் சேர்ந்து சுரேசை சரமாரி வெட்டினேன். இதில் அவர் இறந்து விட்டார். கல்லூரி ஊழியர்கள் சேர்ந்து எங்கள் 3பேரையும் பிடித்து பொலீசில் ஒப்படைத்து விட்டனர் என கொலை செய்த மாணவர் ஒருவர் தெரிவித்தார்.
அத்துடன் குறித்த கொலையை செய்துவிட்டு ஏன் கொலை செய்தோம் என்று வாக்குமூலமும் அளித்துள்ளனர். அவர்கள் வாக்குமூலம் வருமாறு: எங்கள் கல்லூரி முதல்வர் சுரேஷ் சிறிய சிறிய பிரச்சினைகளுக்கெல்லாம் தண்டனை வழங்குவார். 5 நிமிடம் கல்லூரிக்கு தாமதமாக வந்தால் கூட ரூ.500 வரை அபராதம் விதிப்பார். நாங்கள் 3 பேரும் கஷ்டப்பட்ட குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்பதால் அதனை எங்களால் கட்டமுடியவில்லை.
டனிசையும், பிரபாகரனையும் சஸ்பெண்டு செய்தார். பெற்றோரை அழைத்து வந்தால்தான் கல்லூரியில் சேர்ப்பேன் என்று கூறியதால், இரண்டு பேரும் கல்லூரிக்கு பெற்றோரை அழைத்து வந்தனர். அப்போது பெற்றோர் முன்பு இரண்டு பேரையும் அவதூறாக பேசினார். இதனால் இருவரும் மன உளைச்சலுக்கு ஆளானார்கள்.
இந்நிலையில் கடந்த 7-ந் திகதி என்னை சஸ்பெண்டு செய்தார். இது பற்றி கேட்ட போது, மாணவிகளை கேலி செய்ததால் சஸ்பெண்டு செய்துள்ளேன் என்றார். இது எனக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. மேலும் எனது பெற்றோரையும் அழைத்து அவர்கள் முன்பு என்னை அவமானப்படுத்தினார். இது பற்றி நான் எனது நண்பர்கள் டேனிஸ், பிரபாகரனிடம் கூறினேன். அப்போது பெற்றோர் முன்பு அவமானபடுத்திய கல்லூரி முதல்வர் சுரேசை கொலை செய்ய திட்டமிட்டோம்.
அதன்படி நேற்று காலை கல்லூரிக்கு அரிவாளுடன் சென்றோம். கல்லூரி வளாகத் திற்குள் சென்ற போது அங்கு வந்த சுரேஷ் என்னை பார்த்து கடுமையாக திட்டினார். மேலும் என்னை படிக்க வைக்க விடாமல் செய்து விடுவேன் என்று மிரட்டினார். இதனால் ஆத்திரமடைந்த நான் எனது நண்பர்கள் டேனிஸ், பிரபாகரனுடன் சேர்ந்து சுரேசை சரமாரி வெட்டினேன். இதில் அவர் இறந்து விட்டார். கல்லூரி ஊழியர்கள் சேர்ந்து எங்கள் 3பேரையும் பிடித்து பொலீசில் ஒப்படைத்து விட்டனர் என கொலை செய்த மாணவர் ஒருவர் தெரிவித்தார்.
சர்வதேசம் வடமாகாணசபை தேர்தலை அவதானிக் கின்றது. இத் தேர்தல் எமது தீர்வுக்கான முதல் படி. எல்லா மக்களும் ஒன்று திரண்டு இந்த அரசாங்கத்தின் அடக்குமுறைக்கு எதிராகவும் நில அபகரிப்புக்கு எதிரா கவும் கூட்டமைப்புக்கு வாக்களித்து பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியமைக்க செய்ய வேண்டும்.
இதை கேட்க மக்களுக்கு தேர்தல் மேடை ஞாபகம் வரும். ஆம் நிச்சயமாக அவை தேர்தல் மேடைகளில் மண்டையன் குழுத் தலைவர் சுரேஸ் பிறேமச்சந்திரனால் கூறப்பட்டவை தான்.
அப்ப அவர் சொன்னதை கேட்டு எமது மக்கள் கூட்டமைப்பை நம்பி வாக்களித்தார்கள். இப்ப அவர் சொன்னது அவருக்கே ஞாபகம் இருக்கோ தெரியாது.
அப்ப பார்த்த சர்வதேசம் இப்ப தம்பிக்காக சண்டை பிடிக்கேக்க பார்க்கேலையா? அப்ப ஒற்றுமையாக வாக்களிக்க கேட்டிங்க. இப்ப ஒற்றுமை எங்க போட்டுது. வடமாகாணசபைத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு 30 ஆசனங்களைப் பெற்றுள்ளது. சர்ச்சைகளுக்கு மத்தியில் ஜனாதிபதி முன்னிலையில் சி.வி.விக்னேஸ்வரன் பதவிப்பிரமாணம் செய்ய மௌனமாக இருந்து அதைப் புறக்கணித்த மண்டையன் குழுத் தலைவர் இன்று இடம்பெற்ற உறுப்பினர் பதவிப் பிரமாணத்தையும் புறக்கணித்து விட்டு இன்று கத்துறார்.
ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம் எடுக்கும் போது மௌனம். இன்று மட்டும் ஏன் இந்த கூச்சல்.
நடைபெற்று முடிந்த வடமாகாணசபைத் தேர்தலில் மண்டையன் குழுத் தலைவர் சுரேஸ்சின் தம்பி சர்வேஸ்வரனும் சூழலியலாளர் ஜங்கரநேசனும் ஈபிஆர்எல்எப் சார்பாக யாழில் போட்டியிட்டனர்.
இதில் தனது தம்பி வென்றதும் தம்பிக்கு அமைச்சுப் பதவி வழங்க வேண்டும் என தமிழரசுக்கட்சியிடமும் தனது உறுப்பினர்களிடமும் கூறிவந்த சுரேஸ்சின் செயற்பாட்டால் ஜங்கரநேசன் மெல்ல மெல்ல ஈபிஆர்எல்எப் கட்சியின் கட்டமைப்புக்களில் இருந்து விலகி தமிழரசுக்கட்சியிடம் தஞ்சம் கோரத் தொடங்கினார்.
தனது தலைவரை சுட்டவர்கள் நந்திக் கடலோரத்தில் கோமணத்துடன் கிடந்ததாக பத்மாநாவா நினைவு நாளில் கூறிய மண்டையன் குழு தலைவருக்கு மக்கள் நல்ல பதில் அளித்தனர். தனது சொந்த தொகுதியில் கூட வாக்கு எடுக்க முடியாத தம்பியார் சர்வேஸ்வரன் மற்றவங்களின் வாக்கில வாலைப்பிடிச்சு வென்றிட்டார். அப்படி வந்த சர்வேஸ்வரனுக்கும் அமைச்சுப் பதவி கொடுக்க வேண்டும் என மண்டையன் குழுத்தலைவர் தமிழரசுக் கட்சியிடம் கோரி வந்தார்.
இவர் சொன்னதைக் கேட்க அவர்களும் என்ன மண்டையன் குழுவா? அவங்க அப்புக்காத்துகள் ஆச்சே. அதால இவற்ற கதை எடுபடல.
தம்பிக்கு கிடைக்காதது ஜங்கரநேசனுக்கும் கிடைக்க கூடாது என சுரேஸ் கிளம்பினார். ஜங்கரநேசனுக்கு ஏன் அமைச்சு கொடுக்க கூடாது? அவருக்கு படிப்பு இருக்கு. அதைவிட நல்ல வாக்கு தானே கிடைத்தது. என்ற கருத்து மெல்ல மெல்ல கிளம்ப வெளிக்கிட மண்டையன் குழு தலைவருக்கு புது ஜடியா தோன்றியது.
முல்லைத்தீவு மக்களை குழப்பி அவர்களின் பிரதேசத்திற்கு அமைச்சு வேண்டும் என மக்களை மனுக் கொடுக்கச் செய்தார். எங்கட மக்கள் அதற்கும் பலிகடாவானார்கள். இதுக்குள்ள வைத்தியர் சிவமோகனுக்கு முல்லைத்தீவு அமைச்சர் பதவி தாறாதாக மண்டையன் குழு றேட் பேசிட்டாங்க. ஓம் என்ற வைத்தியரும் மண்டையன் குழுவோட சேர்ந்து மக்களை திரட்டி ஆர்பாட்டம் செய்ய வைத்தார்.
அதன் பிறகு வாகனம் ஒழுங்குபடுத்தி கொடுத்து தமிழரசுக் கட்சி தலைமைகளை முல்லைத்தீவு மக்கள் சந்திக்கச் செய்தது மண்டையன் குழு.
தமிழரசுக் கட்சி பனங்காட்டு நரியாச்சே. இந்த சலசலப்புக்கெல்லாம் அஞ்சாமல் ஜங்கரநேசனுக்கு அமைச்சுப் பதவியை அறிவித்தது. திகைத்து போன மண்டையன்குழு ஜங்கரநேசன் எங்கடகட்சி இல்ல எங்கட கட்சிக்கு அமைச்சுப் பதவி தாங்க எனக் கூறியது. ஜங்கரநேசன் ஈபிஆர்எல்எப் சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்றதால் அவர் அந்த கட்சி தான் என தமிழரசுக் கட்சி கூறிவிட்டது.
இந்த நிலையில் தான் ஈபிஆர்எல்எப் ஏனைய பங்காளிகட்சிகளான புளொட்டையும் ரெலோவையும் அணுகி பதவிப்பிரமாணத்தை புறக்கணிக்க தீர்மானித்தது. சுத்துமாத்து செல்வம் ஓம் ஓம் என்று சொல்லி விட்டு பதவிப்பிரமானத்திற்கு போய்விட்டார்.
தனக்கு அமைச்சு இல்ல என்று நின்ற சிவாஜிலிங்கம் உள்ளிட்ட ரெலோ சார்பாளர்களையும் புயொட் சித்தார்த்தனையும் ஒன்று சேர்த்த சுரேஸ் 9 பேரை பதவிப்பிரமாணம் செய்ய செல்லவிடாது தடுத்துள்ளார்.
இதில இவரை கட்சியால கேட்டு வென்றவர்கள் 5பேர். தம்பிக்காக எங்க மட்டும் இந்த பிரச்சனை வந்துட்டுபாருங்க.
இவர்களைஎ நம்பி வாக்களித்த மக்களை பலிகடாவாக்கி தம்பிக்கு ஒரு அமைச்சுக் கேட்ட சுரேஸ் இப்ப முல்லைக்கு அமைச்சுக் கேட்கிறார். முல்லைக்கு அமைச்சுப் போன சுரேஸ்சுக்கு காசு தாறதாக சிவமோகன் சொல்லிட்டார். காசு வரும் என்றதால இங்கேயும் மண்டயன் குழுவின் பழைய உறுப்பினர் ரவிகரனுக்கு ஆப்பு தான்.
சரி, வடமாகணசபையை சர்வதேசம் பார்கிறது. வாக்களியுங்க என்றவர் .இன்றைக்கு தான் அதைக்குழப்புவது சரியா? சர்வதேசம் இன்றைக்கு என்ன நித்திரையா? தம்பிகாகாக 9 உறுப்பினர்களையும் அவர்கள் பின்னுள்ள மக்களையும் பலிகடாவாக்கும் மண்டையன் குழுவா தேசியத்தை பெற்றுத்தரப் போகிறது? அல்லது தீர்வைப் பெற்றுத் தரப் போகிறது. மண்டையன் குழுவுக்கு இனியும் பலிக்கடாவாக எமது மக்கள் என்ன மண்டையன்களா?
இதை கேட்க மக்களுக்கு தேர்தல் மேடை ஞாபகம் வரும். ஆம் நிச்சயமாக அவை தேர்தல் மேடைகளில் மண்டையன் குழுத் தலைவர் சுரேஸ் பிறேமச்சந்திரனால் கூறப்பட்டவை தான்.
அப்ப அவர் சொன்னதை கேட்டு எமது மக்கள் கூட்டமைப்பை நம்பி வாக்களித்தார்கள். இப்ப அவர் சொன்னது அவருக்கே ஞாபகம் இருக்கோ தெரியாது.
அப்ப பார்த்த சர்வதேசம் இப்ப தம்பிக்காக சண்டை பிடிக்கேக்க பார்க்கேலையா? அப்ப ஒற்றுமையாக வாக்களிக்க கேட்டிங்க. இப்ப ஒற்றுமை எங்க போட்டுது. வடமாகாணசபைத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு 30 ஆசனங்களைப் பெற்றுள்ளது. சர்ச்சைகளுக்கு மத்தியில் ஜனாதிபதி முன்னிலையில் சி.வி.விக்னேஸ்வரன் பதவிப்பிரமாணம் செய்ய மௌனமாக இருந்து அதைப் புறக்கணித்த மண்டையன் குழுத் தலைவர் இன்று இடம்பெற்ற உறுப்பினர் பதவிப் பிரமாணத்தையும் புறக்கணித்து விட்டு இன்று கத்துறார்.
ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம் எடுக்கும் போது மௌனம். இன்று மட்டும் ஏன் இந்த கூச்சல்.
நடைபெற்று முடிந்த வடமாகாணசபைத் தேர்தலில் மண்டையன் குழுத் தலைவர் சுரேஸ்சின் தம்பி சர்வேஸ்வரனும் சூழலியலாளர் ஜங்கரநேசனும் ஈபிஆர்எல்எப் சார்பாக யாழில் போட்டியிட்டனர்.
இதில் தனது தம்பி வென்றதும் தம்பிக்கு அமைச்சுப் பதவி வழங்க வேண்டும் என தமிழரசுக்கட்சியிடமும் தனது உறுப்பினர்களிடமும் கூறிவந்த சுரேஸ்சின் செயற்பாட்டால் ஜங்கரநேசன் மெல்ல மெல்ல ஈபிஆர்எல்எப் கட்சியின் கட்டமைப்புக்களில் இருந்து விலகி தமிழரசுக்கட்சியிடம் தஞ்சம் கோரத் தொடங்கினார்.
தனது தலைவரை சுட்டவர்கள் நந்திக் கடலோரத்தில் கோமணத்துடன் கிடந்ததாக பத்மாநாவா நினைவு நாளில் கூறிய மண்டையன் குழு தலைவருக்கு மக்கள் நல்ல பதில் அளித்தனர். தனது சொந்த தொகுதியில் கூட வாக்கு எடுக்க முடியாத தம்பியார் சர்வேஸ்வரன் மற்றவங்களின் வாக்கில வாலைப்பிடிச்சு வென்றிட்டார். அப்படி வந்த சர்வேஸ்வரனுக்கும் அமைச்சுப் பதவி கொடுக்க வேண்டும் என மண்டையன் குழுத்தலைவர் தமிழரசுக் கட்சியிடம் கோரி வந்தார்.
இவர் சொன்னதைக் கேட்க அவர்களும் என்ன மண்டையன் குழுவா? அவங்க அப்புக்காத்துகள் ஆச்சே. அதால இவற்ற கதை எடுபடல.
தம்பிக்கு கிடைக்காதது ஜங்கரநேசனுக்கும் கிடைக்க கூடாது என சுரேஸ் கிளம்பினார். ஜங்கரநேசனுக்கு ஏன் அமைச்சு கொடுக்க கூடாது? அவருக்கு படிப்பு இருக்கு. அதைவிட நல்ல வாக்கு தானே கிடைத்தது. என்ற கருத்து மெல்ல மெல்ல கிளம்ப வெளிக்கிட மண்டையன் குழு தலைவருக்கு புது ஜடியா தோன்றியது.
முல்லைத்தீவு மக்களை குழப்பி அவர்களின் பிரதேசத்திற்கு அமைச்சு வேண்டும் என மக்களை மனுக் கொடுக்கச் செய்தார். எங்கட மக்கள் அதற்கும் பலிகடாவானார்கள். இதுக்குள்ள வைத்தியர் சிவமோகனுக்கு முல்லைத்தீவு அமைச்சர் பதவி தாறாதாக மண்டையன் குழு றேட் பேசிட்டாங்க. ஓம் என்ற வைத்தியரும் மண்டையன் குழுவோட சேர்ந்து மக்களை திரட்டி ஆர்பாட்டம் செய்ய வைத்தார்.
அதன் பிறகு வாகனம் ஒழுங்குபடுத்தி கொடுத்து தமிழரசுக் கட்சி தலைமைகளை முல்லைத்தீவு மக்கள் சந்திக்கச் செய்தது மண்டையன் குழு.
தமிழரசுக் கட்சி பனங்காட்டு நரியாச்சே. இந்த சலசலப்புக்கெல்லாம் அஞ்சாமல் ஜங்கரநேசனுக்கு அமைச்சுப் பதவியை அறிவித்தது. திகைத்து போன மண்டையன்குழு ஜங்கரநேசன் எங்கடகட்சி இல்ல எங்கட கட்சிக்கு அமைச்சுப் பதவி தாங்க எனக் கூறியது. ஜங்கரநேசன் ஈபிஆர்எல்எப் சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்றதால் அவர் அந்த கட்சி தான் என தமிழரசுக் கட்சி கூறிவிட்டது.
இந்த நிலையில் தான் ஈபிஆர்எல்எப் ஏனைய பங்காளிகட்சிகளான புளொட்டையும் ரெலோவையும் அணுகி பதவிப்பிரமாணத்தை புறக்கணிக்க தீர்மானித்தது. சுத்துமாத்து செல்வம் ஓம் ஓம் என்று சொல்லி விட்டு பதவிப்பிரமானத்திற்கு போய்விட்டார்.
தனக்கு அமைச்சு இல்ல என்று நின்ற சிவாஜிலிங்கம் உள்ளிட்ட ரெலோ சார்பாளர்களையும் புயொட் சித்தார்த்தனையும் ஒன்று சேர்த்த சுரேஸ் 9 பேரை பதவிப்பிரமாணம் செய்ய செல்லவிடாது தடுத்துள்ளார்.
இதில இவரை கட்சியால கேட்டு வென்றவர்கள் 5பேர். தம்பிக்காக எங்க மட்டும் இந்த பிரச்சனை வந்துட்டுபாருங்க.
இவர்களைஎ நம்பி வாக்களித்த மக்களை பலிகடாவாக்கி தம்பிக்கு ஒரு அமைச்சுக் கேட்ட சுரேஸ் இப்ப முல்லைக்கு அமைச்சுக் கேட்கிறார். முல்லைக்கு அமைச்சுப் போன சுரேஸ்சுக்கு காசு தாறதாக சிவமோகன் சொல்லிட்டார். காசு வரும் என்றதால இங்கேயும் மண்டயன் குழுவின் பழைய உறுப்பினர் ரவிகரனுக்கு ஆப்பு தான்.
சரி, வடமாகணசபையை சர்வதேசம் பார்கிறது. வாக்களியுங்க என்றவர் .இன்றைக்கு தான் அதைக்குழப்புவது சரியா? சர்வதேசம் இன்றைக்கு என்ன நித்திரையா? தம்பிகாகாக 9 உறுப்பினர்களையும் அவர்கள் பின்னுள்ள மக்களையும் பலிகடாவாக்கும் மண்டையன் குழுவா தேசியத்தை பெற்றுத்தரப் போகிறது? அல்லது தீர்வைப் பெற்றுத் தரப் போகிறது. மண்டையன் குழுவுக்கு இனியும் பலிக்கடாவாக எமது மக்கள் என்ன மண்டையன்களா?
கடந்த பல மாதங்களாக கூட்டமைப்புககள் நடந்த உட்கட்சி மோதலின் உச்சக்கட்ட விளைவாக வட மாகாண சபைத் தேர்தலில் தமிழரசுக் கட்சியின் வீட்டுச் சின்னத்தில் போட்டியிட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பங்காளி கட்சிகளான புளட், ஈ.பி.ஆர்.எல்.எப், ரெலோ ஆகிய மூன்று கட்சிகள் பதவியேற்பு வைபவத்தை புறக்கணித்துடன், பல் வேறுபட்ட குற்றச்சாட்டுக்களை தங்களுக்குள்ளேயே சுமத்தி வருகின்றனர்.
இந்நிலையில் வட மாகாணசபைக்கு தெரிவான அமைச்சர்கள், இன்று வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ.ஏ.சந்திரசிறியிடமிருந்து யாழ்ப்பாணத்தில் அமைந் துள்ள ஆளுநர் அலுவலகத்தில் வைத்து நியமனக் கடிதங்களைப் பெற்றுக் கொண்டனர்.
இந்த நியமனக் கடிதங்களை வழங்கும் நிகழ்வில், வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனும் கலந்துகொண்டார். அப்போது வடமாகாண அமைச்சர்கள் தெரிவு தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினை குறித்து, முதலமைச்சரிடம் ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த முதலமைச்சர்,
பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன், தனது சகோதரருக்கு அமைச்சுப் பதவி வழங்காமையினால் பல்வேறு பிரச்சினைகளை எழுப்பி வருகின்றார்' என்றும் இது எல்லா கட்சிகளிலும் ஏற்படக்கூடிய பிரச்சினைதான் இதற்கு தீர்வு காண்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றோம்' என தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் வட மாகாணசபைக்கு தெரிவான அமைச்சர்கள், இன்று வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ.ஏ.சந்திரசிறியிடமிருந்து யாழ்ப்பாணத்தில் அமைந் துள்ள ஆளுநர் அலுவலகத்தில் வைத்து நியமனக் கடிதங்களைப் பெற்றுக் கொண்டனர்.
இந்த நியமனக் கடிதங்களை வழங்கும் நிகழ்வில், வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனும் கலந்துகொண்டார். அப்போது வடமாகாண அமைச்சர்கள் தெரிவு தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினை குறித்து, முதலமைச்சரிடம் ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த முதலமைச்சர்,
பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன், தனது சகோதரருக்கு அமைச்சுப் பதவி வழங்காமையினால் பல்வேறு பிரச்சினைகளை எழுப்பி வருகின்றார்' என்றும் இது எல்லா கட்சிகளிலும் ஏற்படக்கூடிய பிரச்சினைதான் இதற்கு தீர்வு காண்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றோம்' என தெரிவித்துள்ளார்.
இன்று நடைபெற்ற பதவியேற்பு வைபவத்தினையே நாங் கள் புறக்கணித்தோமே தவிர, வடமாகாணசபையினை எமது ஈ.பி.ஆர்.டில்.எப். கட்சி புறக்கணிக்கவில்லை. மாறாக, என பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேம சந்திரன் தெரிவித்தார். மாகாணசபைக்கு தெரிவு செய்யப் பட்ட ஈ.பி.ஆர்.எல்.எப். உறுப்பினர்கள் பதவியேற்பு வைப வத்தில் பங்குபற்றாமை தொடர்பில் அக்கட்சியின் தலைவர் சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவிக்கையில்,
கூட்டமைப்பு என்பதன் பதம் அனைவருக்கும் நன்கு தெரியும். ஒரு கூட்டமைப்பில் உள்ளவர்களின் முடிவுகள் எப்படி அமையவேண்டும் என்பது பற்றியும் யாவரும் அறிவர். அதாவது எதேட்சாதிகார போக்கில் தனிப்பட்ட முடிவினை எவரும் எடுக்க முடியாது. கூட்டமைப்பில் அங்கம் வகிக்கின்ற அனைத்து கட்சிகளின் சம்மதத் திற்கிணங்கவே முடிவுகள் எட்டப்பட வேண்டும் என்பது விதி. ஆனால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பொறுத்தமட்டில் மேலாதிக்க ரீதியான, தனிப்பட்ட முடிவுகளே எட்டப்படு வருகின்றன.
தேர்தல் காலத்தில் ஒன்றாக பிரசார நடவடிக்கைகளை மேற்கொண்டுவிட்டு, தேர்தல் வெற்றியின் பின்னர் மக்கள் தந்த ஆணையினை துஸ்பிரயோகம் செய்வதை எமது கட்சி ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்பது சம்பந்தன், சுமந்திரன், விக்னேஸ்வரன் ஆகியோரை மாத்திரம் உள்ளடக்கிய கட்சியல்ல என்பதை கூட்டமைப்பின் தலைமை உணரமறுக்கிறது.
அடக்கப்பட்டிருந்த மக்களின் அபிலாஷைகளை தமது வாக்கு என்னும் ஆயுதத்தினால் வெளிப்படுத்தியிருக்கிறார்கள். இதனால்தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆறில் ஐந்து பெரும்பான்மை வெற்றிபெற்றிருக்கிறது. இவ்வெற்றி யானது கூட்டமைப்பில் இருக்கின்ற தமிழரசுக் கட்சியினால் மாத்திரம் பெறப்பட்ட தல்ல. அனைத்து கட்சிகளின் ஒத்துழைப்பும் இந்த வெற்றிக்கு வித்திட்டிருக்கின்றன. ஆனால், அமைச்சர்களின் தெரிவில் எமது கோரிக்கைகளுக்கு செவிசாய்க்காமல் சுயேட்சையாக முடிவெடுப்பதென்பது எவ்வகையில் நியாயம். நான்கு அமைச்சுக்களையும் நான்கு கட்சிகளுக்கு பிரிந்துக் கொடுங்கள் என்று நாங்கள் கூட்டமைப்பின் தலைமையிடம் கேட்டோம். ஆனால், தமிழரசுக் கட்சிக்கு 2 அமைச்சுக்கள் வேண்டுமென சம்பந்தன் ஒற்றைக் காலில் நின்றார்.
அதுமட்டுமல்லாமல் எமது கட்சிக்கு வழங்கவேண்டிய அமைச்சுப் பதவியை முல்லைத்தீவு மாவட்டத்தில் தெரிவுசெய்யப்பட்ட எமது உறுப்பினருக்கு வழங் கும்படி பரிந்துரைத்தோம். ஆனால், அதனையும் கூட்டமைப்பின் தலைமை நிராகரித்து, ஐங்கரநேசனை அமைச்சராக அறிவித்தார்கள். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ - அமைச்சு ஆசைகளைக் காட்டி எதிர்க்கட்சியினரை வளைத்துப் போடுவதுபோல், கூட்டமைப்பின் தலைமையும் செயற்பட பார்க்கிறது. இது, கூட்டமைப்பின் எதிர்காலத்திற்கு நல்லதல்ல.
அதுமட்டுமல்லாமல், தேர்தலுக்காக இரவு பகலாக கஷ்டப்பட்ட பலர் வடக்கில் இருக்கும்போது, கொழும்பிலுள்ள சிலரை ஆலோசகர்களாக உள்வாங்கவும் முதலமைச்சர் முடிவுசெய்திருக்கிறார். இதனால் வடக்கிலுள்ள மக்களுக்கு என்ன நன்மை கிடைக்கவுள்ளது? இங்கு கஷ்டப்பட்டவர்கள் சும்மா இருக்க, கொழும்பிலிருந்து வருபவர்களுக்கு முன்னுரிமை என்றால் இதில் என்ன நியாயமிருக்கிறது?
இதுபோன்ற பல தவறுகளை கூட்டமைப்பின் தலைமை மேற்கொண்டுவருவதை தட்டிக்கேட்கின்ற எம்மை குழப்பவாதிகளாக ஊடகங்களும் தமிழரசுக் கட்சி விஸ்வாசிகளும் சித்திரிப்பது வேடிக்கையானதே. நாங்கள் ஒற்றுமையாக சேர்ந்து செயலாற்ற தயாராக இருக்கின்றோம். அதற்காகத்தான் மக்கள் எம்மை ஆதரித் திருக்கிறார்கள். ஆனால், அதனை கூட்டமைப்புக்குள்ளிருக்கும் அனைத்து கட்சிகளும் ஏற்றுக்கொள்ளும் விதத்தில் நடைமுறைப்படுத்த வேண்டும். அதனைவிடுத்து, ஏதேச்சாதிகார போக்கில் தன்னிச்சையான முடிவுகளை கூட்டமைப்பின் தலைமை எடுக்குமேயானால், இதன் பின்விளைவுகளுக்கும் அவர்களே பொறுப்பை ஏற்றுக்கொள்ளவும் வேண்டும்.
எமது கட்சி சார்பாக தெரிவுசெய்யப்பட்டவர்கள் நிச்சயமாக பதவிப்பிரமாணம் எடுப்பார்கள். அத்தோடு தங்களாலான அனைத்து உதவிகளையும் மக்களுக்குச் செய்வார்கள் என்பதையும் இங்கு நான் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்' என பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் மேலும் குறிப்பிட்டார்.
இதேவேளை இது தொடர்பில் புளொட் தலைவருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவிக்கையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் நாங்களும் ஒரு பங்காளிகளாகவும் ஒரு சமத்துவமாகவும் இருக்கிறோம் என்பதை உணர்வதன் மூலம் தான் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பங்களிப்பும் மிகப் பெரியளவிலே இருக்க முடியும். இதுதான் முக்கியமே தவிர இந்த அமைச்சுப்பதவி என்பன முக்கியமான விடயமாக எனக்குத் தெரியவில்லை வடமாகாண சபை உறுப்பினரும் புளொட் தலைவருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்தார்.
இது தொடர்பில் இங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது, 'தமிழ் மக்கள் தங்களுடைய ஒற்றுமையை வலுப்படுத்தல், உணர்வுகளை வெளிப்படுத்தல் ஆகிய வற்றிற்காகவே தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களித்தனர். தமிழ் தேசியக் கூட்டமைப்பு தேர்தலில் அமோக வெற்றியைப் பெற்ற பின்னர் கூட்டமைப்பின் அங்கம் வகிக்கும் ஐந்து கட்சிகளும் கொள்கை ரீதியில் ஒர் உடன்படிக்கைக்கு வந்திருந்தன.
அதாவது, நான்கு கட்சிகளுக்கு தலா ஒவ்வொரு அமைச்சுப் பதவியும், தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வி.ஆனந்த சங்கரியை போனஸ் ஆசனம்; மூலம் அவைத் தலைவர் பதவி கொடுப்பது என்ற கோரிக்கையை நான்கு கட்சிகள் மிக வலுவாக முன்வைத்தபோது அது கொள்கை ரீதியில் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
இந்நிலை மாறி ஆனந்த சங்கரிக்கு போனஸ் ஆசனம் வழங்கப்படவில்லை. இறுதியில் தமிழரசுக் கட்சி தங்களுக்கு இரண்டு ஆசனங்களையும் மற்றைய இரண்டு ஆசனங்களை ஈ.பி.ஆர்.எல்.எவ் மற்றும் ரெலோவிற்கும் கொடுத்தனர். ஈ.பி.ஆர்.எல்.எப், டெலோ கட்சியால் கூறப்பட்டவர்கள் இல்லாமல் வேறு உறுப்பினர்களைத் தெரிவு செய்தனர்.
வடமாகாண சபையில் இருக்கக்கூடிய முக்கிய பொறுப்புக்களும் ஐந்து கட்சி களுக்கும் பகிரப்படுகின்ற போதுதான், கட்சிகளிடையிலான ஒற்றுமை வலுப்படுத்தப்பட்டு தமிழ் மக்கள் எதற்காக வாக்களித்தார்களோ அந்த குறிக்கோளை நிறைவு செய்ய முடியும்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பும் நாங்களும் ஒரு பங்காளிகளாகவும் ஒரு சமத்துவமாகவும் இருக்கிறோம் என்பதை உணர்வதன் மூலம் தான் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பங்களிப்பும் மிகப் பெரியளவிலே இருக்க முடியும். இதுதான் முக்கியமே தவிர இந்த அமைச்சுப் பதவி என்பன முக்கியமான விடயமாக எனக்குத் தெரியவில்லை' என அவர் மேலும் தெரிவித்தார்.
கூட்டமைப்பு என்பதன் பதம் அனைவருக்கும் நன்கு தெரியும். ஒரு கூட்டமைப்பில் உள்ளவர்களின் முடிவுகள் எப்படி அமையவேண்டும் என்பது பற்றியும் யாவரும் அறிவர். அதாவது எதேட்சாதிகார போக்கில் தனிப்பட்ட முடிவினை எவரும் எடுக்க முடியாது. கூட்டமைப்பில் அங்கம் வகிக்கின்ற அனைத்து கட்சிகளின் சம்மதத் திற்கிணங்கவே முடிவுகள் எட்டப்பட வேண்டும் என்பது விதி. ஆனால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பொறுத்தமட்டில் மேலாதிக்க ரீதியான, தனிப்பட்ட முடிவுகளே எட்டப்படு வருகின்றன.
தேர்தல் காலத்தில் ஒன்றாக பிரசார நடவடிக்கைகளை மேற்கொண்டுவிட்டு, தேர்தல் வெற்றியின் பின்னர் மக்கள் தந்த ஆணையினை துஸ்பிரயோகம் செய்வதை எமது கட்சி ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்பது சம்பந்தன், சுமந்திரன், விக்னேஸ்வரன் ஆகியோரை மாத்திரம் உள்ளடக்கிய கட்சியல்ல என்பதை கூட்டமைப்பின் தலைமை உணரமறுக்கிறது.
அடக்கப்பட்டிருந்த மக்களின் அபிலாஷைகளை தமது வாக்கு என்னும் ஆயுதத்தினால் வெளிப்படுத்தியிருக்கிறார்கள். இதனால்தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆறில் ஐந்து பெரும்பான்மை வெற்றிபெற்றிருக்கிறது. இவ்வெற்றி யானது கூட்டமைப்பில் இருக்கின்ற தமிழரசுக் கட்சியினால் மாத்திரம் பெறப்பட்ட தல்ல. அனைத்து கட்சிகளின் ஒத்துழைப்பும் இந்த வெற்றிக்கு வித்திட்டிருக்கின்றன. ஆனால், அமைச்சர்களின் தெரிவில் எமது கோரிக்கைகளுக்கு செவிசாய்க்காமல் சுயேட்சையாக முடிவெடுப்பதென்பது எவ்வகையில் நியாயம். நான்கு அமைச்சுக்களையும் நான்கு கட்சிகளுக்கு பிரிந்துக் கொடுங்கள் என்று நாங்கள் கூட்டமைப்பின் தலைமையிடம் கேட்டோம். ஆனால், தமிழரசுக் கட்சிக்கு 2 அமைச்சுக்கள் வேண்டுமென சம்பந்தன் ஒற்றைக் காலில் நின்றார்.
அதுமட்டுமல்லாமல் எமது கட்சிக்கு வழங்கவேண்டிய அமைச்சுப் பதவியை முல்லைத்தீவு மாவட்டத்தில் தெரிவுசெய்யப்பட்ட எமது உறுப்பினருக்கு வழங் கும்படி பரிந்துரைத்தோம். ஆனால், அதனையும் கூட்டமைப்பின் தலைமை நிராகரித்து, ஐங்கரநேசனை அமைச்சராக அறிவித்தார்கள். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ - அமைச்சு ஆசைகளைக் காட்டி எதிர்க்கட்சியினரை வளைத்துப் போடுவதுபோல், கூட்டமைப்பின் தலைமையும் செயற்பட பார்க்கிறது. இது, கூட்டமைப்பின் எதிர்காலத்திற்கு நல்லதல்ல.
அதுமட்டுமல்லாமல், தேர்தலுக்காக இரவு பகலாக கஷ்டப்பட்ட பலர் வடக்கில் இருக்கும்போது, கொழும்பிலுள்ள சிலரை ஆலோசகர்களாக உள்வாங்கவும் முதலமைச்சர் முடிவுசெய்திருக்கிறார். இதனால் வடக்கிலுள்ள மக்களுக்கு என்ன நன்மை கிடைக்கவுள்ளது? இங்கு கஷ்டப்பட்டவர்கள் சும்மா இருக்க, கொழும்பிலிருந்து வருபவர்களுக்கு முன்னுரிமை என்றால் இதில் என்ன நியாயமிருக்கிறது?
இதுபோன்ற பல தவறுகளை கூட்டமைப்பின் தலைமை மேற்கொண்டுவருவதை தட்டிக்கேட்கின்ற எம்மை குழப்பவாதிகளாக ஊடகங்களும் தமிழரசுக் கட்சி விஸ்வாசிகளும் சித்திரிப்பது வேடிக்கையானதே. நாங்கள் ஒற்றுமையாக சேர்ந்து செயலாற்ற தயாராக இருக்கின்றோம். அதற்காகத்தான் மக்கள் எம்மை ஆதரித் திருக்கிறார்கள். ஆனால், அதனை கூட்டமைப்புக்குள்ளிருக்கும் அனைத்து கட்சிகளும் ஏற்றுக்கொள்ளும் விதத்தில் நடைமுறைப்படுத்த வேண்டும். அதனைவிடுத்து, ஏதேச்சாதிகார போக்கில் தன்னிச்சையான முடிவுகளை கூட்டமைப்பின் தலைமை எடுக்குமேயானால், இதன் பின்விளைவுகளுக்கும் அவர்களே பொறுப்பை ஏற்றுக்கொள்ளவும் வேண்டும்.
எமது கட்சி சார்பாக தெரிவுசெய்யப்பட்டவர்கள் நிச்சயமாக பதவிப்பிரமாணம் எடுப்பார்கள். அத்தோடு தங்களாலான அனைத்து உதவிகளையும் மக்களுக்குச் செய்வார்கள் என்பதையும் இங்கு நான் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்' என பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் மேலும் குறிப்பிட்டார்.
இதேவேளை இது தொடர்பில் புளொட் தலைவருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவிக்கையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் நாங்களும் ஒரு பங்காளிகளாகவும் ஒரு சமத்துவமாகவும் இருக்கிறோம் என்பதை உணர்வதன் மூலம் தான் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பங்களிப்பும் மிகப் பெரியளவிலே இருக்க முடியும். இதுதான் முக்கியமே தவிர இந்த அமைச்சுப்பதவி என்பன முக்கியமான விடயமாக எனக்குத் தெரியவில்லை வடமாகாண சபை உறுப்பினரும் புளொட் தலைவருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்தார்.
இது தொடர்பில் இங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது, 'தமிழ் மக்கள் தங்களுடைய ஒற்றுமையை வலுப்படுத்தல், உணர்வுகளை வெளிப்படுத்தல் ஆகிய வற்றிற்காகவே தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களித்தனர். தமிழ் தேசியக் கூட்டமைப்பு தேர்தலில் அமோக வெற்றியைப் பெற்ற பின்னர் கூட்டமைப்பின் அங்கம் வகிக்கும் ஐந்து கட்சிகளும் கொள்கை ரீதியில் ஒர் உடன்படிக்கைக்கு வந்திருந்தன.
அதாவது, நான்கு கட்சிகளுக்கு தலா ஒவ்வொரு அமைச்சுப் பதவியும், தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வி.ஆனந்த சங்கரியை போனஸ் ஆசனம்; மூலம் அவைத் தலைவர் பதவி கொடுப்பது என்ற கோரிக்கையை நான்கு கட்சிகள் மிக வலுவாக முன்வைத்தபோது அது கொள்கை ரீதியில் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
இந்நிலை மாறி ஆனந்த சங்கரிக்கு போனஸ் ஆசனம் வழங்கப்படவில்லை. இறுதியில் தமிழரசுக் கட்சி தங்களுக்கு இரண்டு ஆசனங்களையும் மற்றைய இரண்டு ஆசனங்களை ஈ.பி.ஆர்.எல்.எவ் மற்றும் ரெலோவிற்கும் கொடுத்தனர். ஈ.பி.ஆர்.எல்.எப், டெலோ கட்சியால் கூறப்பட்டவர்கள் இல்லாமல் வேறு உறுப்பினர்களைத் தெரிவு செய்தனர்.
வடமாகாண சபையில் இருக்கக்கூடிய முக்கிய பொறுப்புக்களும் ஐந்து கட்சி களுக்கும் பகிரப்படுகின்ற போதுதான், கட்சிகளிடையிலான ஒற்றுமை வலுப்படுத்தப்பட்டு தமிழ் மக்கள் எதற்காக வாக்களித்தார்களோ அந்த குறிக்கோளை நிறைவு செய்ய முடியும்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பும் நாங்களும் ஒரு பங்காளிகளாகவும் ஒரு சமத்துவமாகவும் இருக்கிறோம் என்பதை உணர்வதன் மூலம் தான் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பங்களிப்பும் மிகப் பெரியளவிலே இருக்க முடியும். இதுதான் முக்கியமே தவிர இந்த அமைச்சுப் பதவி என்பன முக்கியமான விடயமாக எனக்குத் தெரியவில்லை' என அவர் மேலும் தெரிவித்தார்.
பொல்காவலை உடபொலபெருந்தோட்ட பகுதியில் அமைந் துள்ள ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்த அலங்கார உற்சவம் நேற்றையதினம் விமர்சையாக நடைபெற்றது. அவ் உற்சவத்தின் போது இடம்பெற்ற நிகழ்வு படங்களை இங்குகாணலாம்.
படங்கள்: எஸ்.சிவகாந்தன்- பதுளை
படங்கள்: எஸ்.சிவகாந்தன்- பதுளை
அமெரிக்கா பிற நாடுகளை வேவு பார்ப்பதை ஆதாரத்துடன் உலகிற்குத் தெரிவித்தவர் எட்வர்ட் ஸ்னோடென் ஆனால் அமெரிக்க அரசால் தனது உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்று அஞ்சிய அவர் அடைக்கலம் தேடி பல நாடுகளுக்கும் சென்றார் இறுதியில் ரஷ்யா விமான நிலையத்தில் ஒரு மாதம் காத்திருந்த பின் அவருக்கு அடைக்கலம் கொடுத்தது.
கடந்த ஆகஸ்ட் மாதம் அரசின் தற்காலிக அனுமதி கிடைத்து ரஷ்யாவிற்குள் சென்ற ஸ்னோடென் பற்றிய தகவல் பின்னர் வெளிவரவில்லை என்பதுடன் அவரின் இருப்பிடத்தை அறிவதற்கும், வாய்ப்பு கிடைத்தால் அவரைப் பார்ப்பதற்கும் எண்ணி அவரின் தந்தை லோன் ஸ்னோடென் ரஷ்யா சென்றுள்ளார்.
நியூயார்க்கிலிருந்து புறப்பட்டு இன்று அதிகாலை ரஷ்யாவின் ஷெரேமெட்எவோ விமான நிலையத்தை அவர் அடைந்தார். அங்குதான் ரஷ்யாவின் அனுமதி பெறும்முன் ஸ்னோடென் காத்திருந்தார்.
காத்திருந்த நேரத்தில் கிடைத்த தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் தோன்றிய லோன் தனது 30 வயது மகன் இருக்கும் இடம்தெரியாது என்று குறிப்பிட்டார் மேலும் தனது மகனின் வழக்கறிஞரான அனடோலி குச்சரேனாவுடன் இணைந்து மகனுடைய நிலைமை, ஆரோக்கியம், தேவையான சட்டபூர்வ நடவடிக்கைகள் குறித்து தெரிந்து கொள்வதற்காக வந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
கடந்த ஆகஸ்ட் மாதம் அரசின் தற்காலிக அனுமதி கிடைத்து ரஷ்யாவிற்குள் சென்ற ஸ்னோடென் பற்றிய தகவல் பின்னர் வெளிவரவில்லை என்பதுடன் அவரின் இருப்பிடத்தை அறிவதற்கும், வாய்ப்பு கிடைத்தால் அவரைப் பார்ப்பதற்கும் எண்ணி அவரின் தந்தை லோன் ஸ்னோடென் ரஷ்யா சென்றுள்ளார்.
நியூயார்க்கிலிருந்து புறப்பட்டு இன்று அதிகாலை ரஷ்யாவின் ஷெரேமெட்எவோ விமான நிலையத்தை அவர் அடைந்தார். அங்குதான் ரஷ்யாவின் அனுமதி பெறும்முன் ஸ்னோடென் காத்திருந்தார்.
காத்திருந்த நேரத்தில் கிடைத்த தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் தோன்றிய லோன் தனது 30 வயது மகன் இருக்கும் இடம்தெரியாது என்று குறிப்பிட்டார் மேலும் தனது மகனின் வழக்கறிஞரான அனடோலி குச்சரேனாவுடன் இணைந்து மகனுடைய நிலைமை, ஆரோக்கியம், தேவையான சட்டபூர்வ நடவடிக்கைகள் குறித்து தெரிந்து கொள்வதற்காக வந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
திவிநெகும வாழ்வின் எழுற்ச்சி 5ஆம் கட்ட அங்குரார்ப்பண நிகழ்வுகள் இன்று தேசிய ரீதியாக இடம்பெறுகின்றது. இதற் கமைவாக கல்முனைப் பிரதேச செயலகத்தினால் ஒழுங்கு செய்யப்பட்ட நிகழ்வுகள் இன்று காலை 10.11 மணிக்கு இடம்பெற்றது. பிரதேச செயலாளர் எம்.எம். நௌபல் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதி திட்டமிடல் பணிப்பாளர் ரீ, மோகனகுமார், தலைமைப்பீட சமுர்த்தி முகாமையாளர்களான ஏ.ஆர்.எம். சாலிஹ், வலய வங்கி முகாமையாளர் ஏ.சீ. அன்வர் உட்பட பிரதேசசெயலகத்தில் கடமையாற்றும் கள உத்தியோகத்தர்கள், சமூகப் பிரதிநிதிகள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.
நடைபெற்று முடிந்த வட மாகாண சபைத் தேர்தலில் தமிழரசுக் கட்சியின் வீட்டுச் சின்னத்தில் போட்டியிட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பங்காளி கட்சிகளான புளட், ஈ.பி.ஆர்.எல்.எப், ரெலோ ஆகிய மூன்று கட்சிகள் பதவியேற்பு வைபவத்தை புறக்கணித்துள்ளன.
தமிழரசுக் கட்சி சார்பில் போட்டியிட்டு மாகாண சபைக்கு தெரிவு செய்யப்பட்ட எட்டுப்பேர் இன்று இடம்பெற்ற பதவியேற்பு வைபவத்தை புறக்கணித்துள்ளனர். புளட் கட்சியைச் சேர்ந்த தர்மலிங்கம் சித்தார்த்தன் உள்ளிட்ட இருவர், ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியைச் சேர்ந்த ஐவர் மற்றும் ரெலோ கட்சியைச் சேர்ந்த சிவாஜிலங்கமும் பதவியேற்பு வைபவத்தை புறக்கணித்துள்ளனர்.
இந்நிலையில் ஈ.பி.ஆர்.எல்.எப் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஸ் பிரேமச்சந்திரனும் இந்த பதவியேற்பு வைபவத்தை பறக்கணித்துள்ளார் அத்துடன் தமிழரசு கட்சி எடுக்கின்ற முடிவுகளை பார்க்கும் போது அவர்கள் சர்வாதிகாரத்தை நோக்கி செல்கின்றார்கள் என எமக்கு எண்ணத் தோன்றுகின்றது எனவும், இவர்களது முடிவுகளால் காலத்தில தமிழ் தேசிய கூட்டமைப்பின் அரசியல் முன்னெடுப்புக்களுக்கு குழப்பம் விளைவிக்கும் என சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
தமிழரசுக் கட்சி சார்பில் போட்டியிட்டு மாகாண சபைக்கு தெரிவு செய்யப்பட்ட எட்டுப்பேர் இன்று இடம்பெற்ற பதவியேற்பு வைபவத்தை புறக்கணித்துள்ளனர். புளட் கட்சியைச் சேர்ந்த தர்மலிங்கம் சித்தார்த்தன் உள்ளிட்ட இருவர், ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியைச் சேர்ந்த ஐவர் மற்றும் ரெலோ கட்சியைச் சேர்ந்த சிவாஜிலங்கமும் பதவியேற்பு வைபவத்தை புறக்கணித்துள்ளனர்.
இந்நிலையில் ஈ.பி.ஆர்.எல்.எப் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஸ் பிரேமச்சந்திரனும் இந்த பதவியேற்பு வைபவத்தை பறக்கணித்துள்ளார் அத்துடன் தமிழரசு கட்சி எடுக்கின்ற முடிவுகளை பார்க்கும் போது அவர்கள் சர்வாதிகாரத்தை நோக்கி செல்கின்றார்கள் என எமக்கு எண்ணத் தோன்றுகின்றது எனவும், இவர்களது முடிவுகளால் காலத்தில தமிழ் தேசிய கூட்டமைப்பின் அரசியல் முன்னெடுப்புக்களுக்கு குழப்பம் விளைவிக்கும் என சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
வடக்கு மாகாண சபை தேர்தலில் உறுப்பினர்களாக தெரி வானவர்கள் இன்று காலை யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் சத்திய பிரமாணம் செய்து கொண்டனர். முன்னதாக காலை 8.30 மணியளவில் தந்தை செல்வா சதுக்கத்தில் நடைபெற்ற அஞ்சலி நிகழ்வுகளை தொடர்ந்து பாராளு மன்ற உறுப்பினர்கள் முதலமைச்சர் சபை உறுப்பினர்கள் மங்கள வாத்தியங்களுடன் வீரசிங்கம் மண்டபத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர்.
பின்னர் 9.30 மணியளவில் சமயதலைவர்கள், வடக்கு மாகாண சபை முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன், தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் முன்னிலையில் மாகாண சபை உறுப்பினர்கள் சத்திய பிரமாணம் செய்து கொண்டனர்.
பின்னர் தமது நியமன பத்திரங்களை தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் முன்னிலையில் கையெழுத்திட்டு பெற்றுக்கொண்ட பின்னர் வடக்கு மாகாண சபை முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனிடம் தமது நியமன பத்திரங்களை ஒப்படைத்தனர்.
அதற்கமைய வடமாகாணசபையின் தவிசாளராக, தமிழரசுக் கட்சியை சேர்ந்த சீ வீ கே சிவஞானம் தெரிவுசெய்யப்பட்டுள்ளார். சபையின் பிரதி தவிசாளராக தமிழரசுக் கட்சியின் என்டன் ஜெயநாதன் தெரிவுசெய்யப்பட்டுள்ளார். அதற்கமைய முதலமைச்சர் சீ வீ விக்னேஸ்வரன் தலைமையிலான வடமாகாண அமைச்சரவையில் வேளாண்மை, கால்நடை, நீர்ப்பாசனம், சூழல்த்துறை அமைச்சராக ஈ பீ ஆர் எல் எப்சை சேர்ந்த பீ ஐங்கரநேசன் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
கல்வி, கலாசார அமைச்சராக தமிழரசுக் கட்சியின் சீ குருகுலராஜனும், சுகாதார அமைச்சராக தமிழரசுக் கட்சியை சேர்ந்த வைத்தியக் கலாநிதி, பீ சத்தியலிங்கமும் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர். இதேவேளை மீன்பிடி போக்குவரத்து கிராம அபிவிருத்தி அமைச்சராக, டெலோ அமைப்பின் டெனீஸ்வரன் தெரிவுசெய்யப்பட்டுள்ளார். அதற்கமைய இவர்கள் அனைவரும் இன்றைய தினம் வடமாகாண முதலமைச்சர் சீ வீ விக்னேஸ்வரன் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொள்ளவுள்ளனர்..
பின்னர் 9.30 மணியளவில் சமயதலைவர்கள், வடக்கு மாகாண சபை முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன், தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் முன்னிலையில் மாகாண சபை உறுப்பினர்கள் சத்திய பிரமாணம் செய்து கொண்டனர்.
பின்னர் தமது நியமன பத்திரங்களை தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் முன்னிலையில் கையெழுத்திட்டு பெற்றுக்கொண்ட பின்னர் வடக்கு மாகாண சபை முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனிடம் தமது நியமன பத்திரங்களை ஒப்படைத்தனர்.
அதற்கமைய வடமாகாணசபையின் தவிசாளராக, தமிழரசுக் கட்சியை சேர்ந்த சீ வீ கே சிவஞானம் தெரிவுசெய்யப்பட்டுள்ளார். சபையின் பிரதி தவிசாளராக தமிழரசுக் கட்சியின் என்டன் ஜெயநாதன் தெரிவுசெய்யப்பட்டுள்ளார். அதற்கமைய முதலமைச்சர் சீ வீ விக்னேஸ்வரன் தலைமையிலான வடமாகாண அமைச்சரவையில் வேளாண்மை, கால்நடை, நீர்ப்பாசனம், சூழல்த்துறை அமைச்சராக ஈ பீ ஆர் எல் எப்சை சேர்ந்த பீ ஐங்கரநேசன் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
கல்வி, கலாசார அமைச்சராக தமிழரசுக் கட்சியின் சீ குருகுலராஜனும், சுகாதார அமைச்சராக தமிழரசுக் கட்சியை சேர்ந்த வைத்தியக் கலாநிதி, பீ சத்தியலிங்கமும் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர். இதேவேளை மீன்பிடி போக்குவரத்து கிராம அபிவிருத்தி அமைச்சராக, டெலோ அமைப்பின் டெனீஸ்வரன் தெரிவுசெய்யப்பட்டுள்ளார். அதற்கமைய இவர்கள் அனைவரும் இன்றைய தினம் வடமாகாண முதலமைச்சர் சீ வீ விக்னேஸ்வரன் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொள்ளவுள்ளனர்..
புதிதாகத் தெரிவு செய்யப்பட்ட இலங்கையின் மத்திய மாகாண சபையில் ஆளுங்கட்சியான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி உறுப்பினர்கள் 10 பேர் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு எச்சரிக்கை சமிக்ஞை விடுத்துள்ளனர்..
மத்திய மாகாண சபையில் ஆளுங் கட்சிக்கு 40 உறுப்பினர்களும் எதிர்க் கட்சிக்கு 18 உறுப்பினர்களும் இருக்கின்றனர். ஆனால், அண்மையில் மாகாண சபையில் இடம் பெற்ற தலைவர் தேர்தலில் ஆளுங் கட்சிக்கு 29 வாக்குகளும் எதிர்க் கட்சிக்கு 27 வாக்குகளும் கிடைத்துள்ளன. பிரதித் தலைவர் தேர்தலில் ஆளுங் கட்சிக்கு 33 வாக்குகளும் எதிர்க்கட்சிக்கு 24 வாக்குகளும் கிடைத்துள்ளன.
இதிலிருந்து ஆளுங்கட்சி உறுப்பினர்கள் முற்றுமுழுதாக ஜனாதிபதியின் கட்டுப்பாட்டில் இல்லை என்றது தெரிய வருகின்றது. அத்துடன் வழக்கத்துக்கு மாறாக அதிக விருப்பு வாக்குகளைப் பெற்ற பிரதமரின் மகன் அனுருத்த ஜயரட்னவுக்கு முதலமைச்சர் பதவி வழங்காது, அவர் பெற்றதிலும் அரைப் பங்கே பெற்ற முன்னாள் முதலமைச்சருக்கு மீண்டும் முதலமைச்சர் பதவி வழங்கியதைக் கண்டித்து கடந்த வாரம் ஜனாதிபதிக்கு எதிராக கண்டியில் உத்கோசம் எழுப்பப்பட்டதும் குறிப்பிடத் தக்கது.
எவ்வாறாயினும் நம்மவர்கள் 14 பேரும் அங்கு நிச்சயம் அம்பாந்தோட்டை விசுவாசிகளாத்தான் இருப்பார்கள். அவர்களுக்கு எலும்புத்துண்டுகள்தான் வேண்டும்.
மத்திய மாகாண சபையில் ஆளுங் கட்சிக்கு 40 உறுப்பினர்களும் எதிர்க் கட்சிக்கு 18 உறுப்பினர்களும் இருக்கின்றனர். ஆனால், அண்மையில் மாகாண சபையில் இடம் பெற்ற தலைவர் தேர்தலில் ஆளுங் கட்சிக்கு 29 வாக்குகளும் எதிர்க் கட்சிக்கு 27 வாக்குகளும் கிடைத்துள்ளன. பிரதித் தலைவர் தேர்தலில் ஆளுங் கட்சிக்கு 33 வாக்குகளும் எதிர்க்கட்சிக்கு 24 வாக்குகளும் கிடைத்துள்ளன.
இதிலிருந்து ஆளுங்கட்சி உறுப்பினர்கள் முற்றுமுழுதாக ஜனாதிபதியின் கட்டுப்பாட்டில் இல்லை என்றது தெரிய வருகின்றது. அத்துடன் வழக்கத்துக்கு மாறாக அதிக விருப்பு வாக்குகளைப் பெற்ற பிரதமரின் மகன் அனுருத்த ஜயரட்னவுக்கு முதலமைச்சர் பதவி வழங்காது, அவர் பெற்றதிலும் அரைப் பங்கே பெற்ற முன்னாள் முதலமைச்சருக்கு மீண்டும் முதலமைச்சர் பதவி வழங்கியதைக் கண்டித்து கடந்த வாரம் ஜனாதிபதிக்கு எதிராக கண்டியில் உத்கோசம் எழுப்பப்பட்டதும் குறிப்பிடத் தக்கது.
எவ்வாறாயினும் நம்மவர்கள் 14 பேரும் அங்கு நிச்சயம் அம்பாந்தோட்டை விசுவாசிகளாத்தான் இருப்பார்கள். அவர்களுக்கு எலும்புத்துண்டுகள்தான் வேண்டும்.
முன்னாள் போர் வலயமான இலங்கையின் வடக்குப் பகுதியில் அதிகமான பெண்கள் குடும்பத்தின் உணவுத் தேவைக்காக உழைக்க வேண்டியவர்களாக இருக்கின்றனர். இவர்களின் தந்தைமார், கணவன்மார் மற்றும் மகன்மார் போரில் இறந்துவிட்டனர் அல்லது காணாமல் போய்விட்டனர். இதனால் பாரிய குடும்பச் சுமையைத் தாங்கும் இவர்கள் தங்களின் குடும்பம் உயிர் வாழ்வதற்காக பாலியல் தொழிலில் ஈடுபட வேண்டிய தாகவுள்ளது.
தங்களது பணத்தைப் பெருக்க விளையும் உள்ளூர் குழுக்கள் இவர்களை பாலியல் தொழில் ஈடுபடுத்துகின்றனர். இவ்வாறான பெண்கள் 7000 வரையில் உள்ளார்கள் என்று வடக்கைத் தளயமாகக் கொண்ட அரசசார்பற்ற நிறுவனமான போரினால் பாதிக்கப்பட்ட பெண்கள் அமைப்பின் தலைவியான விசாகா தர்மதாச கூறுகின்றார்.
2012 ல் வடபகுதியில் பெண்கள் தலைமை தாங்கும் 59,000 குடும்பங்கள் காணப்பட்டதாக அரசாங்கம் மதிப்பிட்டது.
வடக்கில் வலுவான இராணுவ பிரசன்னம், கட்டுமானப் பணிகளுக்காக மற்றும் தொழில்களுக்காக தெற்கில் இருந்து வந்த ஆண்களின் எண்ணிக்கை என்பன இந்த பாலியல் வர்த்தகம் பெருகுவதற்கு ஒருவகையில் நியாயமான காரணமாகும் என்று தர்மதாச IRIN இதழுக்குச் கூறியுள்ளார்.
அதற்கு மேலதிகமாக இலங்கையில் பிறந்தவர்களான வெளிநாடுகளில் புலம் பெயர்ந்துள்ள தமிழர்கள் யுத்தம் முடிவடைந்ததைத் தொடர்ந்து தமது தாய் மண்ணைணப் பார்க்க வருவது அதிகரித்துள்ளதும் இந்த பாலியல் தொழில் வளர்ச்சிக்கு ஒரு காரணம் என்று சாந்தினி வைரமுத்து என்ற சமூக சேவகி கூறுகின்றார்.
இலங்கையில் பாலியல் தொழில் சட்டமுரணானது.
வெளிநாடுகளில் உல்லாச வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கவும், தமிழ்நாட்டில் தமது வக்கிரக அரசியல் வாழ்க்கைக்கு உரமூட்டவும் நொந்து நொருங்கிப் போயுள்ள இலங்கையித் தமிழரை தமிழீழக் கனவில் உசுப்பேத்திக்கொண்டிருக்கும் தமிழ் அரக்கர்கள், தமிழ் இனமே விபச்சார இனமாக மாறுவதற்கு முன்னர் , தயவு செய்து இந்த அபலைப் பெண்களின் குடும்பங்கள் வாழ்வதற்கு உதவ வேண்டும். தமிழீழக் கனவை பிறகு காணலாம்..
தங்களது பணத்தைப் பெருக்க விளையும் உள்ளூர் குழுக்கள் இவர்களை பாலியல் தொழில் ஈடுபடுத்துகின்றனர். இவ்வாறான பெண்கள் 7000 வரையில் உள்ளார்கள் என்று வடக்கைத் தளயமாகக் கொண்ட அரசசார்பற்ற நிறுவனமான போரினால் பாதிக்கப்பட்ட பெண்கள் அமைப்பின் தலைவியான விசாகா தர்மதாச கூறுகின்றார்.
2012 ல் வடபகுதியில் பெண்கள் தலைமை தாங்கும் 59,000 குடும்பங்கள் காணப்பட்டதாக அரசாங்கம் மதிப்பிட்டது.
வடக்கில் வலுவான இராணுவ பிரசன்னம், கட்டுமானப் பணிகளுக்காக மற்றும் தொழில்களுக்காக தெற்கில் இருந்து வந்த ஆண்களின் எண்ணிக்கை என்பன இந்த பாலியல் வர்த்தகம் பெருகுவதற்கு ஒருவகையில் நியாயமான காரணமாகும் என்று தர்மதாச IRIN இதழுக்குச் கூறியுள்ளார்.
அதற்கு மேலதிகமாக இலங்கையில் பிறந்தவர்களான வெளிநாடுகளில் புலம் பெயர்ந்துள்ள தமிழர்கள் யுத்தம் முடிவடைந்ததைத் தொடர்ந்து தமது தாய் மண்ணைணப் பார்க்க வருவது அதிகரித்துள்ளதும் இந்த பாலியல் தொழில் வளர்ச்சிக்கு ஒரு காரணம் என்று சாந்தினி வைரமுத்து என்ற சமூக சேவகி கூறுகின்றார்.
இலங்கையில் பாலியல் தொழில் சட்டமுரணானது.
வெளிநாடுகளில் உல்லாச வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கவும், தமிழ்நாட்டில் தமது வக்கிரக அரசியல் வாழ்க்கைக்கு உரமூட்டவும் நொந்து நொருங்கிப் போயுள்ள இலங்கையித் தமிழரை தமிழீழக் கனவில் உசுப்பேத்திக்கொண்டிருக்கும் தமிழ் அரக்கர்கள், தமிழ் இனமே விபச்சார இனமாக மாறுவதற்கு முன்னர் , தயவு செய்து இந்த அபலைப் பெண்களின் குடும்பங்கள் வாழ்வதற்கு உதவ வேண்டும். தமிழீழக் கனவை பிறகு காணலாம்..
“ஐரோப்பா முழுவதிலும் இன்னும் கூடுதலாக 15 முதல் 25 மில்லியன் மக்கள் 2025 ஐ ஒட்டி வறுமையில் வாழும் எதிர்காலத்தை எதிர்நோக்கலாம்” என்று ஆக்ஸ்பாம் வளர்ச்சி அறக்கட்டளை கூறுகிறது. ஓர் அறிக்கையில், “ஒரு எச்சரிப்புக் கதை— ஐரோப்பாவில் சிக்கனம் மற்றும் சமத்துவமின்மை உடைய உண்மைச் செலவு” என்பதில் அறிக்கை அப்பட்டமாக “ஐரோப்பா இழந்துவிட்ட ஒரு தசாப்தத்தை எதிர்கொள்கிறது” எனக் கூறுகிறது.
2008 ஆண்டு நிதிய நெருக்கடிக்குப் பின் ஐரோப்பா முழுவதும் சிக்கன நடவடிக்கைகள் விளைந்துள்ளன; ஆளும் உயரடுக்கு, வங்கிகளை பிணை எடுத்ததின் செலவை தொழிலாளர்களை கொடுக்குமாறு செய்துள்ளதின் விளைவுதான் இது. இந்த அறிக்கையானது “ஐரோப்பிய நாடுகளில் சிக்கனத்தால் பாதிக்கப்பட்டுள்ள பலவற்றில் மிக அதிக செல்வம் படைத்தவர்கள் தங்களுடைய வருமானம் உயர்வதையும், மிக வறியவர்கள் தங்களுடைய வருமானங்கள் சரிவதையும் கண்டனர்” என்று குறிப்பிடுகிறது.
ஐரோப்பாவின் ஆளும் உயரடுக்கு, ஐரோப்பிய மத்திய வங்கி மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆணையில் செயற்படுத்தும் நடவடிக்கைகள் “இலத்தீன் அமெரிக்கா, தென்கிழக்கு ஆசியா மற்றும் துணை சஹாரா ஆபிரிக்காவில் 1980 மற்றும் 1990களில் சுமத்தப்பட்ட அழிவு கொடுத்த கட்டமைப்பு சீரமைப்புக் கொள்கைகளுடன் பெரிதும் ஒத்துள்ளன. இக்கொள்கைகள் தோல்வி அடைந்தவை: நோயாளியை கொல்வதன் மூலம், நோயை குணப்படுத்த முயன்ற மருந்தைப் போன்றது. இவை மீண்டும் நடைபெற அனுமதிக்கப்படக்கூடாது.”
வெட்டுக்களின் அளவுகள் பற்றி அது உதாரணங்களைக் கொடுத்துள்ளது: “2010ல் இருந்து 2014 வரை மொத்த பொதுச் செலவு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் அயர்லாந்தில் 40% வெட்டப்பட்டிருக்கிறது, பால்டிக் நாடுகளில் 20%, ஸ்பெயினில் 12% மற்றும் ஐக்கிய இராச்சியத்தில் 11.5% வெட்டப்பட்டிருக்கிறது.” அறிக்கை ஐக்கிய இராச்சியத்தில் 2010ல் இருந்து 2018 க்குள் 1.1 மில்லியன் பொதுத்துறை ஊழியர்கள் அகற்றப்பட்டிருப்பார்கள் என்றும் கூறுகிறது.
சுகாதார சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன; அறிக்கை குறிப்பிடுகிறது: “2010ல் ஐரோப்பாவில் சுகாதாரத்திற்கு செலவு செய்யப்பட்டது பல தசாப்தங்களில் முதல் தடவையாக குறைந்ததாகப் பதிவாயிற்று. அயர்லாந்திலும், கிரேக்கத்திலும் செலவுகளில் வெட்டுக்கள் 6% ஐ கடந்துள்ளன, ஒரு தசாப்த வளர்ச்சியை திருப்பிவிடும் வகையில்.”
வேலையின்மை விகிதங்கள், நீண்ட கால வேலையின்மை, இளைஞர் வேலையின்மை ஆகியவை 2000 லிருந்து மிக அதிக அளவில் உள்ளன: “ஸ்பெயின், கிரேக்கத்தில், வேலையின்மை 24% என 2007 இல் இருந்து 2012 க்குள் மும்மடங்கு ஆயிற்று.... அயர்லாந்து, கிரேக்கம் மற்றும் ஸ்பெயினில் நீண்டகால வேலையின்மை விகிதம் 2008க்கும் 2012க்கும் இடையே 4 மடங்கு உயர்ந்துள்ளது. இது ஐரோப்பாவில் நீண்டகால வேலையில்லா மக்கள், இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக வேலையில்லாதவர் எண்ணிக்கையைப் போல் பாதி அதிகமாகும். இளைஞர் வேலையின்மை போர்த்துக்கல்லில் குறிப்பாக 42% அதிகமாகும். ஸ்பெயினில் 56% மற்றும் கிரேக்கத்தில் 59% -- இவைகள் 2008ல் பதிவு செய்யப்பட்டதை விட இரு மடங்கு அதிகமாகும்.” இத்தாலியில் இளைஞர் வேலையின்மை கிட்டத்தட்ட 40% ஆகும்.
இந்த நெருக்கடியில் மறைந்துள்ள சமூகச் செலவு குறைத்துமதிப்பிடப்பட்டுள்ளது என்று அறிக்கை கூறுகிறது; உதாரணமாக பல தனிப் பெற்றோர்கள் “வீட்டை உஷ்ணமாக வைத்திருப்பதற்கும், குடும்பத்திற்கு சீரான உணவை அளிப்பதற்கும் இடையே தேர்ந்தெடுக்க வேண்டிய நிலையை எதிர்கொள்கின்றனர்.” உணவு உதவி மற்றும் பொதுவான சமூக ஆதரவிற்கான கோரிக்கைகள் 2012ன் முதல் பகுதியில் இரு மடங்காகிவிட்டன.
“லிஸ்பனில் மருந்தகங்களில் கிட்டத்தட்ட 20% வாடிக்கையாளர்கள் (பெரும்பாலும் பெண்கள், வேலையற்றோர், வயதானவர்கள்) மருந்துப் பட்டியலில் உள்ள முழு மருந்தையும் செலவைக் கணக்கில் கொண்டு வாங்குவதில்லை. பலரும் தங்கள் வீடுகளிலிருந்து வெளியேற்றப்படுகின்றனர்.”
சிக்கன நடவடிக்கைகளின் முக்கிய இலக்கு, பொது நலச் செலவுகளைக் குறைப்பதாகும். உதாரணமாக ஐக்கிய இராச்சியத்தில் செலவுக் குறைப்புக்களுக்கும் வரி அதிகரிப்புக்களுக்கும் இடையேயுள்ள விகிதம் 85:15 ஆகும். வரி விதிப்புகளில் பல, வறியவர்கள் மீது விகிதத்திற்கு அதிகமானவையாகும். மதிப்புக் கூட்டுவரி (VAT) பல ஐரோப்பிய நாடுகளில் உயர்த்தப்பட்டுள்ளன. இது ஒரு கட்டாயமான வரியாகும், ஏனெனில் தொழிலாளர்கள் பெரும்பாலும் தங்களுடைய வருமானத்தின் பெரும்பகுதியை மதிப்புக்கூட்டு வரிக்குச் செலவிடுகின்றனர். இதற்கு மாறாக, “ஐரோப்பிய ஒன்றிய அரசாங்கங்கள் கிட்டத்தட்ட ஆண்டு ஒன்றிற்கு 1 டிரில்லியன் யூரோக்களை வரித் தவிர்ப்பு, ஏய்ப்புக்களில் இழக்கின்றன. ஒப்பீட்டளவில் செல்வத்தின் மீது அதிக புதிய வரிகளும் இல்லை.”
ஆக்ஸ்பாம் அறிக்கையானது இந்த ஆண்டு ஐக்கிய நாடுகள் சர்வதேச தொழிலாளர் அமைப்பு (ILO), உலகப் பணி அறிக்கையை தயாரிப்பு செய்ததையும் குறிப்பிடுகிறது. அதில் “அநேகமாக எல்லா இடங்களிலும், இளைஞர்கள்.... தங்கள் திறமைகளின் விழைவுகளுக்கு ஏற்றவாறு வேலை கிடைப்பதில் கடினத்தை உணர்கின்றனர்.... இது வரவிருக்கும் பல ஆண்டுகளில் முக்கிய உலகச் சவாலாக இருக்கும்.... சமூக அமைதியின்மை என்னும் இடர் பல பிராந்தியங்களில் உள்ளது” என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
இந்த எச்சரிக்கைக்கு ஆக்ஸ்பாம் ஒப்புதல் கொடுத்து, உழைக்கும் வறியவர்களின் எண்ணிக்கை அதிகமாகி வருவதாக விளக்கியுள்ளது. “ஐரோப்பாவில் இப்பொழுது 10 உழைக்கும் வீடுகளில் ஒன்று வறுமையில் உள்ளது... சைப்ரஸ், அயர்லாந்து, இத்தாலி ஒவ்வொன்றும் உழைக்கும் வறியோர் விகிதங்களை மிக அதிகமாக கடந்த இரண்டு ஆண்டுகளில் கண்டுள்ளன. தொழிலாளர்கள் பெருகிய முறையில் தங்களுக்கு கிடைக்கும் வேலைகள் பாதுகாப்பற்றவை அல்லது அவர்களுடைய தேவைகளைவிட மிகவும் குறைந்தவை எனக் காண்கின்றனர்.”
கண்டம் முழுவதும் ஊதியங்கள் சரிகின்றன, “ஆக்கிரோஷ செலவுக் குறைப்புக்களை செயற்படுத்தும் நாடுகளில் மிக விரைவாக சரிகின்றன; இது மக்களை உயரும் விலையை சமாளிப்பதைக் கடினமாக்கிவிட்டது.” உண்மை ஊதியங்களின் வீழ்ச்சி இத்தாலி, ஸ்பெயின் மற்றும் அயர்லாந்தில் நடைபெற்றுள்ளன, கிரேக்கத்தில் 10% க்கும் மேற்பட்ட சரிவு ஏற்பட்டுள்ளது. ஐக்கிய இராச்சியத்திலும் போர்த்துக்கல்லிலும் உண்மை ஊதியங்கள் 3% க்கும் மேலாகக் குறைந்துவிட்டன; ஐக்கிய இராச்சியத்தில் நிலைமை இப்பொழுது 2003 மட்டங்களைக் கொண்டுள்ளது.
சிக்கன நடவடிக்கைகள், ஐரோப்பாவிற்குள் சமத்துவமின்மை மட்டங்களுள் குறிப்பிடத்தக்க தாக்கத்தை கொடுத்துள்ளன. சமத்துவமின்மை அதிகம் என்பது 2008 நெருக்கடிக்கு முன்பே இருந்தது; போர்த்துக்கல் மற்றும் ஐக்கிய இராச்சியம் இரண்டும் OECD நாடுகளிலேயே மிக அதிக சமத்துவமற்ற நாடுகள் என அறிக்கை கூறுகிறது.
எனினும் அறிக்கை குறிப்பிடுகிறது, “சிக்கன நடவடிக்கை, ஏற்கனவே சமத்துவமற்ற தன்மையின் அதிகரிப்பை விரைவுபடுத்தி, கடந்த 30 ஆண்டுகளாக OECD நாடுகளில் சிக்கன நடவடிக்கைகளின் வரலாற்றுரீதியான தாக்கம் சமத்துவமற்ற தன்மையில் இருப்பதை பிரதிபலிக்கிறது. போர்த்துக்கல், கிரேக்கம் மற்றும் இத்தாலி ஆகியவை தங்கள் நிகர வருமான சமத்துவமின்மை, 2010-11ல் கிட்டத்தட்ட 1% புள்ளி எனக் கண்டுள்ளன. இந்த அதிகரிப்புக்கள் பொருளாதார உயரடுக்குளின் ஆதாயங்களில் சிக்கன நடவடிக்கைகளின் நேரடி விளைவாகப் பிரதிபலிக்கின்றன... மிக அதிக செல்வம் படைத்தவர்கள் மொத்த வருமானத்தில் தங்களுடைய பங்கு அதிகரித்துள்ளதைக் காண்கின்றனர், வறியவர்கள் தங்களுடையது சரிந்துவிட்டதைக் காண்கின்றனர்.”
ஐரோப்பிய ஒன்றியத்தின் செல்வச் செழிப்பு அதிகமுடைய 10% மக்கள் அதனுடைய வருமானத்தில் கிட்டத்தட்ட கால் பகுதியைப் பெறுகின்றனர். வறிய 10 சதவிகிதத்தினர் 3% ஐத்தான் பெறுகின்றனர். ஐரோப்பிய ஒன்றியத்தில் 10 செல்வச் செழிப்புடைய மக்கள், கிட்டத்தட்ட 220 பில்லியன் மொத்த வருமானம் கொண்டுள்ளனர்—இது 2008-2010ல் ஐரோப்பிய ஒன்றியம் “ஊக்க நடவடிக்கைகளுக்கு” செலவழித்த 200 பில்லியன் யூரோக்களைவிட அதிகமாகும்.
2011ல் 120 மில்லியனுக்கும் மேலானவர்கள், ஐரோப்பிய ஒன்றியத்தின் மக்கள் தொகையில் கிட்டத்தட்ட கால் பகுதியினர், வறுமை அல்லது சமூகத்திலிருந்து விலக்கப்படல் என்ற இடரில் இருந்தனர்; இந்த எண்ணிக்கை இன்று அதிகமாகித்தான் போயிருக்க முடியும்.
ஐரோப்பாவில் சர்வதேச நாணய நிதியத்தின் கட்டமைப்புச் சீரமைப்புத் திட்டங்களின் (Structural Adjustment Programmes - SAPs) பாதிப்பு சிக்கன நடவடிக்கைகள் இலத்தீன் அமெரிக்கா, தென்கிழக்கு ஆசியா, துணை சகாரா ஆபிரிக்காவில் இருந்தவற்றுடன் ஒப்பிடுகையில் எப்படி இருக்கும் என்பதையும் அறிக்கை கூறுகிறது. “சிக்கன நடவடிக்கைகளின் அழிக்கும் பாதிப்புத் திறன் பற்றிய ஒப்புமைகளையும் நாம் பற்றி எடுக்கலாம்.”
இலத்தீன் அமெரிக்காவில் 1980 மற்றும் 2000க்கும் இடைய கட்டமைப்புச் சீரமைப்பு திட்டங்களின் (SAP) விளைவுகள் பற்றிய விவரங்கள் எச்சரிக்கையை கொடுக்கின்றன: “பொதுச் செலவுகள் இல்லாமை, மற்றும் பல முக்கிய சமூக சேவைகள் தனியார்மயமாக்கப்பட்டதுடன் இணைந்து, முக்கிய சேவைகளுக்குக் கட்டணம் கொடுத்தல் என விளைந்துள்ளது; இது பலருடைய வசதிக்கு இயலாது எனப் போய்விட்டது.”
சிக்கன நடவடிக்கைகள் நீண்டகாலம் நீடிக்கும் தாக்கங்களை கொண்டிருக்கும், 2025 இல் இன்னும் கூடுதலாக 15 முதல் 25 மில்லியன் மக்கள் வறுமையில் வாழ்வார்கள் என்று அறிக்கை கணிக்கிறது. “இந்நடவடிக்கைகள், அதிகாரத்தையும் செல்வத்தையும் சிலர் மட்டும் கொண்ட உயரடுக்கிற்குக் கொடுக்கும்; மில்லியன் கணக்கான இன்றைய இளைஞர்களிடமிருந்து திருடிவிடும்” என்று அது குறிப்பிடுகிறது.
ஆக்ஸ்பாம் அறிக்கையானது சிக்கன நடவடிக்கைகளின் தாக்கங்கள் குறித்த ஒரு பேரழிவு மதிப்பீடாகும். ஆனால் மாற்றீடு எதையும் முன்வைக்கவில்லை. அதன் அற்ப பரிந்துரைகளில் “ஜனநாயக வழிவகைகளில் கூடுதல் பங்கு ஊக்குவிக்கப்பட வேண்டும்” என்றும் நிதியச் செயற்பாட்டின் மீது ஒரு வரி விதித்தலும் உள்ளன.
2008 ஆண்டு நிதிய நெருக்கடிக்குப் பின் ஐரோப்பா முழுவதும் சிக்கன நடவடிக்கைகள் விளைந்துள்ளன; ஆளும் உயரடுக்கு, வங்கிகளை பிணை எடுத்ததின் செலவை தொழிலாளர்களை கொடுக்குமாறு செய்துள்ளதின் விளைவுதான் இது. இந்த அறிக்கையானது “ஐரோப்பிய நாடுகளில் சிக்கனத்தால் பாதிக்கப்பட்டுள்ள பலவற்றில் மிக அதிக செல்வம் படைத்தவர்கள் தங்களுடைய வருமானம் உயர்வதையும், மிக வறியவர்கள் தங்களுடைய வருமானங்கள் சரிவதையும் கண்டனர்” என்று குறிப்பிடுகிறது.
ஐரோப்பாவின் ஆளும் உயரடுக்கு, ஐரோப்பிய மத்திய வங்கி மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆணையில் செயற்படுத்தும் நடவடிக்கைகள் “இலத்தீன் அமெரிக்கா, தென்கிழக்கு ஆசியா மற்றும் துணை சஹாரா ஆபிரிக்காவில் 1980 மற்றும் 1990களில் சுமத்தப்பட்ட அழிவு கொடுத்த கட்டமைப்பு சீரமைப்புக் கொள்கைகளுடன் பெரிதும் ஒத்துள்ளன. இக்கொள்கைகள் தோல்வி அடைந்தவை: நோயாளியை கொல்வதன் மூலம், நோயை குணப்படுத்த முயன்ற மருந்தைப் போன்றது. இவை மீண்டும் நடைபெற அனுமதிக்கப்படக்கூடாது.”
வெட்டுக்களின் அளவுகள் பற்றி அது உதாரணங்களைக் கொடுத்துள்ளது: “2010ல் இருந்து 2014 வரை மொத்த பொதுச் செலவு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் அயர்லாந்தில் 40% வெட்டப்பட்டிருக்கிறது, பால்டிக் நாடுகளில் 20%, ஸ்பெயினில் 12% மற்றும் ஐக்கிய இராச்சியத்தில் 11.5% வெட்டப்பட்டிருக்கிறது.” அறிக்கை ஐக்கிய இராச்சியத்தில் 2010ல் இருந்து 2018 க்குள் 1.1 மில்லியன் பொதுத்துறை ஊழியர்கள் அகற்றப்பட்டிருப்பார்கள் என்றும் கூறுகிறது.
சுகாதார சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன; அறிக்கை குறிப்பிடுகிறது: “2010ல் ஐரோப்பாவில் சுகாதாரத்திற்கு செலவு செய்யப்பட்டது பல தசாப்தங்களில் முதல் தடவையாக குறைந்ததாகப் பதிவாயிற்று. அயர்லாந்திலும், கிரேக்கத்திலும் செலவுகளில் வெட்டுக்கள் 6% ஐ கடந்துள்ளன, ஒரு தசாப்த வளர்ச்சியை திருப்பிவிடும் வகையில்.”
வேலையின்மை விகிதங்கள், நீண்ட கால வேலையின்மை, இளைஞர் வேலையின்மை ஆகியவை 2000 லிருந்து மிக அதிக அளவில் உள்ளன: “ஸ்பெயின், கிரேக்கத்தில், வேலையின்மை 24% என 2007 இல் இருந்து 2012 க்குள் மும்மடங்கு ஆயிற்று.... அயர்லாந்து, கிரேக்கம் மற்றும் ஸ்பெயினில் நீண்டகால வேலையின்மை விகிதம் 2008க்கும் 2012க்கும் இடையே 4 மடங்கு உயர்ந்துள்ளது. இது ஐரோப்பாவில் நீண்டகால வேலையில்லா மக்கள், இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக வேலையில்லாதவர் எண்ணிக்கையைப் போல் பாதி அதிகமாகும். இளைஞர் வேலையின்மை போர்த்துக்கல்லில் குறிப்பாக 42% அதிகமாகும். ஸ்பெயினில் 56% மற்றும் கிரேக்கத்தில் 59% -- இவைகள் 2008ல் பதிவு செய்யப்பட்டதை விட இரு மடங்கு அதிகமாகும்.” இத்தாலியில் இளைஞர் வேலையின்மை கிட்டத்தட்ட 40% ஆகும்.
இந்த நெருக்கடியில் மறைந்துள்ள சமூகச் செலவு குறைத்துமதிப்பிடப்பட்டுள்ளது என்று அறிக்கை கூறுகிறது; உதாரணமாக பல தனிப் பெற்றோர்கள் “வீட்டை உஷ்ணமாக வைத்திருப்பதற்கும், குடும்பத்திற்கு சீரான உணவை அளிப்பதற்கும் இடையே தேர்ந்தெடுக்க வேண்டிய நிலையை எதிர்கொள்கின்றனர்.” உணவு உதவி மற்றும் பொதுவான சமூக ஆதரவிற்கான கோரிக்கைகள் 2012ன் முதல் பகுதியில் இரு மடங்காகிவிட்டன.
“லிஸ்பனில் மருந்தகங்களில் கிட்டத்தட்ட 20% வாடிக்கையாளர்கள் (பெரும்பாலும் பெண்கள், வேலையற்றோர், வயதானவர்கள்) மருந்துப் பட்டியலில் உள்ள முழு மருந்தையும் செலவைக் கணக்கில் கொண்டு வாங்குவதில்லை. பலரும் தங்கள் வீடுகளிலிருந்து வெளியேற்றப்படுகின்றனர்.”
சிக்கன நடவடிக்கைகளின் முக்கிய இலக்கு, பொது நலச் செலவுகளைக் குறைப்பதாகும். உதாரணமாக ஐக்கிய இராச்சியத்தில் செலவுக் குறைப்புக்களுக்கும் வரி அதிகரிப்புக்களுக்கும் இடையேயுள்ள விகிதம் 85:15 ஆகும். வரி விதிப்புகளில் பல, வறியவர்கள் மீது விகிதத்திற்கு அதிகமானவையாகும். மதிப்புக் கூட்டுவரி (VAT) பல ஐரோப்பிய நாடுகளில் உயர்த்தப்பட்டுள்ளன. இது ஒரு கட்டாயமான வரியாகும், ஏனெனில் தொழிலாளர்கள் பெரும்பாலும் தங்களுடைய வருமானத்தின் பெரும்பகுதியை மதிப்புக்கூட்டு வரிக்குச் செலவிடுகின்றனர். இதற்கு மாறாக, “ஐரோப்பிய ஒன்றிய அரசாங்கங்கள் கிட்டத்தட்ட ஆண்டு ஒன்றிற்கு 1 டிரில்லியன் யூரோக்களை வரித் தவிர்ப்பு, ஏய்ப்புக்களில் இழக்கின்றன. ஒப்பீட்டளவில் செல்வத்தின் மீது அதிக புதிய வரிகளும் இல்லை.”
ஆக்ஸ்பாம் அறிக்கையானது இந்த ஆண்டு ஐக்கிய நாடுகள் சர்வதேச தொழிலாளர் அமைப்பு (ILO), உலகப் பணி அறிக்கையை தயாரிப்பு செய்ததையும் குறிப்பிடுகிறது. அதில் “அநேகமாக எல்லா இடங்களிலும், இளைஞர்கள்.... தங்கள் திறமைகளின் விழைவுகளுக்கு ஏற்றவாறு வேலை கிடைப்பதில் கடினத்தை உணர்கின்றனர்.... இது வரவிருக்கும் பல ஆண்டுகளில் முக்கிய உலகச் சவாலாக இருக்கும்.... சமூக அமைதியின்மை என்னும் இடர் பல பிராந்தியங்களில் உள்ளது” என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
இந்த எச்சரிக்கைக்கு ஆக்ஸ்பாம் ஒப்புதல் கொடுத்து, உழைக்கும் வறியவர்களின் எண்ணிக்கை அதிகமாகி வருவதாக விளக்கியுள்ளது. “ஐரோப்பாவில் இப்பொழுது 10 உழைக்கும் வீடுகளில் ஒன்று வறுமையில் உள்ளது... சைப்ரஸ், அயர்லாந்து, இத்தாலி ஒவ்வொன்றும் உழைக்கும் வறியோர் விகிதங்களை மிக அதிகமாக கடந்த இரண்டு ஆண்டுகளில் கண்டுள்ளன. தொழிலாளர்கள் பெருகிய முறையில் தங்களுக்கு கிடைக்கும் வேலைகள் பாதுகாப்பற்றவை அல்லது அவர்களுடைய தேவைகளைவிட மிகவும் குறைந்தவை எனக் காண்கின்றனர்.”
கண்டம் முழுவதும் ஊதியங்கள் சரிகின்றன, “ஆக்கிரோஷ செலவுக் குறைப்புக்களை செயற்படுத்தும் நாடுகளில் மிக விரைவாக சரிகின்றன; இது மக்களை உயரும் விலையை சமாளிப்பதைக் கடினமாக்கிவிட்டது.” உண்மை ஊதியங்களின் வீழ்ச்சி இத்தாலி, ஸ்பெயின் மற்றும் அயர்லாந்தில் நடைபெற்றுள்ளன, கிரேக்கத்தில் 10% க்கும் மேற்பட்ட சரிவு ஏற்பட்டுள்ளது. ஐக்கிய இராச்சியத்திலும் போர்த்துக்கல்லிலும் உண்மை ஊதியங்கள் 3% க்கும் மேலாகக் குறைந்துவிட்டன; ஐக்கிய இராச்சியத்தில் நிலைமை இப்பொழுது 2003 மட்டங்களைக் கொண்டுள்ளது.
சிக்கன நடவடிக்கைகள், ஐரோப்பாவிற்குள் சமத்துவமின்மை மட்டங்களுள் குறிப்பிடத்தக்க தாக்கத்தை கொடுத்துள்ளன. சமத்துவமின்மை அதிகம் என்பது 2008 நெருக்கடிக்கு முன்பே இருந்தது; போர்த்துக்கல் மற்றும் ஐக்கிய இராச்சியம் இரண்டும் OECD நாடுகளிலேயே மிக அதிக சமத்துவமற்ற நாடுகள் என அறிக்கை கூறுகிறது.
எனினும் அறிக்கை குறிப்பிடுகிறது, “சிக்கன நடவடிக்கை, ஏற்கனவே சமத்துவமற்ற தன்மையின் அதிகரிப்பை விரைவுபடுத்தி, கடந்த 30 ஆண்டுகளாக OECD நாடுகளில் சிக்கன நடவடிக்கைகளின் வரலாற்றுரீதியான தாக்கம் சமத்துவமற்ற தன்மையில் இருப்பதை பிரதிபலிக்கிறது. போர்த்துக்கல், கிரேக்கம் மற்றும் இத்தாலி ஆகியவை தங்கள் நிகர வருமான சமத்துவமின்மை, 2010-11ல் கிட்டத்தட்ட 1% புள்ளி எனக் கண்டுள்ளன. இந்த அதிகரிப்புக்கள் பொருளாதார உயரடுக்குளின் ஆதாயங்களில் சிக்கன நடவடிக்கைகளின் நேரடி விளைவாகப் பிரதிபலிக்கின்றன... மிக அதிக செல்வம் படைத்தவர்கள் மொத்த வருமானத்தில் தங்களுடைய பங்கு அதிகரித்துள்ளதைக் காண்கின்றனர், வறியவர்கள் தங்களுடையது சரிந்துவிட்டதைக் காண்கின்றனர்.”
ஐரோப்பிய ஒன்றியத்தின் செல்வச் செழிப்பு அதிகமுடைய 10% மக்கள் அதனுடைய வருமானத்தில் கிட்டத்தட்ட கால் பகுதியைப் பெறுகின்றனர். வறிய 10 சதவிகிதத்தினர் 3% ஐத்தான் பெறுகின்றனர். ஐரோப்பிய ஒன்றியத்தில் 10 செல்வச் செழிப்புடைய மக்கள், கிட்டத்தட்ட 220 பில்லியன் மொத்த வருமானம் கொண்டுள்ளனர்—இது 2008-2010ல் ஐரோப்பிய ஒன்றியம் “ஊக்க நடவடிக்கைகளுக்கு” செலவழித்த 200 பில்லியன் யூரோக்களைவிட அதிகமாகும்.
2011ல் 120 மில்லியனுக்கும் மேலானவர்கள், ஐரோப்பிய ஒன்றியத்தின் மக்கள் தொகையில் கிட்டத்தட்ட கால் பகுதியினர், வறுமை அல்லது சமூகத்திலிருந்து விலக்கப்படல் என்ற இடரில் இருந்தனர்; இந்த எண்ணிக்கை இன்று அதிகமாகித்தான் போயிருக்க முடியும்.
ஐரோப்பாவில் சர்வதேச நாணய நிதியத்தின் கட்டமைப்புச் சீரமைப்புத் திட்டங்களின் (Structural Adjustment Programmes - SAPs) பாதிப்பு சிக்கன நடவடிக்கைகள் இலத்தீன் அமெரிக்கா, தென்கிழக்கு ஆசியா, துணை சகாரா ஆபிரிக்காவில் இருந்தவற்றுடன் ஒப்பிடுகையில் எப்படி இருக்கும் என்பதையும் அறிக்கை கூறுகிறது. “சிக்கன நடவடிக்கைகளின் அழிக்கும் பாதிப்புத் திறன் பற்றிய ஒப்புமைகளையும் நாம் பற்றி எடுக்கலாம்.”
இலத்தீன் அமெரிக்காவில் 1980 மற்றும் 2000க்கும் இடைய கட்டமைப்புச் சீரமைப்பு திட்டங்களின் (SAP) விளைவுகள் பற்றிய விவரங்கள் எச்சரிக்கையை கொடுக்கின்றன: “பொதுச் செலவுகள் இல்லாமை, மற்றும் பல முக்கிய சமூக சேவைகள் தனியார்மயமாக்கப்பட்டதுடன் இணைந்து, முக்கிய சேவைகளுக்குக் கட்டணம் கொடுத்தல் என விளைந்துள்ளது; இது பலருடைய வசதிக்கு இயலாது எனப் போய்விட்டது.”
சிக்கன நடவடிக்கைகள் நீண்டகாலம் நீடிக்கும் தாக்கங்களை கொண்டிருக்கும், 2025 இல் இன்னும் கூடுதலாக 15 முதல் 25 மில்லியன் மக்கள் வறுமையில் வாழ்வார்கள் என்று அறிக்கை கணிக்கிறது. “இந்நடவடிக்கைகள், அதிகாரத்தையும் செல்வத்தையும் சிலர் மட்டும் கொண்ட உயரடுக்கிற்குக் கொடுக்கும்; மில்லியன் கணக்கான இன்றைய இளைஞர்களிடமிருந்து திருடிவிடும்” என்று அது குறிப்பிடுகிறது.
ஆக்ஸ்பாம் அறிக்கையானது சிக்கன நடவடிக்கைகளின் தாக்கங்கள் குறித்த ஒரு பேரழிவு மதிப்பீடாகும். ஆனால் மாற்றீடு எதையும் முன்வைக்கவில்லை. அதன் அற்ப பரிந்துரைகளில் “ஜனநாயக வழிவகைகளில் கூடுதல் பங்கு ஊக்குவிக்கப்பட வேண்டும்” என்றும் நிதியச் செயற்பாட்டின் மீது ஒரு வரி விதித்தலும் உள்ளன.
கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பனர் ஒருவர் அண்மையில் தெமட்டகொடையில் இடம் பெற்ற போதைப் பொருள் விற்பனையாளர்க்கிடையில் ஏற்பட்ட துப்பாக்கிச் சமர் பற்றிய விசாரணையில் தலையீடு செய்வதாக அறிய முடிகின்றது. இதில் கோடீஸ்வர போதைப் பொருள் வர்த்தகரான குடு ருவன் என்பவரைக் காக்கும் முற்சியில் 27 வயதுடைய சஜித் பிரியந்த என்பவர் கொல்லப்பட்டார்.
பல உயர்தர பொலிஸ் அதிகாரதிகளின் துணை கொண்டு இந்த விசாரணையை முடக்குவதற்கு பொலிசாரால் தேடப்படும் குடு ருவன் பிரயத்தனம் செய்வதாகக் கூறப்படுகிறது.தெமட்டகொடையைச் சேர்ந்த குடு ருவன் வத்தளையில் பெரிய மாளிகையில் வசித்து வருவது தெரிந்ததே.
பல உயர்தர பொலிஸ் அதிகாரதிகளின் துணை கொண்டு இந்த விசாரணையை முடக்குவதற்கு பொலிசாரால் தேடப்படும் குடு ருவன் பிரயத்தனம் செய்வதாகக் கூறப்படுகிறது.தெமட்டகொடையைச் சேர்ந்த குடு ருவன் வத்தளையில் பெரிய மாளிகையில் வசித்து வருவது தெரிந்ததே.
புதன் கிழமை இரவு கம்பளைக்கு அருகில் உள்ள மாவலை உலப்பனையில் ஒரு பெரகரா ஊர்வலத்தில் சென்று கொண்டிருந்த யானையும் குட்டியும் குழம்பியதால் அவற்றில் மிதிபட்டு 55 வயது பியதாச என்ற நபரும் 31 வயது அனுசகுமாரி என்ற பெண்ணும் பலியாகினர்.
வெளிச்சத்துக்காக ஏந்திச் சென்றுகொண்டிருந்த பந்தங்கள் ஒன்றிலிருந்து விழுந்த எரியும் சிரட்டயை குட்டி மிதித்து வெகுண்டதால் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது. யானையை கட்டுப்படுத்த பாகனுக்கு அரை மணிநேரத்துக்குமேல் ஆயிற்றாம்..
வெளிச்சத்துக்காக ஏந்திச் சென்றுகொண்டிருந்த பந்தங்கள் ஒன்றிலிருந்து விழுந்த எரியும் சிரட்டயை குட்டி மிதித்து வெகுண்டதால் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது. யானையை கட்டுப்படுத்த பாகனுக்கு அரை மணிநேரத்துக்குமேல் ஆயிற்றாம்..
வெலிகம மதுராகொட கிராம சேவகர் காரியாலயத்தில் இன்று (11) திவிநெகும திட்டத்தின் கீழ் மரக் கன்றுகள் பகிர்ந்தளித்தல் நிகழ்வு இடம்பெற்றது.
வீட்டுப் பொருளாதாரமொன்றைக் கட்டியெழுப்பும் தேசிய திட்டத்தின் கீழ் இம்மரங்கள் வழங்கும் திட்டம் நாடளாவிய ரீதியில் கிராம சேவகர் பிரிவுகளில் இடம்பெறுகின்றன.
இந்நிகழ்வில் மதுராகொட கிராம சேவகர், மதுராகொட சமுர்த்தி உத்தியோகத்தர், மற்றும் அரச அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.
(கலைமகன் பைரூஸ்)
வீட்டுப் பொருளாதாரமொன்றைக் கட்டியெழுப்பும் தேசிய திட்டத்தின் கீழ் இம்மரங்கள் வழங்கும் திட்டம் நாடளாவிய ரீதியில் கிராம சேவகர் பிரிவுகளில் இடம்பெறுகின்றன.
இந்நிகழ்வில் மதுராகொட கிராம சேவகர், மதுராகொட சமுர்த்தி உத்தியோகத்தர், மற்றும் அரச அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.
(கலைமகன் பைரூஸ்)
வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலய உயர்தர ஆசிரியர் ஒருவர் வவுனியா பொலிசாரால் கைதுசெய்யப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து மாணவர்கள் இன்று ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது கடந்த 8ம் திகதி வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தில் ஆசிரியர். தினம் கொண்டாடப்பட்டபோது பாடசாலையில் மது போதையில் இருந்த சில மாணவர்கள் தகராறு விளைவித்தமையால் ஆசிரியர் அம்மாணவர்களை தண்டித்த போது, ஒரு மாணவன் தலையில் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளான்.
இதனால், மாணவன் மீது தாக்குதல் நடத்தியதாக ஆசிரியர் மீது குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்ட ஆசிரியர் நேற்று வவுனியா நீதிமன்றத்தின் உத்தரவுக்கமைய பிணையில் விடுதலை செய்யப்பட்டார்.
இந்நிலையில் தமது ஆசிரியரை வழக்கில் இருந்து விடுதலை செய்து கற்றல் செயற்பாடுகளுக்னு உதவ வேண்டும் எனவும், பாடசாலையில் போதைவஸ்து பாவனையை ஒழிக்க வேண்டும் எனவும் சம்மந்தப்பட்ட மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி மாணவர்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனை அறிந்த உடனடியாக பாடசாலைக்கு வந்ருகைதந்த வவுனியா தெற்கு வலயக் கல்விப் பணிப்பாளர் அன்ரன் சோமாராஜா, பாடசாலை அபிவிருத்திச் சங்க செயலாளர் சிரேஸ்ட சட்டத்தரணி அன்ரன் புனிதநாயகம் மற்றும் பழைய மாணவர்சங்க உறுப்பினர்கள் பாடசாலை ஆசிரியர்களுடனும் மாணவர்களுடனும் கலந்துரையாடி மாணவர்களின் கோரிக்கை தொடர்பாக கவனம் செலுத்துவதாக வழங்கிய உறுதி மொழியையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது கடந்த 8ம் திகதி வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தில் ஆசிரியர். தினம் கொண்டாடப்பட்டபோது பாடசாலையில் மது போதையில் இருந்த சில மாணவர்கள் தகராறு விளைவித்தமையால் ஆசிரியர் அம்மாணவர்களை தண்டித்த போது, ஒரு மாணவன் தலையில் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளான்.
இதனால், மாணவன் மீது தாக்குதல் நடத்தியதாக ஆசிரியர் மீது குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்ட ஆசிரியர் நேற்று வவுனியா நீதிமன்றத்தின் உத்தரவுக்கமைய பிணையில் விடுதலை செய்யப்பட்டார்.
இந்நிலையில் தமது ஆசிரியரை வழக்கில் இருந்து விடுதலை செய்து கற்றல் செயற்பாடுகளுக்னு உதவ வேண்டும் எனவும், பாடசாலையில் போதைவஸ்து பாவனையை ஒழிக்க வேண்டும் எனவும் சம்மந்தப்பட்ட மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி மாணவர்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனை அறிந்த உடனடியாக பாடசாலைக்கு வந்ருகைதந்த வவுனியா தெற்கு வலயக் கல்விப் பணிப்பாளர் அன்ரன் சோமாராஜா, பாடசாலை அபிவிருத்திச் சங்க செயலாளர் சிரேஸ்ட சட்டத்தரணி அன்ரன் புனிதநாயகம் மற்றும் பழைய மாணவர்சங்க உறுப்பினர்கள் பாடசாலை ஆசிரியர்களுடனும் மாணவர்களுடனும் கலந்துரையாடி மாணவர்களின் கோரிக்கை தொடர்பாக கவனம் செலுத்துவதாக வழங்கிய உறுதி மொழியையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது
உலகில் மிகப் பெரிய அமைச்சரவையாக 2005 ஆம் ஆண்டு நவம்பர் 17 ஆம் திகதி பதவியேற்ற ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தலைமையிலான அமைச்சரவையில் 52 பேர் இடம்பெற்றது மட்டுமல்லாது இதன் பின்னர் பல சந்தர்ப்பங்களில் அமைச்சர்கள் நியமிக்கப்பட்டதுடன் அமைச்சரவையில் உள்ள அமைச்சர்களின் எண்ணிக்கை 68 ஆக அதிகரித்ததை அடுத்து ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் அமைச்சரவையை கின்னஸ் சாதனை புத்தகம் தெரிவு செய்துள்ளது.
கின்னஸ் சாதனை புத்தகத்தின் இணையதளம் இந்த தகவலை வெளியிட்டுள்ள நிலையில் இன்றும் பல புதிய பிரதியமைச்சர்கள் பதவியேற்றமை குறிப்பிடத்தக்கது.
கின்னஸ் சாதனை புத்தகத்தின் இணையதளம் இந்த தகவலை வெளியிட்டுள்ள நிலையில் இன்றும் பல புதிய பிரதியமைச்சர்கள் பதவியேற்றமை குறிப்பிடத்தக்கது.
நாம் அன்றாடம் பயன்படுத்தும் கோதுமையில் பல்வேறு மருத்துவக்குணங்களை கொண்டிருக்கிறது என்பது யாருக்கும் தெரியாது வாங்க நாம் பயன்படுத்தும் கோதுமையில் உள்ள மகத்தான மருத்துவ பயன்களை பார்க்கலாம்.
முதுகுவலி, மூட்டுவலியால் அவதிப்படுபவர்களுக்கு கோதுமையை வறுத்து பொடித்து, அதனுடன் தேன் சேர்த்து உட்கொள்ள கொடுக்க அந்த வலி குணமாகும், வயிற்றில் புளிப்புத்தன்மை உடையவர்கள் மற்றும் புளித்த ஏப்பம் அடிக்கடி வருபவர்கள் கோதுமை ரவையை கஞ்சி செய்து குடித்தால் உடனே நிவாரணம் பெறலாம்.
கோதுமை மாவை அக்கிப்புண், நெருப்பு பட்ட இடம், மேல் தோல் உரிந்துபோன இடம் ஆகியவற்றில் தூவினாலும் அல்லது வெண்ணெய் கலந்து பூசினாலும் எரிச்சல் தணியும் கோதுமை மாவை களியாக செய்து கட்டிகளுக்கு வைத்து கட்ட அவை சீக்கிரம் குணமாகும்.
வியர்வைக்குருவால் அவதிப்படுபவர்கள் கோதுமை மாவை புளித்த காடி நீரில் கலந்து பூசிவர அவை விரைவில் மறையும் கோதுமையை உணவில் அதிகம் எடுத்துக் கொள்பவர்களுக்கு உடல் பலம் அதிகரிக்கும் ஆண்களுக்கு ஆண்மை அதிகரிக்கும்.
கோதுமை கஞ்சி செய்து சாப்பிட காசநோய் உள்ளவர்களும், வேறுவகை நோயினால் அவதிப்பட்டுத் தெளிந்தவர்களும் விரைவில் உடல்நலம் தேறுவார்கள்.
முதுகுவலி, மூட்டுவலியால் அவதிப்படுபவர்களுக்கு கோதுமையை வறுத்து பொடித்து, அதனுடன் தேன் சேர்த்து உட்கொள்ள கொடுக்க அந்த வலி குணமாகும், வயிற்றில் புளிப்புத்தன்மை உடையவர்கள் மற்றும் புளித்த ஏப்பம் அடிக்கடி வருபவர்கள் கோதுமை ரவையை கஞ்சி செய்து குடித்தால் உடனே நிவாரணம் பெறலாம்.
கோதுமை மாவை அக்கிப்புண், நெருப்பு பட்ட இடம், மேல் தோல் உரிந்துபோன இடம் ஆகியவற்றில் தூவினாலும் அல்லது வெண்ணெய் கலந்து பூசினாலும் எரிச்சல் தணியும் கோதுமை மாவை களியாக செய்து கட்டிகளுக்கு வைத்து கட்ட அவை சீக்கிரம் குணமாகும்.
வியர்வைக்குருவால் அவதிப்படுபவர்கள் கோதுமை மாவை புளித்த காடி நீரில் கலந்து பூசிவர அவை விரைவில் மறையும் கோதுமையை உணவில் அதிகம் எடுத்துக் கொள்பவர்களுக்கு உடல் பலம் அதிகரிக்கும் ஆண்களுக்கு ஆண்மை அதிகரிக்கும்.
கோதுமை கஞ்சி செய்து சாப்பிட காசநோய் உள்ளவர்களும், வேறுவகை நோயினால் அவதிப்பட்டுத் தெளிந்தவர்களும் விரைவில் உடல்நலம் தேறுவார்கள்.
லிபியாவின் பிரதமரான அலி சிடான் தலைநகர் திரிபோலியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கியுள்ளார். இன்று அதிகாலை அவர் சில மர்மநபர்களால் துப்பாக்கி முனையில் கடத்தப்பட்டார்.
கடந்த வாரம் அமெரிக்காவின் சிறப்புப் படைகள் நடத்திய சோதனையில் திரிபோலியின் தெருக்களில் சுதந்திரமாக நடமாடிக் கொண்டிருந்த அபு அனாஸ் அல் லிபி என்ற அல்கொய்தா தீவிரவாதி கைது செய்யப்பட்டார். இது போராளிகளிடையே ஆத்திரத்தை ஏற்படுத்தியது என்றும், அதன் விளைவாகவே பிரதமர் கடத்தப்பட்டதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. நாடகம் போல் நடந்த இந்தக் கடத்தல் லிபியாவில் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஆனால், கடத்தப்பட்ட சில மணி நேரங்களிலேயே பிரதமர் பத்திரமாக விடுவிக்கப்பட்டதாகவும் தலைநகர் திரிபோலிக்கு வந்து கொண்டிருப்பதாகவும் தகவல்கள் வந்துள்ளன. இதுகுறித்து வேறு ஏதும் விளக்கங்கள் கொடுக்கப்படவில்லை என்றபோதும் லிபியாவின் ராணுவம் தலையிட்டு பிரதமரை விடுவித்துள்ளதாக அறியப்படுகின்றது.
லிபியாவின் உள்துறை அமைச்சகத்துடன் இணைந்த ராணுவக் கமாண்டர் ஒருவர் பிரதமர் பாதுகாப்பில் வைக்கப்பட்டிருந்த வீட்டில் தாக்குதல் நடத்தி ராணுவம் அவரை விடுவித்ததாக தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்குப் பேட்டி அளித்துள்ளார்.
இஸ்லாமியர்கள் நிறைந்த போராட்டக் குழுக்களின் பிடியில் சிக்கியுள்ள லிபியா அரசின் பலவீனத்தையே பிரதமரின் கடத்தல் தெளிவுபடுத்துவதாக அரசியல் பார்வையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
கடந்த வாரம் அமெரிக்காவின் சிறப்புப் படைகள் நடத்திய சோதனையில் திரிபோலியின் தெருக்களில் சுதந்திரமாக நடமாடிக் கொண்டிருந்த அபு அனாஸ் அல் லிபி என்ற அல்கொய்தா தீவிரவாதி கைது செய்யப்பட்டார். இது போராளிகளிடையே ஆத்திரத்தை ஏற்படுத்தியது என்றும், அதன் விளைவாகவே பிரதமர் கடத்தப்பட்டதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. நாடகம் போல் நடந்த இந்தக் கடத்தல் லிபியாவில் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஆனால், கடத்தப்பட்ட சில மணி நேரங்களிலேயே பிரதமர் பத்திரமாக விடுவிக்கப்பட்டதாகவும் தலைநகர் திரிபோலிக்கு வந்து கொண்டிருப்பதாகவும் தகவல்கள் வந்துள்ளன. இதுகுறித்து வேறு ஏதும் விளக்கங்கள் கொடுக்கப்படவில்லை என்றபோதும் லிபியாவின் ராணுவம் தலையிட்டு பிரதமரை விடுவித்துள்ளதாக அறியப்படுகின்றது.
லிபியாவின் உள்துறை அமைச்சகத்துடன் இணைந்த ராணுவக் கமாண்டர் ஒருவர் பிரதமர் பாதுகாப்பில் வைக்கப்பட்டிருந்த வீட்டில் தாக்குதல் நடத்தி ராணுவம் அவரை விடுவித்ததாக தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்குப் பேட்டி அளித்துள்ளார்.
இஸ்லாமியர்கள் நிறைந்த போராட்டக் குழுக்களின் பிடியில் சிக்கியுள்ள லிபியா அரசின் பலவீனத்தையே பிரதமரின் கடத்தல் தெளிவுபடுத்துவதாக அரசியல் பார்வையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
Facebook போன்ற சமூக வலைத்தளங்களை தடை செய்வது குறித்து அரசாங்கம் இதுவரை எதுவித முடிவுகள் எடுக்க வில்லை என தினேஷ் குணவர்த்தன தெரிவித்துள்ளார். இலங்கையில் Facebook தடை செய்யப்படும் என பலர் மத்தியில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து அரசா ங்கம் ஏதேனும் முடிவுகளை எடுத்துள்ளதா என எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க இன்று பாராளுமன்றில் கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்த தினேஷ் குணவர்த்தன, பரவும் வதந்திகளை நிராகரிப்பதாகவும் அரசாங்கம் இதுவரை அவ்வாறான தீர்மானம் எதனையும் எடுக்கவில்லை எனவும் கூறினார்.
எனினும் உலகின் மிக முக்கியமான சமூக வலைத்தளங்களில் ஒன்றான Facebook தொடர்பில் பாணந்துறை பிரதேச பாடசாலை ஒன்றில் நடைபெற்ற நிகழ்வு உரையாற்றிய ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்திருந்தார். Facebook ஓர் தொற்று நோயைப் போன்று பரவி வருவதாகவும் இதனால் பல்வேறு சமூக சீரழிவுகள் ஏற்படுவதாகவும் Facebookல் வரும் எதனையும் நம்ப வேண்டாம் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டிருந்தார்.
அதற்கு பதிலளித்த தினேஷ் குணவர்த்தன, பரவும் வதந்திகளை நிராகரிப்பதாகவும் அரசாங்கம் இதுவரை அவ்வாறான தீர்மானம் எதனையும் எடுக்கவில்லை எனவும் கூறினார்.
எனினும் உலகின் மிக முக்கியமான சமூக வலைத்தளங்களில் ஒன்றான Facebook தொடர்பில் பாணந்துறை பிரதேச பாடசாலை ஒன்றில் நடைபெற்ற நிகழ்வு உரையாற்றிய ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்திருந்தார். Facebook ஓர் தொற்று நோயைப் போன்று பரவி வருவதாகவும் இதனால் பல்வேறு சமூக சீரழிவுகள் ஏற்படுவதாகவும் Facebookல் வரும் எதனையும் நம்ப வேண்டாம் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டிருந்தார்.
200வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விளையாடிய பின்னர் அவர் தனது ஒய்வை அறிவிக்கவுள்ளதாக சர்வ தேச தகவல்கள் குறிப்பிடுகின்றன. மட்டுப்படுத்தப்பட்ட ஒவர்கள் கொண்ட சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் அவர் ஏற்கனவே ஒய்வு பெற்றிருந்தமை குறிப் பிடத்தக்கது.
நவம்பர் மாதம் நடைபெறவுள்ள மேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிரான போட்டியே அவரின் இறுதிப் போட்டியாக அமையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை புதுமுக விரர்களுக்கு வாய்பளிப்பதற்காக டெஸ்ட் கிரிகெட் போட்டியிலிருந்து ஓய்வு பெற தீர்மானித்ததாக இலங்கை அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரரான திலகரட்ன டில்ஷான் தெரிவிக்கின்றார். இலங்கை கிரிகெட் நிறுவன தலைமையகத்தில் நடைபெறும் ஊடகவியலாளர் சந்திப்பில் திலகரட்ன டில்ஷான் தனவு ஓய்வை இன்று உத்தியோகபூர்வமாக அறிவித்தார்.
டெஸ்ட் கிரிக்கெட் போட்டியிலிருந்து தாம் ஓய்வுபெறப்போவதாக திலகரத்ன டில்சான் நேற்று குறிப்பிட்டிருந்தார். இலங்கை கிரிக்கெட் பல்வேறு வெற்றிகளுக்கு பங்களிப்பு நல்கியிருந்ததுடன் அணித் தலைவராகவும் செயற்பட்டிருந்தார்.
நவம்பர் மாதம் நடைபெறவுள்ள மேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிரான போட்டியே அவரின் இறுதிப் போட்டியாக அமையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை புதுமுக விரர்களுக்கு வாய்பளிப்பதற்காக டெஸ்ட் கிரிகெட் போட்டியிலிருந்து ஓய்வு பெற தீர்மானித்ததாக இலங்கை அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரரான திலகரட்ன டில்ஷான் தெரிவிக்கின்றார். இலங்கை கிரிகெட் நிறுவன தலைமையகத்தில் நடைபெறும் ஊடகவியலாளர் சந்திப்பில் திலகரட்ன டில்ஷான் தனவு ஓய்வை இன்று உத்தியோகபூர்வமாக அறிவித்தார்.
டெஸ்ட் கிரிக்கெட் போட்டியிலிருந்து தாம் ஓய்வுபெறப்போவதாக திலகரத்ன டில்சான் நேற்று குறிப்பிட்டிருந்தார். இலங்கை கிரிக்கெட் பல்வேறு வெற்றிகளுக்கு பங்களிப்பு நல்கியிருந்ததுடன் அணித் தலைவராகவும் செயற்பட்டிருந்தார்.
நடைபெற்று முடிந்த வட மாகாண சபைத் தேர்தலில் தமிழரசுக் கட்சியின் வீட்டுச் சின்னத்தில் போட்டியிட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் 4 பங்காளிக் கட்சிகளுக்கும் தமிழரசுக் கட்சிக்கு மிடையேயான அதிகார மற்றம் பதவிப்பங்கீட்டு மோதல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.
மாகாண சபைக்கான அமைச்சுப்பதவிகளை பங்கிடும் விவாகாரத்தில் தமிழரசுக் கட்சியினர் தன்னிச்யாக செயற்பட்டுள்ளதாக பங்காளிக்கட்சிகள் குற்றஞ்சுமத்தியுள்ளன.
இந்நிலையில் ஈபிஆர்எல்எப், ரெலோ , புளொட், தமிழர் விடுதலைக் கூட்டணி என்பன நாளை அவசரமாகக் கூடுகின்றது.
ரெலோ அமைப்பின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் இன்று கொழும்பில் தங்கியுள்ளதாகவும் அவர் திரும்பியவுடன் நாளை இச்சந்திப்பு யாழ்பாணம் அல்லது வவுனியாவில் இடம்பெறும் என்று உள்ளகத்தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழர் விடுதலைக் கூட்டணி தவிர்ந்த ஏனைய கட்சிகள் மூன்றும் கடந்த தேர்தலில் 14 ஆசனங்களை பெற்றுக்கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேற்படி கட்சிகளின் தூரநோக்கானது எதிர்வரும் தேர்தல்களே என்பதால் முடிவுகள் விபரீதமானதாக அமையாது என்பதை இலங்கைநெட் கட்டியம் கூறிவைக்க விரும்புகின்றது.
வேட்பாளர் தெரிவில் தொட்டு அமைச்சுப்பதவிகள் வரை உள்ளே மோதிக்கொள்ளும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் வெறுமனே தமிழ் மக்களின் வாக்குகளை அபகரிப்பதற்காக ஒன்றாக மேடை ஏறுகின்றனரே தவிர உள்ளே எந்தவிதமான புரிந்துணர்வும் கிடையாது என்பதை தொடர் நிகழ்வுகள் இடித்துரைக்கின்றது.
தமது உள்வீட்டு பிரச்சினைகளுக்காக நேரத்தையும் காலத்தையும் வீணடிக்கும் இக்கும்பலால் தமிழ் மக்களின் நியாயமான பிரச்சினைகளுக்காக நேரத்தை ஒதுக்க முடியுமா அல்லது ஒரு கருத்தொருமைப்பாட்டுக்கு வரமுடிமா ?
மாகாண சபைக்கான அமைச்சுப்பதவிகளை பங்கிடும் விவாகாரத்தில் தமிழரசுக் கட்சியினர் தன்னிச்யாக செயற்பட்டுள்ளதாக பங்காளிக்கட்சிகள் குற்றஞ்சுமத்தியுள்ளன.
இந்நிலையில் ஈபிஆர்எல்எப், ரெலோ , புளொட், தமிழர் விடுதலைக் கூட்டணி என்பன நாளை அவசரமாகக் கூடுகின்றது.
ரெலோ அமைப்பின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் இன்று கொழும்பில் தங்கியுள்ளதாகவும் அவர் திரும்பியவுடன் நாளை இச்சந்திப்பு யாழ்பாணம் அல்லது வவுனியாவில் இடம்பெறும் என்று உள்ளகத்தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழர் விடுதலைக் கூட்டணி தவிர்ந்த ஏனைய கட்சிகள் மூன்றும் கடந்த தேர்தலில் 14 ஆசனங்களை பெற்றுக்கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேற்படி கட்சிகளின் தூரநோக்கானது எதிர்வரும் தேர்தல்களே என்பதால் முடிவுகள் விபரீதமானதாக அமையாது என்பதை இலங்கைநெட் கட்டியம் கூறிவைக்க விரும்புகின்றது.
வேட்பாளர் தெரிவில் தொட்டு அமைச்சுப்பதவிகள் வரை உள்ளே மோதிக்கொள்ளும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் வெறுமனே தமிழ் மக்களின் வாக்குகளை அபகரிப்பதற்காக ஒன்றாக மேடை ஏறுகின்றனரே தவிர உள்ளே எந்தவிதமான புரிந்துணர்வும் கிடையாது என்பதை தொடர் நிகழ்வுகள் இடித்துரைக்கின்றது.
தமது உள்வீட்டு பிரச்சினைகளுக்காக நேரத்தையும் காலத்தையும் வீணடிக்கும் இக்கும்பலால் தமிழ் மக்களின் நியாயமான பிரச்சினைகளுக்காக நேரத்தை ஒதுக்க முடியுமா அல்லது ஒரு கருத்தொருமைப்பாட்டுக்கு வரமுடிமா ?
இரட்டைக் கொலை சம்பவமொன்றில் குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்டுள்ள இருவருக்கு மொனராகலை மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித் துள்ளது. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு சகோதரர் களுக்கே இவ்வாறு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
மொனராகலை, கல்பெத்த பகுதியைச் சேர்ந்த இருவருக்கே கொலைக் குற்றச் சாட்டின் கீழ் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 1997ம் ஆண்டு ஓகஸ்ட் மாதம ஆயித்தியமலை பகுதியில் துப்பாக்கிச் சூடு மேற்கொண்டும் கூரான ஆயுதத்தால் குத்தியும் இருவரை கொலை செய்ததாக இந்த இருவர் மீதும் குற்றம் சுமத்தப்பட்டு இவ்விருவரும் கைது செய்யப்பட்டனர்.
நீண்ட கால வழக்கு விசாரணையின் பின் இன்று இரு சந்தேகநபர்கள் மீதான குற்றச்சாட்டுக்கள் ஆதாரபூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளதால் மொனராகலை மேல் நீதிமன்ற நீதிபதி கிஹான் எச். குலதுங்க மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.
மொனராகலை, கல்பெத்த பகுதியைச் சேர்ந்த இருவருக்கே கொலைக் குற்றச் சாட்டின் கீழ் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 1997ம் ஆண்டு ஓகஸ்ட் மாதம ஆயித்தியமலை பகுதியில் துப்பாக்கிச் சூடு மேற்கொண்டும் கூரான ஆயுதத்தால் குத்தியும் இருவரை கொலை செய்ததாக இந்த இருவர் மீதும் குற்றம் சுமத்தப்பட்டு இவ்விருவரும் கைது செய்யப்பட்டனர்.
நீண்ட கால வழக்கு விசாரணையின் பின் இன்று இரு சந்தேகநபர்கள் மீதான குற்றச்சாட்டுக்கள் ஆதாரபூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளதால் மொனராகலை மேல் நீதிமன்ற நீதிபதி கிஹான் எச். குலதுங்க மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.
தமிழரசு கட்சி எடுக்கின்ற முடிவுகளை பார்க்கும் போது அவர்கள் சர்வாதிகாரத்தை நோக்கி செல்கின்றார்கள் என எமக்கு எண்ணத் தோன்றுகின்றது எனவும், இவர்களது முடிவுகளால் காலத்தில தமிழ் தேசிய கூட்டமைப்பின் அரசியல் முன்னெடுப்புக்களுக்கு குழப்பம் விளைவிக்கும் என சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார்.
யாழில் வைத்து ஊடகவியலாளர்களை சந்தித்த போதே அவர் இதனை தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில் அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், வடக்கு மாகாண சபைக்கு உரிய அமைச்சர்கள் தெரிவு, முடிவு செய்யப்பட்டுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு அறிவித்துள்ளது என ஊடகங்களில் செய்திகள் வெளிவந்துள்ளது. வடக்கு மாகாண சபை அமைச்சர்கள் தெரிவு தொடர்பாக வெளிவந்துள்ள முடிவு தமிழ் தேசிய கூட்டமைப்பின் முடிவல்ல அது தனியே தமிழரசு கட்சி எடுத்த முடிவு என தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார்.
இந்த முடிவு தமிழ் தேசிய கூட்டமைப்பின் முடிவல்ல, தனியே தமிழரசு கட்சி எடுத்த முடிவு. அமைச்சர்கள் தெரிவு தொடர்பாக நேற்று மாலை கூட்டம் நடைபெற்றதாகவும் அதன் பின்னரே அமைச்சர்கள் தெரிவு முடிவாகியுள்ளது என செய்தி அறிக்கை வெளியிடப்பட்டதாகவும் நான் அறிகிறேன். ஆனால் நேற்றைய இந்த கூட்டத்திற்கு நான் யாழ்ப்பாணத்தில் நின்ற போதிலும் எனக்கு அழைப்பு வரவில்லை. அதேபோல தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஏனைய பங்காளி கட்சிகளான புளொட், ரெலோ போன்ற கட்சி தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்படவில்லை தனியே தமிழரசு கட்சியை சேர்ந்தவர்களே அந்த கூட்டத்தை நடத்தி முடிவெடுத்துள்ளார்கள்.
இவர்கள் வெளியிட்டுள்ள இந்த அமைச்சர்கள் பெயரில் எமக்கு திருப்தி இல்லை நாம் கேட்பது முல்லைத்தீவு மாவட்டத்திற்கு ஒரு அமைச்சு பதவி. ஏனெனில் அங்கு சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களின் பிரச்சினை போரினால் பாதிக்கப்பட்டவர்களின் பிரச்சினை சிங்கள - முஸ்லிம் மக்களை சட்ட விரோதமாக குடியேற்றுதல் போன்ற பிரச்சினைகள் காணப்படுகின்றன. எனவே அங்கு ஒரு அமைச்சு தேவைப்படுகின்றது.
வவுனியா மன்னாருக்கு ஒரு அமைச்சு இருக்கின்றது யாழ்ப்பாணத்திற்கு முதலமைச்சர் இருக்கின்றார் எனவே முல்லைத்தீவுக்கு ஒரு அமைச்சு தரவேண்டும் என்பது அங்குள்ள மக்களின் கோரிக்கை அந்த மக்களின் கோரிக்கையில் நியாயம் இருப்பதனால் நாம் முல்லைத்தீவுக்கு ஒரு அமைச்சு பதவி கேட்கின்றோம். இவர்கள் இப்ப சொல்கின்றனர் ஈ.பி.ர்.எல்.ப் க்கு ஒரு அமைச்சு கொடுத்துள்ளதாக அந்த அமைச்சு பற்றி கட்சி தலைவர் என்ற ரீதியில் எனக்கு எதுவும் அறிவிக்கப்படவில்லை எனவே அவ்வாறு ஒரு அமைச்சு பதவி கொடுத்தால் அது ஒரு தனி நபருக்கு கொடுத்த அமைச்சு பதவியாகவே இருக்கும்.
அவ்வாறு எமது கட்சிக்கு ஒரு அமைச்சு பதவி கொடுப்பதாக இருந்தால் அதனை முல்லைத்தீவு மாவட்டத்திற்கு கொடுக்கவே நாம் கோருகின்றோம். அதேவேளை தேர்தல் பிரச்சார காலங்களில் இலங்கை அரசாங்கம் போர் குற்றம் புரிந்துள்ளது. இங்கு மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளது, போர் குற்ற விசாரணைகள் முன்னெ டுக்கப்பட வேண்டும், என பேசிவிட்டு அவர் முன்னிலையில் முதலமைச்சர் சத்திய பிரமாணம் எடுத்ததில் எமக்கு உடன்பாடில்லை. எனவே தமிழரசு கட்சி எடுத்துள்ள இந்த முடிவுகளை பார்க்கும் போது அவர்கள் சர்வாதிகாரத்தை நோக்கி செல்வதாகவே எமக்கு தோன்றுகின்றது என தெரிவித்துள்ளார்
யாழில் வைத்து ஊடகவியலாளர்களை சந்தித்த போதே அவர் இதனை தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில் அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், வடக்கு மாகாண சபைக்கு உரிய அமைச்சர்கள் தெரிவு, முடிவு செய்யப்பட்டுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு அறிவித்துள்ளது என ஊடகங்களில் செய்திகள் வெளிவந்துள்ளது. வடக்கு மாகாண சபை அமைச்சர்கள் தெரிவு தொடர்பாக வெளிவந்துள்ள முடிவு தமிழ் தேசிய கூட்டமைப்பின் முடிவல்ல அது தனியே தமிழரசு கட்சி எடுத்த முடிவு என தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார்.
இந்த முடிவு தமிழ் தேசிய கூட்டமைப்பின் முடிவல்ல, தனியே தமிழரசு கட்சி எடுத்த முடிவு. அமைச்சர்கள் தெரிவு தொடர்பாக நேற்று மாலை கூட்டம் நடைபெற்றதாகவும் அதன் பின்னரே அமைச்சர்கள் தெரிவு முடிவாகியுள்ளது என செய்தி அறிக்கை வெளியிடப்பட்டதாகவும் நான் அறிகிறேன். ஆனால் நேற்றைய இந்த கூட்டத்திற்கு நான் யாழ்ப்பாணத்தில் நின்ற போதிலும் எனக்கு அழைப்பு வரவில்லை. அதேபோல தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஏனைய பங்காளி கட்சிகளான புளொட், ரெலோ போன்ற கட்சி தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்படவில்லை தனியே தமிழரசு கட்சியை சேர்ந்தவர்களே அந்த கூட்டத்தை நடத்தி முடிவெடுத்துள்ளார்கள்.
இவர்கள் வெளியிட்டுள்ள இந்த அமைச்சர்கள் பெயரில் எமக்கு திருப்தி இல்லை நாம் கேட்பது முல்லைத்தீவு மாவட்டத்திற்கு ஒரு அமைச்சு பதவி. ஏனெனில் அங்கு சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களின் பிரச்சினை போரினால் பாதிக்கப்பட்டவர்களின் பிரச்சினை சிங்கள - முஸ்லிம் மக்களை சட்ட விரோதமாக குடியேற்றுதல் போன்ற பிரச்சினைகள் காணப்படுகின்றன. எனவே அங்கு ஒரு அமைச்சு தேவைப்படுகின்றது.
வவுனியா மன்னாருக்கு ஒரு அமைச்சு இருக்கின்றது யாழ்ப்பாணத்திற்கு முதலமைச்சர் இருக்கின்றார் எனவே முல்லைத்தீவுக்கு ஒரு அமைச்சு தரவேண்டும் என்பது அங்குள்ள மக்களின் கோரிக்கை அந்த மக்களின் கோரிக்கையில் நியாயம் இருப்பதனால் நாம் முல்லைத்தீவுக்கு ஒரு அமைச்சு பதவி கேட்கின்றோம். இவர்கள் இப்ப சொல்கின்றனர் ஈ.பி.ர்.எல்.ப் க்கு ஒரு அமைச்சு கொடுத்துள்ளதாக அந்த அமைச்சு பற்றி கட்சி தலைவர் என்ற ரீதியில் எனக்கு எதுவும் அறிவிக்கப்படவில்லை எனவே அவ்வாறு ஒரு அமைச்சு பதவி கொடுத்தால் அது ஒரு தனி நபருக்கு கொடுத்த அமைச்சு பதவியாகவே இருக்கும்.
அவ்வாறு எமது கட்சிக்கு ஒரு அமைச்சு பதவி கொடுப்பதாக இருந்தால் அதனை முல்லைத்தீவு மாவட்டத்திற்கு கொடுக்கவே நாம் கோருகின்றோம். அதேவேளை தேர்தல் பிரச்சார காலங்களில் இலங்கை அரசாங்கம் போர் குற்றம் புரிந்துள்ளது. இங்கு மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளது, போர் குற்ற விசாரணைகள் முன்னெ டுக்கப்பட வேண்டும், என பேசிவிட்டு அவர் முன்னிலையில் முதலமைச்சர் சத்திய பிரமாணம் எடுத்ததில் எமக்கு உடன்பாடில்லை. எனவே தமிழரசு கட்சி எடுத்துள்ள இந்த முடிவுகளை பார்க்கும் போது அவர்கள் சர்வாதிகாரத்தை நோக்கி செல்வதாகவே எமக்கு தோன்றுகின்றது என தெரிவித்துள்ளார்
ஜந்தாம் ஆண்டு புலமைப்பரிட்சை பரீட்சையின் புள்ளி வழங்கல் முறை தொடர்பில் மாற்று வழியொன்றை பயன் படுத்த வேண்டும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவிக்கின்றார். பாணந்துறை சுமங்கல மகளிர் வித்தி யாலயத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றில் ஜனாதிபதி இதனை கூறியுள்ளார்.
அவர் அங்கு கருத்து தெரிவிக்கையில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை கையை உயர்த்துமாறு நான் இன்று கூறினேன். வந்திருந்த மாணவர்களில் 6 பேர் கைகளை உயர்த்தினார்கள். கையை உயர்த்தா மாணவர்களிடம் நீங்கள் சித்தி யடையவில்லையா என வினவினேன். அவர்கள் சித்தியடையவில்லை என கூறினார்கள்.
எத்தனை புள்ளிகள் எடுத்தீர்கள் என கேட்டபோது, 136 புள்ளி என தெரிவித்தனர். 136 புள்ளிகளை எடுத்த மாணவர் ஏன் சித்தியடையவில்லை? ஏனெனில் இங்கு 160, 153 என வெட்டுப்புள்ளிகள் நிர்ணயிக்கப்படுகின்றன. எமது ஊரில் 153 புள்ளிகளை பெற்று சித்தியடைந்தாலும் இங்கு அந்த புள்ளி இருந்தும் பயனில்லை. அவ்வாறு எனின் அந்த மாணவர் சித்தியடையவில்லை என கூற முடியாது. எனவே இந்த புள்ளி வழங்கும் முறை தொடர்பில் மாற்று முறையொன்றை பயன்படுத்த வேண்டும் என நான் நினைக்கின்றேன்.
அவர் அங்கு கருத்து தெரிவிக்கையில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை கையை உயர்த்துமாறு நான் இன்று கூறினேன். வந்திருந்த மாணவர்களில் 6 பேர் கைகளை உயர்த்தினார்கள். கையை உயர்த்தா மாணவர்களிடம் நீங்கள் சித்தி யடையவில்லையா என வினவினேன். அவர்கள் சித்தியடையவில்லை என கூறினார்கள்.
எத்தனை புள்ளிகள் எடுத்தீர்கள் என கேட்டபோது, 136 புள்ளி என தெரிவித்தனர். 136 புள்ளிகளை எடுத்த மாணவர் ஏன் சித்தியடையவில்லை? ஏனெனில் இங்கு 160, 153 என வெட்டுப்புள்ளிகள் நிர்ணயிக்கப்படுகின்றன. எமது ஊரில் 153 புள்ளிகளை பெற்று சித்தியடைந்தாலும் இங்கு அந்த புள்ளி இருந்தும் பயனில்லை. அவ்வாறு எனின் அந்த மாணவர் சித்தியடையவில்லை என கூற முடியாது. எனவே இந்த புள்ளி வழங்கும் முறை தொடர்பில் மாற்று முறையொன்றை பயன்படுத்த வேண்டும் என நான் நினைக்கின்றேன்.
ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சி சார்பாக அதிகூடிய விருப்பு வாக்குகளைப் பெற்ற பொன்னுத்துரை ஐங்கரநேசனுக்கு வடமாகாண சபையில் அமைச்சர் பதவி கொடுக்க வேண்டாமென அவருடைய கட்சியான ஈ.பி.ஆர்.எல்.எப், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் கேட்டுக்கொண்டுள்ளது.
வடமாகாண சபை அமைச்சர் தெரிவில் பொன்னுத்துரை ஜங்கரநேசன் விவசாய அமைச்சராகத் தெரிவு செய்யப் பட்டார். இந்நிலையில் ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியினர் அதற்கு இன்று எதிர்ப்புத் தெரிவித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பாக ஈ.பி.ஆர்.எல்.எப் பின் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளருமாகிய சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவிக்கையில்,
ஐங்கரநேசன் அமைச்சராக தெரிவு செய்யப்பட்டது தமிழரசுக் கட்சியின் முடிவு மட்டுமே என்பதுடன், அது ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியின் சம்மதத்துடன் நடைபெற வில்லை' எனவும் தெரிவித்தார்.
தமிழரசுக் கட்சியின் நடவடிக்கைகளை அதன் உறுப்பினர்கள் தற்போது வன்மை யாக கண்டித்து வருகின்றனர். தேர்தலின் பின்னரான தமிழரசுக் கட்சியின் நடவடிக்கைகள் அனைத்தும் ஏனைய அங்கத்துவக் கட்சிகளின் கருத்துக்களை உள்வாங்காமல் முடிவுகளை தன்னிச்சையாக எடுக்கும் போக்கு தொடர்கின்றது என கூட்டமைப்பின் சார்பாக வடமாகாண சபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவரும், புளட் அமைப்பின் தலைவருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளமை குறிப் பிடத்தக்கது
வடமாகாண சபை அமைச்சர் தெரிவில் பொன்னுத்துரை ஜங்கரநேசன் விவசாய அமைச்சராகத் தெரிவு செய்யப் பட்டார். இந்நிலையில் ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியினர் அதற்கு இன்று எதிர்ப்புத் தெரிவித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பாக ஈ.பி.ஆர்.எல்.எப் பின் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளருமாகிய சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவிக்கையில்,
ஐங்கரநேசன் அமைச்சராக தெரிவு செய்யப்பட்டது தமிழரசுக் கட்சியின் முடிவு மட்டுமே என்பதுடன், அது ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியின் சம்மதத்துடன் நடைபெற வில்லை' எனவும் தெரிவித்தார்.
தமிழரசுக் கட்சியின் நடவடிக்கைகளை அதன் உறுப்பினர்கள் தற்போது வன்மை யாக கண்டித்து வருகின்றனர். தேர்தலின் பின்னரான தமிழரசுக் கட்சியின் நடவடிக்கைகள் அனைத்தும் ஏனைய அங்கத்துவக் கட்சிகளின் கருத்துக்களை உள்வாங்காமல் முடிவுகளை தன்னிச்சையாக எடுக்கும் போக்கு தொடர்கின்றது என கூட்டமைப்பின் சார்பாக வடமாகாண சபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவரும், புளட் அமைப்பின் தலைவருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளமை குறிப் பிடத்தக்கது