குடு ருவனைக் காப்பாற்ற முயலும் கொழும்பு எம்பி.
கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பனர் ஒருவர் அண்மையில் தெமட்டகொடையில் இடம் பெற்ற போதைப் பொருள் விற்பனையாளர்க்கிடையில் ஏற்பட்ட துப்பாக்கிச் சமர் பற்றிய விசாரணையில் தலையீடு செய்வதாக அறிய முடிகின்றது. இதில் கோடீஸ்வர போதைப் பொருள் வர்த்தகரான குடு ருவன் என்பவரைக் காக்கும் முற்சியில் 27 வயதுடைய சஜித் பிரியந்த என்பவர் கொல்லப்பட்டார்.
பல உயர்தர பொலிஸ் அதிகாரதிகளின் துணை கொண்டு இந்த விசாரணையை முடக்குவதற்கு பொலிசாரால் தேடப்படும் குடு ருவன் பிரயத்தனம் செய்வதாகக் கூறப்படுகிறது.தெமட்டகொடையைச் சேர்ந்த குடு ருவன் வத்தளையில் பெரிய மாளிகையில் வசித்து வருவது தெரிந்ததே.
0 comments
Write Down Your Responses