உத்தியோகபூர்வமாக கடமைகளை பொறுப்பேற்றார் விக்னேஸ்வரன்!
நடைபெற்று முடிந்த வடமாகாண சபை தேர்தலில் வெற்றிபெற்று முதலமைச்சராக சத்திப்பிரமாணம் செய்து கொண்ட சீ.வி.விக்னேஸ்வரன் உத்தியோக இன்று(09.10.2013)காலை யாழ்ப்பாணத்திலுள்ள அவரது அலுவலகத்தில் உத்தியோகபூர்வமாக வடமாகாண முதலமைச்சராக தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.
இன்று காலை நடைபெற்ற இந்த வைபவத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, ஈ.சரவணபவன், எம்.ஏ.சுமந்திரன் மற்றும் அமைச்சின் செயலாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
0 comments
Write Down Your Responses