சர்வதேச ஆசிரியர் தினத்தில் பாடசாலைக்கு 1 கோடி 25 லட்சம் ரூபாவை வழங்கிய பியசேனவை பொன்னாடை போர்த்தி வாழ்த்தினர்.
சர்வதேச ஆசிரியர் தின விழா காரைதீவு சண்முகா மகா வித்தியாலயத்தில் இன்று திங்கட்கிழமை காலை அதிபர் இ.ரகுபதி தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.
நிகழ்வில் பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பொ.பியசேன மற்றும் கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் யூ.எல்.எம்.ஹாசிம் உள்ளிட்ட அதிதிகள் கலந்து கொண்டனர்.
அங்கு வாழ்த்துப்பாவை ஊடகவியலாளரான கலைஞர் விபுலமணி இ.கோபாலசிங்கம் இசைத்தார்.
கல்வி கற்பிக்கின்ற ஆசிரியைகளுக்கு பரிசு வழங்கி பாராட்டப்பட்டார்கள். கடந்த 2 வருடங்களில் பாடசாலை அபிவிருத்திக்கு 1கோடி 25 லட்சருபாவை வழங்கிய பியசேன எம்பிக்கு அதிபர் பொன்னாடைபோர்த்திப் பாராட்டினார்.
மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும் இடம் பெற்றன .
யு.எம்.இஸ்ஹாக்
0 comments
Write Down Your Responses