தாய் பயிற்சியாளர் பதவி பெறுவதற்காக, மகள் வலைப்பந்து குழுவில் இருந்து விலகினார்.
இலங்கை கனிஷ்ட வலைப்பந்து தலைவி செமினி டி அல்விஸ் தேசிய வலைப்பந்து அமைப்பில் இருந்து விலகினார். அவர் இந்த திடீர் தீர்மானம் எடுத்தற்கான காரணம் தனது தாயான தீப்தி டி அல்விஸ் தேசிய வலைப்பந்து குழுவின் பயிற்சியாளராகப் பதவியேற்க உள்ளமைதான்.
தேசிய வலைப்பந்து குழுவில் இருக்கும் விளையாட்டு வீராங்கனையின் உறவினருக்கு இலங்கை பயிற்சியாளராக பதவியைப் பெற்றுக் கொள்ள முடியாது என்பதனால் தான் விலகுவது தவிர்க்கப்பட முடியாதது என்று அவர் குறிப்பிட்டார். நேற்று முன் தினம் நடைபெற்ற நேர்முகத் தேர்வில் செமினியின் தாயாரான தீப்தி டி அல்விஸ் பயிற்சியாளராகத் தெரிவு செய்யப் பட்டார்.
அரசியலிலும் இப்படி நடந்தால் நாட்டுக்கு எவ்வளவு நன்மையாக இருக்கும்!
0 comments
Write Down Your Responses