தமிழன் முதலமைச்சராக பதவி ஏற்கிறார். பட்டாசு கொளுத்துகிறேன் – ஈழத்து அகதி காசியம்மாள்.
75 வயதுடைய இலங்கை அகதியான ஒரு மூதாட்டி இந்திய தேசிய கொடியை உயர்த்திப் பிடித்தபடி புதுக்கோட்டையில் உள்ள ஆட்சியாளர் அலுவலகத்துக்குச் சென்று இந்தியா வாழ்க, இலங்கையில் தமிழினம் வாழ்க என்று கோஷம் இட்டுள்ளார். அதன் பின்னர் பையில் கொண்டு வந்த சரவெடிகளை எடுத்து வெடித்துள்ளார். நான் ஈழத்துப் பெண் காசியம்மாள். தோப்புக் கொல்லை முகாமில் அகதியாக இருக்கின்றேன். ஈழத்து தமிழ் மக்கள் உலகம் முழுதும் அகதிகளாக இருக்கிறார்கள். தமிழன் முதலமைச்சராக பதவியேற்கிறார். அவர் நல்லாட்சி செய்து எம்மக்களைக் காக்க வேண்டும். இனியும் எம்மக்கள் அகதிகளாக இருக்கக் கூடாது. அதற்காகத்தான் பதவி ஏற்பு நாளில் இந்திய தேசிகொடியுடன் வந்து பட்டாசு வெடித்தேன் என்று அவர் கூறியுள்ளார்.
கருணாநிதி, ஜெயலலிதாவெல்லாம் தமிழர்கள் இல்லையென்ற உண்மையை சொல்லாமல் சொல்கிறாரோ காசியம்மா பாட்டி.
0 comments
Write Down Your Responses