பாரபட்சம் இல்லை – விக்கியிடம் ஜனாதிபதி
தமிழ் தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்தோடு ஒத்துழைத்து செயற்படுமானால், வடக்கின் அபிவிருத்தி வேலைகளை நாம் முன்னெடுத்துச் செல்வோம் என்று ஜனாதிபதி கூறியு ள்ளார். நீதியரசர் சி. வி. விக்கினேஸ்வரன் அலரிமாளி கையில் முதலமைச்ராக சத்தியப் பிரமாணம் செய்த பின்னர் அங்கு நடைபெற்ற தேநீர் விருந்தில் ஜனாதிபதி இவ்வாறு நேசக்கரம் நீட்டியுள்ளார்.
தான் நாட்டின் அனைத்து மக்களினதும் ஜனாதிபதி. அதனால் யாருக்கும் பாரபட்சம் காட்டமாட்டேன் என்றும் அபிவிருத்தி, மேம்பாடுகள் வழமையாக சுமுகமாக நடைபெற வேண்டுமானால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்துடன் ஒத்து ழைக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
0 comments
Write Down Your Responses