அமெரிக்காவில் நீதித் திணைக்களத்தில் குற்றப்பிரிவு பதில் உதவி சட்டமா அதிபராக இலங்கைத் தமிழர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார் யாழ் வடமராட்சியைச் சேர்ந்த மைதிலி ராமன் என்பவரே இவ்வாறு நியமிக்கப்பட்டுள்ளார்.
மைதிலி ராமன் யாழ். பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற துடன் சிக்காகோ பல்கலைக்கழகத்தில் சட்டத் துறையில் பட்டம் பெற்றவர். குற்றவியல் பிரிவின் தலைவராகப் பொறுப்பேற்கும் மைதிலி ராமன் அமெரிக்கா முழுவதிலும் உள்ள சம்ஷ்டி குற்றவியல் வழக்குகளை கையாளும் சுமார் 600 அரச சட்டவாளர்களுக்குத் தலைமை தாங்கவுள்ளதுடன் குற்றவியல் சட்டங்களை மேம்படுத்துவதற்கும் உதவியாக இருப்பார்.
மைதிலி ராமன் கடந்த 2008 ஆம் ஆண்டு தொடக்ககம் குற்றவியல் பிரிவில் பணியாற்றி வருகிறார். 2009 செப்டெம்பர் 2 ஆம் திகதி தொடக்கம் இவர் பதில் தலைமை அதிகாரியாக நியமிக்கப்பட்ட அவர் 2013 மார்ச் 1 ஆம் திகதி முதன்மை பிரதி உதவி சட்டமா அதிபர் மற்றும் பிரதம அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
மைதிலி ராமன் 1996 இல் அமெரிக்க நீதித்துறைத் திணைக்களத்தில் இணைந்து குற்றவியல் பிரிவில் போதைப் பொருள் தடுப்பு வழக்குகளில் முன்னிலையாகி வந்தார். 1999 தொடக்கம் 2008 வரை மேரிலான்ட் மாவட்டத்தில் சட்டமா அதிபர் பணியகத்தில் உதவி அமெரிக்க சட்டவாளராக பணியாற்றினார். இதன்போது போதைப்பொருள் தடுப்பு நிதிமுறைகேடு வன்முறைகள் சிறார் கடத்தல் குடியியல் உரிமை வழக்குகளில் இவர் பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர் உலக வங்கியின் அனைத்துலக நிதிக் கூட்டுத்தாபனத்தில் பணியாற்றிய ஏ.தர்மரத்தினத்தின் மகளும், EPRLF இயக்கத்தின் முன்னோடிகளில் ஒருவரான கேதீஸ்வரன் லோகநாதனின் (இவர் புலிகளால் சுட்டுக்கொள்ளப்பட்டவர்) சகோதரியின் மகளும் இலங்கை வங்கியின் முன்னாள் பொதுமுகாமையாளர் சி.லோகநாதனின் பேர்த்தியுமாவார்.
மைதிலி ராமன் யாழ். பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற துடன் சிக்காகோ பல்கலைக்கழகத்தில் சட்டத் துறையில் பட்டம் பெற்றவர். குற்றவியல் பிரிவின் தலைவராகப் பொறுப்பேற்கும் மைதிலி ராமன் அமெரிக்கா முழுவதிலும் உள்ள சம்ஷ்டி குற்றவியல் வழக்குகளை கையாளும் சுமார் 600 அரச சட்டவாளர்களுக்குத் தலைமை தாங்கவுள்ளதுடன் குற்றவியல் சட்டங்களை மேம்படுத்துவதற்கும் உதவியாக இருப்பார்.
மைதிலி ராமன் கடந்த 2008 ஆம் ஆண்டு தொடக்ககம் குற்றவியல் பிரிவில் பணியாற்றி வருகிறார். 2009 செப்டெம்பர் 2 ஆம் திகதி தொடக்கம் இவர் பதில் தலைமை அதிகாரியாக நியமிக்கப்பட்ட அவர் 2013 மார்ச் 1 ஆம் திகதி முதன்மை பிரதி உதவி சட்டமா அதிபர் மற்றும் பிரதம அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
மைதிலி ராமன் 1996 இல் அமெரிக்க நீதித்துறைத் திணைக்களத்தில் இணைந்து குற்றவியல் பிரிவில் போதைப் பொருள் தடுப்பு வழக்குகளில் முன்னிலையாகி வந்தார். 1999 தொடக்கம் 2008 வரை மேரிலான்ட் மாவட்டத்தில் சட்டமா அதிபர் பணியகத்தில் உதவி அமெரிக்க சட்டவாளராக பணியாற்றினார். இதன்போது போதைப்பொருள் தடுப்பு நிதிமுறைகேடு வன்முறைகள் சிறார் கடத்தல் குடியியல் உரிமை வழக்குகளில் இவர் பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர் உலக வங்கியின் அனைத்துலக நிதிக் கூட்டுத்தாபனத்தில் பணியாற்றிய ஏ.தர்மரத்தினத்தின் மகளும், EPRLF இயக்கத்தின் முன்னோடிகளில் ஒருவரான கேதீஸ்வரன் லோகநாதனின் (இவர் புலிகளால் சுட்டுக்கொள்ளப்பட்டவர்) சகோதரியின் மகளும் இலங்கை வங்கியின் முன்னாள் பொதுமுகாமையாளர் சி.லோகநாதனின் பேர்த்தியுமாவார்.
இலங்கை அரசிற்கு எதிராக சாட்டப்பட்டுள்ள போர்க் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ மலேசியப் பிரதமர் நஜீப் ரஸாக்கிடம் தெரிவித் துள்ளதாக , த நியூ ஸ்ட்செய்ட் டைம்ஸ் பத்திரிகையை மேற்கோள்காட்டி கொழும்பு எக்ஸ்பிரஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
தன்சானியாவில் மலேசியப் பிரதமர் நஜீப் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுடன் நடத்திய இருதரப்பு சந்திப்பொன்றின்போதே மேற்கண்ட வாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்ததாக கொழும்பு எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
அத்துடன் இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தனக்கு முறைப்படி அழைப்பு விடுத்ததாகவும் பிரதமர் நஜீப் தெரிவித்தார்.
இலங்கை தொடர்பாக ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் குறித்து அவசரப்பட்டு முடிவுகள் எதனையும் எடுக்காமல் இலங்கையில் உண்மையில் என்ன நடந்தது என்பது பற்றிய நியாயமான மதிப்பீடொன்றை ஏனைய நாடுகளும் மேற்கொள்ளுமென ஜனாதிபதி ராஜபத நம்பிக்கை வெளியிட்டார்.
தன்சானியாவில் மலேசியப் பிரதமர் நஜீப் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுடன் நடத்திய இருதரப்பு சந்திப்பொன்றின்போதே மேற்கண்ட வாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்ததாக கொழும்பு எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
அத்துடன் இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தனக்கு முறைப்படி அழைப்பு விடுத்ததாகவும் பிரதமர் நஜீப் தெரிவித்தார்.
இலங்கை தொடர்பாக ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் குறித்து அவசரப்பட்டு முடிவுகள் எதனையும் எடுக்காமல் இலங்கையில் உண்மையில் என்ன நடந்தது என்பது பற்றிய நியாயமான மதிப்பீடொன்றை ஏனைய நாடுகளும் மேற்கொள்ளுமென ஜனாதிபதி ராஜபத நம்பிக்கை வெளியிட்டார்.
விடுதலைப் புலிகளுக்காக குரல் கொடுத்த தமிழ் தேசியக் கூட்டமைப்பு, ஒரு போதும் தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்த்து வைக்க ஒத்துழைக்காது.
ஐக்கிய தேசியக் கட்சி, தமிழ் தேசியக் கூட்டமைப்பு, ஜே.வி.பி, மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் போன்ற கட்சிகள் இணைந்து தமிழீழத்திற்கான இரண்டாவது போரா ட்டத்தை முன்னெடுப்பதற்காக ஒன்றிணைந்து செயற்படு கின்றனர் என தேசிய சுதந்திர முன்னணி தெரிவித்துள்ளது.
விடுதலைப் புலிகளுக்காக குரல் கொடுத்த கூட்டமைப்பு, ஒரு போதும் தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்த்து வைக்க ஒத்துழைக்காது என்றும், தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு தமிழ் மக்களுக்கு தீர்வைப் பெற்றுக் கொடுக்கும் நிலைப்பாடு கிடையாது எனவும், அவர்கள் தேசிய பிரச்சினையை சுயநல அரசியலுக்காகவே பயன்படுத்துகின்றனர் எனவும், மறுபுறம் போலிக் குற்றச்சாட்டுக்களையும் விமர்சனங்களையும் முன் வைத்து நாட்டிற்கு எதிராகவும் செயற்படுகின்றனர் எனவும், தேசிய சுதந்திர முன்னணி தெரிவித்துள்ளது.
தேசிய சுதந்திர முன்னணியின் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற விஷேட செய்தியாளர் மாநாட்டின் போதே முன்னணியின் பேச்சாளர் முசம்மில் இதனைத் தெரிவித்தார். இவர் இங்கு உரையாற்றிய் கூறுகையில், தேசிய பிரச்சினைக்கு தீர்வு காணும் நோக்கில் அரசாங்கம் முன்னெடுக்கும் எந்தவொரு நடவடிக்கையிலும் கூட்டமைப்பு கலந்து கொள்வதில்லை. இறுதியாக அமைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற தெரிவுக்குழுவையும் புறக்கணித்துள்ளது. இவர்களுக்கு ஆதரவாக ஐ.தே.க., ஜே.வி.பி. மற்றும் முஸ்லிம் காங்கிரஸ் உள்ளிட்டோரும் செயற்படுகின்றனர்.
ஆகவே இவர்கள் தெரிவுக்குழுவில் கலந்து கொள்ளாவிடினும் அரசாங்கம் தீர்வுகளை ஏற்படுத்த பின்னிற்க கூடாது. தற்போது தெரிவுக் குழுவில் இடம்பெற்றுள்ள உறுப்பினர்களைக் கொண்டு முன்னோக்கிச் செல்ல வேண்டும். சுயநல அரசியல் வாதிகளுக்காக காத்திருக்க வேண்டியதில்லை. தமிழ் மக்களின் உரிமைகளைப் பற்றி பேசும் கூட்டமைப்பு வன்னியில் மக்கள் துன்பங்களை அனுபவிக்கையில் ஒரு போத்தல் தண்ணீரைக் கூட கொடுக்கவில்லை. அதனையும் இராணுவமே செய்தது எனவே இனியும் காலத்தைக் கடத்தாது அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழீழத்திற்கான இரண்டாவது போராட்டத்தை தோற்கடிக்க வேண்டும் எனக் அவர் மேலும் தெரிவித்தார்.
ஐக்கிய தேசியக் கட்சி, தமிழ் தேசியக் கூட்டமைப்பு, ஜே.வி.பி, மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் போன்ற கட்சிகள் இணைந்து தமிழீழத்திற்கான இரண்டாவது போரா ட்டத்தை முன்னெடுப்பதற்காக ஒன்றிணைந்து செயற்படு கின்றனர் என தேசிய சுதந்திர முன்னணி தெரிவித்துள்ளது.
விடுதலைப் புலிகளுக்காக குரல் கொடுத்த கூட்டமைப்பு, ஒரு போதும் தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்த்து வைக்க ஒத்துழைக்காது என்றும், தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு தமிழ் மக்களுக்கு தீர்வைப் பெற்றுக் கொடுக்கும் நிலைப்பாடு கிடையாது எனவும், அவர்கள் தேசிய பிரச்சினையை சுயநல அரசியலுக்காகவே பயன்படுத்துகின்றனர் எனவும், மறுபுறம் போலிக் குற்றச்சாட்டுக்களையும் விமர்சனங்களையும் முன் வைத்து நாட்டிற்கு எதிராகவும் செயற்படுகின்றனர் எனவும், தேசிய சுதந்திர முன்னணி தெரிவித்துள்ளது.
தேசிய சுதந்திர முன்னணியின் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற விஷேட செய்தியாளர் மாநாட்டின் போதே முன்னணியின் பேச்சாளர் முசம்மில் இதனைத் தெரிவித்தார். இவர் இங்கு உரையாற்றிய் கூறுகையில், தேசிய பிரச்சினைக்கு தீர்வு காணும் நோக்கில் அரசாங்கம் முன்னெடுக்கும் எந்தவொரு நடவடிக்கையிலும் கூட்டமைப்பு கலந்து கொள்வதில்லை. இறுதியாக அமைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற தெரிவுக்குழுவையும் புறக்கணித்துள்ளது. இவர்களுக்கு ஆதரவாக ஐ.தே.க., ஜே.வி.பி. மற்றும் முஸ்லிம் காங்கிரஸ் உள்ளிட்டோரும் செயற்படுகின்றனர்.
ஆகவே இவர்கள் தெரிவுக்குழுவில் கலந்து கொள்ளாவிடினும் அரசாங்கம் தீர்வுகளை ஏற்படுத்த பின்னிற்க கூடாது. தற்போது தெரிவுக் குழுவில் இடம்பெற்றுள்ள உறுப்பினர்களைக் கொண்டு முன்னோக்கிச் செல்ல வேண்டும். சுயநல அரசியல் வாதிகளுக்காக காத்திருக்க வேண்டியதில்லை. தமிழ் மக்களின் உரிமைகளைப் பற்றி பேசும் கூட்டமைப்பு வன்னியில் மக்கள் துன்பங்களை அனுபவிக்கையில் ஒரு போத்தல் தண்ணீரைக் கூட கொடுக்கவில்லை. அதனையும் இராணுவமே செய்தது எனவே இனியும் காலத்தைக் கடத்தாது அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழீழத்திற்கான இரண்டாவது போராட்டத்தை தோற்கடிக்க வேண்டும் எனக் அவர் மேலும் தெரிவித்தார்.
'பிரிவினை வாதம்' ஒன்றே தான் அனைத்துக்குமான தீர்வு என்பதனை கூட்டமைப் பினர் தமிழ் மக்களின் மனதில் திணிக்க முயற்சிக்கின்றனர்.
அரசியலமைப்பு மறுசீரமைப்பு தொடர்பாக ஒருதலைப் பட்சமான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதென அரசாங்கத்தை குற்றம் சுமத்தும் நோக்கிலேயே தமிழ் தேசியக் கூட்டமை ப்பினர் பாராளுமன்றத் தெரிவுக் குழுவுக்கு சமுகமளிக்காது பகிஷ்கரிப்பதாக வீடமைப்பு பொறியியல் மற்றும் நிர்மா ணத்துறை அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத் தெரிவுக்குழுவை ஓரங்கட்டுவதன் மூலம் "பிரிவினை வாதம்" ஒன்றே தான் அனைத்துக்குமான தீர்வு என்பதனை கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் அப்பாவி தமிழ் மக்களின் மனதில் திணிக்க முயற்சிக்கின்றனர்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பிக்கள் எத்தகைய தீர்மானத்தை முன்னெடுத்த போதிலும் பாராளுமன்றத் தெரிவுக்குழு திட்டமிட்டபடி கூடுவதில் எவ்வித மாற்றமுமில்லை எனவும் கூட்டமைப்பினர் தெரிவுக் குழுவில் பங்குபற்றி தமது கருத்துக்களை முன்வைக்காத விடத்து அரசாங்கத்துடன் பேசுவதற்கான சிறந்த சந்தர்ப்பத்தை நழுவவிடுகின்றது என்றே கூற வேண்டுமெனவும் அமைச்சர் விமல்தெரிவித்துள்ளார்.
அத்துடன் கூட்டமைப்பு எம்.பிக்கள் தமது கருத்து மற்றும் நிலைப்பாட்டினை தெரிவுக்குழுக்கு முன்வைக்காத வரை அரசாங்கத்தினால் அவர்களது நிலைப்பாட்டினை புரிந்து கொள்ள முடியாமல் போகும். அத்துடன் எதற்குமே தீர்வுகிட்டாது எனவும் குறிப்பிட்டார். அரசாங்கத்துடன் உரிய முறையில் பேச்சு நடத்தி எதற்கும் நிரந்தர தீர்வு காண்பதனை விடுத்து எதனையும் பிரச்சினைகளாக உருவாக்கி தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்வதே கூட்டமைப்பினரின் ஒரே விருப்பமாக இருக்கிறதெனவும் அமைச்சர் தெரிவித்தார்.
அரசியலமைப்பு மறுசீரமைப்பு தொடர்பாக ஒருதலைப் பட்சமான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதென அரசாங்கத்தை குற்றம் சுமத்தும் நோக்கிலேயே தமிழ் தேசியக் கூட்டமை ப்பினர் பாராளுமன்றத் தெரிவுக் குழுவுக்கு சமுகமளிக்காது பகிஷ்கரிப்பதாக வீடமைப்பு பொறியியல் மற்றும் நிர்மா ணத்துறை அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத் தெரிவுக்குழுவை ஓரங்கட்டுவதன் மூலம் "பிரிவினை வாதம்" ஒன்றே தான் அனைத்துக்குமான தீர்வு என்பதனை கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் அப்பாவி தமிழ் மக்களின் மனதில் திணிக்க முயற்சிக்கின்றனர்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பிக்கள் எத்தகைய தீர்மானத்தை முன்னெடுத்த போதிலும் பாராளுமன்றத் தெரிவுக்குழு திட்டமிட்டபடி கூடுவதில் எவ்வித மாற்றமுமில்லை எனவும் கூட்டமைப்பினர் தெரிவுக் குழுவில் பங்குபற்றி தமது கருத்துக்களை முன்வைக்காத விடத்து அரசாங்கத்துடன் பேசுவதற்கான சிறந்த சந்தர்ப்பத்தை நழுவவிடுகின்றது என்றே கூற வேண்டுமெனவும் அமைச்சர் விமல்தெரிவித்துள்ளார்.
அத்துடன் கூட்டமைப்பு எம்.பிக்கள் தமது கருத்து மற்றும் நிலைப்பாட்டினை தெரிவுக்குழுக்கு முன்வைக்காத வரை அரசாங்கத்தினால் அவர்களது நிலைப்பாட்டினை புரிந்து கொள்ள முடியாமல் போகும். அத்துடன் எதற்குமே தீர்வுகிட்டாது எனவும் குறிப்பிட்டார். அரசாங்கத்துடன் உரிய முறையில் பேச்சு நடத்தி எதற்கும் நிரந்தர தீர்வு காண்பதனை விடுத்து எதனையும் பிரச்சினைகளாக உருவாக்கி தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்வதே கூட்டமைப்பினரின் ஒரே விருப்பமாக இருக்கிறதெனவும் அமைச்சர் தெரிவித்தார்.
"தமிழ்க் கூட்டமைப்பு அப்பாவி தமிழ் மக்கள் மத்தியில் பிரிவினையை திணிக்கிறது"
எவர்வந்தாலும் வராவிட்டாலும், எத்தகைய அழுத்தங்கள் வந்தாலும், பாராளுமன்றத் தெரிவுக்குழு திட்டமிட்டபடி ஜுலை 09 ஆம் திகதி கூடுவது உறுதியென, குழுத் தலைவரும் சபை முதல்வருமான அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட எதிர்க் கட்சிகளும், சர்வதேசமும் எத்தகைய அழுத்தங்களைப் பிரயோகித்தாலும் அரசாங்கம் தனது நிலைப்பாட்டினை நடை முறைப்படுத்துவதிலிருந்து விலகாது எனவும், தமிழ்க் கூட்டமைப்பு பங்குபற்றப் போவதில்லையென அறிவித்திருக்கிறது அதுவொரு புதிய விடயமல்ல எனவும், அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.
அத்துடன், நாங்கள் அனைத்து கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்துள்ளோம். இதற்கு மேலதிகமாக எம்மால் எதனையும் செய்ய இயலாது எனவும், பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் தற்போது 19 உறுப்பினர்கள் அங்கம் வகிக்கின்றார்கள். தெரிவுக் குழுவுக்கென ஒரு பேரவையுண்டு. எனவே எதிர்க் கட்சிகளின் பிரதிநிதிகள் இதில் கலந்துகொள்ளாதவிடத்தும் கூட எமது செயற்பாடுகளை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்ல முடியுமெனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டார்.
தழ்க் கூட்டமைப்பு அப்பாவி தமிழ் மக்கள் மத்தியில் பிரிவினையை திணிக்கிறது. தெரிவுக் குழுவினை எதிர்க்கட்சி கள் பகிஷ்கரித்தாலும், பேரவையினை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்ல எம்மிடம் இருக்கும் 19 உறுப்பினர்களும் போதுமானவர்களாவர் எனவும் அமைச்சர் சுட்டிக் காட்டினார்.
ஐக்கிய தேசியக் கட்சி, ஜே. வி. பி. மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆகியன பாராளுமன்றத் தெரிவுக் குழுவினை பகிஷ்கரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
எவர்வந்தாலும் வராவிட்டாலும், எத்தகைய அழுத்தங்கள் வந்தாலும், பாராளுமன்றத் தெரிவுக்குழு திட்டமிட்டபடி ஜுலை 09 ஆம் திகதி கூடுவது உறுதியென, குழுத் தலைவரும் சபை முதல்வருமான அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட எதிர்க் கட்சிகளும், சர்வதேசமும் எத்தகைய அழுத்தங்களைப் பிரயோகித்தாலும் அரசாங்கம் தனது நிலைப்பாட்டினை நடை முறைப்படுத்துவதிலிருந்து விலகாது எனவும், தமிழ்க் கூட்டமைப்பு பங்குபற்றப் போவதில்லையென அறிவித்திருக்கிறது அதுவொரு புதிய விடயமல்ல எனவும், அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.
அத்துடன், நாங்கள் அனைத்து கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்துள்ளோம். இதற்கு மேலதிகமாக எம்மால் எதனையும் செய்ய இயலாது எனவும், பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் தற்போது 19 உறுப்பினர்கள் அங்கம் வகிக்கின்றார்கள். தெரிவுக் குழுவுக்கென ஒரு பேரவையுண்டு. எனவே எதிர்க் கட்சிகளின் பிரதிநிதிகள் இதில் கலந்துகொள்ளாதவிடத்தும் கூட எமது செயற்பாடுகளை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்ல முடியுமெனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டார்.
தழ்க் கூட்டமைப்பு அப்பாவி தமிழ் மக்கள் மத்தியில் பிரிவினையை திணிக்கிறது. தெரிவுக் குழுவினை எதிர்க்கட்சி கள் பகிஷ்கரித்தாலும், பேரவையினை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்ல எம்மிடம் இருக்கும் 19 உறுப்பினர்களும் போதுமானவர்களாவர் எனவும் அமைச்சர் சுட்டிக் காட்டினார்.
ஐக்கிய தேசியக் கட்சி, ஜே. வி. பி. மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆகியன பாராளுமன்றத் தெரிவுக் குழுவினை பகிஷ்கரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஏறாவூர் சமூக சேவைகளுக்கான பட்டதாரிகள் அமைப் பினர் தமது சமூக சேவைத் திட்டத்தற்கிணங்க இவ்வருடம் டிசம்பர் மாதத்தில் A/L பரீட்சைக்குத் தோற்றவுள்ள கலைப்பிரிவு மாணவர்களுக்கான இஸ்லாமிய நாகரீக கருத்தரங்கு ஒன்றை நேற்று ஏறாவூர் மட்/மம /அலிகார் தேசிய பாடசாலையின் கேட்போர் கூடத்தில் ஏற்பாடு செய்யப்பாடு செய்திருந்தது
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கௌரவ கிழக்குமாகாண சபை உறுப்பினர் சிப்லி பாறூக் அவர்கள் கலந்து கொண்டார் அத்துடன் இவ் இஸ்லாமிய நாகரீக கருத்தரங்கானது பிரபல ஆசிரியர் அஸ்ஸேஹ் MTM.றிஸ்வி(மஜீதி) அவர்களினால் நடாத்தப்பட்டதுடன், இக்கருத்தரங்கிற்கு ஏறாவூர் மாணவர்கள் மட்டுமன்றி காத்தான்குடி, ஓட்மாவடி மாணவர்களும் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
மேலும் A.இஸ்ஸதீன் (அதிபர்-அலிகார் தேசிய பாடசாலை), MAC. ஹிதாயத்துல்லாஹ், NM. நியாமத் பைஸல்(கணக்காளர்), D.அனஸ் (மேஜர்) ஆகியோர் கலந்து கொண்டனர்.
KSA. Ahmedh
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கௌரவ கிழக்குமாகாண சபை உறுப்பினர் சிப்லி பாறூக் அவர்கள் கலந்து கொண்டார் அத்துடன் இவ் இஸ்லாமிய நாகரீக கருத்தரங்கானது பிரபல ஆசிரியர் அஸ்ஸேஹ் MTM.றிஸ்வி(மஜீதி) அவர்களினால் நடாத்தப்பட்டதுடன், இக்கருத்தரங்கிற்கு ஏறாவூர் மாணவர்கள் மட்டுமன்றி காத்தான்குடி, ஓட்மாவடி மாணவர்களும் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
மேலும் A.இஸ்ஸதீன் (அதிபர்-அலிகார் தேசிய பாடசாலை), MAC. ஹிதாயத்துல்லாஹ், NM. நியாமத் பைஸல்(கணக்காளர்), D.அனஸ் (மேஜர்) ஆகியோர் கலந்து கொண்டனர்.
KSA. Ahmedh
இலங்கையின் தென்பகுதியைச்சேர்ந்த ராணுவவீரர் ஒருவர் முல்லைத்தீவைச்சேர்ந்த தமிழ் யுவதி ஒருவரை திருமணம் செய்துள்ள சம்பவம் ஒன்று வவுனியாவில் இன்று இடம்பெற்றுள்ளது
முல்லைத்தீவில் உள்ள இராணுவத்தின் 23வது படைப்பிரிவைச்சேர்ந்த கோப்ரல் சிறிமல் பிரசங்க குமார(22) என்ற படைவீரரும் முல்லைத்தீவு முள்ளியவளையைசேர்ந்த மேரி தெரேசா(20) எனும் தமிழ் யுவதியுமே இவ்வாறு திருமண பந்தத்தில் இணைந்துள்ளனர்
இவ்விருவருக்குமிடையே மலர்ந்த காதலை அடுத்தே இந்த திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதொன்றாகும்.
முல்லைத்தீவில் உள்ள இராணுவத்தின் 23வது படைப்பிரிவைச்சேர்ந்த கோப்ரல் சிறிமல் பிரசங்க குமார(22) என்ற படைவீரரும் முல்லைத்தீவு முள்ளியவளையைசேர்ந்த மேரி தெரேசா(20) எனும் தமிழ் யுவதியுமே இவ்வாறு திருமண பந்தத்தில் இணைந்துள்ளனர்
இவ்விருவருக்குமிடையே மலர்ந்த காதலை அடுத்தே இந்த திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதொன்றாகும்.
அரசாங்கத்துக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசுக்குமிடை யிலுள்ள உறவு தொடர்பாக உறுதியான ஒரு தீர்மானத்தை எடுக்கவேண்டிய காலகட்டத்தில் இருந்து கொண்டிருக்கின் றோம் என அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தவிசாளருமான பசீர் சேகுதாவூத் தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அரசியல் அதியுயர் பீடக் கூட்டம் சனிக்கிழமை மாலை கட்சியின் தலைமையக மான தாறுஸ்ஸலாமில் நடைபெற்ற போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
இங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அமைச்சர் பசீர், அரசாங்கத்துக்கும் முஸ்லிம் காங்கிரஸுக்கும் இடையிலான முரண்பாடுகள் ஆழமாகி விட்டன எனவும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அரசு உறவு தொடர்பாக உறுதியான தீர்மானத்தை எடுக்கும் கால கட்டம் இதுவாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் இருந்தால் உறுதியாக அரசாங்கத்தோடு இருக்க முடியாது. அரசாங்கத்தோடு இருந்தால் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் உறுதியா இருக்க முடியாது. முஸ்லிம் காங்கிரஸுடனும் அரசாங்கத்தோடும் ஒன்றாக இருந்தால் அரசின் பங்காளிக்கட்சி என்ற அடிப்படையில் முஸ்லிம் மக்களின் எதிர்பார்ப்புகளையும், தேவைகளையும் நிறைவேற்ற முடியாது இது தான் நான் கண்ட அனுபவமாகும்' என்றும் அவர் குறிப்பிட்டார்.
மூன்று மாகாணசபை தேர்தல்கள் நடைபெறப் போகின்றன. விஷேடமாக வடமாகாண சபை தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனித்து போட்டியிடுவதென்றால் அரசிலிருந்து வெளியேறி விட்டு தனித்து போட்டி யிடுவதே இன்றைய காலத்துக்கு பொருத்தமானதாகும். இவ்வாறில்லாமல் அரசுக்குள் இருந்து கொண்டு தனித்து போட்டியிட்டால் அரசுக்கு குழி பறிக்கும் ஒரு கட்சியாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை அரசு பார்க்கும்.
இதனால், அரசுக்கும் முஸ்லிம் காங்கிரசுக்கும் உள்ள இடைவெளி இன்னும் அகலமும் ஆழமுமாகிவிடும். இதனால் கட்சிக்கும் கட்சி தொண்டர்களுக்கும் ஆபத்துக்கள் ஏற்படாலம் என்ற அச்சமும் எனக்குள் இருக்கின்றது. இது என்னுடைய அரசியல் பார்வையாகும். எல்லோரும் அரசாங்கத்திருந்து வெளியேறுவோம் என்றால் நானும் வெளியேறுவதற்கு தயாரக இருக்கின்றேன்' என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
அரசாங்கத்தோடு இருந்தால் முஸ்லிம் காங்கிரஸில் இருக்க முடியாது. அரசிலும் முஸ்லிம் காங்கிரஸிலும் இருந்தால் முஸ்லிம் மக்களின் தேவைகள் எதையும் செய்யமுடியாது. இது தான் நான் கண்ட அனுபவமாகும். வட மாகாண சபை தேர்தலை மாத்திரம் கொண்டு நான் இதை பேசவில்லை. தற்போது ஏற்பட்டுள்ள புதிய சூழ்நிலையை அடிப்படையாக கொண்டு பேசுகின்றேன். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும் அரசாங்கமும் ஒன்றாக இருந்தாலும் கூட முஸ்லிம் காங்கிரஸ் அரசுடன் இருப்பதா இல்லையா என்ற தீர்மானத்தை முஸ்லிம் காங்கிரஸே எடுக்க வேண்டுமே தவிர அரசு இத்தீர்மானத்தை எடுக்க முடியாது.
ஏனென்றால் அரசு இது தொடர்பாக எடுக்கம் தீர்மானம் முஸ்லிம் காங்கிரசை துரத்துகின்ற அடிப்டையில் அமையும் இருக்கும். இது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸினதும் அதன் போராளிகளினதும் தலைமைத்துவத்தினதும் தன்மான த்திற்கும் கௌரவத்திற்கும் கேடான விடயமாகும் என அவர் இங்கு மேலும் தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அரசியல் அதியுயர் பீடக் கூட்டம் சனிக்கிழமை மாலை கட்சியின் தலைமையக மான தாறுஸ்ஸலாமில் நடைபெற்ற போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
இங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அமைச்சர் பசீர், அரசாங்கத்துக்கும் முஸ்லிம் காங்கிரஸுக்கும் இடையிலான முரண்பாடுகள் ஆழமாகி விட்டன எனவும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அரசு உறவு தொடர்பாக உறுதியான தீர்மானத்தை எடுக்கும் கால கட்டம் இதுவாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் இருந்தால் உறுதியாக அரசாங்கத்தோடு இருக்க முடியாது. அரசாங்கத்தோடு இருந்தால் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் உறுதியா இருக்க முடியாது. முஸ்லிம் காங்கிரஸுடனும் அரசாங்கத்தோடும் ஒன்றாக இருந்தால் அரசின் பங்காளிக்கட்சி என்ற அடிப்படையில் முஸ்லிம் மக்களின் எதிர்பார்ப்புகளையும், தேவைகளையும் நிறைவேற்ற முடியாது இது தான் நான் கண்ட அனுபவமாகும்' என்றும் அவர் குறிப்பிட்டார்.
மூன்று மாகாணசபை தேர்தல்கள் நடைபெறப் போகின்றன. விஷேடமாக வடமாகாண சபை தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனித்து போட்டியிடுவதென்றால் அரசிலிருந்து வெளியேறி விட்டு தனித்து போட்டி யிடுவதே இன்றைய காலத்துக்கு பொருத்தமானதாகும். இவ்வாறில்லாமல் அரசுக்குள் இருந்து கொண்டு தனித்து போட்டியிட்டால் அரசுக்கு குழி பறிக்கும் ஒரு கட்சியாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை அரசு பார்க்கும்.
இதனால், அரசுக்கும் முஸ்லிம் காங்கிரசுக்கும் உள்ள இடைவெளி இன்னும் அகலமும் ஆழமுமாகிவிடும். இதனால் கட்சிக்கும் கட்சி தொண்டர்களுக்கும் ஆபத்துக்கள் ஏற்படாலம் என்ற அச்சமும் எனக்குள் இருக்கின்றது. இது என்னுடைய அரசியல் பார்வையாகும். எல்லோரும் அரசாங்கத்திருந்து வெளியேறுவோம் என்றால் நானும் வெளியேறுவதற்கு தயாரக இருக்கின்றேன்' என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
அரசாங்கத்தோடு இருந்தால் முஸ்லிம் காங்கிரஸில் இருக்க முடியாது. அரசிலும் முஸ்லிம் காங்கிரஸிலும் இருந்தால் முஸ்லிம் மக்களின் தேவைகள் எதையும் செய்யமுடியாது. இது தான் நான் கண்ட அனுபவமாகும். வட மாகாண சபை தேர்தலை மாத்திரம் கொண்டு நான் இதை பேசவில்லை. தற்போது ஏற்பட்டுள்ள புதிய சூழ்நிலையை அடிப்படையாக கொண்டு பேசுகின்றேன். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும் அரசாங்கமும் ஒன்றாக இருந்தாலும் கூட முஸ்லிம் காங்கிரஸ் அரசுடன் இருப்பதா இல்லையா என்ற தீர்மானத்தை முஸ்லிம் காங்கிரஸே எடுக்க வேண்டுமே தவிர அரசு இத்தீர்மானத்தை எடுக்க முடியாது.
ஏனென்றால் அரசு இது தொடர்பாக எடுக்கம் தீர்மானம் முஸ்லிம் காங்கிரசை துரத்துகின்ற அடிப்டையில் அமையும் இருக்கும். இது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸினதும் அதன் போராளிகளினதும் தலைமைத்துவத்தினதும் தன்மான த்திற்கும் கௌரவத்திற்கும் கேடான விடயமாகும் என அவர் இங்கு மேலும் தெரிவித்தார்.
ஜக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பின் வடமாகாண தேர்தல் விஞ்ஞாபனத்தை தயார் செய்கின்ற முயற்சியில் தாம் முழுமூச்சாக ஈடுபட்டிருப்பதென எல்.ரீ.ரீ.ஈ ன் முன்னாள் ஊடகப்பேச்சாளர் தயா மாஸ்ரர் தெரிவித் துள்ளதாக கொழும்பில் இருந்து வெளிவரும் பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது!!
வடக்கிலுள்ள பிரச்சனைகளை எவ்வாறு தீர்ப்பதென்பது தொடர்பாக ஜக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு ஏற்கனவே ஆராய்ந்து வைத்துள்ளதாகவும் அதுவும் அவ்விஞ்ஞாபனத்தில் இடம்பெறும் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளதாகவும், தழிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கு எதிராக தாம் நிச்சயம் இத்தேர்தலில் நிற்பது உறுதி என்று அவர் தெரிவித்துள்ளதாக அச்செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
வடக்கிலுள்ள பிரச்சனைகளை எவ்வாறு தீர்ப்பதென்பது தொடர்பாக ஜக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு ஏற்கனவே ஆராய்ந்து வைத்துள்ளதாகவும் அதுவும் அவ்விஞ்ஞாபனத்தில் இடம்பெறும் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளதாகவும், தழிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கு எதிராக தாம் நிச்சயம் இத்தேர்தலில் நிற்பது உறுதி என்று அவர் தெரிவித்துள்ளதாக அச்செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் பொலிஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் உமா மகேஸ்வரி. இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு கோவை மாவட்ட நீதிபதி, பல்லடம், குன்னூர் பொலிஸ் துணை சூப்பிரண்டுகள் ஆகியோரிடம் புகார் மனுக்கள் கொடுத்தார்.
அதில் கூறியிருப்பதாவது:-
வக்கீலாக பணியாற்றிய தங்கராஜ் என்பவர் என்னைக் காதலித்தார். என்னை திருமணம் செய்து கொள்கிறேன் என்றார். நானும் அதனை நம்பி அவரை காதலித்தேன். இந்த நிலையில் அவருக்கு மாஜிஸ்திரேட்டாக பதவி உயர்வு கிடைத்தது.
தற்போது அவர் குன்னூரில் உள்ள கோர்ட்டில் பணியாற்றி வருகிறார். பதவி உயர்வு கிடைத்ததும் என்னை திருமணம் செய்ய மறுக்கிறார். அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன் என்று குறிப்பிட்டிருந்தார். இந்த புகார் மனு மீது நடவடிக்கை மேற்கொள்வதற்காக பல்லடம் பொலிஸ் துணை சூப்பிரண்டு சுரேஷ் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
விசாரணையில், மாஜிஸ்திரேட்டு தங்கராஜூக்கு கடந்த சில தினங்களுக்கு முன் திருமணம் நடந்ததும், தற்போது நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் இருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து பொலிஸார் அங்கு விரைந்து சென்று தங்கராஜை அவினாசி பொலிஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரித்தனர்.
நீண்ட விசாரணைக்குப் பிறகு தங்கராஜை கைது செய்து திருப்பூர் குற்றவியல் நீதித்துறை நடுவர் முன்பு ஆஜர்படுத்தினர். அப்போது, தங்கராஜை 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். முன் அனுமதியின்றி நீதிபதியை கைது செய்திருப்பது உச்சநீதிமன்ற தீர்ப்பை அவமதிப்பதாகும் என்று முன்னாள் நிதிபதிகள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.
அதில் கூறியிருப்பதாவது:-
வக்கீலாக பணியாற்றிய தங்கராஜ் என்பவர் என்னைக் காதலித்தார். என்னை திருமணம் செய்து கொள்கிறேன் என்றார். நானும் அதனை நம்பி அவரை காதலித்தேன். இந்த நிலையில் அவருக்கு மாஜிஸ்திரேட்டாக பதவி உயர்வு கிடைத்தது.
தற்போது அவர் குன்னூரில் உள்ள கோர்ட்டில் பணியாற்றி வருகிறார். பதவி உயர்வு கிடைத்ததும் என்னை திருமணம் செய்ய மறுக்கிறார். அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன் என்று குறிப்பிட்டிருந்தார். இந்த புகார் மனு மீது நடவடிக்கை மேற்கொள்வதற்காக பல்லடம் பொலிஸ் துணை சூப்பிரண்டு சுரேஷ் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
விசாரணையில், மாஜிஸ்திரேட்டு தங்கராஜூக்கு கடந்த சில தினங்களுக்கு முன் திருமணம் நடந்ததும், தற்போது நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் இருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து பொலிஸார் அங்கு விரைந்து சென்று தங்கராஜை அவினாசி பொலிஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரித்தனர்.
நீண்ட விசாரணைக்குப் பிறகு தங்கராஜை கைது செய்து திருப்பூர் குற்றவியல் நீதித்துறை நடுவர் முன்பு ஆஜர்படுத்தினர். அப்போது, தங்கராஜை 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். முன் அனுமதியின்றி நீதிபதியை கைது செய்திருப்பது உச்சநீதிமன்ற தீர்ப்பை அவமதிப்பதாகும் என்று முன்னாள் நிதிபதிகள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.
சீதுவ பிரதேச பாடசாலை அதிபர் ஒருவர் ரன்டம்பே மாணவர் படையணி பயிற்சி முகாமில் இடம்பெற்ற இராணுவ பயிற்சியின் போது உயிரிழந்துள்ளதாக ஆசிரியர் சங்கம் தெரிவித்தது. 52 வயதான இவர், இன்று ஞாயிற்றுக்கிழமை காலை உயிரிழந்துள்ளதாக அச்சங்கம் குறிப்பிட்டது.
உடற் தகுதி பயிற்சி செயலமர்வில் கலந்துகொண்டிருந்தபோதே குறித்த அதிபர் உயிரிழந்ததாக ஆசிரியர் சங்கம் மேலும் தெரிவித்தது.
உடற் தகுதி பயிற்சி செயலமர்வில் கலந்துகொண்டிருந்தபோதே குறித்த அதிபர் உயிரிழந்ததாக ஆசிரியர் சங்கம் மேலும் தெரிவித்தது.
நடைபெறவுள்ள வடக்கு, வட மேல் மற்றும் மத்திய மாகாண சபைகளுக்கான தேர்தல்களில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனித்து போட்டியிடும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் கண்டியில் இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றில் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்துடன் இணைந்த கட்சியாக இருந்தாலும் அதன் தனித்துவம் பாதுகாக்கப்படும் எனவும், இதனால் தேர்தல்களில் தனித்து போட்டியிடுவதும் வேட்பாளர்களை தெரிவு செய்வதும் கட்சியின் தனித்துவமாகும் என அவர் தெரிவித்தார்.
இருப்பினும் சில வேளைகளில் இந்த தீர்மானத்தில் மாற்றங்கள் ஏற்பாடலாம் எனவும், அமைச்சர் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்துடன் இணைந்த கட்சியாக இருந்தாலும் அதன் தனித்துவம் பாதுகாக்கப்படும் எனவும், இதனால் தேர்தல்களில் தனித்து போட்டியிடுவதும் வேட்பாளர்களை தெரிவு செய்வதும் கட்சியின் தனித்துவமாகும் என அவர் தெரிவித்தார்.
இருப்பினும் சில வேளைகளில் இந்த தீர்மானத்தில் மாற்றங்கள் ஏற்பாடலாம் எனவும், அமைச்சர் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
'அவளின் கதைகள்' என்ற தொனிப்பொருளில் யுத்தத்தினால் பதிக்கப்பட்டு வடக்கிலும் தெற்கிலும் வாழ்ந்து வரும் தமிழ், முஸ்லிம், சிங்களத் தாய்மார்களின் வாய்மூலக் கதையாடல்களின் கண்காட்சி நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது..
யுத்தத்தின் பாதிப்புக்களினால் சில குடும்பங்கள் எதிர்கொண்டுள்ள துன்பங்களையும் சவாலையும் மையமாக கொண்டு இந்த கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது
'விழுது' ஆற்றல் மேம்பாட்டு மையமும் சர்வதேச இனத்துவக் கற்கை நிலையமும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த இந்த கண்காடசியை பெருமளவான மக்கள் பார்வையிட்டுள்ளனர்.
யுத்தத்தின் பாதிப்புக்களினால் சில குடும்பங்கள் எதிர்கொண்டுள்ள துன்பங்களையும் சவாலையும் மையமாக கொண்டு இந்த கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது
'விழுது' ஆற்றல் மேம்பாட்டு மையமும் சர்வதேச இனத்துவக் கற்கை நிலையமும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த இந்த கண்காடசியை பெருமளவான மக்கள் பார்வையிட்டுள்ளனர்.
மக்கள் தொடர்பாடல் அமைச்சர் மர்வின் சில்வா மருந்தாக சிறுநீர் அருந்துகின்றார் என்று ஊடகங்களில் வெளியான செய்தி தொடர்பில் மர்வின் சில்வா கருத்துரைக்கிறார்.
அது முற்று முழுதாக பொய்ச் செய்தி என்கிறார் அவர்.
‘எனக்கு எதிரானவர்கள் சோடித்திருக்கின்ற பொய்க் கதை அது. அதற்காக நான் கோபப்படுவதில்லை.
யாரேனும் ஒருவர் என்னைப் பற்றி பொய்க் கதை சோடித்து, அதன் மூலம் ஆனந்தமடைவதாயின் பௌத்தன் என்ற முறையில் நான் மகிழ்ச்சியடைவேன். அது நான் செய்த நன்மையே!
நான் ஏன் மருந்தாக மூத்திரத்தைக் குடிக்க வேண்டும். இது முழுமையாக சோடிக்கப்பட்ட பொய்க்கதை’ என்றும் அமைச்சர் தெளிவுறுத்துகின்றார்.
(கேஎப்)
அது முற்று முழுதாக பொய்ச் செய்தி என்கிறார் அவர்.
‘எனக்கு எதிரானவர்கள் சோடித்திருக்கின்ற பொய்க் கதை அது. அதற்காக நான் கோபப்படுவதில்லை.
யாரேனும் ஒருவர் என்னைப் பற்றி பொய்க் கதை சோடித்து, அதன் மூலம் ஆனந்தமடைவதாயின் பௌத்தன் என்ற முறையில் நான் மகிழ்ச்சியடைவேன். அது நான் செய்த நன்மையே!
நான் ஏன் மருந்தாக மூத்திரத்தைக் குடிக்க வேண்டும். இது முழுமையாக சோடிக்கப்பட்ட பொய்க்கதை’ என்றும் அமைச்சர் தெளிவுறுத்துகின்றார்.
(கேஎப்)
வடமாகாண கல்வித்திணைக்களத்தின் ஏற்பாட்டில் தமிழ் மொழித் தினவிழா அண்மையில் யாழ் இந்து மகளீர்க் கல்லூரியில் வடமாகாண கல்விப்பணிப்பாளர் வ.செல்வராசா தலைமையில் நடைபெற்றது இந்த விழாவில் பிரதம அதீதியாக வடமாகாண ஆளுனர் ஜீ.ஏ.சந்திரசிறி கலந்துகொண்டு சிறப்பித்தார்.
தமிழ்மொழித்தின விழாவை முன்னிட்டு கவின் தமிழ் என்ற நூல் ஒன்றும் வெளியிட்டு வைக்கப்பட்டதுடன் மாகாண மட்டத்தில் நடைபெற்ற தமிழ் தினப்போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கான சான்றிதழ்களும் பரிசில்களும் இதன்போது வழங்கி வைக்கப்பட்டதுடன் மேலும் பல்வேறு கலை நிகழ்வுகளும் இங்கு நடைபெற்றது.
தமிழ்மொழித்தின விழாவை முன்னிட்டு கவின் தமிழ் என்ற நூல் ஒன்றும் வெளியிட்டு வைக்கப்பட்டதுடன் மாகாண மட்டத்தில் நடைபெற்ற தமிழ் தினப்போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கான சான்றிதழ்களும் பரிசில்களும் இதன்போது வழங்கி வைக்கப்பட்டதுடன் மேலும் பல்வேறு கலை நிகழ்வுகளும் இங்கு நடைபெற்றது.
பல்கலைக்கழகங்களுக்கு அனுமதிக்கும் பொருட்டு ஆகஸ்ட் 2012 நடைபெற்ற க.பொ.த. (உயர் தர ) பரீட்சையில் ஆகக்குறைந்த தேவைகளை பூர்த்தி செய்துள்ள பரீட்சார்த்திகள் அனைவரும் இதற்கு விண்ணப்பிக்க முடியும். மேலும் அங்கீகரிக்கப்பட்ட பாடங்கள் மூன்றிலும் சாதாரண சித்தி (s) பெற்றிருத்தலுடன் பொதுசாதாரண வினாத்தாளில் ஆகக் குறைந்தது 30% புள்ளிகளை விண்ணப்பிக்கும் பரீட்சார்த்திகள் குறைந்த பட்ச தேவையாக பூர்த்தி செய்திருத்தல் வேண்டும்.
குறித்த விண்ணப்பபடிவத்துடனான கைநூலை பெற ரூபா 500 யினை செலுத்துவதுடன் கைநூலை தபால் மூலம் பெற விரும்புகிறவர்கள் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுச் செயலகம், இல 20 வாட் பிளேஸ் கொழும்பு -7 அல்லது பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் நியமிக்கப்பட்ட விநியோக முகவர்களிடமிருந்தோ பணம் செலுத்துவதன் மூலம் 30-6-2013 ஆம் திகதியில் இருந்து பெற்றுக் கொள்ள முடியும்.
விண்ணப்பங்களை கையளிப்பதற்கான முடிவுத்திகதி 23-7-2013 ஆகும்.
பூரணப்படுத்தப்பட்ட விண்ணப்ப படிவங்களை ,
மேலதிக செயலாளர்(கல்வி அலுவல்கள் மற்றும் பல்கலைக்கழக அனுமதிகள் )
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு
இல 20 வாட் பிளேஸ் கொழும்பு -7 இல்
நேரிலோ அல்லது முகவரி இட்டு பதிவுத்தபாலில் அனுப்பி வைக்கலாம்.
மேலும் 23-7-2013 திகதிக்கு பின் விண்ணப்பங்கள் எதுவும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது எனவும் தெரிவித்துள்ளது.
(பாறூக் சிகான்).
குறித்த விண்ணப்பபடிவத்துடனான கைநூலை பெற ரூபா 500 யினை செலுத்துவதுடன் கைநூலை தபால் மூலம் பெற விரும்புகிறவர்கள் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுச் செயலகம், இல 20 வாட் பிளேஸ் கொழும்பு -7 அல்லது பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் நியமிக்கப்பட்ட விநியோக முகவர்களிடமிருந்தோ பணம் செலுத்துவதன் மூலம் 30-6-2013 ஆம் திகதியில் இருந்து பெற்றுக் கொள்ள முடியும்.
விண்ணப்பங்களை கையளிப்பதற்கான முடிவுத்திகதி 23-7-2013 ஆகும்.
பூரணப்படுத்தப்பட்ட விண்ணப்ப படிவங்களை ,
மேலதிக செயலாளர்(கல்வி அலுவல்கள் மற்றும் பல்கலைக்கழக அனுமதிகள் )
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு
இல 20 வாட் பிளேஸ் கொழும்பு -7 இல்
நேரிலோ அல்லது முகவரி இட்டு பதிவுத்தபாலில் அனுப்பி வைக்கலாம்.
மேலும் 23-7-2013 திகதிக்கு பின் விண்ணப்பங்கள் எதுவும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது எனவும் தெரிவித்துள்ளது.
(பாறூக் சிகான்).
இன, மத வேறுபாடின்றி சிங்கள துறைசார் விசேட வைத்தியர்கள் உள்ளிட்ட சிற்றூழியர்கள் வரை முஸ்லிம் பெண்கள் இரட்டைக் குழந்தைகள் பெற்றெடுப்பதற்கும், நான்கு ஐந்து பிள்ளைகளைப் பெற்றெடுப்பதற்கும் பல்வேறு உதவிகளைப் புரிகின்ற போதும், சிங்களப் பெண்கள் குழந்தைப் பேற்றுக்காக வைத்தியசாலைக்கு வருகை தந்தால் அவர்களுக்கு அன்பு கலந்த கவனிப்பு வழங்கப்படுவதில்லை என ஜாதிக ஹெல உறுமயவின் கண்டி மாவட்ட அமைப்பாளர் துஷார சுவர்ணதிலக குறிப்பிட்டார்.
மத்திய மாகாண சபையின் பல்லேகல தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
கண்டி பெரியாஸ்பத்திரியில் முஸ்லிம் பெண்ணொருத்தி ஐந்து குழந்தைகளைப் பெற்றெடுத்தபோது, அந்தப் பெண்ணுக்கு அறுவைச் சிகிச்சை முதலானவை சிங்கள துறைசார் விசேட நரம்பியல் வைத்தியர் ஒருவரினாலும், இளம் சிங்கள வைத்தியர்களினால் குழுவினராலுமே செய்யப்பட்டது எனக் குறிப்பிட்ட துஷார சுவர்ணதிலக, சிங்களவர்கள் ஒருபோதும் இனவாதிகளாக செயற்பட மாட்டார்கள் எனவும் குறிப்பிட்டார்.
ஐந்து குழந்தைகளின் தாய் ஓர் உதாரணம் மட்டுமே என்று குறிப்பிட்ட துஷார, பேராதனை வைத்தியசாலைக்கு குழந்தைப் பேற்றுக்காகச் செல்லக்கூடிய சிங்களப் பெண்கள் முஸ்லிம் வைத்தியர்களால் சரிவரக் கவனிக்கப்படுவதில்லை. அவர்கள் விரும்பாமலேயே அவர்களுக்கு சில அறுவைச் சிகிச்சைகள் செய்யப்படுகின்றன என்றும் குறிப்பிட்டார்.
இரு வாரங்களுக்கு முன்னர் பேராதனை வைத்தியசாலையில் அவ்வாறானதொரு சிகிச்சையும், கர்ப்பிணித் தாயொருவர் தாக்கப்பட்டமையும் குறித்து விசாரணை நடாத்தப்பட்டு அறிக்கை சமர்ப்பிக்குமாறு பணிக்கப்பட்ட கண்டி பெரியாஸ்பத்திரியின் பணிப்பாளர் இதுவரை அறிக்கை சமர்ப்பிக்கவில்லை எனவும் சுவர்ணதிலக குறிப்பிட்டார்.
நாளை (01) ஓய்வுபெறவுள்ள கண்டி பெரியாஸ்பத்திரியின் பணிப்பாளர் இன்றேனும் அந்த அறிக்கையை சமர்ப்பிக்காதுவிட்டால், அவருக்கெதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டிவரும் எனவும் சுவர்ணதிலக குறிப்பிட்டார்.
-திவயின(கேஎப்)
மத்திய மாகாண சபையின் பல்லேகல தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
கண்டி பெரியாஸ்பத்திரியில் முஸ்லிம் பெண்ணொருத்தி ஐந்து குழந்தைகளைப் பெற்றெடுத்தபோது, அந்தப் பெண்ணுக்கு அறுவைச் சிகிச்சை முதலானவை சிங்கள துறைசார் விசேட நரம்பியல் வைத்தியர் ஒருவரினாலும், இளம் சிங்கள வைத்தியர்களினால் குழுவினராலுமே செய்யப்பட்டது எனக் குறிப்பிட்ட துஷார சுவர்ணதிலக, சிங்களவர்கள் ஒருபோதும் இனவாதிகளாக செயற்பட மாட்டார்கள் எனவும் குறிப்பிட்டார்.
ஐந்து குழந்தைகளின் தாய் ஓர் உதாரணம் மட்டுமே என்று குறிப்பிட்ட துஷார, பேராதனை வைத்தியசாலைக்கு குழந்தைப் பேற்றுக்காகச் செல்லக்கூடிய சிங்களப் பெண்கள் முஸ்லிம் வைத்தியர்களால் சரிவரக் கவனிக்கப்படுவதில்லை. அவர்கள் விரும்பாமலேயே அவர்களுக்கு சில அறுவைச் சிகிச்சைகள் செய்யப்படுகின்றன என்றும் குறிப்பிட்டார்.
இரு வாரங்களுக்கு முன்னர் பேராதனை வைத்தியசாலையில் அவ்வாறானதொரு சிகிச்சையும், கர்ப்பிணித் தாயொருவர் தாக்கப்பட்டமையும் குறித்து விசாரணை நடாத்தப்பட்டு அறிக்கை சமர்ப்பிக்குமாறு பணிக்கப்பட்ட கண்டி பெரியாஸ்பத்திரியின் பணிப்பாளர் இதுவரை அறிக்கை சமர்ப்பிக்கவில்லை எனவும் சுவர்ணதிலக குறிப்பிட்டார்.
நாளை (01) ஓய்வுபெறவுள்ள கண்டி பெரியாஸ்பத்திரியின் பணிப்பாளர் இன்றேனும் அந்த அறிக்கையை சமர்ப்பிக்காதுவிட்டால், அவருக்கெதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டிவரும் எனவும் சுவர்ணதிலக குறிப்பிட்டார்.
-திவயின(கேஎப்)
எங்கட சனங்கள் என்ன பாவம் செய்ததுகளோ தெரியாது முப்பது வருசமா அவங்கட பாடு!! இப்ப இவங்கட பாடு என்டு ஆகீற்று!! என்ன செய்றது எல்லாரும் பந்துபோல பயன்படுத்துறாங்கள் எங்கள!! யுத்தம் முடிஞ்சு இப்ப ஏதோ ஒரு வழயில மக்கள் தாங்களும் தங்கட பாடும் என்று இருக்கேக்க..இப்ப இந்த கூத்தமைப்பு படுத்துறபாடு மக்களை திரும்பவும் எங்கையோ கொண்டு போறதற்குத் தான் போல இருக்கு!
ஒரு விசயத்தில எனக்கு உடன்பாடு இல்லை பாருங்கோ உந்த இயக்கத்ததை அழிச்ச அரசாங்கத்ததை ஏதோ ஒரு எதிரிகாளாக தமிழ் மக்களுக்கு காட்டி தாங்கள் மக்களோடு இருக்கிறம் என்று சொல்லிக்கொண்டு ஓட்டுவாங்கிறதற்கு முயற்சிச்சுக்கொண்டு இருக்கினம்.
இருந்தாலும் தங்கட நாட்டு பிரதமரைக்கொன்றது புலிகள் தான் என்ட கடுப்பில் இந்த யுத்தத்தை நடத்திய இந்தியாவிடம் போய் தான் இவை எல்லா ஆலோசனையளயும் கேட்கீனம் பாருங்கோ!! அதிலையும் எங்கட மாவிட்ட புரத்து ஐயா எல்லோரையும் விட ஒரு படிமேல போய் இந்தியாவின்ர சம்மந்தி யாகிவிட்டார் என்று ஒரு கதையடிபடுது!! ம் ம் இருக்கட்டும் இருக்கட்டும்.
இதுபோக சுரேசண்ணர் அங்கேயே செந்தமா வீட்டயும் வாங்கி தன்ர குடும்பத்தையும் கூட்டிக்கொண்டு போய் அடிக்கிற கூத்துகள நினக்கேக்க அப்பப்பா முடியல! இப்படி முதுகில குத்திய இந்தியாவோட தாங்கள் கோடிப்பக்கத்தால சொந்தமும் கொண்டாடிக்கொண்டு இஞ்ச தாங்களை விட்ட தேசிய வாதிகள் இல்லை என்று மயக்கம் வரும் வரை பேசியும் தள்ளுகினம். இருந்தாலும் இவரையின்ர விளையாட்டுகளெல்லாம் மக்களுக்கு தெரியாமல் இல்லை
அரசியல் வாதிகள் எல்லோரும் இப்ப வியாபாரத்தில் இறங்கிவிட்டீனம் குறிப்பாக சாரயக் கடைபோடுறதிலை குறிபாக இருக்கீனம் ஒரு சிலருக்கு மட்டக்களப்பிலும் வவுனியாவில் சாரயக்கடையும் இருக்கென்டால் பாருங்கோவன். இதெல்லாம் என்ன மக்களின் நலன்சார்ந்த திட்டங்களா மக்களுக்கு தாங்கள் ஒன்றும் செய்ய மாட்டீனம் அரசாங்கம் செய்தால் அதையும் ஏதோ ஒரு பெரும் பிரச்சனையாக்கி காட்டுகினம் இவையளால ஒன்றும் கிழிக்க ஏலாது என்பது உண்மை. ஏன் இதை சொல்லுறன் என்டால் இந்த ஜெனீவாவில் போய் எல்லாரும் சேர்ந்து சொப்பீங் செய்தது தான் மிச்சம்.
இது இப்படி இருக்க கிளிநொச்சியில் இருக்கிற எங்கட கரும் சிறுத்தை இப்ப எப்பவுமே கறுப்போடுதான் திரியுது எல்லா இடத்திற்கு போனாலும் ஐயா கறுப்போடு தான் போறாராம்! கொஞ்ச காலத்திற்கு முன்னால் இவர் கக்கூசுக்கு போனாலும் அது யாழ்ப்பாணத்தில் உள்ள ஒரு உத்தமற்ற பேப்பர் ஒன்றில் தலைப்புச் செய்தியாய் வரும்!!! எப்ப இவற்றை ஆப்பீசில இருந்து கொஞ்ச வெடிமருந்தும் அவற்றை ஆணுறைகளும்(பாவம் ஜயா தன்ர பாதுகாப்புக்கு வச்சிருப்பார் போல) எடுத்தாங்களோ!!! அதுக்குப்பிறகுதான் இவர் செய்தாலும் செய்திருப்பார் என்று நினைச்சு இவரை இப்ப ஓரம்பட்டிப்போட்டிற்றினம் அந்தப்பேப்பர்கார புண்ணியவான்கள்!!! இருந்தாலும் ஒரேயடியாய் தூக்கி போடாமல் எதோ ஒரு பக்கத்தில போடுவம் என்று போட்டுக்கொண்டிருக்கீனம். அவரும் அதைப் பெரிசு படுத்தலபோல கிடக்கு ஏன் என்றால் அவரும் வின் ஒன்று கைவசம் வைத்திருக்கிறார் தானே அது இருக்கும் போது ஏன் யோசிப்பான் என்று முடிவெடுத்திட்டார் போல சரி பார்ப்பம் எப்படி போகுதென்று!
இவேலெல்லாம் ஒரு பக்கத்தால போட்டுக்குழப்பியடிச்சுக்கொண்டு இருக்க இஞ்சால ஒரு பக்கத்தால தமிழ்தேசிய!!! ஊடகவியலாளர்கள் எண்டு சொல்லிக்கொண்டு இவேலெல்லாருக்கும் வால் புடிச்சுக்கொண்டு கொஞ்சப் பொடியள் திரியினம்!! அந்தப்பொடியளுக்கு இந்த எம்பி மார் குசு விட்டாலும் அதுதான் செய்தி!! வேலவெட்டியள் இல்லாத நேரத்தில இந்த எம்பி மார ஒவ்வொருத்தரா கூப்பிட்டு கூப்பிட்டு பேட்டி எடுத்து பேப்பர்ல போடுறத தவிர வேற உருப்படியா ஒண்டும் செய்யமாட்டினம் இவயள் கேட்டால் இவங்கள்தான் தமிழ் மக்களின் பிரதிநிதிகள் எண்டு அவயளே சொல்லுகினம்!! பாவம் அந்தப்பொடியளுக்குத்தெரியாது! போல இந்த எம்பிமார் தங்கள தங்கட சுயலாபத்துக்குத்தான் பயன்படுத்துகினம் என்டு.. ம் ம் ம் பாப்பம் பாப்பம் என்னதான் நடக்குதெண்டு ஆனா ஒண்டு மட்டும் சொல்லுறன்ரா என்னதான் நீங்க ஆட்டம் போட்டாலும் எல்லாம் கொஞ்ச நாளைக்குத்தான்...
ஒரு விசயத்தில எனக்கு உடன்பாடு இல்லை பாருங்கோ உந்த இயக்கத்ததை அழிச்ச அரசாங்கத்ததை ஏதோ ஒரு எதிரிகாளாக தமிழ் மக்களுக்கு காட்டி தாங்கள் மக்களோடு இருக்கிறம் என்று சொல்லிக்கொண்டு ஓட்டுவாங்கிறதற்கு முயற்சிச்சுக்கொண்டு இருக்கினம்.
இருந்தாலும் தங்கட நாட்டு பிரதமரைக்கொன்றது புலிகள் தான் என்ட கடுப்பில் இந்த யுத்தத்தை நடத்திய இந்தியாவிடம் போய் தான் இவை எல்லா ஆலோசனையளயும் கேட்கீனம் பாருங்கோ!! அதிலையும் எங்கட மாவிட்ட புரத்து ஐயா எல்லோரையும் விட ஒரு படிமேல போய் இந்தியாவின்ர சம்மந்தி யாகிவிட்டார் என்று ஒரு கதையடிபடுது!! ம் ம் இருக்கட்டும் இருக்கட்டும்.
இதுபோக சுரேசண்ணர் அங்கேயே செந்தமா வீட்டயும் வாங்கி தன்ர குடும்பத்தையும் கூட்டிக்கொண்டு போய் அடிக்கிற கூத்துகள நினக்கேக்க அப்பப்பா முடியல! இப்படி முதுகில குத்திய இந்தியாவோட தாங்கள் கோடிப்பக்கத்தால சொந்தமும் கொண்டாடிக்கொண்டு இஞ்ச தாங்களை விட்ட தேசிய வாதிகள் இல்லை என்று மயக்கம் வரும் வரை பேசியும் தள்ளுகினம். இருந்தாலும் இவரையின்ர விளையாட்டுகளெல்லாம் மக்களுக்கு தெரியாமல் இல்லை
அரசியல் வாதிகள் எல்லோரும் இப்ப வியாபாரத்தில் இறங்கிவிட்டீனம் குறிப்பாக சாரயக் கடைபோடுறதிலை குறிபாக இருக்கீனம் ஒரு சிலருக்கு மட்டக்களப்பிலும் வவுனியாவில் சாரயக்கடையும் இருக்கென்டால் பாருங்கோவன். இதெல்லாம் என்ன மக்களின் நலன்சார்ந்த திட்டங்களா மக்களுக்கு தாங்கள் ஒன்றும் செய்ய மாட்டீனம் அரசாங்கம் செய்தால் அதையும் ஏதோ ஒரு பெரும் பிரச்சனையாக்கி காட்டுகினம் இவையளால ஒன்றும் கிழிக்க ஏலாது என்பது உண்மை. ஏன் இதை சொல்லுறன் என்டால் இந்த ஜெனீவாவில் போய் எல்லாரும் சேர்ந்து சொப்பீங் செய்தது தான் மிச்சம்.
இது இப்படி இருக்க கிளிநொச்சியில் இருக்கிற எங்கட கரும் சிறுத்தை இப்ப எப்பவுமே கறுப்போடுதான் திரியுது எல்லா இடத்திற்கு போனாலும் ஐயா கறுப்போடு தான் போறாராம்! கொஞ்ச காலத்திற்கு முன்னால் இவர் கக்கூசுக்கு போனாலும் அது யாழ்ப்பாணத்தில் உள்ள ஒரு உத்தமற்ற பேப்பர் ஒன்றில் தலைப்புச் செய்தியாய் வரும்!!! எப்ப இவற்றை ஆப்பீசில இருந்து கொஞ்ச வெடிமருந்தும் அவற்றை ஆணுறைகளும்(பாவம் ஜயா தன்ர பாதுகாப்புக்கு வச்சிருப்பார் போல) எடுத்தாங்களோ!!! அதுக்குப்பிறகுதான் இவர் செய்தாலும் செய்திருப்பார் என்று நினைச்சு இவரை இப்ப ஓரம்பட்டிப்போட்டிற்றினம் அந்தப்பேப்பர்கார புண்ணியவான்கள்!!! இருந்தாலும் ஒரேயடியாய் தூக்கி போடாமல் எதோ ஒரு பக்கத்தில போடுவம் என்று போட்டுக்கொண்டிருக்கீனம். அவரும் அதைப் பெரிசு படுத்தலபோல கிடக்கு ஏன் என்றால் அவரும் வின் ஒன்று கைவசம் வைத்திருக்கிறார் தானே அது இருக்கும் போது ஏன் யோசிப்பான் என்று முடிவெடுத்திட்டார் போல சரி பார்ப்பம் எப்படி போகுதென்று!
இவேலெல்லாம் ஒரு பக்கத்தால போட்டுக்குழப்பியடிச்சுக்கொண்டு இருக்க இஞ்சால ஒரு பக்கத்தால தமிழ்தேசிய!!! ஊடகவியலாளர்கள் எண்டு சொல்லிக்கொண்டு இவேலெல்லாருக்கும் வால் புடிச்சுக்கொண்டு கொஞ்சப் பொடியள் திரியினம்!! அந்தப்பொடியளுக்கு இந்த எம்பி மார் குசு விட்டாலும் அதுதான் செய்தி!! வேலவெட்டியள் இல்லாத நேரத்தில இந்த எம்பி மார ஒவ்வொருத்தரா கூப்பிட்டு கூப்பிட்டு பேட்டி எடுத்து பேப்பர்ல போடுறத தவிர வேற உருப்படியா ஒண்டும் செய்யமாட்டினம் இவயள் கேட்டால் இவங்கள்தான் தமிழ் மக்களின் பிரதிநிதிகள் எண்டு அவயளே சொல்லுகினம்!! பாவம் அந்தப்பொடியளுக்குத்தெரியாது! போல இந்த எம்பிமார் தங்கள தங்கட சுயலாபத்துக்குத்தான் பயன்படுத்துகினம் என்டு.. ம் ம் ம் பாப்பம் பாப்பம் என்னதான் நடக்குதெண்டு ஆனா ஒண்டு மட்டும் சொல்லுறன்ரா என்னதான் நீங்க ஆட்டம் போட்டாலும் எல்லாம் கொஞ்ச நாளைக்குத்தான்...
கடந்த இரு தினங்களுக்கு முன்னர் அசாத்சாலி கிழக்கு பிரதேசத்திற்கு வந்திருந்தார். அவருக்கு எதிராக கிழக்கில் முஸ்லிம்கள் பலத்த எதிர்ப்பினை தெரிவித்தனர். அவர் இவ்வாறு ஓட்ட மாவடிக்கு வந்திருந்தபோது, அவர் பேசுவதற்கு தயாராக இருந்த மண்டபத்தினை வழங்க அதன் நிர்வாகிகள் மறுப்பு தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதே நேரம் பிரதேச மக்கள் அசாத்சாலியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்திலும் இறங்கியிருந்தனர். அதன் புகைப்படங்கள் இங்கே.
இதே நேரம் பிரதேச மக்கள் அசாத்சாலியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்திலும் இறங்கியிருந்தனர். அதன் புகைப்படங்கள் இங்கே.
காதலைப்பற்றி பல மேதாவிகள் பல்வேறு கருத்துக்களை தெரிவித்துள்ளார்கள் "மாறவேண்டிய கட்டாயம் ஏற்படும் பொழுது மாறாதிருப்பதுதான் காதல்" என்று ஷேக்ஸ்பியரும், "என்றும் மாறாத காதல் பார்த்ததும் வருவதில்லை" என்று கிறிஸ்டோர் மார்லோவ்வும், "நம்மை இன்னொருவரிடம் கண்டுபிடிப்பதுதான் காதல்" என்று அலெக்ஸாண்டர் ஸ்மித்தும், 'காரணம் இல்லாமல் காதல் வருவதில்லை அந்தக் காரணம்தான் தெரிவதில்லை" என்று பாஸ்கலும், "கடுகளவு நம்பிக்கையே காதல் பிறப்பதற்குப் போதுமானது" என ஸ்டெந்தாலும், 'காதல் எங்கு இருக்கிறதோ அங்குதான் வாழ்க்கை இருக்கிறது' என மகாத்மா காந்தியும் தெரிவித்துள்ளார்.
ஆனால் தற்போது Facebook இல் கலக்கும் இன்றைய காதலின் நிலையை பற்றி இந்த குறும்படம் என்ன சொல்கின்றது என பார்கின்றீர்களா?
ஆனால் தற்போது Facebook இல் கலக்கும் இன்றைய காதலின் நிலையை பற்றி இந்த குறும்படம் என்ன சொல்கின்றது என பார்கின்றீர்களா?
உள்நாட்டில் இடம்பெயர்ந்தவர்கள் மற்றும் 2012 ஆம் ஆண்டு வாக்காளர் இடாப்பில் பெயர்களைப் பதிவு செய்யத் தவறியவர்களும் தம்மைப் பதிவு செய்வதற்கு நாளை மறுதினம் 2 ஆம் திகதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதுடன், மேன்முறையீட்டுக்கான காலம் ஜுலை 9 ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.
வடக்கு கிழக்கு மாகாணங்களிலிருந்து இடம்பெயர்ந்தவர்களும் 2012ம் ஆண்டிற்காக தமது பெயர்களை வாக்காளர் இடாப்பின் குறைநிரப்புப் பட்டியலில் உட்சேர்த்துக்கொள்வதற்காக விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான கால எல்லை 2013.06.28 ஆம் திகதியுடன் முடிவடைந்தது.
எனினும் இதற்கான விண்ணப்பப் படிவங்களை சமர்ப்பிப்பதற்கு தகைமை பெற்றுள்ளவர்களால் முன்வைக்கப்பட்ட வேண்டுகோள்கள் கருத்திலெடுக்கப்பட்டு விண்ணப்பப் படிவங்களை சமர்ப்பிப்பதற்கான கால எல்லை 2013 ஜூலை மாதம் 02 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாகவும் அதனைத் தொடர்ந்து அங்கீகரிக்கப்பட்ட இடாப்பில் பெயர் உள்ளடக்கப்படாதவர்களுக்கு மேன்முறையீடுகளை சமர்ப்பிப் பதற்காக வழங்கப்படுகின்ற கால எல்லை 2013 ஜூலை மாதம் 09 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் மற்றும் வன்னி தேர்தல் மாவட்டங்களுக்குரிய குறைநிரப்புப்பட்டியல்களின் பணிகள் நிறைவு செய்யப் பெற்றுள்ளதாகவும், அப்பட்டியல்கள் அலுவலக நேரங்களில் பொதுமக்களின் பரிசீலனைக்காக யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், வவுனியா மற்றும் முல்லைத்தீவு ஆகிய மாவட்ட தேர்தல்கள் அலுவல கங்களில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
வடக்கு கிழக்கு மாகாணங்களிலிருந்து இடம்பெயர்ந்தவர்களும் 2012ம் ஆண்டிற்காக தமது பெயர்களை வாக்காளர் இடாப்பின் குறைநிரப்புப் பட்டியலில் உட்சேர்த்துக்கொள்வதற்காக விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான கால எல்லை 2013.06.28 ஆம் திகதியுடன் முடிவடைந்தது.
எனினும் இதற்கான விண்ணப்பப் படிவங்களை சமர்ப்பிப்பதற்கு தகைமை பெற்றுள்ளவர்களால் முன்வைக்கப்பட்ட வேண்டுகோள்கள் கருத்திலெடுக்கப்பட்டு விண்ணப்பப் படிவங்களை சமர்ப்பிப்பதற்கான கால எல்லை 2013 ஜூலை மாதம் 02 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாகவும் அதனைத் தொடர்ந்து அங்கீகரிக்கப்பட்ட இடாப்பில் பெயர் உள்ளடக்கப்படாதவர்களுக்கு மேன்முறையீடுகளை சமர்ப்பிப் பதற்காக வழங்கப்படுகின்ற கால எல்லை 2013 ஜூலை மாதம் 09 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் மற்றும் வன்னி தேர்தல் மாவட்டங்களுக்குரிய குறைநிரப்புப்பட்டியல்களின் பணிகள் நிறைவு செய்யப் பெற்றுள்ளதாகவும், அப்பட்டியல்கள் அலுவலக நேரங்களில் பொதுமக்களின் பரிசீலனைக்காக யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், வவுனியா மற்றும் முல்லைத்தீவு ஆகிய மாவட்ட தேர்தல்கள் அலுவல கங்களில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
ஜூலையில் இடம்பெறவிருந்த தனியார் பஸ் கட்டண உயர்வு ஒத்திப் போடப்பட்டுள்ளதாகவும், இதற்கிணங்க தனியார் பஸ் கட்டணத்தை நாளை ஜுலை முதலாம் திகதி அதிகரிப்பதில்லை என தீர்மானித்துள்ளதாக, தனியார் போக்குவரத்துத் துறை அமைச்சர் சி. பி. ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
வருடாந்தம் ஜூலை மாதத்தில் தனியார் பஸ் கட்டணங்களில் திருத்தம் ஏற்படுத்தப்படும். அந்த வகையில் இம்முறை ஜூலை முதலாம் திகதி பஸ் கட்டணத் தில் மாற்றம் ஏற்படுத்துவது தொடர்பில் தனியார் பஸ் உரிமையாளர்கள் பல பேச்சுவார்த்தைகளை நடத்தியிருந்தனர்.
இதற்கமைய பஸ் உரிமையாளர் சங்கத்துடன் நடாத்தப்பட்ட பேச்சுவார்த்தைகளில் ஜுலை முதலாம் திகதி பஸ் கட்டணத்தை அதிகரிப்பதில்லை என, பஸ் உரிமையாளர்கள் சங்கம் முடிவெடுத்ததாக சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன நேற்றுத் தெரிவித்துள்ளார்.
வருடாந்தம் ஜூலை மாதத்தில் தனியார் பஸ் கட்டணங்களில் திருத்தம் ஏற்படுத்தப்படும். அந்த வகையில் இம்முறை ஜூலை முதலாம் திகதி பஸ் கட்டணத் தில் மாற்றம் ஏற்படுத்துவது தொடர்பில் தனியார் பஸ் உரிமையாளர்கள் பல பேச்சுவார்த்தைகளை நடத்தியிருந்தனர்.
இதற்கமைய பஸ் உரிமையாளர் சங்கத்துடன் நடாத்தப்பட்ட பேச்சுவார்த்தைகளில் ஜுலை முதலாம் திகதி பஸ் கட்டணத்தை அதிகரிப்பதில்லை என, பஸ் உரிமையாளர்கள் சங்கம் முடிவெடுத்ததாக சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன நேற்றுத் தெரிவித்துள்ளார்.
சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவிற்கு சென்ற மேலும் 22 இலங்கையர்கள் விமானம் மூலம் மீண்டும் நாடு திருப்பியனுப்பப்பட்டுள்ளனர். அவுஸ்திரேலிய குடிவரவு சட்டமூலத்தை மீறும் வகையில் சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவிற்குள் நுழைந்த 22 பேரே இவ்வாறு நாடு திருப்பியனுப்பப்பட்டிருப்பதாக அவுஸ்திரேலிய குடிவரவு அமைச்சர் பிரன்டன் தெரிவித்துள்ளார்.
கிறிஸ்மஸ் தீவில் இருந்து விமானம் மூலம் இவர்கள் நாடு திருப்பியனுப்பப்பட்டுள்ளனர். இதற்கமைய கடந்த வருடம் ஓகஸ்ட் மாதம் முதலான காலப் பகுதியில் இதுவரை 1270 புகலிடக் கோரிக்கை யாளர்கள் அவுஸ்திரேலியாவிலிருந்து இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டுள்ளதாகவும் இவ்வாறு திருப்பியனுப்பப்பட்டவர்களில் 1057 பேர் பலவந்தமாக அனுப்பப்பட்டவர்கள் என அவுஸ்ரேலிய குடிவரவு அமைச்சர் பிரன்டன் குறிப்பிட்டுள்ளார்.
கிறிஸ்மஸ் தீவில் இருந்து விமானம் மூலம் இவர்கள் நாடு திருப்பியனுப்பப்பட்டுள்ளனர். இதற்கமைய கடந்த வருடம் ஓகஸ்ட் மாதம் முதலான காலப் பகுதியில் இதுவரை 1270 புகலிடக் கோரிக்கை யாளர்கள் அவுஸ்திரேலியாவிலிருந்து இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டுள்ளதாகவும் இவ்வாறு திருப்பியனுப்பப்பட்டவர்களில் 1057 பேர் பலவந்தமாக அனுப்பப்பட்டவர்கள் என அவுஸ்ரேலிய குடிவரவு அமைச்சர் பிரன்டன் குறிப்பிட்டுள்ளார்.
பிரேசிலை சேர்ந்த இளைஞர் ஒருவர் நாய்கள் மீது கொண்ட அதிக பாசத்தால் தனது முகத்தை பிளாஸ்டிக் சத்திரசிகிச்சை செய்து நாயாக மாறியுள்ளார். இறந்த நாய் ஒன்றின் மூலமே தனது முகத்தை அறுவை சிகிச்சை செய்து கொண்டு நாயாகவே மாறியுள்ளார். அறுவை சிகிச்சை முடிவடைந் துள்ள நிலையில் "நாய் மனிதன்" என்றே அனைவரும் அழைக்கின்றனர்.