நான் ரொம்ப பிஸி-தயா மாஸ்ரர்!!!
ஜக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பின் வடமாகாண தேர்தல் விஞ்ஞாபனத்தை தயார் செய்கின்ற முயற்சியில் தாம் முழுமூச்சாக ஈடுபட்டிருப்பதென எல்.ரீ.ரீ.ஈ ன் முன்னாள் ஊடகப்பேச்சாளர் தயா மாஸ்ரர் தெரிவித் துள்ளதாக கொழும்பில் இருந்து வெளிவரும் பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது!!
வடக்கிலுள்ள பிரச்சனைகளை எவ்வாறு தீர்ப்பதென்பது தொடர்பாக ஜக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு ஏற்கனவே ஆராய்ந்து வைத்துள்ளதாகவும் அதுவும் அவ்விஞ்ஞாபனத்தில் இடம்பெறும் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளதாகவும், தழிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கு எதிராக தாம் நிச்சயம் இத்தேர்தலில் நிற்பது உறுதி என்று அவர் தெரிவித்துள்ளதாக அச்செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
0 comments
Write Down Your Responses