அரசிற்கும் முஸ்லிம் காங்கிரஸுக்கும் இடையிலான முரண்பாடுகள் ஆழமாகி விட்டதாம்! - பசீர் சேகுதாவூத்

அரசாங்கத்துக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசுக்குமிடை யிலுள்ள உறவு தொடர்பாக உறுதியான ஒரு தீர்மானத்தை எடுக்கவேண்டிய காலகட்டத்தில் இருந்து கொண்டிருக்கின் றோம் என அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தவிசாளருமான பசீர் சேகுதாவூத் தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அரசியல் அதியுயர் பீடக் கூட்டம் சனிக்கிழமை மாலை கட்சியின் தலைமையக மான தாறுஸ்ஸலாமில் நடைபெற்ற போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அமைச்சர் பசீர், அரசாங்கத்துக்கும் முஸ்லிம் காங்கிரஸுக்கும் இடையிலான முரண்பாடுகள் ஆழமாகி விட்டன எனவும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அரசு உறவு தொடர்பாக உறுதியான தீர்மானத்தை எடுக்கும் கால கட்டம் இதுவாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் இருந்தால் உறுதியாக அரசாங்கத்தோடு இருக்க முடியாது. அரசாங்கத்தோடு இருந்தால் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் உறுதியா இருக்க முடியாது. முஸ்லிம் காங்கிரஸுடனும் அரசாங்கத்தோடும் ஒன்றாக இருந்தால் அரசின் பங்காளிக்கட்சி என்ற அடிப்படையில் முஸ்லிம் மக்களின் எதிர்பார்ப்புகளையும், தேவைகளையும் நிறைவேற்ற முடியாது இது தான் நான் கண்ட அனுபவமாகும்' என்றும் அவர் குறிப்பிட்டார்.

மூன்று மாகாணசபை தேர்தல்கள் நடைபெறப் போகின்றன. விஷேடமாக வடமாகாண சபை தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனித்து போட்டியிடுவதென்றால் அரசிலிருந்து வெளியேறி விட்டு தனித்து போட்டி யிடுவதே இன்றைய காலத்துக்கு பொருத்தமானதாகும். இவ்வாறில்லாமல் அரசுக்குள் இருந்து கொண்டு தனித்து போட்டியிட்டால் அரசுக்கு குழி பறிக்கும் ஒரு கட்சியாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை அரசு பார்க்கும்.

இதனால், அரசுக்கும் முஸ்லிம் காங்கிரசுக்கும் உள்ள இடைவெளி இன்னும் அகலமும் ஆழமுமாகிவிடும். இதனால் கட்சிக்கும் கட்சி தொண்டர்களுக்கும் ஆபத்துக்கள் ஏற்படாலம் என்ற அச்சமும் எனக்குள் இருக்கின்றது. இது என்னுடைய அரசியல் பார்வையாகும். எல்லோரும் அரசாங்கத்திருந்து வெளியேறுவோம் என்றால் நானும் வெளியேறுவதற்கு தயாரக இருக்கின்றேன்' என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

அரசாங்கத்தோடு இருந்தால் முஸ்லிம் காங்கிரஸில் இருக்க முடியாது. அரசிலும் முஸ்லிம் காங்கிரஸிலும் இருந்தால் முஸ்லிம் மக்களின் தேவைகள் எதையும் செய்யமுடியாது. இது தான் நான் கண்ட அனுபவமாகும். வட மாகாண சபை தேர்தலை மாத்திரம் கொண்டு நான் இதை பேசவில்லை. தற்போது ஏற்பட்டுள்ள புதிய சூழ்நிலையை அடிப்படையாக கொண்டு பேசுகின்றேன். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும் அரசாங்கமும் ஒன்றாக இருந்தாலும் கூட முஸ்லிம் காங்கிரஸ் அரசுடன் இருப்பதா இல்லையா என்ற தீர்மானத்தை முஸ்லிம் காங்கிரஸே எடுக்க வேண்டுமே தவிர அரசு இத்தீர்மானத்தை எடுக்க முடியாது.

ஏனென்றால் அரசு இது தொடர்பாக எடுக்கம் தீர்மானம் முஸ்லிம் காங்கிரசை துரத்துகின்ற அடிப்டையில் அமையும் இருக்கும். இது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸினதும் அதன் போராளிகளினதும் தலைமைத்துவத்தினதும் தன்மான த்திற்கும் கௌரவத்திற்கும் கேடான விடயமாகும் என அவர் இங்கு மேலும் தெரிவித்தார்.

0 comments

Write Down Your Responses

Text here

About This Blog

Lorem Ipsum

Visitors

Lorem Ipsum

Lorem

Advertise

Moto GP News

கட்டுரை

srilanka news

Formula 1 News

Pages

Sport News

nc2

Featured Content Slider

Powered by Blogger.

Search Wikipedia

Search results

Translate

Search This Blog

Basketball News