தன்னார்வ தொண்டு நிறுவன பணியாளர்களுக்கு சுற்றுலா வீசா வழங்கப்பட முடியாது-இலங்கை
தன்னார்வ தொண்டு நிறுவன பணியாளர்கள் இலங்கைக்கு வர இனி சுற்றுலா வீசா வழங்கப்பட முடியாது என அரசாங்கம் அறிவித்துள்ளதுடன் சுற்றுலா வீசா மூலம் நாட்டுக்குள் பிரவேசித்து தன்னார்வ தொண்டுப் பணிகளை மேற்கொண்ட செயற்பாட்டாளர் ஒருவரை அதிகாரிகள் நாடு கடத்தியுள்ளனர்.
சென்னையிலிருந்து விழுது என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் அழைபின் பேரில் இலங்கைக்கு கடந்த 19ம் திகதி சுற்றுலா வீசா மூலம் வந்த தேவகுமாரி என்ற பெண் செயற்பாட்டாளரே இவ்வாறு நாடு கடத்தப்பட்டுள்ளார்.
குறித்த பெண் செயற்பாட்டாளர் நெடுங்கேணி பிரதேசத்தில் யுத்தத்தில் கணவரை இழந்த பெண்களுக்கு இவர் கருத்தரங்கு ஒன்றை நடாத்தியாதாக தெரிவித்தே இவர் நாடுகடத்த பட்டுள்ளார்.
0 comments
Write Down Your Responses