எங்கட சனங்கள் என்ன பாவம் செய்ததுகளோ தெரியாது முப்பது வருசமா அவங்கட பாடு!! இப்ப இவங்கட பாடு என்டு ஆகீற்று!! என்ன செய்றது எல்லாரும் பந்துபோல பயன்படுத்துறாங்கள் எங்கள!! யுத்தம் முடிஞ்சு இப்ப ஏதோ ஒரு வழயில மக்கள் தாங்களும் தங்கட பாடும் என்று இருக்கேக்க..இப்ப இந்த கூத்தமைப்பு படுத்துறபாடு மக்களை திரும்பவும் எங்கையோ கொண்டு போறதற்குத் தான் போல இருக்கு!
ஒரு விசயத்தில எனக்கு உடன்பாடு இல்லை பாருங்கோ உந்த இயக்கத்ததை அழிச்ச அரசாங்கத்ததை ஏதோ ஒரு எதிரிகாளாக தமிழ் மக்களுக்கு காட்டி தாங்கள் மக்களோடு இருக்கிறம் என்று சொல்லிக்கொண்டு ஓட்டுவாங்கிறதற்கு முயற்சிச்சுக்கொண்டு இருக்கினம்.
இருந்தாலும் தங்கட நாட்டு பிரதமரைக்கொன்றது புலிகள் தான் என்ட கடுப்பில் இந்த யுத்தத்தை நடத்திய இந்தியாவிடம் போய் தான் இவை எல்லா ஆலோசனையளயும் கேட்கீனம் பாருங்கோ!! அதிலையும் எங்கட மாவிட்ட புரத்து ஐயா எல்லோரையும் விட ஒரு படிமேல போய் இந்தியாவின்ர சம்மந்தி யாகிவிட்டார் என்று ஒரு கதையடிபடுது!! ம் ம் இருக்கட்டும் இருக்கட்டும்.
இதுபோக சுரேசண்ணர் அங்கேயே செந்தமா வீட்டயும் வாங்கி தன்ர குடும்பத்தையும் கூட்டிக்கொண்டு போய் அடிக்கிற கூத்துகள நினக்கேக்க அப்பப்பா முடியல! இப்படி முதுகில குத்திய இந்தியாவோட தாங்கள் கோடிப்பக்கத்தால சொந்தமும் கொண்டாடிக்கொண்டு இஞ்ச தாங்களை விட்ட தேசிய வாதிகள் இல்லை என்று மயக்கம் வரும் வரை பேசியும் தள்ளுகினம். இருந்தாலும் இவரையின்ர விளையாட்டுகளெல்லாம் மக்களுக்கு தெரியாமல் இல்லை
அரசியல் வாதிகள் எல்லோரும் இப்ப வியாபாரத்தில் இறங்கிவிட்டீனம் குறிப்பாக சாரயக் கடைபோடுறதிலை குறிபாக இருக்கீனம் ஒரு சிலருக்கு மட்டக்களப்பிலும் வவுனியாவில் சாரயக்கடையும் இருக்கென்டால் பாருங்கோவன். இதெல்லாம் என்ன மக்களின் நலன்சார்ந்த திட்டங்களா மக்களுக்கு தாங்கள் ஒன்றும் செய்ய மாட்டீனம் அரசாங்கம் செய்தால் அதையும் ஏதோ ஒரு பெரும் பிரச்சனையாக்கி காட்டுகினம் இவையளால ஒன்றும் கிழிக்க ஏலாது என்பது உண்மை. ஏன் இதை சொல்லுறன் என்டால் இந்த ஜெனீவாவில் போய் எல்லாரும் சேர்ந்து சொப்பீங் செய்தது தான் மிச்சம்.
இது இப்படி இருக்க கிளிநொச்சியில் இருக்கிற எங்கட கரும் சிறுத்தை இப்ப எப்பவுமே கறுப்போடுதான் திரியுது எல்லா இடத்திற்கு போனாலும் ஐயா கறுப்போடு தான் போறாராம்! கொஞ்ச காலத்திற்கு முன்னால் இவர் கக்கூசுக்கு போனாலும் அது யாழ்ப்பாணத்தில் உள்ள ஒரு உத்தமற்ற பேப்பர் ஒன்றில் தலைப்புச் செய்தியாய் வரும்!!! எப்ப இவற்றை ஆப்பீசில இருந்து கொஞ்ச வெடிமருந்தும் அவற்றை ஆணுறைகளும்(பாவம் ஜயா தன்ர பாதுகாப்புக்கு வச்சிருப்பார் போல) எடுத்தாங்களோ!!! அதுக்குப்பிறகுதான் இவர் செய்தாலும் செய்திருப்பார் என்று நினைச்சு இவரை இப்ப ஓரம்பட்டிப்போட்டிற்றினம் அந்தப்பேப்பர்கார புண்ணியவான்கள்!!! இருந்தாலும் ஒரேயடியாய் தூக்கி போடாமல் எதோ ஒரு பக்கத்தில போடுவம் என்று போட்டுக்கொண்டிருக்கீனம். அவரும் அதைப் பெரிசு படுத்தலபோல கிடக்கு ஏன் என்றால் அவரும் வின் ஒன்று கைவசம் வைத்திருக்கிறார் தானே அது இருக்கும் போது ஏன் யோசிப்பான் என்று முடிவெடுத்திட்டார் போல சரி பார்ப்பம் எப்படி போகுதென்று!
இவேலெல்லாம் ஒரு பக்கத்தால போட்டுக்குழப்பியடிச்சுக்கொண்டு இருக்க இஞ்சால ஒரு பக்கத்தால தமிழ்தேசிய!!! ஊடகவியலாளர்கள் எண்டு சொல்லிக்கொண்டு இவேலெல்லாருக்கும் வால் புடிச்சுக்கொண்டு கொஞ்சப் பொடியள் திரியினம்!! அந்தப்பொடியளுக்கு இந்த எம்பி மார் குசு விட்டாலும் அதுதான் செய்தி!! வேலவெட்டியள் இல்லாத நேரத்தில இந்த எம்பி மார ஒவ்வொருத்தரா கூப்பிட்டு கூப்பிட்டு பேட்டி எடுத்து பேப்பர்ல போடுறத தவிர வேற உருப்படியா ஒண்டும் செய்யமாட்டினம் இவயள் கேட்டால் இவங்கள்தான் தமிழ் மக்களின் பிரதிநிதிகள் எண்டு அவயளே சொல்லுகினம்!! பாவம் அந்தப்பொடியளுக்குத்தெரியாது! போல இந்த எம்பிமார் தங்கள தங்கட சுயலாபத்துக்குத்தான் பயன்படுத்துகினம் என்டு.. ம் ம் ம் பாப்பம் பாப்பம் என்னதான் நடக்குதெண்டு ஆனா ஒண்டு மட்டும் சொல்லுறன்ரா என்னதான் நீங்க ஆட்டம் போட்டாலும் எல்லாம் கொஞ்ச நாளைக்குத்தான்...
சப்பா!! மனுசன நிம்மதியா பொளைக்க விடமாட்டேங்குறானுங்கடா!!!!!
Text here
About This Blog
Lorem Ipsum
Visitors
Lorem Ipsum
Lorem
Labels
- cont.kadurai (6)
- interview (2)
- kadurai (19)
- Katturai (3)
- medicin (2)
- nc2 (269)
- nc5 (1)
- NEWS (2)
- news center 2 (1)
- puthinam (2)
- srilanka (9)
- srilanka news (18)
- techno (4)
- world (24)
- கட்டுரை (12)
- கவிதை (3)
- நூல் விமர்சனம் (1)
Advertise
Moto GP News
கட்டுரை
srilanka news
Formula 1 News
Sport News
nc2
Featured Content Slider
Powered by Blogger.
Search Wikipedia
Search results
0 comments
Write Down Your Responses