இலங்கை அகதிகளிடம் 12 இலட்சம் ரூபா சுருட்டல். மூவர் கைது.

இலங்கை அகதிகளிடம் இருந்து ரூபா 12 இலட்சம் பண மோசடி செய்த குற்றச் சாட்டில் மூன்று பேர் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனர். இராமேஸ்வரம் மாவட்டம், மண்டபத்தைச் சேர்ந்த சுகுந்தன், ரமேஷ்குமார் மற்றும் மதுரையைச் சேர்ந்த அருண் ஆகியோதே கைது செய் யப்பட்டவர்களாவர். தமக்குக் கிடைத்த முறைப்பாட்டை அடுத்தே இவர்களைக் கைது செய்ததாக பொலிஸ் கூறியது.

பத்தலகுண்டுக்கு அருகில் இருக்கும் புதுப்பட்டியில் அமைந்துள்ள இலங்கை அகதி முகாமில் இருக்கும் மனோரஞ்சிதனிடம் நெருக்கமான நட்பை ஏற்படுத்திக் கொணடார் மதுரையைச் சேர்ந்த அருண். அவர் மனோரஞ்சிதனின் சகோதரனான மதியழகனிடம் கூறியுள்ளார் அவரும் மற்ற அகதிகளும் அவுஸ்திரேலியாவுக்குப் போக உதவி செய்வதாக. பயணத்துக்கான சகல ஏற்பாடுகளையும் செய்வதற்கு ஒவொருவரும் ரூபா ஒரு லட்சம் தரவேண்டும் என்று கோரியிருக்கிறார். மதியழகன் மற்றும் 11 அகதிகள் அருனிடம் ரூபா 12 இலட்சம் கொடுத்ததாக அறியப்படுகின்றது.

அருண் அந்த பணத்தை சுகுந்தனிடமும் ரமேஷ்குமாரிடமும் கொடுத்துள்ளார். பின்னர் அந்த மூவரிடமும் அகதிகள் அவர்களின் பயணத் திட்டம் பற்றிய கேட்ட போது அவர்களிடம் இருந்து பதில் இல்லை. அதன் பின்னர் பொலிசில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

சுகந்தனும் ரமேஸ் குமாரும் சென்னையில் உள்ள புழல் சிறையிலும் அருண் மதுரையில் உள்ள மேலூர் சிறையிலும் அடைக்கப்பட்டுளனர்.

0 comments

Write Down Your Responses

Text here

About This Blog

Lorem Ipsum

Visitors

Lorem Ipsum

Lorem

Advertise

Moto GP News

கட்டுரை

srilanka news

Formula 1 News

Pages

Sport News

nc2

Featured Content Slider

Powered by Blogger.

Search Wikipedia

Search results

Translate

Search This Blog

Basketball News