நாளை முதல் புகையிரதக் கட்டணம் அதிகரிப்பு

நகர கடுகதி மற்றும் தபால் புகையிரதக் கட்டணங்கள் நூற்றுக்கு 40 வீதத்தால் நாளை முதல் அதிகரிக்கப்படவுள்ளது.

இதற்கேற்ப, சாதாரண இருக்கைகள், படுக்கை வசதியுடன் கூடிய இருக்கை, ஒதுக்கப்பட்ட ஆசனம், பார்வையாளர் பகுதிக் கட்டணங்கள் அதிகரிக்கப்படவுள்ளதாக புகையிரதத் திணைக்களம்அறிவித்துள்ளது.

நான்கு பிரிவுகளாக கட்டணம் அதிகரிக்கப்படும்.

3 ஆம் வகுப்பு சாதாரண இருக்கைகளுக்கான கட்டணம் ரூபா 150 இலிருந்து ரூபா 180 வரையும், ரூபா 220 முதல் ரூபா 280 வரையும், ரூபா 270 முதல் ரூபா 320 வரையும் கட்டண அதிகரிப்பு செய்யப்பட்டுள்ளது.

இரண்டாம் வகுப்புக்கு ஒதுக்கப்பட்ட இருக்கைகளுக்கான கட்டணம் ரூபா 220 இலிருந்து ரூபா 280 வரையும், ரூபா 380 இலிருந்து ரூபா 450 வரையும், ரூபா 450 இலிருந்து 500 வரையும் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், முதலாம் வகுப்புக்கு ஒதுக்கப்படுகின்ற இருக்கைகளுக்கு ரூபா 750 அதிகரிக்கப்பட்டுள்ளது.

பார்வையாளர் பகுதிக்கான கட்டணம் ரூபா 880 இலிருந்து ரூபா 1000 வரையும், உறங்குவதற்கான பகுதியின் கட்டணம் ரூபா 1250 இனாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

(கேஎப்)

0 comments

Write Down Your Responses

Text here

About This Blog

Lorem Ipsum

Visitors

Lorem Ipsum

Lorem

Advertise

Moto GP News

கட்டுரை

srilanka news

Formula 1 News

Pages

Sport News

nc2

Featured Content Slider

Powered by Blogger.

Search Wikipedia

Search results

Translate

Search This Blog

Basketball News