மயிலிட்டிப் பிரதேசத்தில் உயர் பாதுகாப்பு வலயத்திற்குள் உள்ள ஆலயங்களுக்கு செல்ல அனுமதி
மயிலிட்டிப் பிரதேசத்தில் உயர் பாதுகாப்பு வலயப் பகுதிக் குள் அமைந்துள்ள இந்து, கிறிஸ்தவ ஆலயங்களுக்குச் சென்று பொதுமக்கள் தங்களது ஆலய வழிபாடுகளை மேற்கொள்ள பாதுகாப்பு அமைச்சு அனுமதி வழங்கி யுள்ளது.
எதிர்வரும் 5ஆம் திகதி குறித்த பகுதியில் நடைபெறவுள்ள ஆலயத் திருவிழாவிற்கு செல்ல அனுமதி பெற்றுத் தருமாறு மயிலிட்டி பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். இந்த கோரிக்கை தொடர்பில் ஜனாதிபதியிடம் அமைச்சர் டக்ளஸ் தேவனந்தா விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க, குறித்த பகுதிக்குச் சென்று வழிபாடுகளை மேற்கொள்ள ஜனாதிபதி மற்றும் பாதுகாப்பு அமைச்சு அனுமதி வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது
0 comments
Write Down Your Responses