நிதி அமைச்சின் செயலாளருக்கு நீதிமன்றம் அழைப்பாணை.
நிதி அமைச்சின் செயலாளரும், திறைசேரியின் செயலாள ருமான கலாநிதி பீ.பி. ஜயசுந்தரவை மோசடி வழக்கென்று தொடர்பில் சாட்சியம் அளிப்பதகாகவே எதிர்வரும் 23 ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு, கொழும்பு மேல் நீதிமன்று இன்று அழைப்பாணை அனுப்பிவைத்துள்ளது.
பல கோடி ரூபா "வற் வரி" மோசடி தொடர்பான வழக்கு மேல் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே நீதிமன்றம் இந்த அறிவுறுத்தலை விடுத்துள்ளது.
வற் வரி மோசடி வழக்கு தொடர்பில் சாட்சியம் அளிப்பதற்கே அவரை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அழைப்பாணை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அத்துடன், அன்றையதினம் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு இறைவரி திணைக்களத் திற்கும் நீதிமன்றம் அழைப்பாணை அனுப்பிவைத்துள்ளது.
0 comments
Write Down Your Responses