வைகோ மற்றும் புகழேந்தியின் மனுக்கள் தள்ளுபடி! எல்.ரி.ரி.ஈக்கு தடை விதித்தது சரியானது! சென்னை மேல்நீதிமன்றம்

எல்.ரி.ரி.ஈ இயக்கத்துக்கு மத்திய அரசு தடை விதித்தது சரியே என தீர்ப்பளித்துள்ள சென்னை மேல்நீதிமன்றம், இது தொடர்பாக ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, வழக்கறிஞர் புகழேந்தி ஆகியோர் தாக்கல் செய்திருந்த மனுக்களை நேற்று தள்ளுபடி செய்தது.

இந்தியாவில் எல்.ரி.ரி.ஈ இயக்கம் கடந்த 1991ஆம் ஆண்டு தடை செய்யப்பட்டது. அதன்பின் ஒவ்வொரு இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்த தடை நீட்டிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், 2010 ஆம் ஆண்டு மே மாதம் விடுதலைப்புலிகள் அமைப்பின் மீதான தடையை நீட்டித்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டது. இந்த தடை நீட்டிப்பு சரிதானா என்பது குறித்து ஆராய்வதற்காக டில்லி மேல்நீதிமன்ற நீதிபதி தலைமையில் ஒரு தீர்ப்பாயம் அமைக்கப்பட்டது.

டில்லி, சென்னை, ஊட்டி உட்பட பல்வேறு இயக்கங்களில் அந்த தீர்ப்பாயம் விசாரணை நடத்தியது. இறுதியாக தடை நீட்டிக்கப்பட்டது சரியே என்று கடந்த 2010 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தீர்ப்பளித்தது. தீர்ப்பாயத்தின் இந்த உத்தரவை இரத்து செய்யக்கோரி வழக்கறிஞர் புகழேந்தி மற்றும் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ ஆகியோர் சென்னை மேல்நீதிமன்றத்தில் வழக்குத்தொடர்ந்தனர்.

இந்த வழக்கு ஓராண்டுக்கு முன்பே விசாரணை முடிந்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதி எலிபி தர்மாராவ், எம். வேணுகோபால் ஆகியோர், விடுதலைப் புலிகள் அமைப்பு மீதான தடையை நீட்டித்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவு சரியாதே என தீர்ப்பாயம் அளித்த தீர்ப்பில் எந்த தவறும் இல்லை என்று, கூறி வைகோ மற்றும் புகழேந்தி ஆகியோர் தாக்கல் செய்த மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

0 comments

Write Down Your Responses

Text here

About This Blog

Lorem Ipsum

Visitors

Lorem Ipsum

Lorem

Advertise

Moto GP News

கட்டுரை

srilanka news

Formula 1 News

Pages

Sport News

nc2

Featured Content Slider

Powered by Blogger.

Search Wikipedia

Search results

Translate

Search This Blog

Basketball News