அரசிக்கு தலை குனிந்து வணக்கம் தெரிவித்த பாப்பரசர்!

ஜோர்தான் நாட்டு அரசிக்கு தலை குனிந்து வணக்கம் தெரி வித்து, வரவேற்று அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள் ளார் பாப்பரசர் பிரான்சிஸ். வழக்கமாக பாப்பரசர் பட்டத்தை ஏற்றிருப்போர் யாருக்கும் தலைவணங்கி வணக்கம் செலுத்த மாட்டார்கள். மாறாக அவர்களை சந்திப்பவர்களே தலை வணங்கி வணக்கம் செலுத்துவார்கள்.

ஆனால் பாரம்பரியமாக இருந்து வருவதை உடைத்து புதுப் புரட்சி படைத்து வரும் பாப்பரசர் பிரான்சிஸ், ஜோர்தான் நாட்டு அரசிக்கு தலைவணங்கி வணக்கம் செலுத்தி அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளார்.

ஜோர்தான் நாட்டு அரசி ரனியா தனது கணவரான மன்னர் 2ம் அப்துல்லாவுடன் வத்திக்கான் நகருக்கு வந்திருந்தார். அங்கு போப்பாண்டவரை அவர்கள் இருவரும் சந்தித்தனர். அப்போது வழக்கத்திற்கு மாறாக தலைவணங்கி அரசியை வரவேற்றார் பாப்பரசர். மேலும் அரசியின் கை பிடித்து கை குலுக்கியும் வரவேற்றார்.

அதேபோல மன்னர் 2ம் அப்துல்லாவுக்கும் அவர் தலைவணங்கி வணக்கம் தெரிவித்துள்ளார். வத்திக்கான் நகரில் உள்ள பாப்பரசரின் நூலகத்தில் இந்த சந்திப்பு நடந்தது.

இதுகுறித்து வத்திக்கான் நகர அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில், பாப்பரசர் பிரான்சிஸ் மிகவும் எளிமையானவர். மரபுகள் குறித்துக் கவலைப்படாதவர். பாப்பரசராக பட்டம் சூடப்படுவதற்கு முன்னர் எவ்வாறு இருந்தாரோ அதேபோலவே இப்போதும் சாதாரண மனிதர்களில் ஒருவராக இருக்கிறார் என்றார்.

0 comments

Write Down Your Responses

Text here

About This Blog

Lorem Ipsum

Visitors

Lorem Ipsum

Lorem

Advertise

Moto GP News

கட்டுரை

srilanka news

Formula 1 News

Pages

Sport News

nc2

Featured Content Slider

Powered by Blogger.

Search Wikipedia

Search results

Translate

Search This Blog

Basketball News