பொதுமக்களுடன் மோதலில் ஈடுபட்ட 17 பொலிஸாருக்கு தற்காலிக இடமாற்றம்!
நேற்றிரவு திக்வெல்ல பகுதியில் பெரஹரா நிகழ்ச்சிக்கான ஒத்திகையை நடத்திக்கொண்டிருந்த திக்வெல்ல பகுதி மக்களுடன், மோதலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் 17 பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு தறகாலிகமாக இட மாற்றம் வழங்கப்பட்டுள்ளதென பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், பொலிஸ் அத்தியட்சகருமான புத்திக சிறிவர்தன தெரிவித்துள்ளார்.
இந்த ஒத்திகையால் தாம் அசௌகரியத்தை எதிர்நோக்குவதாக பிரதேசத்தைச் சேர்ந்த சிலர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்ததாகவும், இதற்கமைய சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் பிரதேச மக்களுடன் மோதலில் ஈடுபட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பிலேயே, குறித்த 17 பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கும் தற்காலிக இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் அத்தியட்சகர் மேலும் தெரிவித்துள்ளார்.
0 comments
Write Down Your Responses