விபச்சார விடுதி பொலிஸாரினால் முற்றுகை! விபச்சாரத் தொழிலில் ஈடுபட்டவர்கள் கைது!
புத்தளத்தில் இயங்கி வந்த விபச்சார விடுதி ஒன்றை அதிரடியாக பொலிஸ் குற்றத்தடுப்புப் பிரிவினர் முற்றுகையிட்டு விபச்சாரத் தொழிலில் ஈடுபட்டவர்களை கைதுசெய்துள்ளனர்.
குறித்த விபச்சார விடுதியை இயக்கி வந்ததாக சந்தேகிக்கப்படும் நபர் ஒருவரையும், விபச்சாரத் தொழிலில் ஈடுபட்ட 32 வயதுடைய பெண்ணொருவரையுமே பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினர் கைதுசெய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் மேலதிக விசாரணைக்கென புத்தளம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும், சந்தேகநபர்கள் இன்று புத்தளம் நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்படவுள்ளனர் எனவும், பொலிஸ் குற்றத்தடுப்புப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
0 comments
Write Down Your Responses