விஞ்ஞானத்துக்கு 19 புள்ளி மீண்டும் க.பொ.த சாதாரண தர பரீட்சை பெப்ரவரியில்!
க.பொ.த சாதாரண தர விஞ்ஞான பரீட்சையின் முதலாம் பாகத்திற்கு தோற்றிய அனைத்து மாணவர்களுக்கும் 19 புள்ளிகளை வழங்குவதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளதா இன்று (24.12.2012)மாலை கல்வி அமைச்சில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் அமைச்சர் பந்துல குணவர்தன இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் நாட்டில் நிலவிய காலநிலை மாற்றத்தால் க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றமுடியாதுபோன மாணவர்களுக்கு எதிர்வரும் பெப்ரவரி மாதம் விசேட பரீட்சையொன்றை நடத்துவதற்கும் கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.



0 comments
Write Down Your Responses