நெஞ்சம் நிறைந்த இனிய உறவுகளே !இக்கடிதத்தை வரையும் போது உள்ளம் குதூகலத்தால் நிரம்பி வழியவில்லை. மாறாக கண்களில் நீர் தேங்கியுள்ளது.
ஏன் என்கிறீர்களா ?
என் உடன் பிறந்த தாய்மண் உறவுகளுக்காக தொப்புள் கொடி உறவுகளாகிய நீங்கள் காட்டும் பரிவினைக் கடிந்து கொள்ளும் நிலை எனக்கு ஏற்பட்டுள்ளதே எனும் ஏக்கமே அதற்குக் காரணம்.
ஆனால் அநீதியைக் கண்டு மெளனித்திருப்பது அவ்வநீதிக்குத் துணை போவதற்குச் சமனாகும் எனும் ஒரே ஆதங்கம் தான் இக்கடிதத்தை எழுதுவதற்கு என்னைத் தூண்டும் உள்ளுணர்வாகும்.
கடந்த காலச் சரித்திரங்களைப் பேசிப் பேசி எதிர்காலத்து ஓவியத்தின் சிற்பத்தைச் சிதைக்கும் சிற்பிகளாவதை விட அழகான ஒரு சிற்பத்தை எதிர்காலத்திற்காக செதுக்குவோர்களுக்கு உளி எடுத்துக் கொடுக்கும் பணியாளனாக இருப்பதுவே மேலானதாகும்.
விடுதலைப் போராட்டத்தைத் திசைதிருப்பி நடத்திச் சென்றதன் மூலம் புலிகள் தம்மை மட்டும் அழித்து விடவில்லை ஒரு சந்ததியினரின் எதிர்காலத்தையே நிர்மூலமாக்கி விட்டார்கள். அறிவிற் சிறந்தவர்கள், ஆக்கபூர்வமானவர்கள் என்று எமக்குள் நாமே கங்கணம் கட்டிக் கொண்டிருந்த ஈழத் தமிழினத்தின் முன்னேற்றத்தை இரண்டு தசாப்தங்கள் பின்னோக்கித் தள்ளி விட்டார்கள்.
இன்று ,
கீழே தடுக்கி விழுந்த ஒருவன் திரும்ப எழுந்து நடக்க முற்படும் வேளையில் மீண்டும் தள்ளி விழுத்திவிட முயற்சிப்பது போல புலம் பெயர் மண்ணிலே தமது வாழ்வைத் திடப்படுத்திக் கொண்டு ஈழத்து மண்ணிலே வாழத்துடிக்கும் தமிழ்ச் சமூகத்தின் எதிர்காலத்தைக் குலைக்கும் முயற்சிக்கு அன்பான உறவுகளாகிய உங்கள் அதீத உணர்வினைப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.
தமிழீழம் எனும் கொள்கையை முன்வைத்துப் போராடும் போது அது நிச்சயமாக கிடைக்கும் என்பதை விட அதன் மூலம் கிடைக்கும் அதி உயர்வான தீர்வினைப் பெற்றுக் கொள்ளும் நோக்கத்தையே அனைவரும் மனதில் கொண்டிருந்தார்கள் என்பதுவே உண்மை.
இன்று யதார்த்தத்தின் அடிப்படையில் சிங்கள மக்களுடன் இணைந்த ஒரு ஜக்கிய இலங்கைக்குள் தம்மைத் தானே நிர்வாகிக்கக் கூடிய அதிஉயர் நிர்வாக சபையுடன் கூடிய அதிகாரத்தைப் பெற்றுக் கொள்வதற்கு சிறீலங்கா அரசுடன் இணைந்து செயற்படுவதே சாத்தியமானது.
வீரம் என்பது ஆயுதத்தைத் தூக்குவதில் மட்டுமே உள்ளதல்ல அதைக் கீழே வைத்து மக்களின் நன்மையை முன்னெடுப்பதிலேயே உண்மையான ஒரு தலைவனின் வீரம் அடங்கியுள்ளது.
அழகான பேச்சுக்களால் மக்களின் உணர்வுகளை தூண்டி விடுவதல்ல உண்மையான மக்களுக்கான் அரசியல் ஜனநாயகம். மக்களுக்கு நன்மை பயக்கக் கூடிய கொ:ள்கை நாம் கொண்டிருந்த கொள்கைக்கு முரணாக இருப்பினும் அதை ஆரய்ந்து அதற்கு செயல் வடிவம் கொடுக்க முற்படுவதே உண்மையான மக்கள் நலனை முன்னெடுக்கும் அரசியல்.
மயான பூமியில் கொள்கைகளைத் தூக்கிப் பிடிப்பதால் யாருக்கு என்ன லாபம் ?
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களின் உண்மையான நலனில் அக்கறை கொண்டிருந்தால் சிறிலங்கா அரசுடன் பேசும் சந்தர்ப்பத்தை உருவாக்கி இப்பேச்சுக்களில் இந்தியாவின் பங்களிப்பை உறுதிப்படுத்திக் கொள்வது ஒன்றேயே முக்கியமாக் கொள்ள வேண்டும்.
இன்றைய ஈழத் தமிழ்ச் சிறார்களின் கல்வியின் முக்கியத்துவத்தை உணர்ந்து அதன் செழிப்புக்கு வழி வகுக்க வேண்டும்.
டக்களஸ் தேவனந்தா போன்றோரை "துரோகிகள்" என வர்ணிப்பதை விடுத்து அவர்களுடன் இணைந்து எமது மக்களின் நலனுக்காக உழைக்க முன்வரவேண்டும்.
யாரும் யாருக்கும் எதிரிகள் அல்ல . ஈழத்தமிழர்களின் போராட்டத்தில் பல்வேறு காலநிலைகளில் பல்வேறு வகைகளில் இணைந்து கொண்டவர்கள் அனைவரும் நோக்கமும் ஈழத்தமிழர்களின் நிம்மதியான வாழ்க்கையே.
தமிழக தொப்புள் கொடி உறவுகளே !
அர்த்தமற்ற கோஷங்களை முன்வைத்து போராடுவதை விட தமிழ்த் தலைமைகளுக்கு அடையக்கூடிய தீர்வை பெறுவதற்கு அனைவரும் சேர்ந்து இந்தியாவின் பங்களிப்புடனான ஒரு இறுதியான தீர்விற்காக உழைப்பதன் அவசியத்தை எடுத்துச் சொல்லுங்கள்.
உங்கள் தொப்புள் கொடி உறவுகளின் எதிர்காலச் சந்ததியினரின் வாழ்க்கையைச் சீராக்கும் முக்கியத்துவத்தை உணர்த்துங்கள்.
அதுவே இன்று உங்களின் முன்னால் காலக்கடமையாக இருக்கின்றது.
(தொடரும்)
ஈழத்திலிருந்து நல்லையா குலத்துங்கன்
நெஞ்சம் நிறைந்த தமிழ்நாட்டுச் சகோதரர்களுக்கு,தமிழீழப் போராட்டத்தை தாமே குத்தகைக்கு எடுத்ததைப் போன்ற ஒரு நடவடிக்கையின் மூலம் ஈழத்தமிழ் மண்ணில் தமது இன்னுயிரைப் பயணம் வைத்துப் போராடிக் கொண்டிருந்த சக மாற்று இயக்கப் போராளிகளைச் சகோதரத்துவ மனப்பான்மையுடன் பார்க்காது மாற்றான் எனும் கண்ணோட்டத்தோடு பார்த்தது மட்டுமில்லால், தாம் அவர்களைத் தடை செய்கிறோம் என்று கூறி அனைவரையும் அடித்து விரட்டி எமது மக்களின் நியாயமான போராட்டக் கோரிக்கைகளை வலுவிழக்கச் செய்த பாசிசக் கும்பலான புலிகளின் எச்சங்களின் வாழ்வைப் புலம்பெயர் நாடுகளில் தக்க வைத்துக் கொள்வதற்காக நீங்கள் பயன் படுத்தப்படுகிறீர்கள் என்று உணராமல் இன்று ஒட்டு மொத்தமாக அனைத்து தமிழ் நாட்டு மக்களையுமே உபயோகிக்கிறார்கள் என்று நீங்கள் அறியாதது என்னை வியப்பிலாழ்த்துகிறது.
ஈழத்தமிழ் மக்களின் குரல்வளையை இன்று நீங்கள் எதிரிகள் என்று கோஷமிடும் சிறிலங்கா அரசாங்கம் நெரித்த கோரத்தை விடப் புலிகள் நெரித்த கோரமே கொடூரமானது.
1987ம் அண்டு மறைந்த அமரர் ராஜிவ் காந்தி அவர்களின் முயற்சியினால் சமாதனாம் காக்க வந்த இந்திய சமாதானப் படைக்கு நடந்த நிலையை நீங்கள் நன்கு அறிவீர்கள்.
@வடக்கு, கிழக்கு@ இரண்டையுமே இணைத்து ஒரு தற்காலிக மாகாண நிர்வாக சபையில் 12 இடங்களில் ஏழு இடங்களை புலிகளுக்கு அளித்து அதன் தலைவர் "மேதகு வே. பிரபாகரன்" அவர்களுக்கு முதலமைச்சர் பதவியும் பெற்றுக் கொடுக்கும் தீர்வை முன்மொழிந்த அமரர் ராஜிவ் காந்தி அவர்களின் உடலைச் சல்லடையாக ஆக்கியதே மூர்க்கத்தனமான புலிகள் அவருக்குச் செலுத்திய நன்றிக் காணிக்கை.
அன்றைய சிறிலங்காப் பிரதமர் பிரேமதாசா அவர்களுடன் கைகோர்த்து இந்தியப் படைகளுக்கெதிராகப் போர்தொடுத்த மாபெரும் வீரர்களல்லவா வே.பிரபாகரன் அவர்களின் படை.
அது மட்டுமா ? பிரேமதாசா அவர்களின் கூட்டு முயற்ச்சியுடன் அவர்களது கெலிகாப்டரைப் பயன்படுத்தி முல்லைத்தீவில் முகாமைத்து இருந்த புளட் அமைப்புத் தோழர்களை சிறிலங்கா அரசு கொடுத்த ஆயுதங்களுடன் உதவி கொண்டு துடிதுடிக்க கொன்றொழுத்த வீரச்சாகசத்தின் சொந்தக்காரர்களின் பச்சைப்புளுகுகளுக்காக இன்று உங்கள் பெற்றோர் தமது வாழ்வைத்தியாகம் செய்து பெற்றுத்தந்த கல்வ்விச் செல்வத்தைச் சீரழித்துக் கொண்டிருக்கிறீர்களே !
தமிழகத்தின் அரசியல்வாதிகளே !
நீங்களும் இதற்குத் துணை போகிறீர்களா ?
அன்ரு களத்திலே மேதகு வே,பிரபாகரனின் உயிரைக் காக்க தனது உயிரைப் பயணம் வைத்துப் போராடிய கருணா அம்மானுக்கு தமது அதியுயர் பட்டமாகிய "துரோகி" பட்டத்தை அளித்து எதிரி என்று அவர்களால் வர்ணிக்கப்பட்டவர்களின் பாசறைக்குள் தள்ளிய பெருமையுள்ளவர்களுக்காகவா நீங்கள் இன்று உங்கள் கல்வியைத் தியாகம் செய்கிறீர்கள் ?
ஒன்ரு மட்டும் உண்மை இன்று உங்களால் உக்கிரமாக நடத்தப்படும் இப்போராட்டம் ஈழத்தமிழ் மக்களுக்கு ஒரு தீர்வைப் பெற்றுத் தரப்போவதில்லை.
சரி அப்படியானால் இத்தகைய ஒரு போராட்டத்தின் விளைவு என்னவாக இருக்கும் ?
ஈழத்தமிழருக்கு தீர்வு எனப்படும் சாசனம் எழுதப்படும் வேளையிலே நீங்கள் காட்டியிருக்க வேண்டிய ஆஅத்ரவு இன்றைய இந்தக் கண்மூடித்தனமான போராட்டத்தினாலே வழுவிழந்து போகும் ஒரு செயலையே நீங்கள் செய்து கொண்டிருக்கிறீர்கள்.
உங்களால் துரோகிகள் என வர்ணிக்கப்படும் மிகச் சிலர்தான் இன்று எம் மக்கள் மத்தியிலே நின்று ஏதோ தமக்குத் தெரிந்த வழிகளிலே அவர்களுக்குப் பெற்றுக் கொடுக்கக் கூடிய சலுகைகளைப் பெற்றுக் கொடுத்துக் கொண்டு இருக்கிறார்கள்.
தாமே ஈழத்தமிழர்களின் விடிவுக்கு வழிவகுக்க வந்த தலைவர்கள் என்று தலையறுபட்ட கோழியொன்று திசைதெரியாமல் அங்குமிங்கும் ஓடுவது போல ஓடிக் கொண்டிருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரின் நில்லை இன்னும் கேலிக்குரித்தானதாகிறது.
இக்கூட்டமைப்புக்கு வெளியே நின்று உண்மைகளை நடுநிலையாக எடுத்தொயம்பி வந்த ஜயா ஆனந்தசங்கரி அவர்களையும் இவர்கள் தமக்குள் உள்விழுங்கி இன்று அவரின் குரலையும் அடக்கி விட்டார்கள்.
இந்தத் தமிழ்த்தேசிய கூட்டமைப்பினரின் வாரிசுகள் புலம்பெயர் நாடுகளில் வசதியான வாழ்வினை மிகவும் உல்லாசமாக வாழ்ந்து கொண்டிருக்கிறர்கள். ஆனால் எதுவுமற்ற ஏதிலிகளான ஈழத்தமிழர் இவர்களின் தலைமையால் இன்றும் புலிகளின் வறண்ட கனவுகளுக்கு தண்ணீர் ஊற்ற பயன்படுதப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
என்னைப் போன்றவர்கள் நம்பியிருந்த ஒரு தெளிவான தலைவியாகிய தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா அவர்களும் இன்று தமிழீழம் எனும் கோஷமெழுப்பும் அறிவிலிகளின் பக்கம் சாய்ந்து விட்டாரோ என்று எண்ணத் தோன்றுகிறது.
ஆயிரம் ஆயிரமாக புலம்பெயர் நாடுகளில் வாழும் தமிழர் "தமிழீழம்" எனும் இந்த போலிக்கனவிற்காக அள்ளிக் கொடுத்த செல்வமெல்லாம் இன்று @தகுவின்@ அடிவருடிகளால் ஏப்பம் விடப்பட்டு தமது கையாடல்களை மறைத்து விட வேண்டும் என்னும் ஆதங்கத்திற்காக தமிழக தொப்புள் கொடி உறவுகளின் துணையோடு மீண்டும் ஈழத்தின் மண்ணைக் குதறி புழுதியைக் கிளப்பி விடத் துடியாய்த் துடித்துக் கொண்டிருக்கிறார்கள்.
அந்தோ பாவம் நீங்களும் தமிழ் மீதும், உங்கள் தொப்புள் கொடி உறவுகளின் மீது கொண்ட அன்பினாலும் போலிக் கோஷங்களுக்குள் புதைக்கப்பட்டுக் கொண்டிருக்கிறீர்கள் .
(தொடரும்)
ஈழத்திலிருந்து நல்லையா குலோத்துங்கன்
1984ம் ஆண்டு தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தைத் தவிர்த்து ஏனைய மூன்று விடுதலை அமைப்புக்களுடன் கைகோர்த்தார் தானைத் தலைவர் , தமிழினத்தின் ஒட்டு மொத்தமான பிரதிநிதி வே.பிரபாகரன் . கைகோர்த்துக் கொண்டது மட்டுமில்லாமல் மற்றைய அமைப்புக்களின் தலைவர்களுடன் கரங்களை இணைத்து புகைப்படம் எடுத்து அவ்விணைவை பிரபலப்படுத்தினார்.நெஞ்சம் நிறைந்த தமிழ்நாட்டுச் சகோதரர்களுக்கு,
பின்பு நடந்ததென்ன "ஈரோஸ்" எனும் அமைப்பின் தலைவர் வே. பாலகுமாரன் அவர்களைத் முழுத் தலையாட்டியாக்கி தம்முள் விழுங்கிக் கொண்டதோடு தளத்தில் நின்று போராடிய மற்றைய தலைவர்களைத் தான் கைகோர்த்து உறவாடியவர்களின் உயிரைப் பறித்துக் கொண்டார் அவ்வுன்னதத் தலைவர்.
சரி அவர்கள் தான் தலைவர்கள் , ஆனால் இவரது இயக்கத்தில் இவரது கொள்கைகளை நம்பி வந்த இளம் தமிழ்த்தளிர்ளைப்போல மற்றைய இயக்கங்களில் இணைந்திருந்த மறவர்களை உயிரோடு கொளுத்தியும், துப்பாக்கிக்கு இலக்காக்கியும், சித்திரவதை செய்தும் அழித்தொழித்தார் இம்மேதகுத் தலைவர்.
இன்று பதாகைகளைத் தூக்கிக் கோஷமிடும் என் இனிய உறவுகளே ! அன்று நீங்களும் நானும் என்ன செய்து கொண்டிருந்தோம் ? ஞாபகமிருக்கிறதா ?
பிரபாகரன் அவர்களின் அரசியல் குரு "தேசத்தின் குரல்" அண்டன் பாலசிங்கம் அவர்களின் அழகிய அரசியல் விளக்கங்களினால் இம்மரணங்களை நியாயப் படுத்திக் கொண்டிருந்தோம். அன்று ராஜபக்சாவும், சிங்களர்களும் எங்கள் கண்ணுக்கு எதீரிகளாகப் படவில்லை இந்த அப்பாவி தமிழுணர்வு மிக்க இளைஞர்கள் எதிரிகளாகச் சித்திரிக்கப்பட்டார்கள்.
எத்தனை புத்திஜீவிகள் மெளனமாய் அன்று கண்ணீர் சிந்தித் தம் உணர்வுகளை உள்ளத்தின் அடியில் புதைத்து வைத்தார்கள் தெரியுமா ?
நடந்து போன பழைய சரித்திரத்தைக் கிளறுவதால் என்ன பயன் ? இன்றைய ஈழத் தமிழரின் இன்னல்களைப் போக்கும் செயல்களை ஆதரிப்பதை விடுத்து அலட்டுகிறாயே என்று என்னைத் திட்டாதீர்கள். எனது நோக்கம் அதுவல்ல.
சிந்திக்காமல் செயல்பட்டதன் விளைவைச் சித்திரிக்கவே நடந்தவைகளைக் குறிப்பிடுகிறேன்..
தமக்கு ஆதரவளிக்காமல் தம்மை விமர்சித்ததினால் "கூத்தாடிகள்" என தென்னிந்தியத் திரைக்கலைஞர்களை விமர்ச்சித்தவர்கள் தான் இவர்கள். அவர்களால் கூத்தாடிகள் என அழைக்கப்பட்டவர்களில் ஒருவரான மாண்புமிகு மறைந்த புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் நிதி உதவி இல்லாதிருந்திருந்தால் விடுதலைப்புலிகள் எனும் அமைப்பு பின்பு கோலோச்சிய அளவிற்கு என்றுமே வளர்ந்திருக்க முடியாது.
இன்று இவர்களின் எச்சங்களாகிய புலம்பெயர் புலிப்பினாமிகள் தாம் வாழும் நாடுகளில் தென்னிந்திய திரைப்படங்களை ஓடாமல் பகிஷ்கரிக்கப்பண்ணுவதன் மூலம் தென்னிந்திய திரைக்கலைஞர்களை பயமுறுத்தி அவர்களது மனசாட்சியை அடகு வைத்து விட்டு இவர்களின் அரசியல் வியாபாரத்தில் விற்பனைப்பொருட்களாக அவர்கள் பயன் படுகிறார்கள். (நடிகர் அஜித்திற்கு நடந்ததை அறிந்திருப்பீர்கள் )
அன்று செய்ததைப் போலவே இன்றும் ஈழமக்களின் உண்மைத் தேவைகள் என்ன என்பதை உணரத் தலைப்படாமல் அரசியல் அறிவிலிகள் போல என் இனிய தமிழ்நாட்டுச் சொந்தங்கள் நடத்தப்படுவதைப் பார்க்கும் போது என் மனம் வருந்திக் கண்களில் கண்ணீர் முட்டுகிறது.
இன்று மஹிந்த ராஜபக்ச போய் நாளை ஒரு ரணில் பதவிக்கு வந்ததும் தமிழ் ஈழம் பிரித்துக் கொடுக்கப்பட்டு விடும் என்று உண்மையாக நம்புகிறீர்களா ? நெஞ்சத் தொட்டுச் சொல்லுங்கள்.
ஈழத்தமிழரின் வாழ்க்கை இனி ஒன்று பட்ட ஈழத்தினுள்ளே அவர்களின் சகோதரகளாகிய சிங்கள மக்களுடன் ஜக்கியப்பட்ட ஒன்றாகவே இருக்கப் போகிறது. அத்தகைய கட்டமைப்புக்குள் ஈழத்தமிழருக்கு எத்தகைய சுயாதீன உரிமைகள் வரையறுக்கப்பட முடியும் என்பதைத் தீர்மனிப்பதே இன்று நாம் அவர்களுக்குச் செய்யக்கூடிய உதவியாகும்.
இதைச் செய்வதற்கு சிறீலங்கா அரசாங்கத்தை எதிர்த்து மகிந்த ராஜபக்ச்வைக் கூண்டிலேற்றுவது எவ்வகையில் உதவும் எண்ணிப்பார்த்தீர்களா ?
சதாமில்லாத ஈராக்கும் , கடாபி இல்லாத லெபனானும் இப்போது என்ன சந்தனத்திலா குளித்துக் கொண்டிருக்கிறது ?
இந்தியா எனும் மாபெரும் தேசம் தெற்காசியப் பிராந்தியத்தின் வல்லரசாகும். இன்றைய மேற்குலக நாடுகளின் பொருளாதார நெருக்கடியத் தீர்க்கும் தேவைக்கு இந்தியாவைப் பெருமளவில் அவர்கள் நம்பியிருக்கிறார்கள்.
ஈழத்தமிழரின் நியாயமான தீர்விற்கு இந்தியா எடுக்கப்போகும் முக்கியமான பாத்திரத்திற்கு வலுச் சேர்க்கப்போகிறீர்களா ? அன்றி அதை வலுவிழக்கச் செய்யப் போகிறீர்களா ?
உங்களது போராட்டங்கள் இந்தியாவின் பலத்தைக் குன்றச் செய்யுமேயல்லாது அதற்கு உதவாது. ஈழத்தமிழர் அனைவரும் இந்தியாவைத் தமது பெரிய அண்ணன் போலவே நோக்குகிறார்கள். ஆனால் அவ்வண்ணனின் கைகளைக் கட்டும் கயிறை நீங்கள் உங்கள் போராட்டங்களால் திரித்துக் கொண்டிருப்பதை உணர்கிறீர்களோ இல்லையோ தெரியாது. ஆனால் அதன் வலியை உங்கள் தொப்புள்கொடி உறவுகள் நிச்சயம் உணரத்தான் செய்வார்கள்.
அரசியல் உரிமை மறுக்கப்பட்டது , பேச்சுச் சுதந்திரம் பறிக்கப்பட்டது, மனித உரிமைகள் சூறையாடப்பட்டுக் கொண்டிருக்கின்றது எனும் கோஷங்களை முன்வைத்து ஆரம்பிக்கப்பட்டதே ஈழத்தமிழரின் போராட்டம்.
ஆனால் அதே பேச்சுச் சுதந்திரம் , கருத்துச் சுதந்திரம் , மனிதச் சுதந்திரம் எமது தேசியத் தலைவர் "மேதகு வே.பிரபாகரனால் " ஈழத்தமிழ் மக்களுக்கு வழங்கப்பட்டதா? எந்த உரிமைகளுக்காகப் போராடுகிறோம் என்று விடுதலைப் புலிகள் கோஷித்தார்களோ அதே உரிமை மாற்று இயக்கத் ஈழத்தமிழ் போராளிகளுக்கும், மாற்றுக் கருத்துக் கொ\ண்ட ஈழத் தமிழர்களுக்கும் அவரால் வழங்கப்பட்டதா ?
சிறீலங்காச் சிறைகளில் தமிழ்க்கைதிகளுக்கு இழைக்கப்பட்ட சித்திரவதைகளிலும், கொடுமைகளிலும் பார்க்க அதிக அளவிலான கொடுமைகள் புலிகளின் சித்திரவதை முகாம்களில் ஈழத் தமிழ் போராட்டக் வீரர்களும், மாற்றுக் கருத்துக் கொண்ட தமிழ் மக்களும் அனுபவித்தார்கள் என்பதை நீங்கள் அறிந்திருக்கிறீர்களா ? இல்லையெனில் அவைகள் மேதகு எனப்படும் மேதாவியினால் நடத்தப்பட்டன என்பதால் அதைச் சரியென ஏற்றுக் கொள்கிறீர்களா ?
எனதருமை தமிழ்நாட்டு அரசியல்வாதிகளே !
உங்கள் உணர்வுப்பானைகள் மூன்று வருடங்கள் கழித்து கொதிக்கின்றன . இதன் கொதிப்புக்குப் பின்னனி உங்கள் கட்சிகளின் அரசியல் லாபங்கள் என்பதை அறியாதவர்கள் மிகச் சிலரே ! உங்கள் மத்திய அரசைச் சங்கடங்களில் மாட்டி உங்களின் செல்வாக்கை உயர்த்திக் கொள்வதற்காக நிறைவேற முடியாத கோரிக்கைகள் எனும் பந்தங்களுக்கு தமிழ் மீதுள்ள உணர்வு எனும் எண்ணெய் வார்த்து தீ மூட்டிக் கொண்டிருக்கிறீர்கள்.
தமிழ் மொழி மீது உள்ள மோகம் வெறியாக மாறி விட்டால் அது உங்களையே பிடித்துத் தின்னும் பூதமாக மாறிவிடும் என்பதை நீங்கள் அறியாதவர்கள் என்பதை நான் நம்பத் தாயாரில்லை.
சீமான், திருமாவளவன் போன்றோர்கள் இத்தகைய பொறுப்பற்ற முறையில் நடப்பதை எதிர்பார்க்கலாம் ஆனால் பழகாலம் அரசியலில் அனுபவம் பெற்ற கலைஞர், முதல்வர் செல்வி ஜெயலலிதா, வை.கோ , ஜயா நெடுமாறன் போன்றோரும் இதே குட்டையில் ஊற முற்பட்டதுதான் மனதை வருத்துகிறது.
வலிமையான இந்தியா தான் தெற்காசிய நாடுகளின் பாதுகாப்புக்கு உத்தரவாதம். தயவு செய்து உங்கள் சுயநலத்திற்காக இந்தியாவின் வலிமையைச் சிதைத்து விடாதீர்கள். அது ஈழத்தமிழர்களுக்கு எவ்வகையிலும் உதவக்கூடிய செய்கையல்ல
(தொடரும்)
நல்லையா குலோத்துங்கன்
(ஈழத்திலிருந்து)
இவ்வாக்கம் தொடர் கட்டுரைகள் பகுதியில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
நெஞ்சம் நிறைந்த தமிழ்நாட்டுச் சகோதரர்களுக்கு,கண்ணீரோடு இவ்வீழத்தமிழன் எழுதும் கடிதம் . தொப்புள் கொடி உறவுகளாய் , உள்ளம் நிறைந்த உறவுகளாய் ஈழத்தமிழர்களாகிய எங்களின் நன்மையே கருத்திற் கொண்டு அல்லும் பகலும் போராட்டம் நடத்தும் இனிய உறவுகளுக்கு இதயம் கனிந்த நன்றியோடு கூடிய நெகிழ்வான வணக்கங்கள்.
தமிழ்நாட்டின் எதிர்காலத் தூண்களாகிய மாணவர் சமுதாயம் அகிலத்தின் பரப்பினிலே தம் தேசத்தின் வரைபடத்தை நிலைக்கச் செய்ய உதவும் உன்னதமான கல்வியைப் புறக்கணித்து தமது தொப்புள் கொடி உறவுகளுக்காகப் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.
உங்கள் அனைவருக்கும் இவ்விழத்தமிழனின் முதற்கண் நன்றியறிதலோடு கூடிய பணிவான வணக்கங்கள்.
என் தமிழ்நாட்டுச் சொந்தங்களே ! நீங்கள் இருவகைகளில் திசைமாற்றிப் பயன்படுத்தப்படுகிறீர்கள்.
ஒருபுறம்,
.உங்கள் மண்ணில் உங்கள் எதிர்காலச் சுபீட்சத்திற்காக உழைக்க வேண்டிய பல அரசியல் தலைவர்கள் உங்களின் உண்மையான தமிழ் மீதும் தொப்புள்கொடி உறவுகளின் மீதும் நீங்கள் கொண்டுள்ள அர்ப்பணிப்புடன் கூடிய அக்கறையைப் பயன்படுத்தி தமது அரசியல் தேர்தல் வெற்றி எனும் தேரை ஓட்டிக் கொண்டிருக்கிறார்கள்.
மறுபுறம் ,
ஏதும் அறியாத வாழ்வின் அடுத்தவேளை உணவுக்கு வழியறியாமல் தவித்துக் கொண்டிருந்த பச்சிளம் பாலகர்கள் தமிழீழம் எனும் அடையமுடியா இலக்கை அடையமுடியும் எனும் தவறான வழிகாட்டுதலில் ஈழத்து மண்ணில் உயிரிழந்து கொண்டிருக்கையில் தாம் ஓடித்தப்பி புலம்பெயர்ந்த தமிழர் எனும் பெயரில் புலனை விற்றுப் பிழைத்துக் கொண்டிருக்கும் தமிழீழ விடுதலைப்புலிகளின் எச்ச சொச்சங்கள் தமது புலம்பெயர் வாழ்க்கையைத் தக்க வைத்துக் கொள்வதற்காக உங்களின் உணர்வுகளின் மீது தமிழீழம் எனும் பகற்கனவுத் தேரை ஓட்டி கொண்டிருக்கிறார்கள்.
இவர்களைத் தவிர்ந்த மற்றொரு வகையான மேற்குலக பேரினவாத நாடுகள் ஈழத்தமிழர்களுக்கு உண்மையான உதவி தேவைப்படும் காலத்தில் வாளாவிருந்து விட்டு இப்போது தமது அதிகாரத் தேரை ஈழத்தில் ஓட்டுவதற்காக அங்கு அரசியல் தலைமை மாற்றத்தை வேண்டி புலித் தலைமை அழிக்கப்பட்டு மூன்று வருடங்களின் பின்னால் போர் விசாரணை வேண்டிக் கொண்டு எமது இனிய தமிழீழ உறவுகளைப் பகடைக் காய்களாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.
உறவுகளே !
நிறைவேற முடியாத கோரிக்கைகளைப் பதாகைகளாகத் தாங்கிக் கொண்டு உங்கள் கல்வியைச் சீரழித்துக் கொண்டிருக்கும் நீங்கள் கொஞ்சம் சிந்தித்துப் பார்க்கத் தவறினால் சிந்திக்க தவறியதால் சந்திக்கு இழுக்கப்பட்ட வரலாற்றுக்குச் சொந்தக்காரர்களாகி விடுவீர்கள்.
என்னடா இது ? ஈழத்தமிழனாய் இருந்து கொண்டு அவனுக்காகப் போராடும் எங்களை விமர்சிக்கும் இவனும் "துரோகிகள்" கும்பலில் சேர்ந்து விட்டானோ ? எனும் எண்ணம் எழுந்தால் அதைத் துடைத்தெறிந்து விடுங்கள்.
இப்பட்டத்தைக் குத்தி விடுவார்களோ எனும் பயத்தினால் உண்மையான எண்ணக்களை உள்ளத்தினுள்ளே அடக்கி வைத்து ஊமைகளாய், ஆட்டு மந்தைகளாய் தலையாட்டிக் கொண்டிருந்த எத்த்னையோ புத்திஜீவிகள் புதைக்கப் விட்டதன் எதிரொலிதான் இன்றைய ஈழத் தமிழனின் நிலை.
சரியோ , தவறோ ஒரு இயக்கத்தின் தலைவனாயிருந்து உயிர் நீத்த "உயர்திரு மேதகு வே.பிரபாகரன்" அவர்களின் மறைவையே சோக நிகழ்வாக வீரவணக்கம் செய்ய முடியாத வகையில் அந்த முழுப்பூசணிக்காயை சோற்றில் மறைத்து வைத்து வரலாறு தேடிக் கொண்ட உன்னத இனமல்லவா எம் ஈழத்தமிழர் ?
தொப்புள் கொடி உறவுகளே ! உங்களில் யாருக்காவது ஈழம் சென்று "மேழக்குடி யாழ்ப்பாணத்தவரின்" இன்றைய நிலையை கண்ணால் பார்த்து விட்டு போராட வேண்டும் எனும் எண்ணம் எழவில்லையா?
அரசியல் பலிகடாக்களாக தமிழ்நாட்டு மாணவர்கள் தம்முயிரைத் தியாகம் செய்யும் போது , புலம்பெயர் தேசத்தில் சரி அன்றி ஈழத் தமிழ்ப்பிரதேசங்களில் சரி எத்தனை பேர் தீக்குளித்துள்ளார்கள்?
ஓ உயிர் தமிழ்நாட்டுத் தமிழருக்கு துச்சம்தானே ! ஈழத்தமிழனின் உயிர் மட்டும், மிகவும் போற்றப்பட வேண்டியது அல்லவா?
அதை விடுங்கள் தமிழக மாணவர்களின் உயிர்த் தியாகத்தைத் தூண்டி சீண்டி விடும் உங்கள் அரசியல்வாதிகளின் குடும்பங்களைச் சேர்ந்த எத்தனைபேர் ஈழத்தமிழருக்காய் உயிர்நீத்துள்ளார்கள் ?
ஓ ! அவர்கள் தலைவர்கள் அல்லவா ? தொண்டர்கள் அல்லவே !
உங்களின் இந்த நிறைவேற முடியாத கோரிக்கைகளினால் ஓரளவாவது சீரடைந்து கொண்டிருக்கும் ஈழத்தமிழர் வாழ்க்கை எத்தனை ஆண்டுகள் பின் தள்ளப்படப் போகிறது என்பதைச் சிந்தித்தீர்களா?
என்னைத் தவறாகப் புரிந்து கொள்ளாதீர்கள் . நான் மகிந்த ராஜபக்சாவின் ஆதரவாளனோ அன்றி இலங்கை அரசாங்கத்தின் ஆதரவாளனோ அல்ல .
சிங்கள மக்கள் அனைவரும் இனத்துவேஷிகளாகவும், தமிழர்களை அழிக்கக் கங்கணம் கட்டிக் கொண்டிருப்பவர்களாகவும் சித்தரிக்கப்படுவதை எதிர்ப்பவன்.
தமிழீழம் என்பதை என்றுமே இந்தியாவோ அன்றி மேற்குலக நாடுகளோ ஏற்றுக் கொள்ளாது என்பதை புரிந்து கொண்டவன்.
இன்றைய உங்களது இந்தப் போராட்டத்தின் கோஷம் நிறைவேற்றப்படாத கோரிக்கைகளை முன்வைத்திருப்பதனால் வெர்றி சாத்தியமில்லை என்பதைப் புரிந்து கொண்டவன்.
உலகத்தமிழர்கள் அனைவரினதும் நலன்களைக் கருத்தில் கொண்ட உன்னத சொந்தங்களான உங்கள் போராட்ட உத்வேகம் உதவாதவர்களின் வழிகாட்டுதலினால் செலவழிந்து உண்மையாக தேவைப்படும் நேரத்தில் உபயோகிக்கப்பட முடியாத வகை வலுவிழந்து போவதை விரும்பாதவன்
இன்றைய இலங்கைத் தலைநகரம் கொழும்பை எடுத்துக் கொள்ளுங்கள் எத்தனை ஆயிரம் ஈழத்தமிழர்கள் மிகவும் வெற்றிகரமாக சிங்களர்கள் மத்தியிலே வியாபாரம் செய்து கொண்டு லாபமிக ஈட்டிக் கொண்டு வளமாக வாழ்கிறார்கள் .
சிங்கள மக்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாக இனத்துவேஷம் கொண்டவர்களாக இருந்திருந்தால் இது எவ்வாறு சாத்தியமாகியிருக்கும் ?
உங்களின் இடையறாத ஈழத்தமிழர்களின் இன்னல் அகற்றும் போராட்டம் இனத்துவேஷமிக்க போராட்டமாக புலம்பெயர் புலிப்பினாமிகளின் கைக்கூலிகளாக இயங்கும் சில தமிழ்நாட்டு அரசியல்வாதிகளினால் உருமாற்றப்பட்டுக் கொண்டிருக்கும் செய்கை இத்தமிழர்களின் வாழ்வில் எத்தகைய பாதிப்புகளை ஏற்படுத்தும் என்று சிந்தித்தீர்களா ?
இதே வகையில் தான் ஈழத்தமிழர்களுக்கான வாழ்வியல் உரிமைப்போராட்டமாக ஆரம்பித்த போராட்டம் புலிஅராஜகத்தினால் உருமாற்றப்பட்டு இனத்துவேஷ போராட்டமாக மாறியதன் விளைவு இன்று நாம் காணும் ஈழத்தமிழரின் நிலை.
ஈழத்தமிழர் பிரதேசத்தின் முதல் அமைச்சராக கோலோச்ச வேண்டிய பிரபாகரன் அராஜகப் பாதையைத் தேர்ந்தெடுத்ததினால் இன்று நந்திக்குடாவில் நாசகமாக்கப்பட்டது கண்டு கண்ணீர் சிந்தியவர்களில் நானும் ஒருவன்.
ஏன் என்கிறீர்களா?
ஓராயிரம் பாலச்சந்திரன்களின் மறைவுக்கு காரணமாயிருந்த பிரபாகரன் தனது மண்ணில் தன் மக்களிடையே மறைந்த போது வீரவணக்கம் செய்யக்கூட முடியாத நிலையைக் கண்டததினால் இதைத் தோற்றுவித்தது இன்று உங்களைத் திசைமாற்றி வழிநடத்தும் அதே புலம்பெயர் புலிப்பினாமிகளின் கைக்கூலிகள் தான்.
(தொடரும்)
நல்லையா குலத்துங்கன்
(ஈழத்திலிருந்து)
லயோலா கல்லூரி மாணவர்களின் ‘தன்னெழுச்சியான’ போராட்டத்தைத் தொடர்ந்து தமிழகமெங்கும் புரட்சி அலை பொங்கி எழ ஆரம்பித்திருக்கிறது. ஏற்கெனவே கொந்தளித்துக் கொண்டிருந்த இணையவெளியைத் தொடர்ந்து இப்போது ஊடக வெளியும் கொதிக்கத் தொடங்கியிருக்கிறது.காங்கிரஸ், திமுகவை தேர்தலில் தோற்கடிக்க இந்த ‘எழுச்சி’ உதவும் என்பதால், அதிமுக புன்முறுவலுடன் இந்த போராட்டங்களை மறைமுகமாக ஊக்குவித்து வருகிறது. ஆனால், ஜெயலலிதாவின் கையை மீறி இந்தப் போராட்டம் போக அனைத்து வாய்ப்புகளும் உண்டு. இந்தப் போராட்டத்தின் சில கோரிக்கைகள்: “இலங்கை அரசை சர்வதேச குற்றவாளிக்கூண்டில் நிறுத்த வேண்டும். வெறும் போர்க்குற்றம் அல்லது இனப்படுகொலை செய்த அரசு என அதற்கு தண்டனை வாங்கித் தரவேண்டும்.
இந்தியா இலங்கையுடன் அனைத்து பொருளாதார உறவுகளையும் துண்டித்துக் கொள்ளவேண்டும். இந்தியாவுக்கும் இந்தப் பேரழிவில் முழு பங்கு உண்டு. தமிழகத்துக்கு என்று தனியாக வெளியுறவுத்துறை அமைக்கப்பட வேண்டும். இதையெல்லாம் செய்யவில்லையெனில் நாங்கள் வரி கட்டமாட்டோம்.”
இந்தத் ‘தன்னெழுச்சியான’ கோரிக்கைகள் மாணவர்களுடையதுதான் என்ற நம்பிக்கை அனைவருக்கும் வரவேண்டும் என்பதற்காக சில மாணவத்தனமான கோரிக்கைகளும் இடம்பெற்றிருக்கின்றன. மற்றபடி இந்த போராட்டத்தின் முக்கிய நோக்கம், இலங்கை செய்தது இனப்படுகொலை. இந்தியாவும் அதற்கு முழு உடந்தை. இந்த இரண்டு விஷயங்களைத் தமிழக மக்கள் மத்தியில் பரப்பவேண்டும் என்பது மட்டுமே.
மிகவும் உணர்வுபூர்வமான இந்தப் பிரச்சினையில் தமிழகத்தில் இப்போது ஒருவித பாசிச மாற்று அமைப்பு கட்டமைக்கப்பட்டு வருகிறது. இலங்கைப் பிரச்னையில் தனி ஈழத்துக்குக் குறைவாக யார் பேசினாலும் அவர்கள் தமிழினத் துரோகியே என்ற நிலையை உருவாக்கி வருகிறார்கள். இலங்கை அரசு மோசமான குற்றங்களை இழைத்திருப்பது உண்மையே. ஆனால், இந்தக் குற்றச்சாட்டை முன்வைக்கும் ஒருவர் வேறு சில விஷயங்களையும் கட்டாயம் பேசியாக வேண்டும்.
இலங்கை ஈழப் பிரச்சினை என்பது நீண்ட நெடும் வரலாறைக் கொண்டது. பல்வேறு ஊடுபாவுகள் கொண்டது. ஈடுபட்ட அனைத்து தரப்புகளின் கைகளிலும் ரத்தக் கறை உண்டு. ஆனால், அவை எல்லாம் பின்னுக்குத் தள்ளப்பட்டு ஒற்றை குற்றவாளி (சிங்கள-இந்திய கூட்டணி) மட்டும் கட்டம் கட்டப்படுவதற்கான சர்வதேச அரசியல் செயல்பட ஆரம்பித்திருக்கிறது. விடுதலைப் புலிகள் செயல்பட்டுவந்த காலகட்டத்தில் அந்த அமைப்பை தீவிரவாத அமைப்பு என்று சொல்லி இலங்கைக்கு ஆதரவு அளித்துவந்த அமெரிக்க அரசு இன்று யோக்கியன் போல் நீதிபீடத்தில் ஏறி அமர்ந்து இலங்கையைக் குற்றம்சாட்டுகிறது. அதோடு நின்றுவிடாமல் இந்திய அரசையும் சேர்த்தே குற்றவாளிக் கூண்டில் ஏற்றும் தந்திரத்தையும் சர்வதேச அரசியல் சக்திகள் செய்ய ஆரம்பித்திருக்கின்றன.
இலங்கையைப் பொறுத்தவரையில் தமிழர்களின் நலன் பாதுகாக்கப்பட வேண்டும் அவர்களுக்கு மாநில சுய ஆட்சி பெற்றுத் தரவேண்டும் என்பதுதான் நியாயமான நோக்கம். எனவே, ராஜீவ்காந்தி அந்த உடன்பாட்டுக்கு ஆத்மார்த்தமாக முயன்றார். இலங்கையின் வேண்டுகோளின் பேரில் அமைதிப்படை என இந்திய ராணுவத்தை அனுப்பினார். தனி ஈழம் என்பது மிகவும் நியாயமற்ற கோரிக்கை என்பதுதான் இந்தியாவின் கொள்கை. இந்தியா மட்டுமல்ல உலகின் பெரும்பாலான நாடுகளின் தீர்மானமும் அதுவே.
ஆனால், இந்தியாவை இந்த போரில் சிக்க வைக்க வேண்டும் என்ற சர்வதேச தந்திரத்தின் அங்கமாக இலங்கை இந்திய அமைதிப் படையை நாட்டுக்குள் முதலில் அனுமதித்தது. ஆனால், அடுத்தகட்டமாக தன்னுடைய இறையாண்மைக்கு இழுக்காகிவிட்டது என்ற போர்வையில் இந்திய ராணுவத்தைத் துரத்தி அடிக்கத் தீர்மானித்தது. தற்காலிக உடன்பாடாக விடுதலைப் புலிகளுடன் நட்புறவு கொண்டு, இந்திய ராணுவம் செய்தவற்றை விட மிக அதிகமான குற்றச்சாட்டுகளை அதன் மீது சுமத்தி அதை இலங்கையிலிருந்து அகற்றினார்கள். அடுத்த தேர்தலில் ராஜீவ் வென்றுவிடுவார் என்ற நிலை ஏற்பட்டபோது, மீண்டும் இந்திய அமைதிப் படையை அனுப்பிவிடுவாரோ என்ற பயத்தில், விடுதலைப் புலிகள் ராஜீவையும் அப்பாவிக் காவலர்களையும் இந்திய மண்ணில் கொன்றார்கள். அதுவரை விடுதலைப் புலிகளுக்கும் இலங்கைத் தமிழர்களுக்கும் ஆதரவாக இருந்த தமிழக மாநிலக் கட்சிகளும் மக்களும் விடுதலைப் புலிகளுக்கு எதிர்நிலையை எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
(முன்னாள்) இந்தியப் பிரதமரைக் கொன்றதற்காகவும் தமிழகத்தில் பிரிவினை சக்திகள் பலம் பெற்றுவிடக்கூடாது என்பதற்காகவும் விடுதலைப் புலிகளை ஒழிக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்த இந்திய காங்கிரஸ் அரசு, இலங்கை அரசுக்கு விமான, கடல் சார்ந்த படைகளின் உதவியைத் தந்தது. முழுக்க முழுக்க விடுதலைப் புலிகளை ஒழிக்கத் தந்த இந்த உதவியானது இலங்கையில் நடந்த இன்ன பிற வன்முறைகளுக்குப் பயன்படுத்தப்பட்டு இன்று இந்தியாவும் போர் குற்றவாளியாக நிறுத்தப்பட்டிருக்கிறது. நாளை இந்தியா மீதும்கூட இனப்படுகொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்படலாம். ஏற்கெனவே ஆரிய திராவிட கதைகள் வேறு வலுவாக வேரூன்றித்தான் இருக்கின்றன.
இந்தியா நிச்சயமாக இலங்கைக்கு எதிரான கடுமையான நிலைப்பாடை எடுக்கவே செய்யாது. அது முடியவும் செய்யாது. இலங்கை அரசு உள்நாட்டில் கலகம் விளைவித்தவர்களை அடக்கியிருக்கிறது. இலங்கையில் சீனா காலூன்ற இடம் கொடுத்துவிடக்கூடாது. தமிழக பிரிவினை சக்திகள் வளர இடம் கொடுக்கக்கூடாது என்பது போன்ற வெளிப்படையான காரணங்களில் ஆரம்பித்து, ராஜிவ் கொல்லப்பட்டபோது அருகில் எந்த காங்கிரஸ் தலைவரும் இல்லாமல் போனது எப்படி? சம்பவ இடத்தில் கிடைத்த முக்கிய வீடியோ எப்படி மாயமாக மறைந்தது என்ற விடைதெரியாத கேள்விகள் வரை பல காரணங்கள் இருக்கின்றன. எனவே, இந்தியா கடைசிவரை இலங்கைக்கு சாதகமாகவே நடந்துகொள்ளும். சர்வதேச அரங்கிலும் தமிழ் மக்கள் மனங்களிலும் இந்தியா மீதான மதிப்பு மேலும் குறையவே செய்யும்.
இப்படியான சூழலில் லயோலா கல்லூரி மாணவர்கள் ‘தன்னெழுச்சியாக’ போராட்டத்தை மூன்று மிக அபாயகரமான நோக்கங்களைக் கொண்டு ஆரம்பித்திருக்கிறார்கள். முதலாவதாக இலங்கையில் நடந்தது இனப்படுகொலை என்று சொல்கிறார்கள். இது முழுக்க முழுக்க தவறானது. கிழக்குப் பகுதி தமிழர்கள், மலையகத் தமிழர்கள், இஸ்லாமியத் தமிழர்கள் என பெரும்பான்மையான தமிழர்கள் விடுதலைப் புலிகளுக்கு எதிரானவர்களே. விடுதலைப் புலிகளுடைய கட்டுப்பாட்டுக்குள் இருந்த பகுதியில் மட்டும்தான் இலங்கை ராணுவம் தன் தாக்குதலை நிகழ்த்தியிருந்தது. கொழும்பிலும் பிற இலங்கையின் பகுதிகளிலும் ஈழத்தைவிட மிக அதிக எண்ணிக்கையிலான தமிழர்கள் வசித்து வந்திருக்கிறார்கள். இப்போதும் வசித்து வரத்தான் செய்கிறார்கள். இனப்படுகொலை என்றால் அவர்களும் சேர்த்தே கொல்லப்பட்டிருப்பார்கள். ஆனால், இலங்கை அரசு அவர்களை ஒன்றும் செய்யவில்லை.
இரண்டாவதாக, இந்தப் போரில் விடுதலைப் புலிகள் செய்த அட்டூழியங்கள் குறித்து சிறு குறிப்பு கூடக் கிடையாது. பொய்யைவிட அரை உண்மைகள் மிக ஆபத்தானவை. இலங்கை – ஈழப் பிரச்சினையில் இலங்கை அரசு எந்த அளவுக்கு வன்முறையில் ஈடுபட்டதோ அதற்கு சற்றும் குறையாத அட்டூழியங்களை விடுதலைப் புலிகள் இயக்கமும் செய்து வந்திருக்கிறது.
ஐநூறு ஆண்டுகளுக்கு முன்னால் யார் ஆண்டது அதற்கு முன் யார் ஆண்டது என்பதெல்லாம் ஒருவகையில் நிரூபிக்க முடியாத உண்மைகள். நவீன அரசு எப்போது எந்த ஒப்பந்தத்தின் பேரில் உருவாகிறதோ அதன் அடிப்படையில்தான் சிந்தனைகளும் செயல்பாடுகளும் இருக்கவேண்டும். சேர சோழ பாண்டியர்களின் போர்களால் நிறைந்ததுதான் தமிழக சரித்திரமும். நாளையே மதுரையை எங்களுக்குப் பிரித்துக்கொடு என்று பாண்டியர்கள் போராடினால் தமிழ் இறையாண்மை அரசு அவர்களை ஒடுக்கத்தான் செய்யும். தங்களுடைய நலன்கள் போதிய அளவுக்கு கவனிக்கப்படவில்லை என்று கருதும் பிரிவினர் தங்கள் எதிர்ப்பை ஆதி முதல் அந்தம் ஜனநாயக முறையில் வெளிப்படுத்தி உரிமைகளை வென்றெடுக்கத்தான் முயற்சி செய்யவேண்டும்.
கேவலம் ஒரு கருத்துக் கணிப்பில் தனக்கு மக்கள் ஆதரவு இல்லை என்ற விஷயத்தை வெளியிட்ட அற்ப காரணத்துக்காக மூன்று தமிழ் அப்பாவிகளை உயிருடன் கொளுத்திய சம்பவத்தையும் லஞ்ச வழக்கில் கைது செய்யப்பட்டதற்கு பேருந்தை எரித்து தமிழ் மாணவிகளைக் கொன்றவர்களையும் இந்த இடத்தில் நினைத்துப் பார்ப்பது நல்லது. இவ்வளவு ஏன், சாதிப் பிரச்சினைகளில் கொல்லப்படுபவர்கள் எல்லாருமே அப்பாவித் தமிழர்கள்தானே. சிறு எதிர்ப்புகூட தெரிவிக்காத நிலையிலேயே இந்தப் படுகொலைகள் என்றால் நாட்டைப் பிரித்துக் கொடு என்றால் தமிழக அரசு தமிழ் மக்களை எப்படி நடத்தும் என்பதை யோசித்துப் பார்த்துவிட்டு அடுத்த வார்த்தைகளைப் பேசுவது நல்லது. அகதிகளாக தமிழகம் வந்து ஆண்டுக்கணக்காக துன்பத்தில் தவிப்பவர்களுக்கு இந்த தமிழினத்தலைவர்களும் காவலர்களும் இனமான எழுச்சி நாயகர்களும் செய்து கிழித்தது என்ன என்பதையும் யோசித்துப் பார்க்கவேண்டும்.
விடுதலைப் புலிகள் இஸ்லாமியர்களைப் போட்டது போட்டபடி துரத்தியடித்ததில் இருந்து அவர்களை இலங்கை அரசின் கைக்கூலிகள் என்று கண்டந்துண்டமாக வெட்டியும் வெடி குண்டு வைத்தும் கண்மூடித்தனமாகக் கொன்றழித்திருக்கிறார்கள். பாலச்சந்திரனை விட மிகச் சிறிய குழந்தைகளையெல்லாம் கூட மசூதியில் தொழுது கொண்டிருந்தபோது நேருக்கு நேர் சுட்டு வீழ்த்தியிருக்கிறார்கள். இதைவிட தமிழ் இனத்துக்குள்ளேயே பிற போராட்டக் குழுவினரை சரமாரியாகக் கொன்று குவித்திருக்கிறார்கள். ஆயுதக் கடத்தலில் ஆரம்பித்து அனைத்துவகையான திரைமறைவு வேலைகளிலும் ஈடுபட்டிருக்கிறார்கள். இவை குறித்து ஒரு வார்த்தைகூட இன்றைய போராட்டத்தில் முன்வைக்கப்படவில்லை.
இலங்கைக் கடற்படையால் தமிழக/இந்திய மீனவர்கள் தாக்கப்படுவது தொடர்பாக பேசப்படுபவற்றைக் கொஞ்சம் சீர்தூக்கிப் பார்த்தாலே அரை உண்மை எவ்வளவு அபாயகரமானது என்பது புரிந்துவிடும். தமிழகப் பகுதிகளில் மீன்வளம் குறைந்து வருவது, தமிழக மீனவர்கள் வலிமையான மோட்டர் படகுகளைப் பயன்படுத்துவது, இலங்கை மீனவர்களுக்கு அவர்களுடன் போட்டிபோட முடியாத நிலை, தமிழ் மீனவர் குழுக்களுக்குள் நடக்கும் சண்டைகள் கூட இலங்கை அரசின் மீது பழிபோடப்படுதல், அரசியல் உள்நோக்கத்துடன் மிகைப்படுத்திக் கூறப்படும் நிகழ்வுகள், கைது போன்ற இலங்கைக் கடற்படையின் முதல் கட்டத் தொடர் எச்சரிக்கைகள், மாற்று மீன் பிடித் தடங்களை உருவாக்குதல், கடல் பாசிகள் வளர்த்தல் என எதுவுமே பேசப்படாமல் வெறுமனே இலங்கை அரசு தமிழக/இந்திய மீனவர்களைக் கொல்கிறது என்ற ஒற்றைக் குற்றச்சாட்டு பிரச்சினையை மேலும் பெரிதாக்க மட்டுமே செய்யும்.
மக்களாட்சியில் மக்கள்தான் மன்னர்கள் - அவர்கள் தேர்ந்தெடுக்கும் பிரதிநிதிகள்தான் அடுத்தகட்ட மன்னர்கள் என்பதுதான் பொதுவான நம்பிக்கை. ஆனால், உண்மையில் தேசங்கள் இவர்களால் ஆளப்படுவதில்லை. சர்வதேச வஞ்சக உளவாளிகளால் அது ஆளப்படுகிறது. பிரிவினைவாதிகளுக்கு உணவிடும் அவர்கள்தான் இறையாண்மையைக் கட்டிக் காக்கவேண்டும் என்ற பேரில் அரசையும் ஆட்டுவித்துவருகிறார்கள். சதுரங்கத்தின் இரண்டு பக்கமும் அவர்களே அமர்ந்து ஆடும் இந்த ஆட்டத்தில் உருட்டப்படும் காய்கள்தான் நாமும் நம் தலைவர்களும்.
இலங்கையில் இன்றைய அரசியல் நிலை சூடு பிடித்து காணப்படுகின்றது. சிறியவர் முதல் பெரியோர் வரை அனைவரும் கதைத்துவிடக்கூடிய விடயம் அரசியல். ஆனால் இலங்கை நோக்கிய காலப்பார்வையில் எல்லோரும் தேர்ச்சி பெற்றிருக்கவில்லை என்பதுதான் உண்மை. இலங்கை அரசையோ, தமிழீழ விடுதலைப் புலிகளையோ அல்லது ஏனைய ஆயுதக் குழுக்களையோ அரசியல் ரீதியாக ஆராயும் போது காலப் பார்வை என்பது முக்கியம் பெறுகின்றது. அந்த வகையில் 1947 ம் ஆண்டில் இருந்து 2002 வரையுள்ள காலப்பகுதிக்குள் நிகழ்ந்தவற்றை தினமும் தொகுத்துரைக்க இந்தச் சித்தன் எண்ணுகின்றேன்.1947 - சோல்பரி அரசியல் யாப்பு அமுல். இதுவே நாடாளுமன்ற நடைமுறையை இலங்கைக்கு கொண்டு வந்தது.
நாடாளுமன்றத்திற்கான முதல் பொதுத் தேர்தல்.
தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி (UNP) வெற்றி பெற்று டி.எஸ்.சேனநாயக்காவை பிரதமராகக் கொண்ட மந்திரி சபை அமைக்கப்பட்டது.
சுதந்திரன் பத்திரிகை தந்தை செல்வாவினால் ஆரம்பிக்கப்பட்டது.
1948 - இலங்கை பிரித்தானியாவிடமிருந்து சுதந்திரம் பெற்றது (04.02.1948)
மலையக தமிழ் மக்களின் குடியுரிமை பறிக்கப்பட்டது (15.11.1948)
1949 - ஜி.ஜி.பொன்னம்பலம் அவர்கள் டி.எஸ்.சேனநாயக்காவின் அமைச்சரவையில் சேர்ந்துகொண்டார்.
தந்தை செல்வாவினால் சமஷ்டி கட்சி (F.P) ஆரம்பிக்கப்பட்டது.
நாடாளுமன்றத் தேர்தல்கள் திருத்தச்சட்டம் கொண்டுவரப்பட்டது.
1950 - இலங்கை - இந்திய காங்கிரஸ், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் என வத்தளையில் நடந்த பத்தாவது அமர்வில் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
கல்லோயாவில் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றம்.
1951 - ஐக்கிய தேசிய கட்சியிலிருந்து S.W.R.D.பண்டதரநாயக்கா விலகல்.
பண்டாரநாயக்கா சிறிலங்கா சுதந்திரக் கட்சியை ஸ்தாபித்தல்.
(மீதமும் வரும்)
சித்தன்

