பாசந்தான் காட்டி பரிதவிக்க விட்டே
தேய்ந்தெழும் மதி யன்னதா யிருந்து
சீர்பணி செய்வார்க்கு செய்ய விடாதார்
சீரும் பணியன்னதாய் கருமமே செய்வர்
சீர்அறு விடமன்னவர் இவரில் மயங்கி
சீரழிவாரு முளர் ஒண்ணாதார் இன்னாரே!
குற்றம் செய்வார் குவலயத்து அறுப்பர்
கூனாமலே மனிதத்தை மாடென அறுப்பர்
நாற்றம் இவர் செயல்கள் சொல்லிட
நாறு மிவரும் ஒண்ணாத இன்னாரே!
சற்றும் தயங்காதார் இவர் சலிக்காது
சட்டெனவே பாவங்கள் பன்னூறு செய்வர்
முற்றும் துறந்தாலும் கழுவாயை வேண்டார்
மூடரா மாறாது ஒண்ணாதாரைக் காண்பீர்!
சிரசு மீதமர்ந்து குருதி பவ்வியமாய்
சாலவருந்தும் பேனன்னார் இன்னார்
பெரியார் என்று எண்ணி மாளாமல்
பார்ப்பீர் இவர் ஒண்ணாதார் காண்பீர்!
சத்தியங்கள் பலசொல்லி சேர்ப்ப ரெம்மை
சத்தியமேதென்று உன்னாது சீரழிவம்நாம்
பைத்தியம் நமக்கில்லை தெளிவீர் இன்னார்
பாரின் ஒண்ணாதார் என்பதை அறிவீர்!
பல்லிளித்து முத்தங்கள் தருவார் பின்னே
பல்லிளித்து முத்தம் தருவதாய் கடித்திடுவர்
சொல்லிச் சொல்லி தேய்ந்தது கரங்கள்
சகத்தில் ஒண்ணாதாரை காண்பீர் நீர்!
-‘கவித்தீபம்’ கலைமகன் பைரூஸ்
தீக்குச்சிதீண்டி
கதிரவன்தான்
கரையுமோ?
பூனைமோதி
யானைதான்
வீழுமோ?
பூமியழுது
வானம்தான்
நனையுமோ?
வானம் அழுதால்
பூமிதான்
தாங்குமோ?
காவிகள்
இனவாதக்
கத்திபிடிக்கலாம்!
அதற்கு
அரசு எனும்
அரக்கன்
துணையும் நிற்கலாம்!
பன்றிகள் சேர்ந்து
கூட்டமைக்கலாம்!
இனத்தையே
அடகுவைத்து
பரதேசிகள்
பதவியெனும்
எலும்பு
கடிக்கலாம்!
காற்று
அடிக்கலாம்!
புயல்
அடிக்கலாம்!!
ஆனால்,
கடலலைகள்
ஓய்வதில்லையே...!
- எம்.பீ.அன்வர்
இலங்கையில் பள்ளிக்கூடத் தேவைக்காக 8 தேங்காய்கள் திருடியதன் பேரில் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றின் முன்கொண்டுசென்று, தற்போது பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ள 13 வயதுச் சிறுமியின் கதைபற்றிவாசகர்கள் அறிவர். நாளுக்கு நாள் இந்த விடயம் சார்ந்த செய்திகள் இலங்கையின் எழுத்து மற்றும் மின்னூடகங்களில் வெளிவந்து கொண்டிருக்கின்றன. அது சார்ந்த கவிதையொன்று இங்கே களம் காண்கிறது.
இல்லாமை எனில் இருப்பதுகண்டும்
இயல்பா யெலாரும்போல் எனைநோக்கி
பொல்லா லடிப்பது போல் சொன்னார்
பூச்சிக்கென கொண்டுவா பணமென!
இல்லாமையால் தவழும் எனில்வெட்கம்
இன்று தராதுவிடின் பெரும்வெட்கம்
பொல்லா களவென்ன களவோ எனஉன்னி
பறித்த தேங்காயில் பறித்தேன் சில!
கண்டுவிட்டார் எனை விரட்டிவந்தார்
கூண்டுக்குள் அடைத்திட பாடாய்ப்பட்டார்
கண்டார் பெருமகிழ்ச்சி எனையுள்ளேதள்ளி
கண்டேன் சமூகத்தை அழுதேன் எண்ணி!
பேராறாய் நான் அழுதிட்டபோதும் பாரார்
பரிதவிக்கின்ற நிலையும் காணார்
ஊரவர் எல்லோரும் பகட்டாய் வாழ
ஊர்பள்ளியில் படிப்பதற்காய் செய்தேன்பிழை!
இனியும் வாராதார் யாருளர் திருட்டுக்குள்
இப்படி யநியாயங்கள் மலிந்தால் பாரில்
தீனியிலை எங்களுக்களுக்குள் அவர்க்கு
தேவை எம்பணம் மட்டும் - அதிலேகுறியவர்!
போதும் போதுமையா உங்கள் நன்மைகள்
பரிதவித்து மடிகின்றோம் வேண்டாம் கரம்
சூதும் வாதும் வேதனைசெயும் என்பார்
சத்தியமாய் எமைநோக்காயின் வருமிடரே!
கூண்டுக்கு ளடைத்து மானம்பறித்து
குற்றம்கண்டு பிணைக்குள் விடுதலைதந்து
ஈண்டு செய்த நல்லவரே நீங்கள் ஐயா!
இத்தலத்து அழித்திடவே வறுமை பாரும்!
-கலைமகன் பைரூஸ்
இல்லாமை எனில் இருப்பதுகண்டும்
இயல்பா யெலாரும்போல் எனைநோக்கி
பொல்லா லடிப்பது போல் சொன்னார்
பூச்சிக்கென கொண்டுவா பணமென!
இல்லாமையால் தவழும் எனில்வெட்கம்
இன்று தராதுவிடின் பெரும்வெட்கம்
பொல்லா களவென்ன களவோ எனஉன்னி
பறித்த தேங்காயில் பறித்தேன் சில!
கண்டுவிட்டார் எனை விரட்டிவந்தார்
கூண்டுக்குள் அடைத்திட பாடாய்ப்பட்டார்
கண்டார் பெருமகிழ்ச்சி எனையுள்ளேதள்ளி
கண்டேன் சமூகத்தை அழுதேன் எண்ணி!
பேராறாய் நான் அழுதிட்டபோதும் பாரார்
பரிதவிக்கின்ற நிலையும் காணார்
ஊரவர் எல்லோரும் பகட்டாய் வாழ
ஊர்பள்ளியில் படிப்பதற்காய் செய்தேன்பிழை!
இனியும் வாராதார் யாருளர் திருட்டுக்குள்
இப்படி யநியாயங்கள் மலிந்தால் பாரில்
தீனியிலை எங்களுக்களுக்குள் அவர்க்கு
தேவை எம்பணம் மட்டும் - அதிலேகுறியவர்!
போதும் போதுமையா உங்கள் நன்மைகள்
பரிதவித்து மடிகின்றோம் வேண்டாம் கரம்
சூதும் வாதும் வேதனைசெயும் என்பார்
சத்தியமாய் எமைநோக்காயின் வருமிடரே!
கூண்டுக்கு ளடைத்து மானம்பறித்து
குற்றம்கண்டு பிணைக்குள் விடுதலைதந்து
ஈண்டு செய்த நல்லவரே நீங்கள் ஐயா!
இத்தலத்து அழித்திடவே வறுமை பாரும்!
-கலைமகன் பைரூஸ்



