சுகாதார பரிசோதகர்கள் வெளியே செல்லார்...... காரணம் எதுவோ?
இரண்டாயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் சுகாதார பரிசோதகர்கள் சாதாரண உடையில் அலுவலக காரியங்களில் ஈடுபடத் தீர்மானித்துள்ளதாக, மக்கள் சுகாதார பரிசோதகர்களின் தொழிற்சங்க உறுப்பினர் ஒருவர் குறிப்பிடுகிறார்.
சீருடைக்காக வழங்கப்படும் ரூபா பத்தாயிரத்தை மூவாயிரம் ரூபாவினால் அதிகரிக்குமாறும், அலுவலக் கொடுப்பனவான நூறு ரூபாவையும் போக்குவரத்துக் கொடுப்பனவான ரூபா ஆயிரத்து இருநூறு ரூபாவையும் அதிகரிக்குமாறும் கேட்டுள்ளனர்.
கலேவல சுகாதார வைத்திய அதிகாரி ஆர்.எம்.எஸ். ஜயசேக்கர குறிப்பிடுகையில், கலேவல மக்கள் சுகாதார அதிகாரிகள் இதுபற்றித் தமக்கு அறிவித்துள்ளதாகக் குறிப்பிட்டார்.
(கேஎப்)



0 comments
Write Down Your Responses