'சிங்களவராகிய எமக்கு ஹலால் வேண்டாம்' கண்டியில் சுவரொட்டிகள்.
'சிங்களவராகிய எமக்கு ஹலால் வேண்டாம்' என்ற வாசகங்கள் அடங்கிய சுவரொட்டிகள் கண்டியில் அமைந்துள்ள இராணுவ அதிகாரிகளின் உத்தியோக பூர்வக் குடியிருப்புக்களில் ஒட்டப்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது.கண்டி நவயாலதென்னை இராணுவ அதிகாரிகளின் உத்தியோகபூர்வ குடியிருப்பிற்குச் செல்லும் பாதை உட்பட கண்டியின் மேலும் சில இடங்களில் இச்சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.
இதனைத் தொடர்ந்து சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ள பகுதிகளில் பதற்றம் ஏற்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது.


0 comments
Write Down Your Responses