பிரதமருக்கே உள்ளாடையில்லாமல் காலை துர்க்கி காட்டிய பிளேபோய் அழகி...! ஜயோ எப்படி எல்லாம் இருந்து யோசிக்கிறாங்க..

.

சேர்பிய நாட்டின் பிரதமர் பங்குபற்றிய நேர்காணலின்போது நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய பெண் தனது காலை அகற்றிக் காட்டிய மிகப் பெரும் சர்சையை ஏற்படுத்தியுள்ளார். குறித்த பெண் தொகுப்பாளர் பிளே போய் சஞ்சிகையில் தோன்றிய மொடல் அழகியென்றும் தெரியவந்துள்ள நிலையில் இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள சேர்பிய நாட்டின் பிரதமர் அலுவலகம் உத்தரவிட்டுள்ளது.

சேர்பிய நாட்டு பிரதமரான இவிகா டாசிச் அண்மையில் நேர்காணலொன்றில் பங்குபற்றியுள்ளார். இந்நிகழ்ச்சியை கவர்ச்சியான ஆடை அணிந்த பெண்ணொருவர் தொகுத்து வழங்கியுள்ளார். ஆரம்பம் முதலே அவரது நடவடிக்கைகள் பிரதமருக்கு கிளர்ச்சியூட்டும் விதமாக அமைந்துள்ளன.

இந்நிலையில் நிகழ்ச்சியின் இடைநடுவே அவர் தனது கால்களை அகற்றிக் காட்டியுள்ளார். இதன் போது அப்பெண் உள்ளாடை எதனையும் அணியவில்லையெனத் தெரிவிக்கப்படுகின்றது.
இதனை சற்றும் எதிர்ப்பார்க்காத பிரதமர் இவிகா டாசிச் பெரும் அசௌகரியத்துக்கு உள்ளாகியுள்ளார். இதனையடுத்து இந்நிகழ்ச்சி தொடர்பில் பல தகவல்கள் வெளியாகியுள்ளன.

குறித்த நிகழ்ச்சியானது உண்மையான அரசியல் நிகழ்ச்சியொன்றல்ல எனவும் மாறாக இது தொலைக்காட்சிகளில் நபரொருவரை அவர் அறியா வண்ணம் குழப்பத்தில் ஆழ்த்தும்Practical Joke/ Prank வகையைச் சேர்ந்த வேடிக்கை நிகழ்ச்சியொன்றெனவும் தெரியவந்துள்ளது.

எனினும் இந்நிகழ்ச்சிக்கு சேர்பிய பிரதமர் அலுவலகம் கடும் எதிர்ப்பினை வெளியிட்டுள்ளதுடன் இது தொடர்பில் விசாரணைக்கும் உத்தரவிட்டுள்ளது.

இதேவேளை குறித்த பெண் காலை தூக்கி காட்டிய காட்சி அடங்கிய காணொளி வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில் இச் சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


0 comments

Write Down Your Responses

Text here

About This Blog

Lorem Ipsum

Visitors

Lorem Ipsum

Lorem

Advertise

Moto GP News

கட்டுரை

srilanka news

Formula 1 News

Pages

Sport News

nc2

Featured Content Slider

Powered by Blogger.

Search Wikipedia

Search results

Translate

Search This Blog

Basketball News