இரணைமடுவின் 10 வான் கதவு திறப்பு மக்களுக்கு எச்சரிக்கை!!
இரணைமடுவில் பெய்துவரும் கடும் மழை காரணமாக இரணைமடுக் குளத்தின் 10 வான்கதவுகள் 6 இஞ்சிக்கு திறக்கப்பட்டுள்ளதுடன் தேவை ஏற்பட்டால் ஏனைய வான் கதவுகளும் திறக்கப்படும் என கிளிநொச்சி மாவட்ட நீர்ப்பாசன திட்டமிடல் பணிப்பாளர் சுதாகர் குறிப்பிட்டார். தொடர்ந்து பெய்துவரும் மழை மற்றும் கனகராயன் குளத்தில் இருந்தும் வரும் நீரினாலும் குளத்தின் நீர்மட்டம் 30.7 அடியாக உயர்ந்துள்ளதால் மேலும் 6 வான்கதவுகள் இரவு 8.20 மணிக்கு திறக்கப்பட்டுள்ளதுடன் எல்லாமாக 10 வான்கதவுகள் 6 இஞ்சிவரை திறக்கப்பட்டுள்ளதுடன் தேவை ஏற்பட்டால் ஏனைய வான்கதவுகளும் திறக்கப்படும் எனக்குறிப்பிட்டார் கிளிநொச்சி மாவட்ட நீர்ப்பாசன திட்டமிடல் பணிப்பாளர் சுதாகர்
தொடர்புடைய செய்தி http://www.ilankainet.com/2012/12/blog-post_1427.html


0 comments
Write Down Your Responses