கே.பி என்ன? யார் வந்தாலும் நான் தான் முதலமைச்சர்- கனவில் மிதக்கும் டக்ளஸ
வடமாகாண முதலைமைச்சர் வேட்பாளராக அரசாங்கம் என்னைத் தான் நிறுத்தும் நான் தான் முதலமைச்சராக வருவேன் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அடித்துக் கூறியுள்ளார்.
நேற்று மாலை அவரது கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
வடக்கிற்கு கே.பி வரலாம் வேறு யார்? வேண்டுமென்றாலும் வரலாம் ஆனால் முதலமைச்சர் வேட்பாளராக நான் தான் அரச தரப்பினால் நிறுத்தப்படுவேன்.
கடந்த காலத்திலும் இவ்வாறு பலர் வந்து போனார்கள். எனியும் வந்து போவார்கள் ஆனால் நான் அரசுடன் இணைந்து இருக்கும் வரையில் முதலமைச்சர் நான் தான் இதில் எந்த மாற்றுக்கருத்துக்களும் இல்லை என்றார்.



0 comments
Write Down Your Responses