சமீபத்திய மாகாண நபைத் தேர்தல்களில் தான் ஐந்து ஆசனங்களைப் பெற்று 3 வது பெரிய கட்சியாக வந்து விட்டதாக முன்னாள் இராணுவத் தளபதியும், ஜனநாயகக் கட்சியின் தலைவருமான சரத் பொன்சேக்கா கூறினாலும், தேர்தல் முடிவுகளை நுணுகி ஆராய்ந்து பார்த்தால் தமிழ் தேசியக் கூட்டமைப்பு இரண்டாவது பலமான கட்சியாக பரிணமித்திருப்பதைக் காண முடியும் என்று ஜனநாயகக் கட்சியின் முன்னாள் துணைத் தலைவர் டாக்டர் மகேஷ் அத்தபத்து கூறுகிறார்.
உண்மையில், இந்த தேர்தலில் போட்டி இருந்தது ஜனாதிபதிக்கும் எதிர்கட்சித் தலைவருக்கும் இடையிலும், ஜே.வி.பி சோமவன்ச அமரதுங்காவுக்கும் சரத்பொன்சேகாவுக்கும் இடையிலும்தான்.
சரத் பொன்சேக்கா ஐந்து இடங்களைப் பெற்றது ஜேஆரின் விருப்பு வாக்கு முறையில்தான் என்று அத்தபத்து மேலும் கூறினார்.
உண்மையில், இந்த தேர்தலில் போட்டி இருந்தது ஜனாதிபதிக்கும் எதிர்கட்சித் தலைவருக்கும் இடையிலும், ஜே.வி.பி சோமவன்ச அமரதுங்காவுக்கும் சரத்பொன்சேகாவுக்கும் இடையிலும்தான்.
சரத் பொன்சேக்கா ஐந்து இடங்களைப் பெற்றது ஜேஆரின் விருப்பு வாக்கு முறையில்தான் என்று அத்தபத்து மேலும் கூறினார்.
இலங்கை அபிவிருத்திக்கான ஊடக மன்றப் பணிப்பாளரும், மின்னியல் ஊடகவியலாளரும், பன்னூலாசிரியருமான எம்.சீ. ரஸ்மினின் 'போர்க்காள சிங்கள இலக்கியங்கள்' ஒரு பன்மைத்துவ ஆய்வு (1983 - 2007) எனும் ஆய்வு நூல் வெளியீடும் ஆய்வரங்கும் சென்ற 29 ஆம் திகதி கொழும்பு லெங்கைத் தபால் தலைமையக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சர் வாசுதேவ நாணயக்கார பிரதம அதிதியாகக் கலந்துகொண்ட இந்நிகழ்வில், ஆங்கிலத்தில் 'Sinhala Literature in the Era of Ethnic War Towards Post - War பிரபல திறனாய்வாளர் கே.எஸ். சிவகுமாரனும், சிங்களத்தில் ருகுணு பல்கலைக்கழக சிங்களப் பிரிவு விரிவுரையாளர் தம்மிக்க ஜயசிங்கவும் நூல் அறிமுகம் மற்றும் நூலாசிரியர் அறிமுகமும் செய்தனர். தம்மிக்க ஜயசிங்க தான் சிங்களத்தில் உரையாற்றிவிட்டு கடைசியில் செந்தமிழில் இலக்கணம் பிசகாமல் ஆற்றிய சிறுபேச்சு எல்லோர் உள்ளங்களையும் நன்கு கவர்ந்தது எனலாம். (அவரது பேச்சு இங்கு இணைக்கப்பட்டுள்ளது.)
பேராதனைப் பல்கலைக்கழக உளவியல் மற்றும் மெய்யியல் துறைத் தலைவர் பேராசிரியர் எம்.எஸ்.எம். அனஸ் மற்றும் கிழக்குப் பல்கலைக்கழக தமிழ்த்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் பேராசிரியர் செ. யோகராசா ஆகியோர் குழுநிலைக் கலந்துரையாடலை மேற்கொண்டு நூல் பற்றிய ஆய்வு ரீதியாக விளக்கினர்.
நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்ட அமைச்சர் வாசுதேவ நாணயக்கார மற்றும் எழுத்தாளர் சிட்னி மார்கஸ் டயஸ் ஆகியோரும் உரையாற்றினர்.
நூலின் முதற் பிரதியை எம்.சீ. ரஸ்மினை முளைகொள்ளச் செய்தவர் எனப் போற்றப்பட்ட சிட்னி மார்கஸ் டயஸ் பெற்றுக்கொண்டார்.
எழுத்தாளர்கள், ஆய்வாளர்கள், கவிஞர்கள், மற்றும் ஊடகவியலாளர்கள் பலர் கலந்துகொண்ட இந்நிகழ்வை பிரபல ஒலி - ஒளிபரப்பாளர் நாகபூசணி கருப்பையா மற்றும் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தைச் சேர்ந்த ஹாரிஸ் என்போர் தொகுத்து வழங்கினர்.
(கலைமகன் பைரூஸ்)
தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சர் வாசுதேவ நாணயக்கார பிரதம அதிதியாகக் கலந்துகொண்ட இந்நிகழ்வில், ஆங்கிலத்தில் 'Sinhala Literature in the Era of Ethnic War Towards Post - War பிரபல திறனாய்வாளர் கே.எஸ். சிவகுமாரனும், சிங்களத்தில் ருகுணு பல்கலைக்கழக சிங்களப் பிரிவு விரிவுரையாளர் தம்மிக்க ஜயசிங்கவும் நூல் அறிமுகம் மற்றும் நூலாசிரியர் அறிமுகமும் செய்தனர். தம்மிக்க ஜயசிங்க தான் சிங்களத்தில் உரையாற்றிவிட்டு கடைசியில் செந்தமிழில் இலக்கணம் பிசகாமல் ஆற்றிய சிறுபேச்சு எல்லோர் உள்ளங்களையும் நன்கு கவர்ந்தது எனலாம். (அவரது பேச்சு இங்கு இணைக்கப்பட்டுள்ளது.)
பேராதனைப் பல்கலைக்கழக உளவியல் மற்றும் மெய்யியல் துறைத் தலைவர் பேராசிரியர் எம்.எஸ்.எம். அனஸ் மற்றும் கிழக்குப் பல்கலைக்கழக தமிழ்த்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் பேராசிரியர் செ. யோகராசா ஆகியோர் குழுநிலைக் கலந்துரையாடலை மேற்கொண்டு நூல் பற்றிய ஆய்வு ரீதியாக விளக்கினர்.
நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்ட அமைச்சர் வாசுதேவ நாணயக்கார மற்றும் எழுத்தாளர் சிட்னி மார்கஸ் டயஸ் ஆகியோரும் உரையாற்றினர்.
நூலின் முதற் பிரதியை எம்.சீ. ரஸ்மினை முளைகொள்ளச் செய்தவர் எனப் போற்றப்பட்ட சிட்னி மார்கஸ் டயஸ் பெற்றுக்கொண்டார்.
எழுத்தாளர்கள், ஆய்வாளர்கள், கவிஞர்கள், மற்றும் ஊடகவியலாளர்கள் பலர் கலந்துகொண்ட இந்நிகழ்வை பிரபல ஒலி - ஒளிபரப்பாளர் நாகபூசணி கருப்பையா மற்றும் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தைச் சேர்ந்த ஹாரிஸ் என்போர் தொகுத்து வழங்கினர்.
(கலைமகன் பைரூஸ்)
/div>
அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச்சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ளும் நோக்கில் அவசரசட்டமூலம் ஒன்றை கொண்டுவருவதற்கான ஜனநாயக கதவு மூடப்படவில்லை எனவே தேவைப்படின் இதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கான சாத்தியம் உள்ளது என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது.
எனினும் தற்போதைய சூழலில் பாராளுமன்றத் தெரிவுக்குழுவின் ஊடாகவே அரசியலமைப்பு திருத்தங்களை செய்வதற்கான முயற்சிகளை முன்னெடுத்துள்ளோம் என்று தகவல் வெளியிட்ட ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல கூறிப்பிட்டுள்ளார்.
மேலும் ஒரு விடயத்தை தெளிவாக அனைவரும் புரிந்துகொள்ளவேண்டும் அதாவது அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ளும் நோக்கில் அவசர சட்டமூலம் ஒன்றை கொண்டுவருவதற்கான ஜனநாயக கதவு மூடப்படவில்லை தேவைப்படின் இதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கான இயலுமை உள்ளது ஏன் எனில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத்திற்கு தற்போது பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்துடன் செயற்பட்டுவரும் அரசாங்கமாகும்.
எனவே, 13 ஆவது திருத்தச் சட்டத்தில் திருத்தம் ஒன்றை மேற்கொள்ள வேண்டிய தேவை ஏற்படின் அதனை எம்மால் செய்ய முடியும் அதற்கான ஜனநாயக கதவு மூடப்படவில்லை என்பதனை தெளிவாக குறிப்பிடவேண்டும் எனக்குறிப்பிட்டார்.
அதுமட்டுமல்லாது நாட்டில் நடைமுறையில் உள்ள் எந்தவொரு சட்டத்திலும் திருத்தம் ஒன்றை கொண்டுவருவதற்கு ஜனநாயகரீதியான உரிமையும் இயலுமையும் அரசாங்கத்துக்கு உள்ளது என்பதனை அனைவரும் புரிந்து கொள்ளவேண்டும் என தகவல் வெளியிட்ட ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல குறிப்பிட்டுள்ளார்.
எனினும் தற்போதைய சூழலில் பாராளுமன்றத் தெரிவுக்குழுவின் ஊடாகவே அரசியலமைப்பு திருத்தங்களை செய்வதற்கான முயற்சிகளை முன்னெடுத்துள்ளோம் என்று தகவல் வெளியிட்ட ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல கூறிப்பிட்டுள்ளார்.
மேலும் ஒரு விடயத்தை தெளிவாக அனைவரும் புரிந்துகொள்ளவேண்டும் அதாவது அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ளும் நோக்கில் அவசர சட்டமூலம் ஒன்றை கொண்டுவருவதற்கான ஜனநாயக கதவு மூடப்படவில்லை தேவைப்படின் இதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கான இயலுமை உள்ளது ஏன் எனில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத்திற்கு தற்போது பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்துடன் செயற்பட்டுவரும் அரசாங்கமாகும்.
எனவே, 13 ஆவது திருத்தச் சட்டத்தில் திருத்தம் ஒன்றை மேற்கொள்ள வேண்டிய தேவை ஏற்படின் அதனை எம்மால் செய்ய முடியும் அதற்கான ஜனநாயக கதவு மூடப்படவில்லை என்பதனை தெளிவாக குறிப்பிடவேண்டும் எனக்குறிப்பிட்டார்.
அதுமட்டுமல்லாது நாட்டில் நடைமுறையில் உள்ள் எந்தவொரு சட்டத்திலும் திருத்தம் ஒன்றை கொண்டுவருவதற்கு ஜனநாயகரீதியான உரிமையும் இயலுமையும் அரசாங்கத்துக்கு உள்ளது என்பதனை அனைவரும் புரிந்து கொள்ளவேண்டும் என தகவல் வெளியிட்ட ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல குறிப்பிட்டுள்ளார்.
மது ஒழிப்பு தினத்தை முன்னிட்டு நாளை(03.10.2013)வியாழக்கிழமை நாட்டில் உள்ள அனைத்து மதுபான சாலைகளும் மூடப்படும் என கலால் திணைக்களம் அறிவித்துள்ளது எனவே நாளை மது விற்பனை செய்பவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கலால் திணைக்கள ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
சாதாரணமாக நாம் வசிக்கும் பகுதிகளில் தெருவோரங்களில் வளரும் செடி குப்பைமேனி. குப்பைமேடுகளின் ஓரங்களில் வளருவதால் இதற்கு குப்பைமேனி என்ற பெயர் வந்துள்ளது. முழுத்தாவரமும் மருத்துவப் பயன் உடையது.
செயல்திறன் மிக்க வேதிப்பொருட்கள்
இத்தாவரத்தில் அல்கலாய்டுகள், குளுக்கோசைடுகள், அஸிடேட்கள், எளிதில் ஆவியாகும் எண்ணெய்கள் பிரித்தெடுக்கப்பட்டுள்ளன. அகாலிஃபமைடு, காலிபோல் அஸிடேட், அகாலிஃபைன், டிரைஅஸிட்டோனமைன், கெம்ஃபெரால் போன்ற வேதிப்பொருட்கள் உள்ளன.
ஆஸ்துமா குணமடையும்
மூச்சுக்குழல் மற்றும் ஆஸ்துமா நோய் குணமடையும். உடலில் வெப்பத்தை உண்டாக்கி சளியினால் ஏற்பட்டுள்ள கோழையை வெளியேற்றும் தன்மை கொண்டது. இலையை உலர்த்தி சூரணம் போல் தயாரித்து 10 குன்றிமணி எடை வீதம் தேனில் கலந்து கொடுத்து வந்தால் இருமல், இரைப்பு, கபம் முதலியவை குணமடையும்.
இந்த இலையின் பொடியை மூக்கில்பொடிபோல் இழுக்க நீர் வடிந்து தலைவலி உடனேகுணமடையும். இதனை நசியமிடுதல் என்பர். வெறிநாய்க் கடியும், சித்த பிரமையும் குணமடையும்.
குழந்தைகளுக்கு
குப்பைமேனி வயிற்றுப் பூச்சிகளுக்கு எதிரானது. இலையை அரைத்து சாறு எடுத்து குழந்தைகளுக்கு ஒரு தேக்கரண்டி கொடுத்தால் பேதியாகும். வயிற்றில் உள்ள கிருமிகள் வெளியேறும். இது மலமிளக்கியாகவும் செயல்படுகிறது. வேரானது வயிற்றுப்போக்குக்கு மருந்தாகிறது.
தோல்வியாதிகள்
இலைகள் தோல் வியாதிகளுக்கு மேல் பூச்சாகிறது. சொறி, சிரங்கு, படுக்கைப் புண் மற்றும் நாள்பட்ட புண்களை ஆற்றுகிறது. இலையை விளக் கெண்ணெய் விட்டு வதக்கி இளஞ்சூட்டில் கட்டி வரப் படுக்கைப் புண்கள் தீரும்.
இலையுடன் சிறிது மஞ்சள் சேர்த்து அரைத்துசொறி, சிரங்கு,புண், விஷக்கடிகள் முதலியவைகட்கு பூச குணமாகும். மேனி எழிலுடன் விளங்கும். இலைச்சாறுடன் எண்ணெய் கலந்து முடக்கு வாத நோய், மூட்டுவலிக்கு தடவினால் விரைவில் குணமடையும்.
மூலநோய்க்கு மருந்து
மூலத்திற்குக் குப்பைமேனிசிறந்த மருந்தாகும். பூத்த குப்பைமேனியை வேறுடன்பிடுங்கி நிழலில் உணர்த்தி சூரணம் செய்து இதில்2 - 5 கிராம் அளவு பசும் நெய்யில் 48 நாள் காலை, மாலை சாப்பிட எந்தவகை மூலமும்முற்றிலும் குணமாகும்.
செயல்திறன் மிக்க வேதிப்பொருட்கள்
இத்தாவரத்தில் அல்கலாய்டுகள், குளுக்கோசைடுகள், அஸிடேட்கள், எளிதில் ஆவியாகும் எண்ணெய்கள் பிரித்தெடுக்கப்பட்டுள்ளன. அகாலிஃபமைடு, காலிபோல் அஸிடேட், அகாலிஃபைன், டிரைஅஸிட்டோனமைன், கெம்ஃபெரால் போன்ற வேதிப்பொருட்கள் உள்ளன.
ஆஸ்துமா குணமடையும்
மூச்சுக்குழல் மற்றும் ஆஸ்துமா நோய் குணமடையும். உடலில் வெப்பத்தை உண்டாக்கி சளியினால் ஏற்பட்டுள்ள கோழையை வெளியேற்றும் தன்மை கொண்டது. இலையை உலர்த்தி சூரணம் போல் தயாரித்து 10 குன்றிமணி எடை வீதம் தேனில் கலந்து கொடுத்து வந்தால் இருமல், இரைப்பு, கபம் முதலியவை குணமடையும்.
இந்த இலையின் பொடியை மூக்கில்பொடிபோல் இழுக்க நீர் வடிந்து தலைவலி உடனேகுணமடையும். இதனை நசியமிடுதல் என்பர். வெறிநாய்க் கடியும், சித்த பிரமையும் குணமடையும்.
குழந்தைகளுக்கு
குப்பைமேனி வயிற்றுப் பூச்சிகளுக்கு எதிரானது. இலையை அரைத்து சாறு எடுத்து குழந்தைகளுக்கு ஒரு தேக்கரண்டி கொடுத்தால் பேதியாகும். வயிற்றில் உள்ள கிருமிகள் வெளியேறும். இது மலமிளக்கியாகவும் செயல்படுகிறது. வேரானது வயிற்றுப்போக்குக்கு மருந்தாகிறது.
தோல்வியாதிகள்
இலைகள் தோல் வியாதிகளுக்கு மேல் பூச்சாகிறது. சொறி, சிரங்கு, படுக்கைப் புண் மற்றும் நாள்பட்ட புண்களை ஆற்றுகிறது. இலையை விளக் கெண்ணெய் விட்டு வதக்கி இளஞ்சூட்டில் கட்டி வரப் படுக்கைப் புண்கள் தீரும்.
இலையுடன் சிறிது மஞ்சள் சேர்த்து அரைத்துசொறி, சிரங்கு,புண், விஷக்கடிகள் முதலியவைகட்கு பூச குணமாகும். மேனி எழிலுடன் விளங்கும். இலைச்சாறுடன் எண்ணெய் கலந்து முடக்கு வாத நோய், மூட்டுவலிக்கு தடவினால் விரைவில் குணமடையும்.
மூலநோய்க்கு மருந்து
மூலத்திற்குக் குப்பைமேனிசிறந்த மருந்தாகும். பூத்த குப்பைமேனியை வேறுடன்பிடுங்கி நிழலில் உணர்த்தி சூரணம் செய்து இதில்2 - 5 கிராம் அளவு பசும் நெய்யில் 48 நாள் காலை, மாலை சாப்பிட எந்தவகை மூலமும்முற்றிலும் குணமாகும்.
"தற்காலிக ஊழியர்களின் உண்ணாவிரத போராட்டத்திற்கு தலைமை தாங்கும் முன்னாள் ஈபீடிபியின் உறுப்பினர் சுதர்சிங் விஜயகாந் கொள்ளையர் குழுவின் தலைவர் என்பதுடன் அவர் தற்காலிக ஊழியர்களிடம் பண மோசடி செய்துள்ளார்" என தற்காலிக ஊழியர்களின் உண்ணாவிரதம் தொடர்பில் யாழ். மாநகர சபையில் இன்று புதன்கிழமை (02.10.13) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் யாழ்.மாநகர முதல்வர் யோகேஸ்வரி பற்குணராஜா தெரிவித்தார்.
மேலும் 'கொள்ளைக்கார குழுத்தலைவரான சுதர்சிங் விஜயகாந் யாழ்.மாநகர சபையின் முன்னாள் பொறியியலாளர் ஒருவரிடமும் சுமார் 29 லட்சம் ரூபா பணத்தினை பெற்று மீள செலுத்தாது மோசடி செய்துள்ளார் எனவும் தெரிவித்துள்ளார்.
இதனைவிட ஒரு சாதாரண நபர்ஆன இவர் தன்னை ஒரு வர்த்தகர் எனக் கூறிக்கொண்டு, தற்காலிக ஊழியர்களிடம் பணம் வசூலித்து சுகபோக வாழ்க்கை வாழ்ந்து வருகின்றார். இவ்வாறான சம்பவங்களை மறைப்பதற்காகவே இந்தப் போராட்டத்திற்கு தான் தலைமை தாங்கி நடத்தி வருகின்றார் எனக்குறிப்பிட்டதுடன் வாய் மொழிமூலமாக அதிகாரி தெரிவித்ததாக கூறப்படுவதில் எந்தவிதமான உண்மையுமில்லை எனக்குறிப்பிட்டார்.
தற்காலிக ஊழியர்களுக்கான நிரந்தர நியமனங்கள் வழங்கப்படும் போது உள்ளூராட்சி அமைச்சால் அனுப்பப்பட்ட சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டள்ளதைற்கு ஏற்ப தகுந்த கல்வித்தகமை எதிர்பார்க்கப்படும் எனவும், எந்தவொரு நியமனங்களும் உள்ளூராட்சி அமைச்சின் சுற்றுநிரூபத்திற்கு அமையவே வழங்கப்படும் எனவும் யாழ் மாநகர முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராசா இதன்போது குறிப்பிட்டார்
மேலும் 'கொள்ளைக்கார குழுத்தலைவரான சுதர்சிங் விஜயகாந் யாழ்.மாநகர சபையின் முன்னாள் பொறியியலாளர் ஒருவரிடமும் சுமார் 29 லட்சம் ரூபா பணத்தினை பெற்று மீள செலுத்தாது மோசடி செய்துள்ளார் எனவும் தெரிவித்துள்ளார்.
இதனைவிட ஒரு சாதாரண நபர்ஆன இவர் தன்னை ஒரு வர்த்தகர் எனக் கூறிக்கொண்டு, தற்காலிக ஊழியர்களிடம் பணம் வசூலித்து சுகபோக வாழ்க்கை வாழ்ந்து வருகின்றார். இவ்வாறான சம்பவங்களை மறைப்பதற்காகவே இந்தப் போராட்டத்திற்கு தான் தலைமை தாங்கி நடத்தி வருகின்றார் எனக்குறிப்பிட்டதுடன் வாய் மொழிமூலமாக அதிகாரி தெரிவித்ததாக கூறப்படுவதில் எந்தவிதமான உண்மையுமில்லை எனக்குறிப்பிட்டார்.
தற்காலிக ஊழியர்களுக்கான நிரந்தர நியமனங்கள் வழங்கப்படும் போது உள்ளூராட்சி அமைச்சால் அனுப்பப்பட்ட சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டள்ளதைற்கு ஏற்ப தகுந்த கல்வித்தகமை எதிர்பார்க்கப்படும் எனவும், எந்தவொரு நியமனங்களும் உள்ளூராட்சி அமைச்சின் சுற்றுநிரூபத்திற்கு அமையவே வழங்கப்படும் எனவும் யாழ் மாநகர முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராசா இதன்போது குறிப்பிட்டார்
ஹம்பாந்தோட்டையில் அமைந்துள்ள மாகம்புர மஹிந்த ராஜபக்ஷ துறைமுகத்தில் கடந்த வெள்ளிக்கிழமை முதல் Transshipmentமுறை மூலம் ஆபிரிக்க நாடுகள் உட்பட பல நாடுகளுக்கு மீள ஏற்றிச்செல்வதற்காக மூவாயிரத்துக்கும் அதிகமான வாகனங்கள் இறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறுது.
கடந்த வியாழக்கிழமை (26.09.2013) துறைமுகத்துக்கு வந்த Clover Ace எனும் வாகனக் கப்பல் ஒன்றிலிருந்து மூவாயிரத்து இருநூறுக்கும் அதிகமான வாகனங்கள் கடந்த மூன்று நான்கு தினங்களாக இறக்கும் வேலைகள் நடைபெற்றன.
இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் வாகனங்களிலும் 95 சதவீத வாகனங்களும் ஹம்பாந்தோட்டை மஹிந்த ராஜபக்ஷ துறைமுகத்திலையே இறக்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த வியாழக்கிழமை (26.09.2013) துறைமுகத்துக்கு வந்த Clover Ace எனும் வாகனக் கப்பல் ஒன்றிலிருந்து மூவாயிரத்து இருநூறுக்கும் அதிகமான வாகனங்கள் கடந்த மூன்று நான்கு தினங்களாக இறக்கும் வேலைகள் நடைபெற்றன.
இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் வாகனங்களிலும் 95 சதவீத வாகனங்களும் ஹம்பாந்தோட்டை மஹிந்த ராஜபக்ஷ துறைமுகத்திலையே இறக்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
நெற்சந்தைப்படுத்தும் சபை விசாயிகளிடம் இருந்து பெற்ற நெல்லுக்காக விவசாயிகளுக்கு கொடுக்க வேண்டியுள்ள ரூபா 300 மில்லியனை இந்த வெள்ளிக் கிழமைக்குள் கொடுத்து முடிக்க வேண்டும் என்று கூட்டுறவு மற்றும் உண்ணாட்டு வர்த்தக அமைச்சர் ஜோண்சன் பெர்ணான்டோ நேற்று (01 ம் திகதி) நெற்சந்தைப்படுத்தும் சபைத் தலைவரைப் பணித்துள்ளார். அமைச்சருக்கும் திறைசேரி அலுவலர்களுக்கும் இடையில் இடம் பெற்ற கலந்துரையாடலில் இந்த 300 மில்லியன் ரூபா பெற்றுக் கொள்ளப்பட்டதாக அமைச்சர் கூறயுள்ளார்.இம்முறை 2900 மில்லியன் ரூபா பெறுமதியான 90000 தொன் நெல், நெல் சந்தைப்படுத்தும் சபையால் கொள்வனவு செய்யப்பட்டது. அதில் 300 மில்லியின் ரூபா விவசாயிகளுக்கு இன்னும் கொடுக்க வேண்டிருந்தது. அது இன்று முதல் வழங்கப்படும்.
5ஆம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் தமிழ் மொழி மூலம் தோற்றிய மாணவர்களுக்கான வெட்டுப்புள்ளி விபரம் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆகக்கூடிய வெட்டுப்புள்ளியாக 156 புள்ளிகளும் குறைந்த வெட்டுப் புள்ளிகளாக 151 வெட்டுப்புள்ளிகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.
கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கண்டி, மாத்தளை, காலி, மாத்தறை, குருணாகல் மாவட்டங்களுக்கான வெட்டுப்புள்ளி 156.
மட்டக்களப்பு, ஹம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களுக்கான வெட்டுப்புள்ளி 155.
அம்பாறை, யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களுக்கான வெட்டுப் புள்ளி 154.
கிளிநொச்சி, நுவரெலியா, மன்னார், மொனராகலை, முல்லைத்தீவு, இரத்தினபுரி, பொலன்னறுவை மாவட்டங்களுக்கான வெட்டுப்புள்ளி 153.
புத்தளம், திருகோணமலை மாவட்டங்களுக்கான வெட்டுப்புள்ளி 152.
அநுராதபுர மாவட்டத்துக்கான வெட்டுப்புள்ளி 151 ஆகும்.
பாடசாலைகளுக்கான புலமைப் பரிசில் பரீட்வை முடிவுகள் நேற்று (01) அனுப்பப்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது.
(கேஎப்)
ஆகக்கூடிய வெட்டுப்புள்ளியாக 156 புள்ளிகளும் குறைந்த வெட்டுப் புள்ளிகளாக 151 வெட்டுப்புள்ளிகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.
கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கண்டி, மாத்தளை, காலி, மாத்தறை, குருணாகல் மாவட்டங்களுக்கான வெட்டுப்புள்ளி 156.
மட்டக்களப்பு, ஹம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களுக்கான வெட்டுப்புள்ளி 155.
அம்பாறை, யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களுக்கான வெட்டுப் புள்ளி 154.
கிளிநொச்சி, நுவரெலியா, மன்னார், மொனராகலை, முல்லைத்தீவு, இரத்தினபுரி, பொலன்னறுவை மாவட்டங்களுக்கான வெட்டுப்புள்ளி 153.
புத்தளம், திருகோணமலை மாவட்டங்களுக்கான வெட்டுப்புள்ளி 152.
அநுராதபுர மாவட்டத்துக்கான வெட்டுப்புள்ளி 151 ஆகும்.
பாடசாலைகளுக்கான புலமைப் பரிசில் பரீட்வை முடிவுகள் நேற்று (01) அனுப்பப்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது.
(கேஎப்)
தமிழ் சீ.என்.என் எனும் இணையத்தின் உரிமையாளரான கண்ணன் அல்லது செல்வா என்பவர் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் இலங்கை இராணுவத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பாதுகாப்பு மாநாடு ஒன்றில் கலந்து கொண்டமை இலங்கை புலனாய்வுத்துறையினரை அதிர்சிக்கு உள்ளாக்கியுள்ளதாக சிங்களப் பத்திரிகைகள் தெரிவிக்கின்ற அதேநேரம், இலங்கை அரசுடன் தமிழ் மக்கள் இணைந்து வாழ முடியாது என்ற செய்தியை சொல்லிக்கொண்டிருக்கின்ற தமிழ் சீ.என்.என் இணையத்தின் உரிமையாளரான முன்னாள் புலி உறுப்பினரின் மேற்படி ஊடுருவல் பாரிய பின்புலங்களை கொண்டதாக இருக்காலாம் என ஆய்வாளர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.
தமிழ் சீ.என்.என் என்கின்ற குறித்த இணையத்தளம் தொடர்பாக பல்வேறு பார்வைகள் மக்களுக்கு இருந்தாலும் இதன் தோற்றம் அதன் பெயரில் இடம்பெற்ற மோசடிகள் தொடர்பில் முதலில் மக்கள் உணர்தல் முக்கியமானதாகும்.
இலங்கையில் புலிகள் தோற்கடிக்கப்பட்ட பின்னர் வன்னியிலிருந்து செயற்பட்டுக் கொண்டிருந்த புலி ஊடகங்கள் செயலிழந்த அதேநேரம், புலம்பெயர் தேசத்தில் புலிகளின் சொத்துக்கள் அதன் பினாமிகளால் கையகப்படுத்தப்பட்டது போல் புலம்பெயர் தேசத்து புலி ஊடகங்களும் அதன் பினாமிகளால் கையகப்படுத்தப்பட்டது. புலிகளின் தலைமை வன்னியில் ஒழிக்கப்பட்டதை அடுத்து புலம்பெயர் தேசத்து புலிகள் இருபெரும் பிரிவுகளாகவும் பல உப பிரிவுகளாகவும் பிரிந்தனர். புலம்பெயர் தேசத்து புலி ஊதுகுழல்கள் எதையும் பிளவுபட்ட புலிகளால் கைப்பற்றிக்கொள்ள முடியாமற்போனது. மோசமான நிலைமை வன்னியில் தலைமை இருந்திருந்தால் உறவினர்களை பிடித்து வைத்துக்கொண்டு ஊடகத்தை எழுதியே எடுத்திருக்கலாம் அல்லது அதன் கடவுச் சொல்லையாவது பெற்றிருக்கலாம்.
இந்த நிலையில் நெடியவன் பிரிவுக்கான பிரச்சாரம் என்ற போர்வையில் உளவு வேலைகளை செய்வதற்கு உருவாக்கப்பட்ட ஊடகமாகவே தமிழ் சீ.என்.என் பலராலும் உணரப்பட்டது. சீ.என்.என் என்கின்ற பிரபல ஊடகம் ஒன்றின் தமிழ் பிரிவு போன்ற ஒரு தோற்றத்தை ஏற்படுத்திக்கொண்டு ஆரம்பிக்கப்பட்ட குறித்த இணையத்தின் இலச்சினையாக சீ.என்.என் இணையத்தின் இலச்சினையே பயன்படுத்தப்பட்டது. தமிழ் சீ.என்.என் ஸ்தாபகரும் உரிமையாளருமான உபன், செல்வா, கண்ணன் என்ற பெயர்களில் உலாவிக்கொண்டிருக்கின்ற நபருக்கு எதிராக சீ.என்.என் இணையம் வழக்குத்தாக்கல் செய்தது. தமிழ் சீ.என்.என் என்றால் சீ.என்.என் இன் தமிழ் பிரிவு என்ற அர்த்தம் கிடையாது தமிழ் கொமுனிடி நியுஸ் நெட்வோர்க் என்பதே அதன் அர்த்தம் என்று கண்ணனால் கதை சொல்லப்பட்டது. சீஎன்என் ஒரு பெரிய ஊடகமாக சிறியதோர் ஊடகத்தின் குரல்வளையை நசிக்கவிரும்பாது விடயத்தை ஏற்றுக்கொண்டு கடுமையான நிபந்தனை ஒன்றை விதித்துள்ளது. லோகோ மாற்றப்படவேண்டும் என்பதுடன் சீ.என்.என் இற்கு ஒப்பான எந்த லோகோவும் பயன்படுத்தமுடியாது என்பதுவே அந்த நிபந்தனை.
இவ்வாறு சீ.என்.என் உடனான சிக்கலை தீர்த்துக்கொண்ட கண்ணன் இலங்கைக்கு எதிராக மேற்கொண்ட பிரச்சாரங்களில் சனல் 4 தொலைக்காட்சிக்கு போட்டியாக எதிர்வரும் நாட்களில் சனல் 4 இலங்கையின் மனித உரிமை மீறல்களை வெளிப்படுத்தப்போகின்றது சனல் 4 வெளியிடப்போகும் ஆதாரங்கள் எங்களிடமும் உண்டு என சனல் 4 விற்கு முன்பே தமிழ்சீ.என்.என் இல் போட்டோக்களை பிரசுரித்து சுய இன்பம் கண்டு கொண்ட வரலாறு நினைவூட்டலுக்கு உரியது.
கண்ணன் இணையத்தளத்தினை ஆரம்பித்து ஒரு சில மாதங்களிலேயே இலங்கையினுள் நுழைவதற்கு முயற்சிகளை மேற்கொண்டிருக்கின்றார். டக்ளஸ் , கருணா , கேபி போன்ற அரசுடன் மிக நெருக்கமானவர்களை தொடர்புகொண்டு தான் நாட்டினுள் வருவதற்கு உதவி செய்யுமாறு வேண்டியிருக்கின்றார். ஆனால் குறித்த நபரின் பின்னணி மற்றும் இவரால் நாட்டிற்கு பிற்காலத்தில் ஏற்படக்கூடிய அச்சுறுத்தல்களை உணர்ந்து கொண்ட டக்ளஸ் , கருணா , கேபி போன்றோர் விடயத்தை மிகவும் நுணுக்கமாக கையாள முற்பட்டுள்ளனர்.
பயங்கரவாதிகள் தொடர்பான மிகுந்த அனுபவமுள்ள மேற்படி நபர்களால் நிராகரிக்கப்பட்ட கண்ணனை ரொஹான் குணரட்ண அழைத்து வந்திருக்கின்றார். ஐரோப்பாவில் பல்வேறு இணையங்கள் மற்றும் வானொலிகள் தொலைக்காட்சிகள் ஊடாக இலங்கைக்கு எதிராக மிக மோசமான பிரச்சராங்களை மேற்கொண்டிருந்த சேது எனப்படுகின்ற சேதுரூபனே கண்ணனை ரொஹான் குணரட்ணவிற்கு அறிமுகம் செய்து வைத்தாக அறியமுடிகின்றது. இங்கே ஒரு பயங்கரவாத செயற்பாட்டுக்கான ஏற்பாடுகள் இடம்பெறுகின்றதாக என்ற சந்தேகங்கள் பரவலாக எழும்புகின்ற நிலையில் கண்ணன் எவ்வித அனுதியும் இல்லாமால் பாதுகாப்பு அமைச்சின் மாநாட்டில் கலந்து கொண்டமை ரொஹான்-கண்ணன் கூட்டு மீதுள்ள சந்தேகத்தை மேலும் வலுவடையச் செய்கின்றது.
உலகின் பாதுகாப்பு முக்கியஸ்தர்கள் கலந்து கொண்ட அந்த கருத்தரங்கில் கண்ணன் நுழைந்ததன் நோக்கம் என்ன? இவர் தீய நோக்கம் ஒன்றுக்காகவே நுழைந்திருக்கின்றார் என்பது அவர் எவ்வித அழைப்பிதழும் , முன்னறிவித்தலும் இல்லாமால் நுழைந்திருக்கின்றார் என்பதன் ஊடாக நிதர்சனமாகின்றது.
இவ்விடயம் பத்திரிகைகளில் பூதாதரமாக வெடித்ததை அடுத்து இரண்டு நயவஞ்சகத்தனங்கள் இடம்பெற்றுள்ளதாக அறியக்கிடைகின்றது. ஒன்று இலங்கை இராணுவத்தின் பிரிவு ஒன்றை தொடர்பு கொண்ட ரொஹான் குணரட்ண இலங்கை இராணுவத்தினால் கண்ணனுக்கு அழைப்பிதழ் வழங்கப்பட்டதாக பின் திகதி குறிப்பிட்ட (பக்டேட்டட்) அழைப்பிதழ் கொப்பி ஒன்றை தயார் செய்து அதனை திவயி ன பத்திரிகைக்கு அனுப்பி வைக்க முடியுமா என வேண்டியுள்ளார் என நம்பத்தகுந்த வட்டாரம் ஒன்றில் இருந்து அறியக்கிடைக்கின்றது. ரொஹான் குணரட்ண மேற்கண்ட முயற்சியை செய்திருக்கின்றார் என்பது உண்மையாயின் அவர் இலங்கை இராணுவத்தினை தனது அம்மாவின் பெட்டிக்கடை என்று நினைத்துக்கொண்டிருக்கின்றாரா என்ற கேள்வியை கேட்கத்தோன்றுகின்றது. இலங்கை இராணுவம் அதன் அதியுயர் கொள்கைக்காக உலகின் மிகப்பயங்கரமான பயங்கரவாத அமைப்பொன்றை அழித்து இன்று சிகரத்தில் நிற்கின்றது. ரொஹானின் சில்லறைத் தனங்களை இவ்வாறானதோர் இராணுவத்துடன் பயிற்சித்து பார்க்க முனைவது இவர் தனது பெயர்முன்னே போட்டுக்கொண்டிருக்கின்ற பயங்கரவாத நிபுணர் என்ற சொற்பதத்திற்கு உரியவரா என்றும் கேட்கத்தோன்றுகின்றது.
இரண்டாவது நயவஞ்சகத்தனம் யாதெனில் பத்திரிகையில் செய்தி வெளியாகிய சிறிது நேரத்தில் குளோபல் தமிழ் நியூஸ் எனும் இணையம் குறித்த செய்தியை மொழிபெயர்ப்பு பாணியில் வெளியிட்டது. திவய்ன இவ்வாறான செய்தி ஒன்றை பிரசுரித்திருக்கின்றது என்ற செய்தியை சொன்ன குளோபல் தமிழ் நியூஸ்; தியவினவில் வெளியாகி செய்தி முற்றிலும் உண்மைக்கு புறம்பானது என்று கண்ணன் தெரிவிப்பதாக செய்தி வெளியிட்டது. குறித்த இணையத்திற்கு கண்ணன் என்ன சொல்லிலிருக்கின்றார் என்பதை அப்படி எவ்வித வசனங்களும் மாற்றம் செய்யாமல் வாசகர்களின் பார்வைக்கு விடுகின்றோம்.
மேலுள்ள படங்களை பார்த்த உங்களுக்கு கோடிட்டு காட்டப்பட்டுள்ள வட்ட மிட்ட விடயங்களைப் பார்கின்றபோது இலங்கையிலே இடம்பெறுகின்ற கொம்பியூட்டர் ஜில்மாட் போன்ற ஊடக ஜில்மாட்டுக்களை உங்களால் அவதானிக்க முடிந்திருக்கும்.
முதலாவது ஜில்மாட் சிங்கப்பத்திரிகையில் தமிழ் சீஎன்என் எனும் இணையத்தளத்தின் உரிமையாளரே குறித்த படத்திலுள்ளதாக தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளபோதும், தமிழரின் தலையில் மிளகாய் அரைத்து சம்பல் சாப்பிட்டுக்கொண்டிருக்கின்ற றேடியோவுக்கு குருவாகி நிற்கின்றவர் லண்டனிலிருந்து சென்ற தமிழ் இணையத்தள உரிiயாளர் எனப் பெயரைக்குறிப்பிடாது மக்களை ஏமாற்ற முயற்சிக்கப்பட்டுள்ளது. இரண்டாவது ஜில்மாட் யாதெனில் இலங்கைக்கு கண்ணன் செல்லவில்லை என்றும் அவர் லண்டனிலே உள்ளதாகவும் தான் இலங்கைக்கு சென்றிருந்தால் அங்கு இராணுவ அதிகாரிகளால் பிடித்து கொல்லப்பட்டிருப்பேன் என குளோபல் தமிழ் செய்திக்கு தெரிவித்ததாகவும் தெரிவித்துள்ளது.
ஆனால், நாம் இங்கு எழுப்புகின்ற கேள்வி யாதெனில் திவயின பத்திரிகைக்கு பல தடவைகள் அழைப்பினை ஏற்படுத்தியுள்ள கண்ணன் திவய்ன செய்தியில் தவறான விடயங்கள் பல சொல்லப்பட்டுள்ளது. இவ்வாறான தகவல்களை சுவிட்சர்லாந்திலுள்ள புளொட் அமைப்பைச் சேர்ந்த ஒருவர் உங்களுக்கு வழங்கி கொண்டிருக்கின்றார். நான் தான் பிரித்தானியாவில் பன்னெடுங்காலங்களாக புலிகளுக்கு எதிராக வேலை செய்து வருகின்றேன். நான் எவ்வாறு புலிகளுக்கு எதிராக வேலை செய்தவன் என்பதை ரொஹான் குணரட்ணவை கேட்டுப்பாருங்கள் எனச் சொல்லியிருக்கின்றார்.
ஆனால் திவய்னவை தொடர்பு கொண்ட கண்ணன் ஏன் குளோபல் தமிழ் நியூஸ் எனும் இணையத்தளத்தினை தொடர்பு கொண்டு நீங்கள் பிழையான செய்தி ஒன்றை பிரசுரித்துள்ளீர்கள். திவய்ன வில் குறிப்பிடப்பட்டுள்ளது சரியான செய்தி அந்த படத்தில் இருப்பது நான்தான். நான் அந்த மாநாட்டில் கலந்து கொண்டது உண்மைதான். இலங்கையில் பாதுகாப்பு நிலைமைகள் இவ்வாறுதான் உண்டு. பாதுகாப்பு அமைச்சின் உயர் மட்ட மாநாடு ஒன்றினுள் கூட எனக்கு நுழையக்கூடிய நிலைமை காணப்படுகின்றது என்று சொல்லியிருக்கலாம் அல்லது அவ்வாறு செய்தற்கு இன்னும் நேரம் உண்டு.
மேலும் சுவிட்சர்லாந்திலுள்ள புளொட் உறுப்பினர் பொய் சொல்கின்றார் என்றால் நீர் இலங்கையில் சந்தித்த அரச உயர் மட்ட அதிகாரி ஒருவரிடம் , நீர் புலிகள் அமைப்பில் இராணுவப் பயிற்சி பெற்றுக்கொண்டுள்ளதுடன் சில காலங்கள் அந்த அமைப்பில் இருந்தவன் என்றும் பிரித்தானியாவில் இருந்து கொண்டு இலங்கைக்கு எதிராக செய்த போலிப் பிரச்சராங்களை நினைத்து மனம் வருந்துகின்றேன் என்றும் அப்பிரச்சராங்களை எதிர்வரும் காலங்களில் மேற்கொள்ள மாட்டேன் என்றும் தனது பிரச்சராரத்தால் ஏற்பட்ட காயத்தை ஆற்றவே நான் இங்கு வந்துள்ளேன் என்றும் குறிப்பிட்டது பொய்யா?
புலிகளின் தற்போதைய விநாயகம் குழுவைச் சேர்ந்த பாண்டியன் என்பவனிடம் வன்னியில் புலிகள் தோற்கடிக்கப்படுவதற்கு முன்னர் மலேசியாவில் வைத்து நீர் கையளித்த பணத்தை கேட்டு பாண்டியனுக்கு சவால் விட்டது பொய்யா? இந்த பணத்தை கேட்டு பாண்டியனிடம் நீர் மேற்கொண்ட சம்பாசனையை களவாக பதிவு செய்து அவற்றை உடகங்களுக்கு அனுப்பி விநாயகம் குழுவுக்கு எதிரான பிராச்சாரங்களை மேற்கொண்டு நெடியவன் குழுவை நியாயப்படுத்தியது பொய்யா? பாண்டியனுடனான தொடர்பு என்ன? யாருடைய பணம்? எதற்காக வழங்கப்பட்ட பணம் என்பதெல்லாம் மக்கள் அறியவேண்டிய தேவை இல்லையா?
இவ்வாறு பல்வேறுபட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கப்படாத நிலையில் ரொஹான் குணரட்ண கண்ணனை பாதுகாப்பு பிரிவினரினுள் ஊடுருவுததற்கு மாத்திரம் துணை நிற்கவில்லை. இலங்கையின் பல்வேறு பல்கலைக் கழகங்களுக்கும் அழைத்துச் சென்றிருக்கின்றார். பல்கலைக்கழகங்களில் ஒன்றுகூடல்கள் மேற்கொள்வதற்கான வழிமுறைகள் உண்டு. அதற்காக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் அல்லது பல்கலைக்கழக நிர்வாகத்தின் அனுமதியை பெறவேண்டும். ஆனால் இவ்வாறான அனுமதி எதுவும் பெறாமல் ரொஹான் தன்னிச்சையாக சப்ரகமுவ, ஒலுவில் மற்றும் பல பல்கலைக்கழகங்களுள் கண்ணனுடன் நுழைந்துள்ளதாக அறியக்கிடைக்கின்றது. இலங்கையின் சட்ட ஒழுங்கு விதிமுறைகளை மீறி ரொஹான் குணரட்ணவால் மேற்கொள்ளப்படும் செயற்பாடுகள் தொடர்பாக உடனடி விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு எதிர்கால அனர்த்தங்களை தவிர்த்துக்கொள்வது சிறந்ததாகும்.
தமிழ் சீ.என்.என் என்கின்ற குறித்த இணையத்தளம் தொடர்பாக பல்வேறு பார்வைகள் மக்களுக்கு இருந்தாலும் இதன் தோற்றம் அதன் பெயரில் இடம்பெற்ற மோசடிகள் தொடர்பில் முதலில் மக்கள் உணர்தல் முக்கியமானதாகும்.
இலங்கையில் புலிகள் தோற்கடிக்கப்பட்ட பின்னர் வன்னியிலிருந்து செயற்பட்டுக் கொண்டிருந்த புலி ஊடகங்கள் செயலிழந்த அதேநேரம், புலம்பெயர் தேசத்தில் புலிகளின் சொத்துக்கள் அதன் பினாமிகளால் கையகப்படுத்தப்பட்டது போல் புலம்பெயர் தேசத்து புலி ஊடகங்களும் அதன் பினாமிகளால் கையகப்படுத்தப்பட்டது. புலிகளின் தலைமை வன்னியில் ஒழிக்கப்பட்டதை அடுத்து புலம்பெயர் தேசத்து புலிகள் இருபெரும் பிரிவுகளாகவும் பல உப பிரிவுகளாகவும் பிரிந்தனர். புலம்பெயர் தேசத்து புலி ஊதுகுழல்கள் எதையும் பிளவுபட்ட புலிகளால் கைப்பற்றிக்கொள்ள முடியாமற்போனது. மோசமான நிலைமை வன்னியில் தலைமை இருந்திருந்தால் உறவினர்களை பிடித்து வைத்துக்கொண்டு ஊடகத்தை எழுதியே எடுத்திருக்கலாம் அல்லது அதன் கடவுச் சொல்லையாவது பெற்றிருக்கலாம்.
இந்த நிலையில் நெடியவன் பிரிவுக்கான பிரச்சாரம் என்ற போர்வையில் உளவு வேலைகளை செய்வதற்கு உருவாக்கப்பட்ட ஊடகமாகவே தமிழ் சீ.என்.என் பலராலும் உணரப்பட்டது. சீ.என்.என் என்கின்ற பிரபல ஊடகம் ஒன்றின் தமிழ் பிரிவு போன்ற ஒரு தோற்றத்தை ஏற்படுத்திக்கொண்டு ஆரம்பிக்கப்பட்ட குறித்த இணையத்தின் இலச்சினையாக சீ.என்.என் இணையத்தின் இலச்சினையே பயன்படுத்தப்பட்டது. தமிழ் சீ.என்.என் ஸ்தாபகரும் உரிமையாளருமான உபன், செல்வா, கண்ணன் என்ற பெயர்களில் உலாவிக்கொண்டிருக்கின்ற நபருக்கு எதிராக சீ.என்.என் இணையம் வழக்குத்தாக்கல் செய்தது. தமிழ் சீ.என்.என் என்றால் சீ.என்.என் இன் தமிழ் பிரிவு என்ற அர்த்தம் கிடையாது தமிழ் கொமுனிடி நியுஸ் நெட்வோர்க் என்பதே அதன் அர்த்தம் என்று கண்ணனால் கதை சொல்லப்பட்டது. சீஎன்என் ஒரு பெரிய ஊடகமாக சிறியதோர் ஊடகத்தின் குரல்வளையை நசிக்கவிரும்பாது விடயத்தை ஏற்றுக்கொண்டு கடுமையான நிபந்தனை ஒன்றை விதித்துள்ளது. லோகோ மாற்றப்படவேண்டும் என்பதுடன் சீ.என்.என் இற்கு ஒப்பான எந்த லோகோவும் பயன்படுத்தமுடியாது என்பதுவே அந்த நிபந்தனை.
இவ்வாறு சீ.என்.என் உடனான சிக்கலை தீர்த்துக்கொண்ட கண்ணன் இலங்கைக்கு எதிராக மேற்கொண்ட பிரச்சாரங்களில் சனல் 4 தொலைக்காட்சிக்கு போட்டியாக எதிர்வரும் நாட்களில் சனல் 4 இலங்கையின் மனித உரிமை மீறல்களை வெளிப்படுத்தப்போகின்றது சனல் 4 வெளியிடப்போகும் ஆதாரங்கள் எங்களிடமும் உண்டு என சனல் 4 விற்கு முன்பே தமிழ்சீ.என்.என் இல் போட்டோக்களை பிரசுரித்து சுய இன்பம் கண்டு கொண்ட வரலாறு நினைவூட்டலுக்கு உரியது.
கண்ணன் இணையத்தளத்தினை ஆரம்பித்து ஒரு சில மாதங்களிலேயே இலங்கையினுள் நுழைவதற்கு முயற்சிகளை மேற்கொண்டிருக்கின்றார். டக்ளஸ் , கருணா , கேபி போன்ற அரசுடன் மிக நெருக்கமானவர்களை தொடர்புகொண்டு தான் நாட்டினுள் வருவதற்கு உதவி செய்யுமாறு வேண்டியிருக்கின்றார். ஆனால் குறித்த நபரின் பின்னணி மற்றும் இவரால் நாட்டிற்கு பிற்காலத்தில் ஏற்படக்கூடிய அச்சுறுத்தல்களை உணர்ந்து கொண்ட டக்ளஸ் , கருணா , கேபி போன்றோர் விடயத்தை மிகவும் நுணுக்கமாக கையாள முற்பட்டுள்ளனர்.
பயங்கரவாதிகள் தொடர்பான மிகுந்த அனுபவமுள்ள மேற்படி நபர்களால் நிராகரிக்கப்பட்ட கண்ணனை ரொஹான் குணரட்ண அழைத்து வந்திருக்கின்றார். ஐரோப்பாவில் பல்வேறு இணையங்கள் மற்றும் வானொலிகள் தொலைக்காட்சிகள் ஊடாக இலங்கைக்கு எதிராக மிக மோசமான பிரச்சராங்களை மேற்கொண்டிருந்த சேது எனப்படுகின்ற சேதுரூபனே கண்ணனை ரொஹான் குணரட்ணவிற்கு அறிமுகம் செய்து வைத்தாக அறியமுடிகின்றது. இங்கே ஒரு பயங்கரவாத செயற்பாட்டுக்கான ஏற்பாடுகள் இடம்பெறுகின்றதாக என்ற சந்தேகங்கள் பரவலாக எழும்புகின்ற நிலையில் கண்ணன் எவ்வித அனுதியும் இல்லாமால் பாதுகாப்பு அமைச்சின் மாநாட்டில் கலந்து கொண்டமை ரொஹான்-கண்ணன் கூட்டு மீதுள்ள சந்தேகத்தை மேலும் வலுவடையச் செய்கின்றது.
உலகின் பாதுகாப்பு முக்கியஸ்தர்கள் கலந்து கொண்ட அந்த கருத்தரங்கில் கண்ணன் நுழைந்ததன் நோக்கம் என்ன? இவர் தீய நோக்கம் ஒன்றுக்காகவே நுழைந்திருக்கின்றார் என்பது அவர் எவ்வித அழைப்பிதழும் , முன்னறிவித்தலும் இல்லாமால் நுழைந்திருக்கின்றார் என்பதன் ஊடாக நிதர்சனமாகின்றது.
இவ்விடயம் பத்திரிகைகளில் பூதாதரமாக வெடித்ததை அடுத்து இரண்டு நயவஞ்சகத்தனங்கள் இடம்பெற்றுள்ளதாக அறியக்கிடைகின்றது. ஒன்று இலங்கை இராணுவத்தின் பிரிவு ஒன்றை தொடர்பு கொண்ட ரொஹான் குணரட்ண இலங்கை இராணுவத்தினால் கண்ணனுக்கு அழைப்பிதழ் வழங்கப்பட்டதாக பின் திகதி குறிப்பிட்ட (பக்டேட்டட்) அழைப்பிதழ் கொப்பி ஒன்றை தயார் செய்து அதனை திவயி ன பத்திரிகைக்கு அனுப்பி வைக்க முடியுமா என வேண்டியுள்ளார் என நம்பத்தகுந்த வட்டாரம் ஒன்றில் இருந்து அறியக்கிடைக்கின்றது. ரொஹான் குணரட்ண மேற்கண்ட முயற்சியை செய்திருக்கின்றார் என்பது உண்மையாயின் அவர் இலங்கை இராணுவத்தினை தனது அம்மாவின் பெட்டிக்கடை என்று நினைத்துக்கொண்டிருக்கின்றாரா என்ற கேள்வியை கேட்கத்தோன்றுகின்றது. இலங்கை இராணுவம் அதன் அதியுயர் கொள்கைக்காக உலகின் மிகப்பயங்கரமான பயங்கரவாத அமைப்பொன்றை அழித்து இன்று சிகரத்தில் நிற்கின்றது. ரொஹானின் சில்லறைத் தனங்களை இவ்வாறானதோர் இராணுவத்துடன் பயிற்சித்து பார்க்க முனைவது இவர் தனது பெயர்முன்னே போட்டுக்கொண்டிருக்கின்ற பயங்கரவாத நிபுணர் என்ற சொற்பதத்திற்கு உரியவரா என்றும் கேட்கத்தோன்றுகின்றது.
இரண்டாவது நயவஞ்சகத்தனம் யாதெனில் பத்திரிகையில் செய்தி வெளியாகிய சிறிது நேரத்தில் குளோபல் தமிழ் நியூஸ் எனும் இணையம் குறித்த செய்தியை மொழிபெயர்ப்பு பாணியில் வெளியிட்டது. திவய்ன இவ்வாறான செய்தி ஒன்றை பிரசுரித்திருக்கின்றது என்ற செய்தியை சொன்ன குளோபல் தமிழ் நியூஸ்; தியவினவில் வெளியாகி செய்தி முற்றிலும் உண்மைக்கு புறம்பானது என்று கண்ணன் தெரிவிப்பதாக செய்தி வெளியிட்டது. குறித்த இணையத்திற்கு கண்ணன் என்ன சொல்லிலிருக்கின்றார் என்பதை அப்படி எவ்வித வசனங்களும் மாற்றம் செய்யாமல் வாசகர்களின் பார்வைக்கு விடுகின்றோம்.
மேலுள்ள படங்களை பார்த்த உங்களுக்கு கோடிட்டு காட்டப்பட்டுள்ள வட்ட மிட்ட விடயங்களைப் பார்கின்றபோது இலங்கையிலே இடம்பெறுகின்ற கொம்பியூட்டர் ஜில்மாட் போன்ற ஊடக ஜில்மாட்டுக்களை உங்களால் அவதானிக்க முடிந்திருக்கும்.
முதலாவது ஜில்மாட் சிங்கப்பத்திரிகையில் தமிழ் சீஎன்என் எனும் இணையத்தளத்தின் உரிமையாளரே குறித்த படத்திலுள்ளதாக தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளபோதும், தமிழரின் தலையில் மிளகாய் அரைத்து சம்பல் சாப்பிட்டுக்கொண்டிருக்கின்ற றேடியோவுக்கு குருவாகி நிற்கின்றவர் லண்டனிலிருந்து சென்ற தமிழ் இணையத்தள உரிiயாளர் எனப் பெயரைக்குறிப்பிடாது மக்களை ஏமாற்ற முயற்சிக்கப்பட்டுள்ளது. இரண்டாவது ஜில்மாட் யாதெனில் இலங்கைக்கு கண்ணன் செல்லவில்லை என்றும் அவர் லண்டனிலே உள்ளதாகவும் தான் இலங்கைக்கு சென்றிருந்தால் அங்கு இராணுவ அதிகாரிகளால் பிடித்து கொல்லப்பட்டிருப்பேன் என குளோபல் தமிழ் செய்திக்கு தெரிவித்ததாகவும் தெரிவித்துள்ளது.
ஆனால், நாம் இங்கு எழுப்புகின்ற கேள்வி யாதெனில் திவயின பத்திரிகைக்கு பல தடவைகள் அழைப்பினை ஏற்படுத்தியுள்ள கண்ணன் திவய்ன செய்தியில் தவறான விடயங்கள் பல சொல்லப்பட்டுள்ளது. இவ்வாறான தகவல்களை சுவிட்சர்லாந்திலுள்ள புளொட் அமைப்பைச் சேர்ந்த ஒருவர் உங்களுக்கு வழங்கி கொண்டிருக்கின்றார். நான் தான் பிரித்தானியாவில் பன்னெடுங்காலங்களாக புலிகளுக்கு எதிராக வேலை செய்து வருகின்றேன். நான் எவ்வாறு புலிகளுக்கு எதிராக வேலை செய்தவன் என்பதை ரொஹான் குணரட்ணவை கேட்டுப்பாருங்கள் எனச் சொல்லியிருக்கின்றார்.
ஆனால் திவய்னவை தொடர்பு கொண்ட கண்ணன் ஏன் குளோபல் தமிழ் நியூஸ் எனும் இணையத்தளத்தினை தொடர்பு கொண்டு நீங்கள் பிழையான செய்தி ஒன்றை பிரசுரித்துள்ளீர்கள். திவய்ன வில் குறிப்பிடப்பட்டுள்ளது சரியான செய்தி அந்த படத்தில் இருப்பது நான்தான். நான் அந்த மாநாட்டில் கலந்து கொண்டது உண்மைதான். இலங்கையில் பாதுகாப்பு நிலைமைகள் இவ்வாறுதான் உண்டு. பாதுகாப்பு அமைச்சின் உயர் மட்ட மாநாடு ஒன்றினுள் கூட எனக்கு நுழையக்கூடிய நிலைமை காணப்படுகின்றது என்று சொல்லியிருக்கலாம் அல்லது அவ்வாறு செய்தற்கு இன்னும் நேரம் உண்டு.
மேலும் சுவிட்சர்லாந்திலுள்ள புளொட் உறுப்பினர் பொய் சொல்கின்றார் என்றால் நீர் இலங்கையில் சந்தித்த அரச உயர் மட்ட அதிகாரி ஒருவரிடம் , நீர் புலிகள் அமைப்பில் இராணுவப் பயிற்சி பெற்றுக்கொண்டுள்ளதுடன் சில காலங்கள் அந்த அமைப்பில் இருந்தவன் என்றும் பிரித்தானியாவில் இருந்து கொண்டு இலங்கைக்கு எதிராக செய்த போலிப் பிரச்சராங்களை நினைத்து மனம் வருந்துகின்றேன் என்றும் அப்பிரச்சராங்களை எதிர்வரும் காலங்களில் மேற்கொள்ள மாட்டேன் என்றும் தனது பிரச்சராரத்தால் ஏற்பட்ட காயத்தை ஆற்றவே நான் இங்கு வந்துள்ளேன் என்றும் குறிப்பிட்டது பொய்யா?
புலிகளின் தற்போதைய விநாயகம் குழுவைச் சேர்ந்த பாண்டியன் என்பவனிடம் வன்னியில் புலிகள் தோற்கடிக்கப்படுவதற்கு முன்னர் மலேசியாவில் வைத்து நீர் கையளித்த பணத்தை கேட்டு பாண்டியனுக்கு சவால் விட்டது பொய்யா? இந்த பணத்தை கேட்டு பாண்டியனிடம் நீர் மேற்கொண்ட சம்பாசனையை களவாக பதிவு செய்து அவற்றை உடகங்களுக்கு அனுப்பி விநாயகம் குழுவுக்கு எதிரான பிராச்சாரங்களை மேற்கொண்டு நெடியவன் குழுவை நியாயப்படுத்தியது பொய்யா? பாண்டியனுடனான தொடர்பு என்ன? யாருடைய பணம்? எதற்காக வழங்கப்பட்ட பணம் என்பதெல்லாம் மக்கள் அறியவேண்டிய தேவை இல்லையா?
இவ்வாறு பல்வேறுபட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கப்படாத நிலையில் ரொஹான் குணரட்ண கண்ணனை பாதுகாப்பு பிரிவினரினுள் ஊடுருவுததற்கு மாத்திரம் துணை நிற்கவில்லை. இலங்கையின் பல்வேறு பல்கலைக் கழகங்களுக்கும் அழைத்துச் சென்றிருக்கின்றார். பல்கலைக்கழகங்களில் ஒன்றுகூடல்கள் மேற்கொள்வதற்கான வழிமுறைகள் உண்டு. அதற்காக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் அல்லது பல்கலைக்கழக நிர்வாகத்தின் அனுமதியை பெறவேண்டும். ஆனால் இவ்வாறான அனுமதி எதுவும் பெறாமல் ரொஹான் தன்னிச்சையாக சப்ரகமுவ, ஒலுவில் மற்றும் பல பல்கலைக்கழகங்களுள் கண்ணனுடன் நுழைந்துள்ளதாக அறியக்கிடைக்கின்றது. இலங்கையின் சட்ட ஒழுங்கு விதிமுறைகளை மீறி ரொஹான் குணரட்ணவால் மேற்கொள்ளப்படும் செயற்பாடுகள் தொடர்பாக உடனடி விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு எதிர்கால அனர்த்தங்களை தவிர்த்துக்கொள்வது சிறந்ததாகும்.
ஸ்மார்ட் கைப்பேசி உற்பத்தியில் பல நிறுவனங்கள் போட்டி போட்டுக்கொண்டு புதிய தொழில்நுட்பங்களுடன் கூடிய புதிய கைப்பேசிகளை உருவாக்குவது போன்று தற்போது ஸ்மார்ட் கடிகார உற்பத்தியும் சூடு பிடித்துள்ளது இதன் அடிப்படையில் அப்பிள், சம்சுங், சோனி என்பவற்றினை தொடர்ந்து தற்போது அன்ரோயிட் இயங்குதளத்துடன் கூடிய A.I ஸ்மார்ட் கடிகாரங்கள் அறிமுகமாகவுள்ளன.
1.2GHz Processor, உட்பட 3G வலையமைப்பு போன்ற தொழில்நுட்பங்களைக் கொண்டுள்ள இதன் ஆரம்ப விலையானது 279 டொலர்களாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
1.2GHz Processor, உட்பட 3G வலையமைப்பு போன்ற தொழில்நுட்பங்களைக் கொண்டுள்ள இதன் ஆரம்ப விலையானது 279 டொலர்களாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழ் இந்தியத் துணை தூதரகத்தின் ஏற்பாட்டில் பாராளுமன்ற உறுப்பினரான பேராசிரியர் ரஜீவ விஜேயசிங்காவினால் தொகுக்கப்பட்ட ‘தெறிப்புப் படிமம்’ கவிதைத் தொகுப்பு வெளியீட்டு விழா நேற்று(30.09.2013) திங்கட்கிழமை யாழ் இந்திய துணைத்தூதரகத்தில் நடைபெற்றது.
யாழ். இந்திய துணை உயர் ஸ்தானிகர் மகாலிங்கம் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக யாழ். பல்கலைக்கழகத்தின் உப வேந்தர் வசந்தி அரசரட்ணம் கலந்துகொண்டிருந்தனர் இலங்கையில் யுத்தம் நடைபெற்ற காலத்தில் மக்கள் பட்ட துன்பங்களை பிரதிபலிக்கும் கவிதைகள் பல இடம் பெற்றுள்ள இந்த புத்தகத்தில் ஈழத்து கவிஞர்களான பா.அகிலன், சோ.பத்மநாதன், சித்தாந்தன், சாந்தன், கருணாகரன் ஆகியோரது கவிதைகளும் சிங்களக் கவிஞரான ஆரியவன்ச ரணவீரவின் சிங்கள கவிதைகள் பல காணப்படுவதுடன் இவர்களது கவிதைகள் சிலவற்றை இவர்களாலேயே வாசிக்கப்பட்டது.
ஈழத்து கவிஞர்கள் தமது கவிதை வரிகளில் 1995 ஆம் ஆண்டு இடப்பெயர்வு மற்றும் முள்ளிவாய்க்கால் பேரவலம், உள்நாட்டு போர் நடவடிக்கையின் போது மக்கள் பட்ட துன்பங்கள் மற்றும் பேரவலங்களை கவிதைகளாக கண்முன்னே கொண்டு வந்தனர்.
யாழ். இந்திய துணை உயர் ஸ்தானிகர் மகாலிங்கம் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக யாழ். பல்கலைக்கழகத்தின் உப வேந்தர் வசந்தி அரசரட்ணம் கலந்துகொண்டிருந்தனர் இலங்கையில் யுத்தம் நடைபெற்ற காலத்தில் மக்கள் பட்ட துன்பங்களை பிரதிபலிக்கும் கவிதைகள் பல இடம் பெற்றுள்ள இந்த புத்தகத்தில் ஈழத்து கவிஞர்களான பா.அகிலன், சோ.பத்மநாதன், சித்தாந்தன், சாந்தன், கருணாகரன் ஆகியோரது கவிதைகளும் சிங்களக் கவிஞரான ஆரியவன்ச ரணவீரவின் சிங்கள கவிதைகள் பல காணப்படுவதுடன் இவர்களது கவிதைகள் சிலவற்றை இவர்களாலேயே வாசிக்கப்பட்டது.
ஈழத்து கவிஞர்கள் தமது கவிதை வரிகளில் 1995 ஆம் ஆண்டு இடப்பெயர்வு மற்றும் முள்ளிவாய்க்கால் பேரவலம், உள்நாட்டு போர் நடவடிக்கையின் போது மக்கள் பட்ட துன்பங்கள் மற்றும் பேரவலங்களை கவிதைகளாக கண்முன்னே கொண்டு வந்தனர்.
யாழ். மாநகர சபையில் தற்காலிகமாக கடமையாற்றி வந்த ஊழியர்கள் தமக்கு நிரந்தர நியமனம் வழங்க வேண்டும் என கோரி யாழ். மாநகர சபை முன்றலில் இன்று (01.10.2013) காலை 8 மணி முதல் சாகும் வரையிலான உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த 10 வருடங்களுக்கு மேலாக தற்காலிக ஊழியர்களாக கடமையாற்றி வரும் எமக்கு இதுவரை இரு தடவைகள் நேர்முகத் தேர்வுகள் நடைபெற்றும் நிரந்தர ஊழியர்காளாக எம்மை உள்வாங்க இல்லை.
தற்போது உள்ள ஆணையாளர் மீண்டும் நேர்முக தேர்வு நடத்தியே எமக்கான நிரந்தர நியமனம் வழங்கப்படும் என தெரிவிக்கின்றார் ஆனால் இதற்கு முன்னர் இருந்த இரண்டு ஆணையாளர்களும் எமக்கான நேர்முக தேர்வை நடத்தி இருந்தும் நிரந்தர நியமனத்தை வழங்கவில்லை தற்போது மூன்றாவது ஆணையாளராக உள்ளவரும் எமக்கு மூன்றாவது முறையாக நேர்முகத் தேர்வு வைக்க உள்ளதாக அறிவித்துள்ளார்.
கடந்த 2002 ஆம் ஆண்டு எமக்கான அடிப்படை கல்வித்தகுதி 8ம் ஆண்டாக இருந்தது ஆனால் தற்போது க.பொ.த. சாதாரண தரம் ஆக்கப்பட்டுள்ளது இதனால் 300க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பாதிப்படைய உள்ளதுடன் இன்று முதல் மாநகர சபையின் பாதுகாப்பு பிரிவினை தனியார் நிறுவனத்திடம் ஒப்படைத்துள்ளனர் அதேபோல சுகாதார பொருளியல் பிரிவினையும் தனியாரிடம் ஒப்படைப்பதற்கான கேள்வி கோரல் பத்திரிகைகளில் பிரசுரிக்கப்பட்டுள்ளது.
இந்த போராட்டம் தொடர்பாக யாழ் மாநகர சபை ஆணையாளரிடம் ஊடகவியலாளர்கள் கருத்து கேட்க முற்பட்ட போது, ஆணையாளர் யாரையும் சந்திக்க விரும்பவில்லை எனக்குறிப்பிட்ட அதே சமயம் இச்சம்பவம் பற்றி யாழ் மாநகர முதல்வரை தொடர்பு கொண்டபோது தான் கொழும்பில் நிற்பதாகவும் நாளையதினம் வந்து பார்த்துவிட்டு பதில் கூறுவதாக குறிப்பிட்டார்.
கடந்த 10 வருடங்களுக்கு மேலாக தற்காலிக ஊழியர்களாக கடமையாற்றி வரும் எமக்கு இதுவரை இரு தடவைகள் நேர்முகத் தேர்வுகள் நடைபெற்றும் நிரந்தர ஊழியர்காளாக எம்மை உள்வாங்க இல்லை.
தற்போது உள்ள ஆணையாளர் மீண்டும் நேர்முக தேர்வு நடத்தியே எமக்கான நிரந்தர நியமனம் வழங்கப்படும் என தெரிவிக்கின்றார் ஆனால் இதற்கு முன்னர் இருந்த இரண்டு ஆணையாளர்களும் எமக்கான நேர்முக தேர்வை நடத்தி இருந்தும் நிரந்தர நியமனத்தை வழங்கவில்லை தற்போது மூன்றாவது ஆணையாளராக உள்ளவரும் எமக்கு மூன்றாவது முறையாக நேர்முகத் தேர்வு வைக்க உள்ளதாக அறிவித்துள்ளார்.
கடந்த 2002 ஆம் ஆண்டு எமக்கான அடிப்படை கல்வித்தகுதி 8ம் ஆண்டாக இருந்தது ஆனால் தற்போது க.பொ.த. சாதாரண தரம் ஆக்கப்பட்டுள்ளது இதனால் 300க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பாதிப்படைய உள்ளதுடன் இன்று முதல் மாநகர சபையின் பாதுகாப்பு பிரிவினை தனியார் நிறுவனத்திடம் ஒப்படைத்துள்ளனர் அதேபோல சுகாதார பொருளியல் பிரிவினையும் தனியாரிடம் ஒப்படைப்பதற்கான கேள்வி கோரல் பத்திரிகைகளில் பிரசுரிக்கப்பட்டுள்ளது.
இந்த போராட்டம் தொடர்பாக யாழ் மாநகர சபை ஆணையாளரிடம் ஊடகவியலாளர்கள் கருத்து கேட்க முற்பட்ட போது, ஆணையாளர் யாரையும் சந்திக்க விரும்பவில்லை எனக்குறிப்பிட்ட அதே சமயம் இச்சம்பவம் பற்றி யாழ் மாநகர முதல்வரை தொடர்பு கொண்டபோது தான் கொழும்பில் நிற்பதாகவும் நாளையதினம் வந்து பார்த்துவிட்டு பதில் கூறுவதாக குறிப்பிட்டார்.
13 ஆவது திருத்தச் சட்டத்தின்கீழ் வழங்கப்பட்டுள்ள காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் உட்பட அனைத்து அதிகாரங்களையும் கிழக்கு மாகாண சபைக்குத் தர வேண்டும் என்ற பிரேரணை அதிக வாக்குகளால் வெற்றியீட்டி மாகாண சபையில் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.
முஸ்லிம் காங்கிரஸின் கிழக்கு மாகாணக் குழுவின் தலைவர் ஏ.எம். ஜெலீல் முன்வைத்த பிரேரணைக்கு ஆயிரம் பேர் விருப்புத் தெரிவித்திருக்கின்றனர்.
பிரேரணை முன்வைக்கப்பட்ட போது, கிழக்கு மாகாணத்தின் முதலமைச்சர் அதற்கு எதிராக குரல் எழுப்பிய போதும், பிரேரணைக்கு ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த மந்திரியொருவரும் மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர் ஒருவரும் அக்கூற்றுக்கு ஆதரவு வழங்கியுள்ளனர்.
எப்)
முஸ்லிம் காங்கிரஸின் கிழக்கு மாகாணக் குழுவின் தலைவர் ஏ.எம். ஜெலீல் முன்வைத்த பிரேரணைக்கு ஆயிரம் பேர் விருப்புத் தெரிவித்திருக்கின்றனர்.
பிரேரணை முன்வைக்கப்பட்ட போது, கிழக்கு மாகாணத்தின் முதலமைச்சர் அதற்கு எதிராக குரல் எழுப்பிய போதும், பிரேரணைக்கு ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த மந்திரியொருவரும் மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர் ஒருவரும் அக்கூற்றுக்கு ஆதரவு வழங்கியுள்ளனர்.
எப்)
நடைபெறவுள்ள தென் மாகாண சபைத் தேர்தலுக்கு முன்னர் ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து ஆளும் கட்சியுடன் இணைந்துகொள்ளவுள்ள ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர் நீங்கள்தானா? என பொதுமக்கள் என்னிடம் வினவுகின்றனர் என காலி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கயன்த கருணாதிலக்க குறிப்பிடுகிறார்.
அண்மையில் ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து ஆளும் கட்சியுடன் இணைந்தவர் தயாசிரி ஜயசேக்கர. அவருக்குப் பின்னர் நானும் ஆளும் கட்சியினருடன் சேரவுள்ளதாக வாய்வாழிப் பேச்சு பரவி வருவதாகக் குறிப்பிடும் அவர், தான் ஐக்கிய தேசியக் கட்சியை விட்டும் ஒருபோதும் விலகிச் செல்லப் போவதில்லை எனக் குறிப்பிடும்போது, 'தயாசிரியும் அவ்வாறுதான் ஆரம்பத்தில் கூறினார்' என பொதுமக்கள் தன்னிடம் குறிப்பிடுவதாக கயன்த குறிப்பிடுகிறார்.
இந்த வாய்வழிப் பேச்சுக்களுக்கெல்லாம் ஒரு முடிச்சுப்போட வேண்டுமென்றால், தான் ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து விலகாதிருக்க வேண்டும் எனவும் அவர் தொடர்ந்து குறிப்பிட்டுள்ளார்.
(கேஎப்)
அண்மையில் ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து ஆளும் கட்சியுடன் இணைந்தவர் தயாசிரி ஜயசேக்கர. அவருக்குப் பின்னர் நானும் ஆளும் கட்சியினருடன் சேரவுள்ளதாக வாய்வாழிப் பேச்சு பரவி வருவதாகக் குறிப்பிடும் அவர், தான் ஐக்கிய தேசியக் கட்சியை விட்டும் ஒருபோதும் விலகிச் செல்லப் போவதில்லை எனக் குறிப்பிடும்போது, 'தயாசிரியும் அவ்வாறுதான் ஆரம்பத்தில் கூறினார்' என பொதுமக்கள் தன்னிடம் குறிப்பிடுவதாக கயன்த குறிப்பிடுகிறார்.
இந்த வாய்வழிப் பேச்சுக்களுக்கெல்லாம் ஒரு முடிச்சுப்போட வேண்டுமென்றால், தான் ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து விலகாதிருக்க வேண்டும் எனவும் அவர் தொடர்ந்து குறிப்பிட்டுள்ளார்.
(கேஎப்)
ரோபோவும் மனிதனை போல தன்னிச்சையாக செயல்படக்கூடியவாறு மூளையை அமெரிக்க புகழ் பெற்ற இந்திய வம்சாவளி தமிழ் விஞ்ஞானி ஜகன்னாதன் சாரங்கபாணி கண்டுபிடித்துள்ளார்.
மிசோரி அறிவியல் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் பல ஆராய்ச்சிகளை செய்து பெருமை பெற்ற ஜகன்னாதன், ரோபோக்கள் பற்றி பல ஆண்டுகளாக ஆராய்ச்சி செய்து வருவதுடன் இவர் தலைமையிலான குழுவினர் பல வகையில் ரோபாட் செயல்பாடுகளை கணக்கிட்டு அதற்கு தனி கட்டளைகளை பிறப்பித்து, தானியங்கி முறையில் மட்டுமின்றி சுயமாக சிந்தித்து குறைந்தபட்ச செயல்பாடுகளை மேற்கொள்ள வைத்து ஜகன்னாதன் வெற்றி கண்டுள்ளார்.
ரோபாட் சுயமாக சிந்தித்து செயல்படக்கூடிய அளவில் அதற்கு மனிதர்களுக்கு உள்ளதை போல மூளையை கண்டுபிடித்துள்ளதுடன் எல்லா கன்ட்ரோல்களையும் மூளையில் வைத்து மனிதனை போலவே சிந்திக்கும் அளவுக்கு, புரிந்து கொள்ளும் அளவுக்கு ரோபாட்டின் செயல்பாட்டையும் மாற்றியமைத்துள்ளார்.
சோதனை ரீதியாக ரோபாட்டுக்கு மூளையை பொருத்தி செயல்படுத்தியபோது, ரோபாட்டுக்கு இலக்கை மட்டும் கமாண்ட் செய்து விட்டால் அதை அடைய மனிதனை போல தானாகவே சிந்தித்து, செயல்பட முடியும் என்பதில் ஏறக்குறைய வெற்றி கண்டுள்ளார்.
ரோபாட்டுக்கு அவர் கண்டுபிடித்த மூளையை பொருத்துவதில் படிப்படியாக மேலும் வெற்றி கிடைக்கும் என்று நம்பிக்கை தெரிவித்த ஜகன்னாதன், எதிர்காலத்தில் ரோபாட்டால், மனிதனை போல சிரிக்க முடியும், கோபப்பட முடியும் ஏன் முகபாவத்தை கூட காட்ட முடியும் பாலம் கட்டுவது, மேம்பாலம் அமைப்பது போன்ற இடங்களில் ஒரே நேரத்தில் பத்து புல்டோசர்களை இயக்க வேண்டும் என்றால் அதில் உள்ள பழுதுகளை கண்டுபிடிக்க வேண்டும், அதை சரி செய்யவும் வேண்டும் என்றால் இந்த மூளையுள்ள ரோபாட்களை பயன்படுத்தலாம், அது தான் என் குறிக்கோள் என்று கூறியுள்ளார்.
மிசோரி அறிவியல் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் பல ஆராய்ச்சிகளை செய்து பெருமை பெற்ற ஜகன்னாதன், ரோபோக்கள் பற்றி பல ஆண்டுகளாக ஆராய்ச்சி செய்து வருவதுடன் இவர் தலைமையிலான குழுவினர் பல வகையில் ரோபாட் செயல்பாடுகளை கணக்கிட்டு அதற்கு தனி கட்டளைகளை பிறப்பித்து, தானியங்கி முறையில் மட்டுமின்றி சுயமாக சிந்தித்து குறைந்தபட்ச செயல்பாடுகளை மேற்கொள்ள வைத்து ஜகன்னாதன் வெற்றி கண்டுள்ளார்.
ரோபாட் சுயமாக சிந்தித்து செயல்படக்கூடிய அளவில் அதற்கு மனிதர்களுக்கு உள்ளதை போல மூளையை கண்டுபிடித்துள்ளதுடன் எல்லா கன்ட்ரோல்களையும் மூளையில் வைத்து மனிதனை போலவே சிந்திக்கும் அளவுக்கு, புரிந்து கொள்ளும் அளவுக்கு ரோபாட்டின் செயல்பாட்டையும் மாற்றியமைத்துள்ளார்.
சோதனை ரீதியாக ரோபாட்டுக்கு மூளையை பொருத்தி செயல்படுத்தியபோது, ரோபாட்டுக்கு இலக்கை மட்டும் கமாண்ட் செய்து விட்டால் அதை அடைய மனிதனை போல தானாகவே சிந்தித்து, செயல்பட முடியும் என்பதில் ஏறக்குறைய வெற்றி கண்டுள்ளார்.
ரோபாட்டுக்கு அவர் கண்டுபிடித்த மூளையை பொருத்துவதில் படிப்படியாக மேலும் வெற்றி கிடைக்கும் என்று நம்பிக்கை தெரிவித்த ஜகன்னாதன், எதிர்காலத்தில் ரோபாட்டால், மனிதனை போல சிரிக்க முடியும், கோபப்பட முடியும் ஏன் முகபாவத்தை கூட காட்ட முடியும் பாலம் கட்டுவது, மேம்பாலம் அமைப்பது போன்ற இடங்களில் ஒரே நேரத்தில் பத்து புல்டோசர்களை இயக்க வேண்டும் என்றால் அதில் உள்ள பழுதுகளை கண்டுபிடிக்க வேண்டும், அதை சரி செய்யவும் வேண்டும் என்றால் இந்த மூளையுள்ள ரோபாட்களை பயன்படுத்தலாம், அது தான் என் குறிக்கோள் என்று கூறியுள்ளார்.
கிளிநொச்சிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற ரயிலில் பயணித்த பொகவந்தலாவ பிரதேசத்தைச் சேர்ந்த நான்கு பயணிகளுக்கு மயக்க மருந்து அளித்து, பணம் மற்றும் பொருட்கள் கொள்ளையிடப்பட்டுள்ளன.
இக் கொள்ளைச் சம்பவத்தில் தங்க ஆபரணங்கள், செல்லிடப் பேசிகள் உள்ளிட்ட ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் ரூபா பெறுமதியான பொருட்கள் கொள்ளையிடப்பட்டுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இக்கொள்ளையில் ஈடுபட்டவர்கள் ரயிலில் ஒன்றாக பயணித்த நண்பர்களான இளைஞர்களே பணம் பொருட்களை அபகரித்துச் சென்றுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இக் கொள்ளைச் சம்பவத்தில் தங்க ஆபரணங்கள், செல்லிடப் பேசிகள் உள்ளிட்ட ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் ரூபா பெறுமதியான பொருட்கள் கொள்ளையிடப்பட்டுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இக்கொள்ளையில் ஈடுபட்டவர்கள் ரயிலில் ஒன்றாக பயணித்த நண்பர்களான இளைஞர்களே பணம் பொருட்களை அபகரித்துச் சென்றுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சினால் 110 மில்லியன் செலவில் புதிதாக நிர்மானிக்கப்பட்ட அக்கரைப்பற்று மாநகர சபைக்கான கட்டிடத் தொகுதியினை திறந்து வைக்கும் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை மாலை மாநகர முதல்வர் அதாஉல்லா அஹமட் ஸக்கி தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் அல்-ஹாஜ் ஏ.எல்.எம்.அதாஉல்லாவும் மற்றும் கிழக்கு மாகாண அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெவ்வை பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம்.அஸ்வர் மாநகர முதல்வர் பிரதி முதல்வர் அதிதிகளாகவும் கலந்து கொண்டனர்.
உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் அல்-ஹாஜ் ஏ.எல்.எம்.அதாஉல்லா நினைவுப் படிவத்தைத் திரைநீக்கம் செய்து வைத்ததுடன் அஸ்ஷேய்க் அஸ்ஸெய்யித் மக்கத்தார் ஏ மஜீத் நவீன மாநகர கட்டிடத் தொகுதியினை நாடாவை வெட்டித் திறந்து வைத்தார்
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் அல்-ஹாஜ் ஏ.எல்.எம்.அதாஉல்லாவும் மற்றும் கிழக்கு மாகாண அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெவ்வை பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம்.அஸ்வர் மாநகர முதல்வர் பிரதி முதல்வர் அதிதிகளாகவும் கலந்து கொண்டனர்.
உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் அல்-ஹாஜ் ஏ.எல்.எம்.அதாஉல்லா நினைவுப் படிவத்தைத் திரைநீக்கம் செய்து வைத்ததுடன் அஸ்ஷேய்க் அஸ்ஸெய்யித் மக்கத்தார் ஏ மஜீத் நவீன மாநகர கட்டிடத் தொகுதியினை நாடாவை வெட்டித் திறந்து வைத்தார்
கொழும்பு மா நகர சபையின் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர் நதில் மாலகொட விபச்சாரத் தொழிலை சட்ட ரீதியாக்க வேண்டும் என்று முன்வைத்த பிரேரணை ,நகரபிதா ஏ.ஜே.எம். முஸம்மில் அவர்களினால் நிராகரிக்கப்பட்டுள்ளது.
உல்லாசப் பிரயாணத் துறையைக் கட்டியெழுப்புவதற்காக கஸீனோவைப் போல விபச்சாரத் தொழிலையும் சட்ட ரீதியாக்கினால் அதன் மூலம் சிறந்ததொரு பொருளாதார அபிவிருத்தியைக் கட்டியெழுப்பலாம் என ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர் குறிப்பிட்டுள்ளார்.
இன்னும் 10 ஆண்டுகளில் ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியமைத்து, அந்த அரசாங்கத்தின் மூலம் கொழும்பு நகரில் விபச்சாரத் தொழில் உள்ளிட்ட அனைத்து வசதிகளுடனும் கூடிய உல்லாச நகரமொன்று அமைக்கப்படும் என மாலகொட குறிப்பிட்டுள்ளார்.
இதுதொடர்பாக நகரபிதா ஏ.ஜே.எம். முஸம்மில், அவ்வாறான மிக இழிந்ததொரு நடவடிக்கையின் மூலம் நாட்டை வளப்படுத்த தனக்கு அவசியமில்லை எனவும், அதற்கு தான் ஒருபோதும் உடன்படுவதில்லை எனவும் அவ்வாறானதொரு பிரேரணையை ஒருபோதும் நடைமுறைப்படுத்தப் போவதில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை என்பது ஒரு பௌத்த நாடாகும். அவ்வாறான நாட்டில் இவ்வாறான அசிங்கமான செயலைப் புரிவதற்கு தான் ஒருபோதும் இடமளிக்கப்போவதில்லை எனவும் நகர பிதா முஸம்மில் குறிப்பிட்டுள்ளார்.
(கேஎப்)
உல்லாசப் பிரயாணத் துறையைக் கட்டியெழுப்புவதற்காக கஸீனோவைப் போல விபச்சாரத் தொழிலையும் சட்ட ரீதியாக்கினால் அதன் மூலம் சிறந்ததொரு பொருளாதார அபிவிருத்தியைக் கட்டியெழுப்பலாம் என ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர் குறிப்பிட்டுள்ளார்.
இன்னும் 10 ஆண்டுகளில் ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியமைத்து, அந்த அரசாங்கத்தின் மூலம் கொழும்பு நகரில் விபச்சாரத் தொழில் உள்ளிட்ட அனைத்து வசதிகளுடனும் கூடிய உல்லாச நகரமொன்று அமைக்கப்படும் என மாலகொட குறிப்பிட்டுள்ளார்.
இதுதொடர்பாக நகரபிதா ஏ.ஜே.எம். முஸம்மில், அவ்வாறான மிக இழிந்ததொரு நடவடிக்கையின் மூலம் நாட்டை வளப்படுத்த தனக்கு அவசியமில்லை எனவும், அதற்கு தான் ஒருபோதும் உடன்படுவதில்லை எனவும் அவ்வாறானதொரு பிரேரணையை ஒருபோதும் நடைமுறைப்படுத்தப் போவதில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை என்பது ஒரு பௌத்த நாடாகும். அவ்வாறான நாட்டில் இவ்வாறான அசிங்கமான செயலைப் புரிவதற்கு தான் ஒருபோதும் இடமளிக்கப்போவதில்லை எனவும் நகர பிதா முஸம்மில் குறிப்பிட்டுள்ளார்.
(கேஎப்)
வட மாகாண சபையின் புதிய முதலமைச்சராக சீ.வீ. விக்னேஸ்வரன் இன்று காலை நியமிக்கப்பட்டுள்ளதுடன், நியமனக் கடிதமும் அவருக்கு வட மாகாண சபையின் ஆளுநர் அலுவலகத்தில் வழங்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், நியமனக் கடிதத்தைப் பெற்றுக் கொண்டு விக்னேஸ்வரன் வெளியே சென்றுள்ளதுடன், சத்தியப் பிரமாணம் செய்வதற்கான நாளும் இடமும் கலந்தாலோசிக்கப்பட்டு வருகின்றது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் குறிப்பிடுகிறார்.
(கேஎப்)
எவ்வாறாயினும், நியமனக் கடிதத்தைப் பெற்றுக் கொண்டு விக்னேஸ்வரன் வெளியே சென்றுள்ளதுடன், சத்தியப் பிரமாணம் செய்வதற்கான நாளும் இடமும் கலந்தாலோசிக்கப்பட்டு வருகின்றது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் குறிப்பிடுகிறார்.
(கேஎப்)








































.jpg)
.jpg)
.jpg)






