அநுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த புலிச் சந்தேகநபர் ஒருவர் சட்டவிரோதமாக வைத்திருந்த இரண்டு கையடக்க தொலைபேசிகளை விழுங்கியுள்ள நிலையில் சத்திசிகிச்சைக்கு உட்படுத்தப்படவுள்ளார். இச்சம்பவம் அநுராதபுரம் சிறைச்சாலையில் இடம்பெற்றுள்ளது. இச் சத்திரசிகிச்சை நீதிமன்றம் உத்தரவுக்கு அமையவே மேற்கொள்ளப்படவுள்ளது.
அநுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த வவுனியா பிரதேசத்தைச் சேர்ந்த புலிச் சந்தேகநபர் ஒருவரை வவுனியா நீதிமன்றத்தில் இடம்பெற்ற வழக்கொன்றுக்காக அழைத்துச்சென்று மீண்டும் அநுராதபுரத்துக்கு அழைத்து வந்தபோதே மேற்படி கையடக்கத் தொலைபேசிகள் இரண்டையும் அவர் விழுங்கியுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.
தீடிரென்று வயிற்றுக்குள்ளிருந்த கையடக்கத் தொலைபேசிகளில் ஒன்று அலறியபோது அவரது வயிற்றிலும் தொண்டைப் பகுதியிலும் பாரிய வேதனை ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து அநுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு சத்திரசிகிச்சை மேற்கொள்ள நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அநுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த வவுனியா பிரதேசத்தைச் சேர்ந்த புலிச் சந்தேகநபர் ஒருவரை வவுனியா நீதிமன்றத்தில் இடம்பெற்ற வழக்கொன்றுக்காக அழைத்துச்சென்று மீண்டும் அநுராதபுரத்துக்கு அழைத்து வந்தபோதே மேற்படி கையடக்கத் தொலைபேசிகள் இரண்டையும் அவர் விழுங்கியுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.
தீடிரென்று வயிற்றுக்குள்ளிருந்த கையடக்கத் தொலைபேசிகளில் ஒன்று அலறியபோது அவரது வயிற்றிலும் தொண்டைப் பகுதியிலும் பாரிய வேதனை ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து அநுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு சத்திரசிகிச்சை மேற்கொள்ள நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கு தொடர்பாக சிறப்புப் புலனாய்வுக் குழுவின் தலைவர் கார்த்திகேயன் கட்டளைப்படி தி.மு.க.தலைவர் கருணாநிதி மற்றும் வைகோவிடம் முறையாக விசாரணை நடத்தவில்லை என இந்த வழக்கின் முதன்மை விசாரணை அதிகாரி கே.ரகோத்தமன் குற்றம் சாட்டி உள்ளார்.
ராஜீவ் காந்தி கொலை வழக்கை விசாரித்த முதன்மை விசாரணை அதிகாரி ரகோத்தமன், "ராஜீவ் காந்தி கொலைக்கான கூட்டுச் சதி - சிபிஐ கோப்புகளிலிருந்து´´ என்ற பெயரில் ஒரு நூல் எழுதி உள்ளார்.
விசாரணையின்போது, விடுதலைப் புலிகள் அமைப்பின் புகலிடமான யாழ்ப்பாணத்திற்கு வைகோ சென்று வந்தது தொடர்பான ´இன் டைகர்´ஸ் கேவ்´ உள்ளிட்ட 500 விடியோ கேசட்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக ரகோத்தமன் தனது நூலில் குறிப்பிட்டுள்ளார்.
புலிகள் அமைப்பின் முன்னாள் தலைவர் பிரபாகரனை சந்தித்த வைகோ, ராஜீவ் காந்தியைப் பற்றி இழிவாகப் பேசியுள்ளார்.
இந்த சந்திப்பின்போது, பொட்டு அம்மானை பிரபாகரன் அறிமுகப்படுத்தி உள்ளார். இது தொடர்பாக வைகோவிடம் விசாரிக்கப்படவில்லை. இந்தியா-இலங்கை ஒப்பந்தம் ஏற்படுவதற்கு முன்பாக அசோகா ஓட்டலில் தங்கியிருந்த பிரபாகரனுடன் பேசிய உரையாடல் பற்றி வைகோவிடம் விசாரிக்க வேண்டும் என வலியுறுத்தியதாகக் குறிப்பிட்டுள்ளார்.
ஆதாரங்களின்படி, அசோகா ஓட்டலில் தங்கியிருந்த பிரபாகரனுடன் இன்டர்காமில் வைகோ பேசியுள்ளார், அப்போது, ராஜீவ் காந்தி தனது முதுகில் குத்தி விட்டதாகவும், இந்தியா-இலங்கை இடையிலான ஒப்பந்தம் ஈழப் பிரச்னைக்குத் தீர்வாகாது என்றும் பிரபாகரன் வைகோவிடம் கூறியுள்ளார்.
ஆனால், வழக்கு விசாரணையின்போது, விடியோவிலிருந்த குரல் பதிவு தன்னுடையதுதான் என்பதை ஏற்க வைகோ மறுத்து விட்டார் என ரகோத்தமன் தனது நூலில் குறிப்பிட்டுள்ளார்.
தி.மு.க.தலைவர் கருணாநிதி பற்றியும் தனது நூலில் குறிப்பிட்டுள்ளார். 1991ஆம் ஆண்டு ஸ்ரீபெரும்புதூருக்கு வந்திருந்த ராஜீவ் காந்தியுடனான சந்திப்பை கருணாநிதி ரத்து செய்து விட்டார். எதற்காக இந்த சந்திப்பை ரத்து செய்தார் என்பதற்கான காரணத்தைக் கண்டறிந்து சிறப்புப் புலனாய்வுக் குழுவின் கவனத்துக்குக் கொண்டு சென்று, இதுகுறித்து கருணாநிதியிடம் விசாரணை நடத்துமாறு கேட்டுக் கொண்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால், கருணாநிதியிடம் சிறப்புப் புலனாய்வு அதிகாரி விசாரணை மேற்கொண்டதாகவும், காவல் துறை டிஜிபி ரங்கசாமி அறிவுரையின் பேரில் ராஜீவை சந்திக்கவில்லை என்று தெரிவித்ததாகவும் கூறினார். இதைப் பிரச்னை ஆக்க வேண்டாம் என சிறப்புப் புலனாய்வுக் குழு தலைவர் கார்த்திகேயன் தன்னிடம் கோபமாகக் கூறியதாக ரகோத்தமன் கூறியுள்ளார்.
ராஜீவ் கொலை வழக்கில் வைகோ மீது சந்தேகம் இருப்பதாகவும், அவரை அரசுத் தரப்பு சாட்சியாக சேர்க்க வேண்டாம் என்றும் எதிர்ப்பு தெரிவித்ததாகத் தெரிவித்தார்.
ஆனால், வைகோவுக்கு எதிராக போதுமான ஆதாரம் இல்லை என கார்த்திகேயன் தெரிவித்தார்.
கருணாநிதி ஸ்ரீபெரும்புதூர் செல்வதைத் தவிர்த்தது பற்றி விசாரணை நடத்தவும் கார்த்திகேயன் மறுத்து விட்டார் என ரகோத்தமன் தெரிவித்துள்ளார். எனினும், 40 உறுப்பினர்களுடன் மேற்கொள்ளப்பட்ட விசாரணை பற்றி யாரும் கேள்வி எழுப்ப முடியாது என கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
சிறப்புப் புலனாய்வுக் குழுவின் விசாரணை அறிக்கையை 2 நீதி குழுக்கள் ஏற்றுக்கொண்டு பாராட்டி உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். உச்ச நீதிமன்றமும் பாராட்டி உள்ளதாக கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
ராஜீவ் காந்தி கொலை வழக்கை விசாரித்த முதன்மை விசாரணை அதிகாரி ரகோத்தமன், "ராஜீவ் காந்தி கொலைக்கான கூட்டுச் சதி - சிபிஐ கோப்புகளிலிருந்து´´ என்ற பெயரில் ஒரு நூல் எழுதி உள்ளார்.
விசாரணையின்போது, விடுதலைப் புலிகள் அமைப்பின் புகலிடமான யாழ்ப்பாணத்திற்கு வைகோ சென்று வந்தது தொடர்பான ´இன் டைகர்´ஸ் கேவ்´ உள்ளிட்ட 500 விடியோ கேசட்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக ரகோத்தமன் தனது நூலில் குறிப்பிட்டுள்ளார்.
புலிகள் அமைப்பின் முன்னாள் தலைவர் பிரபாகரனை சந்தித்த வைகோ, ராஜீவ் காந்தியைப் பற்றி இழிவாகப் பேசியுள்ளார்.
இந்த சந்திப்பின்போது, பொட்டு அம்மானை பிரபாகரன் அறிமுகப்படுத்தி உள்ளார். இது தொடர்பாக வைகோவிடம் விசாரிக்கப்படவில்லை. இந்தியா-இலங்கை ஒப்பந்தம் ஏற்படுவதற்கு முன்பாக அசோகா ஓட்டலில் தங்கியிருந்த பிரபாகரனுடன் பேசிய உரையாடல் பற்றி வைகோவிடம் விசாரிக்க வேண்டும் என வலியுறுத்தியதாகக் குறிப்பிட்டுள்ளார்.
ஆதாரங்களின்படி, அசோகா ஓட்டலில் தங்கியிருந்த பிரபாகரனுடன் இன்டர்காமில் வைகோ பேசியுள்ளார், அப்போது, ராஜீவ் காந்தி தனது முதுகில் குத்தி விட்டதாகவும், இந்தியா-இலங்கை இடையிலான ஒப்பந்தம் ஈழப் பிரச்னைக்குத் தீர்வாகாது என்றும் பிரபாகரன் வைகோவிடம் கூறியுள்ளார்.
ஆனால், வழக்கு விசாரணையின்போது, விடியோவிலிருந்த குரல் பதிவு தன்னுடையதுதான் என்பதை ஏற்க வைகோ மறுத்து விட்டார் என ரகோத்தமன் தனது நூலில் குறிப்பிட்டுள்ளார்.
தி.மு.க.தலைவர் கருணாநிதி பற்றியும் தனது நூலில் குறிப்பிட்டுள்ளார். 1991ஆம் ஆண்டு ஸ்ரீபெரும்புதூருக்கு வந்திருந்த ராஜீவ் காந்தியுடனான சந்திப்பை கருணாநிதி ரத்து செய்து விட்டார். எதற்காக இந்த சந்திப்பை ரத்து செய்தார் என்பதற்கான காரணத்தைக் கண்டறிந்து சிறப்புப் புலனாய்வுக் குழுவின் கவனத்துக்குக் கொண்டு சென்று, இதுகுறித்து கருணாநிதியிடம் விசாரணை நடத்துமாறு கேட்டுக் கொண்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால், கருணாநிதியிடம் சிறப்புப் புலனாய்வு அதிகாரி விசாரணை மேற்கொண்டதாகவும், காவல் துறை டிஜிபி ரங்கசாமி அறிவுரையின் பேரில் ராஜீவை சந்திக்கவில்லை என்று தெரிவித்ததாகவும் கூறினார். இதைப் பிரச்னை ஆக்க வேண்டாம் என சிறப்புப் புலனாய்வுக் குழு தலைவர் கார்த்திகேயன் தன்னிடம் கோபமாகக் கூறியதாக ரகோத்தமன் கூறியுள்ளார்.
ராஜீவ் கொலை வழக்கில் வைகோ மீது சந்தேகம் இருப்பதாகவும், அவரை அரசுத் தரப்பு சாட்சியாக சேர்க்க வேண்டாம் என்றும் எதிர்ப்பு தெரிவித்ததாகத் தெரிவித்தார்.
ஆனால், வைகோவுக்கு எதிராக போதுமான ஆதாரம் இல்லை என கார்த்திகேயன் தெரிவித்தார்.
கருணாநிதி ஸ்ரீபெரும்புதூர் செல்வதைத் தவிர்த்தது பற்றி விசாரணை நடத்தவும் கார்த்திகேயன் மறுத்து விட்டார் என ரகோத்தமன் தெரிவித்துள்ளார். எனினும், 40 உறுப்பினர்களுடன் மேற்கொள்ளப்பட்ட விசாரணை பற்றி யாரும் கேள்வி எழுப்ப முடியாது என கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
சிறப்புப் புலனாய்வுக் குழுவின் விசாரணை அறிக்கையை 2 நீதி குழுக்கள் ஏற்றுக்கொண்டு பாராட்டி உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். உச்ச நீதிமன்றமும் பாராட்டி உள்ளதாக கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
எகிப்து நாட்டிலுள்ள சினாய் பகுதியில் தீவிரவாதிகள் அடிக்கடி தாக்குதலில் ஈடுபட்டு வந்தார்கள். இதனை அடுத்து தலைநகர் கெய்ரோ அருகேயுள்ள நச்செர் நகரில் ராணுவத்தினர் வேட்டை நடத்தி 12 தீவிரவாதிகளை கைது செய்தனர். இவர்கள் அனைவரும் அல்கொய்தா இயக்கத்துடன் தொடர்புடையவர்கள் என தெரியவருகிறது.
இந்த தகவலை வெளியிட்ட உள்துறை அமைச்சகம் பிடிபட்ட
இந்த 12 பேரும் எகிப்து நாட்டிலும், வெளிநாடுகளிலும் தாக்குதல்கள் நடத்த சதித்திட்டம் தீட்டினார்கள். இவர்களில் ஒருவன் துனிசியாவையும், மற்றொருவன் லிபியாவையும் சேர்ந்தவர்கள் என கூறியுள்ளது
இந்த தகவலை வெளியிட்ட உள்துறை அமைச்சகம் பிடிபட்ட
இந்த 12 பேரும் எகிப்து நாட்டிலும், வெளிநாடுகளிலும் தாக்குதல்கள் நடத்த சதித்திட்டம் தீட்டினார்கள். இவர்களில் ஒருவன் துனிசியாவையும், மற்றொருவன் லிபியாவையும் சேர்ந்தவர்கள் என கூறியுள்ளது
ஒலிம்பிக் போட்டியில் இலங்கைக்கு வெள்ளிப் பதக்கம் வென்று கொடுத்த குறுந்தூர ஓட்ட வீராங்கனை சுசந்திகா ஜயசிங்க மிகவும் மர்மமான முறையில் சிங்கப்பூரில் வைத்து காணாமல் போய் உள்ளார்.
ஆசிய பெண்கள் மெய்வல்லுனர் விளையாட்டு மாநாடு இந்தோனேசிய தலைநகர் ஜகார்த்தாவில் நேற்று ஆரம்பம் ஆனது. எதிர்வரும் 05 ஆம் திகதி நிறைவடைகின்றது.
இலங்கை மெய்வல்லுனர் விளையாட்டு சபையால் இம்மாநாட்டுக்கு சுசந்திகா ஜயசிங்க அனுப்பப்பட்டார். விளையாட்டு அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேதான் சுசந்திகா ஜயசிங்கவின் பெயரை சிபாரிசு செய்து இருந்தார்.
இவருக்கான பிரயாண செலவுகளை இலங்கை மெய்வல்லுனர் விளையாட்டு சபை பொறுப்பேற்று இருந்தது. இது 80000 ரூபாய்க்கும் அதிகம்.
கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து கடந்த 31 ஆம் திகதி அதிகாலை 1.05 மணிக்கு சிங்கப்பூர் எயர் லைன்ஸில் சுசந்திகா ஜயசிங்க புறப்பட்டு இருந்தார். விமானம் சிங்கப்பூரில் சில மணி நேரங்கள் இடையில் தரித்து நின்றது. பின் காலை 9.30 மணிக்கு பயணத்தை தொடர்ந்து மேற்கொண்டது.
விமானம் ஜகார்த்தாவை வந்தடைந்தது. ஆனால் சுசந்திகா ஜயசிங்கவை காணவில்லை. இவர் ஜகார்த்தாவை வந்தடையவில்லை என உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது.
இவருக்கு தடபுடல் வரவேற்பு வழங்க விமான நிலையத்தில் ஒழுங்கு செய்யப்பட்டு இருந்தது. இந்நிலையில் ஏற்பாட்டாளர்கள் ஏமாற்றம் அடைந்து உள்ளார்கள்.
சிங்கப்பூரில் வைத்து சுசந்திகா ஜயசிங்க தலைமறைவாகி இருக்கக் கூடும் என்றே பெரிதும் சந்தேகிக்கப்படுகின்றது.
ஆசிய பெண்கள் மெய்வல்லுனர் விளையாட்டு மாநாடு இந்தோனேசிய தலைநகர் ஜகார்த்தாவில் நேற்று ஆரம்பம் ஆனது. எதிர்வரும் 05 ஆம் திகதி நிறைவடைகின்றது.
இலங்கை மெய்வல்லுனர் விளையாட்டு சபையால் இம்மாநாட்டுக்கு சுசந்திகா ஜயசிங்க அனுப்பப்பட்டார். விளையாட்டு அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேதான் சுசந்திகா ஜயசிங்கவின் பெயரை சிபாரிசு செய்து இருந்தார்.
இவருக்கான பிரயாண செலவுகளை இலங்கை மெய்வல்லுனர் விளையாட்டு சபை பொறுப்பேற்று இருந்தது. இது 80000 ரூபாய்க்கும் அதிகம்.
கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து கடந்த 31 ஆம் திகதி அதிகாலை 1.05 மணிக்கு சிங்கப்பூர் எயர் லைன்ஸில் சுசந்திகா ஜயசிங்க புறப்பட்டு இருந்தார். விமானம் சிங்கப்பூரில் சில மணி நேரங்கள் இடையில் தரித்து நின்றது. பின் காலை 9.30 மணிக்கு பயணத்தை தொடர்ந்து மேற்கொண்டது.
விமானம் ஜகார்த்தாவை வந்தடைந்தது. ஆனால் சுசந்திகா ஜயசிங்கவை காணவில்லை. இவர் ஜகார்த்தாவை வந்தடையவில்லை என உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது.
இவருக்கு தடபுடல் வரவேற்பு வழங்க விமான நிலையத்தில் ஒழுங்கு செய்யப்பட்டு இருந்தது. இந்நிலையில் ஏற்பாட்டாளர்கள் ஏமாற்றம் அடைந்து உள்ளார்கள்.
சிங்கப்பூரில் வைத்து சுசந்திகா ஜயசிங்க தலைமறைவாகி இருக்கக் கூடும் என்றே பெரிதும் சந்தேகிக்கப்படுகின்றது.
வெள்ளை முள்ளிவாய்க்கால் பகுதியில் இருந்து விடுதலைப்புலிகளால் மறைத்து வைக்கப்பட்டிருந்த பயன்படுத்தப்படாத புதிய ஆறு தற்கொலை அங்ககைள் விசேட புலனாய்வுப் பிரிவினரால் மீட்கப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் எரிக்பேரேரா தெரிவித்துள்ளார் இன்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் யாழ். மாவட்ட பிரதிப்பொலிஸ் மா அதிபர் எரிக்பேரேரா இதனைக் கூறியுள்ளார்.
புலனாய்வுப் பரிவினருக்கு கிடைத்த தகவலையடுத்து, கடந்த 26 ஆம் திகதி யாழ்ப்பாணத்திலிருந்து சென்ற விசேட பொலிஸாரால் இவை மீட்கப்பட்டுள்ளன.
முள்ளிவாய்கால் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் போது இந்த அங்கிகள் மீட்கப்பட்டதாகவும் மீட்கப்பட்ட அங்கிள் அனைத்தும் ஒவ்வொன்றும் வௌ;வேறு நிறையைக் கொண்டுள்ளதாக அவர் கூறினார்.
இந்த தேடுதலின்போது 06 தற்கொலை அங்கிகளுடன் ஆர்.பி.ஜி- 1, தொலைத்தொடர்பு சாதனம் -1, ரீ56 ரக துப்பாக்கி ஒன்றும் மீட்க்பட்டுள்ளன என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
புலனாய்வுப் பரிவினருக்கு கிடைத்த தகவலையடுத்து, கடந்த 26 ஆம் திகதி யாழ்ப்பாணத்திலிருந்து சென்ற விசேட பொலிஸாரால் இவை மீட்கப்பட்டுள்ளன.
முள்ளிவாய்கால் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் போது இந்த அங்கிகள் மீட்கப்பட்டதாகவும் மீட்கப்பட்ட அங்கிள் அனைத்தும் ஒவ்வொன்றும் வௌ;வேறு நிறையைக் கொண்டுள்ளதாக அவர் கூறினார்.
இந்த தேடுதலின்போது 06 தற்கொலை அங்கிகளுடன் ஆர்.பி.ஜி- 1, தொலைத்தொடர்பு சாதனம் -1, ரீ56 ரக துப்பாக்கி ஒன்றும் மீட்க்பட்டுள்ளன என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
தனியார் வைத்தியசாலையென்றில் தாயும் இரண்டு பிள்ளைகளும் பிரசவத்தின் போது மரணமான சம்பவம் தொடர்பில் யாழ்.பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரை விசாரணை செய்ய யாழ்.நீதிமன்றம் பொலிஸாருக்கு கட்டளையிட்டுள்ளது.தனியார் வைத்தியசாலை ஒன்றில் இரண்டு பிள்ளைகளும் தாயும் பிரசவத்தின் போது மாரணமானார்கள்.
இது தொடர்பான வழக்கு விசாரணைகள் யாழ்.நீதிவான் நீதிமன்றில் நடைபெற்றுவந்தன. இவ்வழக்கு தொடர்பான விசாரணைகள் நேற்று நடைபெற்றன.
இதன்போது பொலிஸாரின் கோரிக்கைக்கு ஏற்பவே நீதிமன்ற இந்த கட்டளையைப் பிறப்பித்துள்ளது.
மேலும் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரை நீதிமன்றில் நேரில் ஆஜராகுமாறு யாழ்.நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அத்தோடு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரை எதிர்வரும் 19ம் திகதி நவம்பர் மாதம் நேரில் நீதிமன்றில் ஆஜராகுமாறு நீதிவான் உத்தரவிட்டார்.
இது தொடர்பான வழக்கு விசாரணைகள் யாழ்.நீதிவான் நீதிமன்றில் நடைபெற்றுவந்தன. இவ்வழக்கு தொடர்பான விசாரணைகள் நேற்று நடைபெற்றன.
இதன்போது பொலிஸாரின் கோரிக்கைக்கு ஏற்பவே நீதிமன்ற இந்த கட்டளையைப் பிறப்பித்துள்ளது.
மேலும் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரை நீதிமன்றில் நேரில் ஆஜராகுமாறு யாழ்.நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அத்தோடு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரை எதிர்வரும் 19ம் திகதி நவம்பர் மாதம் நேரில் நீதிமன்றில் ஆஜராகுமாறு நீதிவான் உத்தரவிட்டார்.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள ரிவர்சைடு பகுதியை சேர்ந்தவர் ஜெய்ஹால். வீட்டில் ஷோபாவில் படுத்து தூங்கிய இவரை அவரது 12 வயது மகன் துப்பக்கியால் சுட்டுக்கொன்றான். எனவே, அவனை போலீசார் கைது செய்து விசாரித்தனர்.இவன் தனது தந்தை மற்றும் சித்தியுடன் (மாற்றாந்தாய்) தங்கியிருந்தான். சித்தியையும், அவனையும் தந்தை ஜெய்ஹால் அடித்து உதைத்து கொடூரமாக நடத்தி வந்தார். இருந்தும் அவனது சித்தி பொறுமையுடன் வாழ்ந்து வந்தார்.
ஆனால், அவரை விவாகரத்து செய்ய ஜெய்ஹால் முடிவு செய்தார். இதை பொறுக்க முடியாத சிறுவன் தனது தந்தையை துப்பாக்கியால் சுட்டு கொன்றான்.
இந்த சம்பவத்தை நிகழ்த்த டி.வி. நிகழ்ச்சி தனது தூண்டுகோலாக இருந்ததாக அவன் பொலிலீசாரிடம் தெரிவித்தான். டி.வி. நிகழ்ச்சியில் கொடூர தந்தையை மகன் கொலை செய்வது போன்ற காட்சி இடம்பெற்றிருந்தது.
அதைப்பார்த்து தானும் அவரை கொன்றதாக போலீசாரிடம் அளித்த வாங்குமூலத்தில் அவன் கூறினான்.
குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவன் தனது 23 வயது வரை சிறை தண்டனை அனுபவிக்க நேரிடும்.
ஆனால், அவரை விவாகரத்து செய்ய ஜெய்ஹால் முடிவு செய்தார். இதை பொறுக்க முடியாத சிறுவன் தனது தந்தையை துப்பாக்கியால் சுட்டு கொன்றான்.
இந்த சம்பவத்தை நிகழ்த்த டி.வி. நிகழ்ச்சி தனது தூண்டுகோலாக இருந்ததாக அவன் பொலிலீசாரிடம் தெரிவித்தான். டி.வி. நிகழ்ச்சியில் கொடூர தந்தையை மகன் கொலை செய்வது போன்ற காட்சி இடம்பெற்றிருந்தது.
அதைப்பார்த்து தானும் அவரை கொன்றதாக போலீசாரிடம் அளித்த வாங்குமூலத்தில் அவன் கூறினான்.
குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவன் தனது 23 வயது வரை சிறை தண்டனை அனுபவிக்க நேரிடும்.
நாட்டில் பெய்யும் பருவ பெயர்ச்சி மழை காரணமாக டெங்கு நோய் பரவும் அபாயம் மேலும் அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் பிரிவு பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
டெங்கு பரவும் அபாயம் அதிகரித்துள்ளமையால் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என பணிப்பாளர் டாக்டர் பபா பலிஹவடன அறிவுறுத்தியுள்ளார்.
மழை நீர் தேங்கி நிற்கும் இடங்களில் டெங்கு நுளம்புகள் பெருகுவதால் இத்தகைய இடங்களை அப்புறப்படுத்துமாறும் சூழலை சுத்தமாக வைத்திருக்குமாறும் சுகாதார அமைச்சு பொதுமக்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளது.
இதேவேளை கடந்த இரண்டு நாட்களில் ஏழுபேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டு யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
டெங்கு பரவும் அபாயம் அதிகரித்துள்ளமையால் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என பணிப்பாளர் டாக்டர் பபா பலிஹவடன அறிவுறுத்தியுள்ளார்.
மழை நீர் தேங்கி நிற்கும் இடங்களில் டெங்கு நுளம்புகள் பெருகுவதால் இத்தகைய இடங்களை அப்புறப்படுத்துமாறும் சூழலை சுத்தமாக வைத்திருக்குமாறும் சுகாதார அமைச்சு பொதுமக்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளது.
இதேவேளை கடந்த இரண்டு நாட்களில் ஏழுபேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டு யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்திய வம்சாவளியை சேர்ந்த அமெரிக்க விண்வெளி வீராங்கனையான சுனிதா வில்லியம்ஸ், தனது சக விண்வெளி வீரருடன் 7-வது முறையாக விண்வெளி பயணம் மேற்கொண்டு சாதனை படைத்துள்ளார். ரேடியேட்டர் அமைப்பில் உள்ள அம்மோனியா கசிவைக் கண்டறிவதற்காக அவர் இப்போது இப்பயணத்தை மேற்கொண்டுள்ளார். விமான பொறியாளரான அகி ஹோஷிட் என்பவருடன் சுனிதா இப்பயணத்தை மேற்கொண்டுள்ளார்.
அம்மோனியா கசிவு தொடர்ந்தால் அதனைக் கண்டறிவதற்காக நாங்கள் அடுத்த சில மாதங்கள் இதனை ஆய்வோம் என அந்த விண்வெளி ஓடத்தின் கட்டுப்பாட்டாளர்கள் சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து தகவல் தெரிவித்துள்ளனர்.
இதுவரை 6 முறை விண்வெளி பயணம் மேற்கொண்ட சுனிதா, 44 மணிநேரம் விண்வெளியில் நடந்து சாதனை படைத்துள்ளார்.
அம்மோனியா கசிவு தொடர்ந்தால் அதனைக் கண்டறிவதற்காக நாங்கள் அடுத்த சில மாதங்கள் இதனை ஆய்வோம் என அந்த விண்வெளி ஓடத்தின் கட்டுப்பாட்டாளர்கள் சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து தகவல் தெரிவித்துள்ளனர்.
இதுவரை 6 முறை விண்வெளி பயணம் மேற்கொண்ட சுனிதா, 44 மணிநேரம் விண்வெளியில் நடந்து சாதனை படைத்துள்ளார்.
சர்க்கரைவள்ளி கிழங்கு உலகின் மிக சத்தான உணவுகள் ஒன்றாகும். சர்க்கரை வள்ளி கிழங்கில் ஏராளமான சத்துக்கள் அடங்கியுள்ளன. அதில் வைட்டமின் ஏ மற்றும் சி சத்துக்கள் குறிப்பிடத்தக்கது.. ஆராய்ச்சி மூலம் சர்க்கரை வள்ளி கிழங்கில் ஆக்ஸிஜனேற்ற நிறமியாகிய பூநீலம் ஏராளமாக உள்ளது என்று நிருபிக்கப்பட்டுள்ளது. இது புற்றுநோயை தடுக்கும் குணம் கொண்டது..
இது கடின உலோகங்கள் மற்றும் பிராணவாயு உறுப்புக்களில் உண்டாகும் ஆபத்தை குறைக்கிறது. ஆக்சிஜனேற்ற பண்புகள் சர்க்கரை வள்ளி கிழங்கின் சேமிப்பு நொதிகளை உற்பத்தி செய்கின்றது-.
சர்க்கரை வள்ளி கிழங்கு சேதமடைந்து இருப்பின் தன்னுடைய பகுதிகளை சரிசெய்து கொள்ள ஆண்டிஆக்சிடெண்ட் திறனை பயன்படுத்தி சரிசெய்து கொள்கிறது.
ஊட்டச்சத்துக்கள் நிறைந்த சர்க்கரை வள்ளி கிழங்கை உணவில் சேர்த்து சாப்பிட்டு வாழ்வை ஆரோக்கியமாக்கிடுங்கள்.
இது கடின உலோகங்கள் மற்றும் பிராணவாயு உறுப்புக்களில் உண்டாகும் ஆபத்தை குறைக்கிறது. ஆக்சிஜனேற்ற பண்புகள் சர்க்கரை வள்ளி கிழங்கின் சேமிப்பு நொதிகளை உற்பத்தி செய்கின்றது-.
சர்க்கரை வள்ளி கிழங்கு சேதமடைந்து இருப்பின் தன்னுடைய பகுதிகளை சரிசெய்து கொள்ள ஆண்டிஆக்சிடெண்ட் திறனை பயன்படுத்தி சரிசெய்து கொள்கிறது.
ஊட்டச்சத்துக்கள் நிறைந்த சர்க்கரை வள்ளி கிழங்கை உணவில் சேர்த்து சாப்பிட்டு வாழ்வை ஆரோக்கியமாக்கிடுங்கள்.
பிரதம நீதியரசர் ஷிரானி பண்டாரநாயக்கவுக்கு எதிரான குற்றப்பிரேரணை ஒன்று சபாநாயகர் சமல் ராஜபக்ஷவிடம் நேற்று வியாழக்கிழமை கையளிக்கப்பட்டுள்ளது. இத்தகவலை அமைச்சர் பவித்திரா வன்னியாரச்சி வெளியிட்டார். இது தொடர்பில் அமைச்சர் மேலும் கூறுகையில் இலங்கை அரசியலமைப்பின் 107- 02 ஆம் சட்டவிதிக்கு இணங்க இந்த குற்றப்பிரேரணையை ஆளும் கட்சி அமைச்சர்கள் ஐவர் சபாநாயகரிடம் கையளித;தனர்.
பிரதம நீதியரசர் தமது பதவியை முறைகேடாகப் பயன்படுத்தியமை மற்றும் அவரது தனிப்பட்ட வாழ்வில் ஏற்பட்ட முறைகேடுகள் தொடர்பாக இந்தக் குற்றப்பிரேரணையில் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களை உள்ளடக்கியதாக மொத்தம் 117 பேர் இப்பிரேரணையில் கையொப்பமி;ட்டுள்ளனர்.
பிரதம நீதியரசரை பதவி நீக்கம் செய்யவேண்டும் எனக் கோரும் இந்த குற்றப்பிரேரணைக்கு பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் சகல கட்சிகளின்; உறுப்பினர்களும் ஆதரவு வழங்க வேண்டும் என்றும் அமைச்சர் பவித்ரா வண்ணியாரச்சி கோரிக்கை விடுத்தார்
அமைச்சர் பவித்ரா வண்ணியாரச்சி- பிரதியமைச்சர் லசந்த அழகியவண்ண- மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான சாந்த பண்டார- அருந்திக்க பெர்னாண்டோ- சுதர்ஷினி பெரனாண்டோ புள்ளே ஆகிய ஐவரும் இந்த குற்றப்பிரேரணையை சபாநாயகரிடம் கையளித்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பிரதம நீதியரசர் தமது பதவியை முறைகேடாகப் பயன்படுத்தியமை மற்றும் அவரது தனிப்பட்ட வாழ்வில் ஏற்பட்ட முறைகேடுகள் தொடர்பாக இந்தக் குற்றப்பிரேரணையில் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களை உள்ளடக்கியதாக மொத்தம் 117 பேர் இப்பிரேரணையில் கையொப்பமி;ட்டுள்ளனர்.
பிரதம நீதியரசரை பதவி நீக்கம் செய்யவேண்டும் எனக் கோரும் இந்த குற்றப்பிரேரணைக்கு பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் சகல கட்சிகளின்; உறுப்பினர்களும் ஆதரவு வழங்க வேண்டும் என்றும் அமைச்சர் பவித்ரா வண்ணியாரச்சி கோரிக்கை விடுத்தார்
அமைச்சர் பவித்ரா வண்ணியாரச்சி- பிரதியமைச்சர் லசந்த அழகியவண்ண- மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான சாந்த பண்டார- அருந்திக்க பெர்னாண்டோ- சுதர்ஷினி பெரனாண்டோ புள்ளே ஆகிய ஐவரும் இந்த குற்றப்பிரேரணையை சபாநாயகரிடம் கையளித்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மரண விசாரணையென்று தொடர்பில் மரண விசாரணை அதிகாரிக்கு போதரிய ஒத்துழைப்பு வழக்காமை காரணமாக தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையின் பொறுப்பு வைத்திய அதிகாரிக்கு எதிராக யாழ்.நீதிமன்றில் அறிக்கையென்று தாக்கல் செய்யப்படவுள்ளது
யாழ்.திடீர் மரண விசாரணை அதிகாரி மு.உதயசிறி இவ்வறிக்கையை இன்றைய தினம் யாழ்.நீதிவான் நீதிமன்றில் தாக்கல் செய்யவுள்ளார்.
தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட ஐந்து வயது சிறுவன் ஒருவர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் கடந்த 30 திகதி சிகிச்சை பலனின்றி யாழ்.போதனா வைத்தியசாலையில் மரணமானார்
.
இம்மரணம் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்ட யாழ்.திடீர் மரண விசாரணை அதிகாரி மு.உதயசிறிக்கு தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலை பொறுப்பு வைத்திய அதிகாரி ஒத்துழைப்பு வழங்கவில்லையென தீடிர் மரண விசாரணை அதிகாரி தெரிவித்தார். ;.
எனவே தான் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்காமை காரணமாக தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலை வைத்திய அதிகாரிக்கு எதிராக இன்றைய தினம் யாழ்.நீதிமன்றில் அறிக்கையென்று தாக்கல் செய்யவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
யாழ்.திடீர் மரண விசாரணை அதிகாரி மு.உதயசிறி இவ்வறிக்கையை இன்றைய தினம் யாழ்.நீதிவான் நீதிமன்றில் தாக்கல் செய்யவுள்ளார்.
தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட ஐந்து வயது சிறுவன் ஒருவர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் கடந்த 30 திகதி சிகிச்சை பலனின்றி யாழ்.போதனா வைத்தியசாலையில் மரணமானார்
.
இம்மரணம் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்ட யாழ்.திடீர் மரண விசாரணை அதிகாரி மு.உதயசிறிக்கு தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலை பொறுப்பு வைத்திய அதிகாரி ஒத்துழைப்பு வழங்கவில்லையென தீடிர் மரண விசாரணை அதிகாரி தெரிவித்தார். ;.
எனவே தான் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்காமை காரணமாக தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலை வைத்திய அதிகாரிக்கு எதிராக இன்றைய தினம் யாழ்.நீதிமன்றில் அறிக்கையென்று தாக்கல் செய்யவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் 14ம் அகில கால பேரமர்வுகளின் போது இன்று ஐரோப்பிய நேரம் 14.30 மணிக்கு இலங்கை தனது தரப்பு நியாயங்களை யுத்தத்தின் பின்னர் இனநல்லிணக்கம் , முன்னாள் புலிகளை புனரமைத்தல் , யுத்தத்தால் உள்நாட்டில் இடம்பெயர்ந்தவர்கள் மீளமர்த்தல் , அரசியல் தீர்வொன்றுக்கான முன்னெடுப்பு உட்பட்ட பல காரணிகளை தொகுத்து முன்வைத்தது.
அமர்வுகளில் இலங்கை சார்பாக கலந்து கொண்ட இராஜதந்திரிகள் குழுவிற்கு தலைமை தாங்கிய மனித உரிமைகளுக்கான ஜனாதிபதியின் விசேட தூதுவர் மஹிந்த சமரசிங்க சுமார் ஒரு மணி நேரம் உரையாற்றினார்.
அமைச்சரின் உரையை அடுத்து கலந்து கொண்ட நாடுகளின் பிரதிநிதிகளுக்கு இலங்கை தொடர்பான தமது நாடுகள் கொண்டுள்ள நிலைப்பாடுகளை தெரிவிப்பதற்கு இடமளிக்கப்பட்டது. அங்கு பேசிய பெரும்பாலான நாடுகள் இலங்கை பயங்கரவாதத்தை வெற்றிகொண்டு மேற்கொண்டுவரும் பணிகளையிட்டு பெரும் பாராட்டுதல்களைத் தெரிவித்தமையை கீழே உள்ள வீடியோவில் கேட்கலாம்.
அங்கு பேசிய அமைச்சர் இலங்கை அரசாங்கம், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு மற்றும் சிவில் சமூக குழுக்களின் அறிக்கைகளை ஆராய்ந்து இதனடிப்படையில் மதீப்பீடு அமையும் எனவும் கடத்தல்கள், காணாமல் போதல்கள் தொடர்பில் விசாரணை நடாத்த தேசியப் பொறிமுறைமையொன்று உருவாக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 20 ஆண்டு காலப்பகுதியில் காணாமல் போதல்கள் 5600 சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகத் தெரிவித்துள்ள அமைச்சர் காணாமல் போனவர்கள் பற்றிய உண்மையான தகவல்களை அறிந்து கொள்வதற்கு வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்கள் பற்றிய தகவல்கள் அவசியமானவை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறெனினும், ஏனைய சம்பவங்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்படும் என தெரிவித்துள்ள அவர் பொதுமக்கள் மீது அரசாங்கத் தரப்பு தாக்குதல் நடத்துவதாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கள் முற்றிலும் உண்மைக்கு புறம்பானவை எனவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும மனித உரிமை உறுதிப்படுத்தல் மற்றும் மேம்படுத்தல் தொடர்பில் உள்நாட்டு ரீதியான நடவடிக்கைகளுக்கு சந்தர்ப்பம் அளிக்கப்பட வேண்டுமென வேண்டுதல் விடுத்துள்ள அமைச்சர் சமரசிங்க இலங்கையின் மனித உரிமை நிலைமைகளை தனிமைப்படுத்த மதிப்பீடு செய்யக் கூடாது எனவும், கள நிலவரங்கள் காலச் சூழ்நிலைகளின் அடிப்படையில் மனித உரிமை நிலைமைகளை கவனத்திற் கொண்டு தீர்மானங்கள் எடுக்கப்பட வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டுள்ளார்:
இலங்கையில் மனித உரிமையை மேம்படுத்துவது தொடர்பில் அனைத்து தரப்பினருடனும் இணைந்து ஒத்துழைப்புடன் செயற்படத் தயார் என கூறியுள்ள அவர் இலங்கையின் தற்போதைய நிலைமைகள் குறித்து 99 நாடுகளும் காட்டி வரும் கரிசனை பாராட்டுக்குரியது என அவர் தெரிவித்துள்ளார்.
2008ம் அமர்வுகளில் உறுதியளிக்கப்பட்டது போன்று மனித உரிமை தொடர்பில் தேசிய செயற்திட்டமொன்று உருவாக்கப்பட்டுள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தொழிலாளர்களின் உரிமைகள், கைதிகளின் உரிமைகள், இடம்பெயர் மக்களின் உரிமைகள், மகளிர் உரிமைகள், சிறுவர் உரிமைகள், சட்டவிரோத குடியேற்றங்களை தடுத்தல், மனித உரிமை மீறல்கள் தொடர்பில் காவல்துறையினருக்கு பயிற்சி அளித்தல் உள்ளிட்ட பல்வேறு வழிகளில் மனித உரிமைகளை மேம்படுத்த தேசிய செயற்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
யுத்தம் இடம்பெற்ற உலகின் ஏனைய நாடுகளைப் போன்றே இலங்கையிலும் யுத்தத்தின் பின்னர் பல்வேறு காரணிகள் தொடர்பில் கவனம் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
மனிதாபிமான உதவிகளிலிருந்து, அபிவிருத்தி உதவிகளுக்கு இடம் நகர்வதற்கு போதியளவு கால அவகாசம் வழங்கப்பட வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டில் மெய்யான நல்லிணக்கத்தை ஏற்படுத்த அரசாங்கம் பல்வேறு வழிகளில் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
கருத்து சுதந்திரத்தை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மீது அடக்குமுறைகள் பிரயோகிக்கப்படுவதாக சுமத்துவதனை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
அமர்வுகளில் இலங்கை சார்பாக கலந்து கொண்ட இராஜதந்திரிகள் குழுவிற்கு தலைமை தாங்கிய மனித உரிமைகளுக்கான ஜனாதிபதியின் விசேட தூதுவர் மஹிந்த சமரசிங்க சுமார் ஒரு மணி நேரம் உரையாற்றினார்.
அமைச்சரின் உரையை அடுத்து கலந்து கொண்ட நாடுகளின் பிரதிநிதிகளுக்கு இலங்கை தொடர்பான தமது நாடுகள் கொண்டுள்ள நிலைப்பாடுகளை தெரிவிப்பதற்கு இடமளிக்கப்பட்டது. அங்கு பேசிய பெரும்பாலான நாடுகள் இலங்கை பயங்கரவாதத்தை வெற்றிகொண்டு மேற்கொண்டுவரும் பணிகளையிட்டு பெரும் பாராட்டுதல்களைத் தெரிவித்தமையை கீழே உள்ள வீடியோவில் கேட்கலாம்.
அங்கு பேசிய அமைச்சர் இலங்கை அரசாங்கம், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு மற்றும் சிவில் சமூக குழுக்களின் அறிக்கைகளை ஆராய்ந்து இதனடிப்படையில் மதீப்பீடு அமையும் எனவும் கடத்தல்கள், காணாமல் போதல்கள் தொடர்பில் விசாரணை நடாத்த தேசியப் பொறிமுறைமையொன்று உருவாக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 20 ஆண்டு காலப்பகுதியில் காணாமல் போதல்கள் 5600 சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகத் தெரிவித்துள்ள அமைச்சர் காணாமல் போனவர்கள் பற்றிய உண்மையான தகவல்களை அறிந்து கொள்வதற்கு வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்கள் பற்றிய தகவல்கள் அவசியமானவை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறெனினும், ஏனைய சம்பவங்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்படும் என தெரிவித்துள்ள அவர் பொதுமக்கள் மீது அரசாங்கத் தரப்பு தாக்குதல் நடத்துவதாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கள் முற்றிலும் உண்மைக்கு புறம்பானவை எனவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும மனித உரிமை உறுதிப்படுத்தல் மற்றும் மேம்படுத்தல் தொடர்பில் உள்நாட்டு ரீதியான நடவடிக்கைகளுக்கு சந்தர்ப்பம் அளிக்கப்பட வேண்டுமென வேண்டுதல் விடுத்துள்ள அமைச்சர் சமரசிங்க இலங்கையின் மனித உரிமை நிலைமைகளை தனிமைப்படுத்த மதிப்பீடு செய்யக் கூடாது எனவும், கள நிலவரங்கள் காலச் சூழ்நிலைகளின் அடிப்படையில் மனித உரிமை நிலைமைகளை கவனத்திற் கொண்டு தீர்மானங்கள் எடுக்கப்பட வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டுள்ளார்:
இலங்கையில் மனித உரிமையை மேம்படுத்துவது தொடர்பில் அனைத்து தரப்பினருடனும் இணைந்து ஒத்துழைப்புடன் செயற்படத் தயார் என கூறியுள்ள அவர் இலங்கையின் தற்போதைய நிலைமைகள் குறித்து 99 நாடுகளும் காட்டி வரும் கரிசனை பாராட்டுக்குரியது என அவர் தெரிவித்துள்ளார்.
2008ம் அமர்வுகளில் உறுதியளிக்கப்பட்டது போன்று மனித உரிமை தொடர்பில் தேசிய செயற்திட்டமொன்று உருவாக்கப்பட்டுள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தொழிலாளர்களின் உரிமைகள், கைதிகளின் உரிமைகள், இடம்பெயர் மக்களின் உரிமைகள், மகளிர் உரிமைகள், சிறுவர் உரிமைகள், சட்டவிரோத குடியேற்றங்களை தடுத்தல், மனித உரிமை மீறல்கள் தொடர்பில் காவல்துறையினருக்கு பயிற்சி அளித்தல் உள்ளிட்ட பல்வேறு வழிகளில் மனித உரிமைகளை மேம்படுத்த தேசிய செயற்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
யுத்தம் இடம்பெற்ற உலகின் ஏனைய நாடுகளைப் போன்றே இலங்கையிலும் யுத்தத்தின் பின்னர் பல்வேறு காரணிகள் தொடர்பில் கவனம் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
மனிதாபிமான உதவிகளிலிருந்து, அபிவிருத்தி உதவிகளுக்கு இடம் நகர்வதற்கு போதியளவு கால அவகாசம் வழங்கப்பட வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டில் மெய்யான நல்லிணக்கத்தை ஏற்படுத்த அரசாங்கம் பல்வேறு வழிகளில் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
கருத்து சுதந்திரத்தை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மீது அடக்குமுறைகள் பிரயோகிக்கப்படுவதாக சுமத்துவதனை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் பயணிகள் விமானச் சேவையில் ஈடுபட்டிருந்த விமானம் ஒன்று சுட்டு வீழ்த்தப்பட்டதுடன் அதில் பயணித்த பலர் உயிரிழந்திருந்தனர். இவ்விமானம் புலிகளால் சுட்டுவீழ்த்தப்பட்டது என்பதை புலிகள் மறுத்திருந்தனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இராணுவப் புலனாய்வுத் துறையினரின் விசாரணைகளை தொடர்ந்து விமானத்தை சுட்டுவீழ்த்திய புலி உறுப்பினர் யாழ்ப்பாணத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் கைது செய்யப்பட்டுள்ளதாக அறியக்கிடைக்கின்றது.
இராணுவப் புலனாய்வுப் பிரிவினரின் புலனாய்வு அறிக்கையின் பிரகாரம் பொலிஸ் விசேட பிரிவொன்றினால் கைது செய்யப்பட்ட குறிப்பிட்ட நபர் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இறுதி யுத்தநேரத்தில் தப்பி வந்து சரணடையாமல் இவர் ஒழிந்திருந்தாக விசாரணைகளில் புலனாகியுள்ளது. இக்கைது தொடர்பான சகல விடயங்களும் எதிர்வரும் நாட்களில் சர்வதேச ஊடகங்களுக்கு வழங்கப்படவுள்ளதாக இலங்கைநெற் அறிகின்றது.
புலிகளின் விமான எதிர்ப்பு பிரிவினைச் சேர்ந்த ஒருவர் வழங்கிய தகவலின் அடிப்படையிலேயே இக்கைது சாத்தியமானதாக பெயர் குறிப்பிட விரும்பாத புலனாய்வுத்துறை அதிகாரி ஒருவர் இலங்கைநெற் இற்கு தெரிவித்தார். மேலதிக விபரங்கள் தொடரும்....
இராணுவப் புலனாய்வுப் பிரிவினரின் புலனாய்வு அறிக்கையின் பிரகாரம் பொலிஸ் விசேட பிரிவொன்றினால் கைது செய்யப்பட்ட குறிப்பிட்ட நபர் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இறுதி யுத்தநேரத்தில் தப்பி வந்து சரணடையாமல் இவர் ஒழிந்திருந்தாக விசாரணைகளில் புலனாகியுள்ளது. இக்கைது தொடர்பான சகல விடயங்களும் எதிர்வரும் நாட்களில் சர்வதேச ஊடகங்களுக்கு வழங்கப்படவுள்ளதாக இலங்கைநெற் அறிகின்றது.
புலிகளின் விமான எதிர்ப்பு பிரிவினைச் சேர்ந்த ஒருவர் வழங்கிய தகவலின் அடிப்படையிலேயே இக்கைது சாத்தியமானதாக பெயர் குறிப்பிட விரும்பாத புலனாய்வுத்துறை அதிகாரி ஒருவர் இலங்கைநெற் இற்கு தெரிவித்தார். மேலதிக விபரங்கள் தொடரும்....
யாழ் பல்கலைக்கழகத்திலுள்ள 5 வெற்றிடங்களுக்கு அண்மையில் விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளது. இதற்கான விண்ணப்ப படிவங்கள் குவிந்துள்ள நிலையில் 5 வெற்றிடங்களுக்குமான சிபார்சு அமைச்சர் டக்ளஸிடமிருந்து சென்றுள்ளதாகவும், இச்சிபார்சு உபவேந்தர் அரசரெட்ணம் அம்மையாரை சிக்கலில் தள்ளியுள்ளதாகவும் யாழ் பல்கலைக்கழக வட்டாரங்களிலிருந்து தெரியவருகின்றது.
டக்ளசினால் சிபார்சு செய்யப்பட்டுள்ளவர்கள் வேண்டப்பட்ட தகமைகளை பூர்த்தி செய்யாதவர்கள் என யாழ் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் மட்டத்தில் அதிருப்தி கிளம்பியுள்ளதாகவும் விரிவுரையாளர்களின் அதிருப்தியை கணக்கிலெடுக்காமல் நியமனங்கள் வழங்கப்படுமாயின் அதற்கு எதிரான போராட்டம் ஒன்றில் குதிப்பதற்கு விரிவுரையாளர்கள் சங்கம் தயாராகி வருவதாகவும் இலங்கைநெற் அறிகின்றது.
டக்ளசினால் சிபார்சு செய்யப்பட்டுள்ளவர்கள் வேண்டப்பட்ட தகமைகளை பூர்த்தி செய்யாதவர்கள் என யாழ் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் மட்டத்தில் அதிருப்தி கிளம்பியுள்ளதாகவும் விரிவுரையாளர்களின் அதிருப்தியை கணக்கிலெடுக்காமல் நியமனங்கள் வழங்கப்படுமாயின் அதற்கு எதிரான போராட்டம் ஒன்றில் குதிப்பதற்கு விரிவுரையாளர்கள் சங்கம் தயாராகி வருவதாகவும் இலங்கைநெற் அறிகின்றது.
மழை காரணமாக வீதிக்கு குறுக்கே ஊடறுத்து பாய்ந்த வெள்ளத்தோடு அடிபட்டு வந்த ஆயிரக்கணக்கான மீன்களை பொது மக்கள் அள்ளிச்சென்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.முல்லைத்தீவு மாவட்டத்தில் பெய்த அடைமழையின் போது இரட்டை வாய்க்கால் பகுதியிலுள்ள மதகு ஒன்றின் ஊடாக தீடிரென்று பெருமளவான மீன்கள் வீதியின் குறுக்கே பாய்ந்த வெள்ளத்தோடு அடிபட்டு வந்தன.
கேழுறு வகையைச் சேர்ந்த மீன்களே இவ்வாறு தீடிரென்று வெள்ளத்தினை எதிர்த்து வீதியினைக் கடக்க முயற்சி செய்தன. சிறிய பெரிய மீன்கள் என ஆயிரக்கணக்கில் எண்ணிக்கையற்று வந்த மீன்களை கண்ட பொது மக்கள் அவற்றை உரைப் பைகளை வைத்தது பிடித்து அள்ளிச் அள்ளிக் கொண்டு சென்றனர்.
கேழுறு வகையைச் சேர்ந்த மீன்களே இவ்வாறு தீடிரென்று வெள்ளத்தினை எதிர்த்து வீதியினைக் கடக்க முயற்சி செய்தன. சிறிய பெரிய மீன்கள் என ஆயிரக்கணக்கில் எண்ணிக்கையற்று வந்த மீன்களை கண்ட பொது மக்கள் அவற்றை உரைப் பைகளை வைத்தது பிடித்து அள்ளிச் அள்ளிக் கொண்டு சென்றனர்.
இலங்கை வங்கி கடந்த வருடம் 15 ஆயிரம் கோடி ரூபா பணத்தை அரசாங்கத்திற்கு இலாபமாக ஈட்டி கொடுத்துள்ளது என இலங்கை வங்கியின் பிரதிப் பொது முகாமையாளர் முதியான்சே தெரிவித்துள்ளார்.இலங்கை வங்கியின் சிறிய நடுத்தர தொழில் முயற்சிவங்கியியல் நிலையம் திறப்பு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்
இலங்கை வங்கிக்கு அதிக லாபம் ஈட்டிக்கொடுக்கும் பிரதேசமாக யாழ்ப்பாணமும் உள்ளது. கடந்த வருடம் இலங்கை வங்கி 15 ஆயிரம் கோடி ரூபா பணத்தை இலாபமாக அரசாங்கத்திற்கு ஈட்டியுள்ளது. இந்நிதியைக் கொண்டு அரசாங்கம் அபிவிருத்தி திட்டங்களை மேற்கொள்ளுகின்றது என்றார்
இந்நிகழ்வில் இலங்கை வங்கியின் பிரதம சந்தைப் படுத்தல் அதிகாரி ஐ.லியனகேஇ பிரதிப் பொது முiகாமையாளர் முத்துலகஇ வடபிராந்திய உதவிப் பொது முகாமையாளர் சுமணசிறிஇ உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இலங்கை வங்கிக்கு அதிக லாபம் ஈட்டிக்கொடுக்கும் பிரதேசமாக யாழ்ப்பாணமும் உள்ளது. கடந்த வருடம் இலங்கை வங்கி 15 ஆயிரம் கோடி ரூபா பணத்தை இலாபமாக அரசாங்கத்திற்கு ஈட்டியுள்ளது. இந்நிதியைக் கொண்டு அரசாங்கம் அபிவிருத்தி திட்டங்களை மேற்கொள்ளுகின்றது என்றார்
இந்நிகழ்வில் இலங்கை வங்கியின் பிரதம சந்தைப் படுத்தல் அதிகாரி ஐ.லியனகேஇ பிரதிப் பொது முiகாமையாளர் முத்துலகஇ வடபிராந்திய உதவிப் பொது முகாமையாளர் சுமணசிறிஇ உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
சோனி நிறுவனத்தின் எக்ஸ்பீரியா ஜே ஸ்மார்ட்போன் ஆன்லைன் வலைத்தளங்களில் தலைகாட்டுகிறது. இந்த ஸ்மார்ட்போனின் விலை விவரதச்தினை பார்க்கும் முன்பு, இதன் தொழில் நுட்ப வசதிகளை பற்றி கொஞ்சம் பார்க்கலாம்.
சிறப்பான தொழில் நுட்ப வசதிகளை வழங்கி வரும் சோனி நிறுவனத்தின் எக்ஸ்பீரியா ஸ்மார்ட்போன் மிக பிரசித்தி பெற்று வருகிறது. அந்த வகையில் எக்ஸ்பீரியா ஜே ஸ்மார்ட்போனும் வாடிக்கையாளர்கள் தேடிய பட்டியலில் சேரும்.
இந்த எக்ஸ்பீரியா ஜே ஸ்மார்ட்போன் நவீன வசதிகளை வழங்குவதோடு, ப்ரீ-ஆர்டரில் சில வலைத்தளங்களில் தலை காட்டுகிறது.
எக்ஸ்பீரியா ஜே ஸ்மார்ட்போன் ப்ளேக், கோல்டு, பிங்க் போன்ற கண்கவரும் நிறங்களை கொண்ட இந்த ஸ்மார்ட்போன் சிறப்பானதொரு 4 இஞ்ச் திரையினையும் கொடுக்கும். இதில் அதிகபட்சமாக 854 X 480 பிக்ஸல் திரை துல்லியத்தினை வழங்கும்.
ஆன்ட்ராய்டு ஐஸ் க்ரீம் சான்ட்விச் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் உருக வைக்கும் இந்த ஸ்மார்ட்போன் 1 ஜிகாஹெர்ட்ஸ் குவால்காம் பிராசஸரை சிறப்பாக வழங்கும்.
இதில் 7 மணி நேரம் 18 நிமிடங்கள் டாக் டைம் வசதியினை சிறப்பாக பெற முடியும். இதில் 124 கிராம் எடையில் கைக்கு கச்சிதமாக இருக்கும் இந்த எக்ஸ்பீரியா ஜே ஸ்மார்ட்போன்,
ஃபிலிப்கார்ட் வலைத்தளத்தில் ப்ரீ-ஆர்டர் மூலம் ரூ. 16,490 விலையில் பெறலாம்.
சிறப்பான தொழில் நுட்ப வசதிகளை வழங்கி வரும் சோனி நிறுவனத்தின் எக்ஸ்பீரியா ஸ்மார்ட்போன் மிக பிரசித்தி பெற்று வருகிறது. அந்த வகையில் எக்ஸ்பீரியா ஜே ஸ்மார்ட்போனும் வாடிக்கையாளர்கள் தேடிய பட்டியலில் சேரும்.
இந்த எக்ஸ்பீரியா ஜே ஸ்மார்ட்போன் நவீன வசதிகளை வழங்குவதோடு, ப்ரீ-ஆர்டரில் சில வலைத்தளங்களில் தலை காட்டுகிறது.
எக்ஸ்பீரியா ஜே ஸ்மார்ட்போன் ப்ளேக், கோல்டு, பிங்க் போன்ற கண்கவரும் நிறங்களை கொண்ட இந்த ஸ்மார்ட்போன் சிறப்பானதொரு 4 இஞ்ச் திரையினையும் கொடுக்கும். இதில் அதிகபட்சமாக 854 X 480 பிக்ஸல் திரை துல்லியத்தினை வழங்கும்.
ஆன்ட்ராய்டு ஐஸ் க்ரீம் சான்ட்விச் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் உருக வைக்கும் இந்த ஸ்மார்ட்போன் 1 ஜிகாஹெர்ட்ஸ் குவால்காம் பிராசஸரை சிறப்பாக வழங்கும்.
இதில் 7 மணி நேரம் 18 நிமிடங்கள் டாக் டைம் வசதியினை சிறப்பாக பெற முடியும். இதில் 124 கிராம் எடையில் கைக்கு கச்சிதமாக இருக்கும் இந்த எக்ஸ்பீரியா ஜே ஸ்மார்ட்போன்,
ஃபிலிப்கார்ட் வலைத்தளத்தில் ப்ரீ-ஆர்டர் மூலம் ரூ. 16,490 விலையில் பெறலாம்.
என்னுடைய பெயர் Dr.அமிர்தலிங்கம் பகீரதன். நான் தற்பொழுது ஒரு மருத்துவராக ஐக்கிய இராய்ச்சியத்தில் வேலை செய்கிறேன். நான் திரு அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் அவர்களின் இரண்டாவது மகன். திரு அமிர்தலிங்கம் தமிழர் விடுதலைக் கூட்டணியின் பொதுச் செயலாளராகவும், இலங்கைப் பாராளுமன்ற எதிர்க் கட்சித் தலைவராகவும், தமிழர் பிரதிநிதியாகப் பல வருடங்கள் பாராளுமன்ற உறுப்பினராகவும் இருந்தவர். சமீபத்தில் என்னுடைய பெயரைச் சொல்லி ஓர் ஏமாற்றுக்காரர் தான் கனடாவில் வசிப்பதாகவும் மக்களை வெளிநாட்டுக்கு அனுப்புவதாகவும் சொல்லி மக்களிடம் பணமும் பாஸ்போர்ட்டும் பறித்துக்கொண்டு இருக்கிறார். பின் அங்கிருந்து பணத்துடன் காணாமற்போய்விடுவார் என்பது என் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது..
இப்படியான நடவடிக்கை முன்னரும் நடந்துள்ளது. 1997இல் அந்த நபர் பிடிபட்டு மோசடி வழக்கில் குற்றஞ் சாட்டப்பட்டார். இதில் ஒருவரோ அல்லது ஒருசிலர் கூட்டாகவோ இணைந்து செற்படுவதாக நான் கருதுகிறேன். நான் இந்தமாதிரியான சட்டவிரோத நடவடிக்கைகள் எதிலும் ஈடுபட்டது கிடையாது. ஈடுபடுவதும் இல்லை. என் பெயரைச் சொல்லி அல்லது வேறுவிதமாக யாராவது உங்களை அணுகினால் தயவுசெய்து காவல் துறையினருடன் உடனடியாகத் தொடர்பு கொள்ளவும். ஏமாற்றப்பட்டவர்களுக்கும் இவரிடம் பொருளை இழந்தவர்களுக்கும் என் வருத்தத்தைத் தெரிவிக்கும் அதே வேளை இச்சம்பவம் எதற்கும் நான் பொறுப்பல்ல என்பதையும் தெரிவிக்க விரும்புகிறேன்.
இப்படியான நடவடிக்கை முன்னரும் நடந்துள்ளது. 1997இல் அந்த நபர் பிடிபட்டு மோசடி வழக்கில் குற்றஞ் சாட்டப்பட்டார். இதில் ஒருவரோ அல்லது ஒருசிலர் கூட்டாகவோ இணைந்து செற்படுவதாக நான் கருதுகிறேன். நான் இந்தமாதிரியான சட்டவிரோத நடவடிக்கைகள் எதிலும் ஈடுபட்டது கிடையாது. ஈடுபடுவதும் இல்லை. என் பெயரைச் சொல்லி அல்லது வேறுவிதமாக யாராவது உங்களை அணுகினால் தயவுசெய்து காவல் துறையினருடன் உடனடியாகத் தொடர்பு கொள்ளவும். ஏமாற்றப்பட்டவர்களுக்கும் இவரிடம் பொருளை இழந்தவர்களுக்கும் என் வருத்தத்தைத் தெரிவிக்கும் அதே வேளை இச்சம்பவம் எதற்கும் நான் பொறுப்பல்ல என்பதையும் தெரிவிக்க விரும்புகிறேன்.
தலையில் ஏற்படும் பிரச்சனைகளில் ஒன்று தான் பொடுகு. அத்தகைய பொடுகு ஸ்கால்ப்பில் அளவுக்கு அதிகமாக இறந்த செல்கள் இருப்பதால் ஏற்படுகிறது. அவ்வாறு பொடுகு தலையில் அளவுக்கு அதிகமாக வந்துவிட்டால், கூந்தல் உதிர்தல், பிம்பிள், முகப்பரு மற்றும் நரை முடி போன்றவை ஏற்படும். ஆகவே இத்தகைய பொடுகு பிரச்சனையை வீட்டில் உள்ள பொருட்களை வைத்தே தீர்க்கலாம்.
• 1 கப் தயிருடன் 2 டீஸ்பூன் வால் மிளகுத்தூளை சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். பின் அதனை தலையில் நன்கு தடவி, 30 நிமிடம் ஊற வைத்து, பின் மைல்டு ஷாம்பு போட்டு தலையை அலச வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் பொடுகு படிப்படியாக நீங்கிவிடும்.
• ஆலிவ் ஆயிலில் பொடுகை நீக்கும் தன்மை உள்ளது. அதற்கு இரவில் படுக்கும் முன்பு, அந்த ஆயிலை லேசாக சூடேற்றி, ஸ்கால்ப்பில் தடவி, 20 நிமிடம் நன்கு மசாஜ் செய்து, பின் தூங்க வேண்டும். பின் அதனை காலையில் எழுந்து, ஷாம்பை போட்டு குளிக்க வேண்டும்.
• பொடுகு பிரச்சனைக்கு பூண்டு, எலுமிச்சை சிறந்த பலனைத் தரும். எலுமிச்சை ஸ்கால்ப்பில் உள்ள தோல் செதில் செதிலாக வருவதை தடுக்கும். பூண்டு ஒரு ஆன்டி-பயாடிக் மற்றும் ஸ்கால்ப்பில் பாக்டீரியா வராமல் தடுக்கும்.
ஆகவே அதற்கு ஒரு டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாற்றுடன், 2 டேபிள் ஸ்பூன் பூண்டின் பற்களை அரைத்து கலந்து, ஸ்கால்ப்பில் தடவி, 20 நிமிடம் ஊற வைத்த பின் ஷாம்பு சேர்த்து குளிக்க வேண்டும்.
• வெங்காயத்தை அரைத்து, அதனை ஸ்காப்பில் தடவி, 30 நிமிடம் ஊற வைத்து, பின் குளித்தால், தலையில் உள்ள பொடுகு முற்றிலும் போய்விடும்.
• 1 கப் தயிருடன் 2 டீஸ்பூன் வால் மிளகுத்தூளை சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். பின் அதனை தலையில் நன்கு தடவி, 30 நிமிடம் ஊற வைத்து, பின் மைல்டு ஷாம்பு போட்டு தலையை அலச வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் பொடுகு படிப்படியாக நீங்கிவிடும்.
• ஆலிவ் ஆயிலில் பொடுகை நீக்கும் தன்மை உள்ளது. அதற்கு இரவில் படுக்கும் முன்பு, அந்த ஆயிலை லேசாக சூடேற்றி, ஸ்கால்ப்பில் தடவி, 20 நிமிடம் நன்கு மசாஜ் செய்து, பின் தூங்க வேண்டும். பின் அதனை காலையில் எழுந்து, ஷாம்பை போட்டு குளிக்க வேண்டும்.
• பொடுகு பிரச்சனைக்கு பூண்டு, எலுமிச்சை சிறந்த பலனைத் தரும். எலுமிச்சை ஸ்கால்ப்பில் உள்ள தோல் செதில் செதிலாக வருவதை தடுக்கும். பூண்டு ஒரு ஆன்டி-பயாடிக் மற்றும் ஸ்கால்ப்பில் பாக்டீரியா வராமல் தடுக்கும்.
ஆகவே அதற்கு ஒரு டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாற்றுடன், 2 டேபிள் ஸ்பூன் பூண்டின் பற்களை அரைத்து கலந்து, ஸ்கால்ப்பில் தடவி, 20 நிமிடம் ஊற வைத்த பின் ஷாம்பு சேர்த்து குளிக்க வேண்டும்.
• வெங்காயத்தை அரைத்து, அதனை ஸ்காப்பில் தடவி, 30 நிமிடம் ஊற வைத்து, பின் குளித்தால், தலையில் உள்ள பொடுகு முற்றிலும் போய்விடும்.



















