கண்டி மாவட்டத்துக்காக யானை மீது ஏறப்போகிறார்கள் அஸாத் ஸாலியும் மனோவும்...!
மத்திய மாகாண சபைத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சிப் பட்டியலிலிருந்து அஸாத் ஸாலி மற்றும் மனோ கணேசன் கண்டி மாவட்டத்துக்காக போட்டியிடவுள்ளதாக கட்சி வட்டாரங்களிலிருந்து செய்திகள் அடிபடுகின்றன.
இதுதொடர்பில் அஸாத் ஸாலி, நானும் மனோவும் ஐதேகவின்பட்டியலிலிருந்து கண்டி மாவட்டத்திற்காக போட்டியிடுவதற்காக பேச்சுவார்த்தை நடாத்தி முடிவடைந்துள்ளதாகவும், அதனால் நாங்களிருவரும் கண்டி மாவட்டத்திற்காக தேர்தலில் போட்டியிடுவது உறுதியானதும் நம்பத்தகுந்த்து எனவும் குறிப்பிட்டிருக்கிறார்
எது எவ்வாறாயினும் தான் கண்டி அல்லது குருணாகலை மாவட்டத்தில் தனித்துப் போட்டியிட்டாலும் பெருந்தொகை வாக்குகளால் தனக்கு வெற்றியடைய முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அவ்வாறு போட்டியிட்டால் ஐதேகவின் முஸ்லிம் வாக்காளர்களில் அதிகமானோரின் வாக்குகள் குறையும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
(கேஎப்)



0 comments
Write Down Your Responses