உன்னிச்சை அரசினர் தமிழ் கலவன் பாடசாலை ஆசிரியை தூக்கிட்டு தற்கொலை!
மட்டக்களப்பு செங்கலடி உன்னிச்சை அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் கல்விகற்ப்பிக்கும் ஆசிரியை ஒருவர் நேற்று இரவு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். செங்கலடி ரமேஸ்புரம் கிராமத்தில் வசிக்கும் 34 வயதுடைய தவசீலன் அனுசியா என்ற ஆசிரியையே, இவ்வாறு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஒரு பிள்ளையின் தாயான நேற்று தனது வீட்டின் அறையொன்றில் மின்விசிறி பொறுத்துவதற்கான கம்பியில் சீலை துண்டை கட்டி தூக்கில் தொங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குடும்பத் தகராறு காரணமாகவே இவர் தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என சந்தேகம் தெரிவிக்கப்படுகின்றது.
இவரது சடலம் தற்போது மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பான விசாரணைகளை ஏறாவூர் பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்.


0 comments
Write Down Your Responses