இந்தியா இலங்கை தொடர்பான தனது ராஜதந்திர கொள்கை அமுல்படுத்தலில் தமிழகத்தை கணக்கெடுக்கக்கூடாது. த ஹிந்து
இந்திய மத்திய அரசாங்கம், தமது வெளிநாட்டு கொள்கைகளை அமுல்ப்படுத்தும்போது, மாநிலங்களினால் மேற்கொள்ளப்படக்கூடிய அழுத்தங்களை கருத்திற்கொள்வது, பாரிய பாதக விளைவுகளை ஏற்படுத்துமென, த ஹிந்து பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. ஜெனீவா மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிராக சமர்ப்பிக்கப்பட்டுள்ள அமெரிக்காவின் பிரேரணைக்கு வாக்களிக்கும்போது, இது தொடர்பில் தெளிவாக சிந்திக்க வேண்டுமென்றும் குறிப்பிட்டுள்ளது.
கடந்த ஆண்டு மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிராக சமர்ப்பித்த பிரேரணைக்கு இந்தியா ஆதரவு தெரிவித்தமையினால், எந்தவித பயனும் கிடைக்கவில்லையென்றும், த ஹிந்து பத்திரிகை குறிப்பிட்டுள்ளது.


0 comments
Write Down Your Responses