பிரதமர் காண்பது எல்லாம் பகல்கனவே!
புதுடில்லி, நாடாளுமன்றத்தில் பேசிய பிரதமர் மன்மோகன் சிங், 2014ஆம் ஆண்டு தேர்தலில் வெற்றிபெற்று, மீண்டும் காங்கிரஸ் கட்சியே ஆட்சியை பிடிக்கும் என்று கூறியிருந்தார்.
இதற்கு பதிலளித்து பாரதீய ஜனதாவின் செய்தித்தொடர்பாளர் பிரகாஷ் ஜவ்தேகர் பிரதமரின் இந்த அறிவிப்பை நாங்கள் ஒதுக்கித் தள்ளுகிறோம். அவர் வரும் 2014 தேர்தலில் வெற்றிபெற்று மீண்டும் ஆட்சியில் அமரலாம் என்று பகல் கனவு காண்கிறார். அவர் காணும் பகல் கனவை நாங்கள் தடுக்க விரும்பவில்லை. அவர் தவறான கண்ணோட்டத்தில் பேசி வருகிறார் என்றால், அவர் அவ்வாறே செய்யட்டும் என்றார்.


0 comments
Write Down Your Responses