பன்றியின் உருவத்தினுள்ளே அல்லாஹ்வின் பெயரை எழுதி முஸ்லீம்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்த பௌத்த பிக்குகள்.
உலகில் பல்வேறு இடங்களிலும் அல்லாஹ்விற்கு எதிராக கடந்த காலத்தில் பல்வேறு சம்பவங்கள் இடம்பெற்றவை நாம் அறிந்தவையே. இந்நிலையில் பௌத்த பிக்குகள் பன்றி உருவத்தினுள் அல்லாஹ்வின் பெயரை எழுதி ஆர்ப்பாட்டம் செய்தது பெரும் விமர்சனத்தையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவம் இன்று குருநாகல் குளியாபிட்டிய பகுதியில் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
முஸ்லீம்களுக்கு எதிராக இன்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது குறித்த ஆர்ப்பாட்டக்காரர்களான பிக்குமார் தாம் ஏந்தி வந்த சுலோகங்களில் பன்றி உருவத்தினுள் அல்லாஹ்வின் பெயரை எழுதி கோசங்களை எழுப்பியுள்ளனர்.



0 comments
Write Down Your Responses